Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 25th, 2006

Coke, Pepsi Cola drinks & Pure Dasani Water – Theiyvanayagam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

தமிழரும் அயல்நாட்டு சுவைநீரும்

செ.நெ. தெய்வநாயகம்

தொன்றுதொட்டு தமிழகத்தில் நீரின் வகைகள் உணரப்பட்டு ஆற்றுநீர், ஊற்றுநீர், சுனைநீர், மழைநீர், அருவிநீர், கிணற்றுநீர் எனப் பலவகையாகப் பாகுபடுத்தப்பட்டு பயன்பட்டு வந்துள்ளன. மருந்துகளில் பனிநீரையும் அமுரிநீர் என்ற சிறப்பு நீரையும் பயன்படுத்தி வந்துள்ளனர். பழச்சாறுகளை நேரடியாகவோ, நீர் கலந்து பருகுவதோ பண்டைய பழக்கம்.

கோடைக்காலங்களில் பானை நீரில் வெட்டி வேர் போன்ற நறுமணப் பொருள்களை இட்டுப் பருகுவது பழக்கம். இவையனைத்தும் குடும்பப் பழக்கங்கள். வணிக முறையில் பருகு நீரைச் சுவைப்படுத்துவது அயல்நாட்டுப் பழக்கம்.

இயற்கைச் சுனைநீரில் நீர்க் குமிழ்கள் இருப்பதைக் கண்டு, குமிழ்களில் உள்ளது கரிவளி என்ற கரிஅமிலவளி (Carbon dioxide) என்பதைக் கண்டுபிடித்து, செயற்கையாக அதை உருவாக்க முயன்று, சோடியம் பைகார்போனேட்டு என்ற உப்பைக் கொண்டு அவர்கள் நீரில் அந்தக் கரிவளியைக் கலந்து விற்றார்கள். செயற்கைச் சுனைநீர் என்பது அதன் பெயர். ஆங்கிலத்தில் நர்க்ஹ ரஹற்ங்ழ் என்ற சொற்தொடர் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு 1798.

1881-இல் கோலா கொட்டையின் பொருள்களைப் பயன்படுத்திய சுவைநீர் வெளியிடப்பட்டது. Cola acuminata என்ற ஆப்பிரிக்க பசுமரத்தின் கொட்டைகள் பயன்பட்டன. இவைகள் காபின் இஹச்ச்ங்ண்ய்ங் என்ற கிளர்ச்சிப்பொருள் உடையவை. நம் நாட்டு காப்பிக் கொட்டைகளிலும் இதே பொருள்தான் கிளர்ச்சியைக் கொடுக்கிறது!

1886-இல் ஜார்ஜியா மாநிலத் தலைநகரான அட்லான்டா நகரில் டாக்டர் யோவான் பெம்பெருட்டன் தான் கோகோயினப் பொருளையும், கோலா கொட்டைப் பொருளையும் சேர்த்து கோகா – கோலா உருவாக்கினார். இதையடுத்து 1898-இல் பெப்சி கோலா உருவானது.

மைய மற்றும் தென் அமெரிக்கச் செடியாகிய கோகா செடி (Erythroxylum Coca)-யின் இலைகளில்தான் கோகேயின் (Cocaine) என்ற வலு வாய்ந்த வேதிப்பொருள் கிடைக்கின்றது. அமெரிக்கப் பழங்குடி மக்கள் இதை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள். கோகேயின் ஒரு கிளர்ச்சியூட்டியாகவும், தடவப்பட்ட இடங்களில் மரத்துப்போகச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகிறது. அநேக நாடுகள் இதை ஒரு போதைப் பொருள் எனத் தடை செய்துள்ளன.

உலகெங்கும் பரவலாக விற்கப்படும் கோகா கோலா, பெப்சி கோலா சுவைநீர்களில் சேரும் பொருள்கள் சிலவற்றை ஆய்வோம்.

1. பாஸ்பாரிக் அமிலம் (Phosphoric Acid்) மூலம் சுவைநீரில் அழுத்தத்துடன் கலக்கப்பட்ட கரிவளி வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. பாஸ்பாரிக் அமிலத்தின் கொடையாகிய பாசுபேட் குருதியில் கூடுவதால் அதற்குச் சமமாக கால்சியம் சத்து (Calcium), எலும்புகளிலும், பற்களிலும் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பாஸ்பாரிக் அமிலம் இறுதியாக சிறுநீரில் வெளியாகும்போது, கூடவே பயனுள்ள கால்சியமும் வெளியேற்றப்படுவதால் எலும்புகளும், பற்களும் வலு குறைகின்றன.

