Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 5th, 2006

Mallika Sherawat to dance with Rajni for Item Number in Sivaji (The Boss)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

`சிவாஜி’ படத்தில் மல்லிகா ஷெராவத்: ரஜினியுடன் குத்தாட்டம் போடுகிறார்

ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஏவி.எம்.நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்டமான படம் `சிவாஜி’. இப்படத்தில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கான பாடல் காட்சிகள் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. டூயட் பாடலுக்கு ரஜினி காந்த்-ஸ்ரேயா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

குத்துப்பாடல்

படத்தின் பெரும் பாண்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் குத்தாட்டம் போடும் பாட்டில் பிரபல பாலிவுட் நடிகையை நடனமாட வைக்க டைரக்டர் ஷங்கர் முடிவெடுத்தார்.

அதன்படி `செக்ஸ் குயின்’ மல்லிகா ஷெராவைத்தை வைத்து அப்பாடலை எடுக்க முடிவெடுத்த ஷங்கர் மல்லிகா ஷெராவத்தை தொடர்பு கொண்டார். அதன்படி ஒரு பாடலுக்கு ஆட ரூ.25 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டு மல்லிகா ஷெராவத் இப்பாடலில் ஆடுகிறார்.

சூடேற்றும் பாடல்

அடுத்த வாரம் எடுக்கப் படவுள்ள இந்த பாடல் ரசிகர்களை மிகவும் சூடேற்றும் வண்ணம் எடுக்கப்பட உள்ளது. மல்லிகா ஷெராவத் ஜாக்கிஜானுடன் `தி மித்’ படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து உலகம் முழுவதும் பரபலமானவர்.

இந்தியில் மணிரத்னத்தின் `குரு’ படத்தில் நடிக்கும் மல்லிகாஷெராவத் தமிழில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் `தசாவதாரம்‘ படத்திலும் நடிக்கிறார்.

Posted in Dasavatharam, Jackie Chan, Kamalhassan, mallika Sherawat, Manirathnam, Rajini, Rajniganth, Shankar, Shreya, Sivaji, Tamil, Tamil Cinema, Thamizh Movies, The Boss | 1 Comment »

Chikun Kunya – Death Toll in Kerala & Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

சேர்த்தலையில் சிக்குன் குனியாவுக்கு மேலும் 8 பேர் பலி: ஊரை காலி செய்து மக்கள் ஓட்டம்

கொழிஞ்சாம்பாறை, அக். 5-

தமிழ்நாட்டை உலுக்கி வரும் சிக்குன் குனியா நோய் தற்போது கேரளாவுக்குள் ஊடுருவி விட்டது. இங்கு இந்த நோயின் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

குறிப்பாக சேர்த்தலை பகுதியில் சிக்குன் குனியா நோய்க்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 8 பேர் பலியா னார்கள்.

ஊரை காலி செய்யும் மக்கள்

இதன் மூலம் சிக்குன் குனியா நோய் தாக்கி இறந்த வர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

சிக்குன் குனியா நோய் தாக்குதலால் அச்சம் அடைந்த சேர்த்தலை தாலுகா மக்கள் தங்கள் ஊரை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஊர்களில் மக்கள் தொகை குறைந்து காணப் படுகிறது.

கோர்ட்டுகளுக்கு விடுமுÛ
சேர்த்தலை தாலுகாவில் 2 கோர்ட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு சிக்குன் குனியா நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்குதல் காரணமாக கேரளாவில் மக்கள் பீதி அடைந்துள்ள னர்.

Posted in Chicken gunya, Chicken Kunya, Chikun Kunya, Death, Kerala, Tamil, Tamil Nadu, Toll | Leave a Comment »

Third quarter report on DP-PM activities

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

Here is an update of the Distributed Proofreading (DP) activity of
Project Madurai (PM) in the past 3 months (July – Sep., 2006).

In this quarter, we had a very active participation from our
volunteers which helped us to finish a record number of pages
and hence more books. The statistics below offers a better picture
of the progress made through Distributed Proofreading.

Although, the number of active volunteers in DP-PM has relatively
stayed the same, the few who volunteer are making an immense
contribution, through their regular participation.

