Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 25th, 2006

Dhal Prices increase in Tamil Nadu too due to Online Trading

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு

கே.வாசுதேவன்

திருநெல்வேலி, செப். 26: தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது. தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருக்கிறது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பொருளின் மதிப்பில் 4 -ல் ஒரு பங்கு பணத்தை செலுத்தினாலே அந்த பொருளை வாங்குபவர் தனக்குரியதாக்கி விடலாம். அதாவது ரூ.1 கோடி மதிப்புள்ள பொருளுக்கு ரூ.25 லட்சம் செலுத்தினாலே அந்த பொருளை வாங்கி விடலாம். இதில் அந்த பொருளை வாங்கியவர், அடுத்தவருக்கு அந்த பொருளை விற்கும்போது தான் அந்த பொருளுக்குரிய முழு பணத்தையும் கொடுக்கின்றார்.

இதையே பெரிய வியாபாரிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்களை சில லட்சங்களை மட்டும் செலுத்தி அந்த பொருளை குடோன்களை விட்டு வெளியேறி விடாதவாறு செய்து விடுகின்றனர். இதேபோல் பல வியாபாரிகள் செய்வதினால் அந்த குறிப்பிட்ட பொருள் சந்தைக்கு வராமல் விலை கடுமையாக உயருகிறது.

இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அத்தியாவசிய பொருள்களின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

பருப்பு வகைகள்

ஆன் லைன் வர்த்தகத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது பருப்பு வகைகள் தான். ஜூலை மாதத்துக்கு முன்பு வரை கிலோ கடலை பருப்பு ரூ. 34 இருந்தது தற்போது ரூ. 45 ஆக உயர்ந்து உள்ளது. இதே போல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு என்று அனைத்து ரகங்களுமே கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளன.

வட மாநிலங்களில் அதிக மழை பெய்ததினாலும் பொதுவாக இந்த மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு பருப்புகளின் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆன்லைன் வர்த்தகம் தான் என்கிறார் திருநெல்வேலியை சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரி.

இதில் அந்த பொருள் வைத்திருந்த காலத்திற்காக போடப்படும் வட்டி நுகர்வோரிடம் இருந்தே மறைமுகமாக வசூலிக்கப்படுகிறது.

ஆன் லைனால் பருப்பின் விலை உயர்ந்தது போல், தற்போது சீரகம், பூடு, மைதா, ரவை, கடலை மாவு போன்ற பொருள்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இதில் கடலை மாவு கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50 ஆக விலை உயர்ந்து இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏழை மக்கள் மேலும் ஏழையாக்க படுவதை தடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

அன்புள்ள ஆசிரியருக்கு…: ஆன்லைன் வர்த்தகம்

“ஏறினால் இறங்குவதில்லை’ – தலையங்கம் (17-2-07) படித்தேன்.

பயறு வகைகள் விளைச்சல் முடிந்து, அறுவடையாகி, வழக்கமாக பிப்ரவரி மாதத்திலேயே விற்பனைக்குக் கடைகளுக்கு வருவது வழக்கம். அப்போது பயறு விலை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த ஆண்டு விலை குறையாததற்கு வடமாநிலங்களில் பெய்த பெருமழையில் பயிர்கள் சேதமடைந்துவிட்டதே காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த ஆண்டு கனமழை இல்லை. பயிர்களும் சேதமடையவில்லை. அப்படி இருந்தும் விலை குறையவில்லை. எனவே பயறு வகைகள் விலை உயர்வுக்கு ஆன்லைன் வர்த்தகமே காரணம் என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் “ஏறிய விலைகள் இறங்கலாம்’.
கே. சிங்காரம், வெண்ணந்தூர்.

முன்பேர வர்த்தக தடை எதிரொலி: கோதுமை விலை சரிவு; அரிசி விலை மாற்றமில்லை
புதுதில்லி, மார்ச் 2: கோதுமை முன்பேர வர்த்தகத்துக்கு மத்திய அரசு விதித்த தடையைத் தொடர்ந்து, கோதுமை விலை குறையத் தொடங்கியுள்ளது.

முன்பேர வர்த்தகத்தில் அரிசி பரிவர்த்தனை குறைவு என்பதால், அரிசி விலை மாற்றமின்றி அப்படியே நீடிக்கிறது என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலைகளுக்கான தாரா கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1020 -ரூ.1035-ல் இருந்து, ரூ.1000 -1005 ஆகக் குறைந்தது. நாட்டு கோதுமை விலை குவிண்டாலுக்கு ரூ.1390 -ரூ.1590-ல் இருந்து ரூ.1200 -ரூ.1,550 ஆகக் குறைந்துள்ளது.

முன்பேர வர்த்தகத் தடையைத் தொடர்ந்து, இருப்பு வைத்திருப்பவர்களிடம் இருந்து, கோதுமையை வாங்குவதில் மாவு மில்களிடையே சுணக்கம் ஏற்பட்டதால் விலை குறையத் தொடங்கியுள்ளது.

Posted in Collars, Commodities, Contracts, Deflation, Dhal, Exchanges, Futures, Globalization, Grams, Impact, Increases, Inflation, Monetrary, Online, Options, Price, Recession, rice, Tamil, Tamil Nadu, TN, Trade, Trading, Wheat | 1 Comment »

Local Body Elections – Kirishnasaamy announces District based Congress Decision Leaders

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட வாரியாக காங். தேர்தல் குழு- கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை, செப். 23-

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் இட பங்கீடு குறித்து பேசி முடிவு எடுக்க வும் காங்கிரஸ் சார் பில் போட்டியிட விரும்பு கிறவர்களிடம் மனுக்களை வாங்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் தேர்தல் குழுவை கிருஷ்ணசாமி அமைத்துள்ளார்.

அந்த தேர்தல் குழு விவரம் வருமாறு:-

சென்னை

ஜெயந்தி நடராஜன், கே.விஜயன், கராத்தே தியாகராஜன், எம். ஜோதி, ஆர்.தாமோதரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் மங்கள் ராஜ், மாவட்டத் தலைவர் மனோ, மாவட்ட தலைவர் எம்.கோவிந்தசாமி.

திருவள்ளூர்

டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இ.எஸ்.எஸ்.ராமன் எம்.எல்.ஏ., வி.ஆர்.பகவான், கீழானூர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் கொப்பூர் பி.விஜய குமார், மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.கே.மனோகரன், பூதூர் வேணுகோபால், டி.செல்வம், தளபதி பாஸ்கர்.

காஞ்சீபுரம்

டி.யசோதா எம்.எல்.ஏ., முன் னாள் எம்.எல்.ஏ. பலராமன், டாக்டர் காயத்ரிதேவி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வி.அண்ணா துரை, மாவட்ட தலைவர் கே.சக்கர பாணி ரெட்டியார், ஜெ.பிராங்க் ளின் பிரகாஷ்.

