Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 1st, 2006

Anger – Bust the fire

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

கோபம் என்னும் நெருப்பு

சூ . அ. செல்வநாதன்

காலை நேரம்! எல்லோருக்கும் நெருக்கடியான பொழுது அது! ரயில், பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு மூச்சுமுட்டும் நேரம்! இருவர் காரசாரமாக ஒருவரைப் பார்த்து ஒருவர் கத்திக் கொண்டிருந்தனர். அன்றாடம் இது சகஜம் என்பதுபோல சக பயணிகள் நின்று கொண்டிருந்தனர். இருவருக்கும் கோபப்பட ஏதோ காரணம் கிடைத்திருக்கும். கத்திக் கொண்டிருந்த இருவரும் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் ஒன்றும் நடவாததுபோல இறங்கி விறுவிறு என்று அவரவர் திசையில் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.

மனித மெய்ப்பாடுகளுள் ஒன்று கோபம். உணர்வுபூர்வமான விழிப்புணர்வு பெற்ற ஒருவனிடம் கோபம், பயம், கவலை, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இயல்பாக வெளிப்படுவதுண்டு. இங்கு சொல்லப்பட்ட முதல் மூன்றும் எதிர்மறையான குணங்களாகவும் கடைசி உணர்வு மட்டும் நேர்மறையானதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

உளவியலார் கோபத்தை இரண்டு வகையாகப் பாகுபடுத்துவர். முதல்வகை கோபத்தால், கோபப்படும் மனிதர் தன்னுடைய நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறார். அப்போது அவர் குரலை உயர்த்திப் பேசுகிறார்; கத்துகிறார்; கையில் கிடைக்கும் பொருள்களைக் கீழே வீசி உடைக்கிறார். அருகில் இருப்பவர் மனம் புண்படும்படி பேசுகிறார். தன்னுடைய கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். தன் பக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

இத்தகைய நபர், கோபப்படும்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இருதய நோய்க்கு வாய்ப்பு அதிகமாகிறது. ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது. மனஅழுத்தம் உண்டாகிறது. அவருடைய முக்கிய உறவுகளில்கூட விரிசல் ஏற்படுகிறது.

மற்றொரு வகையான கோபத்துக்கு ஆட்படும் மனிதர், கோபத்தை வெளிப்படுத்தாமல் தனக்குள்ளே மறைத்தும் புதைத்தும் கொள்கிறார். இதுவும் நல்லமுறையாகக் கருதப்பட மாட்டாது.

கோபம் வரும்போது அதனைக் கட்டுப்படுத்துவது எப்படி? கோபம் வரும்போது அதை நாம் உணர்ந்து கொள்ளப் பழக வேண்டும். அதுபோன்ற சமயத்தில் எதுவும் பேசாமல், எதுவும் செய்யாமல் இருக்க முயல வேண்டும். முடிந்தால் கோபப்பட வைத்த சூழ்நிலையிலிருந்து போய்விடுவது நல்லது. இத்தகைய சமயத்தில் தியானம் செய்யலாம். இஷ்ட தெய்வத்தை நினைத்து ஒரு மந்திரம் சொல்லலாம். கோபத்தைத் தணியச் செய்ய இது உதவும். உளவியல் அறிஞர் 1 முதல் 100 வரை எண்களைச் சொல்லச் சொல்கிறார்கள். குடத்திலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து ஒரு டம்ளர் குடித்தால் கோபம் தணிந்துவிடும் என்பர்.

கோபப்படுத்திய நபர் நமக்கு முன்பின் தெரியாதவராக இருந்தால் உடனே அதை மறந்து விடுவது மிகவும் நன்மையாக அமையும். தெரிந்த நபராக இருந்தால் சிறிது நேரம் கழித்து அவரிடம் சென்று நம்முடைய நியாயத்தை எடுத்துச் சொல்லலாம். நம்முடைய செயலால் அவர் காயப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்பது நம்முடைய உறவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் “”வகுப்பறையின் முகத்தில் ஒரு கீரலை உருவாக்க, பாடம் சொல்லித் தரும் பேராசிரியரின் முன்கோபம் போதும்” என்கிறார் டானியல் கோல்மன் என்ற அறிஞர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் வேலை பார்த்த அலுவலகத்தில் தன்னுடைய உயர் அதிகாரியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டோடு அப் பெண்மணி வீட்டுக்கு வந்தார். இரவு பன்னிரெண்டு மணி வரை அதிகாரி மீது தனக்கு இருந்த கோபத்தை வெளிப்படுத்தாமலே அமைதியாக இருந்தார். ஒரு வெள்ளைத்தாளை எடுத்தார். தன்னுடைய கோபத்தை அதில் கொட்டினார். நிம்மதியாகத் தூங்கினார். மறுநாள் அதைப் படித்துப் பார்த்தார். அது அழகான சிறுகதையாக இருந்தது. இன்று அவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர்.

