Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 16th, 2007

Interview with Gautham Menon – Pachaikkili Muthucharam Director

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

நான்கு படங்கள் எடுத்தும் பணம் சம்பாதிக்கவில்லை: இயக்குனர் கவுதம் சொல்கிறார்

சென்னை, பிப்.16-

மின்னலே, காக்ககாக்க, வேட்டையாடு விளையாடு என்று ஹாட்ரிக் வெற்றி கொடுத்துவிட்டு பச்சைக் கிளி முத்துச்சரத்திடமிருந்து நான்காவது வெற்றியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.

திரைப்படங்களில் தொழில் நுட்பங்களை கையாள்வதில் கில்லாடி என்று பெயர் பெற்றிருக்கும் கவுதம்மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் சிறப்பாக வந்திருக்கும் திருப்தியில் இருக்கிறார் அவர் அளித்த பேட்டி.

மனிதனின், மனித உறவுகளின் மதிப்பை போற்றும் படம் பச்சைக்கிளி முத்துச்சரம். வித்தியாசமான முறையில் எடுத்திருக்கிறோம்.

எனது முந்தைய படங்களிலிருந்து இது மாறு பட்டது. சரத்குமார் நடிக்கும் படம் என்பதால் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்பதை மனதில் வைத்து சண்டை போன்ற சில அம்சங்களை கூடுதலாக சேர்த்திருக்கிறேன். குறிப்பாக படத்தின் முதல் பாதியை பாலுமகேந்திரா எடுத்த ஆங்கில படம் போல் புதுமையான நடையில் சொல்லியிருக்கிறேன்.

ஒவ்வொரு படத்தின் போதும் தோன்றும் எதிர் பார்ப்புகளுக்கு நான் கவலை படுவேன்.

மீடியாக்கள் தேவை யில்லாத எதிர்பார்ப்பு களையும் பரபரப்புக்களையும் தூண்டி விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு படத்தின் உருவாக்கத்தின் போதும் மீடியாக்களை கண்டு மறைகிறேன்.

பச்சைக்கிளி முத்துச் சரத்தின் கதை பெரிய வர்களுக்கானது என்பதால் படத்தின் `கரு’ அடிப்படையில் இந்த படத்திற்கு `ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

திருமண பந்தத்தை தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் படம் இது

நான் சினிமாவில் சாதிப் பதற்கு பக்க பலமாக எனது குடும்பத்தினர் உள்ளனர். குறிப்பாக மைக்ரோசாப்ட்டில் வேலை செய்யும் எனது சகோதரி அதிகம் உதவி செய்கிறார்.

இதுவரை நான்குபடங்கள் இயக்கியிருக்கிறேன். இந்த நான்கு படங்களிலிருந்தும் பெரிதாக பணம் எதையும் சம்பாதிக்கவில்லை. சினிமா படைப்பு என்பதற்கு பணம் குவிப்பது என்பது அர்த்தமல்ல எனது மனைவி பிரீத்திக்கு நான் முழுநேரமும் சினிமாவே கதி என்று இருப்பதில் கொஞ்சம் அதிருப்திதான் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறாள்.

எனது அடுத்தப் படமான `வாரணமாயிரத்தில்’ வசனம் கம்மிதான் இருந்தாலும் அதன் காட்சிகள் மூலமாக கதையை அற்புதமாக சொல்வேன். சினிமாவில் நடிக்கும் எண்ணம் எல்லாம் கிடை யாது. ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்கும் அளவிற்கு முகம் தெரிந்த ஆளாக இருக்க விரும்பவில்லை. அது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், தனிமையை கெடுக்கும் என்கிறார் கவுதம்மேனன்.

