Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 2nd, 2007

Shiv Sena-BJP on top in Maharashtra, Congress-NCP humbled

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி

மும்பை, பிப். 3: மகாராஷ்டிர மாநிலத்தில் 10 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், மும்பை மாநகராட்சியையும் பெரும்பாலான நகராட்சிகளையும் சிவசேனை -பாஜக கூட்டணி மீண்டும் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

சிவசேனைக் கட்சியில் இருந்து முன்னாள் துணை முதல்வர் நாராயண் ராணே கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்ததாலும், பால் தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ் தாக்கரே விலகியதாலும், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வந்த சிவசேனை -பாஜக கூட்டணிக்கு இது வியப்பூட்டும் வெற்றியாகும்.

மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், முன்னணியில் உள்ள வார்டுகள் உள்பட மொத்தம் 112 வார்டுகள் சிவசேனை -பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 65 இடங்களிலும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.

மும்பையின் புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் அமைந்துள்ள சிவசேனைக் கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் இல்லத்துக்கு வெளியே கூடிய ஏராளமான கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

நாசிக்: நாசிக் நகராட்சியில், மொத்தமுள்ள 108 இடங்களில், சிவசேனை -பாஜக கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைத்துள்ள போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

நாக்பூர்: நாக்பூர் நகராட்சியில், மொத்தமுள்ள 136 இடங்களில், 57 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கு காங்கிரஸýக்கு 32 இடங்கள் கிடைத்துள்ளன.

புணே: புணே நகராட்சியில், மொத்தமுள்ள 144 இடங்களில், 42 இடங்களை வென்று தேசியவாத காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி ஆகியுள்ளது. காங்கிரஸýக்கு 35 இடங்கள் கிடைத்துள்ளன.

பிம்ப்ரி -சிஞ்ச்வாடு: பிம்ப்ரி -சிஞ்ச்வாடு நகராட்சியில் மொத்தமுள்ள 105 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் 60 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் 20 இடங்களில் வென்றுள்ளது.

சோலாபூர்: சோலாபூர் நகராட்சியில் மொத்தமுள்ள 98 இடங்களில், 40 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தனிப் பெரும் கட்சி என்ற நிலையை அடைந்துள்ளது. அங்கு தேசியவாத காங்கிரஸýக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.

தாணே, உல்லாஸ்நகர், அகோலா, அமராவதி ஆகியவை தேர்தல் நடைபெற்ற மற்ற நகராட்சிகள் ஆகும்.

சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைக்காதது தவறு -காங்கிரஸ்: சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்காதது காங்கிரஸ் கட்சி செய்த தவறு என முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.

கூட்டணிக்கு முயற்சி எடுத்தோம். ஆனால் அது கைகூடவில்லை என்றார் அவர்.

நகர்ப் பகுதிகளில் கட்சியின் தளத்தை விரிவாக்க தமது கட்சியினர் முயற்சி எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

மும்பை தேர்தல்

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்பதை மும்பை பெருநகர மாநகராட்சிக்கும் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கும் நடந்துள்ள தேர்தல்கள் காட்டியுள்ளன.

சிவசேனைக் கட்சி பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கருதியது. அது தவறு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் பலம் பெற்று வருவதாகவும் ஆகவே மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இனி ஒதுக்கி வைக்கலாம் என்றும் காங்கிரஸ் நினைத்தது. அதுவும் தவறாகிவிட்டது.

சிவசேனை பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கணக்குப் போட்டதற்குக் காரணங்கள் உண்டு. சிவசேனைக் கட்சியானது 40 ஆண்டுகளாக பால்தாக்கரே தலைமையில் இயங்கி வருவதாகும். 2005-ல் அக் கட்சியின் முக்கியப் பிரமுகர் என்று கருதப்பட்ட நாராயண் ரானே அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அது போதாது என சிவசேனைக் கட்சியில் பிளவு ஏற்பட்டு பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே தனிக் கட்சி அமைத்தார். நாராயண் ரானேயுடன் சேர்ந்து காங்கிரஸýக்குத் தாவிய எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றனர்.

இத் துணைத் தேர்தல்களில் சிவசேனைக் கட்சி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ரானேயின் வருகையால் காங்கிரஸ் கட்சியின் பலம் 77-ஆக அதிகரித்தது. இதன் பலனாக பவாரின் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாகியது. இப் பின்னணியில்தான் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பவார் கட்சியுடன் கூட்டுசேராமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முற்பட்டது.

தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறின. இதைப் பொய்ப்பித்து சிவசேனை-பாஜக கூட்டணி இந்த மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.

பால்தாக்கரேயின் வெற்றிக்குக் காரணங்கள் உண்டு. முதலாவதாக, எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நின்றன. தவிர முந்தைய மாநகராட்சியில் உறுப்பினர்களாக இருந்த 58 பேரை சிவசேனைக் கட்சி மீண்டும் நிறுத்தாமல் துணிந்து உரிய வேட்பாளர்களை நிறுத்தியது. அத்துடன் பால்தாக்கரே தமது ஆவேசப் பேச்சு மூலம் மக்களைக் கவர்பவர். தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சுமார் 46 சதவீத வாக்காளர்களே வாக்களித்து உள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 2002-ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் சிவசேனை – பாஜக கூட்டணியின் பலம் இத்தடவை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், அக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிட்ட வேண்டுமானால், அது சுயேச்சைகளின் உதவியை நாடியாக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

ஆனால் சிவசேனை – பாஜக கூட்டணியின் வெற்றி பெரிதாகத் தெரிவதற்கு முக்கியக் காரணம் அண்மையில் சிவசேனைக் கட்சிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளே.

மகாராஷ்டிரத்தில் பிற மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் காங்கிரஸýக்கு ஆறுதல் அளிப்பவையாக இல்லை. பவார் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்பட்ட அகோலா நகரில்தான் அக் கூட்டணி பதவியைப் பிடித்துள்ளது. நாகபுரியில் காங்கிரஸ் பதவி இழந்தது. இதற்கு உள்கட்சி சண்டையே காரணம். புணேயில் காங்கிரஸýக்கு பலத்த சரிவு. அமராவதியிலும் சோலாப்பூரிலும் பவார் கட்சியின் தயவில் காங்கிரஸ் பதவியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சியானது தனது கூட்டணிக் கட்சிகளை அவ்வப்போது உதாசீனம் செய்வது தவறு என்பதையே இத் தேர்தல்கள் காட்டியுள்ளதாகச் சொல்லலாம்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் புகட்டும் பாடம்

நீரஜா செüத்ரி – தமிழில்: சாரி.

மகாராஷ்டிரத்தில் நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தல் முடிவால் அங்கு ஆட்சி கவிழப் போவதும் இல்லை, தலைமையில் மாற்றம் வரப்போவதும் இல்லை; ஆனால் அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அது புகட்டும் பாடம் ஒன்று உண்டு.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது அவசியம் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்கள் பலர் ஆரம்பம் முதலே வற்புறுத்தினர்.