2. சுவைநீர்கள் செய்ய குழாய் நீரைப் பயன்படுத்தினால் குழாய்நீரில் உள்ள குளோரின், டிரை ஆலோ மீதேன்கள் (TRIHALOMETHANES), காரீயம் (Lead), காட்மியம் (Cadmium) மற்றும் பல வேதுப் பொருள் மாசுக்கள் கலந்துவிடும்.

ஒரு புட்டி கோலா சுவைநீரில் 10 தேக்கரண்டி சர்க்கரையும், 150 கிலோ கலோரி எரிசக்தியும், 30-55 மி.கி. காபீனும் சேர்ந்துள்ளன. அமெரிக்க சோளத்திலிருந்து (Maize) பழ இனிமத்தை (Fructose) பெற்றுக் கலக்குகிறார்கள். கோலாக்கள் சர்க்கரைப்பாகு போல் இனிக்க இவ்வாறு கூடுதலாகக் கலக்குகிறார்கள். இந்தச் சுவைநீரைச் சாப்பிட்டால் 1. நாவில் இனிப்புச் சுவை மிகும். 2. பசி அடங்கும். இதையே 3-4 புட்டிகள் என நாள்தோறும் குடிப்பவர்கள் தங்கள் அன்றாட உணவில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நுண்ணூட்டச் சத்துகளான வைட்டமின்கள் சேர்ப்பது எங்ஙனம்?

உடல் இனிப்பு கூடக்கூட இன்சுலின் சுரப்புக் கூடுகிறது. அதிக இன்சுலின் சேர்வதால் 1. உயர் ரத்த அழுத்தம். 2. உயர் ரத்தக் கொழுப்பு (Cholesterol) 3. இதய நோய்கள். 4. நீரிழிவு. 5. உடற்பருமன் – வந்து சேரும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே சாக்கரின் (SACCHARIN) மற்றும் சைக்கிளாமேட் (CYCLAMATE) என்ற செயற்கை இனிப்புகள் புற்று ஈனிகள் (இஹழ்ஸ்ரீண்ய்ர்ஞ்ங்ய்ள்) எனத் தெரிந்து அதைத் தடை செய்தார்கள். கோலாக்காரர்களின் பணப்பசி தணிந்தது உண்டா? இல்லவே இல்லை. Diet SODA வேறுபட்ட குடிநீர் என்றும் நீரிழிவு, பருமன் உடையோர் குடிக்கலாம் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்தச் சுவைநீரில் தற்போது அஸ்பார்டேம் (ASPARTAME) சேர்க்கிறார்கள். இந்த அஸ்பார்டேம் என்ன செய்யும்?

மூளைப்புற்று, பிறவி ஊனம், நீரிழிவு, உணர்வுக் கோளாறுகள், கைகால் வலிப்பு என்ற நோய்களை உருவாக்க வல்லது இந்த அஸ்பார்டேம்! அஸ்பார்டேம் கலந்த சுவைநீரை வெகுநாள்களாகச் சேமித்து வைத்தாலோ, சூடான இடத்தில் வைத்தாலோ, அப்பொருள் மாறி மீதைல் ஆல்ககால் என்ற மெதனாலாக (Methanol) மாறும். இந்த மெதனால் பார்மால் டிஐடு ஆகவும், பார்மிக் அமிலமாகவும் மாற வல்லது. இவை இரண்டும் புற்றீனிகள் ஆகும்!

கலப்படமற்ற நல்ல குடிநீரின் – அமிலத்தன்மை ல்ஏ.7 அதாவது நடுநிலை காரமும் இல்லை. அமிலமும் இல்லை. கோலா சுவைநீரின் அமிலத்தன்மை ல்ஏ 2-4 வரை உள்ளது. இந்தக் கோலாவை மலக்கழிவுத் தொட்டியில் ஊற்றினால் கரப்பான் பூச்சிகளும், தெளிப்பான் மருந்தாக அடித்தால் பயிர் பூச்சிகளும் மடிவது இதனால்தான். உடைந்த பல் ஒன்றை ஒரு குவளை கோலாவில் போட்டு வையுங்கள். 7 நாள்களில் உடைந்த பல் கரைந்துவிடும். இந்த அமிலத்தையும் குடிக்கத்தான் வேண்டுமா? சித்தர் பாடல் மாறத்தான் வேண்டுமா? “”கல்லைத்தான், மண்ணைத்தான், கோலாவைத்தான் குடிக்கத்தான், கற்பித்தானா”? இல்லவே இல்லை.