Please consider joining and participating in DP-PM; completing one
page a day easily adds up to 30 pages from each volunteer. In case
you have some comments to make DP-PM even more user friendly, do let
me know.

Regards,

Anbu
PS: In case you have received this email through the Project Madurai list on
Yahoo groups, apologies for sending it again.

DP-PM website: http://www.projectmadurai.org.vt.edu/
Quarterly report on DP-PM activity – Oct. 03, 2006

Books/projects (in whole or parts)
Released : 3
Completed : 9
Ongoing : 13

Pages processed :
Jul 2006 : 156
Aug 2006 : 397
Sep 2006 : 433
(Jan 2006: 149, Feb 2006: 300, Mar 2006: 342
Apr 2006: 87, May 2006: 28, Jun 2006: 151)

We have completed 20 works on DP-PM till now and all these books have
been added to the Project Madurai collection. The recent additions are
PM243 – tiruviTai marutUr ulA – mInAkshisuntharam piLLai
PM244 – kaLLATam – kaLLATar (10 century AD)
PM247 – nallicaip pulamai melliyalArkaL – R. Raghava Iyengar
Few more completed works are in the final stages of the release
process.

Some of the books presently available on DP-PM are:
mummaNikkOvai – paTTinattAr
aRappaLIcura catakam – ampalavANak kavirAyar
maturai kOvai – cankara nAraNar
aintiLakkaNam ton2n2Ul viLakkam – tolkAppiyar

More statistics on DP-PM are available at
http://www.projectmadurai.org.vt.edu/stats/stats_central.php

Posted in Help, Literature, Project Madurai, Proofread, Tamil, Thamizh, Type, Volunteer | Leave a Comment »

Krishnan’s effect in CV Raman Research & Gandhi’s Nobel Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

காந்திஜியும் நோபல் பரிசும்

எஸ். கண்ணன்

நோபல் பரிசு பெற்ற “ராமன் விளைவு’ பற்றி நாம் எல்லோரும் அறிவோம். உலகமே வியந்து பாராட்டிய அந்த “ஒளி விலகல்’ கண்டுபிடிப்பினை “ராமன் – கிருஷ்ணன்’ விளைவு என்றுதான் அழைத்திருக்க வேண்டும். மேலை நாட்டினர் இன்றும் “”ராமன் – கிருஷ்ணன் விளைவு” என்றுதான் அந்தக் கண்டுபிடிப்பை அழைக்கிறார்கள். யார் இந்த கிருஷ்ணன்?

1898-ல் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வத்திராயிருப்பில் பிறந்தவர். 1961-ல் காலமானார். டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அகம்பாவமும், கர்வமும் கொள்ளாதவராய், பெரிய மனது படைத்தவராய், கூட்டாளி தர்மத்தில் (ராமன் – கிருஷ்ணன்) பொது நன்மையை உத்தேசித்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவராய், மிகப்பெரிய உதாரண புருஷராய், மகாத்மாவின் மானசீக சீடராய் வாழ்ந்து காட்டியவர். 1947 செப்டம்பர் முதல் 1961 வரை தில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராய்ப் பணி ஆற்றியவர். அவருடைய மறைவுக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தார் அன்புடன் வழங்கிய மதிப்புறு ஆவணங்கள் புதுதில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனில் அமைந்துள்ள நேரு நினைவு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதில் கிடைத்த அரிய செய்தி இதோ!

1947ஆம் ஆண்டின் தொடக்கம். நம் நாடு விடுதலையாகாத காலகட்டம். அப்பொழுது டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மகாத்மா காந்திக்கு, சமாதானத்திற்கான உலகின் மிகப்பெரிய விருதான “”நோபல் பரிசினை” அளிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை, டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அமைதியாக, யாருக்கும் தெரியாமல் மேற்கொண்டார்.

இந்த முயற்சி காந்தியடிகளின் காதுக்குக்கூட எட்டவில்லை. நோபல் பரிசுத் தேர்வுக் குழுவில் இருந்த தம் நண்பருக்கு டாக்டர் கிருஷ்ணன் இதுகுறித்து எழுதினார். 1947ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசினை மகாத்மா பெற வேண்டும் என்பது கிருஷ்ணனின் விருப்பம்.