வேலூர்

முன்னாள் எம்.பி. அன்பரசு, சி.ஞானசேகரன் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், மாவட்ட பொறுப்பாளர் ஆற்காடு பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன்.

திருவண்ணாமலை

போளூர் வரதன் எம்.எல்.ஏ., டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ராஜாபாபு.

கடலூர்

முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல்பெருமான், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்ட தலைவர் சச்சிதானந்தம், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், சந்திரகோதண்டபாணி, விஜயசுந்தரம், ஜி.சவுந்தரபாண்டி யன்.

விழுப்புரம்

முன்னாள் எம்.எல்.ஏ. டி.என். முருகானந்தம், எஸ். சிவராஜ் எம்.எல்.ஏ., சங்கரா புரம் கே.சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் ஜெய அண் ணாமலை, முன் னாள் எம்.எல்.ஏ. துரை.முத்துசாமி, எஸ்.காமராஜ், டி.வி.தட்சிணாமூர்த்தி, வக்கீல் பார்த்தசாரதி, எஸ்.சீத்தாராமன்.

கிருஷ்ணகிரி

கே.வி.தங்கபாலு எம்.பி., கே.கோபிநாத் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர் காசிலிங் கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஒசூர் மனோகரன், அகா.கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் எம்.பி., எஸ்.நரசிம்மன், குமரேசன், நெடுங்கல் எஸ்.சுப்பிரமணியம்.

தருமபுரி

ஜி.ஏ.வடிவேலு, மாவட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. பி.தீர்த்தராமன், ராஜாராம் வர்மா, வக்கீல் மோகன்.

நாமக்கல்

டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., கே.ராணி எம்.பி., மாவட்ட பொறுப்பாளர் செல்வ ராஜ், வி.பி.வீரப்பன், டாக்டர் செழியன், ஜி.ஆர்.சுப்பிரமணி, முன்னாள் சேர்மன் ஆர்.நல்லதம்பி.

சேலம்

கே.வி.தங்கபாலு எம்.பி., மாவட்டத் தலைவர் எஸ்.டி.பன் னீர்செல்வம், மாவட்ட தலைவர் ஆர்.தேவதாஸ், மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.சேகரன், என்ஜினீயர் மாரியப்பன், எம்.பி.எஸ்.மணி, முகமது அம்சா, எம்.ஆர்.ராதா கிருஷ்ணன்.

ஈரோடு

மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி எம்.எல்.ஏ., விடியல் சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட பொறுப்பாளர் கல்லுப் பட்டி பாலசுப்பிரமணியம், என்.ஆர்.திருவேங்கடம், பிரகாஷ் ஜெயின்.

நீலகிரி

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு, மாவட்டத் தலைவர் கோபால் எம்.எல்.ஏ., ஜே.பி.சுப் பிரமணியம், கோஷி பேபி,
ஆர்.கணேஷ்குமார்.

கோவை

ஆர். பிரபு எம்.பி., முன் னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் கோவை தங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.லட்சுமணன், எம்.என்.கந்தசாமி, தாராஷபி, மாவட்டத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் பி.வி.மணி, கோவை முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், எம்.ராமானுஜம், மணிகண்டபிரசாத், வேடப்பட்டி தங்கவேல், ஏ.ஆர்.சின்னையன், எம்.ராமானுஜம்.

திண்டுக்கல்

எஸ்.கே.கார்வேந்தன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாள், மாவட்ட தலைவர் தண்டபாணி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் வி.திருஞானசம்பந்தம், சிவசக்திவேல் கவுண்டர், வி.எஸ்.மனோகரன், சலீம்சேட், எம்.மாடசாமி.

விருதுநகர்

முன்னாள் எம்.பி. குமரிஅனந்தன், மாவட்ட தலைவர் ஜி.கணேசன், ராஜலிங்கராஜா, ஆர்.குருசாமி, எஸ்.எஸ்.மோகன்.

தேனி

ஜே.எம்.ஆரூண் எம்.பி., மாவட்ட தலைவர் கே.எஸ்.எம்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், என்.ஆர்.அழகர்ராஜா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஈஸ்வரதாஸ், தேனி பரமராஜ், முபாரக்.

மதுரை

என்.எஸ்.வி.சித்தன் எம்.பி., முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, மாவட்ட தலைவர் ஏ.தெய்வநாயகம், ஜி.தேவராஜன், மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராம்குமார் மாவட்ட தலைவர், கோவிந்தராஜ் ஐ.என்.டி.யு.சி., சுந்தரராஜன், விஸ்வநாதன், மேலூர் சந்தானம், ஜெய்ஹிந்த்புரம் முருகன்.

பெரம்பலூர்

ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் டி.அமரமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, ஆண்டிமடம் தங்கராஜ்.

கரூர்

முன்னாள் எம்.பி.க்கள் என்.அப்துல்காதர், கே.நாட் ராயன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், சிவசுப்பிரமணி யம் எம்.எல்.ஏ.

திருச்சி

முன்னாள் எம்.பி. அடைக் கலராஜ், மாவட்டத் தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், எம்.ராஜசேகரன் எம்.எல்.ஏ., எம்.கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள், சுப.சோமு, டால்மியா ஜெயப்பிரகாஷ், போட்டோ சரவணன்.

தஞ்சாவூர் மாவட்டம்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன், ஜி.ரங்கசாமி மூப்பனார், கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட தலைவர்கள் என்.ராஜாங் கம், நாஞ்சி கே.வரத ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பேராவூரணி சிங்காரம், முன்னாள் எம்.எல்.ஏ. கட்டாரம் மாரிமுத்து,
டி.ஆர்.லோகநாதன்.

திருவாரூர்

முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. டாக்டர் பத்மா, மாவட்ட பொறுப்பாளர் துரைவேலன், மன்னை
மதியழகன்.

நாகப்பட்டினம்

மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், எஸ்.ராஜ்குமார் எம்.எல்.ஏ., பொன்.பழனிவேல், எஸ்.ஜெய பால்.

புதுக்கோட்டை

பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி., ஏ.சுப்புராம் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் டி.புஷ்பராஜ், சத்தியமூர்த்தி.

சிவகங்கை

மத்திய மந்திரி ப.சிதம்பரம், என்.சுந்தரம் எம்.எல்.ஏ, கே.ஆர்.ராம சாமி எம்.எல்.ஏ , எம்.ராஜ ரத்தினம், முன்னாள் எம்.பி. சுப.உடையப்பன், கே.கே.காசி லிங்கம்.

ராமநாதபுரம்

சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., ராம்பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, அசன் அலி எம்.எல்.ஏ., செல்லத்துரை அப்துல்லா, மகேந்திர பாண்டியன், செந் தாமரைக் கண்ணன்.

திருநெல்வேலி

எஸ்.பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., பி.வேல்துரை எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் கொடிக் குறிச்சி முத்தையா , மோகன் குமாரராஜா, எஸ்.சுந்தர ராஜ பெருமாள், வேணுகோபால்.

