Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘France’

French government probing Sarkozy bank theft: President Nicolas bank account is hacked & raided in internet scam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2008


பிரான்ஸ் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு

பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி
பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி

இணையதளங்களில் அத்துமீறும் நபர்கள் பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி அவர்களின் வங்கி கணக்கிற்குள் உட்புகுந்து சிறிது பணத்தை திருடி விட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.

இதன் மூலம் இணையம் மூலம் வங்கி பரிமாற்றம் நடைபெறுவதில் இன்னும் ஒட்டைகள் இருப்பது உறுதியாகிறது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்லர் பிரான்ஸ் வானொலி ஒன்றில் கூறியுள்ளார்.

பணம் திருடப்பட்டது குறித்து கடந்த மாதம் நிகோலா சர்கோசி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் எவ்வளவு பணம் திருடப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

Posted in Economy | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

French novelist & Explorer of humanity Jean-Marie Gustave Le Clézio wins Nobel literature prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 10, 2008

பிரெஞ்சு எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

நோபல் பரிசு பெற்றுள்ள லே க்ளிசோவ்
நோபல் பரிசு பெற்றுள்ள லே க்ளிசோவ்

இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளரான ழான் மேரி குஸ்டாவ் லெ க்ளீசோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கவிதை புனையும் புது முயற்சிகளில் அவரது படைப்புகள் ஒரு புதிய தளத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகாடமி கூறியுள்ளது.

கிளிசோ அவர்கள் பல்லின ஆளுமை கொண்ட உலகம் சுற்றும் ஒரு நாடோடி என்று அந்த அகாடமியின் செயலர் அழுத்தமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

மத்திய அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளுடன் நேரங்களை செலவவிட்டுள்ள லெ கிளிசோ அவர்கள் அந்த அனுபவம் தனக்கு உலகளாவிய தனது பார்வைக்கான ஒரு முக்கியமான விடயம் என்று லெ கிளிசோ கூறியுள்ளார்.

ஆரம்ப காலங்களில் அவரது எழுத்துக்கள் பரீட்சார்த ரீதியில் இருந்தாலும் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து அவரது எழுத்து பாணி மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Ingrid Betancourt freed in Colombia: Former Hostage is rescued from FARC & Reunited With Children

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2008

பிரான்ஸில் பெத்தான்கூர்

ஃபார்க் கிளர்ச்சிக்காரர்களால் 6 வருடங்கள் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட கொலம்பிய அதிபர் தேர்தலுக்கான முன்னாள் வேட்பாளரான இன்கிரிட் பெத்தான்கூர் அவர்கள், தான் வளர்ந்த பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த தருணத்துக்காக தான் 7 வருடங்கள் காத்திருந்ததாகவும், பிரான்ஸுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

அவரது மீட்புக்கான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்காத போதிலும், அவரை விடுவிக்க வேண்டும் என்று ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்துவந்த, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அவர்களையும் பெட்டன்கூட் அவர்கள் சந்தித்தார்.

தேர்தலில் சர்கோஸிக்கு கிடைக்கவிருந்த மோசமான வாக்குவீதத்தை மாற்றி அதனை ஊக்குவிப்பதற்காகவே, உண்மையில்பெத்தான்கூரை விடுவிக்க வேண்டும் என்று சர்கோஸி பிரச்சாரம் செய்துவந்தார் என்று அவரது விமர்சகர்கள் கூறிவந்தனர்.

Posted in Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Canada adds World Tamil Movement to terror list; Action Contre la Faim (ACF); Sri Lankan Appeal Court decides to inquire Batticaloa election petition

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கனடா உலகத் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்டது

உலகத் தமிழர் இயக்க அலுவலகம்
உலகத் தமிழர் இயக்க அலுவலகம்

கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் செயற்பட்டுவந்த அமைப்பு ஒன்றை, அது விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, அந்த நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு கனடாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கனடிய அமைச்சரவை நேற்று இந்த முடிவை எடுத்திருந்தது. இந்த நடவடிக்கையானது கனடாவில் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முடக்கும் அந்த நாட்டு அரசாங்கத்தின் மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, உலகத் தமிழர் இயக்கத்தின் கணக்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நிதி நிறுவனமும் அது குறித்து கனடிய அரசாங்கத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமது அமைப்பைத் தடை செய்வதற்கான கனடிய அரசாங்கத்தின் முடிவு தவறானது என்றும் அதனை கனடிய சட்டங்களின் அடிப்படையில் எதிர்க்கப் போவதாகவும் கூறும் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவரான சின்னத்தம்பி சிற்றம்பலம், தமது அமைப்பு கனடாவிலும், இலங்கையிலும் அகதிகளுக்கு உதவும் பணிகளில் மாத்திரமே ஈடுபட்டு வந்ததாகவும் கூறினார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்றும் அவர் கூறினார்.


கிழக்கு மாகாண தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கென நடத்தப்பட்ட தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான முறையில் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
மனுவினை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்
கொண்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை ஜூலை மாதம் 14 ஆம் திகதி நடத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்கப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சி உறுப்பினர் இருவர் சார்பில் இந்த தேர்தல் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருள்பிரகாசம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் புகுந்து வாக்களிப்பு மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பினை செல்லபடியற்ற தாக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


மூதூர் கொலைகள் குறித்து ஏசிஃப் சர்வதேச விசாரணை கோருகிறது

மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்
மூதூரில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளர் ஒருவரின் சடலம்

இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள் மூதூரிலுள்ள தமது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தக் கொலைகள் இடம்பெற்றன.

இந்தக் கொலைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் செய்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுவதை இலங்கை அரசு மறுக்கிறது.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »