Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்
என். சுரேஷ்குமார்
ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்
- சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
- துபாயில் 825,
- சிங்கப்பூரில் 791,
- பாகிஸ்தானில் 655,
- மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இதேபோல
- லண்டனில் 239 பேர்,
- அமெரிக்காவில் 218,
- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
- ஆப்பிரிக்காவில் 29 பேர்,
- பெல்ஜியம்,
- டென்மார்க்,
- பிரான்ஸ்,
- ஹாங்காங்,
- லிபேரியா,
- நெதர்லாந்து,
- சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
- இத்தாலி,
- ஸ்பெயின்,
- கிரீஸ்,
- போர்ச்சுகலில் 103 பேர்,
- செக் குடியரசு,
- போலந்து,
- பெலாரஸ்,
- மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.
இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.
இரண்டாவது நமது இந்திய அரசு.
புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.
வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.
இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.
வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.
குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.
இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?
Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007
இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளும் தேர்வு : பாக். அணியில் அக்தர், ஆசிப், உமர்
கராச்சி, பிப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆஷிப், உமர் குல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிவந்த டேனிஷ் கனேரியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பை பெற்றார்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, சபீர் அகமது, ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முழங்கால் வலி, தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த சோயிப் அக்தர், முகமது ஆஷிப் ஆகியோர் முழுமையாக குணமாகாத நிலையிலும் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இம்மாத இறுதியில் உடற்தகுதிச் சோதனை நடைபெற உள்ளது. அதில் தேறாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் முகமது அல்தார் தெரிவித்தார்.
தனது, முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது பாகிஸ்தான்.
வீரர்கள் விவரம்:
- இன்சமாம் உல் ஹக் (கேப்டன்),
- யூனிஸ் கான் (துணைக் கேப்டன்),
- முகமது ஹபீஸ்,
- இம்ரான் நசீர்,
- முகமது யூசுப்,
- சோயிப் மாலிக்,
- அப்துல் ரசாக்,
- ஷாஹித் அஃப்ரிதி,
- கம்ரான் அக்மல்,
- சோயிப் அக்தர்,
- முகமது ஆஷிப்,
- உமர் குல்,
- டேனிஷ் கனேரியா,
- ரானா நவேத் உல் ஹசன்,
- ராவ் இஃப்திகார் அஞ்சும்.
நியூஸிலாந்து அணி: நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேரல் டஃபி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் ஆல்ரவுண்டர் கிறிஸ் மார்ட்டின், ஆண்ட்ரூ ஆடம்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உலகக் கோப்பை போட்டியில் “சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகள் இப் பிரிவில் உள்ளன.
வீரர்கள் விவரம்:
- ஸ்டீபன் பிளெம்மிங் (கேப்டன்),
- வின்சென்ட்,
- பீட்டர் புளுட்டன்,
- ரோஸ் டெய்லர்,
- ஸ்காட் ஸ்டைரிஸ்,
- ஜேக்கப் ஓரம்,
- மெக்மிலன்,
- பிரண்டன் மெக்மிலன்,
- டேனியல் வெட்டோரி,
- ஜேம்ஸ் பிராங்க்ளின்,
- ஜித்தன் படேல்,
- ஷேன் பாண்ட்,
- மார்க் கில்லெஸ்பி,
- மைக்கேல் மாஷன்,
- டேரல் டஃபி.
இங்கிலாந்து அணி: உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ரவி போப்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மால் லோய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.
வீரர்கள் விவரம்:
- மைக்கேல் வாகன் (கேப்டன்),
- ஜேம்ஸ் ஆன்டர்சன்,
- இயான் பெல்,
- ரவி போப்ரா,
- பால் காலிங்வுட்,
- ஜேமி டேரம்பில்,
- ஆண்ட்ரூ பிளிண்டாஃப்,
- எட் ஜோய்ஸ்,
- ஜான் லீவிஸ்,
- சஜீத் முகமது,
- பால் நிக்சன்,
- மான்டி பனேசர்,
- கெவின் பீட்டர்சன்,
- லியாம் பிளங்கெட்,
- ஆன்ட்ரூ ஸ்டிராஸ்.
Posted in 2007, Batsmen, Bowlers, Cricket, England, New Zealand, Pakistan, Players, teams, WC, WC2007, West Indies, wicketkeeper, WK, World Cup | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007
ஐ.சி.சி. தரவரிசை: தோனி முன்னேற்றம்
துபை, பிப். 5: ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி (படம்) 3-ம் இடத்துக்கு முன்னேறினார்.
