Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 12th, 2006

Avoid Suicidal Tendency – SNEHA

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

வேண்டாம் விபரீதம்

மனித வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் இயற்கையானவை. அதற்கு இடைப்பட்ட காலத்தில் மனிதனின் இயக்கத்தால்தான் இந்த மனித குலம் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம் என்றாலும்கூட, மனிதனே தனது இறப்பை முடிவு செய்து கொள்வதை இச்சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. சமூகத்தில் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாக, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிக்கும் போக்கு சட்ட விரோதம் என்றபோதிலும், இலை மறைவு காய் மறைவாக அது நடந்து வருகிறது.

அதேபோல் முதுமையினாலும் விபத்துகளினாலும் ஏற்படும் இறப்புகள் அளிக்கும் துயரத்தைவிட, மனித வாழ்க்கையைத் தாங்களே முடித்துக் கொள்வது என்பது மிகவும் துயரம் அளிக்கக் கூடியது. தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலங்களில் அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. மகாராஷ்டிரம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் சாகுபடி பொய்த்துப் போய், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகள் நமது மனசாட்சியை உலுக்குவதாக உள்ளன. விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்தி, அவர்களைக் கடன் தொல்லைகளிலிருந்து மீட்பதன் மூலம்தான் விவசாயிகளைத் தற்கொலை முயற்சிகளிலிருந்து தடுக்க முடியும்.

திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி, சில டாக்டர்கள் கூட தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுக்கிறார்கள். எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ போன்ற தேர்வுகள் மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையாகத் திகழ்கின்றன. இத்தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களில் சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கோழை மனம் கொண்ட சில மாணவர்கள் விபரீத முடிவை எடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகிறார்கள். பொதுவாக, குடும்பப் பிரச்சினைகள், தேர்வுத் தோல்விகள், கடுமையான கடன் தொல்லை போன்றவை தற்கொலைக்குக் காரணங்களாக அமைகின்றன.

நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தையும் தாண்டும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

சென்னை நகரில் 2004-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1196. இந்த எண்ணிக்கை 2005-ல் 2275 ஆக உயர்ந்துள்ளது என்று “சிநேகா‘ என்ற தற்கொலைத் தடுப்பு அமைப்பு தரும் தகவல் கவலை அளிக்கும் விஷயமாகும். பொதுவாக தற்கொலை முயற்சிக்கு அதிகச் சாத்தியங்கள் கொண்ட இளம் வயதினருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உளவியல் ஆலோசனை அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்த வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பயிற்சி முகாம்களை, சில ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட அமைப்பு நடத்தி வருகிறது. இதுபோன்ற முயற்சிகளைப் பரவலாக்க வேண்டியது அவசியம். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசு அமைப்புகள் தீவிரப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், மனஉளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவை எடுப்பவர்களைச் சாவின் விளிம்பிலிருந்து மீட்க முடியும்.

Posted in Dinamani, Editorial, Harihara Murthy, Ills, Prevention, SH Murthy, SNEHA, Society, Statistics, Suicide, Tamil | Leave a Comment »

Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு

சென்னை, செப். 13: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “தசாவதாரம்’ படம் எடுப்பதை தடை செய்யக் கோரி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் லத்திகா சரணிடம், உதவி இயக்குநர் செந்தில்குமார் கொடுத்துள்ள புகார் விவரம்:

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் “தனுஷ்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அச்சமயத்தில் படம் திடீரென கைவிடப்பட்டது. அப்போது, 10 முக்கிய கதாபாத்திரம் கொண்ட ஒரு கதை எழுதினார். இந்தக் கதையில் நடிக்க நடிகர் கமல் தான் சரியானவர் என்று நினைத்து அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த முரளி, கதையை வாங்கிப் படித்துவிட்டு, அதன் பிரதியை வாங்கி வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஒரு நாள் முரளி போனில் செந்தில்குமாரை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். இதற்கிடையில், செந்தில்குமாரை உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.

ஆகஸ்ட் 18-ம் தேதி, “தசாவதாரம்’ படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதுதொடர்பாக முரளியிடம் விளக்கம் கேட்டுள்ளார் செந்தில்குமார். அப்போது உன்னிடம் யார் போனில் பேசியது? என்று கூறிய முரளி, இனிமேல் அலுவலகத்துக்கு வரக்கூடாது என்று கூறினாராம்.

எனவே, இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை “தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

Posted in Adapt, Assistant Director, Asst. Director, Cheat, Cinema, Dasavatharam, Dhasaavatharam, Kamal, Kamalhassan, Kollywood, Murali, Rajkamal Films, Senthilkumar, Tamil, Tamil Movies, Thasavatharam | 2 Comments »

When will the Complete works of EVR Periyar reach the Print?

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

பெரியார் பேச்சும் எழுத்தும் யார் உடைமை?

எம். பாண்டியராஜன்

திருச்சி, செப். 13: அறிஞர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள் என இதுவரை 37 பேருடைய நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது தமிழக அரசு -இன்னமும் மீதியிருக்கிறது, பெரியார் ஈ.வே.ரா. நூல்கள்!

திராவிட -பகுத்தறிவு இயக்கங்களின் ஊற்றுக்கண்ணான பெரியாரை முழுவதுமாகப் படிக்க நல்ல நூல் தொகுதி எதுவும் இல்லை, வே. ஆனைமுத்துவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சிந்தனையாளர் கழகம் வெளியிட்ட “பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள்‘ தவிர.

இந்தத் தொகுப்பும்கூட “ஏறத்தாழ முழுவதுமாக’த் தொகுக்கப்பட்டது என்றே குறிப்பிடப்படுகிறது.

1970-களின் தொடக்கத்தில் மூன்று தொகுதிகளாக சுமார் 2,200-க்கும் கூடுதலான பக்கங்களில் வெளிவந்த இந்தத் தொகுப்பின் பிரதிகள் இப்போது அபூர்வமாகச் சில பெரியார் பற்றாளர்களிடம் மட்டுமே இருக்கின்றன.

1924 தொடக்கம் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சில் வரத் தொடங்கிவிட்டன.

  • நவசக்தி,
  • ரிவோல்ட்,
  • புரட்சி,
  • பகுத்தறிவு,
  • குடி அரசு,
  • விடுதலை,
  • திராவிடன்,
  • ஜஸ்டிஸ், இவையன்றிப் பிற்காலத்தில்
  • உண்மை,
  • மாடர்ன் ரேஷனலிஸ்ட்,
  • சண்டமாருதம்,
  • புதுவை முரசு,
  • நகரதூதன்,
  • திராவிட நாடு,
  • தனி அரசு,
  • பொன்னி உள்பட பலவற்றிலும் பெரியாருடைய பேச்சும் எழுத்தும் வெளியாகியுள்ளன.

பெரியாரின் பேச்சுகள், எழுத்துகள் மற்றும் அவருடைய கருத்துகளையொட்டி ஏராளமான சிறு நூல்கள் -அவர் இருந்தபோதும் பிறகும் இப்போதும், 80 ஆண்டுகளாக -வெளிவருகின்றன.

நூல்களாக வெளிவந்தவை மட்டுமின்றி, இன்னமும் நூல் வடிவம் பெற வேண்டிய, தொகுக்கப்பட வேண்டிய அவருடைய பேச்சும் எழுத்தும் எவ்வளவோ?

ஆனால், பெரியாரை முறையாகவும் முழுவதுமாகவும் வாசிக்க? கற்க? ஒருபோதும் இவை போதுமானதல்ல.

இன்றைக்குப் புரட்சிகரமானதாகக் கருதப்படும் கருத்துகளெல்லாம், 1920, 30-களிலேயே பேசப்பட்டிருக்கின்றன என்பதை இன்றைய “தகவல்- தொழில்நுட்ப கால’ இளைஞனும் யுவதியும் அறியவந்தால் மட்டுமே அவற்றின் வீச்சு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்படும்.

மத்திய அரசின் முன்முயற்சியில் மகாத்மா காந்தியின் நூல்கள், ஆங்கிலத்தில் 100 தொகுதிகளாகக் குறைந்த விலையில் வெளிவந்திருக்கின்றன. குறுந்தகட்டிலும்கூடக் கிடைக்கிறது.

மகாராஷ்டிர அரசின் முயற்சியில் அம்பேத்கரின் உரைகள், விவாதங்கள், கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் 18 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவற்றைப் பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து, இந்திய அரசின் செய்தி -ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது- அரசு உதவியுடன், மலிவு விலையில்.

தமிழில் இதுவரை 34 தொகுதிகள் வெளிவந்துவிட்டன. இன்னும் 4 தொகுதிகள் வரவுள்ளன. அரசு உதவியுடன், மலிவு விலையில்.

ஆனால், பகுத்தறிவைப் பரப்பி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்வையே கழித்த பெரியாரின் எழுத்தும் பேச்சும்?

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு மாநிலத்தையே ஆண்டு கொண்டிருக்கின்றன அவர் பெயர் சொல்லும் இயக்கங்கள். மத்திய அரசிலும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.

இருப்பவற்றில் சிந்தனையாளர் கழகத்தின் தொகுப்பு குறிப்பிடத் தக்கது. இது முழுவதுமாகப் படிக்கப்பட்டு, படித்துக் காட்டப்பட்டு, பெரியாரின் ஒப்புதல் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெரியாரைப் பரப்பும் திசை வழியில், இன்று உலகெங்கும் பல்கிப் பரவியுள்ள தமிழர்களிடம் கொண்டுசேர்ப்பதில் முதல்கட்டமாக, இந்தத் தொகுதியை உரிய முறையில் நாட்டுடைமையாக்கி, தமிழக அரசே பதிப்பித்து, மலிவுப் பதிப்பாக, மக்கள் பதிப்பாக வெளியிடலாம்.

அடுத்தது, பெரியாரின் எழுத்துகளும் கடிதங்களும் பேச்சுகளும் உரையாடல்களும் விவாதங்களும் காலவரிசைப்படி தொகுக்கப்பட வேண்டும்; தொடர்ந்து பதிப்பிக்கப்பட வேண்டும். அடுத்து இந்திய மொழிகளிலெல்லாம் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் -மகாத்மா காந்தியைப் போல, அம்பேத்கரைப் போல.

