Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 7th, 2006

Literacy Development in India

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

எழுதப் படிக்கத் தெரிவதே எழுத்தறிவா?

ஆர். இராஜன்

சமீபத்தில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்கல்வி / எழுத்தறிவு மையங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான மையங்களில் பெண்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களே பயனாளிகளாக இருந்தனர். முதல் மையத்தில் கற்போரிடம் கலந்துரையாடினேன்.

ஏன் எழுத்தறிவு? எழுத்தறிவு பெறுவதால் என்ன பயன்?

இதுதான் கேள்வி. படிப்பதால் ஊர் பேர் படித்து பஸ்ஸில் ஏறலாம். அருகில் உள்ள ஊருக்குச் சென்று வரலாம் என்றனர் ஒரு சிலர். மற்றொரு பிரிவினர் – கடிதம் எழுதலாம் அல்லது நமக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றனர். அடுத்த சிலர் நம்மைச் சுற்றி நடைபெறும் அன்றாடச் செய்திகள் / நாட்டு நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம் என்றனர். ஆனால் ஒரு பெண்மணி, தற்போது எங்கள் பகுதி மக்களுக்குக் கடிதம் எழுதும் வாய்ப்போ, கடிதம் வரும் வாய்ப்போ பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம். ஏன் எனில், இது தொலைபேசி யுகம். எங்கு பார்த்தாலும் “செல்’ அல்லது பொதுத் தொலைபேசி இல்லாத கிராமமே இல்லை. இதன் மூலமே அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

அடுத்து பேச வந்த பெண்மணி செய்திகள் / நாட்டு நிலவரம் பற்றி கூறினார். ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு முன்னர்தான் இது ஒரு பிரச்சினை எனலாம். அதனால் தற்போது எங்கு பார்த்தாலும் கேபிள் டிவிக்கள், பல்வேறு சேனல்கள். இது தவிர செய்திகளுக்கே எனத் தனிச் சேனல்கள். அப்படியிருக்க எழுதப் படிக்கத் தெரிந்தால்தான் இதை அறிய முடியும் என்று எப்படி கூற முடியும் என்று கேட்டார்.

நம்மில் பெரும்பாலோருக்கு இதே மாதிரி எண்ணங்களே. “எழுத்தறிவு’ என்பதை வெறுமனே எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளக் கூடாது. “செயல்முறை எழுத்தறிவு’ என்ற பரந்த அர்த்தத்தில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். “தேசிய எழுத்தறிவு இயக்கம்’ “எழுத்தறிவை’ வரையறுக்கும்போது செயல்முறை எழுத்தறிவு ( Functional Literacy) என்று வலியுறுத்துகிறது.

* “செயல்முறை எழுத்தறிவு’ என்பது~

எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில் சுயசார்பு அடைதல்.

தங்களின் ஏழ்மை நிலைக்கான காரணங்களைப் புரிந்து கொண்டு சிறுசிறு குழுக்களாக ஒன்று சேர்ந்து அமைப்பு ரீதியாக வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிடுவது முதல் செயல்பாட்டில் ஈடுபடுதல் வரை முழுமையாகப் பங்கேற்றுத் தங்கள் நிலையை மேம்படுத்த முயலுவது.

பொருளாதார அந்தஸ்து (அல்லது) தமது வருவாயைப் பெருக்கும் வகையில் ஏற்கெனவே செய்து வரும் தொழிலிலோ, புதுத் தொழிலிலோ ஈடுபட்டு தம் வருமானத்தைப் பெருக்குதல்.

தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆண் / பெண் சமத்துவம் போன்ற தேசிய நலன் சார்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்களைவிட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சொந்தக் காலில் நிற்கும் திறனும் அதிகம். எழுதப் படிக்கத் தெரிவதால் தனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பகுத்துப் பார்த்துச் சொந்தமாக முடிவு எடுக்கும் ஆற்றல் ஏற்படுகிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாகத் தன்னைப் பற்றிய சுயமதிப்பும் ஆற்றல் உணர்வும் அதிகரிக்கிறது.

தற்போதைய வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான திறமைகளான தன்னைத் தாமே அறிந்து கொள்ளுதல், பிரச்சினைக்குத் தீர்வு காணல், முடிவு எடுக்கும் திறமை, நேர மேலாண்மை, தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுதல், சகிப்புத் தன்மை, தோல்விகளையும் பிறர் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளுதல், குழுவாகச் சேர்ந்து பணியாற்றுதல், சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளுதல் போன்ற பண்புகளை உள்ளடக்கியதாக எழுத்தறிவு மற்றும் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது. அரசு கிராமப்புற மக்களுக்காக, பின்தங்கிய மக்களுக்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்ற மக்களுக்காக, பெண்களுக்காக, எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அவை முழு அளவில் அவர்களைச் சென்றடைவதில்லை. அவர்களுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது தெரியாமலேயே இன்றும் அந்தக் குறிப்பிட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களிடையே உள்ள எழுத்தறிவின்மைதான்.

1965 செப்டம்பர் 8ஆம் நாள் டெஹரான் நகரில் உலக அளவிலான கல்வி அமைச்சகர்கள் மாநாடு கூட்டப்பட்டது. எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் நாளை உலக எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானமாகும்.

எல்லோருக்கும் கல்வி தந்து இந்த நாட்டினை உயர்த்திட வேண்டும் என்றார் மகாகவி பாரதியார். கல்வி ஒன்றினால்தான் சமுதாயத்தில் நிலையான மாற்றத்தினைக் கொண்டு வர முடியும். முறையான கல்வியின் மூலம் ஏற்படுகின்ற மாற்றங்களே நிலையானவை என சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அதனைக் கருத்தில்கொண்டே “எல்லோருக்கும் கல்வி’ என்ற நோக்கில் தேசிய / மாநில அளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்ற நாள் முதல் நம் நாட்டில் கல்விக்காக குறிப்பாக அடிப்படை எழுத்தறிவு அளிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திட்டங்களில் மிக முக்கியமானவை.

