Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 13th, 2006

SS Rajagopalan – Equal Opportunity in Indian Education System

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

சமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்தல்

எஸ்.எஸ். இராஜகோபாலன்

“”தற்போது செயல்பாட்டிலுள்ள பல்வேறு கல்விமுறைகளான – நர்சரி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் மற்றும் மாநில வாரியக் கல்வி முறைகளை ஆய்வு செய்து அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த “”அறிக்கை வேண்டி முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவினைத் தமிழக அரசு நியமித்துள்ளது குழந்தைகளின் நலனைப் பேணும் ஒரு சீரிய நடவடிக்கையாகும்.

வேறுபாடுகளுக்கான காரணிகள்:

  • பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறை,
  • பள்ளி வயது,
  • பாடத்திட்டம்,
  • பாட நூல்கள்,
  • ஆசிரியர்கள்,
  • தேர்வுமுறை,
  • பள்ளிச்சூழல்,
  • உட்கட்டமைப்பு வசதி,
  • வகுப்பறைக் கற்றல் – கற்பித்தல் முறைகள்,
  • பள்ளி மேலாண்மை,
  • பள்ளி ஆய்வு,
  • பயிற்று மொழி போன்றவை கல்வி முறைகளில் வேறுபாடுகளை உருவாக்கியுள்ளன.

அவ் வேறுபாடுகளை அகற்றியோ, குறைத்தோ சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முற்படுவதுதான் அரசின் நோக்கம். கோத்தாரி கல்விக்குழு, தேசியக் கல்விக் கொள்கை ஆகியவை வலியுறுத்திய ஒரு திட்டம் பல்வகைப் பள்ளிகளின் தனித்தன்மைகளை அறிதல் வேண்டும்.
ஓரியண்டல் பள்ளிகள்:

28 அரேபிக், 8 வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் ஓரியண்டல் பள்ளிகளாகும். இம் மொழிகளைத் தவிர, ஆங்கிலம் மொழியல்லாப் பாடங்கள் அனைத்தும் மாநில வாரியப் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்பட்டு மாநில வாரியத் தேர்விற்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தமிழில் ஒரு தாள் மட்டுமே உண்டு. மற்றொரு மொழித்தாள் அரேபிக் அல்லது வடமொழி, சமூக இயல் தேர்வை மாணாக்கர் எதிர்கொண்டாலும் அதில் பெறும் மதிப்பெண் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க எடுத்துக் கொள்ளப்படாது.

ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள்:

ஆங்கில ஆட்சியில் ரயில்வே, தபால்தந்தித்துறை, செவிலியர் போன்ற பணிகளில் ஆங்கிலோ-இந்தியர் அதிகம் பணி புரிந்தனர். இத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவற்றின் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது.

ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வேளையில் பிற பாடங்களின் பாடத்திட்டங்கள் சுமையற்றதாக இருந்தது. சமீபகாலத்தில் இப் பாடத்திட்டங்களையும் மாநில வாரியப் பாடத்திட்டத்திற்கு இணையாகக் கொணர மாற்றங்கள் படிப்படியாகச் செய்யப்பட்டுள்ளன. இப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. புதிய பள்ளிகள் ஏதும் தொடங்கப்பெறாததால் அவற்றின் எண்ணிக்கை 41-லேயே நிற்கின்றது. ஓரியண்டல், ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளில் சமச்சீர் கல்வி கொண்டு வருவது எளிது. அக் கல்வி முறைகளின் சிறப்பான மொழிப்பாடங்களில் ஒரு தனித்தாள் கொடுப்பது ஒரு தீர்வாக அமையும்.

மெட்ரிக் பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்:

1978-ஆம் ஆண்டில் 40-க்கும் குறைவாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று ஏறக்குறைய 4000 பள்ளிகளாகியும் மேலும் இவ் வகைப் பள்ளிகள் தொடங்கப் பலரும் முன்வருகின்றனர்.

