Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Indian’ Category

Indian Budget 2007-08 : Preview analysis – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பட்ஜெட் பற்றிய குறிப்புகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகலில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையை நிதிநிலை அறிக்கைக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். அதில்தான் மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து அறியப்படும்.

நிதிநிலை அறிக்கையைப் பற்றி சில குறிப்புகள்: நமது அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்ஜெட்’ என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்கு சென்றார். அத்தோல் பைக்கு “பட்ஜெட்’ என்று பெயர். அந்தப் பைக்கு உரிய பெயர், நாளடைவில் அதன் உள்ளே இருந்த ஆவணங்களுக்கு ஆகுபெயராகியது. இந்திய அரசியலமைப்பில் இதற்கு “ஆண்டு நிதிநிலை அறிக்கை’ என்னும் பெயரே வழங்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அடுத்துவரும் ஆண்டில் கிடைக்கக்கூடிய வரவுகளையும், செலவுகளையும் துல்லியமாக மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகால செலவினங்களையும் வருங்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய செலவு மதிப்பீடுகளையும் கருத்தில்கொண்டு இம் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

நிதிநிலை அறிக்கையில், அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – செலவினங்கள் என்பதில் கூறப்பட்டுள்ள மொத்தச் செலவை, அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – வரவினங்கள் என்று கூறப்பட்டுள்ள வருவாயிலிருந்து கழித்தால் வருவாய் உபரி கிடைக்கிறது. இதனைக் கொண்டு அந்த ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் செய்யப்படுகின்றன. எனினும், சமீப காலங்களில் வழக்கமாக, வருவாயைவிட செலவு அதிகமாக இருந்து வருகிறது. இது வருவாய்ப் பற்றாக்குறை என்ற அடிப்படையில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிலைநிதிக்குழு – அமைச்சரவை ஒப்புதல்: இந்தப் பகுதி – ஐஐ செயற்குறிப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளால் தயாரிக்கப்பட்டு, திட்டக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. திட்டக்குழு, திட்டமிடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, உயர் முன்னுரிமை வாய்ந்த திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்கிறது.

இக்குழு, ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது. துறைகளின் ஒவ்வொரு திட்டத்தையும், துறைகளுக்கு இடையேயான ஒவ்வொரு திட்டத்தையும் முன்னுரிமைகளையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில்கொள்கிறது.

இறுதியாக புதிய திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. பகுதி – ஐ, பகுதி – ஐஐ மதிப்பீடுகளைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டு முடிவாக உருப்பெரும் இறுதி வடிவம், பொதுவாக, மத்திய திட்டக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட அளவுக்கேற்பவும், அக்குழுவின் பரிந்துரைகளின்படியும் அமைகிறது.

நிதி ஒதுக்கீடு: இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏற்பளித்தவுடன் அதில் விவரிக்கப்பட்டுள்ள செலவுகளைச் செய்ய அரசு அனுமதியளிக்கிறது. இதுவே “நிதி ஒதுக்கீடு’ என்று அழைக்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்ட முன் மதிப்பீடுகள்: வரப்போகும் ஆண்டில் பல்வகை ஆதாரங்களிலிருந்தும் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரவுகளை மதிப்பிடுதல்.

இந்தப் பணத்தையும் முந்தைய ஆண்டின் கையிருப்பையும் ஒருங்கு சேர்த்தால் எதிர்பார்க்கப்படும் எல்லாச் செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து மதிப்பிடுதல்.

வரவையும் செலவையும் ஈடுகட்ட வரி விதிப்பை எந்த அளவுக்குக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பதை முடிவு செய்தல் ஆகியவையாகும்.

“தொகு நிதி’ – Consolidated Fund என்பது வரவு – செலவுத் திட்ட அறிக்கை – ஐ -) வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் காட்டப்பட்டுள்ளபடி, ஓர் ஆண்டில் கிடைக்கும் அரசின் இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது.

“சாட்டிய செலவுகள்’ (Charged Expenditure) என்பவை தொகு நிதியில் முதல் பொறுப்பாக உள்ள செலவுகள் ஆகும். இவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை.