கட்சியின் மாநிலத் தலைவர் பிரபா ராவ், மும்பை தலைவர் குருதாஸ் காமத், மகாராஷ்டிர காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய பொதுச்செயலர் மார்கரெட் ஆல்வா ஆகியோர்தான் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு தனது வலிமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இனி கட்சிக் கூட்டத்தில் தோல்வியை ஆராயும்போது இவர்களின் தலைகள் உருளக்கூடும்.

மும்பை மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் குருதாஸ் காமத்தும் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலும் பகிரங்கமாக தேர்தல் சமயத்தில், குழாயடிச்சண்டைபோல சவால்விட்டுப் பேசிக்கொண்டதன் மூலம் கூட்டணிக்குள் பூசல் இருப்பது உறுதியானது.

இந்தத் தேர்தல் முடிவு பல உண்மைகளை உணர்த்துகிறது. கூட்டணிதான் நல்ல வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது என்பது முதலாவது உண்மை. இதை காங்கிரஸ் மறக்காமல் இருக்கும்போதெல்லாம் அதற்கு வெற்றி கிட்டுகிறது. அந்த கால செல்வாக்கு இன்னமும் தொடருவதாக பிரமையில் ஆழ்ந்து, தனித்துப் போட்டியிடும்போதெல்லாம் தோல்வியே கிட்டுகிறது.

கூட்டணியால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பதை அனுபவத்தில் முதலில் உணர்ந்தவர் ஜெயலலிதாதான். 1998 தேர்தலில் மதிமுக, பாமக போன்ற சிறிய கட்சிகளைக்கூட ஒன்றுவிடாமல் தனது அணியில் சேர்த்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். கடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது கூட மதிமுகவை தன் பக்கம் ஈர்த்து, தனக்கு படுதோல்வி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் விட்டதுடன், சமூகங்களுடனான சுமுக உறவையும் இழந்து நின்றது. முதல் முறையாக, எந்த ஒரு தலித் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டது. கைர்லாஞ்சி சம்பவத்தால் கொதித்துப் போய் இருக்கும் தலித்துகள், காங்கிரஸ் கட்சி அதைக் கையாண்ட விதத்தால் மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை, மாலேகாம் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் ஏராளமான முஸ்லிம்களை மாநிலப் போலீஸôர் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் முஸ்லிம்களின் ஆதரவு காங்கிரஸýக்குக் குறைந்துவிட்டது. குருதாஸ் காமத்தின் தொகுதியிலேயே ஆறு வார்டுகளில் 4 வார்டுகளில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு மாநிலத்துக்கு இணையான பட்ஜெட் போடும் அளவுக்கு மும்பை மாநகரம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு சரியான கூட்டணியை ஏற்படுத்த காங்கிரஸýம் தேசியவாத காங்கிரஸýம் தவறவிட்டதுதான் விந்தையானது.

மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 225 வார்டுகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. 2 வார்டுகள் தொடர்பாகத்தான் இழுபறி ஏற்பட்டது. அந்த இரண்டில்கூட தோழமை உணர்வோடு தனித்தனியாக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை முதலில் எடுத்தது.

இதற்கு உள்நோக்கமும் இருக்கலாம். மகாராஷ்டிர அரசியலில் பழம்தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான சரத் பவார், காங்கிரஸ் கட்சி பலம் பெறுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. பிம்ப்ரி-சின்ச்வாட் நகரை தேசியவாத காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுவிட்டது. புணேயில் காங்கிரûஸவிட பவார் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி.

2009-ல் மூன்றாவது அணி அமைக்க பவார் முயற்சி செய்கிறார். அப்படி அது வலுவாக அமைந்தால் காங்கிரúஸô, பாரதீய ஜனதாவோ அதை ஆதரித்துத்தான் தீர வேண்டும். சரத்பவார் அளவுக்கு அரசியல் சாதுர்யம் உள்ள தலைவர் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதே அதன் மிகப்பெரிய பலவீனமாகும். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே பாரதீய ஜனதாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். மராத்திய இனத்தின் சுயமரியாதை குறித்துப்பேசி மக்களின் இன உணர்வைத் தூண்டினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடி, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னமும் மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதற்காக குடியரசுத் தலைவர் கலாமையே தாக்கிப் பேசினார்.

பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் வெளியாகியிருக்கும் இத் தேர்தல் முடிவுகள் சிவசேனை, பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

தமிழில்: சாரி.

Posted in Bal Thackeray, BJP, BMC, Bombay, Brihanmumbai Municipal Corporation, Chaari, Civic Polls, Coalition, Cong (I), Congress, Congress (I), Elections, Indira Congress, Local Body, maharashtra, Maharashtra Navnirman Sena, MNS, Mumbai, Municipality, Narayan Rane, Nationalist Congress Party, NCP, Neeraja Chowdhry, Op-Ed, Opinion, Party, Politics, Polls, Raj Thackeray, Sharad Pawar, Shiv Sena, Tamil, Vilasrao Deshmukh, Winner | Leave a Comment »

Electronic Voting Machines to be used at 25% of Voting booths in Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

பழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு!: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்

லக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.

மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா!).

வாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.

Posted in ADMK, Amar Singh, Amitabh, Anomaly, Assembly, BJP, booth capturing, Boothcapturing, BSP, candidate, Chennai, Chief Election Commissioner, civic elections, Commissioner, Congress, DMK, EC, Elections, Electorate, Electronic Voting, EVMs, Gopalasami, Gopalasamy, Gopalsami, Gopalsamy, Jayaprada, Local Body, Madras, MDMK, Mulayam, Municipal, Party, Politics, Polling Booth, Polls, SJP, UP, Voting Machines | Leave a Comment »

IAF pilot killed in air show rehearsals crash

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: விமானி சாவு

 பெங்களூர் எலகங்கா விமானப் படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானப் படை ஹெலிகாப்டர். இவ் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.

பெங்களூர், பிப். 3: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை விமானி இறந்தார்; மற்றொரு விமானி காயமடைந்தார்.

பெங்களூர் எலகங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரில் (ஏஎல்எச்) விமானப்படை விமானிகள் பிரியே சர்மா, வி.ஜெய்டெலே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டு 9-வது ஓடு பாதையில் தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கண்காணித்த விமானப்படையினர் தீயணைப்பு வாகனத்துடன் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரியே சர்மாவையும், ஜெய்டேலேயையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் பிரியே சர்மா வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெய்டேலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்பரை ஓட்டிச் சென்ற விமானிகள் இருவரும் விமானப்படையில் சாகசங்கள் நிகழ்த்தும் “சரங்க்’ படைப்பிரியைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூரில் பிப்ரவரி 7-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி துவங்குவதையடுத்து சரங்க் படைப் பிரிவினர் எலகங்கா விமான பயிற்சி நிலையத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நீதிமன்றம் (சிஓஐ) விசாரணை நடத்தும். இந்த விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.

