Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vambu’ Category

Cheran praises Mu Ka Azhagiri in Arima Association Meet

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

தொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்

மதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.

அரிமா சங்க விழா

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனப்போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.

நல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.

நான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

வாழ்க்கையே பாடம்

நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.

சேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.

பட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


:: Paraparapu Tamil Daily News :: – Connecting People Across the Web: “வைகோ ‘டூ’ அழகிரி- சேரன் அடித்த செம ‘பல்டி’!

முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,

தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.

வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Alagiri, Alakiri, Arima, Attend, Attendance, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Cheran, Cinema, Films, Function, Gossip, Kisukisu, Madurai, Mayakannaadi, Mayakannadi, Mayakkannaadi, Mayakkannadi, MDMK, Meet, Meeting, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Movies, MuKa Alagiri, Party, Politics, Rumor, Rumour, Seran, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Meet, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, Vambu, Vampu | Leave a Comment »

‘Kettavan movie is the story of Simbu-Nayanthara affair’ – Heroine Leka

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்

வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.

கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.

எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி

சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.

சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.

Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »

Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு

பள்ளிப்பட்டு, ஜுன். 27-

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். இவரும் தெலுங்கில் முன் னணி நடிகராக உள் ளார். இவரது மனைவி லலிதா தேவி என்ற நந்தினி. இவர் விசாகப்பட்டினம் கோர்ட்டில் பவன்கல்யாண் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். அவர் கோர்ட்டில் அளித்த புகா ரில் பவன்கல்யாணுக்கும் எனக்கும் 1991ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந் தோம்.

அவருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடிகை ரேணுகாதேசாயுடன் தொடர்பு ஏற்பட்டது. பின் னர் ரேணுகாவை 2-வது திரு மணம் செய்து கொண்டார். இதன்பிறகு அவரது போக் கில் மாற்றம் ஏற்பட்டது. என் னிடம் அதிக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கு அவரது சகோதரர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, தம்பிநாகேந்திர பாபு, அவரது மனைவி பத்மஜா, சகோதரிகள் விஜயதுர்கா, மாதவி உள்ளிட்ட 16பேர் உடந் தையாக இருந்தனர்.

எனது கணவருடன் சேர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட அனைவரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே இவர்கள் மீது 494சட்டப்பிரிவு படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார்.

இதே போல நந்தினி விசா கப்பட்டினம் குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு தொடர்ந் துள்ளார். அதில் கணவர் பவன்கல்யாண் எனக்கு மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Posted in abuse, Actor, Actress, Affairs, Alimony, Andhra, Andhra Pradesh, AP, Bigamy, Chakradhar, Chiranchivi, Chiranjeevi, Chiranjivi, Cinema, Congress, Custody, Divorce, Dowry, Extramarital, family, Films, Gossip, Hyderabad, Kalyan, Kisu Kisu, Kisukisu, Lakshmi devi, Lakshmidevi, Lakshmy devi, Law, Laxmi devi, Laxmidevi, Madavi, Madhavi, Marital, Marriage, Mathavi, Movies, Nagendhirababu, Nagendhrababu, Nagendirababu, Nagendra Babu, Nagendrababu, Nagenthirababu, Nagenthrababu, Naidu, Nandhini, Nandhiny, Nayudu, Order, Padhmaja, Padmaja, Pathmaja, Pavan, Pavan kalyan, Pavankalyan, Pawan, Pawan kalyan, Pawankalyan, Rajini, Relations, Renu Desai, RenuDesai, Renugadesai, Renuka, Renuka desai, Renukadesai, Rich, Rumor, Rumour, Sirancheevi, Siranjeevi, Siranjivi, Superstar, Sureka, Surekha, Tollywood, Trash, Vambu, Vampu, Vijaiadurga, Vijayadurga, Vijayathurga, Vishagapatnam, Vishakapatnam, Vishakapattinam, Vizag, Wedding | Leave a Comment »

Trisha Fan clubs step towards Politics?