இதற்காகத் தமிழக அரசு எத்தனை கோடிகளை ஒதுக்கினாலும் தகும்.

ஐந்தாம் முறையாகத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்தபோது முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டார் -“பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கொள்கை வழியிலே வந்த நாம், அண்ணா வழியில் வந்த நாம் தமிழகத்திலே பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப வேண்டிய அவசியம் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்காக ஒரு தனித்துறையே அமைக்க வேண்டும் என்று சிவபுண்ணியம் கேட்டுக் கொண்டார்… … ஏற்கெனவே, 2000-ல் உருவாக்கப்பட்டிருந்த “சமூக சீர்திருத்தத் துறை‘ மீண்டும் புதுப்பிக்கப்படும்.”

இந்தத் துறையின் கீழ், அறிஞர்கள் குழுவை அமைத்து, கால இலக்கையும் நிர்ணயித்து, இந்தப் பெரும் பணியை முதல்வர் கருணாநிதி தொடக்கி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெரியார் பற்றாளர்கள்.

Posted in Books, EV Ramasamy, EVR Periyaar, Media, Nationalization, Paper, Periyar, Print, Publish, Rationalism, Tamil, Ve Anaimuthu, Works | Leave a Comment »

Mumbai Bomb Blasts – Timeline : Chronology

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

விசாரணை } கடந்துவந்த பாதை

மும்பையில் 1993 மார்ச் 12-ம் தேதி 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 257 பேர் இறந்தனர். 713 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான விசாரணை தடா கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரையான விவரம் வருமாறு:

நவ. 4, 1993: நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 189 எதிரிகளுக்கு எதிராக 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.

நவ. 19. 1993: சிபிஐ-க்கு வழக்கு மாற்றம்.

ஏப். 1, 1994: ஆர்த்தர் சாலையில் இருக்கும் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தனி கட்டடத்துக்கு தடா கோர்ட் மாற்றம்

ஏப். 10, 1995: இருபத்தாறு எதிரிகளை விடுவித்தது தடா நீதிமன்றம். மற்ற எதிரிகள் மீது புகார் சாட்டல். இதே வேளையில், டிராவல் ஏஜென்ட் அபு அசிம் ஆஸ்மி (தற்போது சமாஜவாதி கட்சி எம்பி), மற்றும் அம்ஜத் மேஹர் போக்ஸ் ஆகிய இருவரை இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவிப்பு.

ஏப். 19, 1995: தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடக்கம்

ஏப்ரல்-ஜூன் 1995: எதிரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு

ஜூன் 30, 1995: முகம்மது ஜமீல், உஸ்மான் ஜன்கானன் ஆகிய இருவர் வழக்கில் அப்ரூவராகின்றனர்.

அக். 14, 1995: ஏப்ரல் 19, 1993-ல் கைதான நடிகர் சஞ்சய் தத் (117வது எதிரி), உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிப்பு

மார்ச், 23, 1996: தடா நீதிபதி ஜே.என்.பட்டேல், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு

மார்ச் 29, 1995: சிறப்பு தடா நீதபதியாக பி.டி.கோடே நியமனம்.

அக்டோபர் 2000: 684 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிவு.

மார்ச் 9-ஜூலை 18, 2001: எதிரிகள் தரப்பு வாக்குமூலம் பதிவு

ஆகஸ்ட் 9, 2001: அரசுத் தரப்பில் குறுக்கு விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 18, 2001: அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை முடிவு

நவம்பர் 9, 2001: எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை ஆரம்பம்.

ஆகஸ்ட் 22, 2002: எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நிறைவு

பிப். 20, 2003: ரவுடி கும்பல் தலைவன் தாவூதின் கும்பலைச் சேர்ந்த எஜாஸ் பதான் நீதிமன்றத்தில் ஆஜர்.

மார்ச் 20, 2003: முஸ்தபா தோஸô என்பவரை காவலில் வைப்பதற்கான நடவடிக்கை, மற்றும் அந்த வழக்கு தனியாக பிரிப்பு

செப்டம்பர் 2003: வழக்கு விசாரணை முடிவு

ஜூன் 13, 2006: அபு சலீமின் விசாரணை தனியாக பிரிப்பு

ஆகஸ்ட் 10, 2006: தீர்ப்பை எழுதும் பணி தொடக்கம், செப்டம்பர் 12ல் தீர்ப்பு என நீதிபதி பி.டி.கோடே அறிவிப்பு.

Posted in 1993, Abu Salem, Bomb Blasts, Bombay, CBI, Dawood Ibrahim, Mumbai, Pakistan, Sanjay Dutt, TADA, Tamil, Tiger Memon, Timeline | Leave a Comment »

LTTE cannot Guarantee Safe Passage of International Aid Vehicles

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

செஞ்சிலுவை குழுவினரின் வழித்துணையுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க முடியாது – விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன்
இத்தகவல் செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் தெரிவிப்பு

இலங்கையில் யாழ்குடா நாட்டுக்கு, கடல்வழியாக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் வழித்துணையுடனான கப்பல்களுக்குத் தம்மால் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியாது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் இலங்கைக்கான தலைமை அதிகாரி டூன் வென்டன்ஹொவே அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள கடிதம் ஒன்றில் யாழ் குடாநாட்டிற்கான மனிதாபிமான உதவிகள் அடங்கிய வாகனத் தொடரணி, அம்புலன்ஸ் வண்டிகள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் பயணம் செய்யும் வாகனங்கள் என்பன தமது பிரதேசத்திற்குட்பட்ட ஏ9 வீதி ஊடாகச் செல்லும் பொழுது எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை வெளியிட்டுள்ளார்.

ஆனால், யாழ் குடாநாட்டு மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை கடல்வழியாகக் கொண்டு செல்வதற்கான அதிகாரத்தைக் கோரியுள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் கடிதம் தொடர்பில் தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை என்றும் விடுதலைப் புலிகள் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Posted in Aid, Attacks, Conflicts, Counter-attacks, Insurgency, International, LTTE, Red Cross, Sri lanka, Tamil, Yaazhppanam, Yazh | Leave a Comment »

Rajini & PMK’s Interests in Kelambakkam – Dropping of Satellite City

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

சேர்த்து வைத்த துணைநகரம்  :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! 

– எஸ்.சரவணகுமார்    
பத்து நாட்களாகப் பரபரப்பைக் கிளப்பிய ‘துணைநகர’த் திட்டம் எதிர்பாராத வகையில் வாபஸ் ஆகிவிட்டது. அதுபோலவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த இரண்டு பெரும் சக்திகளையும் இந்தப் பிரச்னை எதிர்பாராத வகையில் நேசப் பார்வை பார்க்க வைத்திருக்கிறது.

அந்த இரு சக்திகளில் ஒன்று பா.ம.க., மற்றொன்று ரஜினி!

‘பாபா’ படம் ரிலீஸ் ஆனபோது சூப்பர் ஸ்டாருக்கும், பா.ம.க&வுக்கும் முதன்முதலாக முட்டல்மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இரு தரப்பினருமே நேரடியாகவே மோதிக் கொண்டார்கள். இப்படி கீரியும் பாம்பும் போல இவர்களுக்குள் இருந்த பகை, இப்போது கேளம்பாக்கம் துணைநகர விவகாரத்தால் இளகத் தொடங்கிவிட்டதாக, ரஜினிக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினிக்கும், பா.ம.க&வுக்கும் பாலமாக செயல்பட நினைத்துத் தோற்றுப்போன சில சினிமா வி.ஐ.பி&க்கள் இதுபற்றி நம்மிடம் பேசியபோது,

‘‘வண்டலூர், கேளம்பாக்கம் சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள நிலங்களைத் துணைநகரம் அமைக்க அரசு தேர்வு செய்தது. இதில் ரஜினிக்குச் சொந்தமாக இருக்கும் கேளம்பாக்கம் பண்ணையும் ஆபத்துக்குள்ளானது. இந்தப் பண்ணையின் மொத்த பரப்பளவு, சுமார் நாற்பது ஏக்கர். சென்னையில் கட்டிய வீட்டுக்குப் பிறகு அவர் வாங்கிய முதல் சொத்து இந்தப் பண்ணைதான். ஆன்மிக மையம் ஒன்றை நிறுவத்தான் இந்தத் தோட்டத்தை வாங்கிப்போட்டார். அதற்குப் பிறகு விவசாயத்தில் நாட்டம் பிறக்க, தென்னந்தோப்பு அமைத்தார். பிறகு சிறிய வீடொன்றைக் கட்டியதுடன் அந்தத் தோப்பின் ஓர் ஓரத்தில் அழகான தியான மண்டபத்தைக் கட்டினார். ஓர் உடற்பயிற்சிக் கூடத்தையும் அமைத்தார்.

1996&ம் ஆண்டு அந்த நிலத்தில் ஒரு ஏக்கரை தலா ஒரு கிரவுண்ட் வீதம் பிரித்துத் தன்னிடம் பலகாலமாக வேலைபார்த்து வரும் சுமார் முப்பது பேருக்கு எழுதிக் கொடுத்தார் ரஜினி. துணைநகரத் திட்டம் அறிவிக்கப்பட்டதும், தான் பண்ணையாட்களுக்குக் கொடுத்த நிலங்களுக்கு ஆபத்து வருமே என அவர் கவலைப்பட்டார்.

இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்போரூர் கோயில் முன்பும், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்கு அருகிலும் நடந்தது. இந்த சமயத்தில் தனது பண்ணை ஊழியர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது அவரிடம், ‘நிலத்தை அரசு எடுக்கக் கூடாதுன்னு பா.ம.க. போராடிக்கிட்டிருக்கு. அநேகமா அவங்க துணைநகரத்தை வர விடமாட்டாங்க போலிருக்கு. அதுவே எங்களுக்கு ஆறுதலா இருக்கு சார்’ என்று சொன்ன ஊழியர்கள் தொடர்ந்து, ‘ஊரப்பாக்கத்துல ஒரு கல்யாண மண்ட பத்துல டாக்டர் ராமதாஸ் இந்தப்பகுதி மக்களைசந்திச்சு துணை நகரம் அமைப் பதில் என்னவெல்லாம் சிக்கல் இருக்குன்னும், விவசாயம் எப்படியெல்லாம் பாதிக்கும்னும் கேட்டுத் தெரிஞ்சுக்கப் போறாராம். அந்தக் கூட்டத்துக்குப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘தாராளமா கலந்துக்கங்க. இந்தத் தடவை அவங்க நல்ல விஷயத்துக்காகப் போராடறாங்க. நீங்க கண்டிப்பா அந்தக் கூட்டத்துக்குப் போங்க’ என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் ரஜினி. இதனையடுத்து அந்த ஊழியர்கள், பா.ம.க. ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். ஆனால், ரஜினி தங்கள் போராட்டத்துக்குத் துணையாக இருக்கப்போகிறார் என்ற விவரம் எதுவும் பா.ம.க&வுக்குத் தெரியாது. ஒருசிலர் செங்கல்பட்டு எம்.பி&யான மூர்த்தியிடம் ‘நாம் போராடறதுல ரஜினியோட நிலமும் சேர்ந்திருக்கு. நம்மால அவரு நிலம் தப்பிச்சிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘நல்ல விஷயத்துக்காகப் போராடறோம். இதுல எல்லோரும் பலனடைஞ்சா நல்லதுதானே’ என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

அந்தக் கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதையும், துணைநகரம் விஷயத்தில் பொதுமக்கள் பா.ம.க. மீது கொண் டிருக்கும் நம்பிக்கை யையும், ரஜினியின் ஊழியர்கள் அப்படியே ரஜினியிடம் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு ரஜினிக்குப் பா.ம.க. மீது இன்னும் கூடுதலான மரியாதை ஏற்பட்டு விட்டது’’ என விஷயத்தை முடித்தார்கள், அந்த வி.ஐ.பி&க்கள்.

பா.ம.க. மீதான ரஜினி யின் இந்தக் கனிவு பற்றி அக்கட்சியின் செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.மூர்த்தியிடம் பேசினோம். ‘‘நீங்க சொல்றது எனக்குப் புதுசா இருக்கு. துணைநகரம் அமைக்க ரகசியமான சில திட்டங்களை அரசாங்கம் தீட்டுதுனு முதல்ல எனக்குச் சொன்னது, அந்தப் பகுதி பொதுமக்கள்தான். ஒருநாள் ராத்திரி ஒரு மணியிருக்கும்… என் செல்போன் அடிச்சுது. எடுத்துப் பேசினேன். ‘என்னண்ணே, தூங்கறீங்களா?’னு தொகுதிவாசி ஒருத்தர் கேட்டார். ‘ஆமாம்பா, இந்த நேரத்துல எல்லோருமே தூங்கு வாங்க’னு நானும் சாதாரணமா சிரிச்சேன். அதுக்கு, ‘சரிண்ணே, உங்களுக்கு ஓட்டுப் போட்டோம். நீங்களும் ஜெயிச்சீங்க. நீங்க தூங்கலாம். ஆனா, நாங்க தூங்க முடியாதுண்ணே. ஒரேயடியா இப்போ குடும்பத்தோட தூங்கிடப் போறோம். காலையில நீங்க வந்து மாலை போட்டுட்டுப் போயிடுங்கண்ணே’னு மறுமுனையில் பதில் வந்ததும் ஒன்றும் புரியாமல், ‘என்ன விஷயம்!’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர், அரசு துணைநகரம் அமைக்கப்போகும் விஷயத்தையும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்பையும் சொல்லிவிட்டு போனை வெச்சுட்டார். அப்புறம்தான் பதறிப்போய் நானும், எங்க ஐயாவும் இந்த விஷயத்துல தீவிரம் காட்டுனோம். எங்க போராட்டத்துல ரஜினியோட ஆளுங்களும் பயன்பெற்றிருந்தா சந்தோஷம்தான். நாங்க யாரையும் பிரிச்சுப் பார்க்கறது கிடையாது’’ என்றார். அஜீத் நிலமும் தப்பியது!

துணைநகரம் கைவிடப்பட்டதில் ரஜினியைப் போல நடிகர் அஜீத்குமாரும், நடிகர் விஜயகுமாரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ‘சிட்டிசன்’ படம் நடித்துக் கொண்டிருந்தபோது இந்த ஏரியாவுக்கு வந்த அஜீத்குமார், விவசாயம் செய்யும் திட்டத்துடன் சில ஏக்கர்களை இங்கே வாங்கிப் போட்டிருக்கிறார். அதேபோல் விஜயகுமாருக்கும் இங்கு நிலம் உள்ளதாம். இவர்கள் தவிர பரபரப்புப் பிரமுகரான சிவசங்கர்பாபா பல ஏக்கர் பரப்பளவில் பள்ளி, அநாத ஆஸ்ரமம், ஆன்மிக மையம், முதியோர் விடுதி என தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். ரஜினியின் பண்ணைக்கு அடுத்திருக்கும் சிவசங்கர் பாபாவின் ஆஸ்ரமத்துக்கு அவ்வப்போது ரஜினி போவாராம். ‘நீங்கள் நினைத்தால் முதல்வரிடம் பேசி ஒரு தீர்வை ஏற்படுத்தலாம்’ என்று பாபாவும் ரஜினியிடம் போனில் பேசியதாகச் சொல்கிறார்கள்.

& எஸ்.சரவணகுமார்   

Posted in Ajithkumar, Kelambakkam, PMK, Rajini, Rajniganth, Ramadoss, Satellite City, Sivaji the Boss, Superstar, Tamil, Tamil Nadu, Vandaloor, Vijaykumar | Leave a Comment »

Web2.0 World – R Venakadesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

முடிவில்லாத ஒரு ஆரம்பம்!

ஆர்.வெங்கடேஷ்

இன்றைக்கு சாதா சந்திப்பு, ஸ்பெஷல் சந்திப்பு அல்லது ஸ்பெஷல் மசாலா  சந்திப்பு என்று எந்த கூட்டம் நடந்தாலும், கழுத்தில் டை கட்டிய புண்ணியவான்கள் எல்லாம் ஒரே வார்த்தையைத்தான் உபயோகிக்கிறார்கள்: ‘வலை 2.0’ (கீமீதீ 2.0). தொழில்நுட்ப ரீதியாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றாலும் இந்த ‘வலை 2.0’ சார்ந்து இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார்கள்.

‘வலை 2.0’ இப்போது ‘பிசினஸ் 2.0’&வையும் கொண்டுவந்து விட்டது. இதெல்லாம் என்ன, ஒரே உட்டாலக்கடியாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

இதில் புதிர் ஒன்றுமில்லை. இணையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைத்தான் ‘வலை 2.0’ என்று சொல்கிறார்கள். அது உருவாக்கப் போகும் தொழில் மாற்றங்களையே ‘பிசினஸ் 2.0’ என்று சொல்கிறார்கள்.

அது என்ன ‘வலை 2.0?’

‘வலை 1.0’ என்பதைப் புரிந்துகொண்டால், ‘வலை 2.0’&வைப் புரிந்துகொள்வது சுலபம். இன்றைக்கு நாம் கணினியில பயன்படுத்தும் ஒவ்வொரு மென்பொருளும், ஒவ்வொரு சேவையும் ஒரு நிறுவனம் அல்லது பல நிறுவனங்கள் தயாரித்தவை. உதாரணமாக நீங்கள் எழுதப் பயன்படுத்தும் ‘வேர்டு’ அல்லது கணக்கிடப் பயன்படுத்தும் ‘எக்ஸெல்’ எல்லாம் ‘மைக்ரோசாஃட்’டின் தயாரிப்புகள். இவற்றை எல்லாம், நம்மைப் போன்ற பயனர்களின் தேவையைக் கண்டுபிடித்து, அதை ஒழுங்குபடுத்தி, வடிவம் கொடுத்து, ‘மைக்ரோசாஃப்ட்’ உருவாக்கியிருக்கிறது. இதைச் செய்ய என்று ஒரு மென்பொருளாளர் குழு உட்கார்ந்து, நிரல் எழுதி, டெஸ்ட் செய்து பார்த்து, பின்னரே மார்க்கெட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்.

மார்க்கெட்டுக்கு வரும்போது, அதன் தலை மேல் ஒரு விலை இருக்கிறது. ஒவ்வொரு கணினி வாங்கும்போதும், ஒவ்வொரு முறையும் இந்த ‘எம்.எஸ்.ஆபீஸ்’ மென்பொருளுக்குப் பணம் கட்ட வேண்டும். இதெல்லாம் முற்றிலும் இணையத்துக்கு வெளியே நடக்கிறது.

இன்றைக்கு இணையம் பெரிய அளவில் வளர்ந் திருக்கும்போது, எதற்கு இதெல்லாம் இணையத்துக்கு வெளியே இருக்க வேண்டும்? இணையத்துக் குள்ளேயே இதையெல்லாம் உருவாக்கலாம் அல்லவா? இணையத்தில், இது போன்ற மென்பொருள்கள், சேவைகளை உருவாக்குவதே ‘வலை 2.0.’

அடுத்து, முக்கியமானது நம் எல்லோருடைய அறிவும் ஒன்றிணைவது (சிஷீறீறீமீநீtவீஸ்மீ மிஸீtமீறீறீவீரீமீஸீநீமீ). அதாவது, ஒரே ஒரு குழு உட்கார்ந்துகொண்டு நிரல்கள் எழுதி, அதை ஆதியோடந்தம் டெஸ்ட் செய்து பார்த்து, இது சூப்பரான சாஃப்ட்வேர் என்று நம் பயன்பாட்டுக்குக் கொடுப்பது இன்று இருக்கும் முறை. இது ஒரு குழுவின்திறமை, மூளை ஆகியவற்றின் வெளிப்பாடு மட்டுமே. ‘வலை 2.0’ மென்பொருள்கள் இப்படிச் செய்யப்படுவதில்லை. அது கூட்டு உழைப் பினால், அவர்களது பங்களிப்பினால் உருவா வது. அதனால், அந்த மென்பொருளில் தொடர்ந்த முன்னேற்றம் இருக்கும். தொடர்ந்த மாற்றங்கள் இருந்துகொண்டே இருக்கும். இங்கே ஒவ்வொரு சக பயன்பாட்டாளரும் ஒரு சக மென்பொருளாளர் ஆகிவிடுவார். மேலும் இப்படி தொடர்ந்த முன்னேற்றம் இருப்பதால், இறுதி வடிவம் என்று கிடையவே கிடையாது. எல்லாமே ‘பீட்டா’ எனப்படும் வளர்ச்சி மற்றும் டெஸ்ட்டிங் ஸ்டேஜ்தான்.