  • 1952 – சமுதாயக் கல்வித் திட்டம்;
  • 1967 – உழவர் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்;
  • 1975 – பள்ளிசாராக் கல்வித் திட்டம்;
  • 1978 – தேசிய வயதுவந்தோர் கல்வித் திட்டம்;
  • 1985 – மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம்;
  • 1988 – தேசிய எழுத்தறிவு இயக்கம்;
  • 1990 – முழு எழுத்தறிவு இயக்கம் (அல்லது) அறிவொளி இயக்கம்;
  • 1992 – தொடர்கல்வித் திட்டம்;
  • 1998 முதல் – வளர்கல்வித் திட்டம்.

இந்திய அளவில் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டோர் நிலை பெருகிக் கொண்டே வந்தாலும் பெண்களில் பெரும்பகுதியினர் இன்னமும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர்.

தேசிய அளவில் நூற்றுக்கு 53.66% பெண்களுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும் என்றாலும் தமிழகத்தில் நூற்றுக்கு 64.43% பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களில் நூற்றுக்கு 55.28% மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும். பெரும்பாலான மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் மத்தியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. மனித உரிமைகளில் முதன்மையானது கல்வி பெறும் உரிமை. கல்வி ஒன்றினால்தான் மனித உரிமையைக் காக்க முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டு பெண்களிடையே எழுத்தறிவுச் சதவீதத்தினை உயர்த்துவதற்கு மத்திய / மாநில அரசுகள் இணைந்து மகளிருக்கு என சிறப்பு மகளிர் எழுத்தறிவுத் திட்டத்தினைத் தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மார்ச் 2007க்குள் பெண்களின் எழுத்தறிவு சதவீதத்தை 75க்கு மேல் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. “அறிவு’ என்பது ஓர் ஆயுதம் என்கிறார் திருவள்ளுவர். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா இருண்ட வீடு’ என்று கூறினார் பாரதிதாசன். அறியாமை இருளை அகற்றினால்தான் இந்தியா உண்மையான சுதந்திர நாடாக மாற முடியும்.

Posted in backward, Economic, Education, Functional Literacy, Learn, Literacy, Oppressed, Self Actualization, Self Actulaization, Self realization, Tamil | 2 Comments »

Puthucehrry’s First CM – Pakkiri Saami Pillai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர்

சோ. முருகேசன்

முதன்முதலில் ஏழைகளுக்கு இலவச அரிசியைத் தனது சொந்தச் செலவில் வழங்கினார் ஒரு முதல்வர். அவர் புதுவையின் முதலாவது முதலமைச்சரான சா. பக்கிரிசாமிப்பிள்ளை. 1955இல் ஏகமனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1906ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காரைக்காலில் பிறந்தவர்.

பிரெஞ்சிந்திய விடுதலைக்குப்பின், 1955 ஜூலையில் நடந்த புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களையும், மக்கள் முன்னணி 21 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் சில உறுப்பினர்கள் அணி மாறியதன் விளைவாக இறுதியாகக் கட்சிகளின் பலம் – காங்கிரûஸ ஆதரித்து 20 உறுப்பினர்கள், மக்கள் முன்னணியை ஆதரித்து 19 உறுப்பினர்கள் என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது புதுச்சேரியில் கூடிய சட்டசபை காங்கிரஸ் கமிட்டி சா. பக்கிரிசாமிப்பிள்ளையைக் கட்சித் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது. புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பிள்ளையவர்கள் ஆகஸ்ட் 13இல் பதவியேற்றார். அவருடன் ஐவர் அமைச்சராகப் பணியேற்றனர் –

  1. எதுவார் குபேர்,
  2. தியாகராஜ நாயக்கர்,
  3. சந்திரசேகர செட்டியார்,
  4. முகமது யூசுபு,
  5. எஸ். தட்சணாமூர்த்தி முதலியார் ஆகியோர்.

1955இல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கிரிசாமிப்பிள்ளை 1946ஆம் ஆண்டு முதல், காரைக்கால் கொம்யூன் மேயராகத் தொடர்ந்து பணியாற்றி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றவராவார்.

“”ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கலாம்” என்ற எண்ணமே நாட்டில் ஏற்படாத காலத்தில், மழைக்காலங்களில் பசியால் அவதியுறும் ஏழை மக்களுக்கு இலவசமாக இவரது சொந்தச் செலவில் அரிசி விநியோகம் செய்து மக்களின் உள்ளத்தில் இடம்பெற்றவர் பிள்ளையவர்கள். தீபாவளியின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, புடவை வழங்குதல் இவரது வாழ்க்கையில் ஓர் அங்கம்.

இதேபோன்று ஆண்டுதோறும் இவர் நடத்தும் கிருஷ்ணஜெயந்தி விழாவின்போது, அரண்மனை போன்ற தனது வீட்டின் உள்ளே ஏழை, பணக்காரர், உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும், நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கல் சமபந்தி போஜனம் நடத்தியவர் பிள்ளையவர்கள்.

1947இல் நடந்த சேனாத்தேர் (செனட்டர்) தேர்தலில் பக்கிரிசாமிப்பிள்ளை வெற்றி பெற்று, பாரீசிலுள்ள மேல்சபை உறுப்பினராக 1954 வரை சிறந்த பணியாற்றியுள்ளார். இவர் சேனாத்தேராக இருந்த காலத்தில் பிரெஞ்சிந்தியாவின் அரசியலமைப்பு சட்டங்களில் பல மக்களாட்சிக் கொள்கைகளைப் புகுத்தியுள்ளார்.

இவரது சேனாத்தேர் பதவிக் காலத்தில்தான், பிரெஞ்சிந்திய விடுதலை பற்றிய பேச்சுவார்த்தைகள் இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே பாரீசில் நடைபெற்றன. அமைதியான முறையில் “”கத்தியின்றி ரத்தமின்றி”ப் பிரெஞ்சிந்தியா புதுச்சேரி மாநிலமாக மாறியது இவரது இராஜதந்திரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இக்காலக்கட்டத்தில், பண்டித நேருவின் நெருங்கிய தொடர்பையும், அவரது நன்மதிப்பையும் பெற்றார்.