“எதிர்பாராத செலவு நிதி’ (Contingency Fund) என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்னர் நிர்வாகத்தினரின் அவசரச் செலவுகளுக்கு வகை செய்வதாகும்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பற்றிய பல சுவையான விவரங்கள்:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதாவது நாலைந்து மாதங்களுக்கு முன்பே மத்திய நிதியமைச்சகம் இப்பணியைத் தொடங்கி விடுகிறது. நிதியமைச்சகத்தின் செயலாளர் பொருளாதார நிபுணர்களுடனும், நிதி ஆலோசகர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் இதர பல தரப்பினருடனும் இதுகுறித்து ஆலோசிக்கிறார். பின் நிதித்துறை ஒவ்வோர் அமைச்சகத்தின் செலவு குறித்து அறிக்கையைப் பெறும். இறுதியாகக் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு நகல் அறிக்கை “தேசிய தகவல் மையத்திற்கு’ அனுப்பப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு மிகவும் ரகசியமாக நடக்கிறது. அதைத் தயாரிக்கும் நிதித்துறை அலுவலகத்துக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அங்கு நூறு பேர் பணியில் இருப்பார்கள். துணைச் செயலாளர்கள், அச்சடிப்போர், பிழை திருத்துவோர், பைண்டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பர். இவர்கள் தங்கும் இடத்தில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து தரப்படும். அங்கு பூட்டிய தொலைபேசி மட்டும் இருக்கும். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும்தான் அதைப் பயன்படுத்த முடியும். இவர்களுக்குத் தேவையான உணவு நிதி அமைச்சக உணவு விடுதியிலிருந்து தயார் செய்து பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படும். இப்பணியில் ஏழு நாள்கள் ஈடுபட்டு இருப்போருக்கு பரிசுகளும், மூன்று மடங்கு ஊதியம் உயர்த்தியும் தரப்படும்.

பட்ஜெட் பிரதிகள் மொத்தம் 12,500 அச்சடிக்கப்படும். அந்த அச்சகத்திற்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி நிதிநிலை அறிக்கையின் விவரங்களோ நிதிநிலை அறிக்கையோ வெளியே தெரிந்தால் அரசு வெளியேற வேண்டும் என்ற மரபும் நடைமுறையில் உள்ளது. தேர்வெழுதும் மாணவரின் கேள்வித்தாள் போன்று பட்ஜெட் ரகசியம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய “சிதம்பர’ ரகசியமே.

தற்போது வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் நாட்டின் 61-வது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை வழங்கியது ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான். மத்திய நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் 5-வது தமிழர் ப.சிதம்பரம். இதற்கு முன் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி .டி . கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.

எட்டு முறை பட்ஜெட்டுகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தயாரித்து வழங்கிய மொரார்ஜி தேசாயின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

எனினும், 1951 – 52ஆம் ஆண்டிலிருந்து 1956 – 57 வரை மொத்தம் ஏழு பட்ஜெட்டுகளை (ஆறு முழுமையானவை, ஒரு இடைக்கால பட்ஜெட்) தொடர்ந்து வழங்கி சாதனை புரிந்துள்ளார் சி.டி . தேஷ்முக்.

நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயரும். அதுபோல் மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்ற அடிப்படைக்கு ஆதாரம் ஜனநாயகத்தில் ஆட்சியாளரின் வரவு – செலவுத் திட்டங்கள் ஆகும்.

இந்த வரவு – செலவுத் திட்டங்கள் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் சிந்தித்து தங்களுடைய கடமைகளை ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், தலைமைக் கழக செயலாளர்}மறுமலர்ச்சி திமுக).

Posted in 2007, 2007-08, Analysis, Backgrounder, Budget, Cabinet, Chidambaram, Chidhambaram, Commerce, Consolidated Fund, Details, Economy, Finance, India, Indian, P Chithambaram, Predictions, Preview, revenue, Tax | Leave a Comment »

Bihar Government to keep tabs on doctors through a specially-designed website

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007

பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு

பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in activism, Attendance, Bihar, Chief Minister, Complaints, Corruption, doctors, Government, Healthcare, Hospitals, Indian, Instruments, Law, Machines, Madhepura, Malpractice, medical colleges, Medicine, Nalanda, Nalandha, Nitish Kumar, Patna, PHCs, PIL, public health centres, punctuality, sadar hospitals, solutions, state-run hospitals, Tracking, Web, Website | Leave a Comment »

Tendulkar back in top-20 ODI rankings

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

ஐ.சி.சி. தரவரிசை: தோனி முன்னேற்றம்

துபை, பிப். 5: ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி (படம்) 3-ம் இடத்துக்கு முன்னேறினார்.

துபையில் உள்ள ஐசிசி ஞாயிற்றுக்கிழமை ஒரு தின கிரிக்கெட் வீரர்கள், அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

அதில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ஓரிடம் முன்னேற்றம் கண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

3-ம் இடத்திலிருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் 6-ம் இடத்திலிருந்து 4-ம் இடத்துக்கு தோனி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் 20 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் 4 பேர் உள்ளனர்.

