Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 27th, 2008

BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

Part – 1 (Dinamani)
Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise « Tamil News

கட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்

மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-

* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.

* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.
———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:
இந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வெளிநடப்பு

மத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

இந்திய கம்ïனிஸ்டு

குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-

இந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.

ரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.

சமாஜ்வாடி கட்சி

சுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

மோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.

பா.ஜனதா

சுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சிவசேனா

மனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.

காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்
சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

புதிய ரெயில் பாதைகள்

தமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

இது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அகல ரெயில் பாதை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.

இந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.

இரட்டை ரெயில் பாதை

தமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.

பறக்கும் ரெயில்

காரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.

———————————————————————————————————————————————————————–

ரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது
பாராளுமன்றத்தில் ருசிகர காட்சிகள்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.

* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சோனியாவுடன் ஆலோசனை

* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.

* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.

கனிமொழி எம்.பி.

* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.

* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.

* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.

* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.

———————————————————————————————————————————————————————–


சென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
வாரம் ஒருமுறை இயக்கப்படும்

புதுடெல்லி, பிப்.27-

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.

ஏழைகள் ரதம்

பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-

* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்)

* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)

* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)

* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)

* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்

* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை

* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்

* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை

இது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

பயணிகளுக்கு புதிய சலுகைகள்
60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்
சென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
மாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
லாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்
கட்டணம் குறைப்பு


பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுடெல்லி, பிப்.27-

2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.

சலுகைகள்

கடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கட்டணம் குறைப்பு

குளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.

படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’

தற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.

முதியவர்கள்

60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.

புதிய ரெயில்கள்

53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு

ரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.

ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.

தேயிலை

இந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.

சாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ரூ.52,700 கோடி திரட்ட இலக்கு

நடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் வாசித்தார்

லாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’
ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து


புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்

லாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

ரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

மேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.

பேரழிவை தரும்

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் பட்ஜெட்

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்?… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.

* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.

* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.

* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.

* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.

* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.

* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.

* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.

* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.

* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.

* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.

* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

———————————————————————————————————————————————————————–

கட்டண குறைப்பு எவ்வளவு?

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு

100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1

200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2

300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3

400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4

500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5

700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7

900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

———————————————————————————————————————————————————————–

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை
செல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-

நீண்ட வரிசை இருக்காது

இன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்திரங்கள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.

கம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.

இவ்வாறு லாலுபிரசாத் தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

சென்ற வருடம்:
Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News
Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News

2008022752331701.jpgஇந்திய ரயில்வே பட்ஜெட்

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே
லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே

குறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.

மூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.

ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

 

எப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

2008022752680101.jpgஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்

லாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்

ரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.


தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்2008022752530601.jpgபுது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

ஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.

2008022752600701.jpgபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)

7.மதுரை-தென்காசி பாசஞ்சர் (தினசரி)

8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)

9.திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினசரி)

2008022756941201.jpg10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)

14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை

2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை

3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்

4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை

நிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.
—————————————————————————————————————————————-
பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு

புதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

022708_07.jpgபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
—————————————————————————————————————————————-
என்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’

பாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.

2008022757960101.jpg“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.

நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.

ரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

ரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

மாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.

—————————————————————————————————————————————-
ரூ.25 ஆயிரம் கோடி லாபம்

புதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

வரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.

அடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

பயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.

பயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.

ரூ.2.50 லட்சம் கோடி

முதலீடு

ரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.

எனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.

11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.

இணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

—————————————————————————————————————————————-
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

புது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.

நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை

கர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை

பால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை

சேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”

இதுதான் அந்தக் கவிதை.

—————————————————————————————————————————————-
முக்கிய அம்சங்கள்

ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை

சரக்கு கட்டணம் உயர்வு இல்லை

பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்

இரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை

தாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்

முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்

காமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.

ஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல

சதவீத கட்டண சலுகை

—————————————————————————————————————————————-
லாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்

உயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
சரக்கு கட்டண உயர்வு இல்லை
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்

புதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.

புறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.

தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

ரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.

பயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

பெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’

இது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

தங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.

—————————————————————————————————————————————-
“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு

புதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:

17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.

எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

—————————————————————————————————————————————-
வட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி
புது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.

மக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.

தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.

“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.

மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.

“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.

குஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).

மக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).

தனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.

காங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.

—————————————————————————————————————————————-

டிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்

புதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:

ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————-
ரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா?

சென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.

காச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.

இந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.

ஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.

மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.

—————————————————————————————————————————————-

AN EYE TO THE HUSTINGS

CUTS

FREIGHT

5% Petrol/diesel
14% Fly ash
6% Traffic to north-east
5% 2nd class fares for tickets >Rs 50
Re 1 Fares for tickets <Rs 50
7% AC 1st class
4% AC 2nd class
The Pay Commission’s impact
Operating ratio
07-08* 76.3
08-09** 81.4

Cash surplus

07-08* Rs 25,065 cr
08-09** Rs 24,782 cr
* Revised estimate ** Budget Estimate
 
 

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.


Posted in dead, Eelam, Eezham, LTTE, Rajapakse, Ranil, Sri lanka, Srilanka, War | Leave a Comment »