பீஹாரில் விலைமதிக்க முடியாத சிலைகள் திருடு
![]() |
![]() |
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை |
இந்தியாவின் பீஹார் மாநிலத்தின் தலைநகர் பட்னாவில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகத்தில் இருந்து, கடந்த வார இறுதியில், விலைமதிக்க முடியாத 18 சிலைகள் திருடப்பட்டிருப்பதை மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறும் மாநிலக் காவல்துறையினர், இந்தச் சம்பவத்தின் பின்னணியில், முக்கிய சர்வதேச குற்றக்குழுக்கள் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சர்வதேச பொலிஸாரை உதவிக்கு அணுகுவது என்று செவ்வாயன்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வெண்கலத்தால் ஆன பழமை வாய்ந்த இந்தச் சிலைகள், 9ஆம் 10ஆம் நூற்றண்டுகளைச் சேர்ந்தவை என்றும், அவை பல லட்சம் டாலர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தன என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.