Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 11th, 2006

Yale University’s Tamil Chair Role to be Expanded by Kanchana Dhamodharan Efforts

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அமெரிக்க யேல் பல்கலை.யில் தமிழ் விரிவாக்கப் பணி: எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் முயற்சி

சென்னை, செப். 12: அமெரிக்காவின் முன்னணிப் பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் விரிவாக்கப் பணிக்கு அமெரிக்கவாழ் தமிழ் எழுத்தாளர் காஞ்சனா தாமோதரனும் அவரது கணவர் டாக்டர் தாமோதரனும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

“”இதன்படி இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு, கற்பித்தல் பணியுடன், தமிழ் மொழி, அரசியல், சமூகம் குறித்த கூடுதலாகப் பாடங்கள் சேர்க்கப்படும்” என்று காஞ்சனா தாமோதரன் தெரிவித்தார்.

யேல் பல்கலைக்கழகத்துக்கும் தமிழகத்துக்கும் பல தொடர்புகள் உள்ளன.

காலனி ஆதிக்க காலத்தில் சென்னை கோட்டையில் ஆளுநராக இருந்த எலைஹு யேல் என்பவரது பெயரைத் தாங்கியுள்ளது இப்பல்கலைக்கழகம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவை அழைத்து கெüவர டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்தது யேல் பல்கலைக்கழகம்.

இது மட்டுமின்றி, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் கெர்ரி, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், நியூயார்க் செனட்டர் ஹில்லரி கிளிண்டன், நியூயார்க் மாநில ஆட்சியாளர் பட்டாக்கி ஆகியோர் யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

வர்த்தக நிபுணரான காஞ்சனா தாமோதரன் யேல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் வளர்ச்சி குறித்து அப்பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் அண்மையில் தொடர்ந்து விரிவாக ஆலோசித்தார்.

அதன் பயனாக யேல் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான துறையை மேலும் விரிவுபடுத்துவது என்று பல்கலைக்கழகம் உத்தேசித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியியல் வல்லுநராக பேராசிரியர் ஈ. அண்ணாமலை, மானிடவியல் பேராசிரியர் பார்னி பேட் ஆகியோர் தமிழ்சார்ந்த சில ஆய்வுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

தற்போது இப்பல்கலைக்கழகத்தில் தொடக்கநிலைத் தமிழ் முதல் உயர்நிலைத் தமிழ் வரை கற்பிக்கப்படுகின்றன.

இனி மொழி, சமூக, அரசியல் குறித்த கூடுதல் பாடங்களும் இனிமேல் சேர்க்கப்படும்.

இப்பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்ச்சிக்காக நிதியுதவி அளித்த காஞ்சனா தாமோதரன், “”இந்திய மக்களின் வரிப்பணத்திலும் அமெரிக்க மக்களின் வரிப் பணத்திலும் சிறந்த கல்வியைப் பெற்றவர்கள் நாங்கள். எங்களை வளர்த்த இரு சமுதாயங்களுக்கும் திருப்பி அளிக்கக் கடமைப்பட்டவர்கள்” என்றார்.

காஞ்சனா “தினமணி’, “தினமணி -சிறுவர் மணி’ ஆகியவற்றில் எழுதியுள்ளார். தமிழகத்தில் சுனாமியால் தாக்கப்பட்ட மக்களுக்கு ஆரவாரம் இன்றி உதவியுள்ளார்.

Posted in Annadurai, CT, Damotharan, E Annamalai, Kanchana Dhamodharan, Tamil, Thamizh Chair, University, US, Yale | Leave a Comment »

Catholic Schools remain Closed due to Attack by BJP

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

பாஜகவினரின் தாக்குதலைக் கண்டித்து லக்னெüவில் கத்தோலிக்க பள்ளிகள் மூடல்

லக்னெü, செப். 12: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெüவில் உள்ள கத்தோலிக்க பள்ளி ஒன்றிற்குள் பாஜகவினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து லக்னெüவில் உள்ள கத்தோலிக்க பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன.

லக்னெüவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த நோபோ குமார் மண்டல் என்ற கிறிஸ்தவர் கலந்துகொண்டார். பிரார்த்தனையின்போது அவர், யேசு கிறிஸ்து தனது உடலில் கலந்திருப்பதாக கூறினார். மேலும், அப்போது உடலை வளைத்து முனகியபடி இருந்துள்ளார்.