Posted by Snapjudge மேல் மே 3, 2007

புதிய அமைப்பு தொடங்குகிறார் த்ரிஷா

சென்னை, மே 3 தனது பிறந்த நாளையொட்டி புதிய அமைப்பு ஒன்றை நடிகை த்ரிஷா தொடங்குகிறார்.

இதுகுறித்த விவரம்:

கடந்த ஆண்டு “தென்னிந்திய கனவு தேவதை’ என்ற பெயரில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மன்றம் மூலம் முக்கிய பண்டிகை நாள்களில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன.

வரும் வெள்ளிக்கிழமை (மே 4) தனது பிறந்த நாளை முன்னிட்டு “த்ரிஷா பவுண்டேஷன்’ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் த்ரிஷா. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அடையாறு பகுதியில் உள்ள பெட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

விழாவின்போது த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் த்ரிஷா. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விஜய்யுடன் நடித்த “கில்லி’ படத்தை அங்கு திரையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இதே நிகழ்ச்சியில் மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளும், புதிய உறுப்பினராக சேருபவர்களுக்கு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகின்றன.

Posted in Actress, Fan, Fan Club, Fans, Heroine, Kisukisu, Kollywood, Politics, Rumor, Rumour, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theatres, Telugu, Tollywood, Trisha, Vambu | 1 Comment »

Congress performance in Punjab, Uttarakhand, Manipur Elections

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

பதில் வராத கேள்வி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

ஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவகை மதிப்பு இருக்கவே செய்கிறது.

கட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.

உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.

அப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.

சோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன்? என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.

விலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

கேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.

சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா?’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது!
===========================================

காங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்!

நீரஜா செüத்ரி

காங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

தில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.

பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.

பாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.

2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.

அடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.

இப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.

விதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.

3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே?” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.

லூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.

அதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.

சோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ணிக்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.

காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.

தமிழில்: சாரி.

Kalki Editorial (March 9, 2007 )

கட்டெறும்பு காங்கிரஸ்!

பஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்
சிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்!

பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

பஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.

நேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு
விழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்
மறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்
கவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு
வயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று
வெளிப்படையாகவே புலம்பியிருக்கிறார்!

காங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்
தலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்
சிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.

மாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய
விலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.

‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன்? ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற
நிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்
வேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்
திரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை!
Congress TV – Kalki

வாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வாசனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி!

காங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம்! காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்
பிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை
வாங்கிவிட்டார்களாம்!

தி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்
விவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா
கையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்
பிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்
மாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க
இருக்கிறாராம்!

சைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

============================

Dinamani – March 13, 2007

காஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்?

நீரஜா செüத்ரி

காஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

எனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய்யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.

காஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.

ஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.

“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.

உண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.

இந்தியா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.

சியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.

சியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.

பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.

பாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.

ஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. புதிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.

நிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.

தமிழில்: லியோ ரொட்ரிகோ.

Posted in ADMK, Agriculture, Aklai Dal, Amitabh, BJP, BSP, Chaari, Chidambaram, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Delhi, DMK, Economy, Elangovan, Elankovan, Elections, Finance, Ghulam, Gujarat, Gulam, Gulam Nabi Azad, Ilangovan, Ilankovan, Inflation, Jammu, JJ, Kalki, Kashmir, Kisukisu, Krishnasami, Krishnasamy, LTTE, Manipur, Manmohan, Manmohan Singh, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Mehbooba, Mufthi, Mufti, Mulayam, Muslims, Neeraja, Neeraja Chowdhry, News, Pakistan, Punjab, Results, Rumor, Rumour, Sayeed, Sayid, Siachen, Sonia, Srinagar, Thangabalu, UP, Uttar Pradesh, Uttarkand, Uttarkhand, Vambu, Vasan, Vasanth & Co, Vasanthakumar | Leave a Comment »

Did Simbu went to Hyderabad to meet Nayanthara for Valentines Day?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தேடி வந்த சிம்பு: தவிர்த்த நயன்தாரா

சென்னை, பிப். 15: ஹைதராபாத்திற்கு தன்னை பார்க்க வந்த சிம்புவை பார்க்காமல் இருக்க படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு கேரளா சென்றார் நயன்தாரா.

நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவுக்கும் வல்லவன் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதல் படம் வெளியாகி நூறு நாளை தொடுவதற்குள் முறிந்து விட்டது. தற்போது தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தும் நயன்தாரா ‘துளசி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இது நயன்தாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி பரவியது. ஆனால் வதந்தி வந்த போது அவர் படப்பிடிப்பில் இருந்தார்.

இந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல்நாள் சிம்பு நயன்தாராவை தேடி ஹைதராபாத் சென்றார். சிம்பு வந்திருக்கும் செய்தி அறிந்து பார்க்க மறுக்க, நயன்தாரா தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்று காத்திருந்தார் சிம்பு. ஆனால் நயன்தாராவோ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளா பறந்து விட்டார்.

சிம்புவை தவிர்ப்பதற்கே நயன்தாரா கேரளா சென்று விட்டதாக தெலுங்கு திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் நயன்தாரா இது பற்றி கூறும் போது ”தமிழ் ரசிகர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பை கெடுக்க ஒரு சிலர் சதி செய்கிறார்கள். என்னோட குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருக்கவே கேரளா வந்துள்ளேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.

சிம்புவோ ”நயன்தாராவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்காவிலிருந்து வந்த உடன் போயிருப்பேன். இப்போது ஹைதராபாத் சென்று பார்க்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.

Posted in Heroine, Intimate, Kisu Kisu, Kollywood, Love, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Pictures, Rejection, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Suicide Attempt, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Stars, Telugu, Tollywood, Tualsi, Valentines Day, Vallavan, Vambu | 2 Comments »

Kerala’s ‘Crime’ magazine – Tamil actress Cauvery vs Malayalam’s Priyanka

Posted by Snapjudge மேல் ஜனவரி 8, 2007

சக நடிகையின் ஆபாச மிரட்டல்: நடிகை காவேரி கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம், ஜன.7- காசி, சமுத்திரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை காவேரி. இவரை மலையாள நடிகை பிரியங்கா தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றி அவதூறான செய்தி பத்திரிகையில் வெளிவராமல் இருக்க எனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து காவேரி போலீசில் புகார் செய்யவே பிரியங்கா கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.

இந்த வழக்கு கொச்சி அடிசனல் சப்-நீதிபதி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் நேற்று நடிகை காவேரி ஆஜர் ஆகி நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலத்தில் காவேரி கூறியதாவது:-

என்னை பிரியங்கா போனில் தொடர்பு கொண் டார். `கிரைம்‘ மலையாள பத்திரிகையில் உனது தவறான நடவடிக்கை பற்றி செய்தி வெளியாக உள்ளது.அந்த செய்தி வெளியாகாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.5 லட்சம் தந்து விடு. நான் செய்தி வெளிவராமல் தடுத்து விடுகிறேன் என்றார்.

அதிர்ச்சி அடைந்த நான் பட அதிபர் அனில் மேனனிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தேன். அனில்மேனன் `கிரைம்’ பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். பத்திரிகை அலுவலகத்தில் அப்படி ஒன்றும் நாங்கள் செய்தி வெளியிட போவது இல்லை. பிரியங்கா மிரட்டலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டனர்.

இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் கூறியபடி அறிவுரைப்படி பிரியங்காவிடம் ரூ.5 லட்சம் தர சம்மதித்தேன். பணத்துடன் ஆலப்புழையில் உள்ள ஒரு ஓட்டல் பக்கம் வருமாறு பிரியங்கா கூறினார்.

எனது தாயார் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிரியங்கா வரச் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியங்கா பணம் பெற முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு காவேரி வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.

காவேரி மிரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கிரைம் பத்திரிகை நடிகை பிரியங்கா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.