அடுத்தது, பயன்படுத்துபவரின் ஈடுபாடும் பங்களிப்பும் முக்கியம். நீங்கள் ஒரு சாஃப்ட்வேரைப் பயன்படுத்துவது உங்கள் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் மற்றொரு நபர் பயன்படுத்துவதுபோல் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒரு குணம், ஒரு முறை இருக்கும். அவர் தனது முறையில் பயன்படுத்தும்போது, அவர் அந்த குறிப்பிட்ட மென்பொருளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பங்களிப்புச் செய்கிறார். இதுபோன்ற பங்களிப்பு என்பது ‘வலை 1.0’ இருந்ததில்லை. அங்கே எல்லாம் ஒன்வே டிராஃபிக் மாதிரிதான். ‘வலை 2.0’ என்பது மல்டிலேயர் டிராஃபிக்.

இப்படி பலரது பங்களிப்பால் ஒரு சேவை அல்லது மென்பொருள் தயாரிக்கப்படும்போது, அங்கே எல்லாரும் சமம். மேலாளன், தொழிலாளி என்ற பாகுபாடு கிடையாது. எல்லாரும் சக பயணிகள். அங்கே எல்லாரையும் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, கட்டுப் படுத்தக் கூடாது.

இனிமேல் யாரும், ‘நான் ஒரு பெரிய வலைதளத்தை உருவாக்கப் போகிறேன், எல்லா சேவைகளையும் நானே தரப் போகிறேன்’ என்ற பஜனையெல்லாம் செய்ய முடியாது. எப்படி சிறுசிறு நதிகள் ஓடிவந்து கலந்து மிகப் பெரிய சமுத்திரம் உருவாகிறதோ, அதுபோல் சிறுசிறு வலைதளங்கள் ஒன்றிணைந்து மிகப் பெரிய வலைப்பின்னலை உருவாக்கப் போகின்றன. இந்த வலைப்பின்னல் அவ்வளவு நெருக்கமாக, ஒன்றைச் சார்ந்து அடுத்தொன்று இருக்கும். அதன்மூலம் உருவாகும் இணையம் என்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

‘வலை 2.0’ என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் நன்கு அறிந்த தேடுபொறி ஒன்று உண்டென்றால், அது ‘கூகுள்’. என்ன விஷயத்தை இணையத்தில் தேட வேண்டுமென்றாலும் நாம் எல்லாரும் கூகுளில்தான் குதிக்கிறோம். அந்த அளவுக்கு நமது நம்பிக்கையை கூகுள் பெறக் காரணம் என்ன தெரியுமோ? அது நீங்களும் நானும் யோசிப்பது போன்று இயல்பாக யோசிப்பதனால்தான்.

அது என்ன இயல்பான யோசனை? நீங்கள் ரஜினிகாந்த் ரசிகர் என்று வைத்துக் கொள்வோம். கூகுளில் போய் ‘ரஜினிகாந்த்’ என்று தட்டச்சு செய்து தேடினால், என்ன ரிசல்ட்கள் வருகின் றன என்று பாருங்கள். ரஜினிகாந்த்தின் இணைய விசிறிகள் அசோசியேஷன், அவரது வரலாற்றைத் தரும் விக்கிபீடியா லிங்க் என்று நீங்கள் என்ன தேடப் போனீர்களோ அது உடனே கிடைக்கும். அதுவே ‘ரஜினி சிவாஜி’ என்று கொடுத்துப் பாருங்கள். ரஜினி நடிக்கும் ‘சிவாஜி’ படத்தைப் பற்றிய தகவல்களைக் கொட்டும். நீங்கள் விரும்பும் தகவலை எப்படி ஒரு தேடுபொறியால் தரமுடிகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறார்களா?

இப்படி ஒரு குறிப்பிட்ட சொல்லின் தேவை என்ன என்பதைத் தீர்மானிக்க, கூகுள் ஒரு ‘அல்காரிதம்’ உருவாக்கியிருக்கிறது. அந்த ‘அல்காரிதம்’ நாம் சிந்தனை செய்வதுபோலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், அதற்கு ‘வலைப் பக்கங்களை வரிசைப்படுத்துதல்’ (றிணீரீமீ ஸிணீஸீளீவீஸீரீ) என்று பெயர்.

பெருந்தலைவர் காமராஜரை நாம் ஏன் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று சொல்கிறோம்? அவர் அப்படி வாழ்ந்தது ஒரு பகுதி என்றால், அப்படி வாழ்ந்தார் என்று அவரோடு வாழ்ந்தவர்கள், அவரின்சகாக்கள், அவரது கட்சித் தொண்டர்கள் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லியும் எடுத்துக்காட்டி எழுதியும் வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட காமராஜர், அண்ணாதுரையை ஏதோ ஓரிடத்தில் நெஞ்சுருகப் பாராட்டியிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். அதைப் படிக்கும்போது, உங்களுக்கு அண்ணாதுரை மேல் அபரிமிதமான ஒரு மரியாதையும் அன்பும் கௌரவமும் பிறக்கும் இல்லையா? அப்படிப் பாராட்டப்பட்ட அண்ணா, கருணாநிதியை மனம்விரும்பி ஓரிடத்தில் வாழ்த்தி, அவர் பெருமையைப் போற்றிச் சொல்லியிருந்தால் இப்போது கருணாநிதி மேல் உங்களுக்கு எப்படிப்பட்ட அபிமானம் பிறக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதுதான் ‘டபுள் ஸ்ட்ராங்’ பாராட்டு என்பது.

இதுதான் கூகுள் அல்காரிதத்தின் அடிப்படை. எந்த ஒரு வலைப்பக்கத்தில் இதுபோன்று டபுள் ஸ்ட்ராங், டிரிபிள் ஸ்ட்ராங் பாராட்டும் மதிப்பும் இருக்கிறதோ, அது வரிசைப்படுத்துதலில் மேலே வரும். நமது சிந்தனையை அப்படியே கணினியும், இணையமும்அதன் சேவைகளும் பிரதிபலிக்க வைப்பதுதான் ‘வலை 2.0.’

மொத்தத்தில் ‘வலை 2.0’ என்பது மக்களால், மக்களுக் காக உருவாகிவரும் மாற்றங்கள். மக்கள் எண்ணங்களின் நேரடி பிரதிபலிப்பு.

வரும் இதழ்களில், ‘வலை 2.0’ சேவைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

Posted in JuVi, R Venakadesh, Tamil, Tech, Technology, Vikadan, Web2.0, Webdesign | Leave a Comment »

Flickr Photo Sharing – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

பேசும் புகைப்படங்கள்!

புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளவும், அதைப் பற்றிப் பேசவும் என்றே இணையத்தில் பல வலைதளங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, ‘ஃப்லிக்கர்’ (http://www.flickr.com/). இதன் புகழைப் பார்த்துவிட்டு, ‘யாஹ§’ நிறுவனம் இந்த ‘ஃப்லிக்க’ரை வாங்கிப் போட்டுவிட்டது.

‘ஃப்லிக்கரி’ல் என்ன செய்யலாம்? உங்களுக்கு யாஹ§ மின்னஞ்சல் முகவரி இருந்தாலே போதும். அந்த யூஸர் நேமையும் பாஸ்வேர்ட்டையும் வைத்துக்கொண்டே இங்கே நுழையலாம். பின்னர் உங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை அதில் வலையேற்றலாம். இதன்பின்னர்தான் ‘வலை 2.0’ வாசனையே தொடங்குகிறது.

உங்கள் படங்களை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். அவர்களை கமென்ட் எழுதச் சொல்லலாம். அதேபோல் நண்பர்களின் குழுவை உருவாக்கிக்கொண்டு, குழுவாக உரையாடலாம். உங்களுக்குப் பிடித்த படங்களை புக்மார்க் செய்துவைக்கலாம். அல்லது டேக் (tணீரீ) செய்து வைக்கலாம்.

மேலும் குறிப்பிட்ட புகைப்படம் என்ன மனநிலையில் எடுக்கப்பட்டது, என்ன ஆங்கிள் அல்லது லென்ஸ் கொண்டு எடுக்கப்பட்டது போன்ற விவரங்களையும் நேரடியாக வலைப்பதிவு செய்யலாம். இதை ‘போட்டோ பிளாகிங்’ என்றே அழைக்கிறார்கள். பொதுவாக ‘ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்கு நிகரானது’ என்பார்கள். இங்கே புகைப்படத்தோடு உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் உங்களுக்குப் பிடித்த நண்பர்களோடு பகிர்ந்துகொள்வது நடக்கிறது. அதன்மூலம் உங்கள் திறமை குன்றிலிட்ட விளக்காகப் பளிச்சிடுவதுடன், உங்களுக்கான பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

இதேபோல், புகைப்படங்களைக் கொண்டே உருவாகியுள்ள வலை சமூகங்கள் இவை:

1. சோடோ (http://zoto.com/)
2. கிளைட் (http://glidedigital.com)
3. ஷட்டர்புக் (http://shutterbook.com)

Posted in Blogs, Flickr, Images, Online, Photo Sharing, Pictures, R Venkatesh, Social Bookmarking, Tamil, Vikadan, Web, Web2.0 | Leave a Comment »

Literarature for the Web Generation – Hyper Stories

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இலக்கியத்தின் இன்னொரு அவதாரம்!   விஷ¨வல் கிராபிக்ஸ்!

