Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ranil’ Category

Feb 27: Eezham, Sri Lanka, LTTE, Dead, War, Rajapakse – Updates & News

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

மணலாறு பகுதியில் கொல்லப்பட்ட 14 விடுதலைப் புலிகளின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பு

மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்படும் பதுங்குகுழி ஒன்று

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மணலாறு பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களின் போது கொல்லப்பட்ட சுமார் 14 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலை அதிகாரிகளினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இராணுவ வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மணலாறு பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி முன்னேறிய இராணுவத்தினர் அங்கிருந்த அவர்களது பாதுகாப்பு நிலைகள் சிலவற்றை அழித்திருப்பதோடு, இதன்போது ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் எண்மரது சடங்களையும், ஆயுதத் தளபாடங்கள் சிலைவற்றையும் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து பி.பி.சியிடம் கருத்துவெளியிட்ட அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார, வெள்ளிக்கிழமை மாலை ஆறு புலி உறுப்பினர்களது சடலங்களும், சனிக்கிழமை இரவு மேலும் எட்டு புலி உறுப்பினர்களது சடலங்களும், இராணுவத்தினரால் அநுராதபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இன்றைய தினம் இந்த 14 சடலங்களும் விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனைவிட நேற்றைய தின மோதல்களின்போது கொல்லப்பட்ட மேலும் ஏழு விடுதலைப்புலிகளின் சடலங்கள் அநுராதபுர வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவை பிரேதப் பரிசோதனையின் பின்னர் நாளையோ அல்லது நாளை மறுதினமோ விடுதலைப்புலிகளிடம் சேர்ப்பிக்கப்படுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கக் குழுவிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் அநுராதபுர மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய இந்த சந்திப்பின்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வுத்திட்டம், மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அத்துடன் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றினைக் காண்பதற்கு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது கட்சி ஆதரவினை வழங்குமென எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் உறுதி கூறியதாகவும், 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கும் அக்கட்சி ஆதரவினை வழங்கும் என்று அவர் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க, இந்த மாத முற்பகுதியில் பாராளுமன்ற வளவினுள் முன்னாள் ஜானாதிபதி ஆர். பிரேமதாஸவின் உருவச்சிலையின் திரைநீக்க விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டில் தற்போதுள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாட சந்திப்பொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இன்றைய இந்தச் சந்திப்பு இடம்பெறவிருந்ததாகவும் தெரிவித்தார்.


Posted in dead, Eelam, Eezham, LTTE, Rajapakse, Ranil, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Emirates to end 10-yr deal with Lankan Airlines & Ceasefire abrogation to benefit LTTE: Sri Lanka opposition

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

சிறிலங்கன் ஏர்லைன்ஸை நிர்வகிப்பதிலிருந்து வெளியேறியது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

 

இலங்கை அரசாங்கத்தின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தில் சுமார் 43.6 விகித பங்குகளுடன் அதனை நிர்வகித்துவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிறிலங்கன் எயர்லைன் ந்டன் தான் செய்துகொண்ட முகாமைத்துவ உடன்படிக்கையிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியுடன் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

1998 மார்ச் மாதத்தில் ஏர் லங்கா தனது சேவைகளையும், வருமானத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் அதன் பங்குகளில் 43.6 விகித்தத்தினை விற்பனை செய்திருந்ததுடன், அதன் முகாமைத்துவத்தையும் பத்துவருட உடன்படிக்கையின்கீழ் எமிரேட்ஸ் எயர்லைன்ஸிடம் கையளித்திருந்தது.

இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள எமிரேட்ஸ் நிறுனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரிம் கிளார்க் எதிர்வரும் மார்ச் 31ம் திகதியுடன் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முகாமைத்துவத்துவப் பொறுப்புக்கள் அனைத்தையும் தாம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும், சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள 43.6 விகித பங்குகளையும் யாராவது கொள்வனவு செய்யமுன்வந்தால் அவற்றினை விற்பதற்கு அந்த அமைப்பு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் லண்டனிற்கான விஜயத்தின் பின்னர் சிறிலங்கா எயர்லைஸிற்கும், அதனை நிர்வகித்துவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸிற்குமிடையில் பல சச்சரவுகள் தொன்றியிருந்தன. இதன் ஒரு அங்கமாக எமிரேட்ஸின் சார்பில் சிறிலங்கா ஏர்லைன்ஸினை நிர்வகித்துவந்த அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் ஹில்லினுடைய தொழில் அனுமதியை இலங்கை அரசு ரத்துச் செய்திருந்தது.

