Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Matches’ Category

Sports in 2007 – Recap, Timeline, Incidents, News, Flashback: Cricket, India, Hockey

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

விளையாட்டு

ஜனவரி

ஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் லாங்கர் ஓய்வு.

* 2700 ஈலோ புள்ளிகளை கடக்கும் இந்தியாவின் 2 வது செஸ் வீரர் என்ற சாதனையை சசிகிரண் படைத்தார்.

ஜன.3: சர்வதேச கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் 1000 விக்கெட்டுகளை எட்டினார்.

ஜன.5: ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 50 என கைப்பற்றியது.

ஜன.6: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 21 என வென்றது.

ஜன.7: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பட்டத்தை பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் கைப்பற்றினார்.

* பிரிமியர் ஹாக்கி லீக் பட்டத்தை பெங்களூரு லயன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. பைனலில் 30 என ஐதராபாத் சுல்தான்சை வென்றது.

ஜன.18: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா 36, 26 என்ற செட்களில் ஜப்பானின் அய்கோவிடம் வீழ்ந்தார்.

ஜன.20: தேசிய பெண்கள் ஜுனியர் கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் மணிப்பூர் 50 என தமிழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

ஜன.21: 19 வயதுக்குட்பட்டோருக்கான வினு மன்கட் கிரிக்கெட் கோப்பையை 96 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து மகாராஷ்டிரா கைப்பற்றியது.

ஜன.26: ஈரானை 1929 என வீழ்த்தி இரண்டாவது கபடி உலக கோப்பையை இந்திய அணி வசப்படுத்தியது.

* மூனிச்சில் நடந்த ஆண்கள் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ.,ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜாகிர்கான் தங்கம் வென்றார்.

* யு.ஈ.எப்.ஏ.,தலைவர் தேர்தலில் பிரான்ஸ் கால்பந்து ஜாம்பவான் மைக்கேல் பிளாட்டினி வெற்றி பெற்றார்.

ஜன.27:ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வென்றார்.

பிப்ரவரி

பிப்.3: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த”டுவென்டி20′ போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

பிப்.8: பாரிஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் வென்றார்.

பிப்.9: 33 வது தேசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தியில் துவங்கியது.

பிப்.17: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 21 என வென்றது.

பிப்.18: தேசிய விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்தன.

* பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரில் யரோஸ்லோவா சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

பிப்.21: ஐ.சி.சி.,ஒரு நாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தோனி 2 ம் இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச்

மார்ச் 1: வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டு சென்றனர். பயங்கரவாதிகளின் மிரட்டலையடுத்து முதன் முறையாக வீரர்கள் தேசிய பாதுகாப்பு படையுடன் சென்றனர்.

மார்ச் 4: ஸ்குவாஷ் தர வரிசையில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 45 வது இடத்துக்கு முன்னேறினார்.

மார்ச் 6: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 182 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 8: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு போட்டிகளை “டிடி’யில் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்ற மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப் பட்டது.

மார்ச் 9: வெஸ்ட் இண்டீசுக்குஎதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ச் 12: உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் துவங்கின.

* செஸ் தரவரிசையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடத்தை கைப்பற்றினார்.

மார்ச் 13: உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 54 ரன் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 16: வங்கதேச கிரிக்கெட் வீரர் மஞ்சுரல் இஸ்லாம், பைக் விபத்தில் பலியானார். மிகக் குறைந்த வயதில் (22) பலியான டெஸ்ட் வீரர் இவர்தான்.

* நெதர் லாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்து சாதனை.

மார்ச்17: வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

* உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வென்றது.

மார்ச் 19: சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்சமாம் அறிவித்தார்.

*பெர்முடாவுக்கு எதிரான போட்டியில் 413 ரன்கள் எடுத்த இந்திய அணி உலக கோப்பையில் அதிக பட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனை நிகழ்த்தியது.

மார்ச் 23: இலங்கைக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

மார்ச் 24: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 66 பந்தில் சதம் அடித்த ஆஸ்திரேலியாவின் ஹைடன், உலக கோப்பையில் அதி வேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை.

மார்ச் 29: உலக கோப்பையில் படுதோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

* அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மார்ச் 30: ஒரு நாள் போட்டிகளிலிருந்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் கும்ளே ஓய்வு.

ஏப்ரல்

ஏப்.4: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை சாப்பல் ராஜினாமா.

ஏப்.14: ஏ1 கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயத்தில் இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் ஐந்தாம் இடம் பிடித்தார்.