ஆர்.வெங்கடேஷ்

எழுத்தாளர்கள் என்றாலே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு மற்றொரு கையில் பேனாவைப் பிடித்தபடி போஸ் கொடுப்பதைதான் தொடர்ந்து பார்த்து  வந்திருக்கிறோம். நோபல் பரிசை எப்படியும் தமிழுக்குத் தட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தாங்கொண்ணாத ஆர்வம் பலரின் கனவு விழிகளில் தென்படும். தாங்கள் ஏதோ பெரிதாக படைத்துவிட்ட திருப்தியில், எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்லிக்கொண்டு ‘கருத்து கந்தசாமி’களாகப் பலர் உலா வருவதையும் பார்த்திருக்கிறோம்.

அவர்கள் என்னதான் தலைகீழாக நின்று எழுதினாலும், அதைக் கறுப்பு வெள்ளையில்தான் வடிக்க வேண்டும். பேனாவால் பேப்பரில் எழுதி, அதைப் பத்திரிகை அல்லது புத்தகம் என்ற மற்றொரு பேப்பரில் அச்சடிக்க வேண்டும். கொஞ்சம் வண்ணம், கொஞ்சம் ஓவியங்கள் மட்டும் எக்ஸ்ட்ராவாக அவர்களின் படைப்புக்கு மெருகூட்டும், அவ்வளவுதான்.

பொதுவாக மரபான படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பதற்கு இடமில்லை. படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பது முழுவதும் எழுத்துக் குள்ளேயே அடங்கியிருப்பது. அதைத்தான் உத்தி, ஸ்டைல், அணி, நயம் என்று வேறுவேறு வார்த்தைகளில் சொல்கிறோம். ஒருவகையில் இது பெரிய தடை. படைப்பாளிகளின் கற்பனை என்பது முப்பரிமாண வடிவம் கொண்டது. ஆனால், ஒற்றைப் பரிமாணத்தில் அதை வடிக்கிறார்கள். எப்படி வர்ணித்தாலும் தேர்ந்த எழுத்தாளராலேயே ஒரு ரோஜாவின் மணத்தை எழுத்தில் கொண்டுவருவது கஷ்டம். பக்கம் பக்கமாக எழுதினாலும், ஒரு அறையை முழுமையாக கண்முன் கொண்டுவந்துவிட முடியுமா?

இதை உடைக்கப் பல எழுத்தாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். உதாரணமாக, சுஜாதா அவரது ஆரம்பகால கதைகளில்,

&&ற

&&&&&&ங்

&&&&&&&&&கி

&&&&&&&&&&&&னா

&&&&&&&&&&&&&&&&&&ன்

என்று எழுதுவார்.

Ôஆனந்த விகடன்Õ இதழில் வெளியான ‘மடிசார் மாமி’ தொடரில், ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தோடு, ஓவியம் இரண்டறக் கலந்திருக்கும். இதெல்லாம் ஒருவகையில் எழுத்தின் மெத்தனத்தை உடைக்கும் முயற்சிகள். ஆனால், பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய பின்தான்.

இன்று ‘டிஜிட்டல் இலக்கியம்’ (ஞிவீரீவீtணீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) என்று ஒரு தனிவகை எழுத்துப் பாணியே உருவாகியிருக்கிறது.

ஒருகாலத்தில் எழுத்தாளர்களுக்கு நல்ல கற்பனை வளமும் தேர்ந்த அனுபவமும் நல்ல நோக்கமும் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. கணினி வல்லுநர்கள் எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் டிஸைனர்கள், படைப்பாளிகள் ஆகியிருக்கிறார்கள். முழுநேரமும் மென்பொருள் எழுதுபவர்கள், பகுதி நேரமாகக் கதையும் எழுதுகிறார்கள். கூடுதல் திறமையும் நவீன தொழில்நுட்ப அறிவும், அவர்களின் எழுத்திலும் தெரியத்தானே வேண்டும். தொழில்நுட்ப சாத்தியங்களை எல்லாம் இவர்கள் கதை எழுதப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மிகவும் எளிய விஷயத்தில் இருந்து ஆரம்பிப்போம். இணையத்தில், ஒரு வலைப்பக்கத்தில் இருந்து இன்னொரு வலைப்பக்கத்துக்கு இணைப்பது என்பது, இருப்பதிலேயே மிகவும் எளிதான வேலை. இதற்கு ‘ஹைப்பர் லிங்க்’ என்று பெயர். ஒரு கதைக்குள்ளேயே ஓராயிரம் லிங்க்குகளை இதுபோல் இவர்களால் வழங்க முடியும். அந்த லிங்க் என்பது, மற்றொரு கிளைக் கதையாக வளரலாம். மற்றொரு புகைப்படமாக இருக்கலாம். அல்லது ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது வீடியோ காட்சியாக இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு பழைய ஆவணமாக இருக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் தென்திருப்பேரை ஸ்தலத்தைக் களமாக வைத்துக் கதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் வர்ணிக்க வேண்டாம். மகரநெடுங்குழைக்காதர், தாமிரவருணி, தெந்திரிப்பேரி கூட்டு என்று எல்லாவற்றையும் விஷ¨வலாகக் காட்டிவிடலாம். இனிமேல் ஒரு கதை என்பது எழுத்தில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கதை இன்னும் விரிவு பெற்றுக்கொண்டே போகலாம். அதேபோல், நீங்கள் ஒருவரே கதை எழுதவேண்டும் என்ற அவசியமும் இல்லை. மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் பற்றி நன்கு அறிந்த வல்லுநர் ஒருவர், அந்தச் சொல்லுக்கு ‘ஹைப்பர் லிங்க்’ செய்து தனக்குத் தெரிந்த சரித்திர, புராணத் தகவல்களையெல்லாம் எழுதலாம். ‘தெந்திரிப்பேரி கூட்டு’ செய்யத் தெரிந்த மாமியருவர், அதை ‘ஹைப்பர் லிங்க்’ செய்து சமையல் ரெசிபி வழங்கலாம். ஒரு கதைதான்… ஆனால், ஓராயிரம் பேரின் பங்களிப்போடு வளரும்!

Ôஹைப்பர்டெக்ஸ்ட் நாவல்Õ (பிஹ்ஜீமீக்ஷீtமீஜ்t ழிஷீஸ்மீறீ) என்றே இதற்குப் பெயர். ஒரே நாவலுக்குள் உள்ள பல்வேறு லிங்க்குகளை, வாசகனின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துப் படிப்பதின் மூலம், வாசகன் தனக்கான ஒரு கதையை உருவாக்கிக்கொள்கிறான். இந்த வரிசையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இந்த நாவலில் கிடையாது. வாசகனின் முழு சுதந்திரம்தான் முக்கியம். 1987&ல் இருந்தே இதுபோன்ற ‘ஹைப்பர் டெக்ஸ்ட் நாவல்Õ புழக்கத்தில் இருக்கிறது என்றாலும், இப்போது இதன் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அடுத்து, கிராபிக் டிஸைனர்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். இவர்கள், கவிதை மட்டும் எழுதுவதில்லை. கவிதைக்குப் பின்னே, பொருத்தமாக ஓவியங்களை வரைந்து, சேகரித்து, தொகுத்து, லைவ்வாக ஓடவிடுகிறார்கள். கவிதையின் மூடுக்கு ஏற்ப காட்சிகள், வண்ணங்கள், தோற்றங்கள். இதை மின்கவிதை, அதாவது இ&பொயட்ரி (ணி-றிஷீமீtக்ஷீஹ்) என்றே அழைக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச டிஜிட்டல் கவிதைத் திருவிழா நடத்துகிறார்கள்.

அதேபோல், இன்ட்ராக்டிவ் பொயட்ரி (மிஸீtமீக்ஷீணீநீtவீஸ்மீ றிஷீமீtக்ஷீஹ்). மிகவும் சுவாரஸ்யமான பகுதி இது. படிக்கும் வாசகன், வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அவனும் அந்தக் கவிதை அனுபவத்தில் பங்குபெற வேண்டும். ஈடுபட வேண்டும். வாசகனையும் உள்ளே இழுத்துக்கொண்டு முன்னேறும் கவிதை வகை இது. இதிலேயே இரண்டு வகை இருக்கிறது. ஒரே கவிதையைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டு, வாசகனின் வசதிக்கேற்ப அதை மாற்றிமாற்றி வாசித்துக்கொள்வது ஒன்று. இன்னொன்று, எண்ணற்ற சொற்களை வழங்கிவிட்டு, வாசகனையே, அச்சொற்களின் மூலம் கவிதை புனைய வைப்பது. இதில்லாமல் ‘விஷ¨வல் பொயட்ரி’ என்றொன்றும் இருக்கிறது. நம்ம ஊர் சித்திரக்கவி மாதிரியானது அது.

அடுத்தது, கிராபிக்ஸ் நாவல். பல நாவலாசிரியர்கள் இதுபோல், தங்கள் கதையை ஓவியங்களாக வரைந்து, நிறைய விஷ¨வல் எஃபெக்ட்களைச் சேர்த்து, தொடராகவே இணையத்தில் வெளியிடுகிறார்கள். உதாரணமாக, Ôஅவன் தெருவோரமாக நடந்துகொண்டிருந்தான், பின்னால் வந்த கார், சேற்றை வாரி இறைத்தது, அவன் உடையெல்லாம் நாசமானதுÕ என்று ஒரு கதையில் நீங்கள் எழுதுவீர்கள். கிராபிக்ஸ் நாவலில், அதைச் செய்தே காட்டிவிட முடியும். அதாவது, செயல்கள் அத்தனையையும் விஷ¨வல் ஆக்கிவிட முடியும். கதாபாத்திரத்தின் சிந்தனை மற்றும் பேச்சை மட்டும் நீங்கள் எழுத்தால் எழுதினால் போதும்.