அதிகமான இனிப்பு – பற்களுக்குக் கேடு, சிதைவுநோய்கள் பெருகும். கோலாவில் கலக்கப்படும் நிறமிகள் செயற்கையானவை. மேற்கோளாக மஞ்சள் எண்.5 (Yellow No.5) சேர்க்கிறார்கள். இதன் மூலம் இளைப்பு நோய் (Asthma), தோல் தடிப்பு (hives) மற்றும் ஒவ்வாமை நோய்கள் உருவாகலாம்.

இந்தக் கோலாக்களில் கோலகலமான விற்பனைக்கு உதவுவது என்ன தெரியுமா? விளம்பரங்கள்! பத்திரிகை விளம்பரமாக ஆண்டொன்றுக்கு 70 கோடி அமெரிக்கா டாலர்கள் செலவு. நேரடி விற்பனை, ஊக்கப்பரிசு, விளையாட்டுப் போட்டிகள், கடைக்காரர்களின் முகமை வீதம், விளம்பரப் பலகைகள் என இதைவிடி அதிகச் செலவுகள் செய்கிறார்கள்.

இந்தியாவுக்கு 1977-இல் வந்தார்கள். அப்போதைய அரசு விரட்டியது. மீண்டும் வந்தார்கள். கோக கோலாவிற்காக மட்டுமே இந்தியாவில் 52 தொழிற்சாலைகள் உள்ளன. அவை உறிஞ்சும் நமது தாயகத்தின் நிலத்தடி நீரோ நாளொன்றுக்கு எட்டு முதல் 15 லட்சம் லிட்டர் வரை நிலத்தடி நீர் போனால் அடுத்த வறட்சிக் காலத்தில் நமக்கு எந்நீர் கிடைக்கும்?

இந்தியாவில் செய்யப்படும் கோலாக்கள் தூய்மையானவையா? இல்லை என்பதுதான் மெய்நிலை! நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை மெய்ப்பித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் கோலா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது! இதை ஏன் நாடு முழுமையாக விரிவுபடுத்தவில்லை? நாடாளுமன்றத்திற்கு ஒரு விதி நாட்டுக்கு ஒரு விதி என்று இருக்கலாமா?

தில்லியில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment்) செய்த ஆய்வுகளின் முடிவுகள், விரிவாக அவர்களின் பத்திரிகையான ஈர்ஜ்ய் ற்ர் உஹழ்ற்ட் – 2006 ஆகஸ்டு 15ஆம் நாள் இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 57 புட்டி கோலாக்கள் அனைத்திலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

நச்சுநீர் வேண்டாம் நமக்கு

நம்முடைய பாரம்பரிய இளநீர், மோர், சுவைப்பால், சாறுகள், பதநீர் போன்றவை தாராளமாகக் கிடைக்கும்போது இந்தக் கோலா உபத்திரவத்தை விலைக்கு வாங்குவானேன்? மக்கள் விழிப்படையட்டும். நம் நாட்டு மக்கள் இந்தச் சுவைநீர்கள் வேண்டாம் என முடிவெடுக்கட்டும். விரட்டுவோம் நஞ்சினை! புகட்டுவோம் நல்லதொரு பாடம்!

Posted in ASPARTAME, Calcium, Carbon dioxide, Centre for Science and Environment, Cholesterol, Cocaine, Coke, cola, Cola acuminata, Fructose, Health, Pepsi, Phosphoric Acid, Poison, SACCHARIN, Water | Leave a Comment »

Qualified but poor medical student will be supported by CM Fund – M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

கடலூர் மாணவியின் மருத்துவ படிப்பு செலவை அரசு ஏற்கும்: கருணாநிதி

சென்னை, அக். 26:கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி உமா மகேஸ்வரியின் மருத்துவப் படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நெய்வேலி மேல்நிலைப் பள்ளியில் படித்த உமா மகேஸ்வரி, பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1121 மதிப்பெண் எடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

இவரது தந்தை தள்ளுவண்டியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். மாணவியின் குடும்ப ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு சிறப்பு நிகழ்வாக, மாணவி மருத்துவப் படிப்பு முடிக்கும் வரை அவரது மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் உமா மகேஸ்வரி செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் அனைத்தும் கல்லூரி முதல்வருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். மேலும் மருத்துவப் படிப்பு முடியும் வரை பாளையங்கோட்டை கல்லூரி மாணவியர் விடுதியில் இலவசமாக தங்கி படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in 1121, CM, CM Funds, Doctor, Flowershop, Karunanidhy, M Karunanidhi, medical college, Mu Ka, Neyveli, Paalayankottai, Poor, Tamil Nadu, Thirunelveli | Leave a Comment »

Mangalore: Centre should review ban on Gutka: KPRS

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

பாக்கு பொட்டலத்துக்குத் தடை: அமைச்சர் அன்புமணி

பெங்களூர், அக். 26: மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் தன்னிச்சையான அறிவிப்பால், பாக்கு வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

பெங்களூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாக்குப் பொட்டலங்களுக்கு (குத்கா, பான்பராக்) தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அன்புமணி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட அறிக்கையாகும். இது மத்திய அரசின் முடிவு அல்ல.