தூத்துக்குடி

ஏ.பி.சி.வி.சண்முகம், ராணி வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர்கள் எஸ்.ஜஸ்டின், பி.கதிர்வேல்.

கன்னியாகுமரி

முன்னாள் எம்.பி. டென் னிஸ், மாவட்ட தலைவர்கள் எஸ்.ஜெயபால் எம்.எல்.ஏ., ஜே.ஜி.பிரின்ஸ், ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., ஜி.கே.தாஸ், டி.கே.ஜோஸ், டாக்டர் மோசஸ்.

இந்த மாவட்ட தேர்தல் குழு வினர் அந்தந்த மாவட்டத்திற் கான தி.மு.க. தேர்தல் குழுவோடு இட பங்கீடு குறித்து பேசி முடிவெடுப்பார்கள்.

மேலும் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கும் காங் கிரஸ் சார்பில் போட்டி யிட விரும்புவோரிடம் இருந்து மனுக்களைப் பெற்று ஏற்கனவே மாவட்ட தலைவர்கள் வாங்கி உள்ள மனுக்களையும் சேர்த்து அவற்றை தலைமை அலுவல கத்தில் ஒப்படைப்பார்கள்.

பரிசீலனைக்குப் பிறகு வேட்பாளர்களை தலைமை அலுவலகம் அறிவிக்கும் என்று கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.

Posted in Cong(I), Congress (I), Districts, Elections, Factions, Groups, Kirishnasaamy, Krishnasamy, Krishnaswamy, Leaders, Local Body, Polls, Tamil, Tamil Nadu | Leave a Comment »

Thanksgiving to Karunanidhi – Tamil Cinema Artistes Celebrate Tax-free Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ரஜினி, கமலஹாசன் பங்கேற்பு

சென்னை, செப். 23-

கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் திரைப்படத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

ராஜாஜி மண்டபத்துக்கான படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தார். ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழில் பெயர்சூட்டப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று மேலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து திரையுலகினர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கின்றனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கிறது. மராட்டிய மாநில கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகள் விழாவில் பங்கேற்கிறார்கள். டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கருணாநிதி உருவப்பட பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ரத்து: நடிகர், நடிகைகள் 2 மணி நேர கலை நிகழ்ச்சி

திரையுலகம் சார்பில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா நடப்பதையொட்டி 2 நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் நேற்று சென்னை திரும்பினார்கள். மேடையில் பலர் நடனமாட இருப்பதால் மாலை நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பிரபல நடன இயக்குனர்கள் பயிற்சி அளித்தார்கள். கருணாநிதி பராசக்தி படத்தில் எழுதிய கா…கா…கா… உள்ளிட்ட பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பாடப்படுகிறது.

கருணாநிதியை பாராட்டி கவிஞர்கள் வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த பாட்டுக்கு பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருக்கிறார்கள். அந்த பாட்டுக்கு நடிகர்கள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள்.

இசையமைப்பாளர்கள் தேவா, சபேஷ்- முரளி ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல பின்னணி பாடகர்கள் மேடையில் தோன்றி பாடுகிறார்கள்.

நடிகர்கள் சிம்பு, பிரசாந்த், அப்பாஸ், பிரகாஷ்ராஜ், கார்த்திக், ஜீவா, ஜெயம்ரவி, மாதவன், ஸ்ரீகாந்த், பரத், `ஜித்தன்’ரமேஷ், சிபிராஜ், பிரசன்னா, ஆர்யா, நடிகைகள் அசின், சதா, ஸ்ரேயா, ரீமா சென், `உயிர்’சங்கீதா, மும்தாஜ், பூஜா, அபர்னா, லட்சுமிராய், தியா, சிந்து துலானி, ரகசியா, தேஜாஸ்ரீ, பத்மபிரியா, பாவனா, சமிக்ஷா ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

சித்திரம் பேசுதடி படத்தில் பிரபலமான வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டுக்கு நடிகை ரசியா நடனம் ஆடுகிறார். சிவகாசி படத்தில் இடம்பெற்ற “வடுமாங்கா” பாட்டுக்கு லட்சுமிராய் ஆடுகிறார். 4 ஸ்டூடன்ஸ் படத்தில் இடம் பெற்ற லஜ்ஜாவதியே பாட்டுக்கு பரத் ஆடுகிறார். நடன குழுவினருடன் நடிகர் சிம்பு லூசு பெண்ணே என்ற பாட்டுக்கு ஆடுகிறார். நமீதாவும் ஆடுகிறார்.

பாக்யராஜ், வடிவேலு, விவேக், நெப்போலியன், தியாகு, அலெக்ஸ் ஆகியோரின் நகைச்சுவை நாடகமும் இடம் பெறுகிறது.

டைரக்டர் சீமானின் புதுமை நாடகமும், 100 குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு வரவேற்பு நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

கலைநிகழ்ச்சிகள் மாலை 5 மணியில் இருந்து 7.30 மணி வரை 2 மணி நேரம் நடக்கிறது.

Posted in Actors, Actresses, Artistes, CM, Film, Kamal, Karunanidhi, Kollywood, Movies, nadigai, nadigar, Rajni, Tamil, Tamil Nadu, Tax | Leave a Comment »

Tamil Cine Artistes Association Felicitation for Chief Minister of Tamil nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

`திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை, செப்.24-

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இங்கே கமலஹாசன் பேசும்போது கலைஞருக்கு ஞாபக சக்தி அதிகம் என்று சொன்னார். உடனே கலைஞர் என் காதில் எனக்கு ஞாபக சக்தி குறைவுதான் என்றார். அதனால்தான் கலைஞர் இந்த பாராட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியில் இருக்கும் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். திட்டுகிறார்கள். அவர்களுக்கு சினிமாவில் நன்றாக இருக்கும் பத்து பேர்களைத்தான் தெரிகிறது. சிரமப்படுகிற, கஷ்டப்படுகிற பத்தாயிரம் பேர்களை தெரியவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்படும் 10 பேர்களில் கூட உண்மையாகவே நன்றாக இருப்பவர்கள் 5 பேர்கள்தான். சினிமாவில் கொடிகட்டி பறந்த மிகப்பெரிய மனிதர்களெல்லாம் இப்போது எங்கே? மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, விஜயா வாஹினி, மேகலா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் எங்கே? எத்தனை பெரிய தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் முகவரி தெரியாமல் போய் விட்டார்கள். நான் எல்லாம் எம்மாத்திரம்?

அமிதாப்பச்சன் வீடு ஏலத்துக்கு வந்தது. சோப்ராவிடம் அவர் வாய்ப்பு கேட்டு போனார். அவருக்கே இந்த நிலை என்றால் ரஜினி மாதிரி ஆளெல்லாம் எந்த மூலைக்கு?

தாய்க்கு கூட குழந்தை அழுதால்தான் பால் கொடுக்க தெரியும். ஆனால் குழந்தை அழாமலே இந்த தாய் (கருணாநிதி) பால் கொடுத்து இருக்கிறார். இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.