எல்லா மெட்ரிக் பள்ளிகளிலும் நர்சரி வகுப்புகள் உண்டு. எனவே கல்வி 3 வயதிலேயே தொடங்குகின்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் ஆசிரியர் இருப்பதால் கற்பித்தல் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. குழந்தைகளுக்கும் தனிக்கவனம் செலுத்த வாய்ப்பு உண்டு. தேர்வை மையப்படுத்திய கற்றல் – கற்பித்தல் முறை பெற்றோர்க்கு விருப்பமாக உள்ளது. மாதந்தோறும் பெற்றோர் கூட்டம் நடைபெறுவதும் அவற்றில் தவறாது பெற்றோர் பங்கேற்பதை உறுதி செய்வதும் ஆசிரியர் – பெற்றோர் உறவை வளர்க்க உதவும். பள்ளி நிர்வாகியோ அல்லது அவரால் நியமிக்கப் பெற்ற கல்வி ஆலோசகரோ பள்ளியில் இருந்து பள்ளி செயல்பாட்டினை நேரடியாகக் கண்காணித்து வருவது ஒரு சிறப்பு. பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதமே பள்ளியின் நிலைத்த தன்மைக்கு அடிப்படை என்பதால் சிறப்பான தேர்ச்சியைக் காட்ட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பொதுப்பள்ளிகளின் சிறப்பம்சங்கள்:

மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இவை. சமீபகாலமாக அரசு உதவி பெறாமல் மாநில வாரியத்தோடு இணைந்த பள்ளிகள் சில உண்டு.
இவற்றில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் முழுமையான தகுதி பெற்றவர்கள். தொடர்ந்து அரசுச் செலவில் புத்தறிவு பயிற்சியும் ஆசிரியர்கள் பெறுகின்றனர். அரசு ஊழியர்க்குரிய அனைத்து உரிமைகளையும் இவ்வாசிரியர்கள் பெறுகின்றனர். பதவி உயர்வு வாய்ப்புகளும் உண்டு. கல்வித் துறையின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்ற இப் பள்ளிகள் ஆண்டுதோறும் தணிக்கைக்குட்படுத்தப்படுகின்றன. பள்ளிச் சேர்க்கை முதல் வகுப்புத் தேர்ச்சி முடியவும், ஒவ்வோர் ஆசிரியரது கற்பித்தல் திறனும் ஆண்டாய்வில் மேற்பார்வை செய்யப்படுகின்றன. மக்களின் வரிப்பணத்தால் இவை இயங்குவதால் இவற்றை மக்கள் பள்ளிகளெனலாம். அரசின் நலத்திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தும் பொறுப்பும் இப் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. மாணவரைப் பொறுத்தவரையில் இலவச பாடநூல்கள் வழங்கப் பெறுவதுடன், சீருடை, இலவசப் பேருந்து, அரசு உதவித்தொகை போன்றவையும் மாணவர் பெற இயலும்.

பாடத்திட்ட வேறுபாடு:

ஓரியண்டல் பள்ளிகள் மாநில வாரியப் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் பெரிய வேறுபாடு எக் கல்வி முறையிலும் இல்லை. சிறிய மாற்றங்களே காணப்படும். தொடக்கக் கல்வியில் மட்டும் மெட்ரிக் பள்ளிகளில் சுமைமிக்கப் பாடத்திட்டம் உள்ளது. நர்சரி வகுப்புகளிலேயே முறையான கல்வி தொடங்கப் பெறுவதன் விளைவே இது. ஆனால் எல்லாக் கல்வி முறைக்கும் வேறுபாடற்ற மாநில மேல்நிலைப் படிப்பிற்கு ஆயத்தப்படுத்துகின்றன. தேர்வு முறைகளில் ஆங்கிலோ – இந்தியன், மெட்ரிக் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. மற்ற இரு வகைப்பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு கிடையாது.

பொதுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தல்:

மாநில வாரியப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அடிப்படையில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்.

அங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் முன்பருவக் கல்வி மையங்களாக மாற்றி அமைப்பது நல்ல பயனைத் தரும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டாரங்களில் யுனிசெப் ஆதரவில் அங்கன்வாடி ஊழியர்க்கு முன்பருவக்கல்விப் பயிற்சி அளித்த திட்டம் மிகுந்த பயனைத் தந்துள்ளது என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அனைத்து அங்கன்வாடி ஊழியர்க்கும் மிகக் குறைந்த செலவில் இப் பயிற்சியினை அளிக்க இயலும்.