பிள்ளையவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் மறக்க முடியாத பல செயல்கள் செய்துள்ளார். அவைகளில் “”எல்லோருக்கும் கல்வி” என்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா குக்கிராமங்களிலும், சரியான போக்குவரத்து இல்லாத எல்லா சிற்றூர்களிலும் நூற்றுக்கணக்கில் “”ஓராசிரியர் பள்ளிகள்” புதுச்சேரியிலும், காரைக்காலிலும், மாஹேயிலும், ஏனாமிலும் தொடங்கப்பட்டன. இந்த ஓராசிரியர் பள்ளிகள் இன்று உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேனிலைப் பள்ளிகளாகவும் காட்சியளிக்கின்றன!

பிள்ளையவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த மற்றொரு மாபெரும் சிறப்பு நிகழ்ச்சி, பாரதப் பிரதமர் பண்டித நேரு 1955 அக்டோபர் 3இல் காரைக்காலுக்கு வருகை தந்ததாகும். அன்று மாலை தோமாஸ் பிள்ளைத் திடலில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பண்டித நேரு, இம்மாநில வளர்ச்சிக்கும், மக்கள் மகிழ்ச்சிக்கும் நடுவண் அரசு அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்தார். இம் மாநிலத்தில் பன்னெடுங்காலமாக நிலவி வரும் பிரெஞ்சு மொழி மற்றும் பண்பாடு, மாநிலத்தில் நிலவி வந்த தனிச்சலுகைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என முழக்கமிட்டார்.

புகழேணியின் உச்சியில் வீற்றிருந்த பக்கிரிசாமிப்பிள்ளை, 1956 ஜனவரி 13இல், நகராட்சி மன்றத்தில் தனது கடமைகளை ஆற்றிவிட்டு வீடு திரும்பியவர் திடீரென மாரடைப்பால் பகல் 1.30 மணியளவில் காலமானார்.

(இன்று பிள்ளையவர்களின் நூற்றாண்டு நாள்.)

Posted in Biography, Biosketch, CM, Colony, Congress, France, French India, Lifesketch, Makkal Munnani, Memoir, Pakkiri Saami Pillai, Pondicherry, Puthucehrry, Senator, Tamil | 1 Comment »

SCARF welcomes Short Films

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

குறும்பட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

திரைப்படங்கள், அதிலும் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சென்னையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையம் (SCARF) ஒரு போட்டியை அறிவித்துள்ளது.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி தவறான, எதிர்மறையான எண்ணங்கள் சித்திரிக்கப்பட்டு அவை நம் மனதில் பதிந்துவிட்டன. இவற்றை மாற்றுவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

மனநலம் மற்றும் மனநோய் சம்பந்தப்பட்ட மிக நுண்ணிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் வகையில் குறும்படங்களை உருவாக்கி இந்த மையத்துக்கு அனுப்ப வேண்டும்.

இந்தப் போட்டியில் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி மனநலம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். 3 முதல் 5 நிமிடங்கள் கொண்ட குறும்படங்கள்தான் போட்டியில் பங்கேற்க முடியும்.

இப்படங்கள் கற்பனை கதை வடிவமாகவோ, செய்திப் படமாகவோ, இரண்டும் கலந்ததாகவோ இருக்கலாம். திரைப்படங்கள் எந்த வடிவமைப்பில் எடுக்கப்பட்டிருந்தாலும் டி.வி.டி.யாகத்தான் போட்டிக்கு அனுப்பப்பட வேண்டும்.

படங்கள் ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டதாக (Subtitles்) இருக்க வேண்டும். நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை.

தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் அக்டோபர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாவின் போது திரையிடப்படும்.

போட்டிக்கான கடைசி நாள்: 30.09.2006.

Address: SCARF (INDIA), R/7A, North Main Road, Anna Nagar (West Extn.), Chennai -600 101.

Posted in Challenged, Chennai, Cine Festival, Contest, Disabled, Docu Dramas, Documentary, Movies, SCARF, Short Films, Tamil | Leave a Comment »

Alternate Suggestions to Satellite City – Madras City Decongestion

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, செப். 8: சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் நெருக்கத்தைக் குறைக்க, புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு அமைப்புகள் யோசனை கூறியுள்ளன.

துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை அடுத்து, இப் பிரச்சினைக்கு புதிய மாநகராட்சிகளை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும் என இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகரைவிட, “சென்னை பெருநகர்’ (சி.எம்.ஏ.) என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வரையறுத்துள்ள பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

சென்னையில் தற்போது உள்ள மக்கள்தொகையைவிட சென்னை பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 3 மடங்காக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர்ப் பகுதியில் (சி.எம்.ஏ.) தற்போது 16 நகராட்சிகள், 20 சிறப்பு நிலை ஊராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இவை அனைத்தும் ஒரே மாதிரியான நகர்ப்புறத் தன்மையுடன் இருந்தாலும் மக்கள்தொகை அடிப்படையில் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனால் இப் பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சென்னையில் ஏற்பட்டுவரும் நெரிசலுக்கும், புறநகர்ப் பகுதிப் பிரச்சினைகளுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண வேண்டும்.

அதற்காக விவசாய நிலங்களையும், கிராமப்புறப் பகுதிகளையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தி துணை நகரம் அமைப்பதை விட புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நகரமாக அறிவிக்கலாம் என்கின்றனர் நகர்ப்புற வளர்ச்சி ஆய்வாளர்கள்.

புதிய மாநகராட்சிகள் சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர திருப்பூர் 7-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மேலும், ஈரோடு,
  2. தஞ்சாவூர்,
  3. வேலூர்,
  4. தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

உள்ளாட்சித் துறையில் இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தேவையைக் கருதி சென்னைக்கு அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தினாலே போதும்: சென்னை மாநகரில் உள்ள அளவுக்கு, புறநகர்ப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம், கழிவுநீர்-குப்பைகள் அகற்றுதல், சாலைகள், துரிதமான போக்குவரத்து ஆகிய வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்தினால் துணை நகரங்கள் தானாகவே உருவாகிவிடும்.

சென்னை புறநகரில் ஒரே மாதிரியான பகுதிகள் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், சில பகுதிகளுக்கு மட்டுமே புதிய திட்டங்களின் பயன்கள் கிடைக்கின்றன.

இவ்வாறு பயன் பெறாமல் பின்தங்கியுள்ள பகுதிகள், மற்ற பகுதிகளுக்கு பிற்காலத்தில் இடையூறாக மாறிவிடும் என சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. விஸ்வநாதன் கூறுகிறார்.

தீர்வு என்ன?

சென்னை பெருநகர்ப் பகுதியில் தாம்பரம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள், அம்பத்தூர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

இவற்றின் வளர்ச்சி வேகம் அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை மதிப்பிட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கிண்டி முதல் மறைமலை நகர் வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும், மதுரவாயல் முதல் மணலி வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Posted in Ambattur, Chennai, Corporation, Government, Guindy, Ideas, Madras, Maduravayal, Manali, Maraimalai Nagar, Satellite City, Suggestions, Tambaram, Tamil, Thoughts | Leave a Comment »

No Child Left Behind in Myriad School Sytem – Tamil Nadu Education

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

சமச்சீர் கல்வி முறை: குழு அமைப்பு

சென்னை, செப். 8: அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கும் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  • நர்சரி,
  • மெட்ரிகுலேஷன்,
  • ஆங்கிலோ-இந்தியன்,
  • மாநில வாரியம்

உள்ளிட்ட பல்வேறு கல்வி முறைகளை ஆய்வு செய்து, ஒரே தரமான கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்திட பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்நிலைப் பள்ளி நிர்வாகங்களின் சங்கத் தலைவர் டி. கிறிஸ்துதாஸ், ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி நிர்வாகி ஜார்ஜ், புதுக்கோட்டை நிஜாம் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். காஜாமுகைதீன், கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆகியோர் உறுப்பினராகவும், பள்ளிக் கல்வி இயக்குநர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Posted in +2, Anglo-Indian, Child, Education, High School, Kid, Matriculation, Nursery, OSLC, School, SSLC, State Board, Tamil, Tamil Nadu | 1 Comment »

Musharaff Accepts Al-Quaeda Operates from Pakistan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

ஆப்கானிஸ்தானுக்கு முஷாரப் அறிவுரை

பாகிஸ்தான் அதிபர் முஷாரப்
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்

ஆப்கானிஸ்தான் தான் சந்தித்துவரும் தீவிரவாதப் பிரச்சனைக்கு தனது நாட்டின் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கோரியுள்ளார்.

தனது ஆப்கான் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, காபூலில் பேசிய அவர், அல்கொய்தாவினரும், தலிபான் போராளிகளும் பாகிஸ்தானுக்குள் இருந்து இயங்குவதை ஒப்புக் கொண்டார்.

ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் அரசிடமிருந்தோ, பாதுகாப்பு அமைப்புக்களிடமிருந்தோ உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் முஷாரப் தெரிவித்தார்.

புதன்கிழமை தங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க உறுதி மேற்கொண்டனர்.

Posted in Afghanisthan, Al Quaeda, Bin laden, Border Patrol, Hamid Karzai, Musharaff, Osama, Pakistan, Relations, Suspect, Taleban, Tamil, Terrorism | Leave a Comment »

Tony Blair – British PM’s Tenure : Analysis

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

டோனி பிளேர் மீதான அழுத்தங்கள்- ஒரு பார்வை

அழுத்தங்களின் மத்தியில் பிளேர்
அழுத்தங்களின் மத்தியில் பிளேர்

பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவர்களை பதவி வுலகக் கோரி அவரது கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னர் பூமிக்கடியில் புவிப்பாறைகள் நகர்வது போன்ற ஒரு மாற்றம், பிரிட்டிஷ் அரசியலில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழும். அத்தகைய ஒரு மாற்றத்தின் போதுதான் டோனி பிளேர் ஆட்சிக்கு வந்தார்.

புதிய சிந்தனைகள் கொண்ட அதே சமயத்தில் தனது கருத்துக்களை திறமையாக வெளிப்படுத்தவல்ல பிளேர், ஒரு இளமையான, நவீனப்படுத்துபவராக நாட்டிற்குத் தன்னைக் காட்டிக்கொண்டார்.

பிளேருக்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது
பிளேருக்கு எதிர்ப்பு அதிகரிக்கிறது

ஆனால், கட்சியில் உள்ள கடும்போக்காளர்கள் மீது மோதியதன் மூலம் அவர் நாட்டு மக்களிடையே செல்வாக்கை தேடிக்கொண்டார். அவர் தனது கட்சியினர் பிடிவாதமாக கொண்டிருக்கும் கொள்கைகளை, கருத்துக்களுக்கு எதிர்வாதங்களை வைப்பதில், அந்த கருத்துக்களை எதிர்கொள்வதை மகிழ்ச்சியுடன் செய்தார்.

இந்த லட்சியத்தின் பின்னால் 1997ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நின்றார்கள்.

ஆனால், இராக் போர் தொழிற்கட்சியை மட்டுமலாமல் நாட்டையும் கருத்து வேறுபாடுகளால் பிளவுபடுத்தியது. அதனுடன், அரசின் மீதிருந்த நம்பிக்கையையையும் விவாதத்துக்குள்ளாக்கியது.

அதிபர் புஷ்ஷுடனான நட்புறவு குறித்து அதிருப்தி நிலவுகிறது
அதிபர் புஷ்ஷுடனான நட்புறவு குறித்து அதிருப்தி நிலவுகிறது

பலருக்கு, அவர் கட்சியின் அடிப்படையான விழுமியங்களிலிருந்து அதிக தூரம் விலகிச்சென்று விட்டார் என்று தோன்றியது. அவர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் வைத்திருந்த நட்பு குறித்து பலர் சங்கடத்துடன் இருந்தார்கள்.