ஏப்.21: தேசிய அளவில் நடத்தப்பட்ட அறிமுக “டுவென்டி20′ தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஏப்.27: நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பிளமிங் ராஜினாமா செய்தார்.

ஏப்.28: உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. பைனலில் இலங்கை அணியை வென்றது.

* பீஜிங் ஒலிம்பிக் தொடருக்கான ஜோதி மும்பை வந்தடைந்தது.

மே

மே 2: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தபால் தலை வெளியிடப்போவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு.

மே 5 : முதல் தரப் போட்டிகளிலிருந்து தமிழக வீரர் சரத் ஓய்வு.

மே 6 : சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் ஓய்வு.

* இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த முறையை ரத்து செய்த பி.சி.சி.ஐ., செயல்பாடுகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்போவதாக அறிவிப்பு.

மே 13: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணிக்கு அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவர்ட் தடை விதித்தார்.

மே 14: இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து டாம்மூடி விலகல்.

மே 15: வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 20 என கைப்பற்றியது.

* ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

மே 21: பிரேசில் கால்பந்து வீரர் ரொமாரியோ டி சவுசா ஆயிரம் கோல் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

மே 23: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 21 என வென்றது.

* போதை மருந்து பயன்படுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணிந்தர் சிங் கைது.

மே 26: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக், ஜாபர், டிராவிட், சச்சின் என நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் சதம் கடந்து புதிய சாதனை படைத்தனர்.

மே 27: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

மே 29: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரேக் புளுவட் சர்வதேச போட்டிகளியிலிருந்து ஓய்வு.

ஜூன்

ஜூன் 8: ஐ.சி.சி., தற்காலிக தலைவராக தென் ஆப்ரிக்காவின் ரே மாலி தேர்வு.

ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூன் 10: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று, ஸ்பெயினின் ரபேல் நடால் சாதனை.

ஜூன் 11: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க கிரஹாம் போர்டு மறுப்பு.

ஜூன் 12: சேவக், ஹர்பஜன் மற்றும் முனாப், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கம். தோனி துணைக் கேப்டனாக நியமனம்.

ஜூன் 16: இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்தில் தோனி மற்றும் யுவராஜ் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம். சேவக், ஹர்பஜன், லட்சுமண் மற்றும் பதான் “பி’ பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.

ஜூன் 18: ஆசிய தடகள கிராண்ட்பிரிக்சில் இந்தியா 3 தங்கம் உட்பட 12 பதக்கம் வென்றது.

ஜூன் 19: இங்கிலாந்து தொடரில் பேட்டியளிக்க இந்திய வீரர் களுக்கு தடை.

* 30 ஆண்டுகளுக்கு பின் ஐ.சி.சி., டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான “டாப்10′ பட்டியலுக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை மான்டி பனேசர் பெற்றார்.

ஜூன் 21: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் பாட்டீல், இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் இணைந்தார்.

ஜூன்28: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அதிர்ச்சி தோல்வி.

ஜூலை

ஜூலை1: அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்றது.

* பெல்ஜியத்தில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு வெண்கலம்.

ஜூலை 2: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக் கான பாகிஸ்தான் அணியி லிருந்து முன்னணி வீரர்கள் முகமது யூசுப், அப்துல் ரசாக் நீக்கம்.

ஜூலை 3: ஸ்காட்லாந்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து.

ஜூலை7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க போவதில்லை என சச்சின், கங்குலி, டிராவிட் அறிவிப்பு.

* விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன்.

ஜூலை8: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனை.

ஜூலை 9: ஸ்பெயினில் நடந்த லியோன்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் “ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 13: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்ற ஒரு நாள் தொடர் கோப்பை காணாமல் போனது.

ஜூலை 16: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஜெப் லாசன் நியமனம்.

ஜூலை 17: டெஸ்ட் போட்டிக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலிலிருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.

ஜூலை 20: இத்தாலி கால்பந்து வீரர் பிரான்சிஸ்கோ டோட்டி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

ஜூலை 28: இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்டில் சச்சின் 11,000 ரன்கள் கடந்தார். இச்சாதனை செய்யும் மூன்றாவது வீரராவார்.

ஜூலை 29: இங்கிலாந்தின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய வம்சவாளி வீரர் மான்டி பனேசர் தேர்வு.

ஆகஸ்ட்

ஆக.5: <உலக கோப்பை வில்வித்தை தொடரில் இந்தியாவின் டோலா பானர்ஜி “ரிகர்வ்’ பிரிவில் தங்கம் வென்றார்.

