Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 26th, 2006

DMK Alliance – Local Body Polls : Seat Sharing Announcement

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அறிவிப்பு

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி
உள்ளாட்சி மன்றத் தொகுதிகள் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்யப்படும் – திமுக தலைவர்

தமிழகத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் மாநிலத்தை ஆளும் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

திமுக கூட்டணி பங்கீடு மாநகராட்சி மன்ற மேயர்கள்

மொத்த இடங்கள் 6

திமுக 4

காங் 2

முதல்நிலை நகராட்சி தலைவர்கள்

மொத்த இடங்கள் 102

திமுக 52

காங் 25

பாமக 12

மா. கம்யூ 8

இ.கம்யூ 5

பேரூராட்சி தலைவர்கள்

மொத்த இடங்கள் 561

திமுக 284

காங் 134

பாமக 70

மா. கம்யூ 45

இ.கம்யூ 28

செவ்வாய்கிழமையன்று அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் உள்ளாட்சி மன்றத்தொகுதிகளை, திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்வார்கள் என்றும் கருணாநிதி கூறினார்.

இவரது அறிவிப்பை வைத்துப்பார்க்கும்போது, கடந்த சட்டமன்றத்தேர்தல்களின் போது திமுக கூட்டணிக்கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட சதவீதக் கணக்கின் அடிப்படையிலேயே தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதேசமயம், இந்த தொகுதிப்பங்கீடு காரணமாக உள்ளாட்சிமன்றங்களில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியிருப்பதாகவும், கூட்டணிகட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே உள்ளாட்சிமன்றத்தலைவர் பதவிகளை கட்சிகள் பிடிக்க முடியும் என்பதோடு அவர்களின் அதரவு தொடர்ந்தால்தான் உள்ளாட்சி அமைப்புகளை நடத்தமுடியும் என்கிற சூழலும் உருவாகி இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

Posted in Alliance, Announcement, Communist, Congress (I), CPI, CPI (M), DMK, Elections, Left Parties, Local Body, Percentages, PMK, Polls, Seat Sharing, Tamil, Tamil Nadu | Leave a Comment »

EU expanded by inducting Romania & Bulgaria

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் இரு நாடுகள்

பல்கேரியா நாட்டு கொடி விற்பனை செய்யபடுகிறது
இணைவதற்கு இருநாடுகளுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது

ரொமானியா மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் என்று ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இவை முன்னர் சேர்ந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விட, மேலும் கடுமையான நிபந்தனைகளுடன் ஒன்றியத்தில் சேரும் என்று அது கூறியிருக்கிறது.

இந்த இரு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்குத் தகுதி உள்ளவைதான் என்று காட்டும் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்த வழிமுறையை நிறைவேற்றியிருப்பதாக, ஆணையத்தின் தலைவர், ஜோஸ் மானுவல் பரோசோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசுகையில் கூறினார்.

ஆனால் நீதித்துறை சீர்திருத்தம், ஊழல், மற்றும் கட்டமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்ப்பதில் மேலும் முன்னேற்றம் காணப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

புதிய உறுப்பு நாடுகள் பெற உள்ள நிதி உதவிக்குச் சரியான கணக்கு-வழக்கு அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், அவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகள் கூட நிறுத்திவைக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தான் எதிராக இருப்பதாக பரொசோ மீண்டும் வலியுறுத்தினார்.

Posted in Add, Bulgaria, EU, Euro, Europe, European Union, Finance, Inductions, New, Romania, Tamil | Leave a Comment »

Local self Governance – Maanagaratchi, Ullaatchi Therthal Analysis

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

உள்ளாட்சிகளில் மக்களாட்சி

கல்பனா சதீஷ்

(கட்டுரையாளர்: ஆலோசகர், பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு).

உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இச்சூழலில், கடந்த பத்தாண்டுகளில் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த மீள்பார்வை அவசியம். 73-வது இந்திய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம், 1992-ம் ஆண்டு நிறைவேறிய பிறகு, குறிப்பாக தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996-ல் அனைத்துக் கிராம/நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அரசியல் சாசனத் திருத்தத்தால் முன்பிருந்ததுபோல் மாநில அரசு விரும்பினால் உள்ளாட்சிக்குத் தேர்தல் நடத்தலாம்; விரும்பாவிட்டால் நடத்தத் தேவையில்லை என்கிற நிலை மாறி 5 வருடத்திற்கு ஒரு முறை கட்டாயத் தேர்தல் நடைமுறைக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் 1996-ல் புதிய மாநில அரசு பொறுப்பேற்றவுடன், தனது ஆட்சியை அனைத்துக் கிராம மற்றும் நகர உள்ளாட்சிகளில் தக்க வைக்கும் நோக்குடன் அக்டோபர் 1996-ல் தேர்தல் நடத்தியது. 2001-லும் அதனைத் தொடர்ந்து 2006-லும் தாமதமின்றி ( 6 மாதகால அவகாசமிருந்தும்) தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. இதன்மூலம் மாநிலத்தை ஆளும் கட்சிகள் தங்களது ஆட்சி உள்ளாட்சிகளிலும் அமைய வேண்டும் என்ற வேகத்தைக் கொண்டிருப்பது தெரிகிறது.

மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நீக்கப்பட்டு கவுன்சிலர்களிடையே மறைமுகத் தேர்தல் நடத்த சமீபத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதும், உள்ளாட்சிப் பதவிகளைக் கூட்டணிக் கட்சிகள் பங்கீடு செய்து கொள்வதும், முன்னாள் முதல்வர் உள்ளாட்சிகளுக்கு Anti Defection Law கோருவதும் அரசியல் கட்சிகள் உள்ளாட்சிகளைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைவதையே காட்டுகின்றன. இத்தகைய அணுகுமுறை, உள்ளாட்சிகளை மேலும் மேலும் மாநில / பிராந்திய / தேசியக் கட்சிகளின் கட்டுப்பாட்டில் வைத்துத் தற்போதுள்ள கட்சி கலாசாரத்தைக் குக்கிராமங்களிலும் நகரங்களிலும் புகுத்துவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

கட்சிகளின் பங்கேற்பில் சாதகமான அம்சம் என்னவாக இருக்க முடியுமென்றால், கிராமங்கள் தனி நபர் / சாதீய ஆதிக்கம் செலுத்தும் நபர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டு ஜனநாயக ஆட்சி முறையில் எவரும் தேர்தலில் போட்டியிட ஏதுவாக இருக்கும். அதேநேரத்தில், கிராமங்களிலும் நகர்ப்புற ஏழை குடியிருப்புப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் ஊடுருவல் என்பது, மக்கள் தங்கள் வாழ்நிலையை உணர்ந்து மேற்கொள்ளும் புதிய அரசியல் கொள்கைக்கோ சித்தாந்தத்திற்கோ மிகப்பெரும் தடையாக இருக்கும். இந்திய அரசியல் சட்டம் எதிர்நோக்கும் உள்ளூர் சுய அரசாங்கம்  என்பது கண்ணுக்கெட்டாத கனவாகவே போய்விடும்.

மாநிலத்தில் சுய ஆட்சி கோரும் அரசியல் கட்சிகள் தேசிய அரசியலிலும் கிராம அரசியலிலும் பங்கேற்பது அவர்களது கட்சியின் கொள்கையையும் பலத்தையும் நிலைநாட்டுவதற்கான உரிமையாகக் கருதினாலும் இம்முயற்சி காலங்காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டு வரும் பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் உள்ளூர் அளவிலான தனிப்பட்ட, சுதந்திர அரசியல் எழுச்சி உருவானதற்கு சாவு மணி அடித்தது போலாகிவிடும். ஏற்கெனவே முழுமையாகக் கட்சிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்ட நகர்ப்புற, உள்ளாட்சிகள் அடித்தட்டு மக்களிடம் எந்தவித நம்பிக்கையையோ ஆதரவையோ பெறவில்லை என்பது மக்களிடம் ஓர் நேர்காணல் நடத்தினால் தெளிவாகத் தெரிய வரும்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இணையான அந்தஸ்தை 73-வது அரசியல் சாசனப் பிரிவின் கீழ் உள்ளாட்சிகள் பெற்றிருந்தாலும் மாநில அரசு மக்களுக்கு நெருக்கமாக உள்ள இவ்வமைப்புகளை வெறும் சாலை போடவும் தெரு விளக்கு ஏற்றவும், மேலும் சில அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரும் ஏஜென்சி அமைப்பாகவே நடத்துகிறது. இதற்கு ஒரு முக்கிய உதாரணம், ஊரக உள்ளாட்சிகளுக்கு சட்டபூர்வமாக கல்வி, சுகாதாரம், பொது விநியோகம், நிலச்சீர்திருத்தம், பொதுவான ஆதாரங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட 29 துறைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் அளிக்காததே.

மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதிப் பகிர்வினைக் கோரியும், சர்வதேச வங்கிகளிடமிருந்து நிதி பெறுவதிலும் முனைப்புக் காட்டும் மாநில அரசு, உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக 8 சதவிகித நிதியை மட்டுமே அளித்து வருகின்றது. இந் நிதியும் முறையாக, முழுமையாகக் குறிப்பிட்ட நிதியாண்டிற்குள் உள்ளாட்சிகளிடம் சென்றடைவதில்லை.

மேலும் சட்டப்படியாக உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய சிறு கனிமங்கள், குவாரிகள் மீதான வருவாய், முத்திரைத்தாள் மீதான மேல் வரி போன்றவை பல ஊராட்சிகளுக்கு நிலுவையில் உள்ளன. எண்ணிக்கையில் அதிகமுள்ள 12618 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 561 பேரூராட்சிகளில் எவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாமலேயே இருக்கிறது. 1998-99-ல் ரூ. 1301.91 கோடியாக இருந்த ஊராட்சிகளுக்கான மாநில நிதி ஆணைய நிதி, 2006-07-ல் ரூ. 1224.76 ஆகக் குறைந்துள்ளது.

1996-2001 கால ஆட்சியில் தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் உறுதி செய்தபடி உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், நிதி ஆதாரம், ஊழியர்கள் பரவலாக்கம் போன்றவற்றை படிப்படியாக வெறும் அரசாணையாக இல்லாமல் சட்டபூர்வமாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். இட ஒதுக்கீடு மூலம் கிராம / நகர்ப்புற ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் மற்றும் தலித் / ஆதிவாசியின வேட்பாளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையான முறையிலும் தேர்தலில் பங்கேற்கவும், வெற்றி பெறவும் பிரதிநிதிகள் உள்ளாட்சிகளில் எவ்வித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாகச் செயல்படவும் உறுதி செய்ய வேண்டும்.

