Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 15th, 2006

History of Middle-East Arabian Countries & Jews Israel

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

யூதர்-அரபியர் கூடி வாழ்ந்தால்…

என்.ஆர். ஸத்யமூர்த்தி

இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.

இஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.

போரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

இஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.

கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.

அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெளியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.

ஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

கி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.

இந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.

ஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான்! விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்!” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது!

கி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.

யூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.

செய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.

அறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்! சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்!

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.

கி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711ல் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம் காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளமான இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்!

பாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.

Posted in Arab, Arabia, Europe, Hezbolla, History, Israel, Jews, Lebanon, Mid-east, Middle East, Palestine, Russia, Spain, Tamil | 24 Comments »

Dalits prohibited from attending Temple Festivities

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

கோயில் சாவடிக்குள் தலித்துகள் சென்றதை எதிர்த்து கலவரம்: ஏ.டி.எஸ்.பி. உள்பட 6 பேர் காயம்

விழுப்புரம், செப். 16: சங்கராபுரம் அருகே கொசப்பாடியில் உள்ள செம்பியம்மன் கோயில் சாவடிக்குள் தலித் இனத்தவர் நுழைந்ததற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு நடத்தியதில் ஏ.டி. எஸ்.பி. உள்பட 6 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.

சங்கராபுரம் அருகே கொசப்பாடியில் செம்பியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 9 -ம் தேதி திருவிழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

திருவிழாவின்போது தலித் மக்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்றும் திருவிழா முடிந்த பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம் என்றும் ஊர்மக்கள் கூறினர். இதை தலித் இனத்தவர் ஏற்றுக்கொண்டனர்.

கோயில் திருவிழா முடிந்த பிறகு தலித் இனத்தவர் கோயிலுக்கு செல்ல முயன்றபோது சாமி சிலைகளை கோயில் சாவடியில் வைத்து விட்டதால் 5 ஆண்டுகளுக்கு இந்த சிலையை வெளியே எடுக்க இயலாது என்று ஊர் மக்கள் கூறினர்.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரய்யன், மாவட்ட செயலர் ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் இ.சுப்ரமணியன், குமார், என்.சுப்ரமணியன், வட்டச் செயலர் திருப்பதி, கிளைச் செயலர் ஏ.ராஜேந்திரன் ஆகியோர் தலித் இனத்தவருடன் செல்லம்பட்டு சாலையிலிருந்து வெள்ளிக்கிழமை ஊர்வலமாக சென்று கொசப்பாடி கிராம எல்லையை நெருங்கினர்.

இவர்களை போலீஸôர் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அப்போது இவர்களுக்கும், போலீஸôருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் துப்பாக்கி ஏந்திய போலீஸôர் அங்கு குவிக்கப் பட்டனர்.

கொசப்பாடியைச் சேர்ந்த தலித் இனத்தவர் மட்டும் கோயிலுக்கு வரலாம் என்றும் வெளியூரைச் சேர்ந்த எவரும் இந்த ஊருக்குள் வரக் கூடாது என்றும் ஊர்மக்கள் கூறியதாக வருவாய் கோட்டாட்சியர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் இந்த ஊருக்கு வெளியே முகாமிட்டதோடு தலித் இனத்தவரை கோயிலுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளிடம் கோரினர்.

இதைத்தொடர்ந்து இந்த ஊரைச் சேர்ந்த தலித் இன பெண்களும், ஆண்களும் நண்பகல் 12 மணியளவில் தலித் குடியிருப்பு பகுதியிலிருந்து மற்றவர்கள் வசிக்கும் பகுதி வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு புறப்பட்டனர்.

தலித் இனத்தவர் சிலர் செம்பியம்மன் கோயிலுக்கு செல்லாமல், நடு வழியில் உள்ள இக்கோயிலின் சாவடிக்குள் நுழைந்தனர்.

இதைக்கண்ட ஊர்மக்கள் கூட்டமாக திரண்டு, சாவடிக்குள் தலித் இனத்தவர் சிலர் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் சாவடிக்கு முன் திரண்ட இவர்கள், போலீஸôருடன் வாக்குவாதம் செய்ததால் கலவரம் ஏற்படும் நிலை உருவானது.

