இலக்கியத்தின் இன்னொரு அவதாரம்! விஷ¨வல் கிராபிக்ஸ்!
ஆர்.வெங்கடேஷ்
எழுத்தாளர்கள் என்றாலே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு மற்றொரு கையில் பேனாவைப் பிடித்தபடி போஸ் கொடுப்பதைதான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறோம். நோபல் பரிசை எப்படியும் தமிழுக்குத் தட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தாங்கொண்ணாத ஆர்வம் பலரின் கனவு விழிகளில் தென்படும். தாங்கள் ஏதோ பெரிதாக படைத்துவிட்ட திருப்தியில், எல்லாவற்றைப் பற்றியும் கருத்துச் சொல்லிக்கொண்டு ‘கருத்து கந்தசாமி’களாகப் பலர் உலா வருவதையும் பார்த்திருக்கிறோம்.
அவர்கள் என்னதான் தலைகீழாக நின்று எழுதினாலும், அதைக் கறுப்பு வெள்ளையில்தான் வடிக்க வேண்டும். பேனாவால் பேப்பரில் எழுதி, அதைப் பத்திரிகை அல்லது புத்தகம் என்ற மற்றொரு பேப்பரில் அச்சடிக்க வேண்டும். கொஞ்சம் வண்ணம், கொஞ்சம் ஓவியங்கள் மட்டும் எக்ஸ்ட்ராவாக அவர்களின் படைப்புக்கு மெருகூட்டும், அவ்வளவுதான்.
பொதுவாக மரபான படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பதற்கு இடமில்லை. படைப்புகளில் ‘விஷ¨வல் எலிமென்ட்’ என்பது முழுவதும் எழுத்துக் குள்ளேயே அடங்கியிருப்பது. அதைத்தான் உத்தி, ஸ்டைல், அணி, நயம் என்று வேறுவேறு வார்த்தைகளில் சொல்கிறோம். ஒருவகையில் இது பெரிய தடை. படைப்பாளிகளின் கற்பனை என்பது முப்பரிமாண வடிவம் கொண்டது. ஆனால், ஒற்றைப் பரிமாணத்தில் அதை வடிக்கிறார்கள். எப்படி வர்ணித்தாலும் தேர்ந்த எழுத்தாளராலேயே ஒரு ரோஜாவின் மணத்தை எழுத்தில் கொண்டுவருவது கஷ்டம். பக்கம் பக்கமாக எழுதினாலும், ஒரு அறையை முழுமையாக கண்முன் கொண்டுவந்துவிட முடியுமா?
இதை உடைக்கப் பல எழுத்தாளர்கள் முயற்சித்திருக்கிறார்கள். உதாரணமாக, சுஜாதா அவரது ஆரம்பகால கதைகளில்,
இ
&&ற
&&&&&&ங்
&&&&&&&&&கி
&&&&&&&&&&&&னா
&&&&&&&&&&&&&&&&&&ன்
என்று எழுதுவார்.
Ôஆனந்த விகடன்Õ இதழில் வெளியான ‘மடிசார் மாமி’ தொடரில், ஸ்ரீவித்யாவின் புகைப்படத்தோடு, ஓவியம் இரண்டறக் கலந்திருக்கும். இதெல்லாம் ஒருவகையில் எழுத்தின் மெத்தனத்தை உடைக்கும் முயற்சிகள். ஆனால், பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளரத் தொடங்கிய பின்தான்.
இன்று ‘டிஜிட்டல் இலக்கியம்’ (ஞிவீரீவீtணீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) என்று ஒரு தனிவகை எழுத்துப் பாணியே உருவாகியிருக்கிறது.
