Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 24th, 2006

C Vaiyapuri :: Local body elections’ rules & regulations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

கடும் தேர்தல் விதிமுறைகள்

சி. வையாபுரி

இரண்டு கட்டமாய் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அரங்கேறிய உறவுகள், உறவு முறிவுகள் கட்சித் தாவல்கள் முதல் நடமாடும் கஜானாக்களாக மாறிய வேட்பாளர் பட்டாளங்கள், வேட்பு மனுத் தாக்கல் என்கிற முளைப்பாரி சடங்குகளோடு தள்ளுமுள்ளு வெட்டுக் குத்து ரத்தக்களரி வரையிலும் நிம்மதி கெடச் செய்த மிருகச் சண்டைகள் நம்மைத் தலை குனிய வைத்துள்ளன.

இன்று

  • 246 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் தலா ரூ. 50 ஆயிரம் வரையிலும்,
  • 2850 பேர்களைக் கொண்ட தலைவர் தேர்தலில் தலா ரூ. 6 லட்சம் வரையும் செலவழித்ததாகத் தகவல்கள் வருகின்றன. ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி விரயமாக்குகிறார்கள்?

இந்தக் கேள்விக்கு விடையாக ஒரு வேட்பாளர் சொன்னார்:

“”ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சித் திட்டங்களுக்காக அரசாங்கப் பணம் குறைந்தது ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலும் ஒதுக்கீடுகள் வரும் போது 10 சதவீத பர்சன்டேஜ் கிடைத்தால் ரூ. 5 முதல் 10 லட்சம் வருகிறதல்லவா?

இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் லஞ்ச ஊழல் செய்ய மாட்டேன்” என்று சத்தியப் பிரமாணமும் செய்தார்.

அதாவது, 10 சத “பர்சன்டேஜ்’ என்பது லஞ்ச ஊழல் என்கிற குற்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வருவாயாகவே கருதப்பட்டு சகல கட்சியினராலும் அங்கீகாரமும் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களால் அவர்களது தொகுதிகள் அடிப்படை வசதிகளைப் பெற்று தன்னிறைவடைந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடையும் சம்பா நடவும் மட்டுமன்றி, தாமிரபரணி, ஈரோடு, காலிங்கராயன் ஆயக்கட்டுகளில் விவசாயப் பணிகள் தீவிரமாய் இயங்கிய நேரத்தில் வந்த உள்ளாட்சித் தேர்தல், உழவுப் பணிகளை முடக்கி வைத்தது. ஆள் பற்றாக்குறையினால் விவசாயிகள் அல்லாடிப் போனார்கள்.

ஊராட்சி நிர்வாகங்களெல்லாம் விவசாயம், நெசவு, கிராம சிறு தொழில் புரிகின்ற மேன்மக்களிடமிருந்து தடிக் கொம்பு பேர்வழிகளுக்கு எப்போது கைமாறத் தொடங்கியதோ அப்போதே துளித் துளியாய் இருந்த ஊழல், அருவியாய் பெருகி விட்டது. நம் கிராமங்கள் எப்படி உருப்படும்?

ஐ.நா. சபையின் உலக மக்கள்தொகைக் கண்காணிப்புக் குழு அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2008-ம் ஆண்டு இறுதியில் கிராமங்களில் தற்போது 60 சதமாய் இருக்கின்ற மக்கள்தொகை 50 சதமாகச் சுருங்கி நகரங்களில் தற்போது 40 சதமாக உள்ளது 50 சதமாக உயரும் என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.

வழிகாட்டுதல்களும் சமூக சகோதர வாழ்வும் விவசாயம் மற்றும் கிராமத் தொழில்கள் புத்துயிர் பெறுவதும் கிராமங்களில் தெளிவில்லாமல் உள்ளன. தரமான கல்வி, நம்பகமான சுகாதார மருத்துவ வசதி, தொடர்ந்த வேலைவாய்ப்புகள் இவையும் இங்கு அரிதாகி வருவதுமே கிராமங்களிலிருந்து மக்கள் சாரைசாரையாய் நகரங்களை முற்றுகையிடக் காரணமாகின்றன என்றும் அந்த அறிக்கை விவரிக்கின்றது.

இப்படித் தொடரும் இந்த அவலங்களுக்கு இனி ஒரு தீர்வு வேண்டும். நாட்டில் 60 லட்சம் டன் கோதுமையும் 30 லட்சம் டன் பருப்பு வகைகளும் இறக்குமதியாகியுள்ளன. சென்ற ஆண்டு ஏற்றுமதியில் முதல்நிலை வகித்த இந்தியா இந்த ஆண்டு இறக்குமதியில் முன்னிலை வகிக்கின்றது.