Posted in advanced light helicopter, Air Force, ALH, Bangalore, Chopper, crash, Defense, Dhruv, HAL, Helicopter, Hindustan Aeronautics Limited, IAF, Indian Air Force, pilot, Priye Sharma, rehearsals, Squadron Leader, Training, V Jetley, Wing Commander, Yelahanka | Leave a Comment »

Chennai’s 20 artery roads to get CCTV installed – CM Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சென்னையின் 20 முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமிரா: முதல்வர் அறிவிப்பு

சென்னை, பிப். 3: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டுபிடிக்க 20 முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமிரா வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்கவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த கண்காணிப்பு கேமிரா மூலமான கண்காணிப்பு உதவும்.

ரூ. 2.1 கோடி செலவில் 20 கண்காணிப்புக் கேமிராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை நிறுவப்படும் இடங்கள்:

  1. போர் நினைவுச் சின்னம்,
  2. தலைமைச் செயலக வெளிப்புற வாயில்,
  3. கத்திப்பாரா சந்திப்பு,
  4. வள்ளுவர் கோட்டம் சந்திப்பு,
  5. அண்ணா சிலை சந்திப்பு,
  6. வீல்ஸ் இந்தியா கம்பெனி சந்திப்பு,
  7. பெரியார் சிலை சந்திப்பு,
  8. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலைய சந்திப்பு,
  9. மத்திய கைலாஷ் சந்திப்பு,
  10. ஹால்டா சந்திப்பு,
  11. ஆளுநர் மாளிகை முதன்மை வாயில் சந்திப்பு,
  12. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவன சந்திப்பு,
  13. எஸ்ஐஇடி கல்லூரி -செனடாப் சாலை சந்திப்பு,
  14. 100 அடி சாலை -வட பழனி சாலை சந்திப்பு,
  15. போரூர் சந்திப்பு,
  16. அசோக் பில்லர் சந்திப்பு,
  17. அண்ணாநகர் ரவுண்டானா சந்திப்பு,
  18. எஸ்என் செட்டி சாலை -சுங்கச் சாவடி சந்திப்பு,
  19. விமான நிலைய சாலை சந்திப்பு,
  20. கிரீன்வேஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இவை நிறுவப்படும். இந்த சாலை சந்திப்புகளில் உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சிப் பெட்டிகள் (சிசிடிவி) நிறுவப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Automobile, Big Brother, CCTV, Chennai, Closed circuit TV, CM, Karunanidhi, Law, Madras, Motor, Order, Police, RMV, Road, Roads, Streets, Surveillance, Tamil Nadu, Terrorism, TN, TV | 1 Comment »

33rd National Games in Guwahati – No Place for TN athlete Santhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை சாந்திக்கு இடம் இல்லை

சென்னை, பிப்.1-

33-வது தேசிய விளையாட்டுப் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் வருகிற 9-ந் தேதி முதல் 18ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 40 பேர் இடம்பெற்று உள்ளனர். 20 வீரர்களும், 20 வீராங்கனைகளும் தேர்வாகி உள்ளனர்.

தோகாவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த சாந்தி தமிழக அணியில் இடம் பெறவில்லை.

பெண் தன்மை சோத னையில் தோல்வி அடைந்த அவரது பதக்கம் பறிக்கப் பட்டதா இல்லையா என்ற மர்மம் இன்னும் நீடித்து இருக்கிறது. சாந்தியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு அமைச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் சி.நீலசிவலிங்கசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சாந்தியின் பெயரை சேர்த்து இருந்தோம். திடீரென இந்திய தடகள சம்மேளனத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டு பட்டியல் அனுப்பவும் என்று கடிதம் வந்தது. ஆனால் விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படையில் சாந்தியை நீக்கி உள்ளோம்.

இவ்வாறு நீலசிவலிங்கசாமி கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

ஆண்கள்:

அரவிந்த், மாணிக்க வாசகம், விஜய குமார், சத்யா, சரவணகுமார், ரகுநாத், முத்துசாமி, கருப்பசாமி, விக்டர், ஜெபசிங், புயல் பாலச்சந்தர், பெனடிக்ட் ஸ்டார்லி, நிகில், சித்தரசு, வெய்ன் பெபின், வினோத்ராஜ், சந்திரசேகர், ரஞ்சித்குமார், வடிவேலு, பார்த்தீபன், பிரேமானந்த், பிரசாந்த்,

பயிற்சியாளர் அண்ணாவி,

மானேஜர் செந்தில்.

பெண்கள்:

அஞ்சு ஜார்ஜ், சாரதா நாராயணா, அன்பு விமலா, பிரதீபா, மோகனாள், இளவரசி, சூர்யா, மகேஸ்வரி, சங்கரி, காயத்ரி, லீலாவதி, லட்சுமி, சுரேகா, சரஸ்வதி, அணிச்சம், கற்புரா மாலா, ஜெயந்தி, மோகன பிரியா, மலர் விழி, சரண்யா பிரகாஷ்,

பயிற்சியாளர்:- சுகந்தி,

மானேஜர்:- பார்வதி.

Posted in 33, Asiad, Asian Games, athlete, athletics, Contestants, Controversy, Games, India, Medals, National Games, Olympics, Santhi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Sports, Track and field | Leave a Comment »

Diamond, Gold sales in India – Kerala ranks second

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

இந்தியாவில் வைர விற்பனையில் கேரளாவுக்கு 2-வது இடம்

திருவனந்தபுரம், பிப். 2-

கேரளாவில் தங்கம் மட்டுமல்ல வைர விற்பனையும் அதிகரித்து வருகிறது. இந்தி யாவில் வைர விற்பனையில் கேரளாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2 வருடங்களில் கேரளாவில் வைர விற்பனை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஒரு வைர வியாபாரி கூறுகிறார்.

அதே சமயம் தங்கவிற்பனை 6 முதல் 8 சதவீதம் தான் உள்ளது. அதாவது வைர விற்பனை தங்கத்தைவிட இருமடங்காக உள்ளது. இப்போதெல்லாம் கேரளாவில் புதுப்பெண்ணி டம் வைரக்கம்மல், வைர மூக்குத்தி, வைர மோதிரம், போதாதற்கு வைர நெக்லசும் அணிந்து காட்சி தருவது சர்வசாதாரணமாக உள்ளது.

அந்த காலத்தில் எல்லாம் ஒரு மூக்கில் வைர மூக்குத்தி அணிவதே பெரிய ஸ்டேட்டஸ் ஆக கருதுவார்கள். இப்போதோ புதுப்பெண்களை வைரத் தாலேயே அலங்கரிக்கிறார்கள். இதற்கு ஏற்ப நகைக்கடைகளில் இப்போது வைரமும் விற் கிறார்கள். வைரங்களுக்கு என கவுண்டர்களும் வைத் துள்ளார்கள்.