இதனால் இவர்களை போலீஸôர் எச்சரித்த பிறகும் இவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து போலீஸôரை சிலர் தாக்க முயன்றதால், போலீஸôர் தடியடி நடத்தினர். மக்கள், போலீஸôரின் மீதும், அங்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மீதும் கல் வீச்சு நடத்தினர்.

இதையடுத்து போலீஸôர் மீண்டும் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இதில் ஏ.டி.எஸ்.பி பழனி உள்ளிட்ட 6 போலீஸôர் காயம் அடைந்தனர்.

Posted in Dalit, Kosappadi, Oppression, Sankarapuram, Sembiamman Kovil, Tamil, Tamil Nadu, Temple, TN, Veerayyan | Leave a Comment »

Kalighat Worship – Transport Minister reprimanded in West Bengal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

காளி கோயிலில் பூஜை செய்த மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர்: ஜோதிபாசு கண்டனம்

கோல்கத்தா, செப். 16: காளிகோயிலில் பூஜைசெய்து வணங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைச்சரின் நடவடிக்கை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது நடவடிக்கையை கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதிபாசு ஏற்க மறுத்துவிட்டார்.

மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் சுபாஷ் சக்கரவர்த்தி. இவர் பிர்பும் மாவட்டம் காலிகட் என்ற இடத்தில் உள்ள பிரபலமான காளிகோயிலில் வியாழக்கிழமை பூஜை செய்து வணங்கினார். மலர்களைத் தூவி வழிபட்ட அவரது நடவடிக்கை கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

ஆனால் தனது நடவடிக்கை கம்யூனிச கோட்பாட்டுக்கு எதிரானது அல்ல என அவர் நியாயப்படுத்தினார் அவர்.

ஜோதிபாசு கருத்து: கண்ணால் பார்க்காத ஒன்றுக்கு எப்படி பூஜை செய்யமுடியும். காளி உயிருடன் இருக்கிறாரா? பார்க்காத ஒன்றை எப்படி அவர் வழிபட்டார். அவரது விளக்கத்தை ஏற்கமுடியாது என கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார்.

ஜோதிபாசு எனது கடவுள்: நான் ஒரு இந்து. பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். மரபுகளை என்னால் மீறமுடியாது. மாஸ்கோவில் உள்ள லெனின் நினைவிடத்துக்கு செல்கிறோம். அங்கு செல்லும் யாராக இருந்தாலும் முஷ்டியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நமது நடவடிக்கைகளை நம்மைச் சுற்றிய சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. ஜோதிபாசு எனது கடவுள். அவரது கருத்தை விமர்சிக்க விரும்பவில்லை என சக்கரவர்த்தி தெரிவித்தார்.

Posted in Chakraborthy, Chakravarthy, Communist, CPI (M), Durga Temple, Kaali, Kalighat, Subaash, Tamil, Transport Minister, WB, West Bengal | Leave a Comment »

Pakistan Parliament Condems Pope

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

போப்பாண்டவருக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கண்டனம்

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்கள், “இஸ்லாம்”பற்றி தெரிவித்த கருத்துக்கள் பற்றி அதிகரித்து வரும் கண்டனங்களோடு, பாகிஸ்தான் நாடாளுமன்றமும் இபோது இணைந்திருக்கிறது.

ஜெர்மனியில் போப்பாண்டவர் இவ்வாரம் பிரசங்கம் நிகழ்த்தும் போது, ஆதாரம், நம்பிக்கை, வன்முறை இவற்றுக்கு இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்ததோடு, பதினான்காம் நூற்றாண்டின் கிறிஸ்துவ சக்ரவர்த்தி ஒருவரை மேற்கோள்காட்டி, நபிகள் நாயகம் கொண்டு வந்த ஒரே ஒரு புதிய கோட்பாடு, “இஸ்லாமிய மதம் கத்தியினால் பரப்பப்பட வேண்டும்” என்ற கட்டளை தான் என்று தெரிவித்தார்.