துபையில் உள்ள ஐசிசி ஞாயிற்றுக்கிழமை ஒரு தின கிரிக்கெட் வீரர்கள், அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ஓரிடம் முன்னேற்றம் கண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
3-ம் இடத்திலிருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் 6-ம் இடத்திலிருந்து 4-ம் இடத்துக்கு தோனி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது முதல் 20 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் 4 பேர் உள்ளனர்.
தோனியைத் தவிர சச்சின் 18-வது இடத்திலும், கேப்டன் திராவிட் 12-ம் இடத்திலும், யுவராஜ் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.
மற்றபடி பந்து வீச்சாளர்கள் வரிசையிலோ, பேட்ஸ்மேன்கள் வரிசையிலே குறிப்பிடும்படியான மாற்றம் ஏதும் இல்லை.
அணிகள்:அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 6-ம் இடத்திலேயே உள்ளது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு தினதொடரைக் கைப்பற்றிய போதும், புள்ளிக்கணக்கில் போதுமான முன்னேற்றம் இல்லாததால் இந்தியாவுக்கு இந்த நிலைமை.
இம்மாதம் 8-ந்தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான ஒரு தினத் தொடரையும் இந்திய அணி வென்றால், தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.
மோசமான ஃபார்ம் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் பதான் 21-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹர்பஜன்சிங் 13-ம் இடத்திலும், அகர்கர் 17-ம் இடத்திலும் உள்ளனர்.
Posted in 1 day, 50 overs, Adam Gilchrist, Ajit Agarkar, Andrew Flintoff, Andrew Symonds, Australia, Batsmen, Brett Lee, Chris Gayle, Cricket, Daniel Vettori, Dhoni, Doni, Dravid, Glenn McGrath, Harbhajan Singh, India, Indian, Irfan Pathan, Jayasuriya, Jayasurya, Kevin Pietersen, LG ICC, LG ICC ODI, Mahendra Singh Dhoni, Makhaya Nitini, match, Matches, Mike Hussey, New Zealand, ODI, One day, One Day International, Pakistan, player, Rahul Dravid, rankings, Ricky Ponting, Sachin, Sachin Tendulkar, Sanath Jayasuriya, Sangakkara, Shaun Pollock, South Africa, Sri lanka, Tendulkar, wicketkeeper, World Cup, Yuvraj, Yuvraj Singh | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006
பிஜியின் ராணுவத்துக்கு காமன்வெல்த் கண்டனம்
Bainimarama topples government as it pardons jailed coup plotters
 |
 |
ரோந்துப் பணியில் இராணுவத்தினர் |
பிஜி தீவில், அரசை ராணுவம் கவிழ்த்ததை காமன்வெல்த் கொள்கைகள் அனைத்தையும் மீறிய செயல், என்று காமன்வெல்த் தலைமைச்செயலர் டோன் மெக்கின்னன், கூறியுள்ளார்.
பிஜி ஒருவேளை காமன்வெல்த்திலிருந்து இடை நீக்கம் செய்யப்படக்கூடும் என்று அவர் கூறினார்.
பிஜி நாட்டு ராணுவத்தின் மீது தடைகளை விதிக்கப்போவதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு பசிபிக் பிராந்திய அரசுகளும் கூறியுள்ளன.
இந்த ராணுவ அதிரடி ஆட்சி மாற்றம், பிஜியில் ஜனநாயக வழிமுறைக்கு ஒரு பெருத்த பின்னடைவு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கரட் பெக்கட் கூறினார்.
காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு ஒன்று லண்டனில் வெள்ளிக்கிழமை கூடி இந்த விடயத்தில் மேல் நடவடிக்கை குறித்து ஆராயும்.
பிஜி பிரதமர் லைசெனியா காரசெ நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வதால் அவரைப் பதவியிலிருந்து அகற்றித் தான் அதிபர் பதவியை தற்காலிகமாக எடுத்துக்கொள்வதாக கமோடார் பைனிமரமா கூறினார்.
Posted in Aid, Army, Australia, Commonwealth, Don McKinnon, economic sanctions, Fiji, Frank Bainimarama, Great Council of Chiefs, Immigrants, India, Jona Senilagakali, Laisenia Qarase, Military, New Zealand, pardons, Prisoners, Ratu Josefa Iloilo, Visitors | Leave a Comment »