வீடுகளில் பிள்ளைகள் படிக்காமல் சுட்டித்தனம் செய்து அடம்பிடிக்கும்போது பெற்றோர் அவர்கள் மீது கோபப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கோபத்தில் கையில் கிடைக்கும் பொருளால் கண்மண் தெரியாமல் அடித்துவிட்டு பிறகு உட்கார்ந்து அழும் பெற்றோரை என்ன சொல்வது?

உன் கோபம் நியாயமானது. அதை ஆக்கத்துக்குப் பயன்படுத்து என்கிறார் ஒரு கவிஞர். வரலாற்றில் கோபத்தால் அழிந்த சாம்ராஜ்ஜியங்கள் இன்னும் நம்முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

Posted in Anger Management, Angry, Behavior, Blood Pressure, BP, Dinamani, Philosophy, Philosphy, Pshychology, Tamil | Leave a Comment »

Four new Flyovers for Madras

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சென்னையில் 4 மேம்பாலங்கள்: மாநகராட்சியில் தீர்மானம்

சென்னை, செப். 1: சென்னையில் 4 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பணிகளுக்கு மாநகராட்சியின் நிலைக்குழு (பணிகள்) ஒப்புதல் அளிக்காததால் மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியது:

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள

  • வடக்கு உஸ்மான் சாலை-டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை (கோடம்பாக்கம் நெடுஞ்சாலை) சந்திப்பு,
  • பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை-டர்ன்புல்ஸ் சாலை சந்திப்பு,
  • கோமதி நாராயணா சாலை-திருமலை சாலை சந்திப்பு,
  • உஸ்மான் சாலை-துரைசாமி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இத்திட்டத்துக்கு மன்றத்தின் அனுமதி வேண்டி முதலில் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பல்வேறு காரணங்களைக்கூறி இத்திட்டத்துக்கு நிலைக்குழுவினர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல் கடிதங்கள் அனுப்பியும் இதற்கான ஒப்புதல் தர நிலைக்குழுவினர் மறுத்து வந்தனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மாநகராட்சி மேயரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை மன்றக்கூட்டத்தில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதிகளில் ரூ. 58.52 கோடியில் மேம்பாலங்கள் அமைக்க மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இப்போது தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் ராஜா சர் முத்தையா செட்டியார், மேயராக பணியாற்றிய எஸ். சத்தியமூர்த்தி ஆகியோர் பிறந்த நாள் விழாக்களை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனக்கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பெருங்குடியில் மக்காத குப்பைகளில் இருந்து ரூ. 20 கோடியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார் கராத்தே தியாகராஜன்.

அரசுக்கு நன்றி: மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சி.வி. மலையன் (திமுக) பேசியது:

சென்னையில் பல்வேறு வெள்ளத்தடுப்புப் பணிகள், மேம்பாலங்கள், பூங்காக்கள், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்பட கடந்த 4 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முன் வந்துள்ளது என்றார்.

இதற்காக, தமிழக முதலமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Posted in 4, Chennai, CV Malaiyan, Flyovers, Four, Karate Tyagarajan, Madras, Mayor, MK Stalin, MLC, Rippon Building, Tamil, Thyagarajan | Leave a Comment »

Life sentence convicts released on Anna Birthday – Attorneys Welcome

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

10 ஆண்டுகள் முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை: வழக்கறிஞர் சங்கம் நன்றி

சென்னை, செப்.1: 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் கைதிகள் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்பு கைதிகள் மறுவாழ்வு பெறுவதற்கும் அவர்கள் குடும்பத்தினர் நன்மை அடையவும் உதவும் என்று சங்கச் செயலாளர் மோகனகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in Anna, Association, Attorneys, Birthday, Chennai, CM, Convicts, Free, Highcourt, Karunanidhi, Lawyers, Life sentence, MK, Prisoners, Tamil | 2 Comments »

Legislative & Rural Village Libraries – Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

படிப்போர் இருந்தும் பயன்படா நிலையில் 10 லட்சம் புத்தகங்கள்: தமிழகத்தில் காணாமல் போன 12,700 நூலகங்கள்!

