Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்
என். சுரேஷ்குமார்
ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்
- சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
- துபாயில் 825,
- சிங்கப்பூரில் 791,
- பாகிஸ்தானில் 655,
- மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இதேபோல
- லண்டனில் 239 பேர்,
- அமெரிக்காவில் 218,
- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
- ஆப்பிரிக்காவில் 29 பேர்,
- பெல்ஜியம்,
- டென்மார்க்,
- பிரான்ஸ்,
- ஹாங்காங்,
- லிபேரியா,
- நெதர்லாந்து,
- சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
- இத்தாலி,
- ஸ்பெயின்,
- கிரீஸ்,
- போர்ச்சுகலில் 103 பேர்,
- செக் குடியரசு,
- போலந்து,
- பெலாரஸ்,
- மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.
இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.
இரண்டாவது நமது இந்திய அரசு.
புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.
வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.
இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.
வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.
குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.
இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?
Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007
சென்னையில் இருந்து செல்லும் பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தளர்த்தியது மலேசியா
கோலாலம்பூர், மார்ச் 16: சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கான விசா விதிகளைத் தளர்த்தியுள்ளது மலேசிய அரசு.
இதையடுத்து, சென்னையைத் தவிர தென்னிந்திய நகரங்களில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகள் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் வசிப்போர் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் இருந்து முன்கூட்டியே விசா பெறும் வசதி உள்ளதால் அவர்களுக்கு புதிய விதி பொருந்தாது என்று கோலாலம்பூரில் வியாழக்கிழமை தெரிவித்தார் துணைப் பிரதமர் நஜீப் ரஸôக்.
சென்னையில் இருந்து வருவோர் விசாவில் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட கூடுதல் நாள்கள் மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கி விடுவதை அடுத்து, விசா வழங்குவதைக் கடந்த டிசம்பரில் நிறுத்தியது மலேசியா.
சென்னையில் இருந்து வருவோரில் 25 சதவீதம் பேர் அனுமதிக்கப்பட்ட நாள்களை விட அதிக நாள்கள் சட்டவிரோதமாகத் தங்குகின்றனர் என்று நஜீப் கூறினார்.
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம். இதில் 3 ஆயிரம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், இராக், பாலஸ்தீனம் மற்றும் சிரியாவில் இருந்து வருவோருக்கும் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும் என்று மலேசியா அறிவித்துள்ளது.
Posted in Airport, Chennai, Consulate, Employment, Flight, Illegal, Indians, International, Jobs, Kuala Lumpur, Kualalumpur, Malaysia, overstay, residents, Tourists, Visa, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது
ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த நான்கு பேரும் இன்று பின்னர் ரஷியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், ரஷிய அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதைத் தாங்கள் செய்யவில்லை என்றும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளும் ஒரு உளவு கட்டமைப்பினை ஏற்படுத்த முயன்றனர் என ஜார்ஜிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிகழ்வுகள் குறித்து ரஷியா இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஜார்ஜியாவுடனான போக்குவரத்து அனைத்தையும் தாங்கள் துண்டித்து விட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான வங்கி விவகார பரிமாற்றத்தைத்தையும் தாங்கள் நிறுத்தி விட்டதாகவும், ரஷிய முன்னர் அறிவித்திருந்தது.
Posted in Ambassador, Charges, Consulate, Counsel, EU, Europe, Georgia, Military, Neighbor, OSCE, Relations, Russia, Spy, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
மருத்துவ மாணவர் கொலை: இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ரஷியாவிடம் கோரிக்கை
புதுதில்லி, செப். 29: இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ரஷியாவில் நிறவெறியர்களால் கடந்த 4 நாள்களுக்கு முன்பு இனப்படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இந்திய மருத்துவ மாணவர் நிதீஷ் குமார் சிங்கின் உறவினருடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறது.
மெக்னிகோவ் மருத்துவ அகாதெமியில் நிதீஷ் குமார் சிங், இறுதியாண்டு மருத்துப் படிப்பு படித்து வந்தார். அவரது உடலைப் பெற இந்தியத் தூதரக அதிகாரிகள் அகாதெமியின் மாணவர்கள் தங்கும் விடுதிக்குச் சென்று உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
விடுதி அருகே நிதீஷ் குமார் சிங், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்திய மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு ஏப்ரலில் இதே இடத்தில் இந்திய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். ஆனால், அவர் உயிர்பிழைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Consulate, Doctor, Final year, Hate Crime, Hatred, Medicine, Nitish Kumar Singh, Racist, Russia, St Petersburg, Student, Tamil | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006
அமெரிக்கா செல்ல 2 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு விசா மறுப்பு
ஆமதாபாத், ஆக. 30: குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் மற்றும் அந்த மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஆகியோர் அமெரிக்கா செல்ல விசா வழங்க மறுத்துள்ளது அதன் துணைத் தூதரகம்.
வரும் 1 முதல் 3-ம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில், உலக குஜராத் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்தேவ்ஜி, ஜெகதீஷ் தாகூர் மற்றும் குஜராத் பா.ஜ.க. மூத்த தலைவர் புருஷோத்தம் ரூபலா ஆகியோர் விசா வேண்டி அமெரிக்கா துணைத் தூதரகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு விசா வழங்க அந்த தூதரகம் மறுத்துள்ளது.
மேலும், குஜராத் பல்கலைக் கழக துணைவேந்தர் பரிமல் திரிவேதி மற்றும் சில குஜராத் கலைக்குழுக்களுக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நரேந்திர மோடி: கடந்த ஆண்டில் அமெரிக்கா செல்ல குஜராத் முதல்வர் மோடிக்கும் விசா வழங்க அமெரிக்கா மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Posted in America, Artistes, Baldevji, Congress, Congress(I), Consulate, Immigration, Jagadeesh Thakur, MLA, Modi, Mumbai, New Jersey, Parimal Trivedhi, Purushotham Roobala, Racist, reject, Tamil, US, USA, Visa | Leave a Comment »