Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மனைவியுடன் சமரச பேச்சுவார்த்தை: நடிகர் பிரசாந்த் பேட்டி

சென்னை, டிச.19-

பிரசாந்த்-கிரகலட்சுமி இடையே சமீபத்தில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று பிரசாந்த் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது பிரசாந்த்-கிரகலட்சுமி இருவரும் நேரில் ஆஜ ரானார்கள். அவர்களை நீதிபதி தனி அறையில் சந்தித்து விசாரித்தார்.

அவர்கள் இருவரின் பிரச் சினைகளை கேட்டு அறிந்தார். பிறகு பிரசாந்த்-கிரகலட்சுமி இரு வரையும் தனியாக சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பிரசாந்தும் சிரகலட்சுமியும் சந்தித்துப் பேசினார்கள். பிரசாந்த் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஜனவரி 3ந் தேதி பதில் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிரசாந்த் இன்று பகல் 12.10மணிக்கு குடும்பநல கோர்ட்டுக்கு வந்தார். அவரிடம் வக்கீல் ஆனந்தனும் வந்தார்.

கோர்ட்டில் உள்ள மனுத்தாக்கல் பிரிவுக்கு சென்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய தயாரானார். அப்போது செல்போனில் அவருக்கு ஒரு தகவல் வந்தது.

இதையடுத்து மனு தாக்கல் செய்யாமல் பிரசாந்த் வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது பிரசாந்த் கூறியதாவது:-மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தேன். அதற்காகத்தான் கோர்ட்டுக்கே வந்தேன்.

எனது குழந்தையை பார்க்க முடியவில்லை. ஒரு தந்தை என்ற முறையில் குழந்தையை பார்க்காமல் இருப்பது மன வருத்தம் அளிக்கிறது. பல தடவை முயன்றேன். ஆனால் அவர்கள் குழந்தையை காட்டவில்லை. எனவே தான் குழந்தையை பார்க்க அனுமதி கேட்டு இன்று மனு தாக்கல் செய்ய வந்தேன்.

திடீரென்று அவர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நல்ல முடிவு வரட்டும் என்று நான் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று மாலை நாங்கள் சந்திக்கிறோம். அதன்பிறகு என்ன தகவல் என்பதை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு நடிகர் பிரசாந்த் கூறினார்.

நடிகர் பிரசாந்த் மனைவி கிரகலட்சுமிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி இருந்தார். அதற்கு பதில் அளிக்க கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப் பட்டது. ஜனவரி 3-ந்தேதி வரை நீதிபதி அவகாசம் அளித்தார். பிரசாந்த் குற்றச் சாட்டுக்கு கிரகலட்சுமி அளிக்கும் பதில் 3-ந்தேதி தெரியும்.

அதற்கு முன்பு பிரசாந்த் வழக்கு பற்றி பத்திரிகைளுக்கு கருத்து சொன்னால் கோர்ட்டு அவமதிப்பாகி விடும் என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தான் கிரகலட்சுமி அமைதியாக இருக்கிறார். 3-ந்தேதி தனது தரப்பு விளக் கத்தை கோர்ட்டில் வெளி யிடுகிறார்.

கிரக லெட்சுமியும் வந்தார்: நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் ஆஜர்

சென்னை, பிப். 12-

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலெட்சுமி பிரச வத்துக்காக பெற்றோர் வீட் டுக்கு சென்றார். குழந்தை பிறந்த பிறகு பிரசாந்த் பார்க்க செல்லவில்லை. கிரகலெட்சுமியும் கணவர் பிரசாந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. கோர்ட்டு அனு மதியுடன் பிரசாந்த் குழந் தையை பார்த்தார்.

கோர்ட்டில் மனு

அதன் பிறகு சென்னை முதலாவது குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரசாந்த் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரிந்து இருக் கும் தனது மனைவி கிரக லெட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். தாம்பத்திய உரிமையை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இருவரிடமும் நீதிபதி தனித் தனியாக விசாரணை நடத் தினார். அவர்களை சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கி னார். இந்த நிலையில் கடந்த தைப் பொங்கல் தினத்துக்குள் கண வருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கிரகலெட்சுமி மனு தாக்கல் செய்து இருந் தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் அவர் தன்னை கணவருடன் சேர்த்து வைக் கும்படி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந் தது.