Posted in A, Adults Only, Derailed, Director, Gautham Menon, Gopika, Interview, Jennifer Aniston, Kaakka Kaakka, Microsoft, Minnaley, Pachai Kili Muthucharam, Pachaikkili Muthucharam, Pachaikkli Muthucharam, Sarathkumar, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theatres, Vaaranam Aayiram, Vettaiyadu Vilaiyadu | Leave a Comment »

Alleged ‘Yana Guptha’ sex video is making rounds – Maalai Malar

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

செல்போனில் பரவும் நடிகை யானாகுப்தா ஆபாச படம்

சென்னை, பிப். 16-

செல்போனிலும் இண்டர்நெட்டிலும் நடிகைகளின் ஆபாசபடங்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பூட்டுகின்றன. நடிகைகளுக்குத் தெரியாமல் படுக்கையறைகளிலும் குளியலறைகளிலும் இந்த படங்களை எடுத்து பரவவிடுகின்றனர்.

நடிகை திரிஷா குளியல் அறையில் குளிப்பது போன்ற காட்சி சிலமாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்று வதும் நிர்வாணமாக நின்று குளிப்பதும் அப்பட்டமாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் இருப்பது நான் இல்லை என்று திரிஷாமறுத்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் தங்க நடிகைகள் பயந்தனர்.

சிம்ரன், சொர்ணமால்யா சாயலில் இருந்த ஆபாச படங்களும் வெளியாயின. படுக்கை அறையில் இப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் பாபிலோனா நடித்ததாக ஆபாச பட கேசட்டுகள் வெளிவந்தன. ஆபாச படத்தில் தான் நடிக்க வில்லை என்று பாபிலோனா மறுத்தார்.

தற்போது கவர்ச்சி நடிகை யானாகுப்தாவின் ஆபாச படங்கள் செல்போனில் பரவியுள்ளன. இவர் அந்நியன், படத்தில் காதல் யானை பாடலில் ஆடியவர். மன்மதன் படத்திலும் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.

படுக்கையறையில் ஒரு ஆணுடன் இருந்து விட்டு நிர்வாணமாக எழுகிறார். பின்னர் ஆடையின்றி அப்படியே பாத் ரூம் செல்கின்றார். அங்கு சில நிமிடங்கள் குளிக்கிறார். இந்த காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. கதவு துவாரம் வழியாக செல்போனில் இதை படம் எடுத்துள்ளனர். பின்னர் அவற்றை பரவ விட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் செல்போனில் இப்போது இந்த படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Posted in Actress, Anniyan, Babilona, Bath, Cellphone, Glamour, Manmadan, Manmadhan, Manmathan, MMS, Nude, Rumour, Sadha, Sex, Shankar, Simbu, Simran, Sornamalya, Trisha, video, Vikram, XXX, Yaana Gupta, Yana Gupta, Yana Guptha | 5 Comments »

UAE ready to get Indian mutton after export ban is lifted

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

ஏற்றுமதி தடை நீக்கம்: இந்திய இறைச்சி மீண்டும் அமீரகத்தில் கிடைக்கும்

துபை, பிப். 16: இறைச்சி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, இந்திய இறைச்சி மீண்டும் ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் நல சர்வதேச அமைப்பின் அறிவுரையின் பேரிலும் கோமாறி நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இறைச்சி ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அரசு தடைவிதித்தது.

இத்தடைக்கு எதிராக இறைச்சி ஏற்றுமதியாளர்கள் நீதிமன்றத்தை அனுகியதையடுத்து, தற்போது தடை நீங்கியுள்ளது.

இதையடுத்து 5 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய இறைச்சி அமீரகத்தில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தடைக்கு முன்பு, இந்தியா ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 டன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

===================================================

இந்திய கோழி இறைச்சிக்கு துபையில் தடை நீடிப்பு

துபை, மார்ச் 16: இந்திய கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீடிப்பதாக ஐக்கிய அரபு அமீரக சுற்றுச்சூழல் துறை முகமது சய்யீத் அல் கின்டி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்ததை அடுத்து 2005-ம் ஆண்டில் கோழி இறைச்சி, முட்டைகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

சில நகராட்சிப் பகுதிகளில் இந்திய முட்டைகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. நகராட்சி நிர்வாகப் பகுதிகளில் தடைநீக்கப்படவில்லை என்பதை தெளிவுப் படுத்தியுள்ளோம்.