இந்தக் கட்டளை நியாயபூர்வமான விளக்கங்களுக்கு முரணானது, ஆண்டவனின் தன்மைக்கு ஒவ்வாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாப்பரசருக்கு எதிரான காஷ்மீர் ஆர்ப்பாட்டம்
பாப்பரசருக்கு எதிரான காஷ்மீர் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானத்தில், பாப்பரசரின் கருத்துக்கள் இஸ்லாமியத்தை சிறுமைப்படுத்துகின்றன என்றும், அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி வாட்டிகனில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில்,
இஸ்லாமிய மதத்தவரின் மனதைப் புண்படுத்துவது பாப்பரசரின் நோக்கம் அல்ல, ஆனால் மதத்தினால் தூண்டப்பட்ட வன்செயல்களை தாம் நிராகரிக்கிறார் என்பதைத்தான் பாப்பரசர் தெளிவுப்படுத்த விரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் இந்த விவகாரம் குறித்த, தமிழ்நாடு ஆயர்கள் சங்கத்தின் சார்பில் பேசவல்ல வின்சண்ட் சின்னத்துரை அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in Apology, Benedict, Christianity, demands, Germany, Islam, Mohammed Prophet, Muslim, Nabigal naayagam, Pakistan, Pope, Prophet Muhammad, Speech, Tamil | Leave a Comment »

Five Maoists Dead in Andhra Pradesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

ஆந்திராவில் 5 மாவோயிஸ்டுகள் பலி

ஆந்திர மாவோயிஸ்டுகள்
ஆந்திர மாவோயிஸ்டுகள்

இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய திடீர் வேட்டை ஒன்றில் மாவோயிச கிளர்ச்சியாளர்கள் ஐவர் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.

கொல்லப்பட்ட ஐவருமே தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிச உறுப்பினர்கள் என்றும், ஒருவர் மூத்த தலைவர் என்றும், மூவர் பெண்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களில் மூத்த மாவோயிச தலைவர்கள் பலர் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Posted in Activists, Andhra, Andhra Pradesh, AP, Communism, Communists, CPI-ML, dead, Maoists, Marxist Leninist, Tamil | Leave a Comment »

Public Sector Undertakings – Growth : Ma Pa Gurusamy

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

பொதுத்துறை: வாழ்வும் வளர்ச்சியும்

மா.பா. குருசாமி

பொதுத்துறைத் தொழில்களின் மூலம் நமது நாட்டில் சமதர்ம சமுதாயத்திற்கான அடித்தளத்தை அமைக்க பண்டித ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் எண்ணினார்கள்; செயல்பட்டார்கள். 1956ஆம் ஆண்டின் இந்திய அரசின் தொழிற்கொள்கை இதற்கு வழி வகுத்தது.

நமது நாட்டில் பொதுத் துறைத் தொழில்களை (Public Sector Enterprises) நாம் ஒரு தத்துவப் பின்புலத்தில் வளர்த்தோம். நாட்டில் “”ஏழை என்றும் அடிமை என்றும்” எவரும் இல்லாத, “”சமதர்மப் பாணி சமுதாயத்தை” (Socialistic Pattern of Society) நிர்மாணிப்பது நமது கனவாக இருந்தது. இந்திய சமதர்ம சமுதாயத்தில் அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து செயல்படுகின்ற கூட்டுப் பொருளாதாரத்தை (Mixed Economy) உருவாக்குவது கொள்கையாயிற்று. சுரண்டலற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் இந்த மூன்று துறைகளும் தங்கள் பங்கினைச் செய்ய அரசு வழிகாட்ட வேண்டுமென எதிர்பார்த்தனர்.

பொதுத் துறை வளர்ச்சி: ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலேயே ரயில்வே, அஞ்சல் – தொலைபேசி நிறுவனங்கள் போன்றவை அரசுத் துறையாக (Government Sector) வளர்ந்திருந்தன. வேளாண்மை, சிறு தொழில்கள், பெருந்தொழில்கள், வங்கித்துறை போன்றவை தனியார் துறையாக (Private Sector) இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை கட்டமைப்பிற்குள் (Organised Sector) வராதவை.