இதனைக் கண்ட மாணவர்கள் பயந்துபோயினர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குள் பாரதீய ஜனதா கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். கிளர்ச்சியுடன் வந்த அவர்கள், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். பின்னர், “ரகசியக் கூட்டத்தின்போது யாரும் கலந்துகொள்ளக் கூடாது’ என்று மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸôர் 3 பேரை கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவத்தைக் கண்டித்து கத்தோலிக்க பள்ளிகள் அனைத்தையும் மூட முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து உத்தரபிரதேச கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் செயலர் அருட்தந்தை பால் ரோட்டிரிக்குஸ் கூறியது:

அமைதியான முறையில் நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதனால், லக்னெüவில் உள்ள அனைத்து கத்தோலிக்க பள்ளிகளும் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.

நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். மற்றவர்களும், எங்களை அமைதியாக வாழ விட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைதுசெய்ய வேண்டும். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

லோரெட்டோ கான்வென்ட் பள்ளி மாணவி அனாம் ஜைதி கூறுகையில், “நோபோ குமார் மண்டல் என்ற நபரிடம் உண்மையாகவே சிறப்பு சக்தி இருக்கிறது. நான் கடந்த சில ஆண்டுகளாகவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தேன். அந்த நபர், சிலுவைக்குப் பின்னாலிருந்து எனது முதுகைத் தொட்டவுடனேயே எனது வலி மறைந்துவிட்டது.

எந்த கடவுள் பிடிக்குமோ, அதன் மீது கவனம் செலுத்தும்படியே அவர் கேட்டுக்கொண்டார்’ என்றார்.

Posted in BJP, Catehism, Catholic Schools, Christianity, Convents, India, Loretto School, Lucknow, Tamil, UP, Uttar Pradesh | Leave a Comment »

Sathyagraha’s 100th Anniversary

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

மகாத்மாவின் சத்தியாக்கிரகத்தின் நூறாவது ஆண்டு

மகாத்மா காந்தியும் அவரது துணைவியாரும்
மகாத்மா காந்தியும் அவரது துணைவியாரும்

அமெரிக்காவின் உலக வர்த்தக நிலைய கட்டிடத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை நினைவு கூரும் இந்த செப்டம்பர் 11 ஆம் திகதியில், இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு விடயமும் நினைவு கூரப்படுகிறது.

மகாத்மா காந்தி அவர்கள், அநீதிக்கு மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த நூறாவது வருடம் இன்று பூர்த்தியாகின்றது.

1906 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க்கில் மகாத்மாவின் இந்த முதலாவது சத்தியாக்கிரகம் ஆரம்பமானது.

இன்றைய நிலையில் இந்தியாவிலும், இலங்கை உட்பட ஏனைய நாடுகளிலும் காந்தியக் கொள்கைகள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயற்படுகின்றன, அவற்றுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பவை குறித்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் காந்திய சிந்தனைகள் மற்றும் ராமலிங்க தத்துவ துறையின் தலைவர் பேராசிரியர் எஸ். ஜெயப்பிரகாஷ் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.

Posted in Anniversary, Gandhi, India, kasthuriba, Kastruba Gandi, Mahathma, S jeyaprakash, Satyagraha, South Africa, Tamil | Leave a Comment »

Another Sri Lankan Volunteer Shot Dead in Triconamalee

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

இலங்கையில் மற்றுமொரு தன்னார்வ அமைப்பு ஊழியர் கொலை

முன்பு கொல்லப்பட்ட ஒரு நிவாரணப் பணியாளரின் இறுதி ஊர்வலம்
முன்பு கொல்லப்பட்ட ஒரு நிவாரணப் பணியாளரின் இறுதி ஊர்வலம்

இலங்கையின் கிழக்கே, திருகோணமலையில் மற்றுமொரு சர்வதேச தன்னார்வ அமைப்பின் உள்ளூர்ப் பணியாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