க்ரைம், த்ரில்லர் நாவல்கள்தான் இதுபோன்ற கிராபிக்ஸ் நாவல்களில் எடுபடுகின்றன. சரி, குரல் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பமா? கவிதையானாலும் சரி, கதையானாலும் சரி… பொருத்தமான குரல்கள் பின்னணியில் மிகவும் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கதைகளை டவுன்லோடும் செய்து கொள்ளலாம். இணையத்தின் பெரிய புத்தகக் கடையான Ôஅமேசான்Õ, தன்னுடைய இணையப் பக்கத்தில் Ôஷார்ட்ஸ்Õ (ஷிலீஷீக்ஷீts) என்றொரு தனிப்பகுதியை இதற்காக வைத்திருக்கிறது. சின்னச்சின்ன கதைகளை இப்படி அவர்கள் விற்பனை செய்கிறார்கள். பணத்தைக் கட்டிவிட்டு, டவுன்லோட் செய்துகொள்ள வேண்டியதுதான். அதேபோல், சி.டி&யிலும் இவ்வகைக் கதைகள் கிடைக்கின்றன.

சரி, இவ்வளவு தூரம் சொல்கிறீர்களே, இந்தக்கதைகளை எல்லாம் படித்தால், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள நிறைவு கிடைக்குமா?

நியாயமான கேள்வி. படைப்பாற்றல் அப்படியேதான் இருக்கிறது. கற்பனைகள் அப்படியேதான் இருக்கின்றன. படைப்பாளியின் நோக்கமும், தரமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை வெளிப்படுத்த, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழிகள் பின்பற்றப்படுகின்றன. இங்கே, இலக்கியமும் தொழில்நுட்பமும் இணைந்து முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றன. இந்த அனுபவம், நிச்சயம் புத்தகம் படிக்கும் அனுபவத்தைவிட வேறானது!

Posted in Emerging, Generation, HTTP, Junior Vikadan.com, Literarature, New Age, R Venkatesh, Tamil, Technology, Vikatan.com | Leave a Comment »

MySpace Generation – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இளையவர்களின் இணைய சாதனை!

ஆர்.வெங்கடேஷ்

கனவுகள் கோலம் போடும் காலம் ஒன்று உண்டென்றால், அது டீன்ஏஜ் பருவம்தான். நமக்குத் தெரிந்த அத்தனை சாகசங்களையும் செய்து காட்டி, மிரட்டிவிட வேண்டும் என்ற உற்சாகம் கொப்பளிப்பதும் அப்போதுதான்.

எதற்கு இப்படி ஓர் இளமைப் பிரசங்கம் என்று கேட்கிறீர்களா? விஷயத்துக்கு வருகிறேன்…

இன்றைக்கு இணைய உலகத்தையே கலக்கிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? இளைஞர்கள்தான்! ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ போன்ற பெரிய பிஸ்தா வலைதளங்களையே பின்னால் தள்ளிவிடும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருப்பது, இளைஞர்களின் வலைதளங்கள் தான். இதுநாள்வரை இருந்த பார்வையையே புரட்டிப் போட்டுவிடும் வளர்ச்சி இது.

‘மைஸ்பேஸ் டாட் காம்’… (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.விஹ்ஷிஜீணீநீமீ.நீஷீனீ) இதுதான் இன்றைய இளைஞர்களின் சரணாலயம். கொஞ்சம் இந்த விவரங்களைப் பாருங்கள்… இதுவரை இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொண்டவர்கள் ஒன்பதரை கோடி பேர். ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சம் புது பயனர்கள் இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொள்கிறார்கள். அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆங்கில மொழி வலைதளங்களில், ‘மைஸ்பேஸ்’ வலைதளத்துக்கு நான்காவது இடம். அதுவும் எத்தனை ஆண்டுகளில்… மூன்றே ஆண்டுகளில்! 2003&ல்தான் இந்த வலைதளமே உருவாக்கப்பட்டது. பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கொட்டை போட்ட சர்வீஸ்காரர்களான ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ வலைதளங்களுக்கே இன்னும் கொஞ்சம் மாதங்களில் பெப்பே காட்டிவிட்டு ‘மைஸ்பேஸ்’ முதலிடத்தைப் பிடித்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதையெல்லாம் விட ஆச்சர்யம், சென்ற வாரம் ‘யாஹ¨’ நிறுவனம் 2006&ல் தனது காலாண்டு வருமானத்தை வெளியிட்டது. அதன் வருமானத்தில் சரிவு. நிபுணர்கள் சொல்லும் ஒரு காரணம் என்ன தெரியுமா? ‘மைஸ்பேஸி’ன் அபாரமான வளர்ச்சி திக்குமுக்காட வைக்கிறது என்பதுதான்.

‘மைஸ்பேஸி’ல் அப்படி என்ன இருக்கிறது? மிகவும் எளிமையான ஒரு கருத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட வலைதளம் அது. நட்பு மற்றும் தொடர்புகளைப் பேணுதல், வளர்த்தல், மேம்படுத்துதல் என்பவைதான் அதன் நோக்கம். இதுபோன்ற தொடர்புகளைப் பேணும், வளர்க்கும் வலைதளங்களுக்கு ‘சமூக வலைப்பின்னல் வலைதளங்கள்’ (ஷிஷீநீவீணீறீ ழிமீtஷ்ஷீக்ஷீளீவீஸீரீ ஷிவீtமீs) என்று பெயர்.

‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பது ஒன்றும் புதிய கருத்து இல்லை. சொல்லப்போனால் ‘ஜியோசிட்டீஸ் டாட் காம்’, ‘ஏஞ்சல்பையர் டாட் காம்’ போன்ற வலைதளங்கள் இந்த வேலையைத்தான் செய்தன. ஒவ்வொருவரும் தமக்கான ஒரு வலைப்பக்கத்தை இலவசமாக வடிவமைத்துக் கொள்ளவும், நண்பர்களிடையே அதைப் பரிமாறிக்கொள்ளவுமே அந்த வலைதளங்கள் உருவாயின. இன்று ‘மைஸ்பேஸ§’ம் அதையேதான் செய்கிறது. ஆனால், இன்னும் மேம்பட்டதாக, உபரி வசதிகளுடன்.

இணையத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு போக்கு இருந்து வருகிறது. அதாவது ஒரு பதிப்பாளர் இருப்பார். அவர்தான் எல்லாவற்றையும் சொல்வார். செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் என்று எல்லாமே ஒரே திசையில் இருந்து வாசகர்களான உங்களை நோக்கியே வரும். வாசகர்கள் வெறுமனே பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

இணையம் என்பது இருவழித் தொடர்புக்கான மீடியா. அதில், ‘நான் மட்டுமே பேசிக்கொண்டே இருப்பேன். நீ கேட்க வேண்டும்’ என்ற சங்கதியே உதவாது. சொல்லப்போனால், அது ஒரு அராஜகம் என்று வெகுண்டெழுந்தவர்கள் பலர். அவர்கள்தான் இணையத்தின் சாத்தியத்தை மேம்படுத்தியவர்கள். இன்று நாம் சொல்லும் வலைப்பதிவுகள், விவாத அரங்கம், உடனடி தூதுவன் (மிஸீstணீஸீt விமீssமீஸீரீமீக்ஷீ) எல்லாமே இதுபோன்ற ஜனநாயகவாதிகளின் கைவண்ணம். இளைஞர்களுக்கும் இந்த ஜனநாயகம்தானே வேண்டும்! இந்த பரிமாற்றம்தானே வேண்டும்!

‘மைஸ்பேஸ்’ செய்த முதல் வேலை, இணையத்தில் சாத்தியமாக உள்ள அத்தனை இன்டர்ஆக்டிவிட்டியையும் ஒரே இடத்தில் குவித்தது. நீங்கள் ஒருமுறை ‘மைஸ்பேஸி’ல் பதிவுசெய்து கொண்டால் போதும். உடனே உங்களுக்கு ஒரு இ&மெயில் ஐடி கிடைக்கும். கூடவே, நீங்கள் வலைப்பதிவுகள் தொடங்கி உங்கள் எண்ணங்களை எழுதலாம், பாட்டுக்களைப் பதிவு செய்து ஒலிபரப்பலாம், வீடியோ காட்சிகளை இணைக்கலாம். அதோடு, உங்களுக்கு விருப்பமான நண்பர்களை உங்கள் வலைஇல்லத்துக்கு அழைத்து வந்து காட்டலாம். அவர்களுடைய கருத்துக் களை அங்கேயே எழுதச் சொல்லலாம். பின்னர் அவர்களோடு தூதுவன் மூலம் பேசி உரையாடலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த நண்பர்களின் ‘மைஸ்பேஸ் வலைஇல்லங்களை உங்களுடைய இல்லத்தோடு இணைக்கலாம். நண்பர்களோடு குழுத் தொடங்கி, உரையாடலாம்.

ஓர் இளைஞனுக்கு வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்! அப்படியே ஆணி அடித்தாற்போல், ‘மைஸ்பேஸோ’டு கட்டுண்டு கிடக்கிறான் ஆன்லைன் இளைஞன். தனக்கு விருப்பமான குழுவோடு இணைந்துகொண்டு, தனக்குப் பிடித்த நண்பர்களோடு அளவளாவிக் கொண்டு, தனக்குப் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு, தான் பார்த்து ரசித்த வீடியோ காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, வெளியுலகில் அவன் செய்த அனைத்தையும் ஆன்லைனிலும் செய்ய… சைட் சூப்பர்ஹிட்!

இதன் இன்னொரு வளர்ச்சிதான் இன்னும் சூப்பர். என் வலை இல்லத்தின் முகப்பு எனக்குப் பிடித்த மாதிரி இல்லையே? மாற்றிக்கொள்ளலாமா? தாராளமாக. இது உங்கள் வீடு எனும்போது, அது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டியது அவசியம் அல்லவா…. அப்புறமென்ன? இணையத்தில் இன்றைக்கு எண்ணற்ற மாடல் டெம்பிளேட்டுகள் கிடைக்கின்றன. அதை அப்படியே சுட்டுவந்து, தன் வலைஇல்ல முகப்பையே மாற்றி அமைத்துக்கொள்கிறான்.

இதெல்லாம் செய்தபின், உங்கள் விருப்பமான நண்பர்களிடம் காட்ட வேண்டுமல்லவா? அவர்களை அழைத்து வருவதையும் நீங்களே செய்யுங்கள். தெருமுனையில் உருவான நட்புவட்டம், இப்போது அப்படியே ஆன்லைனுக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

இன்றைக்கு ‘மைஸ்பேஸ்’ மூலம் பல இசைக்குழுக்கள் புகழ்பெற்றுவிட்டன. பல அழகிகள் உருவாகிவிட்டார்கள். பல்துறைப் பிரபலங்கள் உருவாகிவிட்டார்கள். தங்களை ‘மைஸ்பேஸ்’ புகழ் பிரபலங்கள் என்று பறைசாற்றிக்கொள்வதில் அவர்களுக்கு எல்லாம் அளவில்லா மகிழ்ச்சி.