சதாம் ஹுசேன் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று அரசு தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்ட போது, அவரது முடிவெடுக்கும் திறன் பற்றி கேள்விகள் எழுந்தன.

சமீபத்தில், லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பை அவர் கையாண்ட விதம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.

இப்போது, நவீனமயமாக்குவதில் நம்பிக்கை கொண்டிருந்த இவரே, அவரது சக சீர்திருத்தவாதிகளால், தலைமையை புதுப்பிப்பதைத் தடுப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.

வாக்குகளை அள்ளிக்குவிப்பவரான இவர் இப்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதைக் கெடுக்கக்கூடியவராகப் பார்க்கப்படுகிறார்.

Posted in BBC, Britain, Conservative, England, Labor Party, Liberals, London, Op-Ed, PM, Prime Minister, Tamil, Tony Blair, Tories, UK | Leave a Comment »

Indian Ambassador to Sri Lanka pokes her Head in Internal Affairs

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க

இந்தியத் தூதுவர் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதாக இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

இலங்கையின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களின் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ் அவசியமின்றித் தலையிடுவதாகவும், அதனை அவர் உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான, அனுரா பண்டாரநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, “இலங்கையர்களாகிய எமக்கு எமது நாட்டை எவ்வாறு பாரமரிக்க வேண்டுமென்பது நன்கு தெரியும். இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ், அவரது தூதரகத்தின் நடவடிக்கைகளை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். நாம் யாருடன் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து எமக்குத் தெரியும். எமது நாட்டுப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது குறித்து அவர் ஆலோசனை எதனையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆவேசம் பொங்க தெரிவித்திருக்கிறார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், இலங்கையில் இந்தியத் தூதுவராகக் முன்னர் கடமையாற்றிய, காலஞ்சென்ற ஜே.என். டீக்சித், இலங்கை தொடர்பில் தனது தான்தோன்றித்தனமான பிடிவாதம் மிக்க அரசியல் கொள்கையினால்தான் அப்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவிவந்த பரஸ்பர நட்புறவில் விரிசல் ஏற்பட்டது என்றும் இதன்காரணமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அதிகபட்ச விலையாகத் தனது உயிரையே கொடுக்க வேண்டி நேர்ந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனது உரையின் போது, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அண்மையில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இலங்கைக்கான முன்னாள் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகம்மட், தன்மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையான – றோ அமைப்பே காரணம் என இஸ்லாமாபாத்தில் தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டிய பண்டாரநாயக்க, இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் தமது பிணக்குகளிற்கான களமாக இலங்கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியா மறுப்பு

இதேவேளை இலங்கை அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி, எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடுவது இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், இலங்கைக்கான தமது தூதுவரான நிரூபமா ராவ் அவர்கள் ஒரு மூத்த இராஜதந்திரி என்றும், அவர் உயர் தொழில்சார் தரத்துடனேயே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இலங்கை- இந்திய இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது பங்களிப்பு அரசாங்கத்தினால் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Ambassador, Anura Bhandaranayakha, Assassination, Attempt, India, Internal Affairs, JN Dixit, Nirupama Rao, Pakistan, SAARC, Sri lanka, Tamil | Leave a Comment »

Jury announced for Granting Govt. Subsidies for Tamil Cinema

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

திரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு

சென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Posted in Art, Culture, Docu Drama, Documentary, Government, Grants, Justice Bhaskaran, Kollywood, Movie, Saroja Thangavelu, Short Film, Sri Priya, Subsidy, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TN | Leave a Comment »

Professor Sabarwhal murdered by fellow parties ABVP Students?

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

பேராசிரியர் கொலை: 15 நாளில் அறிக்கை தர ம.பி. அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவு

புது தில்லி, செப். 7: பேராசிரியர் சபர்வால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பும்படி மத்தியப்பிரதேச உள்துறைச்செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மாதவா கல்லூரியில் ஆகஸ்ட் 26 ம் தேதி பேரவைத்தேர்தல் நடைபெற்றது. இதை மேற்பார்வையிட்ட பேராசிரியர் சபர்வாலை பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

சம்பவம் நடந்தபோது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக தொலைக்காட்சிகள் ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டன.

ஆளும் பாஜகவின் மாணவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொலைக்கான ஆதாரங்களையும் போலீஸôர் அழிக்க முயற்சி செய்வதாக பேராசிரியர் சபர்வாலின் மகன் ஹிமான்ஷு சபர்வால் மனித உரிமைக்கமிஷனில் புகார் செய்தார்.

அவரது புகாரைப்பெற்றுக்கொண்ட கமிஷன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையில் தானாகவே இந்தப்பிரச்சினையில் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச்செய்திகள் உண்மையாக இருந்தால் நிச்சயமாக இது மனித உரிமைகளை மீறிய செயலாகும. எனவே இதுகுறித்து விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் ஒரு அறிக்கை கேட்கிறார் ஆளுநர்

போபால், செப். 7: மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்தலின் போது பேராசியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில பாஜக அரசை ஆளுநர் பல்ராம் ஜாக்கர் கேட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில அரசு ஏற்கெனவே ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பாஜக மாணவர் அணியைச் சேர்ந்த இருவர் கைதான விவரம் ஆகியவை குறித்து இன்னொரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில அரசை ஆளுநர் ஜாக்கர் கேட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

உஜ்ஜைனியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேரவைத் தேர்தல் நடந்தபோது ஆகஸ்ட் 26 ம் தேதி பேராசியர் சபர்வால் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தில் பாஜக மாணவர் அணியினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதுபோல ஏபிவிபியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகளை காப்பாற்ற முதல்வர் சிவராஜ் சிங் செüகான் முயற்சி செயகிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதையடுத்து இதுவரை நடந்த விசாரணை விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி ஆளுநர் கேட்டுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பேராசிரியர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: இன்னொரு சாட்சி பல்டி

உஜ்ஜைனி, பிப். 7: மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் கல்லூரிப் பேராசிரியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னொருவர் பிறழ் சாட்சியானார். அச் சம்பவம் தொடர்பாக போலீஸôரிடம் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் மறுத்துவிட்டார்.