திருகோணமலை நகரில் இருந்து 9 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள இக்பால் நகரை அண்மித்த பகுதியில் வைத்து இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கும்புறுப்பிட்டி காந்தி நகர் வாசியும், அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் தன்னார்வ அமைப்பு ஒன்றில் பணியாற்றுபவருமான எஸ். ரகுநாதன் என்பவர் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவரது தலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

Posted in Aid Worker, Eezham, LTTE, Peace, S Raghunathan, Sri lanka, Tamil, Thirukonamalai, Triconamalee, Volunteer | Leave a Comment »

Martina Navratilova wins Again @ 50

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

ஐம்பதினை எட்டும் நவரடிலோவோ ஐம்பது ஒன்பது பட்டங்களுடன் விடைப்பெற்றார்

மார்டினா நவரடிலோவா
59 கிராண்ட் ஸ்லம் பட்டங்களை வென்றுள்ளார் மார்டினா நவரடிலோவோ

டென்னிஸ் உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மார்டினா நவரடிலோவா அவர்கள், ஃபுரபஷனல் போட்டிகள் அதாவது தொழில் ரீதியான போட்டிகளில் இருந்து ஒய்வுபெற்றுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் கலப்புப் பட்டத்தினை வென்ற பின் மார்டினா நவரடிலோவா ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஐம்பது வயதினை எட்டவுள்ள அமெரிக்கரான நவரடிலோவா, தனது சக நாட்டவரான பாப் பிரையனுடன் இணைந்து செக் குடியரசினை சேர்ந்த ஜோடியினை நேர் செட்களில் வெற்றி கொண்டார்.

அமெரிக்க ஒப்பன் கலப்பு இரட்டையர் பட்டத்தினை வென்றதன் மூலம் தன்னுடைய ஐம்பத்தி ஒன்பதாவது கிராண்ட் ஸ்லம் பட்டத்தினை வென்ற மார்டினா நவரடிலோவா பிராகுவே நாட்டில் பிறந்தவர்.

தொழில் ரீதியான முதல் டென்னிஸ் பட்டத்தினை 1974 ஆம் ஆண்டு மார்டினா நவரடிலோவோ வென்றார். இதன் பின்னர் அமெரிக்காவிற்கு சென்ற அவர் பின்னாளில் அமெரிக்க பிரஜை ஆனார்.

கிராண்ட் ஸ்லம் பட்டங்கள்

பதினெட்டு ஒற்றையர் பட்டங்கள்

நாற்பத்தியொரு இரட்டையர் பட்டங்கள்

தொடர்ந்து டென்னிஸ் ஆட்டங்களில் சோபித்த அவர், பதினெட்டு கிராண்ட் ஸ்லம் ஒற்றையர் பட்டங்களையும், நாற்பத்தியொரு இரட்டையர் பட்டங்களையும் வென்றார்.

தன்னுடைய சுறுசுறுப்புத்தன்மை மற்றும் விளையாடும் திறனால், பெண்கள் பங்கேற்கும் டென்னிஸ் போட்டிகளை ஒரு புதிய கட்டத்திற்கு மார்டினா நவரடிலோவோ அழைத்து சென்றார்.

ஆனால் அவருடைய டென்னிஸ் வாழ்க்கையில் முக்கியமான குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஒரு வீராங்கனையாக அவர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் காலம் தான்.

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகளின் போது, மார்டினா நவரடிலோவோ விற்கு ஆதரவாக ஆர்ப்பரிக்கும் கூட்டத்தினர் பலர், அவர் விளையாடும் போது பிறந்திருக்க கூட மாட்டார்கள்.

ஆண் பெண் சரிநிகர்சமம் என்பதினை வலியுறுத்தியவராகவும், ஒரினச் சேர்க்கையாளர்களுக்கு ஒரு உதாரணமாகவும் அவர் பார்க்கப்பட்டார். ஆனால் இவை எல்லாவற்றினையும் விட, தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாகவே அவர் என்றும் கருதப்படுவார்.

