Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘World Cup’ Category

Amputee athlete aims for Olympics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

உடல் ஊனமுற்றவர் உலக சாதனை படைத்துள்ளார்

பிறக்கும் போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த தென்ஆப்பிரிக்காவின்

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்
ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

ஆஸ்கர் பிஸ்டோரியஸ், உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

உடல் ஊனமுற்றோர் பிரிவில் 3 உலக சாதனை புரிந்துள்ள இவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வழக்கமான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் செயற்கைகால் பொறுத்திய ஒருவருக்கு பிற போட்டியாளர்களை விட அனுகூலங்கள் அதிகம் கிடைக்கிறது ஆகவே அவரை ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

பிறந்த போதே முழங்காலுக்கு கீழ் இவருக்கு எலும்புகள் இல்லை. ஒரு வயதில் இவரது கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. ஆனால் இவர் தளரவில்லை கம்பிகள் பொறுத்தப்பட்ட நவீன செயற்கைக் கால்களைப் பொறுத்திக் கொண்டு களம் இறங்கினார்.

உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் தற்போது மூன்று உலக சாதனைகளை இவர் படைத்துள்ளார். இது மட்டுமல்லாது, கடந்த மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா தேசிய போட்டிகளில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

செயற்கை கால் பொறுத்தப்பட்டதன் காரணமாக, வீரரின் உயரம் அதிகமாகும், எனவே ஒடும் போதும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும் சராசரியை விட அதிக நீளமாக இருகக்க் கூடும் என்று கூறப்படுவதை ஆஸ்கர் மறுக்கிறார். இவரது பயிற்சியாளரோ, ஆஸ்கர் பிறப்பிலேயே திறமைகள் அமையப் பெற்ற சேம்பியன் என்றார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இவர் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்சில் பதக்கம் பெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்.

ஆனால் இவர் ஓடும் விதம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள சர்வதேச தடகள போட்டியாளர் சங்கம் இவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடை செய்யவதற்கான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது.

Posted in athlete, athletics, Gold, Olympics, Oscar, Paralympic, Pistorius, prosthetics, South Africa, World Cup | Leave a Comment »

Pillay wants longer term for Carvalho

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை

கோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.

கோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:

பயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.

பிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Posted in Asiad, Asian Games, Azlan, Azlan Shah, Baskaran, Bhaskaran, Captain, Carvalho, Coach, Cup, Dhanraj, foreign coach, Game, Hockey, IHF, Indian Hockey Federation, Joaquim Carvalho, K Jothilkumaran, K P S Gill, Loss, maharashtra, Olympics, PHL, Pillai, Pillay, Politics, Premier Hockey League, President, Rajinder Singh, Secretary, selection, Sports, Sultan Azlan Shah, Tamil Nadu, TamilNadu, Taminadu, Team, Term, TN, trial, Vasudevan Baskaran, Victory, Win, World Cup | Leave a Comment »

PCB insists it was a heart attack, but rumours give murder spin to Woolmer case

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப்உல்மர் சாவில் மர்மம் நீடிப்பு

கிங்ஸ்டன், மார்ச். 19-

உலககோப்பை போட்டி யில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்ததன் மூலம் பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது. இது பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. கேப்டன் இன்சமாமும், பயிற்சியாளர் பாப்உல்மரும் வேதனையுடன் காணப் பட்டனர்.