ஆக. 7: “டுவென்டி20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

ஆக.11: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் மைக்கேல் வானை வீழ்த்தி சர்வதேச அரங்கில் 900 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை கும்ளே பெற்றார்.

ஆக.13: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 10 என கைப்பற்றியது.

ஆக.16: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அனுப் ஸ்ரீதர் முன்னேற்றம்.

ஆக.20: ஐம்பதாவது ஏ.டி.பி., பட்டம் வென்று பெடரர் அசத்தல்.

ஆக.23: ரயில்வே மைதானங்களை ஐ.சி.எல்., அமைப்பு பயன்படுத்தி கொள்ள மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல்.

ஆக.24: ஐ.சி.எல்., அமைப்புக்குசவாலாக இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,), இந்திய கிரிக்கெட் போர்டு அறிமுகப்படுத்தியது.

ஆக. 26: ஐ.பி.எல்., அமைப்பில் தமிழக வீரர் பதானி இணைந் தார்.

ஆக. 29: அஞ்சும் சோப்ரா(கிரிக்கெட்), சுனிதா குல்லு (ஹாக்கி), கே.எம்.பீனு (தடகளம்), விஜய குமார்(துப்பாக்கி சுடுதல்), சேட்டன் ஆனந்த (பாட்மின்டன்) உள்ளிட்ட 14 பேருக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அர்ஜுனா விருது வழங்கினார்.

செப்டம்பர்

செப். 2: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 20 கோல் அடித்து இத்தொடரில் புதிய சாதனை படைத்தது.

* தென் ஆப்ரிக்க ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ ஹால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 4: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இலங்கை வீரர் உபுல் சந்தனா ஓய்வு.

செப். 7: சகவீரர் ஆசிப் தொடையில் தாக்கிய அக்தர் “டுவென்டி20′ உலக கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கம்.

செப். 8: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 34 என பறி கொடுத்தது.

செப். 9: யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் ஒற்றையரில் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

செப். 10: யு.எஸ்., ஒபனில் கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 12வது கிராண்ட்ஸ்லாம் வென்றார்.

செப். 11: முதல் “டுவென்டி20′ உலக கோப்பை தொடர் தென் ஆப்ரிக்காவில் துவங்கியது. துவக்க ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல், “டுவென்டி20’ல் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* ஐ.சி.சி.,யின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி தட்டிச் சென்றார்.

செப். 12: நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு.

செப். 13: “டுவென்டி20′ உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோல்விய டைந்த வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலே வெளியேறியது.

செப். 14: கேப்டன் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் திடீர் ராஜினாமா.

செப். 18: ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு.

செப். 26: உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு.

* கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு குவிய, ஆசிய கோப்பை ஹாக்கி வென்ற இந்திய வீரர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு.

செப். 27: பி.சி.சி.ஐ.,யின் புதிய சம்பள ஒப்பந்த அறிவிப்பில் ஜாகிர் கான் “ஏ’ பிரிவுக்கு முன்னேற்றம்.

செப். 28 : ஆசிய கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைவராக ரவி சாஸ்திரி நியமனம்.

அக்டோபர்

அக். 1: இந்தியன் கிரிக்கெட் போர்டு நடத்தும் ஐ.பி.எல்., அமைப்பில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா இணைந்தார்.

அக். 3: பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பவுச்சர் (396)அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார்.

அக். 4: இலங்கை அதிரடி மன்னன் ஜெயசூர்யா 400வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

அக். 5: உலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் பரிசு .

அக். 6: ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

அக். 8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய சச்சின் ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் கடந்தவர் என்ற சாதனை படைத்தார்.

அக். 11: சகவீரர் ஆசிப்பை தொடையில் தாக்கிய விவகாரத்தில் பாகிஸ்தானின் அக்தருக்கு 13 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அக். 12: சர்வதேச போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஓய்வு.

அக். 17: இந்தியாவுடனான ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 42 என வென்றது.

அக். 21: உலக ராணுவ விளையாட்டு போட்டியில் இந்தியா 19வது இடம்பிடித்தது.

அக். 27: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து டிராவிட் நீக்கம்.

நவம்பர்

நவ.1: இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் விலகினார்.

* ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடிக் கவே, சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து சுவிட் சர்லாந்தின் ஹிங்கிஸ் ஓய்வு.

நவ.2: மக்காவ் நகரில் நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளின் செஸ் பிரிவில் இந்தியாவின் சசிகிரண் தங்கம் வென்றார்.