Posted in Aalapuzha, Actresses, Allegation, Ameer, Anil Menon, Cauvery, Crime Magazine, Extortion, False News, Gossip, Kasi, Kaveri, Kerala Pictures, Kisu Kisu, Kodambakkam, Kollywood, Malayala Cinema, Malayalam, Mollywood, Nandha, Police, Priyanka, Punnagai Poove, Rumor, Samuthiram, Sex Story, Tamil Actress, Tamil Movies, Vambu, Violence | 3 Comments »

Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

மனைவியுடன் சமரச பேச்சுவார்த்தை: நடிகர் பிரசாந்த் பேட்டி

சென்னை, டிச.19-

பிரசாந்த்-கிரகலட்சுமி இடையே சமீபத்தில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று பிரசாந்த் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் கடந்த மாதம் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது பிரசாந்த்-கிரகலட்சுமி இருவரும் நேரில் ஆஜ ரானார்கள். அவர்களை நீதிபதி தனி அறையில் சந்தித்து விசாரித்தார்.

அவர்கள் இருவரின் பிரச் சினைகளை கேட்டு அறிந்தார். பிறகு பிரசாந்த்-கிரகலட்சுமி இரு வரையும் தனியாக சந்தித்து பேசுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து பிரசாந்தும் சிரகலட்சுமியும் சந்தித்துப் பேசினார்கள். பிரசாந்த் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஜனவரி 3ந் தேதி பதில் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பிரசாந்த் இன்று பகல் 12.10மணிக்கு குடும்பநல கோர்ட்டுக்கு வந்தார். அவரிடம் வக்கீல் ஆனந்தனும் வந்தார்.

கோர்ட்டில் உள்ள மனுத்தாக்கல் பிரிவுக்கு சென்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய தயாரானார். அப்போது செல்போனில் அவருக்கு ஒரு தகவல் வந்தது.

இதையடுத்து மனு தாக்கல் செய்யாமல் பிரசாந்த் வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது பிரசாந்த் கூறியதாவது:-மனைவியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தேன். அதற்காகத்தான் கோர்ட்டுக்கே வந்தேன்.

எனது குழந்தையை பார்க்க முடியவில்லை. ஒரு தந்தை என்ற முறையில் குழந்தையை பார்க்காமல் இருப்பது மன வருத்தம் அளிக்கிறது. பல தடவை முயன்றேன். ஆனால் அவர்கள் குழந்தையை காட்டவில்லை. எனவே தான் குழந்தையை பார்க்க அனுமதி கேட்டு இன்று மனு தாக்கல் செய்ய வந்தேன்.

திடீரென்று அவர்கள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக எனக்கு தகவல் வந்தது. நல்ல முடிவு வரட்டும் என்று நான் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று மாலை நாங்கள் சந்திக்கிறோம். அதன்பிறகு என்ன தகவல் என்பதை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு நடிகர் பிரசாந்த் கூறினார்.

நடிகர் பிரசாந்த் மனைவி கிரகலட்சுமிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி இருந்தார். அதற்கு பதில் அளிக்க கிரகலட்சுமி தரப்பில் அவகாசம் கேட்கப் பட்டது. ஜனவரி 3-ந்தேதி வரை நீதிபதி அவகாசம் அளித்தார். பிரசாந்த் குற்றச் சாட்டுக்கு கிரகலட்சுமி அளிக்கும் பதில் 3-ந்தேதி தெரியும்.

அதற்கு முன்பு பிரசாந்த் வழக்கு பற்றி பத்திரிகைளுக்கு கருத்து சொன்னால் கோர்ட்டு அவமதிப்பாகி விடும் என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தான் கிரகலட்சுமி அமைதியாக இருக்கிறார். 3-ந்தேதி தனது தரப்பு விளக் கத்தை கோர்ட்டில் வெளி யிடுகிறார்.

கிரக லெட்சுமியும் வந்தார்: நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் ஆஜர்

சென்னை, பிப். 12-

நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலெட்சுமி பிரச வத்துக்காக பெற்றோர் வீட் டுக்கு சென்றார். குழந்தை பிறந்த பிறகு பிரசாந்த் பார்க்க செல்லவில்லை. கிரகலெட்சுமியும் கணவர் பிரசாந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. கோர்ட்டு அனு மதியுடன் பிரசாந்த் குழந் தையை பார்த்தார்.