அதையடுத்து அவரை பிறழ்சாட்சியாக நீதிபதி அறிவித்தார்.

உஜ்ஜைனியில் உள்ள மாதவ் கல்லூரியில், கடந்த ஆண்டு நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததை அடுத்து, அதை ரத்துசெய்தார் பேராசிரியர் எச்.எஸ். சபர்வால்.

அதனால் ஏற்பட்ட தகராறில், பாஜக ஆதரவு மாணவர் சங்கமான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர் அவரை அடித்து உதைத்ததில் அவர் படுகாயமடைந்து இறந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இக் கொலை நடந்தது.

அது தொடர்பான வழக்கு உஜ்ஜைனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனில் குமார் சர்மா முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.

அவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையில், பாஜக தலைவர் சன்வர் பட்டேல் சாட்சியமளித்தார்.

“”பேராசிரியர் சபர்வாலை யாரும் அடித்ததைப் பார்த்ததாக நான் போலீஸôரிடம் வாக்குமூலம் ஏதும் அளிக்கவில்லை” என்று கூறினார் அவர். அதையடுத்து அவரை பிறழ்சாட்சியாக அறிவித்தார் நீதிபதி.

ஏற்கெனவே, திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, வேறு இரு அரசுத் தரப்பு சாட்சிகள், போலீஸôரிடம் கொடுத்திருந்த வாக்குமூலங்களை மறுத்தனர். அவர்களும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் நூலகர் கோவிந்த் சிங் குஷ்வாகா-வும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

“”கல்லூரி ஊழியர் கோமள் சிங்கும் வேறு சிலரும் கூக்குரலிட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்றேன். படுகாயமடைந்திருந்த சபர்வாலை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றேன். ஆனால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று அவர் நீதிபதி முன் கூறினார்.

உஜ்ஜைன் பேராசிரியர் கொலை வழக்கு: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்துக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் – ம.பி. எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

உஜ்ஜைன், பிப். 14: உஜ்ஜைன் கல்லூரிப் பேராசிரியர் சபர்வால் கொலை வழக்கை, மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என அம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி நீதிமன்றத்தில் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள மாதவ் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலின்போது, பாஜக-வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களால் பேராசிரியர் சபர்வால் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக சபர்வால் மகன் ஹிமன்சு தொடர்ந்த வழக்கு விசாரணையில் சாட்சியாக செவ்வாய்க்கிழமை ஆஜரானார் ஜமுனா தேவி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பளித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செüகானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். போபால் போலீஸில் முதல்வர் செüகானுக்கு எதிராக அளித்த புகார், ஆளுநர் பல்ராம் ஜாக்கருக்கு அளித்த மனு ஆகியவற்றின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார் ஜமுனா தேவி. கொலை நடந்த மறுநாள் அதை விபத்து என செüகான் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டதன் மூலம், விசாரணையை திசை திருப்ப முயன்றதுடன், குற்றவாளியை அவர் பாதுகாக்க முயன்றுள்ளார் என ஜமுனா தேவி நீதிபதியிடம் குறிப்பிட்டார்.

ம.பி.யில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசினால் வழக்கு விசாரணை பாதிப்புக்குள்ளாகும். எனவே சபர்வால் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளையும், பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

“பாஜக இந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகளுக்கு சாதகமாக தலையிடுகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் பல்டி அடித்ததன் மூலம் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது’ என அவர் குற்றம் சாட்டினார். “ஆதாரத்தை மறைத்ததற்காகவும், குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததற்காகவும் முதல்வர் செüகான்

Posted in abuse, ABVP, Balram Jakar, Balram Jakkar, Balram Jhakar, Balram Jhakkar, bhopal, BJP, CM, Himanshu Sabarval, Human Rights, Jamuna Devi, Law, Madhav College, Madhya Pradesh, Order, Police, Prsosecution, Sabarvaal, Sabharwal, Sangh Parivar, Shivraj Singh Chauhan, Shivrajsingh Chauhan, Sivaraj Singh Chauhan, Student Union, Tamil, Ujjain, Witness | Leave a Comment »

Vidharbha Farmers plight leads them to Serial Suicides

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

விதர்பாவில் 5 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை

நாகபுரி, செப். 7: மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

விதர்பா ஜன் அந்தோலன் சமிதி (விதர்பா மக்கள் பாதுகாப்பு இயக்கம்) என்ற அமைப்பு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வறட்சியின் காரணமாக கடந்த 15 நாள்களில் 72க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதாவது, ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வரை 828 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 30, ஜூலை 1ம் தேதிகளில் பிரதமர் மன்மோகன்சிங் விதர்பாவிற்கு வந்தார். அப்போது விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டது. அந்த உதவி இதுவரையில் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிதாக பயிர் கடன்களும், திட்டங்களும் வழங்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு கூறுகிறது.

Posted in Agriculture, Farmer, Farming, maharashtra, Manmohan Singh, Suicide, Tamil, Vidarba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha | Leave a Comment »

RM Veerappan Birthday Celebrations – Tamil Scholars felicitation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

ஆர்.எம்.வீ. 81-வது பிறந்த நாள் விழா- தமிழ் அறிஞர்கள் ஐவருக்கு விருது

சென்னை, செப். 7: எம்.ஜி.ஆர். கழகம், கம்பன் கழகம் ஆகியவற்றின் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாள் விழா தமிழ் அறிஞர்களைக் கெüரவிக்கும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் அறிஞர்கள் 5 பேருக்கு தலா ரூ.10,000 கொண்ட பொற்கிழி, தமிழ் செம்மல் விருது ஆகியவற்றை சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.

