Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2007
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன
இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏற்பட்டது.
அந்த இணையதளம் வெளியிட்டுள்ள பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய அமைச்சரவையும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டபிறகு, தலை வெட்டப்பட்ட கோழிகளைப் போல அங்கும் இங்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் தெரிவித்த கருத்துக்களுக்களுக்கு ரோனன் சென் மன்னிப்புக் கேட்டிருப்பதாக அவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவையில் அறிக்கை அளித்தார். ஆனால், உறுப்பினர்கள் அந்த அறிக்கையால் சமாதானம் அடையவில்லை.
ரோனன் சென்னை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து அவரைக் கூண்டில் நிறுத்தி கண்டிக்க வேண்டும் என்றும் இடதுசாரி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையடுத்து ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
Posted in Accord, Ambassador, America, Atom, Atomic, deal, Left, Nuclear, Ronen, Sen, US, USA | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்
என். சுரேஷ்குமார்
ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்
- சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
- துபாயில் 825,
- சிங்கப்பூரில் 791,
- பாகிஸ்தானில் 655,
- மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.
இதேபோல
- லண்டனில் 239 பேர்,
- அமெரிக்காவில் 218,
- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
- ஆப்பிரிக்காவில் 29 பேர்,
- பெல்ஜியம்,
- டென்மார்க்,
- பிரான்ஸ்,
- ஹாங்காங்,
- லிபேரியா,
- நெதர்லாந்து,
- சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
- இத்தாலி,
- ஸ்பெயின்,
- கிரீஸ்,
- போர்ச்சுகலில் 103 பேர்,
- செக் குடியரசு,
- போலந்து,
- பெலாரஸ்,
- மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.
இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.
இரண்டாவது நமது இந்திய அரசு.
புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.
வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.
இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.
வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.
குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.
இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?
Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு
புது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in Ambassador, Bahrain, Bangladesh, Britain, Conuslate, Correctional, Courts, Czech, employee, Employment, England, extradition, Free, Government, Gulf, Immigration, Imprison, India, Indians, Jail, Jobs, Law, London, Malaysia, Order, Pakistan, Police, Prison, Saudi Arabia, Singapore, Slovakia, Statistics, Treaty, UK, US, USA, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007
இந்தியத் தூதரகத்தின் மனித நேயம்!
இஸ்லாமாபாத், பிப். 23: சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுகள் வெடித்ததால் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்திய ஹைகமிஷன் அதிகாரிகளின் தன்னலமற்ற, மனிதாபிமான நோக்கோடு கூடிய சேவையை பாகிஸ்தானியர் பாராட்டுகின்றனர்.
இது தொடர்பாக “”டான்” பத்திரிகையில், ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் ஒருவர் பின்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.
“”விபத்தில் தனது பெற்றோரையும் 2 இளம் குழந்தைகளையும் இழந்தார் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்; தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியான இந்திய ரயில் நிலைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு அவர் விவரம் கேட்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. துக்ககரமான இந்த வேளையில் தகவல்கூட கிடைக்கவில்லையே என்று அவருடன் நாங்களும் வேதனைப்பட்டோம்.
“அப்போது அவருடைய வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரிகள் பேசினர். ரயிலில் குண்டு வெடிப்புக்குப் பிறகு தீ பரவியதால் உடல்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், அவசரப்பட்டு தகவல் தரவில்லை என்று தெரிவித்தனர். அவருடைய உறவினர்கள் 4 பேரும் இறந்துவிட்டனர் என்ற துக்ககரமான செய்தியை வருத்தத்துடன் தெரிவித்தனர். “அத்துடன், உடல்களைப் பெற்றுக்கொள்ள தூதரகம் செய்துள்ள விசா ஏற்பாடு என்ன, தில்லிக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவல்களைக் கூறி, மேற்கொண்டு இன்ன எண்ணைத் தொடர்பு கொண்டால் தில்லி பயணத்துக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இதன்பிறகே என் பக்கத்து வீட்டுக்காரர் சற்று ஆறுதலும் அமைதியும் அடைந்தார்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அந்த வாசகர்.
பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர், இந்த விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும் உதவவும், ஒருங்கிணைக்கவும் தில்லி சென்றுவிட்டார். துணைத் தூதரக அதிகாரி டி.சி.ஏ. ராகவன் தலைமையில் இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரம், காலம் பாராமல் செயல்படுகின்றனர்.
அன்றைய தினம் பயணம் செய்தவர்களின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரிபார்த்து ஒவ்வொருவரையும் அழைத்து, வருத்தம் தெரிவிப்பதுடன் தேவைப்படும் உதவிகளை வலியச்சென்று செய்கின்றனர்.
Posted in Accident, Ambassador, Chicken Soup, Dawn, Heartwarming, Helpline, Indian Consulate, Inquiry, Letters to the Editor, Pakistan, passengers, Samjauta, Samjhauta, Samjhauta Express, Victim | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது
ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த நான்கு பேரும் இன்று பின்னர் ரஷியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், ரஷிய அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதைத் தாங்கள் செய்யவில்லை என்றும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளும் ஒரு உளவு கட்டமைப்பினை ஏற்படுத்த முயன்றனர் என ஜார்ஜிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிகழ்வுகள் குறித்து ரஷியா இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஜார்ஜியாவுடனான போக்குவரத்து அனைத்தையும் தாங்கள் துண்டித்து விட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான வங்கி விவகார பரிமாற்றத்தைத்தையும் தாங்கள் நிறுத்தி விட்டதாகவும், ரஷிய முன்னர் அறிவித்திருந்தது.
Posted in Ambassador, Charges, Consulate, Counsel, EU, Europe, Georgia, Military, Neighbor, OSCE, Relations, Russia, Spy, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006
உயர்ஸ்தானிகர்கள் குறித்த கருத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல -இலங்கை அரசு
 |
 |
உறவு பலமடைய தூதுவர் ஆற்றிய பங்களிப்பினை அரசு வரவேற்கிறது – இலங்கை அரசு |
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமா ராவ் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் வலி முகமட் ஆகியோரின் நடவடிக்கை குறித்து இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க அவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.
அனுரா அவர்கள் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் குறித்த செய்திகள் வெளியான 48 மணி நேரத்துக்குப் பின்னர் இந்த அறிக்கை வருகிறது.
இது தொடர்பாக வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில், இலங்கை, தனது அண்டை நாடுகளான இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும், நெருக்கமான உறவுகளைப் பேணிவருகிறது என்றும், இவ்வாறான பரஸ்பர உறவுகளை மேலும் வளர்க்க இரு நாட்டுத் தூதர்களும் அளப்பரிய பங்கினை ஆற்றியிருக்கிறார்கள் என்றும் மங்கள சமரவீர தெரிவித்திருக்கிறார்.
நிருபமா ராவ், இந்தியத் தூதுவராக பதவி ஏற்றதில் இருந்து இலங்கை-இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த வழங்கிய பங்களிப்பினை இலங்கை அரசு மிகவும் ஆழமாக வரவேற்கிறது என்றும், மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து அவர் சந்தித்து வரும் பல்வேறு வகையிலான சவால்களுக்கும், சமாதான முயற்சிகளில் முன்னேற்றம், இலங்கையின் பாதுகாப்பு, இறைமை போன்ற விடயங்களுக்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட பங்களிப்பு சரியாக சிந்திக்கும் அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்று என்றும் சமரவீர தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
Posted in Ambassador, Anura Bhandranayake, Ceylon, Eezham, India, LTTE, Mahindra Rajapakse, Mangala Samaraweera, Nirupama Rao, Pakistan, SAARC, Sri lanka, Tamil, Waali Mohammed | 1 Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006
 |
 |
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுடன் அனுரா பண்டாரநாயக்க |
இந்தியத் தூதுவர் இலங்கை விவகாரத்தில் தலையிடுவதாக இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
இலங்கையின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களின் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ் அவசியமின்றித் தலையிடுவதாகவும், அதனை அவர் உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும், இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான, அனுரா பண்டாரநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, “இலங்கையர்களாகிய எமக்கு எமது நாட்டை எவ்வாறு பாரமரிக்க வேண்டுமென்பது நன்கு தெரியும். இந்திய உயர்ஸ்தானிகர் திருமதி. நிரூபமா ராவ், அவரது தூதரகத்தின் நடவடிக்கைகளை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும். நாம் யாருடன் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து எமக்குத் தெரியும். எமது நாட்டுப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது குறித்து அவர் ஆலோசனை எதனையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆவேசம் பொங்க தெரிவித்திருக்கிறார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர், இலங்கையில் இந்தியத் தூதுவராகக் முன்னர் கடமையாற்றிய, காலஞ்சென்ற ஜே.என். டீக்சித், இலங்கை தொடர்பில் தனது தான்தோன்றித்தனமான பிடிவாதம் மிக்க அரசியல் கொள்கையினால்தான் அப்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நிலவிவந்த பரஸ்பர நட்புறவில் விரிசல் ஏற்பட்டது என்றும் இதன்காரணமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அதிகபட்ச விலையாகத் தனது உயிரையே கொடுக்க வேண்டி நேர்ந்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.