ஆசிரியர் பணியிடங்களை அதிகரிப்பது மற்றொரு செயல்பாடாக இருக்க வேண்டும். பிரிவிற்கு ஓர் ஆசிரியர் என்ற இலக்கை நோக்கி படிப்படியாகச் செல்லத் திட்டம் வகுக்கப்பட வேண்டும். உயர்நிலைப் பகுதியில் கணிதம், அறிவியல், சமூகஇயல் ஆகிய பாடங்களைக் கற்பிக்க அப் பாடங்களில் தகுதி பெற்றவரை நியமிக்க வேண்டும். தற்பொழுது அப் பாடங்களைக் கல்லாதவரும் கற்பிக்கும் நிலையை மாற்றிடுதல் அவசியம்.

மூன்றாவதாக, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சியை அமலாக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி வகுப்புகள் பள்ளிகளில் அமைந்ததால் எல்லாப் பள்ளிகளுக்கும் அறிவியல் பாடங்கள் அமைந்தன. அதுபோலவே, செய்முறைத் தேர்வுகள் கொணரப்பட்டால் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் அறிவியல் கூடங்கள் உருவாகிடும்.

இம் மூன்றும் அடிப்படை மாற்றங்கள். மற்றவை எளிதானவையே.

மெட்ரிக் பள்ளிகளைச் சீரமைத்தல்:

மெட்ரிக் பள்ளிகளில் நர்சரி வகுப்பு முதல் அனைத்தாசிரியரும் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மறுபயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்று ஆசிரியர் திறன்கள் வளர்க்கப்பட வேண்டும். ஆண்டாய்வு நடைபெற வேண்டும். முனைவர் சிட்டிபாபு குழு அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி ஜனநாயகத் தேவை:

நால்வகைப் பள்ளிகளிலும் காணப்படும் குறைகள் களையப்பெற்று, நிறைகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதே சமச்சீர் கல்வியின் நோக்கமும் செயல்பாடும் ஆகும். எல்லாப் பள்ளிகளும் மேலோங்கச் சிறப்புற செயல்படத் துணை செய்யும் ஒரு கருவியே சமச்சீர் கல்வி முறை. இதனைச் செயல்படுத்துவது அரசின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும். சமச்சீர் கல்வி முறை அமலாக்கப்பட்டால் தமிழகத்தில் பிறந்து வளரும் ஒவ்வொரு குழந்தையும் தரமிக்க நல்ல கல்வி பெற இயலுமென்பதால் அனைத்து மக்களும் தங்கள் முழுமையான ஆதரவினை இத் திட்டத்திற்கு அளிக்க வேண்டும்.

Posted in Analysis, Anglo-Indian, Chittibabu, class, Equal Opportunity, High School, Higher Secondary, India, Indian Education, Insights, Matriculation, Metric schools, Nursery, Op-Ed, Oriental, Rajagopalan, School, State Board, Tamil Nadu | 1 Comment »

Dance Bars Reopened – Puthuchery Hotel Clubs to benefit

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, அக்.13: புதுச்சேரி ஹோட்டல்களில் நடன நிகழ்ச்சியை நடத்த லைசன்ஸ் வழங்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சில ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்டிருந்த லைசன்ûஸ புதுச்சேரி அரசு புதுப்பிக்க மறுத்துவிட்டது. புதிய லைசன்ஸ் கேட்போரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துவிட்டது.

இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

புதுச்சேரி அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து புதுச்சேரி அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் பி.சதாசிவம், எஸ்.மணிகுமார் ஆகியோர் இந்த அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

தீர்ப்பு விவரம்:

பாரம்பரிய நடனம் உள்பட இந்திய நடன நிகழ்ச்சிகளை முழுவதுமாக தடை செய்வது சட்ட விரோதம். அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) பிரிவுக்கு இது எதிரானது. அதே நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் ஆபாசமானதாக இருந்தால் அதை போலீஸôர் அனுமதிக்கக் கூடாது.

