Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 21st, 2006

‘Stalin’ Released – Four Dead in the Melee

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

சிரஞ்சீவியின் “ஸ்டாலின்’ ரிலீஸ்: 4 ரசிகர்கள் சாவு

நகரி, செப். 22: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமான “ஸ்டாலின்’ வெளியான திரையரங்குகளில் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரம் தாக்கியும் 4 ரசிகர்கள் உயிரிழந்தனர்.

இதுகுறித்த விவரம்:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி, நடிகை த்ரிஷா நடித்துள்ள “ஸ்டாலின்’ படம் புதன்கிழமை இந்தியா முழுவதும் வெளியானது. படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இதில் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாராயணா (24), கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி (30) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும் குண்டூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு திரையரங்கில் சிரஞ்சீவியின் “கட்-அவுட்’ வைப்பதில் மும்முரமாய் இருந்தனர் ரசிகர்கள். அப்போது மின்சாரம் தாக்கியதில் நாகராஜ் (24), சேக் உசேன் (23) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

Posted in Ananthapoora, Ananthapur, Andhra, Andhra Pradesh, AP, Chiranjeevi, Cinema, Crazy, Cut-outs, dead, Fans, First day first show, Guntur, Melee, Moviegoers, Movies, Murugadoss, Sirancheevi, Stalin, Tamil, Telugu, Tollywood, Trisha | Leave a Comment »

Dega Devakumar Reddy denies allegations that Sneha’s movie is based on Naga Ravi’s Real Life

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

தடை விதிக்கப்பட்ட தெலுங்கு படம் சினேகா கதை அல்ல: தயாரிப்பாளர்

சென்னை, செப். 22: நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட படம் நடிகை சினேகா வாழ்க்கை பற்றிய கதை அல்ல என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விவரம்:

நடிகை சினேகா “மனசு பலிகே மெüன ராகம்‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். “ஏன் இந்த மெüனம்‘ என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சினேகாவின் முன்னாள் காதலர் நாகா ரவி, இந்தப் படம் தனக்கும், சினேகாவுக்கும் முன்பு இருந்த உறவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது; இப்படம் வெளியானால் சமுதாயத்தில் தனது நற்பெயர் பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றமும் இந்தப் படம் வெளியாவதற்குத் தடை விதித்தது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: இந்தக் கதை, யாருடைய சொந்த வாழ்க்கையையும் பற்றியது அல்ல; தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.

காதல் இருக்கும் இடத்தில் சுயநலம் இருக்காது; சுயநலம் இருக்கும் இடத்தில் காதல் இருக்காது என்பதுதான் கதை. ஒரு படம் அதன் தரத்தால் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

வீணான சர்ச்சைகள் மூலம் கிடைக்கும் விளம்பரத்தால் படத்தை வெளியிட விரும்பவில்லை. எனவே, தற்போது படத்தைப் பற்றி வெளிவந்துள்ள தவறான சர்ச்சைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார்.

Posted in AP, Cinema, Dega Devakumar Reddy, Film, Manasu Palige Mauna Raagam, Movies, Naga Ravi, Pictures, SNEHA, Tamil, Telugu, Tollywood | Leave a Comment »

Lots of Talk & Action in Chikun Kunya with no Measurable results

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன்-குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார் ஜெ.: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குற்றச்சாட்டு

சென்னை, செப். 22: அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன் குனியா விவகாரத்தைப் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிதுபடுத்துவதாக தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியது:

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசைப் பற்றி குறை கூற வேறு விஷயம் இல்லை. எனவே, அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றன.

ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் உள்ள அனைவரும் சிக்குன் குனியா தவிர பிற காரணங்களால் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் சிக்குன் குனியாவால் உயரிழந்ததாகக் கூறப்படும் வெங்கடாசலத்துக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்துள்ளது. அதன் காரணமாகவே உயிர் இழந்துள்ளார்.

சிக்குன் குனியாவால் மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வைரஸ் காய்ச்சல்களும் சிக்குன் குனியா என்று தவறாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் வரை சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவர்கள்.

சிக்குன் குனியாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் சிக்குன் குனியா காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.

அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் சிக்குன் குனியாவால் இறப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

885 கிராமங்களில் மருத்துவ முகாம்கள்: மாநிலம் முழுவதும் 885 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 5,310 கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவ முகாம்கள் தினமும் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 11 கோடி ஒதுக்கியுள்ளது.

காய்ச்சல், மஞ்சள் காமாலை, தாய்-சேய் நலம், சர்க்கரை நோய், கண் குறைபாடுகள் குறித்து இதில் பரிசோதிக்கப்படும். இப்பணியில் 35 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
சிக்குன் குனியா காய்ச்சல் குறித்து பரிசோதிக்க சீனாவிலிருந்து சோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் பயனைப் பொறுத்து அதிக அளவில் இக்கருவிகள் இறக்குமதி செய்யப்படும்.

ஜெர்மனியிலிருந்து கொசுப்புகை கருவிகள்: ஜெர்மனியிலிருந்து ரூ. 2.7 கோடியில் கொசுக்களை அழிக்கும் புகைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்றார்.

Posted in ADMK, Chickenkunya, Chikun Gunya, Disease, DMK, Healthcare, KKSSR, Prevention, Protection, Tamil, Tamil Nadu, Viral Fevers, Virus | Leave a Comment »

Thaksin Shinawatra, the ousted prime minister of Thailand to stay put in London

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006

லண்டனில் தக்ஷின்
லண்டனில் தக்ஷின்

லண்டனில் தக்ஷின் சின்வத்ரா

தாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தனது மனைவியுடன் தக்ஷின்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Posted in Asean, Bangkok, Coup, Democracy, General, London, Military, parliament, Pasuk Phongpaichit, Prime Minister, Sondhi Boonyaratkalin, Tamil, Thailand, Thaksin Shinawatra, World | Leave a Comment »