பழைய வைரக்கம்மல் கொண்டு வந்தால் புதிய டிசைனில் ரீசெட் செய்து கொடுக்கிறார்கள். ஒன்றரை கேரட் நெக்லசுக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் கிடைக்கும் அநேகமாக எல்லா வைர நகைகளுக்கும் நகை கடைகளில் `பை-போக்’ கேரண்டி கொடுக்கிறார்கள். எனவே வைர நகை வாங்கு வதை ஒரு முதலீடாக கருதி வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.

பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் திருமண சீசனாகவும் ஜுன், ஜுலை மற்றும் டிசம்பர் ஜனவரி மாதங்கள் என்.ஆர்.ஐ. சீசனாகவும் உள்ளது. இந்த மாதங்களில் தான் என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாட்டில் வசிக்கும் கேரள மக்கள் விடுமுறைக்காக கேரளா வந்து செல்லும் காலமாகும். வெளிநாடுகளில் வைரத்தின் விலை அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளில் இங்கு வந்து திரும்பி செல்லும் மலையாள பெண்களும் வைர நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தியாதான் நிறைய வைரம் கட் செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின்போது வைர மோதிரம் அணிவது இப்போது ஒரு பேஷனாகவே ஆகிவிட்டது. அந்த வைரத்தை கூட பிளாட்டினத்தில் செய்து அணிவிப்பது வழக்கமாகி வருகிறது. ஒரு கிராம் பிளாட்டினமே ரூ.2000 ஆகிறது.

Posted in Blood diamonds, Bullion, Buy, Diamond, Gold, Kerala, Malayalam, markets, Marriages, Metals, NRI, Prices, Seasons, Wedding | Leave a Comment »

19 New Tamil Movies to be released this month

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பள்ளிதேர்வு, உலககோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி: 19 புதிய படங்கள் இந்த மாதம் ரிலீஸ்

சென்னை, பிப். 2-

பள்ளி இறுதி தேர்வுகள் மார்ச் 1-ந்தேதி தொடங்குகின்றன. அடுத்த மாதம் இறுதியில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்ப மாகிறது. ஏப்ரல் 28-ல் உலக கோப்பை இறுதி போட்டி நடக்கிறது. எனவே 19 புதிய படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகின்றன. `டப்பிங்’, `எடிட்டிங்’ வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

இம்மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலில்

  • சபரி,
  • தீபாவளி,
  • திருமகன்,
  • பருத்திவீரன்,
  • மொழி,
  • உன்னாலே உன்னாலே,
  • கூடல் நகர்,
  • அடாவடி,
  • ஓரம்போ,
  • லீ,
  • முனி,
  • சொல்லி அடிப்பேன்,
  • பெரியார்,
  • கண்ணும் கண்ணும்,
  • தூவானம்,
  • காசு இருக்கணும்,
  • பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகியவை உள்ளன.
  • `வீராசாமி’ படம் நேற்று (1-ந்தேதி) ரிலீசானது.
  • `பொறி’ இன்று வெளியானது. ஒரே மாதத்தில் இவ்வளவு படங்கள் வெளியாவது இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

`சபரி’யில் விஜயகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார்.

`பருத்திவீரன்’ சூர்யா தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகும் படம். பொங்கலுக்கே இப்படம் எதிர்பார்க்கப்பட்டு தள்ளிப்போனது.

`திருமகன்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

`மொழி’யில் ஜோதிகா வாய்பேசதெரியாதவராக நடித்துள்ளார்.

`கூடல் நகரில்’ பரத், சந்தியா ஜோடியாக நடித்துள்ளனர்.

`அடாவடி’, `பெரியார்’ படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். `பெரியார்’ பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம். இதில் மணியம்மை பாத்திரத்தில் குஷ்பு நடித்துள்ளார்.

`ஓரம்போ’வில் ஆர்யாவும், `லீ’யில் சிபியும் நடித்துள்ளனர்.

`சொல்லி அடிப்பேன்’ விவேக் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம். முனியில் ராஜ்கிரணும், ராகவா லாரன்சும் நடித்திருக்கிறார்கள்.

ரஜினின் `சிவாஜி’ படம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தபின் ரிலீசாகும் என்று தெரிகிறது. `தனுசின் பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ படமும் சிவாஜியோடு ரிலீசாகிறது. கமலஹாசனின் `தசாவதாரம்’ ஜுலை மாதத்துக்கு தள்ளி போகிறது.

Posted in Lee, Mozhi, Muni, Paruthi Veeran, Periyar, Pori, Sabari, Sivaji, Sivaji the Boss, Solli Adippen, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thirumagan, World Cup | 1 Comment »

Vallalar: Saint Ramalinga Swamigal – History, Details & Biosketch

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பன்முக ஞானி வள்ளலார்

ஆ. முருகன்

வாழையடி வாழையாய் வந்த திருக்கூட்ட மரபில் தோன்றியவர் வள்ளலார்.

அவர் ஒருவரே நூலாசிரியராய், அருட்கவிஞராய், உரையாசிரியராய், பதிப்பாசிரியராய், பத்திரிகை ஆசிரியராய், ஞானாசிரியராய், வியாக்கியானகர்த்தராய், சித்த மருத்துவராய், சீர்திருத்தவாதியாய், அருள்ஞானியாய், சன்மார்க்கியாய் எனப் பன்முக ஞானத்தோடு விளங்கியவர்.

வள்ளலார் ஒருவரே பொதுமக்களுக்கு முதன்முறையாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். சமஸ்கிருதத்தைத் தாய் என்றும் தமிழ்மொழியைத் தந்தை என்றும் கூறியவர்.

வள்ளலார் ஒருவரே தண்ணீரில் முதலில் விளக்கேற்றியவர். வள்ளலார் ஒருவரே தனிமார்க்கத்தை (சமரச சன்மார்க்கம்) முதலில் கண்டவர்.

ஒரு தனிச் சங்கத்தை (சமரச சன்மார்க்க சத்திய சங்கம்) முதலில் கண்டவர்.

ஒரு தனிக்கொடியை (சன்மார்க்கக் கொடி) முதலில் உருவாக்கியவர்.

ஒரு தனி மந்திரத்தைக் கண்டவர்.

ஐந்து உயிர் எழுத்துகளும் முழுமையாக அமையப் பெற்ற மந்திரத்தை முதலில் கண்டவர்.

“அ’ என்ற முதலெழுத்தாலேயே அமையப் பெற்ற முழு மந்திரத்தை முதலில் கண்டவர்.

மதச்சார்பின்றி, அனைவரும் வணங்கத்தக்க ஒளி (ஜோதி) வழிபாட்டை முதலில் தந்தவர்.

திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், தாயுமானவர் என வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள்.

கிழக்கே திருப்பாதிரிப்புலியூர், மேற்கே விருத்தாசலம், தெற்கே சிதம்பரம், வடக்கே திருவதிகை ஆகிய தெய்வீக ஊர்களுக்கு நடுநாயகமாய் விளங்கி வரும் பேரூர் “பார்வதிபுரம்’ என்னும் வடலூர் ஆகும். இதுவே சன்மார்க்க பூமியாகவும் திகழ்கிறது.