ஒரு சில இடங்களில் ஆபாச நடனம் நடத்தப்பட்டதால், அனைத்து நடன நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கக் கூடாது. இது போன்று தடை விதிக்க சட்டம் இயற்றப்படாத நிலையில், அதிகாரிகளே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க முடியாது. நடன நிகழ்ச்சி நடத்தும் லைசன்ûஸ யாராவது தவறாக பயன்படுத்தினால் அந்த லைசன்ûஸ போலீஸôர் ரத்து செய்யலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in Bars, Clubs, Court, cultural conditioning, girls, Hotel, License, moral policing, Nude, Order, Police, Pondicherry, pondichery, Pondycherry, prostitution, Puthuchery | Leave a Comment »

Kamba Sithiram – Thamizhan TV : Ko Gopalakrishnan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

தமிழன் தொலைக்காட்சியில் “கம்ப சித்திரம்’

சென்னை, அக். 13: கம்ப ராமாயணத்தை பொருத்தமான சித்திரங்களுடன் விளக்கும் “கம்ப சித்திரம்’ எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.

கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை இந்தத் தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ராம காதையை கம்பன் தமிழில் பற்பல மேற்கோள் கதைகளுடன் பார்த்து ரசிக்கும்படி தமிழ்துருவன் கோ. கோபாலகிருட்டிணன் இசையமைத்து நடத்துகிறார்.

Posted in Appreciation, Arts, Entertainment, Gopalakrishnan, Kamba Sithiram, Kamban, Literature, music, Ramayanam, Thamizh, Thamizhan TV | Leave a Comment »

Attukkal Bhagawathy Amman Temple makes to Guiness Book of Records

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்ப்பு

திருவனந்தபுரம், அக். 13: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் “பொங்கல்’ வழிபாடு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவார்கள். உலகத்திலேயே மிக அதிக அளவில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் மதச் சடங்குகளில் ஒன்று என்பதற்காக இந் நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் “பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் பகவதி அம்மன் கண்ணகியின் தெய்வீக வடிவமாகக் கருதப்படுகிறது. தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.

மதுரையை எரித்துவிட்டு கொடுங்கலூருக்குச் சென்றுகொண்டிருந்த கண்ணகியை ஆற்றுக்கால் பெண்கள் வரவேற்று உபசரித்து உணவளித்ததாக இக்கோயிலில் பாடப்படும் பாரம்பரியப் பாடலில் குறிப்புகள் உள்ளன.

ஆண்டுதோறும் மலையாள மாதமான கும்பத்தில் வரும் பூரம் தினத்தில், இக்கோயிலில் பெண்கள் கூடி பொங்கல் சமைத்து வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பொங்கலிடுகின்றனர். 1997-ல் அதிக அளவாக 15 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.

Posted in Amman, Atrukkaal, Attukkal Bhagawathy, Bagavathy, Durga, Female, Guiness Book, Kerala, Ladies, Limca, Pongal, Pooram, Records, Sabarimalai, Thiruvanthapuram, Trivandrum, Women | Leave a Comment »

ADMK’s Lies – Mu Karunanidhi Press release

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

சமையல் பண்டங்கள் விலை உயரவில்லை: கருணாநிதி அறிக்கை 

சென்னை, அக். 13-

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அம்மா” அடுத்த அஸ்திரம் தொடுத்து விட்டார்” என்று வார ஏடுகள் வர்ணனை செய்ய, விலைவாசிப் பட்டியல் என்னும் வில் ஏந்தி மேடைக்கு மேடை, விளாசித் தள்ளினார்-அய்யோ பாவம், அத்தனையும் பொய், பித் தலாட்டம், புளுகு மூட்டை!

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் துவரம் பருப்பு கிலோ 28 ரூபாயாம், இப்போது 52 ரூபாயாம்!

சேலத்தில் என்னிடம் தெரிவிக்கப்பட்ட துவரம் பருப்பு விலை-அ.தி.மு.க. ஆட்சியில் 32 ரூபாய்-இப்போது விலை 30 ரூபாய் என்பது தான்!ஆனால் “அம்மா” படித்ததாக பத்திரிகையில் பட்டியல் வெளியிட்டிருப்பது-துவரம் பருப்பு கிலோ 52 ரூபாய்!

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் பாசிப் பருப்பு கிலோ 28 ரூபாயாம், இப் போது தி.மு.க. ஆட்சியில் 55 ரூபாயாம்! ஆனால் சேலத்தில் என்னி டம் தெரிவிக்கப்பட்ட பட்டி யல்படி பாசிப் பருப்பு விலை-அ.தி.மு.க. ஆட்சியில் 44 ரூபாய்-இப்போது விலையும் 44 ரூபாய் என்பதுதான்!

