வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு
பள்ளிப்பட்டு, ஜுன். 27-
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். இவரும் தெலுங்கில் முன் னணி நடிகராக உள் ளார். இவரது மனைவி லலிதா தேவி என்ற நந்தினி. இவர் விசாகப்பட்டினம் கோர்ட்டில் பவன்கல்யாண் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். அவர் கோர்ட்டில் அளித்த புகா ரில் பவன்கல்யாணுக்கும் எனக்கும் 1991ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந் தோம்.
அவருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடிகை ரேணுகாதேசாயுடன் தொடர்பு ஏற்பட்டது. பின் னர் ரேணுகாவை 2-வது திரு மணம் செய்து கொண்டார். இதன்பிறகு அவரது போக் கில் மாற்றம் ஏற்பட்டது. என் னிடம் அதிக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கு அவரது சகோதரர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, தம்பிநாகேந்திர பாபு, அவரது மனைவி பத்மஜா, சகோதரிகள் விஜயதுர்கா, மாதவி உள்ளிட்ட 16பேர் உடந் தையாக இருந்தனர்.
எனது கணவருடன் சேர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட அனைவரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே இவர்கள் மீது 494சட்டப்பிரிவு படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டிருந்தார்.
இதே போல நந்தினி விசா கப்பட்டினம் குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு தொடர்ந் துள்ளார். அதில் கணவர் பவன்கல்யாண் எனக்கு மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.