இரவு அனைவரும் தூங்க சென்றனர். பாப்உல்மர் அவரது அறையில் தனியாக தங்கினார். அங்கு அவர் வாந்தி எடுத்த நிலையில் தரையில் மயங்கி கிடந்தார். முக்கில் ரத்தம் வடிந்தது. உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தோல்வியுடன் வேதனையில் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் பாப்உல்மர் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் சாவு இயற்கையானதா? அல்லது வேறு காரணமாக இருக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அணி தோற்றால் முழு பொறுப்பும் பயிற்சியாளர் தலையில்தான் விழும். எனவே மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வந்த போது பாகிஸ்தான் வீரர் அக்தர், பாப்உல்மரை தாக்கியதாக புகார் எழுந்தது. அதே போல நேற்று பாப் உல்மருக்கும் வீரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீரர்கள் அவரை தாக்கி இருக்கலாம். இது மரணத்தில் முடிந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்தான் காரணமாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் நாசிம் அஷரப் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- பாப் உல்மர் தனது உடல் நிலை குறித்து என்னிடம் கூறிஇருந்தார். அவர் நீரழிவு நோயுடன் பல்வேறு உடல் உபாதை நோயினாலும் அவதிபட்டு வந்தார். தூங்கும் போது மூச்சுவிடுவதில் பிரச்சினை இருந்தது. எனவே முகத்தில் துணியை கட்டி தூங்கும் பழக்கத்தை வைத்து இருந்தார். எனவே இது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அவரது மறைவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பால்உல்மர் உடல் ஐமைக்கா வில் உள்ள கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மரணத் திற்கான இறுதியான காரணம் குறித்து இன்னும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. நீரழிவு மற்றும் மூச்சுதிணறல் காரண மாக இறந்து இருக்கலாம் என்று மட்டும் டாக்டர்கள் கூறினார்கள்.

எனவே உண்மையான காரணத்தை முழுமையாக கண்டறிய இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்புதான் உண்மை தெரியும்.

பாப்உல்மருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி தற்போது தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் இருக்கிறார். அவர் ஜமைக்காவுக்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. மனைவி தரப்பில் இருந்தும் தகவல் எதுவும் வரவில்லை. அவரை வந்து பார்த்த பிறகு ஏதாவது கருத்து கூற வாய்ப்பு உள்ளது.

பாப்உல்மர் மரணத்திற்கு பாகிஸ்தான் அதிபர் முஷரப், பிரதமர் சவுகத் அஜீஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அவருடன் அடிக்கடி மோதிக்கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் அக்தரும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் “பாப்உல்மர் என்னை மகன் போல் பாவித்தார் அணிக்காக தீவிரமாக உழைத்தார்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் இம்ரான்கான் கூறும்போது, தோல்விக்கு பால்உல்மர் பொறுக்கு ஏற்க முடியாது. கேப்டன்தான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஆடியதன் மூலம் பால்உல்மரை கொன்று விட்டனர்” என்றார்.

வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்கு திரும்பிய பிறகு ஏதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அது என்ன என்பது மர்மமாக உள்ளது.

===============================================

தோல்வி விரக்தியால் ஊல்மர் தற்கொலை?: கிரிக்கெட் உலகமே துயரத்தில் மூழ்கியது

கராச்சி, மார்ச் 20: ஜமைக்காவில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் ஊல்மர் திடீரென உயிரிழந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“”அவருடைய மரணம் சந்தேகத்துக்குரியது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கராச்சியில் திங்கள்கிழமை வெளியான “ஜேங்’ பத்திரிகை, “ஊல்மர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும்’ என்று மே.இ.தீவுகளின் கிங்ஸ்டனில் உள்ள தங்கள் பத்திரிகையின் செய்தியாளர்கள் கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“”இருப்பினும் இவ்விஷயம் தொடர்பாக இப்போதே எந்தவித முடிவுக்கும் வர முடியாது. விசாரணைகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன” என்று பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

துக்கத்தில் பாக். அணியினர்: ஊல்மரின் மரணம், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல் ஊல்மர் தங்களுடன் பழகிவந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

“”வீரர்கள் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தில் வெற்றிக்கனியைப் பறிக்க முடியவில்லை என்றால் அதற்கு பயிற்சியாளர் காரணமில்லை. அவர் மீது குறைகூற முடியாது” என டிவி சேனல் ஒன்றிடம் பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

“டான்’, “நியூஸ்’ போன்ற பத்திரிகைகள் ஊல்மரின் மறைவுக்கும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்துக்கும் முடிச்சுப் போட்டு செய்திகளை வெளியிட்டன.