மத்திய அமைச்சரின் இந்த அறிக்கையால் பாக்கு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கர்நாடக விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அன்புமணியின் இந்த அறிவிப்பால் பாக்கு விலை பெருமளவில் சரிந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவரின் இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல.

இதுபோன்று அறிக்கைகளை வெளியிடும்போது அன்புமணி சம்பந்தப்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை கலந்து பேசி வெளியிட வேண்டும். அவர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு விவசாயிகளுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.

போதை தரும் பொருள்களை கலந்து விற்பனை செய்யும் பாக்குப் பொட்டலங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள்.

ஆனால் அன்புமணி ஒட்டுமொத்தமாகத் தெரிவித்ததால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்படும். அதில் பாக்குப் பொட்டலங்களுக்குத் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படும்.

கர்நாடகத்தில்

  • மங்களூர்,
  • உடுப்பி,
  • சிக்மகளூர்,
  • ஷிமோகா, மற்றும்
  • வட கர்நாடகப் பகுதிகளில் அதிக அளவில் பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு விரைவில் தில்லி செல்ல இருக்கிறோம்.

தில்லியில் மத்திய அமைச்சர் அன்புமணியை சந்தித்து பாக்குப் பொட்டலங்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்வோம். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

Posted in Anbumani, Anbumani Ramadoss, betelnut, Congress (I), Gutka, Gutkha, Karnataka, Karnataka Prantha Raitha Sangha, Pan Parag, Seeval, Vethalai | Leave a Comment »

The Right to Information Act (RTI)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

இந்தியாவில் தகவல் உரிமை பெறும் சட்டம் பயன்களை அளிக்கத் தொடங்கியுள்ளது

தகவல் பெறும் உரிமை வாசகங்கள்
தகவல் பெறும் உரிமை குறித்த விழிப்புணர்வு

இந்தியாவில் உள்ள அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவது என்பது சாதாரண குடிமக்களுக்ககு இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ரேஷன் அட்டை, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற சேவைகளைப் பெறவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நாட்டின் பல பகுதிகளில் உள்ளது.

லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வெகுவாக பரவியிருந்த நிலையில்தான் கடந்த ஆண்டு இந்திய அரசால் தகவல் உரிமை பெறும் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அரசு அதிகாரிகள் அபராதம் செலுத்த நேரிடும். இந்தச் சட்டம் வந்த பிறகு அடித்தளத்தில் இருக்கும் பலர் ஒரு சாதாரண விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

சில இடங்களில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மக்கள் இந்தச் சட்டதின் உதவியை நாடியுள்ளனர்.

Posted in activism, BBC, Civic duty, Government, Information, Law, Right to Information Act, RTI | 1 Comment »

Achuthananthan greets AK Anthony – New Defence Minister

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

மத்திய அமைச்சரவையில் ஏ.கே.அந்தோணி கேரளாவுக்கு 2-வது மந்திரி

திருவனந்தபுரம், அக். 25-

மத்திய மந்திரிசபை நேற்று மாற்றம் செய்யப்பட்டது புதிய மந்திரியாக 3 பேர் பதவி ஏற்றனர். ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாகவும், கன்னட நடிகர் அம்பரிஷ், ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் இணை மந்திரிகளாகவும் பதவி ஏற்றுள்ளனர்.

ஏ.கே.அந்தோணிக்கு மந்திரிபதவி வழங்கப்பட்டதின் மூலம் கேரளாவுக்கு 2-வது மத்திய மந்திரி பதவி கிடைத்துள்ளது. ஏற்கனவே வயலார்ரவி வெளிநாட்டு இந்தியர் விவகாரங்கள் மந்திரியாக உள்ளார். தற்போது ஏ.கே.அந்தோணிக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆலப்புழை மாவட்டம் சேர்தலையில் 1940 டிசம்பர் மாதம் 28-ந்தேதி எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஏ.கே.அந்தோணி. சட்டக்கல்லூரி பயின்று பட்டம்பெற்று காங்கிரஸ் ஆதரவு கேரள மாணவர் சங்கத்தை நடத்தி புகழ்பெற்றார்.