ஆஜர்

கிரகலெட்சுமி கோர்ட்டில் ஆஜர் ஆனார். பிரசாந்த் வர வில்லை. அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், பிரசாந்த் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், சிறிது நேரம் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தேவதாஸ் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்துக்கு தள்ளி வைத் தார்.

நடிகர் பிரசாந்த் படப் பிடிப்பை ரத்து செய்து விட்டு கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதியின் அறையில் இரு வரும் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் நீதிபதி தேவதாஸ் விசாரணை நடத்தினார்.

11 பதில்கள் to “Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life”

  1. இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே – உதாரணமாக, உலக செய்திகள்?

  2. bsubra said

    Satan,
    Thanks for the sincere feedback. I am trying to bring some hits to the site which will transform the reader to other notable news stories.

    I have to admit that I have an affinity towards gossip.

    Thank you.

  3. bsubra said

    பிரசாந்த் விவாகரத்து வழக்கு

    சென்னை, ஏப்.24: விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் பிரசாந்தும் அவரது மனைவி கிரகலட்சுமியும் திங்கள்கிழமை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

    கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் கிரகலட்சுமி. மனைவியைத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசாந்த் மனு தாக்கல் செய்தார். தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோரி கிரகலட்சுமி மனு தாக்கல் செய்தார். திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் பிரசாந்தும் அவரது மனைவியும் நீதிமன்றத்துக்கு வந்தனர். அவர்களை நீதிபதி தேவதாஸ் அழைத்துப் பேசினார். தீர்வு ஏதும் ஏற்படாததால், ஜூன் 18-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

  4. bsubra said

    போலி ஆவணம் தயாரித்து மோசடி: பிரசாந்த் மீது கிரஹலட்சுமி புகார்

    சென்னை, ஜூன் 17: எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது போன்ற போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்த பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய மனைவி கிரஹலட்சுமி போலீஸில் புகார் செய்துள்ளார்.

    நடிகர் பிரசாந்த், தனது மனைவி கிரஹலட்சுமியின் முதல் திருமணம் குறித்த ஆதாரங்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். முதல் திருமணத்தை மறைத்து, தன்னை கிரஹலட்சுமியின் குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், சனிக்கிழமை நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரஹலட்சுமி, மாம்பலம் காவல் நிலையத்துக்கு வந்தார். துணை கமிஷனர் பாஸ்கரை சந்தித்து பேசினார்.

    அப்போது, கணவர் பிரசாந்த் தன்னைப் பற்றி பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். அவர் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை. எனவே, அவதூறு பரப்பும் வகையில் செய்திகளை வெளியிடும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

    ஆனால், புகார் தொடர்பாக இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று துணை கமிஷனர் பாஸ்கர் தெரிவித்தார்.

  5. bsubra said

    பிரசாந்த் வெளியிட்ட திருமண சான்று ஆவணம் உண்மையா? – போலீஸ் விசாரணை

    சென்னை, ஜுன். 17-

    நடிகர் பிரசாந்த் மனைவி கிரகலட்சுமியுடன் திருமணம் முடிந்து 60 நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ் கின்றனர். பிரசாந்துக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் கிரகலட்சுமி தனது தாய் வீட்டில் உள்ளார்.

    இது தொடர்பான வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த வழக்கு நாளை (18-ந்தேதி) விசா ரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே பிரசாந்த் தனது மனைவி கிரக லட்சுமி 1998ம் வருடம் செப் டம்பர் மாதம் சென்னை மவுண்ட் ரோட்டைச் சேர்ந்த நாராயணன் வேணுபிர சாத்தை பதிவு திருமணம் செய்து கொண்டார் அவரது உறவினர்கள் ரூ. 50 கோடி கேட்டு மிரட்டினர். என்னை ஏமாற்றி மோசடி செய்த கிரகலட்சுமி மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தியாகராய நகர் துணை போலீஸ் கமிஷனர் பாஸ்கரனிடம் புகார் தெரி வித்தார். திருமண பதிவு சான்றிதழ் நகலையும் கொடுத்தார்.