வளர்ச்சி என்றால், உங்கள் வீட்டு, எங்கள் வீட்டு வளர்ச்சி இல்லை. அசுரத்தனமான வளர்ச்சி. விளைவு, Ôஸ்டார் டி.வி.Õ அதிபர் ரூபர்ட் முர்டாக்குக்கு மூக்கு வியர்த்துவிட்டது. சர்வதேச மீடியா சக்ரவர்த்தியான முர்டாக், நல்லதொரு முகூர்த்த நாளில், வெற்றிலை பாக்கோடு, 580 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ‘மைஸ்பேஸ்’ வலைதளத்தை வாங்கிவிட்டார். சட்டென அப்போதுதான் சர்வதேச சந்தை தலையை உதறிக்கொண்டு விழித்துக்கொண்டது.

அதுவரை இணையம் என்றால் போணியாகாது, இனி கடையைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒரு வினாடி நின்று நிதானமாகப் பார்த்தார்கள். தங்கள் மூக்குக் கீழேயே ஒரு அபாரமான வாய்ப்பு, திமுதிமுவென வளர்ந்து நிற்பதைப் பார்த்தார்கள். ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பதன் உண்மையான வீச்சை அப்போதுதான் உணர்ந்துகொண்டார்கள்.

இன்றைக்கு ‘மைஸ் பேஸி’ன் வளர்ச்சி புதிய பரிமாணங்களைப் பெற்றி ருக்கிறது. வேலைக்கு ஆள் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் போய்த் தேடு. புதிய எழுத் தாளன் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் தேடு. புதிய இசையமைப்பாளன் வேண் டுமா? ‘மைஸ்பேஸி’ல் எட்டிப் பார். கண்ணுக்கு அழகான நடிகை வேண்டுமா? ‘மைஸ் பேஸ§’க்கு ஒரு விசிட் அடி. இளைஞர்களின் கூட்டம் அங்கேதான் மொய்க் கிறது. எந்தத் திறமை வேண்டு மானாலும் அங்கேதான் கொட்டிக் கிடக்கிறது.

நல்லது இருந்தால், கூடவே கொஞ்சம் கெட்டதும் இருக்கத்தானே வேண்டும்! ‘மைஸ்பேஸ்’ பற்றிய விமர்சனங்களில் முக்கியமானது, டீன்ஏஜ் பார்ட்டிகள் கெட்டுப் போகிறார்கள். சகவாசம் கெட்டுப் போகிறது என்று குமுறும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இன்னொரு குற்றச்சாட்டு, நட்பு என்று உருவாகி பின்னர் பாலியல் பலாத்காரம் வரை போய்விடுவதாகச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி ‘மைஸ்பேஸி’ல் திமுதிமுவென இளைஞர் கூட்டம் சேர்ந்துகொண்டே இருக்கிறது!

Posted in Blogdom, Blogworld, Bookmarks, myspace, Networking, R Venkatesh, Social, Tamil, Vikadan, Young, Youth | Leave a Comment »

Craigslist.Org – Concept & Execution

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

ஒரு மாதத்துக்கு கோடி விளம்பரம்!

ஆர்.வெங்கடேஷ்

இணையம் என்றாலே எல்லாம் ஓசியில் சுலபமாகக் கிடைக்க வேண்டும், அங்கே எந்த ஒரு வியாபார நோக்கமும் இருக்கக்கூடாது என்பது இணைய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. வியாபார நோக்கம் தலைதூக்கி விட்டால், இணையம் வளரவே வளராது என்பது இவர்களின் வாதம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் தேவையை ஒட்டி சேவைகள் உருவாக்கப்பட்டு, அது முற்றிலும் இலவசமாகவே அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆர்வலர்களின் கருத்து.

இது எவ்வளவு தூரம் சாத்தியம், சாத்தியமில்லை என்பது தனிக்கதை. ஆனால், மக்களின் தேவைகளை ஒட்டியே சேவைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் நூறு சதவிகிதம் உண்மை. அப்படி உருவான சேவைகளில் ஒன்றுதான் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.நீக்ஷீணீவீரீsறீவீst.ஷீக்ஷீரீ/). வரி விளம்பரங்களை மக்களே இலவச மாக சேர்க்கும் வசதிகொண்ட வலைதளம் இது.

நாளிதழ்களில் வெளியாகும் வரி விளம்பரங்களுக்கு அல்ப ஆயுசு. அடுத்த இதழ் வந்துவிட்டால், சென்ற இதழை எல்லாரும் மறந்து போவார்கள். மேலும் வரி விளம்பரங்கள் பற்றி மக்களுக்கு உள்ளூர சில சந்தேகங்கள் உண்டு. குறிப்பாக, அதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்து சந்தேகம் எழுவதுண்டு. வரி விளம்பரங்களைக் கொண்டு ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கிறார்கள் என்பதால்தான் இத்தகைய ஓர் அவநம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. சொல்லப்போனால் வரி விளம்பரத்தை நம்புவதைவிட, அதை வெளி யிடும் பத்திரிகையின் மேல்தான் மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இணையம் இந்தப் பிரச்னைகளைச் சுலபமாகக் கடந்துவிட்டது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்டே’ இதற்கு பெரிய உதாரணம். 1995&ல் தொடங்கப்பட்ட இந்த இணையம், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஏரியாவில் உள்ள விளம்பர தாரர்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டது. பின்னர் 1999&ல் இந்த வலைதளம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் இதன் வளர்ச்சி, பிரமிக்கத்தக்க அளவில் விரிந்தது. 2000&ம் ஆண்டில் மேலும் ஒன்பது நகரங்கள் இந்த சேவையில் இணைக்கப்பட்டன. 2003&ல் 14 நகரங்கள் இணைந்துகொண்டன. 2006 ஜூன் மாதத்தின் கணக்குப்படி, இப்போது இந்த லிஸ்ட்டில் உலகெங்கும் உள்ள 310 நகரங்கள் இணைந்துள்ளன. அதில் நமது சென்னையும், பெங்களூரும், டெல்லியும்கூட அடக்கம்.

இதன் வளர்ச்சியை மேலும் புரிந்துகொள்ள இந்த விவரங்களை கொஞ்சம் பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இந்த லிஸ்ட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வரி விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன. அதில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விளம்பரங்கள் வேலைவாய்ப்புக்கு மட்டுமே பதியப்படுகின்றன. சொல்லப்போனால், வேலைவாய்ப்புக்கு என்றே இருக்கும் வலைதளங்களில் பதியப்படும் விளம்பரங்களை விட இந்த எண்ணிக்கை அதிகம். அதேபோல், இந்த ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் இருக்கும் விவாத அரங்கில் எண்பது தலைப்புகளில் கிட்டத்தட்ட நான்கு கோடி பேர்கள் பங்கேற்று கருத்துகள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வலைதளத்தின் சிறப்புக்களில் ஒன்று, அதன் எளிமை. பொதுவாக, வலைதளங்கள் என்றாலே அதில் எண்ணற்ற விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல சமயங்களில், இந்த விளம்பரங்கள் அந்தக் குறிப்பிட்ட வலைப்பக்கம் டவுன்லோட் ஆவதைத் தாமதப் படுத்திவிடும். அல்லது விளம்பரம் முதலில் டவுன்லோட் ஆகிவிடும். வலைப்பக்கத்தில் உள்ள விவரங்கள் டவுன்லோட் ஆகத் தாமதமாகும்.

ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் மருந்துக்குக்கூட ஒரு விளம்பரம் கிடையாது. இத்தனை ஆண்டுகளாக இந்த வலைதளம் நடந்துகொண்டிருந்தும் இதுவரை ஒரு விளம்பர பேனர்கூட அங்கே போடப்பட்டது கிடையாது. ஆச்சரியமாக இல்லை? விளம்பரம் போட்டா லென்ன என்று ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் அதிபர் கிரெய்க் நியூமார்க்கிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: “மக்கள் இதைக் கேட்கவில்லையே!”

ஆம்! மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்! பல ஆச்சரியங்கள் இந்த வலை தளத்தில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாக ஒன்றை இந்த வலைதளத்தில் செய்ய வேண்டுமென்றால், கிரெய்க் நியூமார்க் செய்யும் ஒரே வேலை, அதன் உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு அறிவதுதான். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டைப் பயன்படுத்துபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர் தன் வலைதளத்தில் செய்வார். ஒவ்வொரு நகரத் துக்கும் இந்த லிஸ்ட்டை விரிவு படுத்துவதும் மக்களின் தேவையை ஒட்டிதான். தொடர்ந்து இணைய மக்களிடமிருந்து, எங்கள் நகரத்துக்கும் இந்த லிஸ்ட்டை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை வந்தால் மட்டுமே அந்த நகருக்கு இந்த லிஸ்ட் விரிவு படுத்தப்படும்!

இன்னொரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது. ஒருமுறை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் விளம்பரம் செய்ய முன்வந்தது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் பாப்பு லாரிட்டியைப் பார்த்து, தானாகவே வந்த விளம்பர வாய்ப்பு அது. அதுவும், எந்த டிஸ்கவுண்டும் கோராமல், அன்று சந்தையில் விளம்பரங்களுக்கு என்ன ரேட் இருக்கிறதோ அதைத் தருகிறோம் என்று சொன்னது ‘மைக்ரோசாஃப்ட்’. கிரெய்க், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று பிற்பாடு அவரிடம் கேட்டபோது, முதல் காரணமாக அவர் சொன்னது, ‘அப்போது எனக்குப் பணம் வேண்டியிருக்கவில்லை’ என்பதுதான். அடுத்து சொன்னது: ‘மக்கள் இதைக் கேட்க வில்லையே!’ அன்று எடுத்த முடிவு இன்றுவரை விளம்பரமே இல்லாமல், முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு என்றே இந்த வலைதளம் இருக்கிறது.