காந்திஜி குறித்த சிறப்புச் செய்திகளை இந்தியாவின் மீது பற்றுக்கொண்ட வெளிநாட்டவரான ஹொராஸ் அலெக்ஸôண்டர் தயாரித்து ராஜாஜியின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் அனுப்பினார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவில் டாக்டர் கிருஷ்ணனின் நண்பர் ஒருவர் இருப்பதை ராஜாஜி அறிந்து வைத்திருந்தார். ஆகவே தனக்கு வந்த “”காந்திஜி” பற்றிய குறிப்புகளை 21-02-1947 அன்று டாக்டர் கிருஷ்ணனுக்கு அனுப்பினார்.

டாக்டர் கிருஷ்ணனின் கையெழுத்துடன் தேர்வுக் குழுவிற்கு அவை அனுப்பப்படுதல் சாலச் சிறந்தது என்று ராஜாஜி நினைத்தார். டாக்டர் கிருஷ்ணனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தக்க பரிந்துரைகளுடன் தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஏனோ, அவ்வாண்டிற்கான நோபல் பரிசு காந்திஜிக்கு கிட்டவில்லை. “”அஹிம்ஸை” வழியை, சமாதானக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ள மேலை நாட்டினர் மனம் அப்பொழுது (1947 பிப்ரவரி) இடங் கொடுக்கவில்லைபோலும்! அத்துடன் தன் முயற்சியை டாக்டர் கிருஷ்ணன் விட்டுவிடவில்லை.

1948 ஆம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசுக்கு மகாத்மாவின் பெயரை, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள டாக்டர் கிருஷ்ணன் ஆவன செய்தார்.

அது வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுவிட்ட நேரம்; இந்திய விடுதலை குறித்து உலகமே வியந்து மகாத்மாவைப் பாராட்டிய நேரம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து வாங்கிய விடுதலை அல்லவா? அவருடைய “அஹிம்ஸா’ வழியை உலகச் சமுதாயம் அங்கீகரித்த காலகட்டம் அது. நோபல் பரிசுக் குழுவினரும் அவ்வாண்டிற்கான சமாதானப் பரிசினை மகாத்மாவிற்குக் கொடுக்க முடிவு எடுத்திருக்கலாம். அந்தோ பரிதாபம்! 1948 ஜனவரி 30ஆம் நாள் கொடியவன் கோட்ஸேயின் குண்டுக்கு மகாத்மா இரையானார்.

அவ்வாண்டிற்கான (1948) “”சமாதான நோபல் விருது’‘ யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. நோபல் பரிசுக் குழுவினர் தம்முடைய அறிக்கையில், “”சமாதானத்திற்கென நோபல் பரிசினை பெறும் நபர் யாரும் உயிருடன் இல்லை” என்று கூறியதிலிருந்தே மகாத்மாவைத் தவிர வேறு யாரையும் அக் குழு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. உயிருடன் இருப்பவருக்கே நோபல் பரிசு அளிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர்.

மகாத்மா உயிருடன் இருந்திருந்தால் 1948ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பார். தேசிய உணர்வு மிகுந்த தமிழரான டாக்டர் கிருஷ்ணனும் மகிழ்ந்திருப்பார். நம் நாடும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.

Posted in Gandhi, Krishnan, Mahathma, MK Gandhi, Mohandas karamchand Gandi, Nobel, Prize, Rajaji, Raman Effect, Research, Sir CV Raman, Tamil | Leave a Comment »

Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

ஆளைக் கடிச்சு, அரசையும் கடிக்குது

டிசம்பர் 2005-ல் மகாராஷ்டிர மாநிலத்தில் பெயர் தெரியாத காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ததில் அது சிக்குன் குனியா எனத் தெரிய வந்தது. அது பரவும் வேகமும் அதன் தன்மையும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அப்போதே எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. விளைவு? மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம் என 6 மாநிலங்களுக்குப் பரவிய சிக்குன் குனியா இப்போது அரசையும் கடிக்கிறது.