1997 க.இ. ஜெயின் தலைமையிலான மாநிலத் திட்டக்குழு பரிந்துரைத்தபடி உள்ளாட்சிகளுக்கான அதிகாரமானது அதனதன் எல்லைகளுக்குட்பட்டு வழங்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் ஈரடுக்கு ஊராட்சிக் கொள்கை மாவட்ட ஊராட்சிகளையும் மாவட்டத் திட்டமிடல் குழுக்களையும் ஒழித்துக் கட்டும் முயற்சியாகவே உள்ளது. இந்த நிலைப்பாடு, காலனி ஆதிக்கம் கொண்டு வந்த அதிகாரிகள் ஆளும் மாவட்ட நிர்வாகத்தை (கலெக்டர் ராஜ்) வலுப்படுத்துவதாகவே உள்ளது. ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளத்திலிருந்து மேல்நோக்கிய ஆட்சி அமைப்புகளில் ஆரோக்கியமான தொடர்பு ஏற்படுத்துவதில் அக்கறை இருக்குமானால் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் மூன்றடுக்கு ஊராட்சிக் கொள்கையை ஏற்று அமல்படுத்த வேண்டும்.

மாவட்ட ஊராட்சிகள் மற்றும் மாவட்டத் திட்டமிடல் குழுக்கள் அதிகாரமுள்ள, செயல்படும் அமைப்பாக மாற்றப்பட்டு கிராம சபை மூலம் கீழிருந்து திட்டமிடல் உறுதி செய்யப்பட வேண்டும். உள்ளாட்சிகள் செயல்படுத்தும் அமைப்பாக  மட்டும் இல்லாமல், மக்கள் முடிவெடுக்கும் / பங்கேற்கும் களமாக மாற வேண்டும். கிராம அரசியலில் சமூக நீதி மற்றும் நிலைத்த – நீடித்த வளர்ச்சிக்கான புதிய சித்தாந்தமும், கொள்கையும் உருவாக மாநில அரசும் அரசியல் கட்சிகளும் வழிவிட்டு நடத்த வேண்டும்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுய ஆட்சி உள்ளாட்சிகளில் மக்களாட்சி மலர்ந்திட உறுதியான அரசியல் விருப்புணர்வு வேண்டும்.

(கட்டுரையாளர்: ஆலோசகர், பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு).

Posted in Analysis, Anti Defection Law, Elections, Executive body, Kalpana Satheesh, Local Body, Local self Governance, Maanagaratchi, Op-Ed, Political will, Polls, Principle of subsidiarity, Tamil, Tamil Nadu, Therthal, Ullaatchi, Women, Women Rights | Leave a Comment »

Musharraf – In the Line of Fire : Memoirs Criticism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

யோசனைகள் இலவசம்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எழுதி வெளியாகியுள்ள “நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு‘, இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பற்றிய பல்வேறு விவாதங்களைப் “பற்ற’ வைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக “தனிப்பட்ட முறையில் தனது யோசனை’ என்று அவர் நான்கு விஷயங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1. பாகிஸ்தானும் இந்தியாவும் உரிமைகோரும் பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்

2. இப்படியாகத் தீர்மானிக்கப்படும் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. இப்பகுதிக்கு தன்னாட்சி அளிக்கவேண்டும்.

4. அந்தத் தன்னாட்சியைப் பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் ஆகிய மூன்று பகுதியினரையும் கொண்ட குழு அமைத்து கண்காணிப்போம்.

பிரச்சினைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுத்துத் தீர்மானிக்க முடிந்தாலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை முடிந்துபோகிறது. அதன் பின்னர் அவரவர் பகுதியில் அவரவர் ஆட்சி தானே அமைந்துவிடும்.

ஆனால் முஷாரப், அதற்கும் மேலே போய், தன்னாட்சி வழங்க வேண்டும், வாருங்கள் மூவரும் ஒன்றாகக் கண்காணிப்போம் என்கிறார். அதாவது – இரண்டு வீடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சினையா? குறுக்கே சுவர் எழுப்பு! இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா? குறுக்கே ஒரு நாட்டை எழுப்பு!

முஷாரப் சொல்லும் நான்கு யோசனைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு புதிய நாடு முளைப்பதை உணரலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு என்பது வெறும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை என்பதாக இல்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பதுதான் இந்திய நட்புக்கு பாகிஸ்தான் அளிக்கக்கூடிய முதல்மரியாதையாக இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி முஷாரப் தனது “சர்வதேச உறவுகள்‘ அத்தியாயத்தில் விவாதிக்கக் காணோம்.

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்’ என அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் குற்றம் சாட்டும்போது இரு நாடுகளுக்கும் இரண்டு விதமான எதிர்வினைகளைத் தருகிறது பாகிஸ்தான்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா சொன்னபோது வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அளித்த கோபமான பதில்: “”இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் பாகிஸ்தான் காரணம் என்கிறார்கள்”.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. நியூயார்க்கில் உலக வர்த்தகக் கட்டடம் அல் காய்தாவால் தாக்கப்பட்டதும், “”பயங்கரவாதத்தை ஒழிக்க (அல்லது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க) ஒத்துழைக்காவிட்டால் நாட்டையே குண்டுபோட்டு அழிப்போம். கற்காலத்துக்குப் போய்விடுவீர்கள்” என்று மிரட்டிய விஷயத்திற்காக, அமெரிக்கா செல்லும் லண்டன் விமானங்களில் குண்டுவெடிக்க நடத்தப்பட்ட சதியை முறியடிக்கத் “துப்பு’ கொடுத்து “நடமாடும் நாயகருக்கு நல்லபிள்ளை நானே’ என்று பேர் வாங்கிக் கொண்டபின்னர், இப்போதுதான் அந்த மிரட்டல் பற்றி மூச்சு விடுகிறார் முஷாரப்.