அரசியல்வாதிகளுக்கே 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜாதகம் மாறும். ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம் மாறும். திரையுலகுக்கு பல சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு லட்சம் முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

“இங்கே வைரமுத்து பேசும்போது கலைஞர்தான் சூரியனை தட்டி எழுப்புகிறார்” என்று கூறினார். நீண்ட நேரம் பேசி இதை நான் பொய்யாக்கி விடக்கூடாது. அவருக்குத்தான் காலையில் எழுந்ததும் அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்ப வேண்டிய கடமை இருக்கிறது. அவருக்கு இன்று திருமண நாள் என்று சொன்னார்கள். திருமண நாளும் அதுவுமாக அவருடைய தூக்கத்தை நாம் கெடுக்கக் கூடாது.

கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருந்திருக்கிறார். இன்னும் கால் நூற்றாண்டு காலம் அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

டைரக்டர் கே.பாலசந்தர் பேசுகையில், கலைஞர் நூறு ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கூறினார்.

டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:-

சில விழாக்கள் சில நேரங்களில் சம்பிரதாயத்துக்காக நடைபெறுவதுண்டு. ஆனால் இந்த விழா ஆத்மார்த்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்த விழா. 35 ஆண்டுகளாக தமிழகத்தை திரையுலகம் ஆட்சி செய்து இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த முதல்வரும் இத்தனை சலுகைகளை அளித்ததில்லை.

`இளம் கன்று பயம் அறியாது’ என்று சொல்வார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசியதுண்டு. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு தாய்ப்பசுவாக இருந்து பாலூட்டியவர் கருணாநிதி. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நான் சில சமயங்களில் உங்களுடன் முரண்பட்டு இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் முட்டி மோதிக் கொண்டதில்லை.

நீர் உள்ள அளவும், நிலம் உள்ள அளவும், நீங்கள் நீடூழி வாழ வேண்டும். தமிழ் இனத்தையும், மொழியையும் பாதுகாப்பதற்கு உங்களை விட்டால் வேறு யாருமில்லை.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

டைரக்டர் ஷங்கர் இங்கே பேசியபோது இரண்டரை மணி நேரம் திரையை ஆளுவதற்கு நாங்கள் திணறுகிறோம். ஐந்தாண்டு கால ஆட்சியை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டார். அறுபது ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் வரலாற்றை கட்டிக்காத்த புகழ் கலைஞர் ஒருவருக்குத் தான் உண்டு. தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் பல முதல்-அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். கலைஞருக்கு பின்னாலும் பல நூறு முதல்-அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட ஒரேயொரு கலைஞர் இவர்தான். எங்களுடன் நீங்கள் இருந்து தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு நன்றி.

கலைஞருக்கு சிவாஜிக்காக நாலு பக்கங்களில் வசனமும் எழுத தெரியும். எம்.ஜி.ஆருக்காக 4 வார்த்தைகளில் வசனமும் எழுத தெரியும். 83 வயதில் இந்த உற்சாகம், இந்த ஆற்றல், இந்த சுறுசுறுப்பு அவருக்கு எப்படி வந்தது? என்று எல்லோரும் கேட்கிறார்கள். சிலருக்கு பணம் ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பதவி ஒரு நோக்கமாக இருக்கும். சிலருக்கு பெண் ஒரு நோக்கமாக இருக்கும். அளவுக்கு மீறி பணம் வரும்போது அந்த பணத்தின் மீது வெறுப்பு வரும். பதவியும் ஒரு கட்டத்தில் அலுத்துப் போகும். மனமும், உடலும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் பெண்ணாசையும் வெறுத்து விடும். ஆனால் கலைஞர் அவர்களுக்கு லட்சியம், இனம், மொழி ஆகியவையே நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் அவர் இன்னும் இளமையுடன் காணப்படுகிறார்.

அதிகாலை 5 மணிக்கு எழுகிற ஒரே முதல்-அமைச்சர் கலைஞர்தான். அவர்தான் பல அமைச்சர்களையும், கலெக்டர்களையும் தட்டி எழுப்புகிறார். சூரியனையே தட்டி எழுப்புபவர் இவர்தான். சூரியனை தட்டி எழுப்பி தமிழகத்தை விழித்திருக்க வைத்த சூரியனுக்கு சூரியன் இவர்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நடிகர் விஜய் பேசியதாவது:-

சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை போன்ற படங்களில் கலைஞரின் வசனத்தை நான் பேசி நடித்திருக்கிறேன். சமீபத்தில் அவருடைய வசனத்தில் நான் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அதற்குள் அவர் முதல்-அமைச்சராகி விட்டார். எந்தவொரு விழாவில் அவரை சந்திக்கும்போதும், நீ நன்றாக இருக்கிறாயா? என்ன படத்தில் நடிக்கிறாய்? என்றெல்லாம் அவர் என்னை விசாரிக்கும்போது சந்தோஷப்படுவேன்.

நாங்கள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ந்து நடனம் அல்லது சண்டை காட்சியில் நடித்தால் களைப்பு வந்து விடுகிறது. அடுத்த நாள் விடுமுறை எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. ஆனால் இந்த வயதில் முதல்-அமைச்சர் கருணாநிதி எத்தனை விழாக்களில் கலந்து கொள்கிறார். மதுரை, சேலம், டெல்லி என்று பறந்து கொண்டே இருக்கிறார். அவருடைய உடம்பை விட அவருடைய மனதுக்கு வலிமை அதிகம் என்று கருதுகிறேன். அவரை ஒரு அரசியல்வாதி, முதல்-அமைச்சர் என்பதையெல்லாம் விட நல்ல மனிதராக பார்க்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

பட அதிபர்கள்

  • ஏவி.எம்.சரவணன்,
  • கே.ஆர்.ஜி.,

டைரக்டர்கள்

  • கே.பாக்யராஜ்,
  • விஜய டி.ராஜேந்தர்,
  • ஷங்கர்,

தியேட்டர் அதிபர்கள்

  • அபிராமி ராமநாதன்,
  • பன்னீர்செல்வம்,
  • பெப்சி விஜயன்,

நடிகர்கள்

  • சத்யராஜ்,
  • சிவகுமார்,
  • பார்த்திபன்,

நடிகைகள்

  • சரோஜாதேவி,
  • மனோரமா,
  • ஸ்ரீபிரியா,
  • பிலிம் சேம்பர் தலைவர் கே.சி.என்.சந்திரசேகர்,
  • கவிஞர் வாலி,
  • விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் கோவை சண்முகம் ஆகியோரும் பாராட்டி பேசினார்கள்.

முன்னதாக அனைவரையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வரவேற்று பேசினார்.