ஆகவே, அடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதிலும் ஊரைச் சுற்றுவதிலும் மந்தை மந்தையாய் மக்களைத் திரட்டி கிராமத் தன்னிறைவுக்கான உற்பத்திகள் அனைத்தையும் கூசாமல் முடமாக்கி வெட்டித்தனமாய் காலத்தை விரயமாக்குவதையும் கட்டுப்படுத்த நடத்தை விதிகள் கடினமாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களை அரசாங்கமே ஏற்க வேண்டும். எவரும் தனித்தனியாகத் தனி மேடை அமைத்து ஏறி இறங்க அனுமதிக்கக் கூடாது. ஒரே ஊர்க்காரர்கள்தானே? ஒன்றாக ஒரே மேடையில் நின்று தங்களது கொள்கை, வேலைத் திட்டங்களைப் பிரகடனம் செய்வதோடு பிரசாரம் முடிவடைய வேண்டும்.

வாக்குச் சீட்டின் மாதிரிகளை அரசாங்கமே அச்சிட்டு பெரிய அளவில் ஊரில் முக்கியப் பகுதிகளில் விளம்பரம் செய்து விட்டு நேராக வாக்குப் பதிவை முடித்து விட வேண்டும்.

இந்தவிதமான தேர்தல் நடத்தை நெறிகள் மற்றும் விதிகள் யாவும் மாநகரம் வரைக்கும் பொருந்துவதாய் இருத்தல் வேண்டும்.

நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தல் மாபெரும் ஒரு ஜனநாயகத்தின் அடையாளம். ஆமாம்! அப்படித்தான் நாம் எண்ண வேண்டும். ஆனால், நடைபெற்ற விதங்களை எண்ணும்போது நாம் நாகரிகமடைந்த ஒரு சமூக மக்களா அல்லது காட்டு விலங்குகளா என்கிற வருத்தமான கேள்வி மனத்தைக் கோரப்படுத்துகிறது.

இப்படி ஒரு தேர்தல் மறுபடியும் வருமானால், எல்லாமே பாழ்பட்டு அமைதி, நிம்மதி, கலாசாரம் என்பதன் அடையாளங்கள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டுவிடும்.

Posted in C Vaiyapuri, Civic Polls, Corruption, Dinamani, Election Reform, Expenses, local body elections, Op-Ed, regulations, rules, Rural, Suggestions, Tamil Nadu, Thoughts, Villages | 2 Comments »

“Supreme Court crosses its Boundaries” – ‘Reservations are not meant for 2.5 lacs p.a. salaried folks’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 25: இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வரும் 31-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை தொடர்பான முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க முடியும். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகார வரம்பு மீறல் ஆகும்.

  • “50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
  • பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

Posted in 2.5 Lakhs, Condemn, Creamy Layer, Dalit Panthers, Percentage, Reservations, Salary limits, Supreme Court, Thol Thiruma, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 4 Comments »

Five more added to 1000+ suicide toll in Vidharbha

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

விதர்பாவில் மேலும் 5 விவசாயிகள் தற்கொலை

நாகபுரி, அக். 25: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விதர்பா பகுதியில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடன் தொல்லை, விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலையின்மை, வறுமை ஆகியவற்றின் காரணமாக இப் பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த 2005 ஜூன் முதல் இதுவரை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

அண்மையில் இப் பகுதிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இருப்பினும், அதன் பிறகும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் இப் பகுதியில் விளையும் பருத்திக்கு கூடுதல் விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை (அக்.26) தன்னார்வ அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

Posted in Agriculture, Farmers, Madhya Pradesh, MP, peasants, SNEHA, Suicides, Vidharba, Vidharbha | Leave a Comment »

Tamil Nadu Civic polls & Local Body Election Results – ADMK’s Victories

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வெற்றி பெற்ற வார்டுகள் 

சென்னை, அக். 24-

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை மைனாரிட்டி தி.மு.க. அரசு எவ்வாறு கேலிக் கூத்தாக்கியது என்பதை இந்த நாடே நன்கு அறியும்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய வன் முறைகளுக்கு இடையேயும், அ.தி.மு.க. 21 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரி வித்துக் கொள்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட வாரியாக கழகம் வெற்றி பெற்றுள்ள இடங்களின் பட்டியல் வருமாறு:-