விளம்பர நிறுவனங்களுக்கு எல்லாம் கொஞ்சம் சந்தேகம். ‘என்ன இவர்கள் மடையர்களாக இருக்கிறார்களே? கம்யூனிஸ்ட் களாக இருப்பார்களோ? பணம் சம்பாதிக்காமல் என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகி றார்கள்?’ என்று ஒவ்வொரு நாள் ராத்திரியும் தூக்கமில்லாமல் தவித்தவர்கள் மற்றவர்கள்தான். ஆனால், இப்படி மக்களின் விருப்பத்தைச் சார்ந்தே இருந்ததால்தான் இந்த அசுர வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்தது.

பொதுவாக இணையத்தில் வரும் விளம் பரங்கள் பற்றி அதிக நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் வெளியாகும் வரிவிளம்பரங்களை மக்கள் நம்புகிறார்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். விளம்பரங்களைப் போடுபவர்களிடமும் விளம்பரங்களைப் படிப்பவர்களிடமும் மெள்ள மெள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.

2006&ல் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ மீண்டும் தனது பயனர்களிடம் சென்றது. இந்தச் சேவையை மேலும் தொடர போதிய வருமானம் வேண்டும் என்பது விவாதிக்கப்பட, பின்னர் விளம்பரம் கொடுக்க வரும் நிறுவனங் களிடம் இருந்து பணம் பெறலாம், தனி நபர்களிடம் இருந்து பெறக் கூடாது என்று மக்கள் கருத்துத் தெரி வித்தனர். அதன் பின்னரே, மூன்றே மூன்று அமெரிக்க நகரங்களில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படத் தொடங்கியது.

இதே வரி விளம்பர ஐடியாவை வைத்துக் கொண்டு, வேறு எண்ணற்ற வலைதளங்கள் இணை யத்தில் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் அதிகம் இருக்கும். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ இன்றுவரை பெரும் வருமானத்தை ஈட்டவில்லை. ஆனால், மிகப்பெரும் நம்பிக்கையை மட்டும் ஈட்டி இருக்கிறது!

Posted in Ads, Advertisements, Classified Ads, Craigslist, Craigslist.Org, Free Paper, Junior Vikatan.com, Profits, R Venkatesh, Tamil, Web Models, Web2.0 | Leave a Comment »

Podcasting Blogs – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

எல்லோரும் பாடலாம்!

நம்மைப் போல் நிறைய பேர் ரேடியோவைக் கேட்டு வளர்ந்தவர்கள். இலங்கை வானொலி நிலைய நிகழ்ச்சிகள், திருச்சி நிகழ்ச்சிகள் என்று மனம்கவர்ந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ. அதேபோல், எத்தனையோ அறிவிப்பாளர்கள், தங்கள் வளமான குரலாலும், நிகழ்ச்சியை நயத்துடன் வழங்கும் முறையாலும் நம்மைக் கவர்ந்தவர்கள். இன்று, ரேடியோ மிர்ச்சியும் சூரியன் எஃப்.எம்&மும் நம் செவிகளைக் குளிர் வித்தாலும், எப்போது பார்த்தாலும் சினிமா பாட்டுதான். கூடவே உற்சாகத்தைப் புட்டி புட்டியாக ஊட்டியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, உச்சபட்ச குரலில் அறிவிப்பாளர்கள் குதிக்கிறார்கள்.

இது ஒருபக்கம்… இன்னொரு பக்கம், ஆர்வமும் திறமையும் உள்ள எல்லோருக்குமே இதுபோன்ற வானொலி நிகழ்ச்சிகள் தொகுக்கவோ, வழங்கவோ வாய்ப்பு கிடைப்பதில்லை. தங்கள் குரல் வளத்தால், மக்களைக் கட்டிப்போட முடியாமல் இருப்பவர்களும் ஏராளம். இவர்களுக்கு எல்லாம் வரப்பிரசாதமாகக் கிடைத்திருப்பதுதான் ‘பாட்காஸ்டிங்’ (றிஷீபீநீணீstவீஸீரீ).

‘பாட்காஸ்டிங்’ என்றால்என்ன? முதலில் ‘வலைப்பூக்கள்’ எனப்படும் பிளாக்குகளைப் (ஙிறீஷீரீs) பார்த்து விடுவோம். பிளாக்கர் (ஙிறீஷீரீரீமீக்ஷீ) என்ற நிறுவனம் ஒவ்வொருத்தரும் தம் கருத்துக்களை, அனுபவங்களை இணையத்தில் எழுதி வெளியிட வழி செய்தது. இப்படி ஒவ்வொருவரும் தமக்கான ஒரு சின்ன ‘இணையக் குடிலை’ உருவாக்கிக் கொள்ளலாம். இது இலவசமான சேவை. இப்படி உருவாக்கப்படும் குடிலில், ‘இம்சை அரசன் 23&ம் புலிகேசி’யின் விமர்சனம் முதல், இத்தாலியின் வெற்றி வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். கிண்டல் செய்யலாம். திட்டலாம். குறை சொல்லலாம். இது உங்கள் இடம்.

இந்த வலைப்பூக்கள் மூலம், எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சுயமான பதிப்பாளரும் ஆகிவிட்டார்கள். பத்திரிகையில் எழுத முடியாத எத்தனையோ கருத்துக்கள், வலைப்பூக்களில் இடம்பெறுகின்றன. அதேபோல், பத்திரிகைகளில் இடம் கிடைக்காத எத்தனையோ எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் ஆனதும் இப்படித்தான். சர்வ சுதந்திரம். எழுத்தை ஜனநாயகப்படுத்தியது இந்த வலைப்பூக்கள்.

எழுதத் தெரிந்தவர்களுக்கு வலைப்பூக்கள். நல்ல குரல்வளத்துடன் பாடத் தெரிந்தவர்களுக்கு… பேசத் தெரிந்தவர்களுக்கு… தொகுக்கத் தெரிந்தவர்களுக்கு..? இவர்களுக்கு என்று உருவானதுதான் ‘ஆடியோ பிளாக்ஸ்’ (கிuபீவீஷீ ஙிறீஷீரீs). இதன் மற்றொரு பெயர்தான் ‘பாட்காஸ்டிங்’. இதைத் தமிழில் ‘குரல் பத்தி’ என்று அழைக்கிறார்கள்.

இப்படி ‘பாட்காஸ்ட்’ செய்பவர்கள் எல்லாம் இப்போது சுயமான ஒலிபரப்பாளர்கள் ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி கருத்து சொல்கிறார்கள். விமர்சனம் செய் கிறார்கள். பழைய பாடலில் தோய்ந்து எழுகிறார்கள். முடிந்தபோது, அடுத்தவரை பேட்டி எடுத்து ஒலிபரப்புகிறார்கள். ஒருவரே எல்லாம் செய்வதால், அவரின் விருப்பத்துக்கேற்ப, அவரது ‘குரல் பத்தி’ சிறப்பாக இருக்கிறது.

Posted in Audio Blogs, Blogs, Junior Vikadan, Podcasting, podcasts, R Venkatesh, Tamil, Tamil Audio, Tamil Pod, Vikatan | Leave a Comment »

Social Bookmarking – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

புக் மார்க்கிங்கில் அடுத்த கட்டம்!

புத்தகம் படித்தாலும் சரி, பத்திரிகை படித்தாலும் சரி, பாதியில் நிறுத்திவிட்டு வரும் போது, மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படிக்க ஒரு துண்டு சீட்டை வைப்போம். அதற்கு ஞாபகக் குறி (புக்மார்க்) என்று பெயர். கனமான புத்தகங்களில் பதிப்பகமே இந்த புக்மார்க்கை வைத்து அனுப்பிவிடும். மிகவும் உபயோகமான இந்த புக்மார்க் ஐடியாவை கணினியின் உலாவியிலும் பார்க்கலாம். அப்புறம் படித்துக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கும் வலைப்பக்கங்களை புக்மார்க்கரில் சேமித்து வைத்துக்கொள்வீர்கள்.

இணையம் இன்று அபரிமிதமாக வளர்ந்தபின், படிக்கக் கிடைக்கும் விஷயங்களும் அதிகமாகி விட்டன. அவை எல்லாவற்றையும் உங்கள் உலாவியில் சேமித்து வைத்துக் கொள்ளவும் முடியாது. இங்குதான் வலை 2.0 தன் வேலையைக் காட்டுகிறது.

சுவையானது என்று பொருள்படும் ‘டெலிஷியஸ் டாட் காம்’ (http://del.icio.us/) என்ற வலைதளம் இந்த புக்மார்க்கிங் செய்வதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. இது ஒரு கூட்டு புக்மார்க்கிங் (Social Bookmarking) சேவை. அதாவது நீங்கள் படித்த, அல்லது மேலும் படிக்க வேண்டும் என்று நினைக்கும் வலைப்பக்கங்களை இங்கே சேமித்து வைப்பீர்கள். உங்களைப் போலவே இணையத்தில் உலவும் பல கோடி பயனர்களும் தங்கள் ஆர்வங்களை புக்மார்க் செய்து வைப்பார்கள்.

அவ்வளவுதான்! எது சிறந்த வலைப்பக்கம், எந்தப் பக்கம் சூப்பர் பக்கம், எந்த செய்தி அதிகம் கவனம் பெற்றது, எந்தப் பக்கம் அதிகம் பார்க்கப்பட்டது என்று எல்லா விவரங்களும் இந்த வலைதளத்தில் தெரிந்துவிடும். நமது வாசகர்களின் சுவை என்ன என்பதைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளும் ஒரே இடம் இதுதான்.

இதே போல் உள்ள மற்ற முக்கிய சோஷியல் புக்மார்க்கர்கள்:

1. பிலிங்க்லிஸ்ட் (http://blinklist.com)

2. ஷேடோஸ் (http://shadows.com/)

3. க்ளிப்மார்க்ஸ் (http://clipmarks.com/)

Posted in Anandha Vikatan, Bookmarks, del.icio.us, R Venkatesh, Social Bookmarking, Tamil, Technology, Vikadan, Web2.0 | Leave a Comment »