Archive for பிப்ரவரி 14th, 2007
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல்
காதலர் தினத்தில் வெளிப்படையாக தமது காதல் உணர்வை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு அடி கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள பல இந்து கடும் போக்கு அமைப்புக்கள் மிரட்டியுள்ளன.
மேற்கத்தைய நாகரிகத்தின் உள் நுழைவை வெறுக்கும் இந்த அமைப்புக்கள், இந்தக் காதலர் தினம் அங்கு அனுட்டிக்கப்படுவதை வெறுக்கின்றன.
ஆனால், அண்மைக் காலமாக இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த தினம் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றது.
இதய வடிவில் பலூன்கள் மற்றும் சாக்லெட்டுகளை விற்கும் கடைகளும் அதிகரித்துள்ளன.
காதலர் தினத்தில் சினிமா தியேட்டர்கள் மற்றும் களியாட்ட இடங்கள் போன்ற பொது இடங்களில் காதல் களிப்பில் கிடக்கும் ஜோடிகளை, தமது தொண்டர்கள் படம் பிடித்து, அந்தப் படங்களை அவர்களது பெற்றோருக்கு அனுப்பி வைப்போம் என்று சிவசேனா என்னும் இந்து அமைப்பு அறிவித்துள்ளது.
Posted in Bal Thackeray, BJP, Hinduism, Hindutva, Love, Lovers Day, RSS, Shivsena, Valentines Day | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
சிறப்பாக செயல்படுவதாக தேர்வு: இந்திய தொலை தொடர்புத்துறைக்கு சர்வதேச விருது
புதுடெல்லி, பிப்.14-
உலக அளவில் இயங்கும் தொலை தொடர்புத்துறைகளில் சிறப்பானவற்றை தேர்ந்து எடுத்து அறிவிக்கும் அமைப்பு, பார்சிலோனாவில் இயங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பெறும் அரசு சார்பான தொலை தொடர்புத்துறை எது? என்பதை இந்த சர்வதேச அமைப்பு ஆராய்ந்தது. இதில் 700 தொலை தொடர்பு இயக்கங்கள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் சிறப்பாக தேர்ந்து எடுக்கப்படும் அரசு தொலை தொடர்புத்துறையாக, இந்தியாவின் தொலை தொடர்புத்துறை தேர்ந்து எடுக்கப்பட்டது.
இதற்கான காரணங்கள் வருமாறு:-
1. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய தொலை தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி.
2. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரை புதிய தொலைபேசி சந்தாதார் சேருகிறார்கள்.
3. மத்திய அரசின் சிறப்பான கொள்கையால், இந்த துறை ஊக்கம் பெற்று இருக்கிறது.
4. இந்த துறை நகர பகுதிகளை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், கிராம பகுதிகளையும் மேன்மை படுத்தி இருக்கிறது.
5. மத்திய அரசின் சிறப்பான கொள்கையால், தொலை தொடர்புத்துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
6. உள்நாட்டு மற்றும் சர்வதேச தொலை தொடர்பு செயலாக்கத்தில், சிறப்பான நிர்வாகம் காரணமாக பற்றாக்குறை தவிர்க்கப்பட்டு விட்டது.
இந்திய தொலை தொடர்புத்துறைக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்த விருதை, சர்வதேச அமைப்பின் தலைவர் ராப் கான்வே வழங்கினார். விருதை மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை மந்திரி தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் தயாநிதி மாறன் பேசியதாவது:-
மிகவும் சிறப்பு மிக்க சர்வதேச விருது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதை நான் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவில், அரசு தொலை தொடர்புத்துறை , தானும் வளர்ந்ததோடு அல்லாமல், தனியார் தொலை தொடர்பு இயக்கத்தையும் வளர்ச்சி பெற வைத்து இருக்கிறது.
சில கடினமான முடிவுகளை, மத்திய அரசு தைரியமாக மேற்கொண்டதால்தான், இந்த விருது கிடைத்து இருக்கிறது. மேலும், அரசு மற்றும் தனியார் தொலை தொடர்பு அமைப்புகளின் கூட்டு முயற்சியும், இந்த விருதை இந்தியா பெற காரணமாகி இருக்கிறது.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.
