Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 2nd, 2006

SC orders release of Black Friday

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006

1993 மும்பை குண்டு வெடிப்பை பற்றிய சினிமாவை வெளியிட நீதிமன்றம் அனுமதி

புது தில்லி, அக். 1: மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “பிளாக் ஃபிரைடே’ (கறுப்பு வெள்ளி) என்னும் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், “”மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுவருகிறது. அத் தீர்ப்பு முழுவதும் அளிக்கப்பட்ட பிறகுதான் அத் திரைப்படத்தை வெளியிட வேண்டும். எனினும், குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் அறிவிக்கும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை” என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைக் கருவாகக் கொண்டு எஸ். ஹுசைன் ஜைதி என்பவர் ஒரு புத்தகத்தை எழுதினார். அந் நூலைத் தழுவி, “கறுப்பு வெள்ளி’ (“பிளாக் ஃபிரைடே’) என்ற திரைப்படத்தை “மிட் டே மல்டிமீடியா’ என்ற நிறுவனம் தயாரித்தது.

ஆனால், அத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மும்பை வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முஸ்தபா மூஸா தாரனி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“”மும்பை வெடிகுண்டு வழக்கு விசாரணையில் இருக்கும்போது அத் திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால், அந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதியின் கருத்தை அது பாதிக்கக்கூடும். அதனால் எனக்கு பாதகம் ஏற்படக்கூடும். எனவே, அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

அதையடுத்து, அவ் வழக்கு முடியும் வரையில் அத் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த நிறுவனம் மேல் முறையீடு செய்தது. அதை நீதிபதிகள் பீ.பி. சிங், அல்தமஸ் கபீர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. படத்தைத் திரையிட அனுமதி அளித்த அதே நேரத்தில், மேற்சொன்ன நிபந்தனைகளையும் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு தொடர்ந்த முஸ்தபா மூஸô குற்றவாளி என்று மும்பை தடா நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத் தக்கது

Posted in 1993, Black Friday, Bollywood, Dawood Phanse, Film, Hindi Pictures, Hussein Zaidi, Movie, Mumbai blasts, Mustaq Moosa Tarani, Supreme Court, Tamil, Tiger Memon | Leave a Comment »

Mumbai Train Bomb Blasts – Pakistan’s ISI, Lashkar-e-Toiba & SIMI involved

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006

மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பில் துப்பு துலங்கியது: பாக். உளவு அமைப்பு ஐஎஸ்ஐ-யின் சதி அம்பலம்

மும்பை, அக். 1: ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படை போலீஸôர் வெற்றிகரமாக துப்புதுலக்கி இருக்கின்றனர்.

அச் சதித் திட்டத்தை பாகிஸ்தான் உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ’ கடந்த மார்ச் மாதம் தீட்டியதையும், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்~இ~தொய்பா மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (“சிமி’) ஆகியவற்றின் மூலம் அக் குண்டுவெடிப்பை நடத்தியிருப்பதையும் மும்பை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.

இத் தகவல்களை மும்பை நகர போலீஸ் கமிஷனர் ஏ.என். ராய், மும்பையில் நிருபர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார். அவர் கூறிய தகவல்களின் விவரம்:

இது தொடர்பாக இதுவரை 15 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் மூன்று குழுக்களாக பாகிஸ்தானிலிருந்து நேபாளம், வங்கதேசம் மற்றும் குஜராத் எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பஹவல்பூர் என்ற இடத்தில் அவர்கள் லஷ்கர்~இ~தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களால் நாசவேலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து, “சிமி’ அமைப்பைச் சேர்ந்த சிலரும் பஹவல்பூர் சென்று நாசவேலைகளில் பயிற்சி பெற்று இந்தியா திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து லஷ்கர்~இ~தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஈசானுல்லா என்பவர் 15-லிருந்து 20 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை இந்தியாவுக்குள் கொண்டுவந்துள்ளார்.

அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை இந்தியாவில் வாங்கியிருக்கின்றனர். இரண்டையும் கலந்து 5 லிட்டர் பிரஷ்ஷர் குக்கரில் வைத்து, குறித்த நேரத்தில் வெடிக்கும்படி அவற்றுடன் “குவார்ட் கடிகாரங்களை’ இணைத்து, நாளிதழ்கள், குடைகள் போன்றவற்றால் மறைத்து 7 ரயில் நிலையங்களில், முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் வைத்துள்ளனர். பின்னர் நடுவழியில் அவர்கள் இறங்கித் தப்பியுள்ளனர்.

ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியான சலீம் என்பவரால், கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து இறங்க முடியவில்லை. எனவே குண்டு வெடித்தபோது அவரும் பலியாகிவிட்டார்.

இச் செயலில் ஈடுபட்ட, இந்தியாவைச் சேர்ந்த ஃபைஸல் ஷேக், கமாலுதீன் அன்சாரி, இதாஷான் சித்திக், முகம்மது நவீத் ஆகிய 4 பேரை போலீஸôர் கைது செய்துவிட்டனர். மேலும் 3 பேரை போலீஸôர் தேடிவருகின்றனர்.

நவீத்தை ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை போலீஸôர் கைது செய்தனர். “சிமி’ அமைப்பைச் சேர்ந்த ஜூனைத் என்பவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Posted in Bomb Blasts, ISI, Lashkar-e-Toiba, Mumbai, Musharraf, Pakistan, Pervez Musharraf, Rail, SIMI, Tamil, Terrorism, Train | Leave a Comment »

Chikunkunya Toll in Kerala increases to 59

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006

கேரளாவில் சிக்குன் குனியாவுக்கு 59 பேர் சாவு 

திருவனந்தபுரம், அக். 2-

கேரள மாநிலத்தில் சிக்குன் குனியா நோயால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக சேர்த்தலை, அம்பலபுழை ஆகிய தாலுகா பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சிக்குன் குனியாவுக்கு மாநிலம் முழுவதும் 56 பேர் பலியானார்கள்.

நேற்று மேலும் 3 பேர் இறந்துள்ளனர். இதையும் சேர்ந்து இதுவரை 59 பேர் சிக்குன் குனியாவால் இறந்து விட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீமதி கூறியுள்ளார்.

சிக்குன் குனியா நோயை தடுக்க கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் சிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விடுமுறையில் சென்ற டாக்டர்கள், ஆஸ்பத் திரி ஊழியர்களை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.

Posted in Affected, Chicken Kunya, Chikun Gunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Outbreak, Tamil, Toll | Leave a Comment »