ஆகையால், பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்று இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை. உலகம் தோன்றிய நாள் முதலாய் “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’.

கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர்.

Dinamani Editorial – March 5, 2007

காஷ்மீரில் துருப்புகள்

காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இப்போதைக்குத் திட்டம் எதுவும் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் மறுபுறம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீணாகக் கிளப்பியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் பரூக், காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் கூறினார். காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியோ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்று தீவிர இயக்கமே நடத்தி வருகிறது.

இக் கட்சியின் தலைவரான மெஹபூபா, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் பல தலைவர்களைச் சந்தித்து துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தவிர, காஷ்மீரில் ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதால் துருப்புகளைக் குறைக்கலாம் என்பது அவரது வாதம். இப்படிக் குறைத்தால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்றும் அவர் வாதிக்கிறார். இக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சய்யீத், காஷ்மீரில் துருப்புகள் குறைக்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று வர்ணித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸýம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இக் கட்சிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி 2002-ம் ஆண்டிலிருந்து முதல் மூன்று ஆண்டுக்காலம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சய்யீத் முதல்வராக இருந்தார்.

2005-லிருந்து காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் முதல்வராக இருந்து வருகிறார். காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகளாகும். ஆகவே, அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். இதை மனத்தில்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியினர் துருப்புகள் எண்ணிக்கைக் குறைப்பை ஒரு தேர்தல் கோஷமாக ஆக்க, இப்போதிருந்தே குரல் எழுப்ப முற்பட்டுள்ளதாகக் கூறலாம்.

ஆளும் கூட்டணிக்குள்ளாக இருந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது சரியா என அக் கட்சியினர் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில், துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க காலம் இன்னும் கனியவில்லை என முதல்வர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வருகிற நாள்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களது சுருதியை மாற்றிக் கொள்வார்களா அல்லது மேலும் உரத்தகுரல் எழுப்புவார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் தங்களது இயக்கத்தை முடுக்கிவிட்டால், அது கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கலாம்.

உள்ளபடி காஷ்மீரில் ராணுவப் படையினர் இரண்டுவிதப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து ஊடுருவல் நடைபெறாதபடி எல்லையைக் காப்பது முதல் பணி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் காஷ்மீர் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்பது இரண்டாவது பணியாகும்.

காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அகன்று விட்டதாகக் கூற முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பற்றி இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் காஷ்மீரில் இன்னும் முழு அமைதி ஏற்பட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட பிறகே படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க முடியும். பிரதமர் இதைத்தான் எடுத்துக் கூறியுள்ளார்.

Posted in Army, Azad Kashmir, Bomb Blasts, Book, Criticism, Critique, defence, Defense, External Affairs, Foreign Affairs, In the Line of Fire, India, Kashmir, Military, Mumbai, Musharraf, Pakistan, POK, Prime Minister, Relations, review, Tamil, Terrorism | Leave a Comment »

Name Changes in Tamil – Instructions and Ruling are not yet Clear to Officials

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

தமிழில் பெயர் மாற்றினால் கட்டணக் குறைப்பு: தெளிவில்லா ஆணையால் நடைமுறைக்கு வராத நிலை

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, செப். 27: தமிழில் பெயர் மாற்றினால் பிரசுரக் கட்டணம் ரூ. 50 ஆகக் குறைக்கப்படும் என்ற உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்ப் பெயர் மாற்றம் என்று எதை எடுத்துக் கொள்வது என்பதில் குழப்பம் நீடிப்பதே இதற்குக் காரணம்.

சென்னை அண்ணா சாலையில் உள்ளது எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை. இங்குதான், நமது பெயர் மாற்றங்களைப் பதிவு செய்து, சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

இதற்கு, முதலில் அரசு வெளியீடுகள் உதவி இயக்குநரை நேரில் சந்தித்து உரிய பதிவேட்டில் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் பிறகு, பிரசுரக் கட்டணமாக ரூ. 350, சான்றிதழ் நகல்கள், தபால் செலவுக்கு ரூ. 65 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆக, நமது பெயர்களைப் பதிவு செய்ய மொத்தமாக, ரூ. 415 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ரொக்கமாக அல்லது வரைவோலையாக (டி.டி.) செலுத்த வேண்டும்.

இதன் பிறகு, விண்ணப்பப் படிவங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமைதோறும் வாராந்திர அரசு இதழில் வெளியிடப்படும்.

தமிழில் பெயர் மாற்றினால்… கடந்த மாதம் சட்டப் பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், “தமிழில் பெயர் மாற்றினால் சலுகை’ என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, தமிழில் பெயர் மாற்றுவோருக்கு பிரசுரக் கட்டணம் ரூ. 50 ஆகக் குறைக்கப்பட்டது. கட்டணத் தொகை ரூ. 350-லிருந்து ரூ. 50-ஆக குறைக்கப்பட்டதால், தமிழில் பெயர் மாற்றத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறையிடம் நாள்தோறும் இருபதுக்கும் மேற்பட்டோர், தங்கள் பெயரைத் தமிழில் மாற்றம் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

சிக்கல் வந்தது: ஆனால், அரசாணையில் தமிழில் பெயர் மாற்றம் என்பது என்ன என்று தெளிவாக வரையறுத்துக் கூறவில்லை.