தடையை நீக்குவது குறித்து அமைச்சகம் தான் முடிவு செய்யவேண்டும் என்றார் அவர். இத்தகவல் துபை நாளிதழில் வெளியாகியிருந்தது.

Posted in Avian Flu, Ban, Business, Chicken, chilled meat, Commerce, Dubai, Economy, Eggs, Environment, Export, Exports, Finance, Food, foot-and-mouth disease, Gulf, Halaal, Halal, Health, Indian mutton, Kosher, Lamb, Meat, mutton, Outbreak, Pakistan, Prices, Sanity, Small Biz, South Asia, UAE, Vegetarian, Virus, World Organisation for Animal Health | Leave a Comment »

Ve Ganesan – Banking impact to Economy, Finance and Commerce

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

“வங்கிப் பழக்கம் வைரச் சுரங்கம்’

வெ. கணேசன்

வங்கிப் பழக்கம் இந்நாளில் அவசியத் தேவையாகியுள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள 40 லட்சம் வங்கிக் காசோலைகள் மீதான பணப் பரிவர்த்தனை, நாட்டின் பல்வேறு நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 1100 மையங்களில் கையாளப்பட்டு வருகின்றன.

தொடர்ந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டால், தொழில் முனைவோரும், வர்த்தகப் பிரிவினரும், வாடிக்கையாளர்களும், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி விடுகின்றனர்.

இருந்தாலும் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீத மக்களிடையே மட்டும்தான், வங்கிப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதனால்தான் குறைந்தபட்ச இருப்புத்தொகை என எதுவும் இல்லாமலேயே, வெறும் பத்து ரூபாயைக்கூட செலுத்தி, வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கேரளத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம்தான், நாட்டிலேயே வீடு தவறாது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் முதல் மாவட்டமாக மாறியுள்ளது.

உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. அதேசமயம் வறுமைக் கோட்டுக்குக் கீழே, இரண்டு வேளை உணவுகூடக் கிடைக்காமல் பசியால் பரிதவிப்பவர்களும், இங்கே முப்பது கோடி பேருக்கும் மேலே உள்ளனர்.

2006-ம் ஆண்டின், உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு, வங்க தேச அறிஞரும், குறுங்கடன் வழங்கும் கிராம வங்கி நிறுவனருமான முகம்மது யூனுசுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் அடித்தட்டு மக்களுக்காக, குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்காக, கிராம வங்கியை உருவாக்கி, அதை வெற்றிகரமாய் செயல்படுத்திக் காட்டி, சாதனை படைத்த காரணத்திற்காகத்தான், இந்த உலகளாவிய விருது, அந்த மனிதரைத் தேடிச் சென்று அளிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டு மக்களில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே வங்கிகள் அளிக்கும் கடன் வசதியை அனுபவிக்கின்றனர். ஏனைய மக்களோ, கடன் பெறத் தகுதியற்றவர்கள் என ஒதுங்கி இருக்கின்றனர்.

கடன் வசதி என்பது வறுமையை அகற்றுவதற்கான ஒரு முக்கிய சாதனம். எனவேதான் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் நமது நாடு முழுவதும் கிராம வங்கிகள் தொடங்கப்பட்டன.

அதன்படி நமது நாட்டின் மொத்தமுள்ள 605 மாவட்டங்களில் 525 மாவட்டங்களில் இன்று கிராம வங்கிகள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் இரண்டு. அதில் ஒன்று, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு, வடமாவட்டங்களில் செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கி. மற்றொன்று விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி.