வீர.ஜீவா பிரபாகரன்

மதுரை, செப்.1: தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 12,700 நூலகங்களைத் தற்போது காணவில்லை.

புத்தகம் படிக்கும் ஆர்வத்தைக் கிராமப்புற மக்களிடம் வளர்க்க 2000-ம் ஆண்டில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதி 12,787 கிராமங்களில் அய்யன் திருவள்ளுவர் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறு, ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான நூலகங்களைத் திறந்த தமிழக அரசின் சாதனையைப் புத்தக விரும்பிகள் அனைவரும் உலக சாதனையாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.

இந்த நூல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 75 நூல்கள் வீதம் 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையங்கள் ஊராட்சி அலுவலங்களின் ஒரு பகுதியில் செயல்படும் என அரசு அறிவித்தது. மேலும் இங்கு வரும் வாசகர்கள் அமர்ந்து படித்து செல்ல மேஜை, நாற்காலிகளும் வழங்கப்பட்டன. பல ஊராட்சிகளில் புத்தகங்களை வைக்க போதிய கட்டடம் இல்லை.

தொடக்க காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் பொதுமக்கள் நேரில் வந்து புத்தகங்கள் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும் உரிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

பின்னர் ஊராட்சித் தலைவர்கள் எப்போது வருவார்களோ அப்போது மட்டும் இந்த நூலகங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டது. இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

இதையடுத்து, நூலகத்திற்கு வழங்கப்பட்ட மேஜை, நாற்காலிகள் ஊராட்சி நிர்வாகப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.

நூல்கள் அனைத்தையும் சாக்கில் கட்டிவைத்துவிட்டு, புத்தகங்கள் வைக்கும் “ரேக்’கை, அலுவலக கோப்புகள் வைப்பதற்கே பெரும்பாலான ஊராட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.

தற்போது மாவட்டத்திற்கு ஒரு சில ஊராட்சிகளில் மட்டும் அறிவொளி இயக்கத்தினர், தன்னார்வ அமைப்பினர், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மூலம் இந்த நூல் நிலையங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த நூல் நிலையங்கள் காணாமல் போய்விட்டன.

ஊராட்சித் தலைவர்கள் சிலரிடம் இது குறித்து கேட்டபோது:

“அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையத்தை நிர்வகிக்க ஊராட்சியில் தனியாக ஆள் இல்லை. மேலும், ஒரு முறை நூல்கள் கொடுத்ததுடன் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. ஆண்டுக்கு 50 நூல்கள் வீதம் அளித்திருந்தால்கூட, இந்த நூல்நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டிருக்கும்’ என குறிப்பிட்டனர்.

கிராமப்புற இளைஞர்கள் பலரிடம் பேசியபோது,” நல்ல புத்தகங்களைப் பேசும் தெய்வம் என்று வாசகர்கள் கருதுவது உண்டு. அவ்வாறு, நற்சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும், பொது அறிவு புத்தகங்களையும் அய்யன் திருவள்ளுவர் நூல்நிலையங்களுக்குத் தொடர்ந்து அளிக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நூலகம் இல்லா கிராமம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும்’ என்றனர்.

குறைபாடுகள் இருப்பினும் இந்தக் கிராமப்புற நூல் நிலையங்கள் முழுமையாக மலரத் துடிக்கும் வாச மலர்களாகவே உள்ளன. இவை மலருமா ? என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

Posted in Books, Library, MLC, Publishers, Readers, Rural, Suburban, Tamil, Tamil Nadu, Thiruvalluvar, TN | Leave a Comment »

Satellite City near Chennai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

 சென்னை அருகே துணை நகரம் அமைய உள்ள உத்தேச பகுதி

Posted in Chennai, CM, Karunanidhi, Kelambakkam, Madras, Mamallapuram, proposal, Ramadoss, Satellite City, Tamil, Tamil Nadu, TN, Vandalur | Leave a Comment »

17 Volunteers of Action Against Hunger Killed – Responsible Party

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு

இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.

இந்த விவகாரத்தினை வெளிநாட்டமைச்சும், சமாதான செயலகப் பணியகமும் கையாளவுள்ளது என்றும் ஐ.நா வின் இந்த நிலைப்பாடு குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் கருத்துக்களைப் பற்றிக் அரசின் கருத்தினைத் தெரிவிப்பதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. என்று அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, பிரேத பரிசோதனையை நடத்திய அனுராதபுரம் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இந்த 17 பேரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி பிற்பகலோ அன்றி 4 ஆம் திகதி அதிகாலையோ தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இக்காலப்பகுதியின் போது மூதூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது என்றும், 5ஆம் திகதி தான் இராணுவம் அப்பகுதிகளை மீளவும் கைப்பற்றியது என்றும் கூறினார்.

Posted in 17, Action Against Hunger, Anuradhapuram, August 4, Ceylon, Eelam, Eezham, France, JVP, LTTE, Moodhur, Moodoor, Moothur, Party, Prabhakaran, Responsible, Sri lanka, Srilanka, Tamil, Triconamalee, Volunteering | Leave a Comment »

Govt. should not give aid to Haj Pilgrims – Allahabad Highcourt

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

மெக்கா செல்ல அரசு நிதியுதவி கொடுக்க கூடாது – இந்தியாவின் அலஹாபாத் நீதிமன்றம்

புனித மெக்கா மசூதி
அரசு நிதியுதவி வழங்க கூடாது என பலகாலமாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன

இஸ்லாமியர்களின் புனிதத்தலமாகக் கருதப்படும் மெக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சுமார் எண்பதாயிரத்துக்கும் அதிகமான முஸ்லீம்கள், இந்திய நடுவணரசின் ஏற்பாட்டின் ஊடாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களின் இந்த ஹஜ் புனித யாத்திரைக்காக இந்திய நடுவணரசு, ஆண்டுக்கு சுமார் 180 கோடி ரூபாய் மானியமாக அளித்துவருகிறது.

இந்த மானியம் அளிக்கப்படுவதை பாரதிய ஜனதா உள்ளிட்ட ஹிந்துத்துவ அமைப்புகள் பலகாலமாகவே எதிர்த்துவருகின்றன. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில், மதசார்பற்ற நாடாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள இந்திய அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களின் மதக்கடமையை நிறைவேற்றுவதற்கு நிதி உதவிசெய்வது தவறு என்பது இவர்களின் வாதமாக இருந்துவருகிறது.

ஹஜ் யாத்திரைக்கு அளிக்கப்படும் இந்திய நடுவணரசின் மானியத்தை நிறுத்தவேண்டும் என்று கோரி, உத்திரபிரதேசத்தின் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 தீர்ப்பு தொடர்பாக இந்திய நடுவணரசும் உத்திரப்பிரதேச அரசும் ஆறு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்

 

அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள்

ஹஜ் உள்ளிட்ட, அனைத்து மத யாத்திரைகளுக்கும் இந்திய நடுவணரசு சார்பில் நிதி உதவி எதுவும் செய்யப்படக்கூடாது என்று, தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், தங்களின் இந்த தீர்ப்பு குறித்து, உத்திரப்பிரதேச அரசும், இந்திய நடுவணரசும் ஆறுவார காலத்திற்குள் தங்கள் தரப்பு கருத்துக்களை நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பு முஸ்லீம் கட்சிகள் மத்தியிலும், முஸ்லீம் அமைப்புகள் மத்தியிலும் பரவலான அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. இந்த பின்னணியில், இந்த தீர்ப்பை பற்றி முஸ்லீம் தரப்பு கருத்துகளை தமிழோசையிடம் விளக்கினார், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜெவாஹிருல்லாஹ்.

Posted in Aid, Allahabad, BJP, Financial Support, Haj, Hindutva, India, Islam, Jawahirullah, Justice, Mecca, Medina, Muslim, Pilgrims, Secular, Tamil | Leave a Comment »

New Trustees for Thirumala Thirupathy Devasthanam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு பதவியேற்பு

நகரி, செப். 1: திருப்பதி தேவஸ்தான புதிய ஆறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 10 பேர் அண்மையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.

தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி நாராயணசர்மா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மத்திய அமைச்சர் டி. சுப்புராமி ரெட்டியை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து திருப்பதி பூமன் கருணாகரரெட்டி குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாதாரண பக்தர்களின் வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வி.ஐ.பி பக்தர்களின் தரிசனத்தை முறைப்படுத்தவேண்டியுள்ளதாகவும் பூமன் கருணாகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அலிபிரி அருகிலிருந்து திருமலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி முதல்வர் ராஜசேகரரெட்டியிடம் கேட்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேவஸ்தான ஊழியர்கள் போராட்டம் நடத்தியது நியாயமானது என்றும் விரைவில் அக்குறைகள் தீர்த்துவைக்கப்படும் என்றார்.

Posted in Andhra, AP, Devasthanam, Devaswom, Tamil, Thirumala, Thirupathi, Tirupathy, Trustee, TTD | Leave a Comment »