  • இருக்கும் பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பதா அல்லது
  • தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்வதா என்று கூறப்படவில்லை.

இதனால், தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பி வரும் மக்களுக்கு, அரசு எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை அதிகாரிகள் நிலைமையை விளக்கிக்கூறி திருப்பி அனுப்புகின்றனர்.

விளக்கம் கேட்கின்றனர்: எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறையின் கீழ் வருகிறது. தமிழில் பெயர் மாற்றம் என்பதற்கு உதாரணத்துடன் விளக்கம் வேண்டும் என எழுதுபொருள் மற்றும் அச்சகத் துறை அதிகாரிகள் அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“”அரசிடம் விளக்கம் கேட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் எந்த பதிலும் வரவில்லை. விளக்கத்துக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in Advertising Media, Bureaucracy, Decision making, Instructions, Name Change, Officials, Printing, Tamil, Thamizh Names | Leave a Comment »

French Kamban Kazhagam award goes to Jegathratchagan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது

சென்னை, செப். 27: சென்னை கம்பன் கழகத் துணைத் தலைவர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழகம் சார்பில் ‘கம்பன் விருது வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இயங்கி வரும் இக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இம்மாதம் 30, அக்டோபர் 1 ஆகிய இரு நாள்களில் பாரிஸில் உள்ள சித்தி விநாயகர் ஆலய அரங்கில் இவ்விழா நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் சிறப்பாக இலக்கிய பணி ஆற்றி வருவோருக்கு இக்கழகம் அளிக்கும் கம்பன் விருது இவ்விழாவில் ஜெகத்ரட்சகனுக்கு வழங்கப்படுகிறது.

விழாவில் கருத்தரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன் செய்துள்ளார்.

Posted in Bharathidasan, Expatriates, France, French Thamizhs, Jegathratchagan, Kamban Kazhagam, October, Paris, Tamil, Tamil Meet, World Tamils | Leave a Comment »

Islamic Literature Association to confer Umaru Pulavar Award to Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது: இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிவிப்பு

சென்னை, செப். 27: முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய உமறுப் புலவர் சிறப்பு விருதை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்குகிறது.

இதுதொடர்பாக அக்கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம். இதயத்துல்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் என்.ஏ.அமீர் அலி தலைமையில் நடைபெற்றது. நீதிபதி சி.மு. அப்துல் வகாப், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாதிக், கவிஞர் அப்துல் ரகுமான், மாநில அரசின் தமிழ் அறிவியல் மன்றத் தலைவர் மணவை முஸ்தபா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு டிசம்பரில் சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அனைத்துலக 7-வது இலக்கிய மாநாடு நடத்தப்படும். மாநாட்டில் பங்கேற்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அழைக்கப்படுவார். மாநாட்டில் கருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  • இஸ்லாமிய இலக்கிய பண்பாட்டு ஆய்வு மையம், நூலகம் அமைக்க சென்னையில் அரசு நிலம் தர வேண்டும்.
  • சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் ஆண்டுதோறும் இஸ்லாமியப் பண்பாட்டுச் சொற்பொழிவை நிகழ்த்த ரூ.1 லட்சத்தில் அறக்கட்டளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

Posted in Association, Award, Islam, Islamic Ilakkiya Kazhagam, Karunanithi, Literature, M Karunanidhi, Manavai Musthafa, Mu Ka, Mu Karunanidhi, Muslim, Tamil, Thoppil Muhammad Meeran, Umaru Pulavar | 1 Comment »

Gay and Lesbians Laws to be revamped

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் தண்டனைச் சட்டப் பிரிவு நீக்கப்படும்

புதுதில்லி, செப். 27: ஓரினச்சேர்க்கையை தடை செய்யும், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 377-வது பிரிவை நீக்குவதற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடந்துள்ளது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவரும் சுகாதார அமைச்சக கூடுதல் செயலருமான சுஜாதா ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இச் சட்டப் பிரிவை நீக்கக் கோரி எழுத்தாளர்கள்

  • அருந்ததி ராய்,
  • விக்ரம் சேத்,
  • திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் உள்ளிட்ட பிரமுகர்கள் மத்திய அரசுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இச் சட்டப் பிரிவு மிருகத்தனமானது என்றும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் மத்திய அரசுக்கு தனியே எழுதிய கடிதத்தில், நோபல் விருது பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென் குறிப்பிட்டிருந்தார்.

Posted in AIDS, Gay, GLBT, Indian Penal Code, IPC, Laws, Lesbian, Tamil | Leave a Comment »

Mullai Periyar Dam Issue – PMK Ramadoss Condemns Kerala Attitude

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

முல்லைப் பெரியாறு விவகாரம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை, செப். 27: முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிபுணர் குழுவினர் அளித்த அறிக்கைக்கு ஏற்ப முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மதிக்காமலும் அதை எதிர்த்தும் சண்டித்தனம் செய்தது முந்தைய கேரள காங்கிரஸ் அரசு. மாநிலத்தில் உள்ள அணைகளை எல்லாம் ஓர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதன் அனுமதியில்லாமல் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றியது.