ஒருகாலத்தில் எழுத்தாளர்களுக்கு நல்ல கற்பனை வளமும் தேர்ந்த அனுபவமும் நல்ல நோக்கமும் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லை. கணினி வல்லுநர்கள் எழுத்தாளர்களாக ஆகியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் டிஸைனர்கள், படைப்பாளிகள் ஆகியிருக்கிறார்கள். முழுநேரமும் மென்பொருள் எழுதுபவர்கள், பகுதி நேரமாகக் கதையும் எழுதுகிறார்கள். கூடுதல் திறமையும் நவீன தொழில்நுட்ப அறிவும், அவர்களின் எழுத்திலும் தெரியத்தானே வேண்டும். தொழில்நுட்ப சாத்தியங்களை எல்லாம் இவர்கள் கதை எழுதப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
மிகவும் எளிய விஷயத்தில் இருந்து ஆரம்பிப்போம். இணையத்தில், ஒரு வலைப்பக்கத்தில் இருந்து இன்னொரு வலைப்பக்கத்துக்கு இணைப்பது என்பது, இருப்பதிலேயே மிகவும் எளிதான வேலை. இதற்கு ‘ஹைப்பர் லிங்க்’ என்று பெயர். ஒரு கதைக்குள்ளேயே ஓராயிரம் லிங்க்குகளை இதுபோல் இவர்களால் வழங்க முடியும். அந்த லிங்க் என்பது, மற்றொரு கிளைக் கதையாக வளரலாம். மற்றொரு புகைப்படமாக இருக்கலாம். அல்லது ஒரு பாடலாக இருக்கலாம். அல்லது வீடியோ காட்சியாக இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு பழைய ஆவணமாக இருக்கலாம்.
உதாரணமாக, நீங்கள் தென்திருப்பேரை ஸ்தலத்தைக் களமாக வைத்துக் கதை எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் வர்ணிக்க வேண்டாம். மகரநெடுங்குழைக்காதர், தாமிரவருணி, தெந்திரிப்பேரி கூட்டு என்று எல்லாவற்றையும் விஷ¨வலாகக் காட்டிவிடலாம். இனிமேல் ஒரு கதை என்பது எழுத்தில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கதை இன்னும் விரிவு பெற்றுக்கொண்டே போகலாம். அதேபோல், நீங்கள் ஒருவரே கதை எழுதவேண்டும் என்ற அவசியமும் இல்லை. மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் பற்றி நன்கு அறிந்த வல்லுநர் ஒருவர், அந்தச் சொல்லுக்கு ‘ஹைப்பர் லிங்க்’ செய்து தனக்குத் தெரிந்த சரித்திர, புராணத் தகவல்களையெல்லாம் எழுதலாம். ‘தெந்திரிப்பேரி கூட்டு’ செய்யத் தெரிந்த மாமியருவர், அதை ‘ஹைப்பர் லிங்க்’ செய்து சமையல் ரெசிபி வழங்கலாம். ஒரு கதைதான்… ஆனால், ஓராயிரம் பேரின் பங்களிப்போடு வளரும்!
Ôஹைப்பர்டெக்ஸ்ட் நாவல்Õ (பிஹ்ஜீமீக்ஷீtமீஜ்t ழிஷீஸ்மீறீ) என்றே இதற்குப் பெயர். ஒரே நாவலுக்குள் உள்ள பல்வேறு லிங்க்குகளை, வாசகனின் விருப்பப்படி தேர்ந்தெடுத்துப் படிப்பதின் மூலம், வாசகன் தனக்கான ஒரு கதையை உருவாக்கிக்கொள்கிறான். இந்த வரிசையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இந்த நாவலில் கிடையாது. வாசகனின் முழு சுதந்திரம்தான் முக்கியம். 1987&ல் இருந்தே இதுபோன்ற ‘ஹைப்பர் டெக்ஸ்ட் நாவல்Õ புழக்கத்தில் இருக்கிறது என்றாலும், இப்போது இதன் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
அடுத்து, கிராபிக் டிஸைனர்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். இவர்கள், கவிதை மட்டும் எழுதுவதில்லை. கவிதைக்குப் பின்னே, பொருத்தமாக ஓவியங்களை வரைந்து, சேகரித்து, தொகுத்து, லைவ்வாக ஓடவிடுகிறார்கள். கவிதையின் மூடுக்கு ஏற்ப காட்சிகள், வண்ணங்கள், தோற்றங்கள். இதை மின்கவிதை, அதாவது இ&பொயட்ரி (ணி-றிஷீமீtக்ஷீஹ்) என்றே அழைக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச டிஜிட்டல் கவிதைத் திருவிழா நடத்துகிறார்கள்.