“விரக்தி அடைந்த உல்மர் சாவைத் தழுவினார்’ என்று “டான்’ பத்திரிகையும், “அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னர் ஊல்மர் மரணம்’ என்று “நியூஸ்’ பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக். அணியின் தோல்விக்கு காரணமானவர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ள பலரையும் குறிப்பிட்டு சில பத்திரிகைகள் தலையங்கமே வெளியிட்டன.

பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் அஷ்ரபின் பெயரும் நிந்தனைக்கு உள்ளாகியுள்ளது.

ஊல்மரின் திடீர் மறைவு பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகையே துயரத்தில் ஆழ்த்தியது.

பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப், பிரதமர் ஷெüகத் அஜீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஊல்மர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்களும் ஊல்மர் மறைவால் பெரிதும் துயரமடைவதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தில் ஊல்மர் பயிற்சி அளித்த காட்சிகளை திங்கள்கிழமை பல டிவி சேனல்களும் தொடர்ந்து ஒளிபரப்பின.

Posted in Assassination, Casino, Coach, Cricket, Cronje, diabetes, Gambling, Games, ICC, insulin, Inzamam, Inzi, Ireland, Loss, Manager, Match fixing, medical, Murder, Pakistan, Poison, SA, South Africa, Stroke, Suicide, Trainer, WC2007, Woolmer, World Cup | Leave a Comment »

World Cup Cricket 2007 – England, New Zealand & Pakistan teams

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளும் தேர்வு : பாக். அணியில் அக்தர், ஆசிப், உமர்

கராச்சி, பிப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோயிப் அக்தர், முகமது ஆஷிப், உமர் குல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடிவந்த டேனிஷ் கனேரியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசியதால் வாய்ப்பை பெற்றார்.

வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, சபீர் அகமது, ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முழங்கால் வலி, தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த சோயிப் அக்தர், முகமது ஆஷிப் ஆகியோர் முழுமையாக குணமாகாத நிலையிலும் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இம்மாத இறுதியில் உடற்தகுதிச் சோதனை நடைபெற உள்ளது. அதில் தேறாவிட்டால் அவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படும் என்று பாகிஸ்தான் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் முகமது அல்தார் தெரிவித்தார்.

தனது, முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கிறது பாகிஸ்தான்.

வீரர்கள் விவரம்:

  1. இன்சமாம் உல் ஹக் (கேப்டன்),
  2. யூனிஸ் கான் (துணைக் கேப்டன்),
  3. முகமது ஹபீஸ்,
  4. இம்ரான் நசீர்,
  5. முகமது யூசுப்,
  6. சோயிப் மாலிக்,
  7. அப்துல் ரசாக்,
  8. ஷாஹித் அஃப்ரிதி,
  9. கம்ரான் அக்மல்,
  10. சோயிப் அக்தர்,
  11. முகமது ஆஷிப்,
  12. உமர் குல்,
  13. டேனிஷ் கனேரியா,
  14. ரானா நவேத் உல் ஹசன்,
  15. ராவ் இஃப்திகார் அஞ்சும்.

நியூஸிலாந்து அணி: நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேரல் டஃபி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் ஆல்ரவுண்டர் கிறிஸ் மார்ட்டின், ஆண்ட்ரூ ஆடம்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உலகக் கோப்பை போட்டியில் “சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது நியூஸிலாந்து. இங்கிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகள் இப் பிரிவில் உள்ளன.

வீரர்கள் விவரம்:

  1. ஸ்டீபன் பிளெம்மிங் (கேப்டன்),
  2. வின்சென்ட்,
  3. பீட்டர் புளுட்டன்,
  4. ரோஸ் டெய்லர்,
  5. ஸ்காட் ஸ்டைரிஸ்,
  6. ஜேக்கப் ஓரம்,
  7. மெக்மிலன்,
  8. பிரண்டன் மெக்மிலன்,
  9. டேனியல் வெட்டோரி,
  10. ஜேம்ஸ் பிராங்க்ளின்,
  11. ஜித்தன் படேல்,
  12. ஷேன் பாண்ட்,
  13. மார்க் கில்லெஸ்பி,
  14. மைக்கேல் மாஷன்,
  15. டேரல் டஃபி.