இந் நிலையில் ஆட்சி மாறி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு அங்கே பதவிக்கு வந்தது. இவர்களாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பார்கள். அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு நடந்து கொள்கிறது. அவர்களே பரவாயில்லை என்று கருத வைத்துவிடுவார்களோ என்ற அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இடதுசாரி அரசு நடந்து கொள்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தான் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் மீண்டும் பேச்சுவார்த்தை என்ற ஒரு கபட நாடகத்தை இடதுசாரி அரசு அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்றத்தையும் நம்ப வைத்திருக்கிறது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று முதலில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்ற அறிவுரை கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது. முதலில் உத்தரவை அமல்படுத்துங்கள் என்று உத்தரவிட வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பேச்சுவார்த்தை என்று புதிதாக அறிவுரை வழங்கியிருப்பது சரிதானா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் விளக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று மாநில அரசுகளே பகிரங்கமாக அறிவிப்பதும் நீதிமன்ற உத்தரவை செல்லாததாக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இத்தகைய போக்கை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அத்துடன் ஆண்டுக் கணக்கில் தீர்வு காணப்படாமல் இருக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பு முறையை ஏற்படுத்துவது குறித்தும் மத்திய அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த உத்தரவை மதித்து முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்த அனுமதிக்கும்படி கேரள அரசுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அறிவுறுத்த வேண்டும். அதன் மூலம் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதையும் நீதிமன்றத்தை மதிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிலைநாட்ட வேண்டும்.

இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்ற நிலையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முடியவில்லை என்ற நிலையில்தான் மூன்றாவது நபர் என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தை அணுகினோம். முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் அமல்படுத்த வேண்டும். அதன் பிறகு உச்ச நீதிமன்ற அறிவுரை பற்றி நாங்கள் சிந்திக்கிறோம் என்ற நிலையை பகிரங்கமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து அவசரமாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Posted in Contempt, Dam, High Court, Kerala, Mullai Periyar, PMK, Ramadoss, River, Sharing, States, Supreme Court, Tamil, Tamil Nadu, TN, Water | 1 Comment »

India – Pakistan Agreement on Cross Border Terrorism & Kashmir

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

சந்தேக ஒப்பந்தம்!

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்புக்கான அமைப்பு ஒன்றை நிறுவுவது சாத்தியமா …? சொல்லளவில் இது சாத்தியம் என்று முஷார·ப்பும் மன்மோகன் சிங்கும் உரையாடி ஒப்பந்தமும் போட்டுவிட்டார்கள். ஆனால், செயலளவில்…?

 

கடந்த ஜூலை மாதம் மும்பையில், ஓடும் ரயில்களில் குண்டு வெடித்து அநியாயமாய் உயிர்களைக் கொள்ளை கொண்டபோது, பாகிஸ்தானின் ஆதரவும் அங்கீகாரமும் பெற்ற பயங்கரவாத அமைப்புகளே அதற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்னும்போது, அந்நாட்டு அரசாங்கமே இந்த பயங்கரவாத அமைப்புகளுக்குப் பொருளுதவியும் ஆயுத உதவியும் செய்கிறது என்னும்போது, அதே பயங்கரவாதத்தை எதிர்க்க அந்நாடு இந்தியாவுடன் கைகோத்து அமைப்பு நிறுவுகிறது என்பது நம்பக் கூடிய விஷயமே அல்ல.

அப்படியே சொன்ன சொல்லைக் காப்பாற்ற ஓர் அமைப்பு நிறுவப்பட்டாலும் அது எவ்வளவு தூரம் வெற்றிகரமாக இயங்கிவிட முடியும்? ‘‘இந்த அமைப்பு சரியாகச் செயல்பட்டுப் பயனளிக்காவிட்டால் பயங்கரவாதத்தை வேறு விதங்களில்தான் முறியடிக்க முயற்சி செய்ய வேண்டும்’’ என்று பிரதமர் ஒப்பந்த மை உலர்வதற்கு முன்பே சொல்லிவிட்டார்.

பரஸ்பரம் சந்தேகத்துடனும் எதிர்ப்புணர்வுடனும் நோக்கும் இரு நாடுகள் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா..? அது சாத்தியமேயில்லை. கிடைத்த தகவல்கள் முழுமையானவையா, உண்மையானவையா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். எந்த முடிவுக்கும் எளிதில் வந்து, எந்த நடவடிக்கையையும் உறுதியாக எடுக்க முடியாமல் போகும்.

மன்மோகன் சிங் – முஷார·ப், அணிசாரா நாடுகள் உச்சி மாநாட்டில் சந்தித்ததால் விளைந்துள்ள ஒரே நற்செயல், முறிந்துபோன இந்தோ-பாக் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்திருப்பதுதான். அயலுறவுத்துறை அமைச்சர் இல்லாத நிலையில், பிரதமர் தமது நட்பான அணுகுமுறையினால் இதைச் சாதித்துள்ளார் என்பதை வரவேற்போம்.