இத்தகு சிறப்புடைய ஞானபூமியில்தான் அதாவது பார்வதிபுரத்தில்தான் சன்மார்க்கமும், தமிழும் தழைத்தினிதோங்க 1867-இல் வடலூருக்கு (பார்வதிபுரம்) வந்து உறையலானார். அங்கு சன்மார்க்க சங்கம் (1865), தருமச்சாலை (1867), சத்திய ஞானசபை (1872) என்ற நிறுவனங்களை நிறுவினார். இந் நிறுவனங்கள் வாயிலாகச் “சன்மார்க்கம்’ என்னும் நன்மார்க்க நெறியைப் பரப்பினார்.

இறைவனை அடைவதற்கு நான்கு மார்க்கங்கள் உண்டு. அவை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்பனவாம்.

நான்கு மார்க்கங்களில் முதல் மார்க்கம் தாசமார்க்கம். இம் மார்க்கமே இறைவனை அடைவதற்குரிய முதல்படியாகும். தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள். ஆதலின், தாச மார்க்கத்தை அடிமை நெறி, அடிமை வழி, அடிமை மார்க்கம் என்று கூறலாம்.

இம் மார்க்கத்தில் இறைவனே தலைவன். நாம் அவனுக்கு அடிமை. இறைவனை ஆண்டானாகக் கொண்டு, நாம் அவனுக்கு அடிமைப்பட்டு, ஆட்பட்டு, அடிமைத் தொண்டுகளைச் செய்து வழிபடுதலாகும். சுருங்கச் சொல்வதென்றால் தாச மார்க்கம் என்பது தொண்டு மார்க்கமாகும்.

இரண்டாவது மார்க்கம் சற்புத்திர மார்க்கம். இது முதல் மார்க்கமாகிய தாச மார்க்கத்தைவிட உயர்ந்தது. இதில் இறைவனுக்கும், நமக்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாச உணர்வாகும்.

இறைவனைத் தந்தையாகவும், தன்னை மகனாகவும் பாவித்தலின் இது சற்புத்திர மார்க்கம் எனப் பெயர் பெற்றது. இம் மார்க்கத்தில் புதிய மலர், தூப தீபங்கள், திருவமுது முதலிய பொருள்களைச் சேகரித்துக் கொடுத்து, இறைவனின் திருப்படையலுக்கு உதவிகரமாய் இருப்பதாகும்.

மூன்றாவது மார்க்கம் சகமார்க்கம். இது முதலிரண்டு மார்க்கங்களைவிட உயர்ந்தது. இதில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு இரண்டு நண்பர்களுக்கு உள்ள உயிர் நட்பாகும். அதாவது சகமார்க்கம் என்பது தோழமை நெறி.

இம் மார்க்கத்தில், ஐம்பொறிகளால் உண்டாகும் ஆசைகளை அடக்கி, இறைவனையே ஒருமை உள்ளத்துடன் நாம் தியானித்திருப்பதாகும்.

நான்காவது மார்க்கமே சன்மார்க்கம். இம்மார்க்கம் முந்தைய மூன்று மார்க்கங்களைவிட மிகமிக உயர்ந்ததாகும். சன்மார்க்கம் என்ற சொல்லைச் சத் + மார்க்கம் என்று பிரித்தல் வேண்டும். சத் என்றால் நன்மை; மார்க்கம் என்றால் வழி. அதாவது சன்மார்க்கம் என்பது நல்வழியாகும். இம் மார்க்கத்தால் நாம் இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தைப் பெறலாம்.

தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம் என்ற மூன்று மார்க்கங்களும் “சன்மார்க்கம்’ என்னும் மார்க்கத்தை அடைவதற்குரிய ஞானப்படிகளாகும். சன்மார்க்கம் ஒன்றே முடிவான பரமுத்தியைத் தரக் கூடியது.

வள்ளலார் சன்மார்க்கத்தினர் என்பதனை “”அடியன் ஆக்கி, பிள்ளை ஆக்கி, நேயன் ஆக்கியே, அடிகள் ஆக்கிக் கொண்டாய்’ என்ற அவரது திருவாக்காலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.

கடவுள் ஒருவரே. அக் கடவுளை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்க பாடுபட வேண்டும். எவ்வுயிரையும் தம்முயிர்போல் நினைத்து, அவ்வுயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும்.

தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி இடக் கூடாது. புலால் உணவை உண்ணக் கூடாது. சாதி, சமய, இன வேறுபாடு கூடாது. இறந்தவர்களைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது.

கணவர் இறந்தால் மனைவி மங்கலநாணை வாங்குதல் (நீக்குதல்) வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம். மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.

இறைவனுக்குத் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பொங்கல், புளியோதரை, திருநீறு, சந்தனம், பால், சூடம், சாம்பிராணி, வத்தி முதலியன கொண்டு அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்தல் கூடாது. இறைவனைத் திருப்பாக்களால் மட்டும், மெல்லென ஆரவாரம் இல்லாமல் துதி செய்தல் வேண்டும். இறைவனுக்கு முன் மேளதாளங்களோ, நாதசுரமோ வாசித்தல் கூடாது.

புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்பன எல்லாம் சன்மார்க்கக் கொள்கைகளாகும்.

இக் கொள்கைகளைப் பின்பற்றி சன்மார்க்கிகள் அனைவரும் நற்பண்புகளுடன் செயல்பட வேண்டும். சன்மார்க்க பூமியாய் விளங்கும் “”வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே’.

(கட்டுரையாளர்: தமிழாசிரியர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, வடலூர்).

——————————————————————————————————————
சமயம் கடப்பதே சன்மார்க்கம்

பெ. சிதம்பரநாதன்

பள்ளி செல்லாமல், பாடப் புத்தகங்களைப் படிக்காமல், தேர்வு எழுதாமல், பட்டமே பெறாத சிந்தனையாளர்கள் – அருளாளர்கள் – மேதைகள் பலர் உண்டு. அவர்கள், ஓதாது உணர்ந்தவர்கள். கருவிலே திரு அமையப் பெற்றவர்கள். இத்தகைய பரம்பரையில் வந்த மெய்ப்பொருள் கண்ட ஞானி வள்ளலார்.

அவர் பெற்றிருந்த அளப்பரிய கவி ஆற்றலால் ஒரு மகா கவியாகப் புகழ் பெற்றிருக்க முடியும். ஆனால், கவிதையை அவர் ஒரு வழித்தடமாகவே கருதி, தனது இறுதி இலட்சியத்தைக் கவிதை வழி தேடிச் சென்றார். அந்தத் தேடல்கள்தான் அருட்பாவாகப் பிரவாகமெடுத்தது.

பல்வேறு மதங்களும் காட்டிய பார்வைக் கோணங்களால், கடவுளைக் காண்பதில் ஒரு கலகச் சூழ்நிலை நிலவியபோது, “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று, ஒற்றைக் குரலாக இவர் ஓங்கி ஒலித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோர் பலர்; அங்கீகரித்தவர்கள் சிலர்.