இது ஆட்கொல்லி நோய் அல்ல. ஆள்முடக்கி நோய். இதற்கான மருந்து (காய்ச்சலுக்கான பாரசிடமால் போன்ற) குறைந்த செலவு மாத்திரைகளும் முழு ஓய்வும்தான். இந்த எளிய தகவல் அடித்தட்டு மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்தும்கூட, அவர்களது சேவைக்கரம் கிராமங்களுக்கு நீளவில்லை. இதனால் மக்கள் அதிகம் செலவிட நேரிட்டது.

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் காய்ச்சல் மருந்துடன், செலவுமிக்க வைட்டமின் மாத்திரைகள், வலிநிவாரணிகளை சில மருத்துவர்கள் எழுதிக் கொடுத்துள்ளனர். இதில் சில வலிநிவாரணிகள் இரைப்பையைப் பொத்தலாக்கியிருப்பதை அங்கே தற்போதுதான் உணர்கிறார்கள். சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் இறப்பதற்கு இதுபோன்ற பக்கவிளைவுகளும் முதுமையுமே முக்கிய காரணம். இந்த நோய் ஏழை-நடுத்தரக் குடும்பத்தினரைப் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கச் செய்துள்ளது. குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வோரும், அன்றாட உடல்உழைப்பில் வாழ்வோரும் பலநாள் ஊதியத்தை இழந்ததோடு, மருத்துவச் செலவையும் ஏற்க வேண்டியதாயிற்று. பல இடங்களில் குடும்ப அங்கத்தினர் அனைவருமே நோயால் பாதிக்கப்பட்டு யாருமே வேலைக்குச் செல்ல முடியாத சூழல்களும் பல குடும்பங்களில் ஏற்பட்டன.

காய்ச்சல் நின்றபின் மூட்டுகள் வலிக்கும். அதனால் எந்த வேலையும் செய்ய முடியாது. செய்தால் நோயின் மீள்தாக்குதலுக்கு ஆளாக நேரும். ஆனால் அன்றாடம் உழைத்துச் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்போர், வலியைப் பொருட்படுத்தாமல் வேலைக்குப் போய் மீண்டும் அவதிப்பட்டுள்ளனர். இந்த ஏழைகளுக்கு அரசு மருத்துவமனையில் காய்ச்சல் நின்ற பிறகு 15 நாட்களுக்கு, மருந்துக்குப் பதில் ஒரு கிலோ ரேஷன் அரிசி (ரூ.2 தான்) கொடுத்திருந்தால்கூட இவர்கள் போதுமான ஓய்வு எடுத்து, நோயின் மீள்தாக்குதலைத் தவிர்த்திருப்பார்கள். சிக்குன் குனியா நோய் தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளை, அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும் தினமும் “சீரியல்‘ நேரத்தில் இரண்டு முறை இலவசமாக ஒளிபரப்பச் செய்திருந்தால், ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாத பகுதியில் வசிக்கும் கிராம மக்களும்கூட விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். காய்ச்சலுக்கு உண்டான மருந்தை- குறைந்த விலை என்பதால் வாங்கிச் சாப்பிடவும் செய்திருப்பார்கள். மருத்துவச் செலவும் குறைந்திருக்கும். அரசு இதை யோசிக்கத் தொடங்கியபோது சிக்குன் குனியாவுக்கு அரசியல் காய்ச்சல் வந்துவிட்டது.

தற்போது 6 மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாற்காலிகச் சுகாதார மையங்களை அமைத்தல், இலவசமாக அல்லது குறைந்த செலவில் மாத்திரைகள் கிடைக்கச் செய்தல், பாதிக்கப்படும் ஏழைகளின் ஊதிய இழப்புகளை உணவுப் பொருளால் ஈடுசெய்ய வழிகாணுதல் ஆகியவற்றை அமைச்சர்கள் கூட்டம் விவாதிக்கும் என நம்பலாம்.

Posted in Chicken Kunya, chickun gunya, Chikun Kunya, Dengue, Dinamani, Editorial, Healthcare, Outbreak, solutions, Tamil | Leave a Comment »