நமது நாட்டிலுள்ள கிராம வங்கிகளின் எண்ணிக்கை 102 ஆகும். இவற்றின் மொத்தக் கிளைகள் 14,495. இதில் 86,687 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த மார்ச் மாத முடிவில், 72,510 கோடி ரூபாயை டெபாசிட்டாகத் திரட்டியுள்ளனர். 40 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனுதவியாக அளித்துள்ளனர்.

அளிக்கப்பட்ட கடன் தொகையில், 79 சதவீதம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அகில இந்திய அளவில், நாட்டின் முதன்மை கிராம வங்கியென, “பாண்டியன் கிராம வங்கி’ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகச் சேவை புரிந்து வருகிறது.

நமது நாட்டில் இன்னமும் கிராம வங்கிகள் தொடங்கப்படாத மாநிலங்கள் இரண்டு இருக்கின்றன. அவை கோவா மற்றும் சிக்கிம் ஆகியன.

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும், வேளாண் துறைக்கு ரூ.1,75,000 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்பக் கல்வி கற்க ஏதுவாக, 12,106 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 8,01,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 4,863 கோடி கடனுதவியை வழங்கி அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 3,85,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கடன் சுமையை எளிதாக்கி நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் வட்டியைத் தள்ளுபடி செய்து சாதனை படைத்தன அரசுத் துறை வங்கிகள்.

ஆக நாட்டில் உணவு உற்பத்தி பெருகவும், கல்வியாளர்களை உருவாக்கவும் வங்கிப் பழக்கம் ஆதரவுக் கரம் நீட்டி, உறுதுணையாய் நிற்கிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு வங்கிச் சேவை என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. இவற்றை ஒழுங்குபடுத்தும் விதத்தில்தான், நாட்டில் முதன்முதலாக 1949ம் ஆண்டு, வங்கியியல் கம்பெனிகள் சட்டம் உருவாக்கப்பட்டது.

1809ல் பாங்க் ஆப் பெங்கால் வங்கியும், 1840ல் பாங்க் ஆப் பாம்பேயும், 1843ல் பாங்க் ஆப் மெட்ராஸýம் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில், இம் மூன்று வங்கிகளும் “பிரசிடென்சி வங்கிகள்’ என்று அழைக்கப்பட்டன.

1862ல் தான் அரசாங்கம் முதன்முதலாக காகிதப் பணத்தை அச்சிட ஆரம்பித்தது. 1905ல் சுதேசி இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆங்காங்கே புதிது, புதிதாய் வங்கி அமைப்புகள் முளைத்து எழுந்தன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நெறிமுறைப்படுத்த, 1913-ல் இந்திய கம்பெனிகள் சட்டத்தில் வங்கிகளுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

27.01.1921-ல், பாங்க் ஆப் பெங்கால், பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் ஆகிய மூன்று வங்கிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, “இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா’ என அழைக்கப்படலாயிற்று. பின்னர் சுதந்திர இந்தியாவில் 1955-ம் ஆண்டு இம்பீரியல் பாங்க் என்பது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வாக மாறியது. உலக அளவிலான வங்கிகளில், நமது “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ இன்று 82 வது இடத்தில் இருக்கிறது.

1969ம் ஆண்டு ஜூலை 19ம் நாள் நாட்டின் மிகப்பெரிய 14 வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழி அமைத்துத் தரப்பட்டது. அப்போது நாட்டிலிருந்த வங்கிக் கிளைகள் 8260 மட்டுமே. இவற்றிலும், கிராமப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தவையோ வெறும் 1860 கிளைகள்தான். இதன் தொடர்ச்சியாக 1980ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் நாள் மேலும் 6 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன.

ஆனால்… இன்றோ, வங்கி எண்ணிக்கையின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆம். 2006 அக்டோபர் மாத நிலவரப்படி, நமது நாட்டின் அட்டவணை வர்த்தக வங்கிகளின் எண்ணிக்கை எழுபதாயிரத்தை எட்டியுள்ளது.

இவ்வங்கிகள், பொதுமக்களிடம் இருந்து திரட்டி வைத்துள்ள வைப்புத் தொகை 22,92,525 கோடி ரூபாய். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு விதமான நலத் திட்ட கடன் தொகை அளவோ, 16,55,567 கோடி ரூபாய். இவற்றில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கை மட்டும் ஏழரை லட்சம்.

உள்னாட்டு வங்கிப்பணியின் சேவை அயல்நாடுகளிலும் விரிந்துள்ளன இன்று. அயல் மண்ணில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிக் கிளைகள் 123.

இவற்றிற்கிடையே, வங்கிக் கணக்குகளை ஆங்காங்கே தொடங்கி, கோரிக்கை அற்றுக் கிடக்கும் வாடிக்கையாளர் பணம் மட்டும் ரூ.881 கோடி.

வீட்டுக்கொரு மரம் வளர்த்து சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம் என்கிற தாரக மந்திரம்போல், வீட்டுக்கொரு வங்கிக் கணக்கைத் தொடங்கினால், நாடும், மக்களும் நலம் பெறுவர் என்பது திண்ணம்.

(கட்டுரையாளர்: பாண்டியன் கிராம வங்கி தொழிலாளர் சங்க

இணைப் பொதுச் செயலர்).

Posted in Analysis, Backgrounder, Banking, Banks, Checking, Checks, Cheques, Commerce, Deposits, Economy, Finance, History, Imperial Bank of India, Kerala, Loans, Microfinancing, Mohammed Yunus, NGO, Op-Ed, Palacaut, Palacode, Palagode, Presidency banks, Rural, Salem, Savings, SBI, Self-help, Village, Virudunagar, Viruthunagar | 1 Comment »

Dharmapuri Bus burning: Death for 3 AIADMK men

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 16, 2007

கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு: நடந்தது என்ன?

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவியர் மூன்று பேர் பஸ்ஸில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக அதிமுக-வினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

2000-ம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேர், மாணவிகள், பேராசிரியைகள் உள்பட 50 பேர் தனித்தனி பஸ்களில் 12 நாள்கள் கல்விச்சுற்றுலா சென்றனர்.

பல ஊர்களுக்குச் சென்ற அவர்கள், தருமபுரி மாவட்டம் பையூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு பிப்.2-ம் தேதி வந்தனர். அன்றோடு சுற்றுலா முடிந்ததால், ஏற்காடு செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

மாணவிகள் வந்திருந்த பஸ், ஏற்காடு மலைப்பாதையில் செல்ல இயலாது என்பதால், ஒகேனக்கல் செல்வதென்று முடிவு செய்யப்பட்டது.

பிப்.2-ம் தேதி காலை பல்கலைக்கழக பஸ்ஸில் மாணவிகள் மட்டும் ஒகேனக்கல் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் தருமபுரியை அடுத்த இலங்கியம்பட்டியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பஸ், அதிமுகவினரால் மறிக்கப்பட்டது.

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் இந்த பஸ்ûஸ வழி மறித்தனர்.

அதிலிருந்த மாணவிகள் அனைவரும் இறங்குவதற்குள், பெட்ரோல் ஊற்றி பஸ்ஸþக்குத் தீயிடப்பட்டது. மளமளவென்று பற்றி எரிந்த பஸ்ஸில் சிக்கிக் கொண்ட மாணவிகள் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள்.

இச்சம்பவத்தில் 18 மாணவிகள் தீக்காயங்களுடன் தப்பினர்.

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து நடந்த விசாரணையில், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் பஸ்ஸþக்குத் தீயிட்டனர். அவர்களை நேரடியாகப் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறிய தகவல்கள் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸôர், மோட்டார் சைக்கிளில் வந்தது அதிமுகவைச் சேர்ந்த புளியம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் முனியப்பன் எனக் கண்டறிந்தனர். இதையொட்டி சேலத்தில் அவரை போலீஸôர் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் தருமபுரி நகர் அதிமுக கிளைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரத் துணைத்தலைவர் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, இலங்கியம்பட்டி நோக்கிச் சென்றனர்.

அப்போது வழியில் பாரதிபுரம் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்ஸþக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பஸ்ஸþக்குள் பெட்ரோலை ஊற்றி தீயிட்டதாகவும் விசாரணையில் முனியப்பன் தெரிவித்தார்.

இதையொட்டி 2000-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸôர் கைது செய்தனர்.

இலக்கியம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தருமபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 28 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாஜில்திரேட் நீதிமன்றத்தில் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி சிபிசிஐடி போலீஸôர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் 386 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

தருமபுரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மே 2-ம் தேதி இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அங்கிருந்து ஜூலை 24-ம் தேதி கிருஷ்ணகிரி செசன்சு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

அங்கு 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி இவ்வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றது. பஸ் எரிப்பு குறித்து புகார் செய்த கிராம நிர்வாக அதிகாரி உள்பட 20 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

பஸ் எரிப்பில் பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி இந்த வழக்கை கோவை நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி கனகராஜ், இவ்வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞராக சீனிவாசனை நியமித்து, 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

பஸ்ஸில் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பு: மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டும் நிரூபணம் – சேலம் நீதிமன்றம் தீர்ப்பு இன்று தண்டனை அறிவிப்பு

சேலம், பிப். 16: தருமபுரி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டோரில், அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவர் கொலைக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும் 25 அதிமுகவினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், குற்றவாளிகள் யார் யாரென்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.

அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலம் நீதிமன்றத்தில் கடும் போலீஸ் பாதுகாப்புக்கிடையே இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வந்த நீதிபதி கிருஷ்ணராஜா, முதலில் வேறு வழக்குகள் குறித்து விசாரித்தார்.

இதையடுத்து பகல் 10.53 மணிக்கு தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு குறித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரில், செல்லக்குட்டி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார். நீதிமன்றத்தில் மற்ற 30 பேரும் ஆஜராகியிருந்தனர்.

அவர்களில் எஸ்.பழனிசாமி, மாதேஷ் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இவ்வழக்கில் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் நீதிபதி.

அரசுத் தரப்பில் 22 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. மற்ற குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான குற்ற விவரத்தைப் படித்த நீதிபதி கிருஷ்ணராஜா, அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு பிரிவுகள் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தண்டனை விதிப்பதாகவும், தங்கள் கருத்தைக் கூறும்படியும் ஒவ்வொருவரிடமும் கேட்டார் நீதிபதி. அதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மாது, முனியப்பன் ஆகியோர், தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அரசு வழக்கறிஞர் சீனிவாசன், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோரை கொலைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.

இதையொட்டி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மற்றவர்கள் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை; 25 பேருக்கு தலா 7 ஆண்டு ஜெயில்

சேலம், பிப். 16-

கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி இலக்கி யம்பட்டியில் கோவை வேளாண் கல்லூரி மாணவி கள் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் மாணவிகள் கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உயிரோடு எரிந்து பலியானார்கள்.

இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்ற வாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.

மாதேஷ், பழனிச்சாமி விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமானதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரம் இன்று அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

தண்டனை விவரத்தை நீதிபதி கிருஷ்ணராஜா இன்று பகல் 10.45 மணிக்கு அறிவித்தார்.