வ. மாவட்டத்தின் மாநகராட்சி நகரசபை 3-ம்நிலை பேரூராட்சி வார்டு ஊராட்சி மாவட்ட மொத்தம்

எண் பெயர் கவுன்சிலர்கள் கவுன்சிலர்கள் நகரசபை உறுப்பினர்கள் ஒன்றிய வார்டு பஞ்சாயத்து வார்டு

கவுன்சிலர்கள் உறுப்பினர்கள் உறுப்பினர்கள்

1. காஞ்சீபுரம் 63 26 80 53 8 230

2. திருவள்ளூர் 59 35 47 44 6 191

3. வேலூர் 69 19 62 74 4 228

4. திருவண்ணாமலை 29 32 64 6 131

5. கடலூர் 47 38 67 11 163

6. விழுப்புரம் 17 5 61 99 14 196

7. கிருஷ்ணகிரி 14 27 46 7 94

8. தர்மபுரி 9 31 31 4 75

9. சேலம் 16 19 9 111 67 5 227

10. நாமக்கல் 38 5 54 37 5 139

11. ஈரோடு 44 26 151 52 5 278

12. கோவை 10 36 34 170 74 8 332

13. நீலகிரி 5 6 27 12 3 53

14. திருச்சி 10 8 2 57 62 8 147

15. பெரம்பலூர் 7 11 36 6 60

16. கரூர் 14 8 36 30 2 91

17. தஞ்சாவூர் 28 53 40 1 122

18. நாகப்பட்டினம் 23 6 30 56 6 121

19. திருவாரூர் 24 19 22 1 66

20. புதுக்கோட்டை 16 22 46 3 87

21. மதுரை 9 28 15 34 58 10 154

22. தேனி 50 8 98 31 3 190

23. திண்டுக்கல் 19 71 52 7 149

24. விருதுநகர் 31 12 48 47 8 146

25. சிவகங்கை 13 14 32 59

26. ராமநாதபுரம் 20 10 23 37 2 92

27. திருநெல்வேலி 13 27 4 95 74 5 218

28. தூத்துக்குடி 16 2 56 60 8 142

29. கன்னியாகுமரி 11 84 14 1 110

மொத்தம் 58 777 239 1643 1417

Posted in ADMK, AIADMK, Calculations, Civic Polls, Clinch, Election, Final, local body elections, Percentage, Results, Tally, Tamil Nadu, Victory, Vote | 1 Comment »

Did Vadivelu plagiarize concepts from Bhagyaraj?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

வடிவேலுவின் 2 காமெடி அதை என்னுடையது: பாக்கியராஜ் புகார் 

சென்னை, அக். 24-

விஷால் நடிக்கும் `சிவப்பதிகாரம்‘ படத்தின் பாடல் கேசட் விழா வட பழனியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பாக்கியராஜ் தான் எழுதிய 2 காமெடி கதைகள் படமாகி அவற்றில் வடிவேலு நடித்ததாக புகார் கூறினார். பாக்கியராஜ் பேச்சு விவரம் வருமாறு:-

முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆன பிறகு சரி இல்லையாமே, ஊத்துக்கிட்டாமே, என்றெல்லாம் கன்னாபின்னா வென்று பேசுவார்கள். இப்படம் வெளிவரும் முன்பே `அது ரிலீஸ் இல்லை, பெட்டி வராது என்றெல்லாம் பேசினார்கள். தீபாவளி படங்கள் ரிலீசின் போது அவற்றை கேட்டேன். வருத்தமாக இருந்தது.

உதவி டைரக்டர்கள் முந்தைய காலங்களில் டைரக்டர்கள் வீட்டு வாசலில் காத்து கிடந்து சான்ஸ் கேட்டனர். நான் பாத்திபன் போன்றோர் அப்படித் தான் டைரக்டராகினோம்.

ஆனால் இப்ப உதவி டைரக்டர்களை தேட வேண்டி இருக்கு. அகப்படும் உதவி டைரக்டர்கள் கூட எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்கிறார்கள்.தமிழ், படங்களில் மட்டும் அவர்கள் வேலை பார்ப்பதில்லை. தெலுங்கு, மலையாளம், இந்தின்னு சுற்றிக்கிட்டே இருக்காங்க. உதவி டைரக்டர்கள் நம்பிக்கையா இருப்பதும் அவசியம்.