இந்த முன்னேற்றத்தின் காரணமாக, அவர் பாகிஸ்தான் செல்ல இருப்பது மற்றும் ஒரு வரவேற்க வேண்டிய முடிவு. நீட்டப்பட்டுள்ள நேசக்கரத்தைப் பற்றியிருக்கும் பாரதப் பிரதமர், பாகிஸ்தானுடன் உறவுகள் மேம்படுவதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். இந்தியா – பாகிஸ்தானிடையே பிரச்னையாக நீடித்துவரும் – எல்லைக்கோடு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களின் கருத்தறித்து அதற்கேற்ப அங்கு அரசியல் தீர்வு காண முயற்சி செய்வது போன்ற அம்சங்களைப் பேசித் தீர்வு காண நல்லதொரு பிடிமானம் இப்போது இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.

‘பயங்கரவாதத்தை நிறுத்தினால்தான் பேசுவோம்’ என்கிற பா.ஜ.க. அரசின் கோட்பாடிலிருந்து மாறி, இன்றைய மத்திய அரசு நிபந்தனைக்குட்படாத பேச்சு வார்த்தைகளைத் துவக்குவது நல்லது. காஷ்மீர்ப் பிரச்னையைக் கௌரவப் பிரச்னையாகப் பாராமல், அங்குள்ள மக்களின் பிரச்னையாகப் பார்ப்பது அவசியமாகிறது. அவர்களின் கண்ணீரைத் துடைக்கவும் ஆயுதங்களுக்கும் பாதுகாப்புக்கும் இரு நாடுகளுக்கும் ஆகிற செலவைக் குறைத்து அமைதியை நிலைநாட்டவும் தேவையான அளவு விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.

சென்ற வாரம் கையப்பமான பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தின் வார்த்தை ஜாலங்களை நம்பி, முதலில் அமைதி நிலவட்டும்; அதன் பிறகு அரசியல் தீர்வு பற்றி ஆராயலாம் என்று காத்திருந்தால், அபாயம் அதிகரிக்கவே செய்யும். மாறாக, பாகிஸ்தானுடன் அரசியல் தீர்வு ஏற்பட்டால், அது தொடர்பான பயங்கரவாதத்துக்கு இடமில்லாமலே போகும். இதுவே இந்தியாவை அச்சுறுத்தும் இதர சில பயங்கரவாத அமைப்புகளை வெற்றி கொள்ளவும் உதவும்.

Posted in Agreement, Border, Editorial, Extremism, India, Kalki, Kashmir, Manmohan Singh, Musharaff, Op-Ed, Pakistan, Tamil, Terrorism | Leave a Comment »

CP Aathithanaar 102nd Anniversary Celebrations

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

சி.பா. ஆதித்தனார் 102-வது பிறந்த நாள் விழா: பேராசிரியர் மா.நன்னன், கவிஞர் முத்துலிங்கத்துக்கு ரூ.2.5 லட்சம் இலக்கியப்பரிசு நாளை வழங்கப்படுகிறது

சென்னை, செப். 26-

`தினத்தந்தி’ நிறுவனர், `தமிழர் தந்தை’ சி.பா. ஆதித்தனார் நினைவாக ஆண்டு தோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி ரூ.2 லட்சம் இலக்கியப்பரிசு வழங்கப்படுகிறது.

இதன்படி, மூத்த தமிழறிஞருக்கு ரூ.1 லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு `பெரும்புலவர்’ ப.அரங்கசாமிக்கு மூத்த தமிழறிஞர் விருதுக்கான ரூ.1 லட்சம் `பொற்கிழி’ வழங்கப்பட்டது.

டாக்டர் க.ப.அறவாணன் எழுதிய `தமிழர் அடிமையானது ஏன், எவ்வாறு‘ என்ற நூலுக்கு இலக்கியப்பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.வேங்கடசாமி இந்த பரிசுகளை வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான பரிசு பெறுவோர் விவரங்களை `தினத்தந்தி’ இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அறிவித்து உள்ளார்.

மூத்த தமிழறிஞர் விருது பேராசிரியர் முனைவர் மா.நன்னனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பட்டயத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் அவருக்கு வழங்கப்படுகிறது.

மா.நன்னன்

2006ம் ஆண்டுக்கான `சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது’ பெறுகிற பேராசிரியர் முனைவர் மா.நன்னன் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர். கடலூர் மாவட்டம் காவனூரில் 30-7-1923ல் பிறந்தவர். பெற்றோர்: மாணிக்கம்-மீனாட்சி அம்மாள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் `எம்.எல்’, `பி.எச்.டி.’ ஆகிய பட்டங்களும் பெற்றவர்.

எழுத்தறிவிக்கும் பணியை சென்னை தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் நடத்தினார். மலேசியாவில் உள்ள `வானவில்’ என்னும் தொலைக்காட்சியிலும், லண்டன் தொலைக்காட்சியிலும் எழுத்தறிவிக்கும் பணியை நடத்திப் புகழ் பெற்றார்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், பாட நூல்கள், துணைப் பாட நூல்கள் எழுதியவர். 1990ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 45 பல்சுவை நூல்கள் எழுதினார்.

தமிழிசைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டவர்.

கவிஞர் முத்துலிங்கம்

இந்த ஆண்டுக்கான இலக்கியப் பரிசை `கலைமாமணி’ கவிஞர் முத்துலிங்கம் பெறுகிறார். `காற்றில் விதைத்த கருத்து’ என்ற இவரது நூலுக்கு `தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் இலக்கியப் பரிசு (ரூ.1 லட்சம்) வழங்கப்படுகிறது.