மதங்கள் சண்டைகளையே பெருக்கின. ஜாதிகள் மோதல்களைப் பெருக்கின. மதத்தைப் பேய் என்றவர், பக்தி நூல்களை “”சாத்திரக் குப்பை” என்றும் வேதங்களையும் ஆகமங்களையும் “”பொய், பொய்யே” என்றும் சாடினார். ஜாதி வெறியர்களைச் “”சழக்கர்கள்” என்று, ஆதிக்க சாதியத்தை அஞ்சாமல் கண்டித்தார்.

காருணிய வேளாளர் குலத்தில் தோன்றிய அவர் விரும்பியிருந்தால், ஏதோவொரு சைவ ஆதீனத்திற்கு குருமகா சன்னிதானமாகியிருக்க முடியும். இல்லையேல் ஒரு சைவ ஆதீனத்தை இவரே உருவாக்கி இருக்கவும் முடியும்.

அவ்வாறு அவர் சிந்தனை ஓடவில்லை. இவரையும் இவர் குடும்பத்தையும் வறுமை வாட்டியது. அதனால் பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பை இழந்தார். ஆனால், மாணிக்கவாசகரின் திருவாசகத்தை வழிகாட்டி நூலாகக் கொண்டு, ஏகலைவனைப்போல எங்கோ சென்று அதனைக் கற்று வந்தது எவருக்குமே அன்றைக்குத் தெரியவில்லை.

இளம் வயதிலேயே தன் இதயத்தை உயிர் இரக்கத்தில் ஊற வைத்து ஒவ்வோர் உயிரிலும் பொருளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதேபோல தன்னிலிருந்து தன்னையும் அந்நியப்படுத்திக் கொண்டார். இந்த அந்நியமும் ஐக்கியமும்தான் “”ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்” என்று அவரைத் தூண்டி வந்தது.

அவர் வாழ்ந்த சமுதாயம் ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயம். அந்தச் சமுதாய அமைப்பை அவர் சகித்துக் கொள்ளவில்லை. அதைப் பாதுகாக்கும் ஆட்சியைக்கூட “”கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என்று கண்டனம் செய்தார்.

“”ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்” என்று தனது புதிய சமுதாயத்திற்கான பூபாளத்தை இசைத்தார்.

உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் எவ்வாறு ஒருமையுளர் ஆக முடியுமென்றால், இந்த இருவேறு பிரிவுகளுக்குமிடையில் ஒரு பாலம் போலப் பணி செய்பவர் இருந்தால்தான் ஒருமையாக முடியும். அவ்வாறு இரு சாராரையும் இணைப்பவர்களைத்தான் “”ஒத்தார்” என்றார்.

அவர்கள் யாரை ஒத்தவர்கள் என்றால், இறைவனை ஒத்தவர்கள். கடவுளின் தூதுவர்கள். நாயன்மார்கள் போல, ஆழ்வார்கள் போல, புத்தர் போல, மகாவீரர் போல, இயேசுபெருமான் போல, நபிகள்நாயகம் போல, குருநானக் போல, சமுதாய வீதிகளில் சரீரம் தாங்கி உலவியவர்கள் அவர்கள் – சகல உயிர்களையும் சமமாக நேசித்தவர்கள். பாலமாக அவர்களை அமைத்து, இருவேறு பிரிவுகளாக உள்ள உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையாக வேண்டும் என்பதே வள்ளலாரின் விண்ணப்பம்.

காந்திஜியின் சீடர் வினோபாஜி இப்படித்தான் ஒரு பாலமாக விளங்கினார். நிலச்சுவான்தார்களிடமிருந்து தானமாகப் பெற்ற பூமிகளை, நிலமில்லாத ஏழைகளுக்கு வழங்கினார். பூமி தானத்தை இயக்கமாக்கினார்.

இந்தியாவில் 24 கோடி மக்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பவர்களாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இவர்களைக் கடைத்தேற்ற வேண்டுமானால், சமுதாயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அத்தகைய நடவடிக்கை எடுக்க நாட்டு மக்களைத் தயாரித்தாக வேண்டும். அவ்வாறு தயாரிப்பதற்கு அவர்களுடைய மனங்களில் நல்ல சிந்தனைகளை விதைத்தாக வேண்டும்.

நல்ல சிந்தனைகள் என்பவை எங்கோயிருந்து அசரீரியாக வருவதல்ல. ஒருவர் எதை அனுபவிக்கின்றாரோ அடுத்தவரும் அதை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவதுதான் நல்ல சிந்தனை. “”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுகிற” மனப்போக்கு அவர்களுடைய எண்ணத்தில் அரும்பத் தொடங்கிவிட்டால், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவுவார்கள்.

வள்ளலார் இதனைப் பற்றி நீளச் சிந்தித்துள்ளார். “அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்த…’ என்ற பிரபலமான அருட்பாவில், “”இகத்தே பரத்தைப்’ பெறுதல் என்று அவர் பேசியுள்ளது புரட்சிகரமான சிந்தனை.

பரம் என்பது என்ன? எதிர்பார்த்த எல்லாமே கிடைக்கும் வைகுந்தம், கைலாயம், இந்திரலோகம், சொர்க்கலோகம் ஆகிய லோகங்கள், வானுலகமாக உயரத்திலேயே இன்னும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அதுதான் பரம். அத்தகைய “பரம்’ எங்கோ எட்டாத உலகத்தில் இருப்பதாக ஏன் கற்பனை செய்ய வேண்டுமென்கிறார் வள்ளற்பெருமான்.

அந்தப் பரத்தினை இந்த “இகத்தில்’ – இந்த உலகில் – இந்த மண்ணில் உருவாக்க வேண்டும் என்று, முன் ஏர் ஓட்டியவர் வள்ளலார்.

வள்ளலார், சமயச் சடங்குகளைக் கடந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் பரிபூரணத்தை நோக்கிச் சென்றவர். அதனால்தான் சமய சன்மார்க்கத்தைப் பூரணப்படுத்தும் புனிதநோக்கில்தான் சடங்காச்சார சமய சன்மார்க்கத்தை சுத்த சன்மார்க்கமாக்கினார்.

“சுத்தம் என்றால் அரையும் குறையுமாக இருப்பதை முழுமையாகச் செய்வது. பூரணம் அற்றதாக சமய சன்மார்க்கம் இருப்பதாகக் கருதியே, அதைச் சுத்த சன்மார்க்கமாக்கினார்.

தவ நெருப்பில் உடலின் குறைபாடுகளைத் தகனம் செய்தால், இந்தச் சதை உடம்பு காற்றுடம்பாகும்; காற்றுடம்பு பொன் உடம்பாகும்; பொன் உடம்பு ஒளி உடம்பாகும். இதைத்தான் “முத்தேக சித்தி’ என்றார். அந்த முயற்சியில் வள்ளற்பெருமான் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.

