Archive for ஒக்ரோபர் 27th, 2006
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
போலீஸ் விசாரணைக்கு பயந்து அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி சாவு
சென்னை, அக். 28: சென்னை ஓட்டேரியில் வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராக அழைக்கப்பட்டதை அறிந்த அதிமுக நிர்வாகி மாரடைப்பால் இறந்தார்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர், 39-வது டிவிஷன் அதிமுக வட்டப் பிரதிநிதியாக இருந்தார். உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கியதாக வடிவேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகும்படி அவரது குடும்பத்தாரிடம் போலீஸôர் தெரிவித்திருந்தனர். இதுதெரியவந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு, அங்கு இறந்தார்.
Posted in ADMK, AIADMK, Civic Polls, FIR, functionary, heart attack, Inquiry, Jayalalitha, local body elections, Otteri, Ottery, Police, Tamil Nadu | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
வன்னியர் போராட்டம்: குடும்ப ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உயர்வு
சென்னை, அக். 28:இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
1987-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என 1998-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த குடும்ப நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மாத ஓய்வூதியம் ரூ. 2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் பிறப்பித்தார்.
உயர்த்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்தின்படி குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.
Posted in 1987, Caste, Education, Employment, Karunanidhi, MBC, Most Backward Classes, Pattali Makkal Katchi, pension, PMK, Ramadoss, Reservation, Tamil Nadu, Vanniyar Sangam, Vanniyars | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
மராட் கலவரம் குறித்த விசாரணை தாமதம்: சட்டத்துறையிடம் விளக்கம் கோரவுள்ளது கேரள அரசு
திருவனந்தபுரம், அக். 28: கேரளத்தில் 2002-ம் ஆண்டில் மராட் கடற்கரையில் நடந்த முதல் கலவரம் குறித்த விசாரணை தாமதமாகத் தொடங்கியது ஏன்? என்று மாநில சட்டத்துறையிடம் விளக்கம் கோரவுள்ளது, முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி கேரள அரசு.
மராட் கலவரம் குறித்த ஜோசப் பி. தாமஸ் விசாரணைக் கமிஷன் அறிக்கை தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடந்த சிறப்பு விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது இதைத் தெரிவித்தார் மாநில போலீஸ் துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன்.
2002 மராட் கலவரத்தின்போது போலீஸôர் சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் ஓராண்டுக்குப் பிறகு அங்கு மீண்டும் கலவரம் வெடித்தது என்று விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தமது பதிலுரையில் அமைச்சர் கூறினார். மராட் கலவரத்தின்போது ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் ஏ.கே. அந்தோனி அரசு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாதது மர்மமாக உள்ளது என்ற கமிஷனின் கருத்தை குறைகூறிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி, சிபிஐ விசாரணைக்கு பாஜக தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் எதிர்ப்புத் தெரிவித்தன என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மராட் பகுதியில் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கலவரம் மூள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை அனுப்ப புலனாய்வுத் துறை தவறி விட்டது என்றும் உம்மன் சாண்டி கூறினார்.
2002 மராட் கலவரத்துக்குக் காரணமான குற்றவாளிகளிடம் துரிதமாக விசாரணை நடத்தத் தவறியதே, அங்கு மீண்டும் கலவரத்தில் ஈடுபடும் அளவுக்குக் குற்றவாளிகளுக்குத் தைரியத்தைக் கொடுத்தது. கலவரம் மீண்டும் மூண்டதற்கு ஏ.கே. அந்தோனி அரசு சரியான நடவடிக்கை எடுக்காததே முக்கியக் காரணம் என்று அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள யோசனைகளை கேரள அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், மராட் கலவரத்தில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்கை விசாரணைக் கமிஷன் கண்டுகொள்ளவே இல்லை.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அதன் மூலம் கலவரம் ஏற்பட்டதற்கான சதித்திட்டம் முழுமையாக வெளியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கை குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி நோட்டீஸ் கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரியதன் முகமது, 2003 மராட் கலவரத்தின்போது ஏ.கே. அந்தோனி அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசினார்.
Posted in A K Antony, AK Anthony, Aryadan Mohammed, BJP, CBI, Congress(I), CPI, Fundamentalist, Hilal Mohammed, Hindu Aiykya Vedi, Inquiry, intelligence report, Judicial Commission, Justice Joseph P Thomas Commission, Kerala, Kodiyeri Balakrishnan, LDF, Left, Marad, massacre, Muslim League, Oommen Chandy, Politics, Religion, RSS, UDF, Violence, VS Achuthanandan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியருக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு: ஜோதி பாசு
கோல்கத்தா, அக். 28: தொழிலாளர்களிடம் இருந்து வேலைநிறுத்த உரிமையைப் பறிக்கக் கூடாது; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வேலைநிறுத்த உரிமை உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசு கூறினார்.
தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை தொடர்பாக கட்சிக்குள் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையை நாம் பறிக்க முடியாது; அதே நேரத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிக்கடி வேலைநிறுத்தம் ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாமல் தடுக்க, அத் துறையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கலாமா என்பது குறித்து ஆராயலாம் என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் பங்கேற்ற ஜோதி பாசு, பின்னர் நிருபர்களிடம் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார்.
ஆனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை வலுக்கட்டாயமாக, பலத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் புதிதாக பல தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கும் புத்ததேவ், வேலைநிறுத்தத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார்.
அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் புத்ததேவ்.
மத்திய அரசின் மக்கள்~விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் தனியார்மயமாக்கல் மற்றும் அரசு நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கும் விற்கும் கொள்கையையும் எதிர்த்து டிசம்பர் 14-ம் தேதி பொது வேலைநிறுத்தம் செய்ய சிஐடியூ தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இப் பின்னணியில், வேலைநிறுத்த உரிமை குறித்து ஜோதி பாசு தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Posted in Buddhadeb Bhattacharya, Calcutta, CITU, CPI (M), employees, I&B, Industry, Information & Broadcasting, InfoTech, Jothi Basu, Jothy Basu, Kolkata, Mamtha bannerjee, Marxist, Strike, Technology, Telecom, Trinamool, Union, WB, West Bengal, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
சர்வதேச திரைப்பட விழாவுக்கு 3 தமிழ் திரைப்படங்கள் தேர்வு
புது தில்லி, அக். 28: கோவாவில் அடுத்த மாதம் துவங்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக மூன்று தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- சேரன் இயக்கத்தில் வெளியான “தவமாய் தவமிருந்து‘,
- சாரதா ராமநாதன் இயக்கிய “சிருங்காரம்‘,
- டி.வி.சந்திரன் இயக்கிய “ஆடும் கூத்து‘ ஆகிய திரைப்படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன.
மேலும், திரைப்பட விழாவில், ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிக்கு சிருங்காரம் படத்தை நடுவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கோவா மாநிலம் பனாஜியில் நவம்பர் 23-ம் தேதி துவங்கி, டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இத் திரைப்பட விழாவில், பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 20 திரைப்படங்களும், 20 குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன.
முன்னாள் ஹிந்தி நடிகர் சஷிகபூர், விழாவைத் துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில், பிரபல நடிகரும் இயக்குநருமான அபர்னா சென் கலந்துகொள்கிறார்.
திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு சயீத் அக்தர் மிர்ஸô தலைமை வகித்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம். வசந்த், கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைபடங்கள் அனைத்தும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 31-க்குள் தயாரிக்கப்பட்டவை.
Posted in Aadum Koothu, Aparna Sen, Cheran, Dasmunshi, Dosar, Goa, IFFI-2006, International Film Festival, Rituparno Ghosh, Saratha Ramanathan, Shashi Kapoor, Srungaram, Tamil Cinema, Tamil Movies, Thavamai Thavamirunthu, TV Chandran | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
சரத்பவார் மகள் சுலே எம்.பி.யாக பதவியேற்றார்
புதுதில்லி, அக். 28: மத்திய வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே (38) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பின் போது சரத்பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வசந்த் சவான் மறைவை அடுத்து அவருக்கு பதிலாக மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சுலே.
Posted in daughter, dynasty, Election, India, Kid, kin, maharashtra, Member, Nationalist Congress Party, Politics, Rajya Sabha, relative, RS, Sharad Pawar, Supriya Sule | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
விதர்பா பகுதியில் 7 விவசாயிகள் தற்கொலை
நாகபுரி, அக். 28: கடன்தொல்லையால் மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் வியாழக்கிழமை வரை 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி விவசாயிகளுக்காக பாடுபடும் விதர்பா ஜன அந்தோலன் என்ற தன்னார்வ அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
- அகோலா
- அமராவதி,
- யவத்மால் மாவட்டங்களில்
இருந்து தலா 2 பேரும் புல்தானா மாவட்டத்தில் இருந்து ஒருவரும் தற்கொலை செய்துகொண்டதாக கூறி, அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.
இதன்மூலம் கடந்த ஆண்டு ஜூன் முதல் அப்பகுதியில் 1,035 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
Posted in Agriculture, Farmers, Irrigation, NGO, peasants, Poor, Poverty, Suicides, Vidarba, Vidharba, Vidharba Jana Andolan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
நான் முதல்-மந்திரி பையன்; ஓட்டலை தகர்ப்பேன்: ஊழியரை மிரட்டிய குமாரசாமி மகன்
அரசியல்வாதிகளின் மகன்கள் அவ்வப்போது பிரச்சினைகளில் சிக்கி மாட் டிக்கொள்வது வழக்கம். மறைந்த பாரதீயஜனதா பொதுச் செயலாளர் பிரமோத்மகாஜன் மகன் பிரவீன்மகாஜன், அரி யானா மந்திரி மகன் மனுசர்தா ஆகியோர் சமீபத் தில் பிரச்சினைகளில் சிக்கி னார்கள்.
