‘BJP should have selected Narendra Modi as their leader’ – VHP
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 20, 2006
பாஜகவுக்கு மோடியை தலைவராக்கி இருக்க வேண்டும்: விஎச்பி கருத்து
புது தில்லி, அக். 21: பாரதீய ஜனதா கட்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தலைவராக்கி இருக்க வேண்டும்; கட்சித் தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங்கை விட அவரே சிறந்த தலைவர் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்குக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்த போதிலும், அவரைவிட நம்பிக்கைக்கு உரிய தலைவர் மோடிதான் என்று கூறியிருக்கிறார் டால்மியா.
இந்தி வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் டால்மியா கூறியிருப்பதாவது:
ஆட்சியில் இருக்கும் பொழுது கூட்டணிக் கட்சிகளிடம் அத்வானி சரணடைந்துவிட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் அப்போதைய பாஜ கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; கூட்டணிக் கட்சிகள் எதனிடமிருந்தும் எதிர்ப்பு ஏதும் இல்லாதிருந்தபோதிலும், கோயில் கட்ட ஆர்வம் காட்டவில்லை.
அனைவரும் பதவி சுகத்தை அனுபவிப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை விசுவ இந்து பரிஷத் ஆதரிக்காது. அவர்களால் ஏற்கெனவே எங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.
இனிமேலும் எங்களது நம்பகத்தன்மையை இழக்க நாங்கள் தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார் விஷ்ணு ஹரி டால்மியா.