தமிழ் திரையுலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வெள்ளி சிம்மாசனமும், வெள்ளிப் பேனாவும் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் தொகுத்து வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள்

  • காஜா மைதீன்,
  • அன்பாலயா பிரபாகரன்,
  • செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன்,
  • கே.எஸ்.சீனிவாசன்,
  • பொருளாளர் அழகன் தமிழ்மணி,
  • டைரக்டர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர்,
  • செயலாளர் அமீர்ஜான் ஆகியோர் செய்து இருந்தார்கள்.

Posted in Actors, Actresses, Association, Chief Minister, Cinema, Felicitation, Film, Functions, Kalainjar, Kalinjar, Kamalhassan, Karunanidhi, M karunanithi, Movies, Mu Ka, Mu Karunanidhy, Rajiniganth, Tamil, Tamil Nadu, Vijay, Vizha | 1 Comment »

DMK Alliance Partners Demand More Allocations for Local Body Polls

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

உள்ளாட்சி தேர்தலில் இடபங்கீடு: தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பு

சென்னை, செப். 27-

உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக தி.மு.க. வில் ஆற்காடு வீராசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் காங்கிரஸ், பா.ம.க., கம்ïனிஸ்ட்டு கட்சிகளை சேர்ந்த குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

50 சதவீத இடங்களுக்கு குறையாமல் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. மீதமூள்ள 50 சதவீதத்தை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பது என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் 30 சதவீதம் இடங்கள் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

அவர்களுக்கு 20 முதல் 25 சதவீத இடங்களை ஒதுக்க தி.மு.க. கருதுகிறது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இதே போல பா.ம.க.வும் 20 சதவீதத்திற்கு குறையாமல் இடங்களை கேட்கிறது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

3-வது நாளாக பேச்சு வார்த்தை இன்றும் நீடித்தது. இன்று காலையில் இந்திய கம்ïனிஸ்டு துணை பொதுச் செயலாளர் மகேந்திரன் தி.மு.க. தேர்தல் குழுவினரை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த மகேந்திரன் நிருபர்களிடம் கூறும் போது பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. பேச்சுவார்த்தை இன்றும் முடியவில்லை. தொடர்கிறது. நாளைக்குள் முடிவு எட்டப்படும் என்றார்.

மதியம் 12 மணியளவில் மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு மாநில செயலாளர் வரதராஜன், செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் தி.மு.க. தேர்தல் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அதை தொடர்ந்து ஏ.கே.மூர்த்தி தலைமையிலான பா.ம.க. குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதற்கிடையே காங்கிரஸ் சார்பில் மதியம் 12 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்ட அளவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதில் தனக்கு திருப்தி இல்லை என்று தேர்தல் குழு உறுப்பினர் சுதர்சனம் எம்.எல்.ஏ. பகிரங்கமாக தெரிவித்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் திடீர் பிரச்சினை உருவானது. காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இட பங்கீடு தொடர்பாக சுதர்சனம் பேசி முடிவு செய்யட்டும், நான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறி இருந்தார். மேலும் இந்த பிரச்சினை பற்றி புகார் செய்வதாக கூறி அவர் இன்று காலை டெல்லி சென்றார்.

இதே போல சுதர்சனமும் இன்று மாலை டெல்லி செல்கிறார். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிரச்சினையால் இடபங்கீடு இறுதி முடிவை எட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

Posted in Alliance, Allocations, Communist parties, Congress (I), CPI, CPI (M), DMK, Elections, Left party, Local Body, M Karunanidhi, Mu Ka, Partners, PMK, Polls, Sharing, Tamil, Tamil Nadu | Leave a Comment »

Al-Queda in Iraq Kills South Asian Muslims

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

ஈராக் நாட்டுக்கு வந்த இந்தியர்களை கொன்று விட்டோம்: அல்-கொய்தா அமைப்பு அறிவிப்பு

துபாய், செப்.25-

ஈராக் நாட்டில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, அமெரிக்கப் படைகளும், ஈராக் ராணுவமும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளன.

இருந்தபோதிலும் அங்கு அல்-கொய்தா இயக்கத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள் அடிக்கடி ஷியா முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும் கொன்று குவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 10 பேர் ஈரான் நாட்டில் ஷியா முஸ்லிம் இயக்கத்துக்காக சிறப்பு பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் ஈராக் வழியாக சிரியா நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்

அவர்கள் 10 பேர்களையும், அல்-கொய்தா இயக்கத்தின் துணை அமைப்பான அன்சார்-அல்-சன்னா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், அல் அன்பர் மாகணத்தில் ஈவு இரக்கமற்ற முறையில் கொன்றனர்.

இந்த தகவலை அந்த தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள இணையதள அறிக்கை தெரிவித்துள்ளது.

Posted in Al Anbaar, Al quaida, Al-Queda, Ansar al-sunna, Iraq, Islam, Muslims, Pakistan, Shia, South Asia, Syria, Tamil, Terrorism | Leave a Comment »

AIADMK Alliance Partners Allocation Details for Local Body Polls

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு: 75 சதவீத இடங்களில் அ.தி.மு.க. போட்டி

சென்னை, செப். 24-

உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் நேற்றிரவு முடிவு செய்யப்பட்டது. ம.தி.மு.க.வுக்கு 17.5 சதவீதம், விடுதலைச்சிறுத்தைகளுக்கு 4 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாநகராட்சிகளும், 102 நகர சபைகளும் இருக்கின்றன. இதில் யார்- யாருக்கு எந்த இடம் என்று பிரித்துக்கொள்வதற்குப்பதில், மொத்த இடங்களிலும் சதவீத அடிப்படையில் போட்டியிடலாம் என்ற முடிவை அ.தி.மு.க. கூட்டணி எடுத்துள்ளது.

மாநகராட்சி மற்றும் நகர சபைகளை தனித்தனியாக கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்தால், அது கட்சி அமைப்பு ரீதியிலும், பிரசாரத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநகராட்சி என்று ஒதுக்கினால், அங்கு அந்த கட்சிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் கவுன்சிலர் இடங்களை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அத்தகைய சூழ்நிலையில் தோழமை கட்சிகளிடையே அதிருப்தி ஏற்படகூடும். மேலும் பிரசார வேலைகளும் முழுமையாக நடக்காது. எனவேதான் மாநகராட்சி, நகரசபைகளில் உறுப்பினர் இடங்களை சதவீத அடிப்படையில் பிரித்துக் கொண்டு போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

உள்ளாட்சித்தேர்தல் முடிந்தபிறகு ஒவ்வொரு மாநகராட்சியிலும், ஒவ்வொரு நகரசபையிலும், கூட்டணியில் உள்ள கட்சிகளில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளது என்பதை பொருத்து மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்வு நடைபெறும். சதவீத அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சி, நகரசபைகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுக்கு சதவீத அடிப்படைகளுக்கு ஏற்பவே வெற்றிகள் கிடைக்கும்.

