Manipuri Language Banned by Naga Students
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2006
மணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை
இம்பால், செப். 10: மணிப்பூர் மாநிலத்தில் நாகா பிரிவினர் வாழும் 4 மலைப்பகுதி மாவட்டங்களில் மணிப்புரி மொழியைப் பயன்படுத்த நாகா மாணவர் அமைப்பு தடை விதித்துள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழியை திணிப்பதை சகித்துக் கொண்டிருக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், மணிப்புரி பாடல்கள், திரைப்படங்களுக்கும் வரும் 17-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறுகையில், “நாகா பிரிவினர் மீது மணிப்புரி மொழி திணிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
பின்னூட்டமொன்றை இடுக