அதேபோல், இன்ட்ராக்டிவ் பொயட்ரி (மிஸீtமீக்ஷீணீநீtவீஸ்மீ றிஷீமீtக்ஷீஹ்). மிகவும் சுவாரஸ்யமான பகுதி இது. படிக்கும் வாசகன், வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அவனும் அந்தக் கவிதை அனுபவத்தில் பங்குபெற வேண்டும். ஈடுபட வேண்டும். வாசகனையும் உள்ளே இழுத்துக்கொண்டு முன்னேறும் கவிதை வகை இது. இதிலேயே இரண்டு வகை இருக்கிறது. ஒரே கவிதையைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டு, வாசகனின் வசதிக்கேற்ப அதை மாற்றிமாற்றி வாசித்துக்கொள்வது ஒன்று. இன்னொன்று, எண்ணற்ற சொற்களை வழங்கிவிட்டு, வாசகனையே, அச்சொற்களின் மூலம் கவிதை புனைய வைப்பது. இதில்லாமல் ‘விஷ¨வல் பொயட்ரி’ என்றொன்றும் இருக்கிறது. நம்ம ஊர் சித்திரக்கவி மாதிரியானது அது.
அடுத்தது, கிராபிக்ஸ் நாவல். பல நாவலாசிரியர்கள் இதுபோல், தங்கள் கதையை ஓவியங்களாக வரைந்து, நிறைய விஷ¨வல் எஃபெக்ட்களைச் சேர்த்து, தொடராகவே இணையத்தில் வெளியிடுகிறார்கள். உதாரணமாக, Ôஅவன் தெருவோரமாக நடந்துகொண்டிருந்தான், பின்னால் வந்த கார், சேற்றை வாரி இறைத்தது, அவன் உடையெல்லாம் நாசமானதுÕ என்று ஒரு கதையில் நீங்கள் எழுதுவீர்கள். கிராபிக்ஸ் நாவலில், அதைச் செய்தே காட்டிவிட முடியும். அதாவது, செயல்கள் அத்தனையையும் விஷ¨வல் ஆக்கிவிட முடியும். கதாபாத்திரத்தின் சிந்தனை மற்றும் பேச்சை மட்டும் நீங்கள் எழுத்தால் எழுதினால் போதும்.
க்ரைம், த்ரில்லர் நாவல்கள்தான் இதுபோன்ற கிராபிக்ஸ் நாவல்களில் எடுபடுகின்றன. சரி, குரல் இல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்பமா? கவிதையானாலும் சரி, கதையானாலும் சரி… பொருத்தமான குரல்கள் பின்னணியில் மிகவும் வித்தியாசமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கதைகளை டவுன்லோடும் செய்து கொள்ளலாம். இணையத்தின் பெரிய புத்தகக் கடையான Ôஅமேசான்Õ, தன்னுடைய இணையப் பக்கத்தில் Ôஷார்ட்ஸ்Õ (ஷிலீஷீக்ஷீts) என்றொரு தனிப்பகுதியை இதற்காக வைத்திருக்கிறது. சின்னச்சின்ன கதைகளை இப்படி அவர்கள் விற்பனை செய்கிறார்கள். பணத்தைக் கட்டிவிட்டு, டவுன்லோட் செய்துகொள்ள வேண்டியதுதான். அதேபோல், சி.டி&யிலும் இவ்வகைக் கதைகள் கிடைக்கின்றன.
சரி, இவ்வளவு தூரம் சொல்கிறீர்களே, இந்தக்கதைகளை எல்லாம் படித்தால், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள நிறைவு கிடைக்குமா?
நியாயமான கேள்வி. படைப்பாற்றல் அப்படியேதான் இருக்கிறது. கற்பனைகள் அப்படியேதான் இருக்கின்றன. படைப்பாளியின் நோக்கமும், தரமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை வெளிப்படுத்த, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழிகள் பின்பற்றப்படுகின்றன. இங்கே, இலக்கியமும் தொழில்நுட்பமும் இணைந்து முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கின்றன. இந்த அனுபவம், நிச்சயம் புத்தகம் படிக்கும் அனுபவத்தைவிட வேறானது!