சிறந்த கவிஞரும், திரைப்பட பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞருமான முத்துலிங்கம், 20-3-1942ல் சிவகங்கை மாவட்டம் கடம்பக்குடியில் பிறந்தார். பெற்றோர்: சுப்பையா சேர்வை-குஞ்சரம் அம்மாள்.

இவர் பாடல் எழுதிய முதல் படம் `பொண்ணுக்கு தங்க மனசு.’ திரைப்படத்துறையில் இவரை வளர்த்து விட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்.

கவிஞர் முத்துலிங்கம், திரைப்படங்களுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் எழுதி உள்ளார்.

`மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ’, `அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை,’ `காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து’, `சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூ விழியே’, போன்றவை, இவர் எழுதிய புகழ் பெற்ற பாடல்களில் சில.

கலைமாமணி விருது

`எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்’, `எம்.ஜி.ஆர். உலா’, `எம்.ஜி.ஆர். சந்ததி’, `முத்துலிங்கம் கவிதைகள்’ `காற்றில் விதைத்த கருத்து’ ஆகியவை இவர் எழுதிய நூல்கள்.

அரசவைக் கவிஞராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்து உள்ளார்.

கலைமாமணி விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றை பெற்றவர். சிறந்த திரைப்பட பாடலாசிரியர் விருதை இருமுறை பெற்றுள்ளார்.

102வது பிறந்த நாள்

நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் சி.பா.ஆதித்தனார் 102வது பிறந்த நாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், விழாவுக்கு தலைமை தாங்கி, விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.

தேர்வுக்குழு

இலக்கியப் பரிசுக்கு வந்த நூல்களைப் பரிசீலித்து பரிசுக்குரிய நூலைத் தேர்ந்து எடுக்க

  • சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.வி.மாசிலாமணி,
  • `இலக்கிய ஞானி’ வல்லிக்கண்ணன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது.

போட்டிக்கு வந்த நூல்களை அவர்கள் இருவரும் ஆய்வு செய்து கவிஞர் முத்துலிங்கம் எழுதிய `காற்றில் விதைத்த கருத்து‘ என்ற நூலை பரிசுக்குரியதாகத் தேர்வு செய்தனர்.

Posted in Aathithanaar, AR Lakshmanan, Awards, Celebrations, CP Aathithan, Daily Thanthi, Felicitation, Ka Pa Aravaanan, Literature, Ma Nannan, Maalai Malar, Muthulingam, Tamil, Thamizh, Thina Thanthi | Leave a Comment »

Congress & Communist Govt.’s Coordination Committee

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஒருங்கிணைப்புக் கமிட்டி

மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்தி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துள்ளார். நைனிதாலில் நடந்த காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இது சாத்தியமில்லை என்றார். கடந்த 2004-ல் தேசிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் அரசு அமைத்தபோது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர்.

இடதுசாரிகள் அரசுக்கு வெளியே இருப்பதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிக்க ஒருங்கிணைப்புக் கமிட்டி ஒன்று சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. இக் கமிட்டியில் இடதுசாரிகள் சார்பில் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறு பேர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது தேசிய முற்போக்குக் கூட்டணியும் இடதுசாரிகளும் அடங்கிய ஒருங்கிணைப்புக் கமிட்டி என்று தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது. இக் கமிட்டியில் தேசிய முற்போக்குக் கூட்டணியில் அடங்கிய இதர கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த சிலகாலமாகவே கோரி வருகிறது. கடந்த வாரம் டேராடூனில் நடந்த அக் கட்சியின் மாநாட்டில் இக் கோரிக்கை தீவிரமாக வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும் தேசிய முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதியாக விளங்க முடியாது என்று அக் கட்சி கூறியது.

ஆனால் மன்மோகன் சிங் அரசை ஆதரிக்கிற கட்சிகள் பலவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும்போது அக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இடம்பெறத் தேவையில்லை என்பது காங்கிரஸின் வாதமாகும். எனினும் பல முக்கிய விஷயங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகுதான் அவை அமைச்சரவையின் முன் வைக்கப்படுகின்றன. அவ்வித நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு ஆலோசனைகள் நடைபெற வழியில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிக்கப்பட்ட சில முடிவுகளைக் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக அரசு மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெய்வேலி நிறுவனப் பங்குகள் விவகாரத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம்.

எனினும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் ஒன்றுதான் தீவிரமாக வற்புறுத்தி வருகிறது. ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப்போல இரண்டு மடங்கு உறுப்பினர்களைக் கொண்ட பிற கட்சிகள் இக் கோரிக்கையை – குறைந்தபட்சம் பகிரங்கமாக எழுப்பவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக உள்ளது.

ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்துவது என்றால் அதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மன்மோகன் சிங் அரசை பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகளும் உண்டு. இக் கட்சிகளில் யாரைச் சேர்த்துக் கொள்வது, யாரை விடுவது என்ற பிரச்சினை உள்ளது.

இடதுசாரிகளைப்போலவே தாங்களும் வெளியிலிருந்து ஆதரிப்பதால் தங்களையும் அக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதிக் கட்சியும் மாயாவதிக் கட்சியும் கோரினால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது.

இடதுசாரிகளுடன் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டோம் என்று காங்கிரஸ் கட்சி வருந்தினாலும் வியப்பில்லை என்ற நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

Posted in Central, Coalition, Committee, Communist, Cong (I), Congress, Coordination, Government, India, NDA, Tamil, UDA | Leave a Comment »