கோர்ட்டில் மனு

அதன் பிறகு சென்னை முதலாவது குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரசாந்த் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரிந்து இருக் கும் தனது மனைவி கிரக லெட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். தாம்பத்திய உரிமையை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இருவரிடமும் நீதிபதி தனித் தனியாக விசாரணை நடத் தினார். அவர்களை சேர்ந்து வாழும்படி அறிவுரை வழங்கி னார். இந்த நிலையில் கடந்த தைப் பொங்கல் தினத்துக்குள் கண வருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கிரகலெட்சுமி மனு தாக்கல் செய்து இருந் தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் அவர் தன்னை கணவருடன் சேர்த்து வைக் கும்படி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந் தது.

ஆஜர்

கிரகலெட்சுமி கோர்ட்டில் ஆஜர் ஆனார். பிரசாந்த் வர வில்லை. அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், பிரசாந்த் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், சிறிது நேரம் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தேவதாஸ் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்துக்கு தள்ளி வைத் தார்.

நடிகர் பிரசாந்த் படப் பிடிப்பை ரத்து செய்து விட்டு கோர்ட்டுக்கு வந்தார். நீதிபதியின் அறையில் இரு வரும் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் நீதிபதி தேவதாஸ் விசாரணை நடத்தினார்.

Posted in Counseling, Court, Divorce, Gossip, Grahalakshmi, Interview, Issues, Kisukisu, Marriage, Personal Life, Prashanth, Problems, Tamil, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Vambu | 11 Comments »

Sandhana Kadathal – Vettaiyadu Vilaiyadu – AR Murugadoss

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

கொதிப்பு!

“வேட்டையாடு விளையாடு’ படத்தில் அரவாணிகளை கேவலப்படுத்தியிருப்பதாக ஒட்டுமொத்த அரவாணி இனமே கொதித்து நிற்கிறது. மேலும், வழக்கறிஞர் வித்யா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். அரவாணியான இவர், இனி, அரவாணிகளை மீடியாவினர் கொச்சைப்படுத்துவதை தடை விதிக்க வேண்டும். அது மட்டுமின்றி, அரவாணிகளை இனி, “திருநங்கை‘ என்று அழைக்க வேண்டும்!’ என்றும் வாதாடி வருகிறார்.

* * *

விரிசல்!

தெலுங்கு ஸ்டாலினை முடித்து விட்டு இந்திக்கு செல்லவிருந்த ஏ.ஆர்.முருகதாஸை மடக்கி விட்டார் நடிகர் சூர்யா… “இன்னொரு “கஜினி’ கொடுப்போம். என்ன செலவானாலும் நானே ஏத்துக் கொள்கிறேன்…’ என்று தன் அடுத்த தயாரிப்பை தொடங்கி விட்டார். அது மட்டுமின்றி, தான் ஏற்கனவே நடிக்க ஒத்துக் கொண்டிருந்த, “சர்வம்‘ படத்தில் இருந்தும் விலகி விட்டார் சூர்யா. இதனால், திரைக்குப் பின்னால் டைரக்டர் விஷ்ணுவர்தனுக்கும், சூர்யாவுக்குமிடையே விரிசல் விழுந்துள்ளது.

— சினிமா பொன்னையா.

* * *

வெளிச்சத்துக்கு வரும் வீரப்பன் உண்மைகள்!

“சந்தன கடத்தல்’ வீரப்பன் கதையை படமாக்கியுள்ளார் “சயனைடு’ பட இயக்குனர் ரமேஷ். ஏற்கனவே, வீரப்பனின் கதையை பல டைரக்டர்கள். கிண்டி, கிளறி விட்டதால், வேர் போன்று இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல மர்ம முடிச்சுகளை இவர் அவிழ்க்கப் போகிறார். அதன் பொருட்டு தற்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் உதவியை நாடியிருக்கிறார் ரமேஷ்.

Posted in AR Murugadas, AR Murugadoss, Arvaani, Gossip, Gowtham, Kamal, Lawsuit, Muthulakshmi, News Bits, Rumor, Sandhana Kadathal, Sarvam, Surya, Tamil Cinema, Tamil Movie, Thirunangai, Vambu, Veerappan, Vettaiyaadu Vilaiyaadu, Vettaiyadu Vilaiyadu, Vidya, Vishnuvardhan | 1 Comment »