நவ.3: ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு வார்ன் முரளிதரன் கோப்பை என பெயரிடப் பட்டது.

நவ.5: இந்தியபாகிஸ்தான் அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் கவுகாத்தியில் துவங்கியது.

* பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை அர்ஜென்டினாவின் நள்பாந்தியன் கைப்பற்றினார். பைனலில் ஸ்பெயினின் நாடலை வீழ்த்தினார்.

நவ.6: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சச்சின் மறுப்பு.

* இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப் பட்டன.

நவ.8: டெஸ்ட் அணிக்கான இந்திய கேப்டனாக கும்ளே நியமிக்கப்பட்டார்.

நவ.12: மாட்ரிட் ஓபன் தொடரில் பெல்ஜியத்தின் ஹெனின் பட்டம் வென்றார்.

* முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கே.சி.இப்ராகிம் மரணமடைந்தார்.

நவ.13: தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக உலகின் “நம்பர்1′ டென்னிஸ் வீரராக சுவிட்சர்லாந்தின் பெடரர் தேர்வு செய்யப்பட்டார்.

நவ.17: டெஸ்ட் அரங்கில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கில்கிறிஸ்ட் படைத்தார்.

நவ.20: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 20 என கைப்பற்றியது.

நவ.24: பாகிஸ்தான் வீரர்களுக்கு பயங்கரவாதிகள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நவ.30: இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் பஞ்சகுலாவில் துவங்கின.

டிசம்பர்

டிச. 5: லால் பகதுõர் பெண்கள் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

டிச. 6: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் துவங்கின.

* ஐ.சி.சி.,டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சங்ககரா முதலிடம் பிடித்தார்.

டிச. 7: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

டிச. 10: காமன்வெல்த் வலுதுõக்குதல் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிச. 12: 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்திய அணி கைப்பற்றியது.

அ. சிறப்பு தகவல்கள்

1. உல்மர் மரணம்

முன்னாள் இங்கிலாந்து வீரரும், பாகிஸ் தான் பயிற்சியாளருமான பாப் உல்மர், மார்ச் 18 ம் தேதி கிங்ஸ்டனில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவரது மரணம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

2. முடி சூடா மன்னன்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரை தொடர்ந்து மூன்றாம் முறையாக “நம்பர்1′ வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர் கைப்பற்றினார். இறுதி போட்டியில் சிலியின் பெர்னாண்டோ கோன்சாலசை வீழ்த்தினார். டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னனாக வலம் வருகிறார்.

3. கபில் தலைமையில் ஐ.சி.எல்.,

வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததையடுத்து, பி.சி.சி.ஐ.,அமைப்புக்கு சவாலாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,)என்ற அமைப்பை “ஜீ’ டிவி உருவாக்கியது. இதன் செயற்குழு தலைவராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டார்.

4. கோப்பை உற்சாகம்

உள்ளூரில் சூரப்புலிகள் என்பதை இந்திய அணி மீண்டும் ஒரு முறை நிரூபித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரை 31 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வதோதராவில் நடந்த நான்காவது போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோப்பையுடன் டிராவிட்.

5. சைமண்ட்ஸ் சர்ச்சை

இந்தியாவுக்கு எதிரான வதோதரா போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கறுப்பு இன வீரரான சைமண்ட்சை “குரங்கு’ என ரசிகர்கள் கேலி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அடுத்து நடந்த நாக்பூர் போட்டியிலும் ரசிகர்களின் கேலி தொடர, கிரிக்கெட்டில் மீண்டும் இனவெறி சர்ச்சை வெடித்தது.

6. முதன் முறையாக…

அயர்லாந்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 21 என வென்று, கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் அன்னிய மண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை முதன் முறையாக வென்று சாதித்தது. கோப்பையுடன் உற்சாக “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

7. உயரிய விருது

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மானவ்ஜித் சிங் சாந்து 2006ம் ஆண்டு நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். இவரை கவுரவிக்கும் வகையில் 200607ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் பதக்கத்தை பெற்றுக் கொள்ளும் மானவ்ஜித்.