தனது உரையின் போது, கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அண்மையில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய இலங்கைக்கான முன்னாள் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகம்மட், தன்மீது மேற்கொள்ளப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையான – றோ அமைப்பே காரணம் என இஸ்லாமாபாத்தில் தெரிவித்திருப்பது கவலைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டிய பண்டாரநாயக்க, இலங்கையின் நட்புறவுமிக்க அயல்நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் தமது பிணக்குகளிற்கான களமாக இலங்கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இந்தியா மறுப்பு
இதேவேளை இலங்கை அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்திய வெளியுறவு அமைச்சின் சார்பில் பேசவல்ல அதிகாரி, எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடுவது இந்திய அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும், இலங்கைக்கான தமது தூதுவரான நிரூபமா ராவ் அவர்கள் ஒரு மூத்த இராஜதந்திரி என்றும், அவர் உயர் தொழில்சார் தரத்துடனேயே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை- இந்திய இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது பங்களிப்பு அரசாங்கத்தினால் வரவேற்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Posted in Ambassador, Anura Bhandaranayakha, Assassination, Attempt, India, Internal Affairs, JN Dixit, Nirupama Rao, Pakistan, SAARC, Sri lanka, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 15, 2006
கொழும்பு குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் தூதர் உயிர் தப்பினார்
 |
 |
கொழும்பு குண்டு வெடிப்பில் தாக்குதலுக்குள்ளான வாகனம் |
இலங்கையின் தலைநகர் கொழும்பின் இதயப் பகுதியான கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று பிற்பகல் சுமார் 1.10 மணியளவில் இடம்பெற்ற சக்திமிக்க கிளேமோர் குண்டுவெடிப்பிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார் இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது.
ஆனால் அவருக்கு பாதுகாப்பாக,அவரது வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று கிளேமோர் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த விசேட கொமாண்டோ படை வீரர்கள் நான்கு பேர் உட்பட, சுமார் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பி.பி.சி. தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கப்பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல, விடுதலைப்புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்று கூறினார்.
 |
 |
சம்பவம் நடந்த இடத்தில் படையினர் |
மேலும், இலங்கைக்கான பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர், பஷீர் வலி முகமது அவர்களை இலக்கு வைத்தே இந்தத்தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டினார்.
பாகிஸ்தான் அரசு ஒரு நேசமான அண்டை நாடு என்கிற முறையில் இலங்கையின் பாதுகாப்பிற்காக சில உபகரணங்களை வழங்கியது குறித்து விடுதலைப் புலிகள் விரக்தி அடைந்து இது போன்ற தாக்குதலை நடத்தியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலை பாகிஸ்தானிய மற்றும் இந்திய அரசுகள் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. பாகிஸ்தானின் சுதந்திரதினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Ambassador, Attacks, BBC, Ceylon, Pakistan, Sri lanka, Srilanka, Tamil, Terrorism | Leave a Comment »