அந்த சமயத்தில் ம.தி.மு.க.வுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் தலைவர் பதவியை பெறும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். என்றாலும் சதவீத அடிப்படையில், தலைவர் பதவி இடங்களை தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இரு கட்சிகளும் மாநகராட்சி மேயர் பதவியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. அதற்கு பதில் நகரசபைகளில் கணிசமான தலைவர், துணைத் தலைவர் இடங்களை பெற விருப்பம் தெரிவித்துள்ளன.

ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தையும் தலைவர் பதவிக்குரிய இடங்களுக்கு கூட்டணித் தலைவரான அ.தி.மு.க.வை அனுசரித்தே செல்லவேண்டும். இது கூட்டணி உடையாமல் மேலும் பலமாக வைத்து இருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டுக்கும் அ.தி.மு.க. 21.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில்

  • இந்திய ïனியன் முஸ்லிம் லீக்,
  • இந்திய தேசிய லீக்,
  • மூவேந்தர் முன்னேற்றக்கழகம்,
  • அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம்,
  • உழவர் உழைப்பாளர் கட்சி,
  • மதச்சார்பற்ற ஜனதா தளம்,
  • சமூகநீதிக்கட்சி,
  • தமிழ் மாநில முஸ்லிம் லீக்,
  • இந்திய குடியரசுக்கட்சி,
  • கிறிஸ்தவ முன்னேற்றக்கழகம்,
  • சிறுபான்மை ஐக்கியபேரவை ஆகிய மேலும் 11 தோழமைக் கட்சிகள் உள்ளன.

இந்த 11 தோழமைக்கட்சி களுக்கும் சுமார் 4 சதவீத இடங்களை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக எஞ்சி உள்ள 75 சதவீத இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தும்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க, ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலிடம் உடன்பாடு செய் துள்ள சதவீத அடிப்படையில் மாவட்டங்களிலும் இவர்கள் இடப்பகிர்வை இன்றே செய்கின்றனர்.

யார், யார் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்ற விபரம் ஏற்கனவே பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. எனவே அடுத்த முக்கிய பணியான வேட்பாளர் தேர்வு பணியை அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் இன்று தொடங்குகின்றன. 20 ஆயிரத்து 886 பதவிகளுக்கு வேட்பாளர்களை இவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்துக்கது.

ஓரிரு நாட்களில் வேட்பாளர் தேர்வு முடிந்துவிடும். இதையடுத்து வேட்பாளர்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் பெருமளவில் மனுத்தாக்கல் செய்வார்கள்.

Posted in ADMK, AIADMK, Allocations, Dalit Panthers, Elections, Local Body, MDMK, Partners, Percentages, Polls, Tamil, Tamil Nadu, TN, Viduthalai Siruthaigal | Leave a Comment »

External Affairs Minstry – Conundrum for Prime Minister

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

யார், புதிய வெளியுறவு அமைச்சர்?

நீரஜா செüத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ

அணிசாரா நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பியதும் வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்திருந்தார் பிரதமர். அதைத் தொடர்ந்து, அப் பதவியைப் பிடிப்பதற்கான போட்டியும் நெருக்குதல்களும் காங்கிரஸ் கட்சியில் அதிகரித்துவிட்டன.

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு உறுதியாகும் வரையில் வெளியுறவு இலாகாவைத் தன் வசமே வைத்துக்கொள்ளவே பிரதமர் விரும்புவார் என பலர் கருதுகின்றனர். நேரம் வரும்போது புதியவரின் பெயரையும் அறிவித்து நியமனமும் செய்துவிட்டுப் போகலாம். முன்னறிவிப்பை வெளியிட்டதன் மூலம் பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்குதல்களை வரவழைத்துக் கொண்டுவிட்டார் பிரதமர்.

இது ஒருபுறம் இருக்க; அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைப் பொருத்தவரை, அது வெற்றி பெற்றால், பிரதமரின் கிரீடத்தில் வைத்த வைரக்கல்லாக அது கருதப்படும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும், “அமெரிக்க நெருக்குதலுக்கு அடிபணிந்துவிடவில்லை’ என்ற பெருமை அவருக்குக் கிடைத்துவிடும். அதனால் அவரது மதிப்பும் உயர்ந்துவிடும். நாடாளுமன்றத்தில் திட்டவட்டமான உறுதிமொழியை அளித்திருக்கும் அவரால், அதிலிருந்து பின்வாங்குவது இயலாத காரியம்.

மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் எதையும் மேற்கொள்ளும் உத்தேசம் பிரதமருக்கு இல்லை. ஏனென்றால், ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து நெருக்குதல்களை வரவழைப்பதாக அது அமைந்துவிடும்.

பாதுகாப்புத் துறை அமைச்சரான பிரணப் முகர்ஜி வெளியுறவுத் துறைக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார்; அனுபவத்தில் மூத்தவர், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட 35-க்கு மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களுக்குத் தலைமை வகித்திருப்பவர்; எதிரும் புதிருமாக நாடுகள் அணி சேர்ந்திருக்கும் இன்றைய உலகச் சூழலில், இந்தியாவுக்கு வரக்கூடிய நெருக்குதல்களைச் சமாளிக்கக்கூடியவர். ஆனால், பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுக்கு மாற்றப்படுவதை அவர் விரும்பவில்லை.

தெளிவாகச் செயல்படக்கூடிய ப. சிதம்பரமும் அப் பொறுப்புக்குப் பொருத்தமானவர்தான். ஆனால், தமிழரான அவருக்கு, இலங்கை தொடர்பான கொள்கையை ~ அதிலும் குறிப்பாக அங்கு நிலைமைகள் மேலும் சிக்கலடைந்துள்ள நேரத்தில் ~ கையாள்வது சங்கடமானதாக இருக்கக்கூடும். அதோடு, நிதித் துறையை அவர் கையாள்கிற விதமும் பிரதமருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது.

புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக கரண் சிங், எஸ்.எம். கிருஷ்ணா, கமல் நாத், கபில் சிபல் ஆகியோரில் யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலமாக அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுக்கொண்டு இருந்தது. சிதம்பரத்துக்கு எப்படி இலங்கை விவகாரமோ, அதேபோல கரண் சிங்குக்கு பாகிஸ்தான் விவகாரம். காங்கிரஸ் கட்சியின் வெளியுறவு விவகாரக் குழுவுக்கு அவர்தான் தலைவர்; அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்; பிரதமரின் தூதராக நேபாள விவகாரத்தைத் திறமையாகக் கையாண்டவர். இருந்தபோதிலும், அவர் ஜம்மு ~ காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற அம்சம் அவருக்குப் பாதகமாக இருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புத்தெழுச்சியுடனும் உத்வேகத்துடனும் செயல்படக் கூடியவர்தான் கபில் சிபல். பிரதமரின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. கூர்மையாகவும் சிந்தனைத் தெளிவுடனும் செயல்படக்கூடியவர்; சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அறிவும் அவருக்கு இருக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவின் நண்பர்களாக இருப்பவை இஸ்லாமிய நாடுகள்; ஆயினும், அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, ஈரான் விவகாரம் ஆகியவற்றில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக அவை அதிருப்தி அடைந்துள்ளன. எனவே, அவற்றுடன் மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது புதிய அமைச்சருக்கு முன்னுள்ள சவால்களில் ஒன்று. கபில் சிபலுக்கு சிறுபான்மைச் சமுதாயத்தினருடனும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், அப் பதவிக்கு நியமிக்கும் அளவுக்கு அவர் மூத்தவரல்லர்; பலருக்கு “இளையவர்’ என்று கருதப்படுவதான் அவருக்கு உள்ள சிக்கல். அதோடு, கட்சியில் அவருக்கு எதிராக இருக்கும் சக்திகளும் பலமாக உள்ளன.