8. கும்ளே சதம்

ஓவல் டெஸ்டில் பிரமாதமாக பேட் செய்த கும்ளே முதல் சதம் கடந்து அசத்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேனை போல் விளையாடிய இவர் 110 ரன்கள் எடுத்து டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் வரிசையில் சதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

9. விடைபெற்றார் ஜோன்ஸ்

ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ் அதற்காக அமெரிக்க மக்களிடமும் தனது ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

10. தங்க மங்கை

பெண்கள் செஸ் அரங்கில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பியின் ஆதிக்கம் தொடர்ந்தது. மக்காவ் நகரில் 22 நாடுகள் பங்கேற்ற இரண்டாவது ஆசிய உள்ளரங்கு செஸ் போட்டிகள் நடந்தன. இதில் உலகின் “நம்பர்2′ வீராங்கனையான ஹம்பி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார்.

11. ஹாக்கியில் கலக்கல்

சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, கொரியாவை 72 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று, கோப்பை கைப்பற்றியது. தேசிய விளையாட்டான ஹாக்கியில் கோப்பை வென்ற உற்சாகத்தில் “போஸ்’ கொடுக்கும் இந்திய வீரர்கள்.

12. சென்னை சூப்பர்ஸ்டார்ஸ்

அரியானா மாநிலம் பஞ்சகுலாவில் ஐ.சி.எல்., அமைப்பு நடத்திய “டுவென்டி20′ தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகர் லயன்சை வீழ்த்தி கோப்பை வென்றது. மகிழ்ச்சியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணியினர்.

Posted in 20, 20-20, 2007, 2020, America, athletics, Aus, Australia, baseball, Century, championships, Chronology, Commonwealth, Cricket, Cup, Dhoni, Disqualify, Dope, Faces, Flashback, Football, Games, Ganguly, Hockey, ICC, ICL, Incidents, Jones, Kapil, Kumble, Lara, Losers, Matches, Mirza, Monkey, Murali, Muralidharan, Muthiah, News, Notable, ODI, people, Players, Race, racism, Racists, Recap, Records, Sachin, Sania, Soccer, Spectator, Sports, steroids, Symonds, T20, Tendulkar, Tennis, Tests, Timeline, TV, US, USA, Warne, Winners, Zee | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

Tendulkar back in top-20 ODI rankings

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

ஐ.சி.சி. தரவரிசை: தோனி முன்னேற்றம்

துபை, பிப். 5: ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி (படம்) 3-ம் இடத்துக்கு முன்னேறினார்.

துபையில் உள்ள ஐசிசி ஞாயிற்றுக்கிழமை ஒரு தின கிரிக்கெட் வீரர்கள், அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

அதில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ஓரிடம் முன்னேற்றம் கண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

3-ம் இடத்திலிருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் 6-ம் இடத்திலிருந்து 4-ம் இடத்துக்கு தோனி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் 20 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் 4 பேர் உள்ளனர்.

தோனியைத் தவிர சச்சின் 18-வது இடத்திலும், கேப்டன் திராவிட் 12-ம் இடத்திலும், யுவராஜ் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.

மற்றபடி பந்து வீச்சாளர்கள் வரிசையிலோ, பேட்ஸ்மேன்கள் வரிசையிலே குறிப்பிடும்படியான மாற்றம் ஏதும் இல்லை.

அணிகள்:அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 6-ம் இடத்திலேயே உள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு தினதொடரைக் கைப்பற்றிய போதும், புள்ளிக்கணக்கில் போதுமான முன்னேற்றம் இல்லாததால் இந்தியாவுக்கு இந்த நிலைமை.

இம்மாதம் 8-ந்தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான ஒரு தினத் தொடரையும் இந்திய அணி வென்றால், தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

மோசமான ஃபார்ம் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் பதான் 21-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹர்பஜன்சிங் 13-ம் இடத்திலும், அகர்கர் 17-ம் இடத்திலும் உள்ளனர்.

Posted in 1 day, 50 overs, Adam Gilchrist, Ajit Agarkar, Andrew Flintoff, Andrew Symonds, Australia, Batsmen, Brett Lee, Chris Gayle, Cricket, Daniel Vettori, Dhoni, Doni, Dravid, Glenn McGrath, Harbhajan Singh, India, Indian, Irfan Pathan, Jayasuriya, Jayasurya, Kevin Pietersen, LG ICC, LG ICC ODI, Mahendra Singh Dhoni, Makhaya Nitini, match, Matches, Mike Hussey, New Zealand, ODI, One day, One Day International, Pakistan, player, Rahul Dravid, rankings, Ricky Ponting, Sachin, Sachin Tendulkar, Sanath Jayasuriya, Sangakkara, Shaun Pollock, South Africa, Sri lanka, Tendulkar, wicketkeeper, World Cup, Yuvraj, Yuvraj Singh | Leave a Comment »