உடம்பு வாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கையே இல்லையென்று கருதுகிற மக்களுக்கு மத்தியில், முத்தேக சித்தி என்பது, நமது சுயத்தைச் சுடரச் செய்கிற தன்னம்பிக்கைதான் என்கிற புரிதல் நமக்கு அவசியம்.

மரணத்தையும் எதிர்க்க முடியும் என்கிற துணிவை மனதுக்குள் ஊட்டிய ஒரு மார்க்கத்தைக் காட்டியவர் வள்ளலார். ஏனெனில், மரணம் எலும்புக்கும் சதைக்கும் ஏற்படலாம். ஆனால் மனிதன் காற்றாகிவிட்டால், ஒளியாகிவிட்டால், மரணம் எப்படி மனிதனை வெல்ல முடியும் என்று கேட்பதுபோல அமைந்துள்ள புதிய சிந்தனை இது.

சித்தத்தில் பெறுகிற வெற்றிதான் “சித்தி’ என்பது. சித்தி பெறுவது சுத்த சன்மார்க்கம். முக்தி அடைவது சமய சன்மார்க்கம். வள்ளற்பெருமான் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால், அவருக்கு சமாதி எங்கும் இல்லை.

ஒரு மனிதனுக்குள் இந்த நம்பிக்கையை நட்டு வளர்த்துவிட்டால், அவநம்பிக்கை அவனுக்குள் அணு அளவும் புகாது. ஊன் உடம்பு இல்லாமலும் உலவ முடியும் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல, ஒரு நன்னம்பிக்கையுமாகும்.

Posted in Arunachala, bhakthi, bhakti, Biography, Biosketch, Details, Guru, Hindu, Hinduism, History, Maharishi, Ramalinga Swamigal, Saint, Sidhar, Vallalaar, Vallalar | 3 Comments »

Mental Illness and Society – Treatment of Emotional Disorders

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

60 லட்சம் மனநோயாளிகள்!

நெல்லை சு. முத்து

இந்தியாவில் அறுபது லட்சம் பேர் மனநோயாளிகள். சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் அபாய அறிவிப்பு இது.

உலகில் சராசரி நூற்றுக்கு ஏழு பேர் மனநோயாளிகள். அதாவது மனச்சிதைவு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பது கோடி பேர். இந்தியாவிலும் இதே கணக்குதான். அதிலும் பத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறாராம். ஆக, அறுபது லட்சம் பேர் இங்கு அங்கீகரிக்கப்பட்ட மன நோயாளிகள்.

அப்படியானால் ஏறத்தாழ ஐந்தரை கோடி இந்தியர்கள் பதிவு செய்யப்படாத மன நோயாளிகள். இதற்கிடையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள் வேறு உருவாகி வருகின்றன. பிறப்பிலேயே பாதிப்பு, மனம் சார்ந்த நோய், உடல் உறுப்புச் செயல் இழப்பு, பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, புரிதலின்மை எனப் பல்வேறு குறைகள்.

இந்த மன நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினால் மட்டும் போதாது. சிகிச்சைக்குப் பின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். ஆனால் நம் நாட்டில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் போதாது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நமக்கு அதற்கு எல்லாம் நேரம் ஏது?

ஏதாயினும் தனிமனித மன வியாதி போலவே, இன்றைக்குச் சமுதாய மன வியாதி ஒன்றும் இருக்கிறது. தீவிர வியாதி. பண்டைக் காலத்தில் வேந்தர் படைகள் நால்வகைப்படும். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை. இன்றைக்கும் நாம் அறிந்த படைகள் நான்கே. ராணுவப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு எதிராகத் தற்கொலைப் படை என்று ஆகிவிட்டது.

இதில் ஒரு சில சக்திகளைத் தீய வழிகளில் அடைய முயல்வது கருவிவாதத் தீமை. இது சுயநல நோக்கத்துக்காகவே அமையும். இங்கு பொய், திருட்டு, பித்தலாட்டம், போர்க்குணம் போன்ற தீயவழிகளை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றுவர்.

லட்சியவாதத் தீமை என்றால் பிறர்க்குத் துன்பம் தருவதோடு மட்டும் அல்ல. பிறரையும் தம் வழியில் இழுக்கும் உத்தி. இவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட அதி பயங்கரவாதிகள்.

இதற்கிடையில் உலகிலேயே அமெரிக்காவில்தான் வன்முறைக் கும்பல்கள் உச்சத்தில் இருக்கின்றனர் என்கிறது பான் அமெரிக்க சுகாதார நிறுவன ஆய்வு. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 31 ஆயிரம் பயங்கரவாதக் குழுக்களாம். இதற்கு மது, போதைப் பழக்கம், கல்வி அறிவின்மை, வேலைவாய்ப்பு இன்மை, அதிக எதிர்பார்ப்பு, சிறு வயதில் கொடுமைக்கு ஆளாகுதல் போன்ற பல காரணங்களாம்.

நம் நாட்டிலும் இதே அடிப்படைக் காரணங்கள் பொருந்தும். அன்றியும் மதம், சாதி, மொழி, கட்சி என்ற பெயரில் ஆட்டிப் படைக்கத் துடிப்பதும் ஒருவகையில் மனவியாதிதான். ஆதிக்கம் ஒன்றே குறியாய் அலைகிறார்கள்.

தீவிரவாதம் நாட்டுக்கே நச்சு. ரஷியாவில் ஒரு சம்பவம். 2005 டிசம்பர் வாக்கில் செசன்யாவின் ஷெல்கோவ்ஸ்க் பகுதியில் ஒரு பள்ளியில் பலருக்குத் திடீரென்று ஒட்டுமொத்த மூச்சுத்திணறல். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட நூறுபேர் அவதிக்கு உள்ளானார்கள்.

சாப்பாட்டில் அங்கு பல்லி விழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சத்துணவுக்கூடமே கிடையாதே! அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா? அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா? அதற்கு எல்லாம் பள்ளிக்கூடம் அருகே கூவம் இருந்தால்தானே!

பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்து முடிந்தது. இறுதியில் ஓர் அதிர்ச்சி உண்மை. அவர்கள் அனைவருக்கும் மனநிலை பாதிப்பாம். காப்தா அக்மேதோவா என்னும் உளவியல் நிபுணப் பெண்மணி ஆராய்ந்து உரைத்தார். பொது நரம்புத் தளர்வுநோய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். கும்பல் கும்பலாகப் பாதிக்கும்போல.

உள்ளபடியே இது ஒரு வகை நரம்பு நச்சு வியாதி. சமுதாயத்தின் நம்பிக்கைகள், நாட்டு நடப்புகள், பயங்கரவாதங்களைப் பிரதிபலிக்கும் உயிரித் தீவிர வியாதியாம். லண்டன், மன்னர் கல்லூரியில் ராணுவத்தினர் உடல்நல ஆராய்ச்சிக்கான அரசர் மையத்தின் மனநலப் பேராசிரியர் சிம்சன் வெஸ்லி கண்டுபிடிப்பு.