இங்கிலாந்து அணி: உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ரவி போப்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் மால் லோய்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்து, கனடா, கென்யா ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது.

வீரர்கள் விவரம்:

  1. மைக்கேல் வாகன் (கேப்டன்),
  2. ஜேம்ஸ் ஆன்டர்சன்,
  3. இயான் பெல்,
  4. ரவி போப்ரா,
  5. பால் காலிங்வுட்,
  6. ஜேமி டேரம்பில்,
  7. ஆண்ட்ரூ பிளிண்டாஃப்,
  8. எட் ஜோய்ஸ்,
  9. ஜான் லீவிஸ்,
  10. சஜீத் முகமது,
  11. பால் நிக்சன்,
  12. மான்டி பனேசர்,
  13. கெவின் பீட்டர்சன்,
  14. லியாம் பிளங்கெட்,
  15. ஆன்ட்ரூ ஸ்டிராஸ்.

Posted in 2007, Batsmen, Bowlers, Cricket, England, New Zealand, Pakistan, Players, teams, WC, WC2007, West Indies, wicketkeeper, WK, World Cup | Leave a Comment »

India relies on the tried and trusted for World Cup – Sourav, Sehwag make it to squad

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உலககோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு

மும்பை, பிப். 12-

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 13-ந்தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது.

இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை 13-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. அதன் தலைவர் வெங்சர்க்கார் தலைமை தாங்கினார். 4 தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் கேப்டன் டிராவிட், பயிற்சியாளர் கிரேக் சேப்பல் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். பகல் 11.15 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தின் முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

  1. டிராவிட் (கேப்டன்),
  2. தெண்டுல்கர்,
  3. ஷேவாக்,
  4. கங்குலி,
  5. உத்தப்பா,
  6. யுவராஜ்சிங்,
  7. டோனி,
  8. தினேஷ்கார்த்திக்,
  9. ஹர்பஜன்சிங்,
  10. ஜாகீர்கான்,
  11. முனாப்பட்டேல்,
  12. கும்ப்ளே,
  13. அகர்கர்,
  14. பதான்,
  15. ஸ்ரீசந்த்.

Posted in 2007, Agarkar, Batsman, Batsmen, Bowlers, Cricket, Dhoni, Dinesh karthik, Dravid, Fielder, Ganguly, Harbhajan Singh, India, Kumble, Munaf Patel, ODI, Pathan, Players, Rahul, Sachin, Sehwag, Sourav, Squad, Srichand, Team, Tendulkar, Uthappa, Vengsarkar, West Indies, WI, wicketkeeper, WK, World Cup, Yuvraj Singh, Zakir Khan | Leave a Comment »

Tendulkar back in top-20 ODI rankings

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

ஐ.சி.சி. தரவரிசை: தோனி முன்னேற்றம்

துபை, பிப். 5: ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி (படம்) 3-ம் இடத்துக்கு முன்னேறினார்.

துபையில் உள்ள ஐசிசி ஞாயிற்றுக்கிழமை ஒரு தின கிரிக்கெட் வீரர்கள், அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

அதில் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி ஓரிடம் முன்னேற்றம் கண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

3-ம் இடத்திலிருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் 6-ம் இடத்திலிருந்து 4-ம் இடத்துக்கு தோனி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதல் 20 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் 4 பேர் உள்ளனர்.

தோனியைத் தவிர சச்சின் 18-வது இடத்திலும், கேப்டன் திராவிட் 12-ம் இடத்திலும், யுவராஜ் சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.

மற்றபடி பந்து வீச்சாளர்கள் வரிசையிலோ, பேட்ஸ்மேன்கள் வரிசையிலே குறிப்பிடும்படியான மாற்றம் ஏதும் இல்லை.