    அவரது புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரக லட்சுமி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எனக்கு பிரசாந்த் மட்டும்தான் முறைப்படி திருமணம் நடந்தது. அவரை தவிர வேறு யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. அது போன்ற ஆவணங்களில் கையெழுத்து போடவில்லை. என்னையும் எனது குடும்பத்தாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்தில் போலியான திருமண பதிவு சான்றிதழை தயாரித்து அதனை ஆதாரமாக வெளி யிட்டுள்ளார். போலி ஆவணம் தயாரித்து எனது நற்பெயருக்கு களங்கப் படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யிருந்தார்.

    இரு தரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் இது தொடர்பாக விசாரிக்க மாம்பலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் அவரது தலைமையிலான போலீசார் பிரசாந்த் கொடுத்த ஆவணத்தில் இடம் பெற்றிருந்த நாராயணன் வேணு பிரசாத்தின் முகவரி மற்றும் சாட்சி கையெழுத் திட்டவர்களின் பெயர் முகவரி போன்றவற்றை சேகரித்தனர்.

    சான்றிதழில் கிரக லட்சுமிக் காக சாட்சி கையெழுத்திட்ட சங்கர், ராஜேஷ், சந்திரசேகர் ஆகியோரின் இருப்பிடம் தெரிந்தது. அவர்களை அழைத்து வந்து போலீ சார் விசாரித்தனர்.

    இந்த ஆவணத்தில் இடம் பெற்றது உங்கள் கையெழுத்து தானாப இது உண்மையான ஆவணமாப கிரகலட்சுமிக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்னப என பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர்.

    அந்த மூன்று பேரும் கூறியதகவல்கள் ரகசிய மாக வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரித்து வருகின் றனர். இதற்கிடையே சான்றி தழில் குறிப்பிட்ட முகவரியில் நாராயணன் வேணுபிரசாத் என்ற நபரே இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இது தொடர்பாக தியாக ராய நகர் துணை போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் கூறும் போது, “பிரசாந்தும் அவரது தந்தை தியாகராஜனும் வந்து என்னிடம் கிரகலட்சுமி தொடர்பாக வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். எழுத்து பூர்வமாக கொடுப்பதாக கூறி சென்றனர். இதுவரை புகார் வரவில்லை.

    அதே போல் கிரகலட்சுமியும் தனது தாய் தந்தையுடன் வந்து தனது தரப்பு நியாயத்தை கூறி பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாய்மொழியாக கூறினார். எழுத்து பூர்வ புகார் ஒன்றும் வரவில்லை. முறைபடி புகார் பெற்ற பின்னர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  6. bsubra said

    நாராயணன் வேணு பிரசாத் என்னை ஒரு தலையாக காதலித்தார்- அவருடன் திருமணம் நடக்கவில்லை: பிரசாந்த் மனைவி கிரகலட்சுமிகண்ணீர்

    சென்னை, ஜுன். 17-

    நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே சென்னை அண்ணா சாலை பூபேகம் தெருவைச் சேர்ந்த நாராய ணன் வேணுபிரசாத்ஸ் என்ப வருடன் 1998ம் ஆண்டு திருமணம் நடந்து விட்டது எனவும் அதனை முறைப்படி பதிவு செய்துள்ளனர் எனவும் ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டி னார். இது தொடர்பாக மனைவி கிரகலட்சுமி மீது போலீசில் மோசடி புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரனிடம் கிரகலட்சுமி கூறியதா வது:-

    எனது கணவர் பிரசாந்துக் கும் எனக்கும் இடையேயான வழக்கு குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் இருந்து தப்பிக்கவும், வழக்கை திசை திருப்புவதற்காகவும் அவர் எனக்கு ஏற்கனவே நாரா யணன் வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்ததாக போலியான ஆவ ணத்தை வெளியிட்டுள்ளார்.

    நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் எனது தோழி ஒருத்தி மூலமாக நாராயணன் வேணுபிரசாத் எனக்கு அறிமுகமானார். எனது தோழியின் அண்ணன் என்பதால் அவரிடம் பழகி னேன். `புராஜெக்ட்’ சம்பந்த மாக விளக்கம் கேட்பதற்கு நான் அவரது வீட்டிற்கு சென்று இருக்கிறேன். அவரும் எனது தோழியுடன் எனது வீட்டிற்கு வந்துள்ளார். எனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து பேசி யிருக்கிறோம்.

    நண்பர் என்ற முறையில் என்னுடன் எப்போதாவது செல்போனில் பேசுவார். இந்த நிலையில் அவர் என்னை ஒருதலையாய் காதலித்தது தெரிய வந்தது. ஒருநாள் அவர் என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

    நான் எனது குடும்பத்தி னரின் குணத்தை நன்கு அறிந்த வள். அதனால் உங்களிடம் நட்பாக பழகினேன். எனவே காதலை ஏற்க இயலாது. எனது திருமணம் என் பெற் றோர் விருப்பபடிதான் நடக்கும். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன்

    என்றேன்.அதோடில்லாமல் இனிமேல் உங்களுடன் நான் நட்பாகவும் பழக விரும்பவில்லை என கூறி எனது நட்பையும் துண்டித்துக் கொண்டேன். அதன் பின்னர் அந்த நாராய ணன் வேணுபிரசாத் எங்கு உள்ளார். என்ன ஆனார் என்பதே தெரியாது. அவருடன் எனக்கு திருமணம் ஏதும் நடக்கவில்லை.

    ஊரரிய பிரமாண்டமாக பிர சாந்துடன் நடந்த நிச்சயதார்த்த திற்கும் திருமணத்துக்கும் கூட எனது தோழியும் நாராயணன் வேணுபிரசாத்தும் வர வில்லை. நானும் அழைப்பு அனுப்பவில்லை. இந்த விவரம் எல்லாம் எனது பெற் றோருக்கு தெரியாது.

    இதை ஒரு பெரிய விஷயமாக நான் எடுத்து கொள்ளவில்லை. திருமணத்திற்கு பிறகு பணப் பிரச்சினையால் ஏற்பட்ட எங்கள் பிரிவை பயன் படுத்திக் கொண்டு யாரோ எனது கணவர் பிரசாந்திடம் தவறான தகவலை கூறி தப்பான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

    எனக்கு ஏற்கனவே திரு மணம் நடந்து விட்டது என இப்போது சொல்பவர்கள் எனக்கு பிரசாந்துடன் நிச்சய தார்த்தம் நடந்த போதும் திருமணத்தின் போதும் எங்கு சென்றிருந்தார்கள். எனவே போலியான சான்றிதழுடன் பொய்யான தகவலை பரப்பும் பிரசாந்த் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

  7. bsubra said

    ஜீவனாம்சம் தர மறுப்பது ஏன்?

    சென்னை, ஜூன் 19: கிரஹலட்சுமிக்கு ஜீவனாம்சம் தர வேண்டிய தேவை இல்லை என நடிகர் பிரசாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவின் விவரம்:

    என்னுடன் சேர்ந்து வாழ விரும்பாத கிரஹலட்சுமி தனக்கும் தன்னுடன் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து பராமரிப்பு செலவுகளுக்காக மாதத்துக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.10 ஆயிரமும் கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக மனுச் செய்துள்ள கிரஹலட்சுமி ஜீவனாம்சம் பெற எவ்வித அடிப்படை காரணமும் இல்லை.

    எனது குடும்பத்தினர் யாரும் அவரிடம் வரதட்சிணை கேட்கவில்லை. அதற்கான அவசியமும் எங்கள் குடும்பத்தினருக்கு இல்லை. திருமண செலவையும் 2 குடும்பத்தினரும் சரிபங்கு ஏற்றனர்.

    எனது வீட்டில் இருந்தவரை அவரது அனைத்து மருத்துவ செலவுகளையும் நானே பார்த்துக் கொண்டேன். என்னை விட்டுப் பிரிவதாக எதுவும் கூறாமல் தாய்வீட்டுக்கு செல்வதாகக் கூறி சென்று விட்டு, பின்னர் அங்கிருந்து வரவிரும்பவில்லை என்று தொலைபேசியில் தகவல் அளித்தார்.

    அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து எனது தாயார் வாங்கி அனுப்பிய நகைகள் மற்றும் ஆடைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பினார்.

    வளைகாப்பு குறித்தும் எனக்கு தெரிவிக்கவில்லை, குழந்தை பிறந்தது குறித்தும் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நாளேடுகள் மூலமே இத் தகவலை நான் அறிந்து கொண்டேன்.

    எனக்கு 6 வழிகளில் வருமானம் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளது தவறு. ஆனால், கிரஹலட்சுமிக்கு தனிப்பட்ட முறையில் வருமானம் உள்ளது. வருமான வரி மற்றும் சொத்துகளின் மீதான வரியும் அவர் தனிப்பட்ட முறையில் செலுத்தி வருகிறார்.

    ரூ.31 லட்சம் அளவுக்கு தனிப்பட்ட முறையில் சொத்து உள்ள அவர் சென்னையில் பல லட்ச ரூபாய் செலுத்தி பல்வேறு கிளப்களிலும் உறுப்பினராக உள்ளார்.

    இவ்வளவு வருமானம் உள்ள அவர் அன்றாட செலவுகளுக்காக ஜீவனாம்சம் கேட்பது அர்த்தமற்றது என பிரசாந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  8. bsubra said

    கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது உண்மை: முதல் கணவர் வாக்குமூலம்

    சென்னை, ஜூன் 20: கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது உண்மைதான் என்று நாராயண வேணுபிரசாத் போலீஸில் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார்.

    1998 நவம்பர் 30-ல் தனது மனைவி கிரஹலட்சுமிக்கும், கேரளத்தைச் சேர்ந்த நாராயண வேணுபிரசாத் என்பவருக்கும் திருமணம் நடந்தது என்று நடிகர் பிரசாந்த் திருமண பதிவு சான்றிதழை வெளியிட்டிருந்தார்.

    இதுதொடர்பாக தி.நகர் துணை கமிஷனர் பாஸ்கரிடம் புகார் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நடிகர் பிரசாந்த் தன் மீது அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரஹலட்சுமி போலீஸில் புகார் செய்திருந்தார்.

    இதுதொடர்பாக திருமணத்தின் போது சாட்சி கையெழுத்திட்ட வழக்கறிஞர்கள் மூன்று பேரிடம் போலீஸôர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருமணப் பதிவு சான்றிதழையும் போலீஸôர் சரி பார்த்தனர். அதில், திருமணம் நடந்தது என்று உண்மை எனத் தெரிந்தது. இதற்கிடையில் போலீஸ் விசாரணைக்காக நாராயண வேணுபிரசாத் செவ்வாய்க்கிழமை மாம்பலம் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார்.

    “நானும், கிரஹலட்சுமியும் காதலித்து வந்தோம். இது தெரியவந்த அவரது வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் பதிவுத் திருமணம் செய்ய முடிவு செய்தோம். 1998 நவம்பர் 30-ல் கிரஹலட்சுமியுடன் திருமணம் நடந்தது. அவருடன் திருமணத்துக்கு முன்போ, பிறகோ உடல்ரீதியாக எந்த உறவையும் வைத்துக் கொள்ளவில்லை.

    திருமணம் முடிந்த பிறகு இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டோம். திருமணம் விஷயம் தெரிந்த அவரது பெற்றோர் கிரஹலட்சுமியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், அவருடன் தொடர்பு எதுவும் இல்லை. அவரும் என்னுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். பின்னர் நடிகர் பிரசாந்த்துடன், கிரஹலட்சுமிக்கு திருமணம் நடந்ததை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்து கொண்டேன். கிரஹலட்சுமியுடன் முதல் திருமணம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதை அடுத்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்தேன்’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  9. sundari preetha said

    I think prasanth is a really bad guy . he has used poor graha,

  10. Anu said

    Geez, I am a Tamilachi who cannot read Tamil. Am I missing out too much?

  11. Deepthi said

    yes, sundari preetha. u r rite. prashanth is too bad fellow. he n his father trapped griha now to ditch her out. he is behind sneka and doing all these injustice against his wife. i pity his wife very much

பின்னூட்டமொன்றை இடுக