நான் ஒரு காமெடி கதை எழுதி வச்சிருந்தேன். ஓட்டு போட்டவர் கிட்ட எனக்குத் தானே போட்டே என்று வேட்பாளர் கேட்க உங்களுக்குத்தாண்ணே நீங்க நம்ப மாட்டிங்கன்னு காட்டுறதுக்கு எடுத்து வந்துட்டேன் என்று ஓட்டு சீட்டை காண்பிப்பார். சில நாள் கழித்து வடிவேலு நடிக்க இந்த கதையை படத்தில் பார்த்தேன். வடிவேலுக்கே போன் பண்ணி கேட்டேன். எனக்கு தெரியாது நடிக்கச் சொன்னாங்க நடிச்சேன் என்றார். அது போல் பகலில் அம்மா-அப்பாவை மதிக்கும் ஒருவேன் ராத்திரியானால் குடிச்சிட்டு வந்து சித்ரவதை செய்றமாதிரி கதை எழுதி இருந்தேன். அதுவும் வடிவேலு நடிக்க வெளியாகி விட்டது.

நல்ல கதை உள்ள படங்களை மக்கள் ஏற்பார்கள் சித்திரம் பேசுதடி, எம்டன் மகன், திமிரு படங்களில் கதையம்சம் இருப்பதால் ஒடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர்கள் பார்த்திபன், விஷால், நடிகை மம்தா, கவிஞர்கள் பா.விஜய், யுகபாரதி, டைரக்டர்கள் லிங்கசாமி, கரு. பழனியப்பன் தயாரிப்பாளர்கள் எம்.ஆர். மோகன் ராதா, பி.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.

Posted in Bhagyaraj, Comedy, Kollywood, parthiban, Plagiarism, Sivappathigaram, Tamil Cinema, Tamil Movies, Theft, Vadivel, Vishal | Leave a Comment »

Caste certificate explicitly given as ‘Dog’ by the Tashildar

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

சவரத் தொழிலாளிக்கு “நாய்” ஜாதி என்று சான்றிதழ் வழங்கிய கிராம அதிகாரி `சஸ்பெண்டு’ 

திருவனந்தபுரம், அக்.24-

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பெரும்பாய் கோடு கிராமத்தை சேர்ந்த வர் பி.சி.விஜயன். சவரத் தொழிலாளியான இவர் வீடு கட்டுவதற்காக கோட்டயம் நகரசபையில் கடன் உதவி பெற விண்ணப்பித்திருந்தார்.

அதற்காக அவருக்கு ஜாதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. சான்றிதழ் பெறுவதற்காக “பெரும்பாய்கோடு” கிராம நிர்வாக அதிகாரியை அணுகி னார். பலமாத அலைச்சலுக் குப்பின் அவருக்கு ஜாதிச் சான்றிதழை அந்த அதிகாரி வழங்கினார்.

சான்றிதழை வாங்கிப் பார்த்ததும் விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அதில் `சுர கன்‘ (கேரளாவில் சவரத் தொழிலாளிகளை அழைக்கும் பெயர்) என்பதற்குப் பதி லாக “சுனகன்” என்று இருந் தது. சுனகன் என்றால் மலை யாளத்தில் நாய் என்று அர்த்தம். எழுத்து பிழையாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்த விஜயன் உடனே அந்த அதிகாரியிடம் இது பற்றி தெரிவித்து திருத்தி தர கூறினார். ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை. “வார்த்தையை திருத்தி மறு சான்றிதழ் தர வேண்டு மென்றால் அரசு கெசட்டில் நீ அறிவிப்பு வெளியிட வேண் டும்” என்று கூறி விஜயனை அனுப்பி வைத்துவிட்டார். திருத்தப்பட்ட ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக விஜயன் எவ்வளவோ அதிகாரிகளை பார்த்தார். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்த விஷயம் பற்றி விஜயன் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதனால் அவரது பிரச்சினை மாவட்ட கலெக்டர் காதுக்கு எட்டியது. உடனே அவர் மண்டல வரு வாய்த்துறைக்கு இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். தவறுதலாக சான்றிதழ் வழங் கிய அந்த கிராம நிர்வாக அதிகாரியை சஸ்பெண்டு செய்தார்.

Posted in Barber, Caste certificate, Castes, Community Certificate, Dog, Hair stylist, Kerala, Kottayam, MBC, Oppression, Salon, SC, ST, Sunagan, Suragan, Tashildar, Village | Leave a Comment »

‘Vijayakanth is a responsible MLA’ – Peter Alphonse (Congress)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

விஜயகாந்த் பற்றி விமர்சனம்: கண்ணிய குறைவாக இருந்தால் ஜெயலலிதா மீது நடவடிக்கை: சபாநாயகர் பேட்டி

நெல்லை, அக். 24-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தாக்கி ஒரு அறிக்கைவெளி யிட்டிருந்தார். இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், சபாநாயகர் ஆவுடையப்பனிடம் நேரில் புகார் தெரிவித்தார்.

சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினர் குடித்து விட்டு வருவார் என்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது தமிழக சட்டசபையின் ஜனநாயக மாண்பை பாதிக்கும் வகையில் உள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு பொறுப்புடன் வந்து செல்கிறார். ஆனால் எதிர்க் கட்சி தலைவர் ஜெயலலிதா கூறியது தமிழக சட்டமன்றத்திற்கு வந்த விபத்தாக உள்ளது. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து நெல்லையில் இருந்த சபாநாயகர் ஆவுடையப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா அறிக்கை வெளி யிட்டுள்ளார் என்று பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. என்னிடம் நேரில் முறையிட்டு உள்ளார்.

நாளை நான் சென்னை செல்கிறேன். அங்கு அவர் வெளியிட்ட ஒரிஜினல் அறிக்கையை ஆராய்ந்து பார்ப்பேன். அது சட்டசபை மரபை மீறிய செயலாக இருந்தால், அவமதிக்கும் செயலாக இருந்தால், கண்ணியத்தை குறைக்கும் செயலாக இருந்தால் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Aavudaiyappan, ADMK, Attendance, Congress, DMDK, Jayalalitha, MLA, Peter Alphonse, Speaker, Speech, Vijayakanth | 2 Comments »

Pranab gets MEA, Anthony named Defence Minister

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

மத்திய மந்திரி சபை இன்று இரவு மாற்றம்: நடிகர் அம்பரீஷ் மந்திரி ஆகிறார்

புதுடெல்லி, அக். 24-

மத்திய மந்திரிசபையில் பல இலாகாக்களுக்கு மந்திரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். வெளியுறவு மந்திரியாக இருந்த நட்வர்சிங் ஈராக்கின் உணவுக்கு எண்ணை திட்ட ஊழலில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.

  • தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்த தெலுங் கானா கட்சி தலைவர் கே.சந்திரசேகர்ராவ்,
  • நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த ஏ.நரேந்திரா,
  • நீர் வள ஆதார மந்திரியாக இருந்த ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெய் பிர காஷ் நாராயணன் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்ததால் அவர்கள் வகித்த இலாகாக்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் மத்திய மந் திரி சபையில் இன்று சிறிய அளவில் மாற்றம் செய் யப்படுகிறது.

ராணுவ மந்திரியாக இருக்கும் பிரணாப்முகர்ஜி இலாகா மாற்றம் செய்யப் படுகிறது. அவரை வெளியுறவு மந்திரியாக நியமிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்து இருக்கிறார். பிரணாப் முகர்ஜிக்கு பதில் புதிய ராணுவ மந்திரி நியமிக்கப்படுகிறார்.

காங்கிரஸ் பொது செயலாளராக இருக்கும் ஏ.கே.அந்தோணி தொழிலாளர் நலத்துறை மந்திரியாக நியமிக்கப்படுகிறார். ஐ.என்.டி.சி. தலைவர் சஞ்சீவரெட்டியும் மந்திரியாக பதவி ஏற்கிறார்.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மத்திய மந்திரிசபையில் இடம் பெறுகிறார். இவர் 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு தேர்தலிலும், 2004-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார்.

நடிகர் அம்பரீஷ் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில் ஸ்ரீதேவிக்கு காதலனாக நடித்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

இவரது மனைவி நடிகை சுமலதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ள ஏராளமான படங்களில் நடித்தவர். அம்பரீசுடன் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கன்னட பட உலகில் முன் னணி நடிகராக இருந்த அம் பரீஷ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் குதித்தார்.

புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Posted in A K Antony, Ambareesh, Chandra Sekhar Sahu, Defence Minister, External Affairs, Information and Broadcasting, J P Yadav, Jaiprakash Narayan Yadav, Karnataka, Manmohan Singh, Minister of State, Mukherjee, Oscar Fernandes, Pranab, Prime Minister, Rural Development, Sumalatha, Water Resources | 1 Comment »