இந்தச் சச்சரவு தொடர்பாக உள்ளூர் ஊடகங்களிற்குக் கருத்துவெளியிட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சாமல் ராஜபக்ஷ எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைகளிற்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோது விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதனுடனான ஒப்பந்தத்தினை தொடந்து புதுப்பிப்பதில் அரசிற்கு நாட்டமேதுமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.


சர்வதேச அரங்கில் இலங்கை அரசின் நிலைபாட்டை போர்நிறுத்த ஒப்பந்த விலகல் பலவீனப்படுத்தியுள்ளது: ஐக்கிய தேசியக் கட்சி

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக விலகியிருப்பது, இலங்கை அரசின் நிலைப்பட்டை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தியிருப்பதாக, இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை அரசின் இந்த முடிவு, விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு வலுசேர்ப்பதாக இருப்பதாக அமையும் என்றும் அந்த கட்சி கூறியுள்ளது.

இலங்கை அரசின் நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளும், ஐ.நா.சபையும் இலங்கை அரசின் முடிவு குறித்து தமது கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் இலங்கைக்கு அளித்து வந்த ராணுவ உதவிகள் என்பவை, போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், அதன் தொடர்ச்சியான சமாதான நடவடிக்கைகளின் அடைப்படையிலும் அமைந்தவை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், இலங்கை அரசின் முடிவு, சர்வதேச ரீதியிலும் இலங்கைக்குள்ளும் அரசின் நிலையை வலுவிழக்க செய்திருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.


Posted in Airlines, Ceasefire, deal, Eelam, Eezham, Emirates, LTTE, Opposition, Ranil, Sri lanka, Srilanka | Leave a Comment »

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Sri Lanka Muslim Congress party quits Rajapaksa regime – Sri Lanka Majority Cut to One; Budget May Be Defeated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

இலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

ஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்

இலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


யாழ்ப்பாணத்தில் சர்வமத சமாதான மாநாடு

உள்நாட்டுப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமாதானம் தொடர்பான இரண்டுநாள் சர்வதேச சர்வமத மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.

கம்போடியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் சுமார் 11 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாண நூலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இந்த மாநாட்டை தென்னாபிரிக்காவில் செயற்பட்டு வரும் காந்தி மன்றத்தின் தலைவியும், மகாத்மா காந்தியின் பேத்தியுமாகிய எலாகாந்தி அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் இந்த மாநாட்டில் விசேடமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார்.

யுத்த மோதல்கள் காரணமாக இரத்தம் சிந்தும் நிலை, மக்கள் இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, அமைதியின்மை ஆகிய பல்வேறு துன்பங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்பதை இங்கு உரையாற்றிய இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சர்வதேசத் தலைவர்களுடன் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த உள்ளுர் மதத் தலைவர்களும் ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்றைய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து இதில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

Posted in Abductions, Ampara, Basheer Cegu Dawood, Batticaloa, Budget, Eelam, Eezham, Faisal Cassim, Finance, Hakeem, Hasan Ali, Islam, Jaffna, Karuna, Karuna Amman, LTTE, majority, Muslim, Opposition, parliament, Rajapakse, Ranil, Ranil Wickremasinghe, Rauff, Rauff Hakeem, Religion, SLMC, Sri lanka, Srilanka, Tamil Makkal Viduthalai Pulikal, Tamil National Alliance, TMVP, TNA, War, Wickremasinghe | Leave a Comment »

Mahinda Rajapakse & LTTE made a deal? US, German and Italian ambassadors injured in a LTTE attack

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.


‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்

மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்
மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்

இலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.

Posted in Ambassadors, Army, Attack, Batticaloa, Colombo, deal, German, Germany, Human Rights, Italy, LTTE, Mahinda Rajapakse, Mahinda Samarasinghe, Military, Rajapakse, Ranil, Ranil Wickremesinghe, Rebels, Siripathi, Siripathi Sooriyaarachchi, Siripathy, Sooriyaarachchi, Sooriyaarachi, Sri lanka, Srilanka, Tamil Tiger, US, USA, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »