Tony Blair questioned again by British police
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007
டோனி பிளேர் இரண்டாவது தடவையாக பொலிஸாரால் விசாரணை
![]() |
![]() |
பிரதமர் டோனி பிளேர் |
பிரிட்டனில் அரசியல் கட்சிகளுக்குப் பெருந்தொகைப் பணத்தை கடனாக வழங்குவோருக்கு, கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்திவரும் பிரிட்டிஷ் பொலிஸார், பிரதமர் டோனி பிளேரை இரண்டாவது தடவையாக விசாரணை செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ”பிரதமர் வெறும் சாட்சி என்ற வகையிலேயே விசாரிக்கப்பட்டார்; சந்தேக நபர் என்ற வகையில் அல்ல” என்று பிரதமரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
நீதி நெறி பிறழும்படி நடந்து கொண்டதாகச் சந்தேகத்தின் பேரில் பிரதமரின் மிகவும் நெருங்கிய அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமர் முதல் தடவையாக பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டார்.
குற்றவியல் விசாரணை ஒன்றின் ஒரு அம்சமாக பிரிட்டிஷ் பிரதமர் ஒருவர் விசாரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்