இதுதொடர்பாக ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாக் குழுச் செயலர் எம். ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:

ஆர்.எம்.வீ. பிறந்த நாள் விழா 9.9.2006-ல் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

பொற்கிழி பெறுவோர்: காலை 10.30 மணிக்குப் பிறந்த நாள் மங்கலம் இலக்கிய விழா நடைபெறுகிறது. தமிழ் அறிஞர் நன்னன், எழுத்தாளர் விக்கிரமன், திருக்குறள் ஆராய்ச்சியாளர் காரைக்குடி லெ. நாராயணசாமி, கவிஞர் சாமி பழனியப்பன், பத்திரிகையாளர் க. திருநாவுக்கரசு ஆகிய 5 பேருக்கும் பொற்கிழி -விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் நினைவுப் பரிசை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வழங்குகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.

Posted in Jagathratchagan, Jegadeesan, K Thirunavukarasu, Kaaraikkudi, Kamban, Karunanidhi, L Narayanasamy, MGR, MK, Nannan, P Chidambaram, RM Veerappan, RMV, Saami Pazhaniappan, Tamil, Thaa Pandiyan, Vikraman | Leave a Comment »

Vande Matharam – National Song’s 100th Anniversary

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

“வந்தேமாதரம்’- வந்தது ஏன்?

தி. இராசகோபாலன்

“வந்தேமாதரம்’ எனும் பாடல் சென்ற யுகத்தின் தவம்; இந்த யுகத்தின் சத்திய வாக்கு. தூக்கிலே தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாவில், கடைசியாக நின்ற கீதம். போராளிகளால் துதிக்கவும் மதிக்கவும் பெற்ற வேதம் – வந்தேமாதரம்!

பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட இப்பாடல் அவருடைய பத்திரிகையாகிய “வங்க தரிசனத்தில்‘ 1882ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. “சோனார் பங்களா’ எனத் தாகூரால் வருணிக்கப்பட்ட வங்காள தேசத்தின் மாண்புகளையும் வனப்புகளையும், விசுவரூப தரிசனமாக எடுத்துச் சொல்லியது வந்தேமாதரம் எனும் பாடல்.

26 வரிகளைக் கொண்ட அப்பாடலில் ஆறு வரிகள் தாம் வங்காள மொழியில்; மற்ற 20 வரிகள் சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது. வந்தேமாதரம் பாடலில் கரைந்து போன மகாகவி பாரதி, “”இதுவே உயிரின் ஒலி!… லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்” என எழுதினார்.

1896ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வங்கக்கவி தாகூர் வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்து, அவரே பாடினார். உடன், ஸ்ரீ அரவிந்தர் அப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வந்தேமாதரம் பாடல் காற்றினிலே வரும் கீதமாய் உலகெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு வந்தேமாதரம் இந்திய நாட்டின் தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்பட்டது. பங்கிம் சந்திரருக்குச் “சாகித்திய சாம்ராட்’ என்ற பட்டத்தையும் தேடித் தந்தது. சட்டர்ஜி அப் பாடலைத் தம்முடைய “ஆனந்தமடம்’ நாவலில் சந்நியாசிகள் பாடுவதுபோல் அமைத்துவிட்டிருந்ததால், அதற்கு இலக்கிய அந்தஸ்தும் மெருகூட்டியது.

அப் பாடல் வங்கதரிசனம் பத்திரிகையில் பிரசுரமானது, ஒரு தற்செயல் ஆக நேர்ந்தது. பத்திரிகை வெளியாக வேண்டிய நாளில் குறிப்பிட்ட இடம் காலியாக இருந்தது – “மேட்டர்’ இல்லாமையினால்! பங்கிம் சந்திரரை கம்பாசிடர் அணுகி செய்தியைச் சொன்னவுடன், விறுவிறுவென்று கற்பனையில் மூழ்கி, வந்தேமாதரம் பாடலை வடிவெடுத்தார். புரூப் பார்க்கும் நேரத்தில் கவிதையைப் படித்த கம்பாசிடருக்குக் கவிதையில் திருப்தி ஏற்படவில்லை. உடன் அவர், அதனைப் பங்கிம் சந்திரரின் மகளிடம் கொண்டுபோய் காட்டினார். மகளும் அக்கவிதையைப் படித்துவிட்டு, அதில் சாரமில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், சட்டர்ஜி அந்த விமர்சனங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ஆத்திரப்படாமல், “”இந்தப் பாடலின் வெற்றி இப்பொழுது உங்களுக்குத் தெரியாது; எதிர்காலம் சொல்லும். ஒரு படைப்பாளனுக்குத்தான் படைப்பின் அருமை தெரியும்” எனச் சொல்லிப் பிரசுரிக்கச் செய்துவிட்டார். “பத்திரிகையில் காலி இடத்தை நிரப்புவதற்காகப் கட்டப்பட்ட அப்பாடல்தான், ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்த நாட்டை விட்டே காலி செய்யப் போகிறது’ என்பதைக் கம்பாசிடரும் மகளும் அறியாமல் போனதில் ஆச்சரியமில்லை. வந்தேமாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீஅரவிந்தர், “”வந்தேமாதரம் பாடல்தான் தேசபக்தியின் மந்திரம் அல்லது சமயம்” என்றார்.

வந்தேமாதரம் பாடலைப் பங்கிம் சந்திரர் எழுதும்போது, அதனைத் தம்முடைய மாநிலத்திற்காகத்தான் எழுதினார்; ஏக இந்தியாவையும் எண்ணிப் பார்த்துப் பாடவில்லை. வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கிட்டு, “”ஏழுகோடிக் குரல்களின் கோஷமும், ஈரேழு கோடிக் கரங்களில் உயர்த்திய கூரிய வாட்களுமுடைய உன்னைச் சக்தியற்றவள் என்று யார் சொன்னார்?” எனப் பாடிவிட்டார். வங்கத்துக்காரரான ஸ்ரீஅரவிந்தரும் ஏழுகோடி மக்கள் – பதினான்கு கோடி கரங்கள் என்றே மொழிபெயர்த்துவிட்டார். அப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்த மகாகவி பாரதியும், அப்பொழுதிருந்த இந்தியாவின் மக்கள்தொகையை மனத்தில் வைத்து, “”முப்பதுகோடி வாய் நின்னிசை முழங்கவும்… அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்காற்றவும்” என ஆவேசத்தில் மொழிபெயர்த்து விட்டார். ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்பதை நின்று நிதானித்து யோசித்த பாரதி, முப்பது கோடி – அறுபது கோடி என்பதை எல்லாம் மறந்துவிட்டு “”கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்…. கோடிகோடி புயத்துணை கொற்றமார்” என இரண்டாவது மொழி பெயர்ப்புச் செய்தார். அசலாக எழுதிய பங்கிம் சந்திரருக்கும், அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸ்ரீஅரவிந்தருக்கும் தோன்றாத காலக்கணக்கும் எண்ணிக்கையும், மகாகவி பாரதிக்குத் தோன்றியது விந்தையல்லவா?

அடிமை இந்தியாவால் தேசியகீதமாக அங்கீகரிக்கப்பட்ட வந்தேமாதரம் பாடல், சுதந்திர இந்தியாவில் தாகூரின் “ஜனகணமன’ பாடலுக்குத் துணைப்பாடலாக மாறியது. இசையமைப்பிற்கும் சச்சரவைத் தவிர்ப்பதற்கும் “ஜனகணமன’ பெரிதும் கைகொடுத்ததால், அதுவே தேசியகீதமாகவும், வந்தேமாதரம் துணைப்பாடலாகவும் பின்பற்றப்பட்டது. “”ஆலயங்கள்தொறும் அணி பெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங்கு உனதே” என வந்தேமாதரம் பாடலில் இடம்பெற்ற விக்கிரக ஆராதனை, ஏகத்தை வணங்குபவர்களுக்குச் சற்று நெருடலைத் தந்தது; துர்க்கை, லட்சுமி, சரசுவதி எனும் சொற்பிரயோகங்களும் உறுத்தலைத் தந்தன.

ஆனந்தமடத்தில் வாழ்ந்த சந்நியாசிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததோடு, ஒழுங்காக ஆட்சி புரியாத முகம்மதியர்களையும் சேர்த்தே எதிர்த்தார்கள். வந்தேமாதரம் பாடலைத் தெருக்கள்தோறும் பாடிக்கொண்டு வந்த ஆனந்தமடத்துச் சந்நியாசிகளின் முழக்கங்களைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆத்திரங்கொண்டார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இசுலாமிய ஆட்சியாளர்களும் அடைந்தனர்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு மதநல்லிணக்கவாதி என்பதை அன்றைக்குப் பலரும் உணரத் தவறிவிட்டனர். “”பல தெய்வ வழிபாடு உண்மையான இந்துமதத்திற்கு ஓர் இழிவாகும்” என்பதை ஆனந்தமடம் நாவலில் பல இடங்களில் சுட்டிச் செல்கிறார். கிரேக்க இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்ற தேவதைகளைக் கிரேக்கக் கவிஞர்கள் எவ்வாறு ஓர் வீரயுகத்தை உருவாக்குவதற்குத் தங்கள் தங்கள் கவிதைகளில் கையாண்டார்களோ, அதைப்போலத்தான் பங்கிம் சந்திரரும் ஓர் ஒருங்குபட்ட தேசிய உணர்வை நாடு முழுவதும் உருவாக்குவதற்குத் துர்க்கை, சரசுவதி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும் சில நிதர்சனங்களை எண்ணிப் பார்த்தால், சுயஉருவங்கள் வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவில் ஆத்திகர்களும் இருக்கிறார்கள்; நாத்திகர்களும் இருக்கிறார்கள். அந்த நாட்டு நாணயங்களில், “இன் காட் வி டிரஸ்டு’ (ஐய் எர்க் ஜ்ங் ற்ழ்ன்ள்ற்) என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்காக எந்த நாத்திகரும் அதனைப் புழக்கத்தில் விடக்கூடாது எனச் சொல்வதில்லை. வளைகுடா நாடுகளில் அந்தந்த நாட்டு மன்னர்களின் உருவங்கள், அந்தந்த கரன்சிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதற்காக உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள், அதனைத் தொட மாட்டேன் எனக் கூறுவதில்லை.

வந்தேமாதரம் பாடல் ஒரு பாடல் மட்டுமன்று; அதுவொரு வரலாறாகும்.

1905இல் வாரணாசியிலே கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் நடக்கின்றது. அக் கூட்டத்திற்கு விடுதைலப் போராட்ட வீரர் ராம்புஜ தத் சவுத்திரியை மணந்திருந்த சரளாதேவியும் (தாகூரின் சகோதரி மகள்) வந்திருந்தார். வந்தேமாதரம் பாடலை வீரத்தோடு பாடக்கூடிய சரளாதேவியை, தடை செய்யப்பட்ட அப் பாடலைப் பாடுமாறு அப் பெருங்கூட்டம் வற்புறுத்தியது. தடை செய்யப்பட்ட பாடலைப் பாடினால், போலீஸôர் புகுந்து கூட்டத்தைக் கலைத்துவிடக் கூடும் என அமைப்பாளர்கள் அஞ்சினர். ஆனால், மக்களின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், பாடலில் சில வரிகளை மட்டும் பாடி விட்டு நிறுத்தி விடுமாறு சரளாதேவிக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார் கோகலே. ஆனால், உணர்ச்சிமயமான கூட்டத்தினரின் முன் தன்னையும் மறந்து முழுப் பாடலையும் பாடிவிட்டார். காவல்துறையினரும் தங்களை மறந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டனர்.

பாரதி பாடியதுபோல், “”நொந்தே போயினும் வெந்தே மாயினும் நம் தேசத்தவர் உவந்து சொல்வது, வந்தேமாதரம்” அல்லவா?.

Posted in Bankhim Chandra Chatterjee, Bengal Dharsahan, bengali, Bharathiyaar, Rabindranath Tagore, Sri Aravindar, Subramaniya Bharathi, Tamil, Vande Matharam, Vandhe Madaram, Vanga Darshan | Leave a Comment »