அணிகள்:அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 6-ம் இடத்திலேயே உள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு தினதொடரைக் கைப்பற்றிய போதும், புள்ளிக்கணக்கில் போதுமான முன்னேற்றம் இல்லாததால் இந்தியாவுக்கு இந்த நிலைமை.

இம்மாதம் 8-ந்தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான ஒரு தினத் தொடரையும் இந்திய அணி வென்றால், தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

மோசமான ஃபார்ம் காரணமாக ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் பதான் 21-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹர்பஜன்சிங் 13-ம் இடத்திலும், அகர்கர் 17-ம் இடத்திலும் உள்ளனர்.

Posted in 1 day, 50 overs, Adam Gilchrist, Ajit Agarkar, Andrew Flintoff, Andrew Symonds, Australia, Batsmen, Brett Lee, Chris Gayle, Cricket, Daniel Vettori, Dhoni, Doni, Dravid, Glenn McGrath, Harbhajan Singh, India, Indian, Irfan Pathan, Jayasuriya, Jayasurya, Kevin Pietersen, LG ICC, LG ICC ODI, Mahendra Singh Dhoni, Makhaya Nitini, match, Matches, Mike Hussey, New Zealand, ODI, One day, One Day International, Pakistan, player, Rahul Dravid, rankings, Ricky Ponting, Sachin, Sachin Tendulkar, Sanath Jayasuriya, Sangakkara, Shaun Pollock, South Africa, Sri lanka, Tendulkar, wicketkeeper, World Cup, Yuvraj, Yuvraj Singh | Leave a Comment »

19 New Tamil Movies to be released this month

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பள்ளிதேர்வு, உலககோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி: 19 புதிய படங்கள் இந்த மாதம் ரிலீஸ்

சென்னை, பிப். 2-

பள்ளி இறுதி தேர்வுகள் மார்ச் 1-ந்தேதி தொடங்குகின்றன. அடுத்த மாதம் இறுதியில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்ப மாகிறது. ஏப்ரல் 28-ல் உலக கோப்பை இறுதி போட்டி நடக்கிறது. எனவே 19 புதிய படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகின்றன. `டப்பிங்’, `எடிட்டிங்’ வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

இம்மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலில்

  • சபரி,
  • தீபாவளி,
  • திருமகன்,
  • பருத்திவீரன்,
  • மொழி,
  • உன்னாலே உன்னாலே,
  • கூடல் நகர்,
  • அடாவடி,
  • ஓரம்போ,
  • லீ,
  • முனி,
  • சொல்லி அடிப்பேன்,
  • பெரியார்,
  • கண்ணும் கண்ணும்,
  • தூவானம்,
  • காசு இருக்கணும்,
  • பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகியவை உள்ளன.
  • `வீராசாமி’ படம் நேற்று (1-ந்தேதி) ரிலீசானது.
  • `பொறி’ இன்று வெளியானது. ஒரே மாதத்தில் இவ்வளவு படங்கள் வெளியாவது இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

`சபரி’யில் விஜயகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார்.

`பருத்திவீரன்’ சூர்யா தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகும் படம். பொங்கலுக்கே இப்படம் எதிர்பார்க்கப்பட்டு தள்ளிப்போனது.

`திருமகன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

`மொழி’யில் ஜோதிகா வாய்பேசதெரியாதவராக நடித்துள்ளார்.

`கூடல் நகரில்’ பரத், சந்தியா ஜோடியாக நடித்துள்ளனர்.

`அடாவடி’, `பெரியார்’ படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். `பெரியார்’ பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம். இதில் மணியம்மை பாத்திரத்தில் குஷ்பு நடித்துள்ளார்.

`ஓரம்போ’வில் ஆர்யாவும், `லீ’யில் சிபியும் நடித்துள்ளனர்.

`சொல்லி அடிப்பேன்’ விவேக் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம். முனியில் ராஜ்கிரணும், ராகவா லாரன்சும் நடித்திருக்கிறார்கள்.