ஒருகாலத்தில் ஆந்த்ராக்ஸ் பீதி, செப்டம்பர் 11 சம்பவம் என மேலை நாடுகளில் கும்பலாகப் பரவிய சமுதாய மனத் தளர்வு நோய் கிடக்கட்டும்.

போர்க் கொடுமைகளால் ஏற்பட்ட மனநிலைப் பாதிப்பே அங்கு அதிகம். வியத்நாம் யுத்தத்தின் குண்டு வெடிப்பு, கொலை வெறிகளை நேரடியாகக் கண்டு மண்டையில் மரை கழன்ற வீரர்கள் பலர். இது ஒருவிதத்தில் விபத்துக்குப் பிந்தைய மன இறுக்கக் கோளாறு போன்றது.

இது குறித்துத் தனியொரு நூலே வெளிவந்துவிட்டது. “மனநிலைக் கோளாறு நோயறிதல், புள்ளிவிவரக் கையேடு’ என்பது தலைப்பு.

இன்னும் சொல்லப்போனால் சமீபத்திய இராக் போர்க்களம் விட்டுத் தாய்நாடு திரும்பிய அமெரிக்க வீரர்கள் நிலைமை பரிதாபம். அவர்களில் நூற்றுக்கு 19 பேர் ஓராண்டுக்கு உள்ளாகவே மனநிலைக் கோளாறுக்கு உள்ளாயினர்.

ஆப்கானிஸ்தான் யுத்தக் களம்விட்டுத் திரும்பியவர்களில் நூற்றுக்கு 11 பேர் கதியும் இதுதானாம். நெஞ்சில் நிழலாடும் அகோர யுத்தக் காட்சிகள், கண்விழித்துக் கிடக்கும் இரவுநேர துன்பங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் உளைச்சல்கள் இப்படி.

மொத்தத்தில் 3 லட்சம் ராணுவ, கடற்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வு முடிவு. இது அமெரிக்க மருத்துவக் கழக சஞ்சிகையின் 2006 மார்ச் 1 இதழில் வெளியானது.

அதன் முக்கியச் செய்தி. ஒரு விமானப்படை அதிகாரியின் அனுபவம். பாக்தாத் நகரில் தெரு விளக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த இராக்கியச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை. அந்த வீதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. சிறுவனின் தொண்டைக் குழி தெரிய வலது கீழ்த்தாடை பிய்ந்து எகிறிப் பறந்தது. அவன் அதிகாரியை நோக்கி உதவி நாடி வந்தவன்போல் “”அமெரிக்கரே, அமெரிக்கரே, அமெரிக்கரே” என்று கதறினான். ஆனால் போர்க் களேபரத்தில் அதிகாரி அதற்குள் அந்த இடத்தை விட்டு அகலும்படி ஆயிற்றாம்.

நாடு திரும்பிய அந்த அமெரிக்க அதிகாரிக்குச் சிறுவனின் சிதைந்த முகம் மனத்தை விட்டு அகலவே இல்லை. விபத்துக்குப் பிந்தைய மன நிலைக் கோளாறு அவரைப் பீடித்தது என்கிறார் ஆலன் பீட்டர்சன் என்கிற உளவியல் நிபுணர்.

வளர்ந்த நாடுகளின் நிலைமை இப்படி. நம் நாட்டில் ரயில்கள், பேருந்துகள், பள்ளிக்கூடங்கள், மனநலக் காப்பகங்கள் எங்கும் கரிக் கட்டைகளாய் கிடக்கும் சடலங்கள், சாலை விபத்தில் கூழான உடல்கள், கார் குண்டுச் சிதிலங்கள், தலை துண்டான பிண்டங்கள் என்று பத்திரிகைகளில் ஒரு முறை படிக்கலாம். ஆனால் நொடிக்கு நூறு தடவை மாறிமாறிப் படம்போட்டுக் காட்டும் சின்னத்திரைகளால் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை கோடியோ?

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in diagnosis, Doctor, emotional disorders, Handicapped, Ill, Medicine, Mental Health, Patient, Prozac, Pshycho Analyst, psychiatrist, psychiatry, Psychology, Schizophrenia, Shrink, Treatment | 1 Comment »

Tony Blair questioned again by British police

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

டோனி பிளேர் இரண்டாவது தடவையாக பொலிஸாரால் விசாரணை

பிரதமர் டோனி பிளேர்
பிரதமர் டோனி பிளேர்

பிரிட்டனில் அரசியல் கட்சிகளுக்குப் பெருந்தொகைப் பணத்தை கடனாக வழங்குவோருக்கு, கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்திவரும் பிரிட்டிஷ் பொலிஸார், பிரதமர் டோனி பிளேரை இரண்டாவது தடவையாக விசாரணை செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ”பிரதமர் வெறும் சாட்சி என்ற வகையிலேயே விசாரிக்கப்பட்டார்; சந்தேக நபர் என்ற வகையில் அல்ல” என்று பிரதமரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

நீதி நெறி பிறழும்படி நடந்து கொண்டதாகச் சந்தேகத்தின் பேரில் பிரதமரின் மிகவும் நெருங்கிய அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமர் முதல் தடவையாக பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டார்.

குற்றவியல் விசாரணை ஒன்றின் ஒரு அம்சமாக பிரிட்டிஷ் பிரதமர் ஒருவர் விசாரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

Posted in British, Conservatives, Corruption, David Cameron, House of Lords, Inquiry, Investigation, knighthoods, Labour party, London, PM, Police, Sir, Tony Blair, UK | Leave a Comment »

Organization Halts Clinical Trial For Potential Microbicide For Preventing HIV Infection

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெண்களுக்கு எயிட்ஸ் பரவாமல் தடுக்கும் மருந்தின் சோதனை நிறுத்தம்

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆபிரிக்கப் பெண்
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆபிரிக்கப் பெண்

எயிட்ஸ் நோய்க் கிருமி பெண்களுக்கு தொற்றாமல் பாதுகாக்கக் கூடிய மருந்து ஒன்றின் ஆரம்ப மருத்துவப் பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோபைசைட் என்று பெயரிடப்பட்ட ‘களி’ போன்ற இந்த மருந்து பெண்களுக்கு உதவாமல், அவர்களுக்கு நோய் தொற்றும் வகையில் அவர்களைப் பலவீனமாக்கியது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தென்னாபிரிக்கா, பெனின், உகாண்டா மற்று இந்தியா ஆகிய நாடுகளில் 1300க்கும் அதிகமான பெண்கள் மீது இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது.

நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்டுவந்த இதேபோன்ற பரிசோதனையும் நிறுத்தப்பட்டது.

இந்த மருந்து ஏன் செயற்படவில்லை என்று தெரியவில்லை என்று இந்தப் பரிசோதனைக்கு உதவி வழங்கிய உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா எயிட்ஸ் ஒழிப்பு நிறுவனமும் கூறியுள்ளன.

Posted in AIDS, cellulose sulfate, CONRAD, Healthcare, HIV, Medicine, microbicide, Nigeria, Prevention, Research, Science, UN, Women, WTO | Leave a Comment »