கொலை குற்றம் நிரூபிக் கப்பட்ட நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

25 பேர் பெயர் விவரம் வருமாறு:-

  1. முருகேசன்,
  2. தவுலத் பாஷா,
  3. வேலாயுதம்,
  4. முத்து என்கிற அறிவழகன்,
  5. ரவி,
  6. வி.முருகன்,
  7. வி.பி.முருகன்,
  8. வடிவேல்,
  9. சம்பத் மற்றும்
  10. நஞ்சன் என்கிற நஞ்சப்பன்,
  11. ராஜ×,
  12. மணி என்கிற கூடலர் மணி,
  13. மாது,
  14. ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்),
  15. சண்முகம்,
  16. சந்திரன்,
  17. செல்லகுட்டி,
  18. காவேரி,
  19. மணி,
  20. மாதையன்,
  21. செல்வம்,
  22. செல்வராஜ்,
  23. மாணிக் கம்,
  24. வீரமணி,
  25. உதயகுமார்.

நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-

கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது.

இது தவிர சொத்து சேதப் படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.

டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத் துடன் சட்டவிரோத கும்பலு டன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

“கெஞ்சிய மாணவிகளை கொளுத்தியது அரிதிலும் அரிய குற்றம்’

சேலம், பிப். 17: “உயிர் தப்பிக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிய மாணவிகளை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் தீயிட்டுக் கொளுத்திய கொடுஞ்செயல் அரிதிலும் அரிதான சம்பவமாகும்’ என்று சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“குற்றம் நிரூபணமானோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது சட்டரீதியான நடவடிக்கையாகும்; அதேசமயத்தில் தூக்குத் தண்டனை விதிப்பது விதிவிலக்காகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவியர் எரிப்பு தொடர்பான வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து அவர் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். 180 பக்கங்கள் கொண்ட அவரது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:

தருமபுரி அருகேயுள்ள இலக்கியம்பட்டியில் நடந்த பஸ் எரிப்புச் சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அரிதிலும் அரிதான குற்றச் செயலாகக் கருத வேண்டியுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பல வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அண்மையில் ஓரிரு வழக்குகளில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டோர் “திருத்த முடியாத குற்றவாளிகள்’ எனக் கருதும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று பஸ் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைக்க முயன்றபோது “நாங்கள் இறங்கி விடுகிறோம், அதன்பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று பஸ்ஸýக்குள் இருந்தவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, கெஞ்சியுள்ளனர்.

ஆனால் சிறிதும் கருணை காட்டாமல் பஸ்ஸின் முன்கதவை மூடி, தீயிட்டு மாணவிகளைக் கொளுத்தியுள்ளனர்.

அவர்களது நோக்கம் பஸ்ûஸ மட்டும் கொளுத்துவதாக இல்லை. பஸ்ஸில் இருந்த அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு குற்றம் சாட்டப்பட்டோர் செயல்பட்டதாகத் தெரிகிறது.

“பஸ் கதவை மூடுங்கடா; அனைவரையும் கொளுத்துங்கடா’ என சம்பவ இடத்தில் சப்தமிட்டதும் அவர்களது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தகைய செயல் ஏற்க முடியாதது. ஏனென்றால் அங்கு நடந்த சம்பவத்தைப் பொதுமக்களே நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எந்த விதத்திலும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவி மாணவிகள் மீது இரக்கம் காட்டாமல், அவர்களை உயிரோடு கொளுத்துவது என்பது கோரமான செயலாகும். இக்கொடூரச் செயல் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது. இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது. சட்டத்தில் குறிப்பிட்ட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் கட்சித் தலைமையோ, பிற நிர்வாகிகளோ தூண்டாத நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்டோர் தாங்களே சுயமாக இவ்வாறு செய்துள்ளனர் எனக் கருத வேண்டியுள்ளது.

“இப்படிச் செய்தால் அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம், செல்வாக்கு பெறலாம் என்ற அணுகுமுறையே இதற்குப் பின்னணியாக இருக்கக் கூடும்’ என்று வாதிட்டதை முக்கியமாகக் கருத வேண்டியுள்ளது.

இத்தகைய குற்றங்கள் செய்வோரை திருத்தவே முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டதின் அடிப்படையில், மூன்று மாணவிகளைக் கொளுத்திய செயலை அரிதிலும் அரிதான குற்றம் என ஏற்க வேண்டியுள்ளது.