அனுபவத்தால் மெருகேறிய, மகாராஷ்டிரத்தின் ஆளுநராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அண்மைக் காலத்தில் அடிபட்டது. மத்திய அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு சில காலமாக இருந்துவருகிறது. ஆனால், அவருக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர், அண்மைக் காலத்தில் மத்திய அரசியலில் செல்வாக்கும் பலமும் மிக்கவராக உருவெடுத்திருக்கும் வீரப்ப மொய்லி ஆவார். பல்வேறு கமிட்டிகளின் தலைவராக, பிரதமரால் நியமிக்கப்பட்டிருப்பவர் அவர். கர்நாடகத்தைச் சேர்ந்த இருவர், ஒரே நேரத்தில் தில்லி அரசியலில் அதிகார மையங்களாகச் செயல்பட முடியாது.

கடைசியாக வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சிவராஜ் பாட்டீல்; உள் துறையில் குறிப்பிடும்படி செயல்படாத அவர், வெளியுறவுத் துறைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டு, தற்போது மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் சுஷில் குமார் ஷிண்டே, உள் துறை அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என்ற பேச்சு அடிபட்டது.

கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பிரதமர் செயல்பட வேண்டியுள்ளது. பிரிய ரஞ்சன்தாஸ் முன்ஷி, சைபுதீன் சோஸ் உள்பட 8 மத்திய அமைச்சர்கள் தமது துறைச் செயலர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இப்போது அந்த வேலையில் இறங்கினால், அது குழவிக்கூட்டைக் கலைத்தது போலாகிவிடும் என்று அதைத் தவிர்த்துவருகிறார் பிரதமர்; எனவே, அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வது அதைவிடச் சிக்கலானதாகிவிடும்.

இருந்தபோதிலும், வெளியுறவுத் துறைக்குப் புதிய அமைச்சரை நியமிக்கும் விஷயத்தைக் காலவரையின்றி மன்மோகன் சிங் தள்ளிப்போட முடியாது. வெளியுறவுத் துறை அமைச்சரின் பணிகளை பிரதமர் கவனித்துக் கொண்டிருக்க முடியாது; இந்தியாவுக்கு வருகை தருகின்ற பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை மன்மோகன் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஒரு நாட்டுக்கு வரும் வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்தான் சந்திக்க வேண்டும் என்பது அரச நடைமுறையாகும். எனவே, இந்தியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டு வெளியுறவு அமைச்சர் எவரும், இணை அமைச்சரைச் சந்திப்பதை விரும்ப மாட்டார்கள்.

இராக்கிய எண்ணெய்க்கு உணவுத் திட்ட ஊழல் தொடர்பாக விசாரித்த விசாரணைக் குழு, “நட்வர் சிங் குற்றமற்றவர்‘ என்று அறிவிக்கும் பட்சத்தில், அப் பொறுப்புக்கு அவர் மீண்டும் நியமிக்கப்படுவார் என்பதை அவருக்குத் தெரிவித்து, அவரை அமைதிப்படுத்தும் நோக்கத்தில்தான், முதலில் அப் பதவி நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலைமைகள் வேறு விதமாக அமைந்துவிட்டன. நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ் போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு வெளியுறவுத் துறைப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்து வந்திருக்கின்றனர். ஆனால், அக் காலச் சூழல் வேறு. இன்று, வெளியுறவுக் கொள்கையானது மிகவும் சிக்கலானதாகிவிட்டது; அப் பொறுப்பைக் கவனிக்கத் தனியாக ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுவும், பிராந்திய வல்லரசாக இந்தியா உருவெடுத்துவரும் நிலையில் அதற்கான அவசியம் மேலும் அதிகரித்திருக்கிறது.

தமிழில்: லியோ ரொட்ரிகோ

Posted in Analysis, Cabinet, Dinamani, External Affairs, India, Kamal Nath, Kapil Sibal, Karan Singh, Leo Rodrigo, Manmohan Singh, Minsiter, Minstry, NAM, Neeraja Chowdhry, Op-Ed, Pa Chidambaram, Pakistan, Pranab Mukherjee, Prime Minister, SM Krishna, Sri lanka, Tamil | Leave a Comment »

Chief Ministers of Congress (I) Congregate in UP

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு

காங்கிரஸ் கட்சியால் ஆளப்படுகிற மாநில முதல்வர்களின் மாநாடு அடிக்கடி நடப்பதாகிவிட்டது. இப்போது உத்தராஞ்சல் மாநிலத்தில் நைனிதால் நகரில் காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள மாநிலங்களுள் கிட்டத்தட்ட பாதி மாநிலங்களில், அதாவது 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் முதல்வர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் சிறிய மாநிலங்களே. அதிலும் மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சிபீடத்தில் உள்ளது. காங்கிரஸ் தனது பலத்தைக் காட்டிக்கொள்ள இப்படியான மாநாடுகளை நடத்துவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஒருங்கிணைந்த கொள்கைகளைப் பின்பற்றும்படிச் செய்வதற்கு இது ஓரளவில் உதவலாம்.

நைனிதால் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகளில் பயங்கரவாதம் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலை நாடுகள் விஷயம் வேறு, இந்திய நிலைமை வேறு என்பதை அவர் மறந்துவிட்டார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, அத்துடன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக அப்பாவி மக்களைக் கொன்று வந்துள்ளனர். இந்த அமைப்புகள் அண்மைக் காலமாகத்தான் பிற மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் எந்தப் பொறுப்புள்ள கட்சியும் பயங்கரவாதத்தைக் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசியது கிடையாது. அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் ஆங்காங்கு வகுப்புக் கலவரங்கள் நடந்தது உண்டு. இவையெல்லாமே அந்த வட்டாரத்துடன் முடிந்துவிடுகிற சம்பவங்களாகவே இருந்துள்ளன. அந்த மாநிலத்திற்குள்ளாக அல்லது பிற மாநிலத்திற்கு அவை பரவியது கிடையாது. இந்திய மக்கள் பாரம்பரியமாக மத நல்லிணக்கத்தைக் காத்து வருபவர்கள். எங்காவது எப்போதாவது மொழி அடிப்படையில் நடந்துள்ள மோதல்களும் மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தது கிடையாது. இது பற்றி நாம் பெருமைப்படலாம்.

மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருபடி மேலே போய் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானவை என்ற எண்ணத்தை உண்டாக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அப்படிக் கூறாமல், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அத்துமீறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏனெனில் காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பல சமயங்களில் அப்பாவி மக்களைத் துன்புறுத்துகிற செயல்களாக அமைந்துள்ளன. மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அத்துமீறிப் போய் அது “மனித உரிமை மீறல்’ விவகாரமாக மாறியது. அசாமிலும் உல்பா இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார்கள் உண்டு.

மணிப்பூர், அசாம் மட்டுமன்றி ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம் ஆகியவற்றிலும் நக்சலைட் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்டுள்ளோம். இவ்விஷயத்தில் நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சினை, பயங்கரவாதிகள் அல்லது பல்வேறு வகையான தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதில் போலீஸ் படையினருக்குத் தகுந்த பயிற்சி கிடையாது என்பதுதான். மத்திய அரசின் அல்லது மாநில அரசுகளின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்படும் ஊர்வலங்களைச் சமாளிப்பதிலும் கூட பல நேரங்களில் முரட்டுத்தனம் காட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க நைனிதால் மாநாட்டு உரைகள் அடுத்த ஆண்டில் உ.பி. மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலை மனத்தில்கொண்டு அமைந்துள்ளன என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

Posted in Andhra Pradesh, AP, Assam, Chief Ministers, Congregation, Congress (I), Elections, India, Indira Congress, Kashmir, maharashtra, Manipur, Manmohan Singh, Meet, Meeting, Nanital, Naxals, Pakistan, Sonia Gandhi, States, Strategy, Tamil, Terrorism, ULFA, Uttar Pradesh, Vacation | Leave a Comment »

Outer Ring Road for 62 KMs connecting Vandaloor & Minjoor

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006


வண்டலூர்-மீஞ்சூர் இடையே 62 கி.மீ. நீள “வெளிவட்டச் சாலை’

பா. ஜெகதீசன்

சென்னை, செப். 25: சென்னையிலும், அதை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் வகையில் 62 கி.மீ. தூரத்துக்கு “வெளிவட்டச் சாலை’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகரின் எல்லைக்கு வெளியே வடக்கே உள்ள மீஞ்சூரையும், தெற்கே உள்ள வண்டலூரையும் இணைக்கும் வகையில் இச்சாலை உருவாக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.500 கோடி செலவில் 4 வழிப்பாதையாக இச்சாலை அமைக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • சென்னை -திருச்சி சாலை,
  • சென்னை -பெங்களூர் சாலை,
  • சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலை,
  • சென்னை -நெல்லூர் நெடுஞ்சாலை,
  • திருவொற்றியூர் -பொன்னேரி -பஞ்சட்டி சாலை ஆகிய 5 சாலைகளையும் இணைக்கும் வகையில் இந்த வெளிவட்டச் சாலையை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிலம் கையகப்படுத்த நடவடிக்கை: வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியின் முதற்கட்டமாக வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து திருவள்ளூர் நெடுஞ்சாலை வரை 29.2 கி.மீ. நீளத்துக்குத் தேவையான நிலங்களை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கையகப்படுத்தி உள்ளது.

அங்கிருந்து மீஞ்சூர் வரையிலான எஞ்சிய சுமார் 33 கி.மீ. தூரத்துக்குத் தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சாலையை இரு வழித் தடங்களிலும் சேவைப் பாதையுடன் கூடிய 6 வழிப் பாதையாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும், திட்டத்தின் முதற்கட்டமாக, இச்சாலை ரூ.500 கோடி செலவில் 4 வழிப்பாதையாக அமைக்கப்படும்.

இத்திட்ட நிறைவேற்றம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும். அதன் பிறகு சாலை அமைப்புப் பணிகள் தொடங்கப்படும்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஆய்வு: சென்னைப் பெருநகரப் பகுதியில் நிலவும் அனைத்துப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரிவான ஆய்வை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நடுத்தர -நீண்டகாலத் திட்டங்களை வகுக்கவும், அவற்றின் மூலம் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளுக்கு உதவி: சென்னை நகர எல்லைக்கு வெளியே பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள

  • உள்ளாட்சி அமைப்புகளில் சாலைகளை அகலப்படுத்துதல்,
  • புதிய இணைப்புச் சாலைகளை அமைத்தல்,
  • தெரு விளக்குகள் அமைத்தல்,
  • குடிநீர் வசதி ஏற்படுத்துதல்,
  • மயான மேம்பாடு,
  • குப்பைகளை அகற்ற வாகனங்கள் வாங்குவது ஆகிய பணிகளை மேற்கொள்ள 90 சதவீத அளவுக்கு நிதியுதவியைக் குழுமம் அளிக்கிறது.

 

  • மரம் நடுதல்,
  • குளம் -குட்டைகளைத் தூர் வாருதல்,
  • பூங்கா சீரமைப்பு,
  • மழைநீர் வடிகால் அமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளுக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை மானியமாகக் குழுமம் அளிக்கிறது. எஞ்சிய தொகையில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளும், 15 சதவீதத்தைத் தொண்டு நிறுவனங்களும் ஏற்கின்றன.

இத்திட்டங்களின் கீழ் 2006-2007-ம் நிதியாண்டில் ரூ.4.2 கோடி அளவுக்கு நிதியுதவியைக் குழுமம் அளிக்க உத்தேசித்துள்ளது.

Posted in Chennai, GST Road, Madras, Minjur, Outer Ring Road, Ponneri, Roads, Suburban, Surface, Tamil, Tamil Nadu, Thiruvaloor, Thiruvotriyur, Transportation, Vandalur | Leave a Comment »

Coke & Pepsi bottles are destroyed in Kerala as part of Soft Drinks Ban Agitations

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

கேரளத்தில் 2-ம் நாளாக கோக், பெப்சி பாட்டில்கள் அழிப்பு போராட்டம்

திருவனந்தபுரம், செப். 25: கோக கோலா, பெப்சி பான பாட்டில்களை அழிக்கும் போராட்டம் கேரளத்தில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு இளைஞர் அமைப்பான அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த தொண்டர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் புகுந்து, கோக், பெப்சி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளைத் தூக்கி தெருவில் வீசி, பாட்டில்களை உடைந்து அழித்தனர் என்று போலீஸôர் கூறினர்.

வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

கேரளத்தில் கோக், பெப்சி உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.

எதிர்ப்பு இயல்பானதே – அச்சுதானந்தன்: கோலா கம்பெனிகளால் தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கும் மக்கள் இது போல எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானதே என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் நிருபர்களிடம் கூறினார்.

Posted in Achuthananthan, Agitation, Ban, Coke, Communist, CPI, destroy, High Court, Kerala, Pepsi, Soft Drinks, Tamil | Leave a Comment »