தோனியைத் தவிர சச்சின் 18-வது இடத்திலும், கேப்டன் திராவிட் 12-ம் இடத்திலும், யுவராஜ் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.

மற்றபடி பந்து வீச்சாளர்கள் வரிசையிலோ, பேட்ஸ்மேன்கள் வரிசையிலே குறிப்பிடும்படியான மாற்றம் ஏதும் இல்லை.

அணிகள்:அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 6-ம் இடத்திலேயே உள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு தினதொடரைக் கைப்பற்றிய போதும், புள்ளிக்கணக்கில் போதுமான முன்னேற்றம் இல்லாததால் இந்தியாவுக்கு இந்த நிலைமை.

இம்மாதம் 8-ந்தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான ஒரு தினத் தொடரையும் இந்திய அணி வென்றால், தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

மோசமான ஃபார்ம் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் பதான் 21-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹர்பஜன்சிங் 13-ம் இடத்திலும், அகர்கர் 17-ம் இடத்திலும் உள்ளனர்.

Posted in 1 day, 50 overs, Adam Gilchrist, Ajit Agarkar, Andrew Flintoff, Andrew Symonds, Australia, Batsmen, Brett Lee, Chris Gayle, Cricket, Daniel Vettori, Dhoni, Doni, Dravid, Glenn McGrath, Harbhajan Singh, India, Indian, Irfan Pathan, Jayasuriya, Jayasurya, Kevin Pietersen, LG ICC, LG ICC ODI, Mahendra Singh Dhoni, Makhaya Nitini, match, Matches, Mike Hussey, New Zealand, ODI, One day, One Day International, Pakistan, player, Rahul Dravid, rankings, Ricky Ponting, Sachin, Sachin Tendulkar, Sanath Jayasuriya, Sangakkara, Shaun Pollock, South Africa, Sri lanka, Tendulkar, wicketkeeper, World Cup, Yuvraj, Yuvraj Singh | Leave a Comment »

British Asians campaign for Shilpa – Racism row: UK police to probe emails

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

‘ஷில்பா ஷெட்டி மீது இனவாத ஏளனம்’- இந்தியா கண்டனம்

திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி
திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி

பிரிட்டனில் செலிபிரிட்டி பிக் பிரதர் எனப்படும் யதார்த்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்குபெறும் மும்பையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி இனப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசு விசாரித்து வருவதாகக் கூறிய இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர்- ஷில்பா ஷெட்டியின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டதால், அவரை இந்தியர் என அழைத்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பிரிட்டனிலுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.

அதேவேளை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இது குறித்து பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேரின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கேட்ட போது, தாம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றும், ஆனால் நிறவெறிக் கொள்கை என்பது எந்த வகையில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு குவிகிறது- உரிய நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

புதுதில்லி, ஜன.18: “பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெருமளவில் ஆதரவு குவிகிறது. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி வரும் “சேனல் 4′ டி.வி.யின் பிரபல நிகழ்ச்சி “பிக் பிரதர்’. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஓர் தனியறையில் சில நாள்கள் தங்கவைக்கப்படுவர்.

அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள்.

ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் ஓட்டளிப்பார்கள்; அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில் ஷில்பா ஷெட்டியை அவருடைய சக போட்டியாளர்களில் ஒருவர் “நாய்’ என்றும், மற்றொருவர் “அருவருப்பானவர்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ஷில்பா கண்ணீருடன் வெளியேறினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் டி.வி. நிர்வாகத்துக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் புகார் தெரிவித்தனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இன பாகுபாடு காரணமாகவே ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இங்கிலாந்து அரசு நடவடிக்கை: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.கீத் வாஸ் இப்பிரச்சினையை லண்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்திய அரசு நடவடிக்கை: இந்தியா இனம், மொழி என்ற பாகுபாடின்றி செயல்பட்டு வருவது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2-ம் இடத்தில் ஷில்பா: இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர்களுடைய ஓட்டின் அடிப்படையில், இந்தப் போட்டி நிகழ்ச்சியில் தற்போது ஷில்பா ஷெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகை கிளேயோ ரோக்காஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஷில்பா ஷெட்டி முதலிடத்தைப் பெறுவார் என்று பல இங்கிலாந்து பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்த எதிர்ப்பு வலுக்கிறது

பிரிட்டனில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் கலந்துகொள்ளும், இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடன் கூட கலந்துகொள்பவர்களால், இனரீதியாக ஏளனம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் முறைப்பாடுகள் குவியும் அதே வேளையில், அந்தத் தொடருக்கான விளம்பர அனுசரணை வழங்கிய நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