இந்த கொடுஞ்செயலில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரது மனநிலை, தீயில் காயமடைந்த மாணவிகளின் நிலையைக் கருதி, நடந்த சம்பவத்தை கடும் குற்றச் செயலாகக் கருதி தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.

தருமபுரியில் அன்று நடந்த சம்பவம் சமுதாயத்தில் யாராலும் ஏற்க முடியாதது; மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவி மாணவிகள் மூவரைக் கொடூரமான முறையில் கொலை செய்தது அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய குற்றமாகும் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

3 மாணவிகள் எரிப்பு வழக்கு: அடையாளம் காண உதவிய கேசட்டுகள்

சேலம், பிப். 17: தருமபுரி அருகே பஸ்ஸில் மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண வழிவகுத்தவை தெளிவான- வலுவான விசாரணை, சாட்சியங்கள், ஆதாரமாய் அமைந்த தொலைக்காட்சி நிறுவன விடியோ கேசட்டுகள், புகைப்படங்கள்தான் என்று இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சீனிவாசன் கூறினார்.

சேலம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மாணவிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்தினேன். அதற்கேற்ப இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி, இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்ததே, இவ்வழக்கின் திருப்புமுனையாகும்.

இச்சம்பவம் குறித்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டவுடன், நடத்தப்பட்டுள்ள விசாரணை, சேகரிக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடத்தக்கவை.

அதிலும் குறிப்பாக அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் பஸ் எரிப்பு சம்பவத்தை மட்டும், வேறொரு நிறுவனத்தினர் விடியோவில் முழுமையாகப் பதிவு செய்திருந்தனர்.

பஸ்ûஸ மறித்து தீயிட்டு எரிக்க முயற்சித்தவர்களையும் அடையாளம் கண்டறிய உதவியது அக் கேசட்டே.

அதோடு பத்திரிகைகளில் அன்று வெளியாகியிருந்த புகைப்படங்களும், கலவரத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காண உதவின.

இவ்வழக்கு விசாரணையை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டவர் உயர் நீதிமன்ற நீதிபதி வி.கனகராஜ்.

இவ்வாறு இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றியதே, இதன் விசாரணையை சரியான முறையில் தொடர வழிவகுத்தது.

இவ்வழக்கில் சாட்சியமளித்தோர் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க ஆதாரமாய் அமைந்துள்ளது என்றார் சீனிவாசன்.

அச்சுறுத்தல்: இவ்வழக்கில் ஆஜரானவுடன் எனக்கும் அச்சுறுத்தல்கள் வந்தன. என் வீட்டு மாடியில் துப்பாக்கியால் சுடப்பட்டது. அப்போது அதை நான் வெளியில் சொல்லவில்லை. வழக்கு விசாரணை பாதிப்பின்றி நடைபெற வேண்டும் என அமைதியாக இருந்துவிட்டேன் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.

Posted in 147 (unlawful assembly with deadly weapons), 341 (wrongful restraint), ADMK, Agriculture University, AIADMK, All India Anna Dravida Munnetra Kazhagam, Capital punishment, Cassettes, CBCID, Coimbatore, Courts, D. Krishna Raja, Death Sentence, Dharmapuri, Dr J Jeyalalitha, Dr. J Jayalalitha, IPC 302 (murder), IPC 307 (attempt to murder), J Jayalalitha, JJ, Judge, Justice, Kodaikanal Pleasant Stay Hotel, Kokilavani, Kovai, Law, Madhu, Mob, Muniappan, Nedunchezhian, News Broadcast, Order, Police, Politics, Prevention of Destruction, Proof, Public Property, Ravindran, Salem, Sections 188 (disobedience to the order duly promulgate, Sun TV, T. K. Rajendran, Tamil Nadu, Tamil Nadu Agricultural University, trial, TV, union secretary, video, Violence, Women | Leave a Comment »