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் புளி கிலோ 25 ரூபாயாம், இப்போது 50 ரூபாயாம்! சேலத்தில் என்னிடம் தெரிவிக்கப்பட்ட விலை பட் டியல்படி புளி ஒரு கிலோ விலை-அ.தி.மு.க. ஆட்சியில் 45 ரூபாய்-இப்போது விலை 45 ரூபாய் என்பதுதான்! சென்னையில் புளி ஒரு கிலோ முதல் ரகம் 38 ரூபாய், இரண்டாவது ரகம் 35 ரூபாய். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கிலோ 25 ரூபாய் என்றும், அது இப்போது 50 ரூபாயாக உயர்ந்து விட்டது என்றும் ஜெயலலிதா மேடையில் படித் திருக்கிறார், ஏடுகளும் வெளி யிட்டுள்ளன.

அம்மா படித்து ஏடுகளில் வந்துள்ள விவரப்படி அ.தி. மு.க. ஆட்சியில் ரவா கிலோ 14 ரூபாயாம், இப்போது 22 ரூபாயாம்!

ஆனால் சேலத்தில் என் னிடம் தெரிவிக்கப்பட்ட விவரப்படி ரவா விலை- அ.தி. மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 18 ரூபாய்- இப்போதைய விலையும் அதே 18 ரூபாய் என்பதுதான்! ஆனால் ஜெய லலிதா மேடையில் இதை 22 ரூபாய் என்று பொய்யாகத் தெரிவித்திருக்கிறார்.

அம்மா படித்தது அ.தி.மு.க. ஆட்சியில் மைதா ஒரு கிலோ 12 ரூபாயாம், இப்போது தி.மு.க. ஆட்சியில் 28 ரூபாயாம்!

சேலத்தில் என்னிடம் தெரி விக்கப்பட்ட, அங்குள்ள வியா பாரிகள் சங்கத் தலைவர் கொடுத்த விவரப்படி மைதா அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 18 ரூபாய்-இப்போது தி.மு.க. ஆட்சியில் மைதா விலை ஒரு கிலோ அதே 18 ரூபாய் என்பதுதான்! சென்னையில் மைதா ஒரு கிலோ ரூ. 15.80தான்.

இதைப் போலவே மேலும் பல பொருட்களின் விலைகளை அவர்கள் ஆட்சியிலே குறைத்து காட்டியும், இப் போதுள்ள விலையை அதி கரித்துக் காட்டியும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலே படித்து, அதை ஏடுகளும் வெளியிட்டுள்ளன. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சமையல் பண்டங்கள் எல்லா வற்றின் விலையும் இறங்கியே இருக்கிறது- ஏறினாலும் “அம்மா” சொன்னது போல அவ் வளவு உயரம் விலைவாசி ஏறவில்லை.

இந்த விலைவாசி வலையை வீசி மக்களை பிடித்து விட லாம் என்று அம்மா கனவு காண்பாரேயானால், உணவுப் பண்டங்களில் முக்கியப் பொருளான அரிசியின் விலை ஒரு கிலோ இரண்டு ரூபாய்தான்-எனவே அரிசி யில் மாந்தோறும் ஒரு குடும் பத்துக்கு எவ்வளவு மிச்சம் ஏற்படுகிறது என்பதை அந்த மக்கள் கணக்கிட்டுப் பார்க் காமல் இருந்து விட மாட் டார்கள்.

“கடந்த ஐந்தாண்டுகளில் அவர் அறுபதாயிரம் கோப்புகள் பார்த்ததாக ஓர் அண்டப்புளுகை அள்ளி விடுகிறார்”

முதல்வருக்கு வரும் கோப்புகள் நெம்பர் குத்தி- முத்திரை வைத்துத்தான் வருமென்றும்-ஜெயாவுக்கு ஐந்தாண்டில் அப்படி வந்த கோப்புகள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 49 தான் என்றும் நான் ஆண்டு வாரியாக செய்தி யாளர்களிடம் நிரூபித்துக் காட்டிய பிறகு பொய், வாயைப் பொத்திக் கொண்டு விட்டது. என் செய்வது, பலித்த வரையில் பார்க்கலாம், பாமர மக்களை ஏமாற்றுவது சுலபம் தானே என்று, பரந்த “மனோபாவத்து”க்கு எங்கே போய் பரிகாரம் தேடுவது என்றே புரியவில்லை.

“உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும், மதுரை இடைத் தேர்தலும் முடிந்த பிறகு அடுத்த நாளே இதுவரை யில் வழங்கியுள்ள இலவசங் களையும், சலுகைகளையும், தரிசு நிலங்களையும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி களையும் தி.மு.க. ஆட்சி திரும்பப் பெற்று விடும்” என்றும் ஓர் கண்டு பிடிப்பை திடீர் என்று வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா.

பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளுக்கும், இரவலர் மறு வாழ்வு இல்லங்களுக்கும், சென்னையில் இரண்டு குடிசை மாற்று வாரிய குடி யிருப்புகளுக்கும் முதல் கட்டமாக வழங்கியுள்ள முப்பதாயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி களை “டப்பா” பெட்டிகள் அவை என்றும் கேலி செய் கிறார்.

அதே போல முதல் கட்டமாக நிலமற்ற விவசாயிகள் 28,321 ஏக்கர் நிலங்களையும் தி.மு.க. ஆட்சி திரும்ப எடுத்துக் கொள்ளுமாம்! திட்ட மிட்டுப் புளுகியிருக்கிறார் ஜெய லலிதா.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி களை ஒன்றன்பின் ஒன்றாக- நிறைவேற்றி வருகிற இந்த ஆட்சி, அவற்றையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று ஏடுகளில் அறிக்கை விடுவதும்-மேடைகளில் அலறுவதும்-என்ன நாகரீகம் என்பதை நாட்டு மக்கள் தான் நன்குணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்! இவ்வாறு அந்த அறிக்கை யில் கருணாநிதி கூறி உள்ளார்.

Posted in ADMK, Campaign, Color TVs, DMK, Elections, Free, Jayalalitha, Karunanidhi, Local Body, Polls, Press release, Tamil Nadu, War, Words | Leave a Comment »

Barak kickback Rs 174 cr & Navy official overlooked objections: CBI

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 13, 2006

இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை வாங்கியதில் ரூ.174 கோடி ஊழல்: ஜார்ஜ் பெர்னாண்டஸ்சுக்கு ரூ.34 கோடி கமிஷன்

புதுடெல்லி, அக். 13-

இஸ்ரேலிடம் இருந்து எதிரி ஏவுகணைகளை நடுவானில் தாக்கி முறியடிக்கும் பராக் ஏவுகணைகளை வாங்க 2000-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி இருந்த போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கடற்படை கப்பலில் பொருத் துவதற்காக 7 பராக் ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களும், 200 ஏவுகணைகளும் ரூ.1150 கோடிக்கு வாங்கப்பட்டது. இந்த ஆயுத பேரத்தில் ஊழல் நடந்ததாக தெகல்கா இணைய தளம் 2001-ம் ஆண்டு ரகசிய புலனாய் செய்து கண்டு பிடித்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இதில்

  • முன்னாள் பாது காப்பு துறை மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
  • சமதா கட்சியின் அப்போதைய தலைவர் ஜெயா ஜேட்லி,
  • அந்த கட்சியின் முன்னாள் பொருளாளர் ஆர்.கே.ஜெயின்,
  • கடற்படை முன்னாள் தலைமை தளபதி சுசில்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

இஸ்ரேலிடம் இருந்து ஏவு கணை வாங்கியதில் ரூ.2 கோடி ஊழல் நடந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.116 கோடி முதல் ரூ.174 கோடி வரை ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது. அரசியல் வாதிகளும், இடைத் தரகர்களும் இதில் பயன் பெற்று உள்ளனர்.

ஏவுகணை வாங்கியதில் ஜார்ஜ்பெர்னாண்டசும், ஜெயா ஜேட்லியும் சேர்ந்து கமிஷனாக ரூ.34.8 கோடி பெற்றுள்ளனர். இதை ஆர்.கே.ஜெயின் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத் துள்ளார். இந்த இருவரிடம் இருந்து ஜெயின் கமிஷனாக ரூ.58 கோடி பெற்றுள்ளார். சுரேஷ் நந்தா உள்பட சிலரும் மொத்த ஒப்பந்தத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர்.

Posted in Barak, CBI, Charges, Corruption, defence, Fernandez, George Fernandes, India, Israel, Jaya Jaitley, kickbacks, Minister, Ministry, Navy | Leave a Comment »