ஒரு மாளிகையில் வைக்கப்பட்டு, ஒளித்து வைத்த கமெராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும், ‘பிக் பிரதர்’ என்னும் இந்த யதார்த்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சக நடிக, நடிகைகளின் நடாத்தை, மீண்டும், மீண்டும் தமக்கு கவலையைத் தந்துள்ளதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய கார் போன் வேர்ஹவுஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்
பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்

இந்த நடிக, நடிகர்களின் நடாத்தை விரும்பத்தக்கதாக இல்லை என்று கூறும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆனால் நடிகை ஷில்பா கூட இந்த நடிகைகளின் நடத்தை இனவாதம் என்பதைவிட, கலாச்சார மற்றும் குடும்பப் படிநிலை வேறுபாடே அதற்குக் காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுண் கூட அங்கு இந்தியத் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி

லண்டன், ஜன. 19-

லண்டனில் உள்ள `சேனல் -4′ என்று நிறுவனம் `பிக்பிரதர்’ என்ற டெலிவிஷன் நிகழ்ச் சியை ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு பிரபல கலைஞர்களுடன் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டார். அப்போது ஷில்பா ஷெட்டியை மற்ற கலைஞர்கள் அவமதித்ததும், இனவெறியை தூண்டும் வகையில் அவரை திட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவமதிக்கப்பட்ட ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் இது சர்ச்சையை எழுப்பியது. ரசிகர்களிடம் இருந்து இணைய தளம் மூலம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி அடித்துள்ளார்.

`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.

இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4′ டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் “நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.

ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய டி.வி.நடிகை நீக்கம்: கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார்

லண்டன், ஜன. 20-

இங்கிலாந்தில் சானல் 4 எனும் தொலைக்காட்சி `பிக் பிரதர்’ என்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் உலகின் 5 பிரபலங்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அறைக்குள் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? சக போட்டியாளர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். நேயர்களும் ஓட்டுப்போடுவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக நீக்கப்பட்டு கடைசி வரை தாக்குப் பிடிப்பவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரபல இந்தி நடிகை ஷில்பாஷெட்டி பங்கேற்றுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளரான டி.வி. நடிகை ஜேக் கூடி தரக் குறைவாக பேசி திட்டினார். அதோடு ஷில்பாவை `நாய்’ என்றும் கூறினார். இதைக் கேட்டு ஷில்பா ஷெட்டி கதறி அழுதார்.

ஷில்பாஷெட்டியை நடிகை கூடி திட்டியபோது இங்கிலாந்து முன்னாள் அழகி டேனியல் லாயிட் சிரித்தார். அதோடு ஷில்பாவை பார்த்து `அருவருப்பானவர்’ என்றார். இது நேயர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷில்பா ஷெட்டியிடம், ஜேக் கூடியும், டேனியல் லாயிட்டும் இனவெறியுடன் நடந்து கொண்டதாக தெரிய வந்தது.

இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் கண்டனம் தெரிவித்து இ-மெயில் அனுப்பினார்கள். ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் இருந்து குரல் எழுந்ததால் பிக்பிரதர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அரண்டு போனார்கள்.

இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்ததால் இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியது. இன வெறியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

`இனவெறி’ முத்திரை குத்தப்பட்டதால் ஜேக்கூடி, டேனியல் லாயிட்டுக்கு விளம்பரத்துக்கு உதவிய நிறுவனங்கள் விலகிக் கொண்டன. அவர்கள் `மாடலிங்’ செய்திருந்த பொருட்களின் விற்பனைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நிலமை மோசமாவாதை உணர்ந்த ஜேக்கூடி, டேனியல் லாயிட் இருவரும் நேற்று பணிந்தனர். ஷில்பா ஷெட்டியிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அதோடு இருவரும் ஷில்பாவை கட்டித் தழுவி கண்ணீர் மல்க அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கிடையே போட்டி விதிகளின்படி ஷில்பா, ஜேக் கூடி இருவரில் ஒருவரை நீக்க தொலைக்காட்சி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 82 சதவீத நேயர்கள் டி.வி. நடிகை ஜேக்கூடிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர் `பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.

ஷில்பாஷெட்டி நேயர்கள் ஓட்டெடுப்பில் அதிக ஆதரவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நேற்றிரவு இந்த முடிவு விபரம் அறிவிக்கப்பட்டது.