 

Posted in Doubles, Ladies, Martina, Navratilova, Record, Singles, Tamil, Tennis, US Open, Womens | Leave a Comment »

Dubbing Artistes Association Head elected – Radharavi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

தென்னிந்திய சினிமா, “டப்பிங்’ கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி

சென்னை, செப். 11: தென்னிந்திய சினிமா மற்றும் பின்னணி குரல் (டப்பிங்) கலைஞர்கள் சங்கத் தலைவராக ராதாரவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான தேர்தல், சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செயலராக கே.செல்வராஜ், பொருளாளராக ராஜாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சத்யப்பிரியா, சவிதா உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக வீரமணி, ராம்குமார், மோகன்குமார் உள்ளிட்டோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

Posted in Association, Dubbing, Election, Pinnani, Radha Ravi, Radharavi, Tamil, Voice | 3 Comments »

Manavai Musthaffa appointed as Science Group’s President

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அறிவியல் மன்றத் தலைவராக மணவை முஸ்தபா நியமனம்

சென்னை, செப். 11: அறிவியல் தமிழ் மன்றத் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் கருணாநிதி, செய்திக் குறிப்பொன்றில் வெளியிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“”அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகள் பலரால் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் அறிவியல் தமிழ் மன்றம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக மணவை முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். பிற உறுப்பினர்கள் விவரம்:

  • பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம் –துணைத் தலைவர்;
  • ஆர். கற்பூர சுந்தர பாண்டியன் (தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர்) -உறுப்பினர் செயலர்.

உறுப்பினர்கள்:

  • கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன்,
  • மு. மேத்தா,
  • பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,
  • டாக்டர் காந்தராஜ்,
  • சாரதா நம்பி ஆரூரன்,
  • டாக்டர் சாமுவேல் ரைட்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in CM, Erode Thamizhanban, Gaandharaj, Karunanidhi, Manavai Musthapha, Mu Mehtha, Mu Pi Balasubramaniyam, R Karpoora Sundara Pandiyan, Samuvel Wright, Saradha Nambi Aarooran, Suba Veerapandiyan, Tamil, Tamil Development, Tamil Science, TN | 1 Comment »

Unemployment Benefits to Youth – Issues

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு: இளைஞர்கள் அதிருப்தி

சென்னை, செப். 11: அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது உதவித் தொகைபெற விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படித்து வேலையில்லாத இளைஞர்கள் தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

படித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தகுதியுள்ள இளைஞர்களுக்கு இத்தகைய உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். வங்கிகள் மூலமாகத்தான் இந்த நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் கூறினார்.

ரூ. 500 தேவை: அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உதவித் தொகை பெறுவதற்கு தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் பலரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரில் வாழ்வதற்கு நாளொன்றுக்கு ரூ. 75 அவசியம் தேவை. பிற நகரங்களில் கட்டாயம் ரூ. 50 தேவை. இந்நிலையில், விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக அரசு அளிக்கும் உதவித் தொகை பெரும்பாலான இளைஞர்களுக்கு பயன் தருவது சந்தேகம் என்றே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது என்ற விதிமுறையும் கடுமையானது என்று பல இளைஞர்கள் கருதுகின்றனர்.

Posted in Assistance, Benefits, Cash, Employment, Grants, Jobless, Subsidy, Tamil, Unemployed, Youth | Leave a Comment »

Kid with one Eye dies due to Medical Complications

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

நெற்றிக் கண்ணுடன் பிறந்த குழந்தை மரணம்

சென்னை, செப். 11: சென்னையில் நெற்றியில் ஒற்றைக் கண்மட்டும் கொண்டு பிறந்த குழந்தை, 10 நாள்களுக்கு முன் இறந்தது.

சென்னைத் தம்பதிக்கு கடந்த மாதம் ஒற்றைக் கண்ணுடன் விநோதக் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் மூக்கும் சரிவர அமையப் பெறாததால், மூச்சு விட சிரமப்பட்டது.

இதனால், சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. பிறந்தது முதலே, படிப்படியாக உடலின் எடையை இழந்து வந்த அக்குழந்தை, கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 10 நாள்களுக்கு முன் இறந்தது.

குழந்தையின் உடலைப் பதப்படுத்தி, அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க உதவும்படி, மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் பெற்றோரைக் கேட்டுக் கொண்டது. இதற்கு, அவர்கள் மறுத்து விட்டனர்.

Posted in Abnormal, Baby, Birth, Defects, Dinamani, Doctor, Health, Kids, One Eye, Tamil | Leave a Comment »