ஏ.கே.அந்தோணிக்கு தற்போது 65 வயது. 3 முறை கேரள முதல் மந்திரியாக இருந்துள்ளார். இரண்டு முறை முதல்வர் பதவியையும் மத்திய மந்திரி பதவியை ஒருமுறையும் ராஜினாமா செய்தவர். இவருக்கு தற்போதைய முதல் மந்திரி அச்சுதானந்தன் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Posted in Achuthananthan, AK Anthony, Cabinet, defence, Greet, Minister, NRI Ministry, Vayalar Ravi | Leave a Comment »

Mayors announced by M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

சென்னை மேயர் மா.சுப்பிரமணியம்: கருணாநிதி அறிவிப்பு 

சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர், துணை மேயர் பெயர் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மதியம் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர் – பி.எம்.மன்னன்

நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்

Posted in candidates, Chennai, civic elections, Coimbatore, Deputy Mayors, DMK, Kovai, Local Body Polls, M Karunanidhi, Madras, Madurai, Mayors, Nellai, Salem, Tamil Nadu, Thiruchirappalli, Thirunelveli, Trichy | 1 Comment »

World Bank to invest in Andhra Pradesh micro-credit & Self-help Organizations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

ஆந்திர மகளிர் சுய உதவிக் குழுக்களுகளில் உலக வங்கி முதலீடு

உலக வங்கி
உலக வங்கி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களில், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யத் தான் திட்டமிட்டுவருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

சுய உதவிக் குழுக்களின் பணிகள் சிறப்பாக உள்ளதாக தற்போது ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் கிரீம் வீலர் தெரிவித்தார். கிராம மக்களிடம் மறைந்து கிடக்கும் வியாபாரத் திறன்களை வெளிக்கொண்டுவந்து, வறுமையை குறைக்க இக் குழுக்கள் உதவுவதாக அவர் தெரிவித்தார்.

உலக வங்கி அளிக்க உள்ள நிதியில் ஒரு பகுதி பாசன திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் மீதி பணம் நகர்ப்புற மேலாண்மை மற்றும் பொருளாதார முறைகளை மாற்றி அமைப்பதற்காக கொடுக்கப்படும் என்றும் உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

Posted in Agriculture, Andhra Pradesh, AP, Economy, IMF, invest, investments, Irrigation, Micro-credit, NGO, Rural, Self-help, Villages, WB, world bank | Leave a Comment »

Ramzan Shopping == Christmas Santa Claus == Deepavali Celebrations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

வர்த்தகமயமாகும் ரம்சான் பண்டிகை

ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள்
ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள்

ரம்சான் காலத்தில் முஸ்லீம்கள் வீடுகளிலேயே அதிக நேரம் தங்கியிருக்கின்றனர். இதனால் இவர்கள் அதிக நேரம் டி வி பார்ப்பதாக தொலைக்காட்சி நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். முஸ்லீம் நாடுகளில் செய்யப்படும் மொத்த விளம்பரங்களில 30 சதவீதம் ரம்சான் மாத காலத்தில் செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம் செய்யப்படும் டி வி ஒளிபரப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் குடும்பங்களை சென்றடைகின்றன.

நோன்பு காலத்தில் உணர்ச்சிமயமான விளம்பரங்களை விளம்பரதாரர்கள் தயாரிக்கின்றனர். நோன்பு இருப்பவர்களுடன் தொடர்புகொள்ள நீதிக் கதைகளை சொல்வது ஒரு வழியாக உள்ளது என்கிறார் லியோ பர்னேட் நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பிரிவின் தலைவர் ரிச்சர்ட் பிண்டெர்.

ரம்சான் போது ஷாப்பிங் செய்யாதீர்கள் என்று கூறுகிறார் இமாம் அஜ்மால் மசூர். அதிக அளவுவிலான வர்த்தக் குறுக்கீட்டால், ரம்சானின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக இமாம் அஜ்மல் மசூர் கருதுகிறார்.

உலகம் முழுவதிலும் 100 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர். இதில் பலர் வேகமாக வளரும் நாடுகளில் உள்ளனர். எனவே ரம்சான் மாதத்தில் வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏராளமாக பொருள் செலவிடப்படுவதை ஏற்றுக் கொள்ளாத சில முஸ்லீம்கள், தற்போது ரம்சானுக்கும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணுகின்றனர்.

Posted in Ads, Advertisements, Celebrations, Christmas, Customer, Deepavali, Economy, Marketing, Ramadan, Ramzan, sales, Santa Claus, Shopping, TV | 2 Comments »