தனக்கு `கல்தா’ கொடுக்கப்பட்டதை அறிந்ததும் டி.வி. நடிகை ஜேக்கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதார். `பிக் பிரதர்’ அறையில் இருந்து வெளியில் வந்த அவரிடம் பழைய காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதில் அவர் ஷில்பாவை முறைத்தப்படி திட்டும் காட்சிகளும் இருந்தன.

அதை கண்டதும் ஜேக்கூடி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தால் உலகமே தன்னை இனவெறி பிடித்தவர் என்று முத்திரை குத்தி இருப்பதை தெரிந்து மனம் உடைந்து போனார்.

கண்ணீர் மல்க நின்ற அவரை பிக்பிரதர் அமைப்பாளர்கள் டைரி அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் ஷில்பாவை பட்டப்பெயர் சொல்லித்தான் பேசினேன். இதை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதால் என்னை உலகமே இனவெறி பிடித்தவள் என்று சொல்லி விட்டது.

எல்லாரும் நினைப்பது போல நான் இனவெறி கொண்டவள் அல்ல. நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை. இனவெறியுடன் நான் பேசவே இல்லை. இது ஷில்பாவுக்கு நன்றாக தெரியும்.

நான் இனவெறி பிடித்தவள் அல்ல என்று ஷில்பாவே கூறி உள்ளார். இது எனக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் பத்திரிகைகள் என்னை ஒரு இன வெறியாளன் போல காட்டி விட்டனர்.

நேயர்கள் என்னை பிடிக்காமல் வாக்களித்திருந்தால் அதை ஏற்று இருப்பேன். ஆனால் தவறாக காரணம் காட்டி என்னை `பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். இப்படி வெளியேற்றப்படுவது எனக்கு கவலை தருகிறது.

ஷில்பாவை நாங்கள் `அப்பளம்‘ என்றும் `ஆங்கிலம் பேச தெரியவில்லை’ என்றும் சாதாரணமாகத்தான் சொன்னோம். ஆனால் அதுவே எனக்கு வினை ஆகி விட்டது.

நான் பேசிய காட்சிகளை பார்த்தபோது என் வார்த்தைகளால் கவுரவம் இல்லாமல் நடந்து கொண்டதாக நினைக்கிறேன். ஆனால் தவறு செய்யவில்லை என்று ஒரு கட்டத்தில் நியாயப்படுத்தினேன். ஆனால் இதை இனவெறி என நினைத்து விட்டனர். எனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பிக்பிரதர் மூலம்தான் என் வாழ்க்கை 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசமானது. இப்போது அதே பிக்பிரதர் மூலம் என் வாழ்க்கை முடிந்து விட்டது.

இவ்வாறு டி.வி.நடிகை ஜேக்கூடி கூறினார்.

Pap

Posted in abuse, Acting, Anand Sharma, Appalam, Big Brother, British Police, Channel 4, England, Gameshow, Indian, London, Minister of State for External Affairs, Paki, Pakistani, Papad, racism, Racist, Rating, Reality Show, Shilpa Shetty, South Asia, Stage, TV, UK | Leave a Comment »

Indira K Nooyi becomes CEO of PepsiCo

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006

பெப்சி தலைமை அதிகாரியாக இந்திரா நூயி

புதுதில்லி, ஆக. 16: உலகின் முன்னணி குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த இந்திரா கே நூயி (50) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 1-ல் அவர் இப்பதவியை ஏற்கிறார். திங்கள்கிழமை கூடிய பெப்சிகோ நிர்வாக்குழு, அவரது 12 ஆண்டுகால உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) தேர்வுசெய்துள்ளது.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள முதல் இந்தியப் பெண்மணி இவர்.

உறுதியும் அனுபவமும் தொலைநோக்கும் மிக்க இந்திராவின் தலைமையின் கீழ் செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என பெப்சிகோ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

கடும் சர்வதேச போட்டிகளை சமாளித்து, மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளையும், உயர் பதவிகளையும் இந்தியர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இந்திரா நூயி-க்கு முன்னரே, அருண் சரின் (வோடஃபோன்), அஜய் பாங்கா (சிட்டி குரூப்), ரஜத் குப்தா (மெக்கின்ஸி), ரானா ஜே தத்தா (யுனைட்டட் ஏர்லைன்ஸ்), வியோமேஷ் ஜோசி (ஹெச்.பி.) போன்றோர் மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளனர்.

Posted in CEO, Desi, Dinamani, Indian, Indira K Nooyi, Indira Nooyi, Indra K Nooyi, Indra Nooyi, MNC, Nooyi, PepsiCo, Tamil, US | Leave a Comment »