Posted in Award, Cell phone, Communications, Dayanidhi maran, DMK, equipment, Foreign investment, Government, GSM, GSMA, Industry, Information Technology, infrastructure, Manufacturing, Maran, mobile operators, Mobile Phone, network, Recognition, subscribers, Technology, Telecom, telecommunications | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
ஒரு வருடத்துக்கு மேல் நடந்த ரஜினியின் `சிவாஜி’ படப்பிடிப்பு முடிந்தது
சென்னை, பிப். 14-
ரஜினி நடிக்கும் `சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சந்திரமுகி ரிலீசுக்கு பின் இப் படத்தில் அவர் நடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் படம் தயா ரானது.
ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். மணிவண்ணன், சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி எனபலர் நடித்துள்ளனர்.
2005-ல் டிசம்பர் 13ந் தேதி முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஏவிஎம் ஸ்டூடியோ, பிஅண்ட்சி மில், புளியந்தோப்பு போலீஸ் நிலையம், கும்ப கோணம் கோவில், புதுவை நகராட்சி அலுவலகம், என பல இடங் களில் படப்பிடிப்பு நடந்தது
ஐதராபாத், பெங்களூர், புனே நகரங்களிலும் பிர மாண்ட `செட்’கள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நயன்தாரா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இப் பாடல் காட்சியில் புனேயில் கர காட்ட கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு பாடலை எடுத்தனர். சண்டைக்காட்சிகளும் நவீன முறையில் படமாக்கப்பட் டுள்ளது.
இறுதி கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். இதற்காக சில நாட்களுக்கு முன்பு ரஜினியும் படக்குழுவினரும் அமெரிக்கா சென்றனர். அங்கு ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தை கெட்டப் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. படப் பிடிப்பை சிலர் படமெடுத்து இண்டர் நெட்டில் வெளியிட் டதால் சிவாஜியில் ரஜினி கெட்டப் வெளியேதெரிந்து விட்டது. எனவே படப்பிடிப்பு எச்சரிக்கையாக நடத்தப்பட்டது. படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இன்று மாலை அல்லது நாளை ரஜினி சென்னை திரும்புகிறார். ஒரு வருடத்துக்கு மேலாக நடந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது.
ஏவி எம் ஸ்டூடியோவில் ஏற்கனவே இரு வாரங்கள் டப்பிங் பேசினார். அமெரிக் காவில், படமான காட்சிகளுக்கு அடுத்து டப்பிங் பேசுகிறார்.ஸ்ரேயாவுக்கு சந்தியா பின்னணி குரல் கொடுக்கிறார். ஷங்கரின் காதல் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இடையில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங்கும் பேசி வருகிறார்.
தமிழ் புத்தாண்டில் `சிவாஜி’ ரிலீஸ் ஆகிறது.
Posted in AR Rehman, AVM, Manivannan, Raghuvaran, Raguvaran, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shreya, Shriya, Sivaji, Sivaji the Boss, Sriya, Sujatha, Suman, Vadivukkarasi, Vivek | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
மாணவர்கள் ஸ்டிரைக் எதிரொலி: விவேகானந்தா கல்லூரி மூடல்
சென்னை, பிப். 14: சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடாததால், கல்லூரி காலவரம்பின்றி மூடப்படுகிறது. இதைக் கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது குறித்து கல்லூரி செயலர் சுவாமி சத்தியப்பிரியானந்தா, முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
கல்லூரி மாணவர்கள், குறிப்பாக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் கடந்த ஐந்து நாள்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதனிடையில், கல்லூரி மாணவர்கள், அதிலும் விடுதி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். கல்லூரியின் விலைமதிப்பற்ற சொத்துகளையும் சில ஆசிரியர்கள், ஊழியர்களின் தனிப்பட்ட பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கடந்த 7-ம் தேதி விடுதி மாணவர்கள் உள்பட சில மாணவர்கள் முன்னறிவிப்பு எதுவும் இன்றி, திடீரென்று ஸ்டிரைக் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய போராட்டத்தில் இதர கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
கல்லூரி நிர்வாகத்தை நடத்தி வரும் ராமகிருஷ்ண மடத்தின் மூத்த அறங்காவலர் சுவாமி கெüதமானந்தா விடுதி மாணவர்களுடன் கடந்த 10-ம் தேதி பேசினார். தொடர்ந்து, விடுதி நிர்வாகத்துக்கு மாற்று ஏற்பாட்டையும் அவர் செய்தார்.
அதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்ததாக நிர்வாகம் கருதியது. ஆனால், மாணவர்கள் புதிய கோரிக்கைகளை திங்கள்கிழமை முன் வைத்தனர். ஆனால், அக்கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலையில் நிர்வாகம் உள்ளது. இது மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகள் சிலர், மாணவர்களுடன் பேச்சு நடத்தி, பிறகு கல்லூரி பணியாளர்களுடனும் விவாதித்தனர்.
ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத கோரிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். போராட்டத்தைக் கைவிடும்படி மாணவர்களிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தங்களது பிடிவாதத்தை அவர்கள் கைவிடவில்லை. எனவே, பகல் நேரக் கல்லூரி, மாலை நேரக் கல்லூரியுடன் விடுதியையும் கால வரம்பின்றி மூடுவது என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
விவேகானந்தா கல்லூரி நாளை திறப்பு
சென்னை, பிப். 27: சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியும் வித்யாபீடம் என்ற அதன் விடுதியும் புதன்கிழமை திறக்கப்படுகின்றன.
மாணவர் விடுதி செவ்வாய்க்கிழமை (பிப். 27) முதல் செயல்படும் என்று கல்லூரிச் செயலர் சுவாமி அபிராமானந்தரும், முதல்வர் வ.வே.சுப்பிரமணியனும் அறிவித்துள்ளனர். இக்கல்லூரியும், விடுதியும் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் காலவரம்பின்றி முடப்படுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது
Posted in College, Re-open, Strike, Students, Swami Sathiyapriyanandha, Viveganandha College, Vivegkananda College, Vivekananda College, Vivekanandha College, Vivekanantha College | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
மேலவை காங். உறுப்பினர்கள் 26 பேர் சஸ்பெண்ட்: அவைத் தலைவர் நடவடிக்கை
பெங்களூர், பிப். 14: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 26 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. தாற்காலிகத் தலைவராக துணைத் தலைவர் சச்சிதானந்தா கோட் இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த சாலை விபத்தில் கோட் காயம் அடைந்தார்.
இந்நிலையில் சட்ட மேலவைக்கூட்டம் கடந்த ஜனவரி 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து மூத்த உறுப்பினர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த என். திப்பண்ணாவை தாற்காலித் தலைவராக அரசு நியமித்தது.
ஆனால் இவரது நியமனத்தை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில் மேலவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலவை கூடிய ஜனவரி 25-ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை கூட்டத்தை நடத்தவிடாமல் தர்ணா மேற்கொண்டுவந்தனர். இதனால் அவை நடந்த அனைத்து நாள்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே. பாட்டீல் தலைமையில் வழக்கம்போல எழுந்து நின்று தர்ணா மேற்கொண்டனர். இதற்கு ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அவையை நடத்தவிடாமல் தடுப்பதுசரியல்ல என்று அவர்கள் கூறினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
அவைத் தலைவர் திப்பண்ணா பலமுறை கேட்டுக் கொண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனால் பொறுமை இழந்த அவைத் தலைவர் திப்பண்ணா, காங்கிரஸ் உறுப்பினர்கள் 26 பேரையும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாகக் கூறி அவையை மறுநாளைக்கு ஒத்திவைத்தார்.
Posted in Banaglore, Basavaraj Bommai, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), D H Shankaramurthy, Deve Gowda, H K Patil, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha Dal, JD(S), Karnataka, Koomarasamy, Kumarasami, Kumarasamy, Legislative Council, M P Nadagowda, MLC, N Thippanna, Politics, Secular Janata Dal, T N Chaturvedi | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஜபல்பூர்(ம.பி), பிப். 14: அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என “வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது:
அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்.
இது குறித்து மதத் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் அகற்றப்பட வேண்டும்.