ரஜினின் `சிவாஜி’ படம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தபின் ரிலீசாகும் என்று தெரிகிறது. `தனுசின் பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ படமும் சிவாஜியோடு ரிலீசாகிறது. கமலஹாசனின் `தசாவதாரம்’ ஜுலை மாதத்துக்கு தள்ளி போகிறது.

Posted in Lee, Mozhi, Muni, Paruthi Veeran, Periyar, Pori, Sabari, Sivaji, Sivaji the Boss, Solli Adippen, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thirumagan, World Cup | 1 Comment »

State of Indian Sports Teams – Hockey

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

கனவாய் பழங்கதையாய்…

நமது நாட்டில் கிரிக்கெட் போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. எனவே இயல்பாகவே மற்ற விளையாட்டுகளில் மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. மொத்தத்தில் விளையாட்டுத் துறைக்கு நாம் கொடுத்து வரும் முக்கியத்துவம் போதாது என்பதை பல சர்வதேசப் போட்டிகளின் முடிவுகளே காட்டி வருகின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குட்டி நாடுகள் கூட, தங்கப் பதக்கங்களைப் பெறும்போது, நமது மானத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு பதக்கமாவது கிடைக்காதா என்று சாதாரண இந்தியக் குடிமகன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து ஏங்கும் நிலையைப் பார்த்திருக்கிறோம். ஆம், நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க, கௌரவமான வெற்றியைப் பெற முடியவில்லை.

நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒரு காலத்தில் உலக அளவில் கொடி கட்டிப் பறந்தோம். தயான்சந்த் போன்ற இந்திய வீரர்கள் தங்களின் அபாரத் திறமைகளால் வெற்றிகளை ஈட்டி இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்! 1980-ம் ஆண்டில் மாஸ்கோ போட்டிக்குப் பிறகு, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் கடந்த 25 ஆண்டுகளாக நம்மால் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹாக்கிப் போட்டிகளில், இந்தியா பங்கேற்ற 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால் 12 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. போட்டியின் “கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களின் திறமையற்ற ஆட்டமே இந்தியாவின் படுதோல்விக்குக் காரணம்’ என்று குறை கூறியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், “தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் வெற்றி என்பதே கனவாகி விடும்’ என எச்சரித்துள்ளார். “ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் அடைந்த தோல்விகளை மறந்து விட்டு, தோஹாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் கூறியுள்ளார். இதுபோன்ற வெற்று சமாதானங்கள் நமது எதிர்கால வெற்றிக்கு உதவுமா என்பது ஐயமே.

சமீபகாலமாக விளையாட்டில் புகுந்து வரும் அரசியல் நமது விளையாட்டின் நோக்கத்தையே சிதறடித்து விடுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதன் மூலம்தான் நல்ல வீரர்களுக்குத் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். காலத்துக்கேற்ற வகையில் தகுதியும் திறமையும் பெறுவதற்கு இந்தியப் பயிற்சியாளர்கள் மட்டும் போதுமா, வெளிநாட்டுக் “கோச்’சுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து விளையாட்டுத் துறை நிபுணர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் வெற்றி என்பது ஒரு நாள் முயற்சியில் கைகூடி வந்து விடுவதில்லை. இப்போதே இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, தகுதி படைத்தவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கும்போதுதான் தரமான இந்திய அணியை உருவாக்க முடியும். வெற்றிகளுக்குக் குறுக்கு வழிகள் இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டி அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமே வெற்றியைப் பெற முடியும். இல்லாவிட்டால் ஹாக்கி விளையாட்டில் தயான்சந்த் காலத்து வெற்றிகள் கனவாய் பழங்கதையாய் மட்டுமே இருக்கும்.

Posted in Bhaskaran, Coach, Cricket, Dinamani, Editorial, Germany, Gill, Hockey, India, Olympics, Sports, Tamil, World Cup | Leave a Comment »