இதே போல கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில்குமாரும் சர்ச் சையில் சிக்கினார். பெங்க ளூரில் உள்ள ஒருஓட்ட லில் அவர் தனது நண்பர் கள் மஞ்சுநாத், சையத் ஆகி யோருடன் சேர்ந்து தகராறு செய்தார். அதிகாலையில் சாப்பாடு இல்லை என்று கூறியதால் அவர்கள் ஓட் டல் மீது கல்வீசி ரகளை செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் முதல்-மந்திரி மகன் மீது தாக்கினார்கள். இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் நிகில்குமார் முதல்-மந்திரியின் மகன் என்று குறிப்பிடவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
நேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்தபோது நிகில்குமார் கவுடா மற்றும் அவரது நண்பர்கள் குடி போதையில் இருந்து உள்ளனர். நான் முதல்-மந்திரி மகன் நான் நினைத்தால் ஓட்டலை தகர்த்து விடுவேன் அல்லது மூடி விடுவேன் என்று ஓட்டல் ஊழியரை மிரட்டியுள்ளார். இதை ஓட்டல் ஊழியர் தெரி வித்தார். நிகில் குமார் கல்லூரியில் ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
Posted in abuse, Arrest, case, Chief Minister, CM, FIR, Food, Haryana, Hotel, Karnatka, Kumarasamy, Nikhil Kumar, Police, Power, Pramod Mahajan, responsibility, Syed | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006
`அவ்வை சண்முகி’க்கு பின்னர் `தசாவதாரம்’ படத்தில் இளம் பெண்ணாக கமல்
வருகிற 2007-ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் முக்கியமாக 2 படங்களை குறிப்பிடலாம். ஒன்று ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கும் `சிவாஜி.’ மற்றொன்று கமல்ஹாசன் நடிப்பில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் `தசாவதாரம்’.
தசாவதாரம் படத்தில் கமலஹாசன் 10 வேடங் களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக
- அசின்,
- மல்லிகாஷெராவத்,
- ஜெயப்பிரதா
ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் கமல ஹாசன் நடிக்கும் 10 வேடங்கள் என்ன என்பது தான் தமிழ் ரசிகர்களை இப்படத்தின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
கமலஹாசனின் நடிப் பிற்கு தீனி போட்ட மைக்கேல் மதன காமராஜன், அபூர்வசகோதரர்கள், இந்தியன், அவ்வைசண்முகி போன்ற படங்களில் வந்த கேரக்டர்கள் சற்று வித்தியாசப் படுத்தி காட்டப்படுமாப அல்லது உலக சினிமா தரத்திற்கு இப்படத்தை கொண்டு செல்வதற்காக கமலஹாசன் மேலும் ஏதாவது முயற்சி செய்து புதுமை படைத்த கேரக்டர்களை உருவாக்கி உள்ளாராப என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தில் உதார்மணி என்ற ஒரு கதாபாத்திரத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். நவீன காலத்திற்கேற்றவாறு மாடர்னாக வரும் டூரிஸ்ட் கைடாக இக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கம்ப்ïட்டரில் கதாபாத்திரத்தை வடி வமைத்து அதற்கு கமலஹாசன் உயிர் கொடுத்துள்ளாராம்.
அதே போன்று ஒரு அழகிய இளம்பெண் கதா பாத்திரத்திலும் இப்படத்தில் கமலஹாசன் நடிக்கிறார். அவ்வை சண்முகியில் வயதான மாமியாக வேடமிட்ட கமலஹாசன் இப்படத்தில் இளம்பெண் கேரக்டரில் நடித்து இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளப் போகிறார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இந்த கேரக்டரில் நடிப்பதற்காக மட்டும் கமலஹாசனுக்கு தினமும் 3 மணி நேரம் மேக்கப் செய்ய வேண்டியுள்ளதாம்.
இது தவிர இதுவரை பாத்திராத வகையில் வில்லன் கதாபாத்திரம் உள்பட 10 கேரக்டரில் கமலஹாசன் வரிந்து கட்டும் இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகவும் பிரமாண்டமாக இயக்குகிறார்.
இப்படத்திற்கு தனது இசை மூலம் இந்தி ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மியா இசையமைக்கிறார். இவர் இசையமைப்பதில் மட்டுமல்ல பாடல்கள் பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது இந்தி ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும் தசாவதாரம் படத்திற்கு பிறகு தமிழ்ரசிகர்களையும் இவ்வாறு இசையால் கட்டிப் போடுவேன் என அடித்துக் கூறுகிறார்.
இப்படத்தை இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்தவர். பல சதாபாத்திரமுள்ள கதைகளை கமர்சியலாக எடுத்து படத்தை ஹிட் செய்வதில் இவருக்கு நிகர் இவர் எனலாம்.
இப்படத்தில் நடிகை அசினும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு மேலும் ஆவலை தூண்டுகிறது. இவ்வாறாக பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு எப்போது வெளியாகும்ப ரஜினியின் சிவாஜியுடன் போட்டி போடுமாப என்பது தான் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
Posted in Asin, Dasavatharam, Himesh Reshmaiya, Jeyaprada, Kamal, kamalahasan, Kamalhassan, KS Ravikumar, mallika Sherawat, Oscar Ravichandran | Leave a Comment »