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்பட, தனியார் ஈடுபடத் தயங்கும் தொழில்களை ஏற்று நடத்த, தனியார் துறையைக் கட்டுப்படுத்த, மூலவளங்களைச் சரியாகவும், முறையாகவும் பயன்படுத்த, வளர்ச்சியில் வட்டார ஏற்றத்தாழ்வைப் போக்க, தொழிலாளர், மக்கள் நலனைக் கட்டிக் காக்க பொதுத்துறை வளர்ச்சி தேவையென்று கருதினோம். பொதுத் துறையில் தொழில்களைத் தொடங்கியது மட்டுமன்றி, தனியார் துறையில் முற்றுரிமை பெற்று, செழித்து வளர்ந்திருந்த தொழில், நிதி நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினோம்.

மத்திய பொதுத்துறையில் 1951-ல் ஐந்து பெரும் நிறுவனங்கள் (Central Public Sector Enterprises) இருந்தன. அவற்றின் முதலீடு 29 கோடி ரூபாய். 2003 மார்ச் 31-ல் 240 பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன. இவற்றின் மொத்த முதலீடு ரூ. 3,35,647 கோடி. 2004-ல் இவை 242 நிறுவனங்களாகவும், முதலீடு ரூ. 3,49,209 கோடியாகவும் கூடியுள்ளன.

2003 – 2004-ல் பொதுத் துறைத் தொழில்களின் மூலமாக அரசுக்குக் கிடைத்திருக்கின்ற மொத்த வருவாய் ரூ. 89,025 கோடி. இவற்றில் 17 லட்சத்து 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவை நகர வளர்ச்சி, நிர்வாகம், கல்வி போன்ற சமுதாயப் பணிகள் ஆகியவற்றிற்காக 2004-ல் ரூ. 2,929 கோடி செலவிட்டிருக்கின்றன.

பொதுத் துறை நிறுவனத்தின் பொருளாதாரப் பங்களிப்பினை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC) 11,000 தொழிலாளர்கள், 5,000 பொறியாளர்கள், 3,000 பணியாளர்கள் என 19,000 நிரந்தர ஊழியர்கள் இருக்கின்றனர். இவர்கள் தவிர 12,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும், 1,500 சொசைட்டி தொழிலாளர்களும் பணி செய்கின்றனர். அதாவது 32,500 பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். 19,000 நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு நாள் ஊதியம் ரூ. 80 லட்சம். நிறுவனத்திற்குக் கிடைக்கின்ற ஒரு நாள் வருவாய் ரூ. 8 கோடி.

சில பொதுத்துறை நிறுவனங்கள் மிகுந்த லாபம் பெறுகின்றன. சான்று நவரத்னா நிறுவனங்கள் எனப்பெறும் 9 நிறுவனங்கள் 2003 – 2004-ல் ரூ. 30,719 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கின்றன. இது பாராட்டுக்குரிய சாதனை.

பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டினை மதிப்பீடு செய்த குழு, 53 நிறுவனங்களை மிகவும் சிறப்பானவை (Excellent) என்றும், 23 நிறுவனங்களை மிகவும் நன்றாகப் (very good) பணியாற்றுபவை என்றும், 12 நிறுவனங்கள் நன்றாகச் (good) செயல்படுவதாகவும், 8 சுமாராக (Fair) இருப்பதாகவும் தரம் பிரித்திருப்பது கவனிக்கத் தக்கது.

பொதுவான போக்கு: மத்திய அரசினைப் போன்றே மாநில அரசுகளும் சில பொதுத்துறை நிறுவனங்களை ஏற்று நடத்துகின்றன. தமிழக அரசு நடத்துகின்ற போக்குவரத்துத் துறையை எடுத்துக்காட்டாகக் கூறலாம். அண்மைக்காலத்தில் அரசுப் போக்குவரத்தின் செயல்பாடு, இழப்புகளைச் சுட்டிக்காட்டி, அதனைத் தனியார் துறையிடம் விடலாம் என்ற கருத்து வலுத்து வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களின் மீது சில குற்றச்சாட்டுகள் அடிக்கடி கூறப் பெறுகின்றன. இந் நிறுவனங்களை அரசு அதிகாரிகள் நடத்துவதால், அவர்களுக்குத் தொழில் நிர்வாகப் பயிற்சியின்மையால் தொழில்களின் ஆக்கத் திறன் குறைவாக இருக்கின்றது. ஆதலால் அவை ஈட்ட வேண்டிய ஆதாயத்தை ஈட்டுவதில்லை. பொதுத் துறை ஊழியர்கள் ஊதிய உயர்விலும், ஓய்விலும், உரிமைகளைப் பெறுவதில் கண்ணாயிருக்கின்றார்களே தவிர, கடமைகளைக் கருதுவதில்லை. பொதுத்துறையில்தான் தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது என்பனவாகும்.

தனியார் துறைகளின் திறமையும் உழைப்பும், உயர்வாகவும் சிறப்பாகவும் இருப்பதாக முதலாளித்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் வாதிடுகின்றனர். தொழில்களைத் தனியாரிடம் விட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியை அரசு செம்மையாகப் பார்த்தாலே போதுமென்பது அவர்களது கருத்து.

அரசிடம் மூலதனப் பற்றாக்குறை இருப்பதால் பொதுத் துறையின் ஓரளவு பங்குகளைத் தனியாருக்கு விற்பதால் அரசுக்கு முதலீட்டு நிதி கிடைக்கும் என்கின்றனர். இத்தகைய முதலீட்டுக் கலைப்பு (Disinvestment) தொடங்கிவிட்டது.

விழிப்பும் விவேகமும்: பொதுத் துறை நிறுவனங்கள் என்பவை நமது நாட்டில் தாற்காலிகமாக வந்து போகும் அமைப்பல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றிற்கு ஒரு நிலையான இடம் உண்டு. எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டு விடுகின்ற ஏகபோக முதலாளித்துவ, கொள்கையை நமது நாடு ஏற்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எங்கெல்லாம் பொதுத் துறையின், அரசுத் துறையின் பங்களிப்புக் குறைந்து, தனியார் துறையின் ஆக்கிரமிப்பு மிகுந்திருக்கின்றதோ அங்கெல்லாம் பொதுமக்களின் நலன் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

அரசுத் துறை நடத்த வேண்டிய கல்வியை தனியாரிடம் விட்டோம். அரசின் நிதிச் சுமை குறையுமென்று கூறினார்கள். விளைவு, கல்வி ஆதாயம் தரும் வாணிபமாகிவிட்டது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் செயல்படுவதிலிருந்து இதனைக் காணலாம்.

பொதுத் துறை நிறுவனங்களின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் தனிக்கவனம் செலுத்தினால் அவை சிறப்பாக, திறமையாக நடைபெறும் என்பதற்குப் பல சான்றுகள் கூறலாம். தனியார் வங்கியாக இருந்து நாட்டுடைமையாக்கப்பட்ட கனரா வங்கிக்கு இது நூற்றாண்டு. 2006 மார்ச்சில் இதன் வணிகம் ரூ. 1,96,000 கோடி. இதன் நிகர லாபம் ரூ. 1,343 கோடி. இதற்கு 2530 கிளைகள் உள்ளன. இது நமது நாட்டிலும் வெளிநாட்டிலும் 2.7 கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கின்றது.

பொதுத் துறை நிறுவனங்களின் தோல்வி அரசின் தோல்வியாகும். இதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். நமது நாட்டின் தலைவர்கள் கட்சிகளின் நோக்கில் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் மனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும்.

நமது நாட்டில் அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் துறை என்ற மூன்று துறைகளுக்கும் இடமிருக்கின்றது; வாய்ப்பிருக்கின்றது. தனியார் துறை எந்தச் சூழலிலும் செழித்து வளரும். அரசுத் துறையும் பொதுத் துறையும் வாழ்வதும் வளர்வதும் அரசு அலுவலர்கள் தொழிலாளர்கள் கையிலிருக்கின்றது. இதனை பொதுமக்கள் விழிப்போடு கவனிக்க வேண்டும். இல்லையேல் இது ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகி விடும்.

Posted in Dinamani, Economy, Govt, Ma Pa Gurusamy, PSU | Leave a Comment »