உலக மக்களின் மேம்பாட்டுக்காக பல ஆன்மிகத் தலைவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் பகவான் ரஜனீஷ் மற்றும் மகேஷ் யோகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிருஷ்ணன்-ராதை, ராமர்-சீதை ஆகியோரின் கதைகள் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் காலம் காலமாக இடம்பிடித்துள்ளன. நாம் செய்யும் பணிகள் அனைத்தும் நமது நாட்டின் கலாசாரத்தை மீறாத வகையில் இருக்க வேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நோக்கிச் செல்வதைத் தவிர்த்து நம் நாட்டின் கலாசாரத்தை இந்திய மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.
Posted in Ayodhya, BJP, disputed land, Hinduism, Hindutva, Kashi, Mathur, Mosque, Muslims, Ram jenma boomi, Rama, Ramjenmabhoomi, RSS, Saffron, Sri Sri Ravi Shankar, Temple, Terrorism, The Art Of Living, Varanasi | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது
திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.
இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.
தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.
Posted in Agriculture, Award, Bharathidasan University, Environment, Factory waste, Forest, Global Warming, Impact, Lakshmanan, Pollution, Prize, Recognition, Research, S Lackumanan, scientist, Seashore, So Lakkumanan, Technology | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்
திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
திருப்பூர் பகுதியில்,
- வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
- தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
- மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
- ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
- ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.
உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.
பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:
உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.
நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.
மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,
- பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
- இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
- இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
- நகரில்
- நொச்சிபாளையம்,
- மங்கலம் சாலை,
- அருள்புரம்,
- மண்ணரை,
- திருவள்ளுவர் நகர்,
- மாதேஸ்வரா நகர்,
- கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.
கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு
பெங்களூர்,பிப்.23-
கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.
மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.
மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-
தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.
இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.
============================================================
செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு
- வடசென்னை,
- எண்ணூர்,
- மேட்டூர் மற்றும்
- தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.
மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.
Posted in Arasoor, Arasur, Bangalore, Banian, Business, Coimbatore, Coomarasami, Coomarasamy, Diesel, Economy, Electricity, Engoor, Engore, Engur, Environment, Erode, Factory, Filtration, Garments, Generator, Incentives, Industry, Inverter, Karnataka, Kovai, Kumarasami, Kumarasamy, Palladam, Perumanalloor, Perumanallur, Pollution, Power, Power Cuts, Power Station, retail, Small Business, Textiles, Thiruppoor, Thiruppur, Tiruppoor, Tiruppur, UPS, Waste Water | 2 Comments »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
இலவச கலர் டி.வி. திட்டத்துக்கு அவசர கால நிதியைப் பயன்படுத்த தடை கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு
மதுரை, பிப். 14: இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்துக்கு அவசர கால நிதியை பயன்படுத்தத் தடை கோரி தாக்கலான மற்றொரு மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த சமூக சேவகர் ம.சரவணன் தாக்கல் செய்த மனு விவரம்:
திமுக ஆட்சிக்கு வந்ததும் இலவசமாக கலர் டி.வி. வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் 53 லட்சம் பேருக்கு கலர் டி.வி. வழங்க ரூ.1060 கோடி செலவாகும் என முதல்வர் அறிவித்தார்.
கலர் டி.வி. வழங்கும் திட்டத்தால் ஒரு குடும்பத்தினரே பயன் அடைவர். இதில் பொதுநலம் ஏதும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும் குற்றம்சாட்டினார். மக்களின் பணத்தை அரசு வீணாக்கும் திட்டத்தில் செலவிடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.
இதுபோன்ற இலவசத் திட்டத்தை அறிவிப்பதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசுக்குத் தகுந்த ஆலோசனை கூறலாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இந்த அறிவிப்பு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
இலவச டி.வி. திட்டத்தைச் செயல்படுத்தும் குழுவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. மேலும் இக் குழுவில் கூட்டணிக் கட்சியினரே இடம் பெற்றுள்ளனர்.
மத்திய திட்டப் பணிகளுக்கே போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே, இதுபோன்ற திட்டங்கள் குறித்து இந்திய கணக்குத் தணிக்கைக் குழு மூலம் உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்க வேண்டும்.
இதற்கான நிதியை அவசர கால நிதிக் கணக்கிலிருந்து எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகள் எலிப் தர்மாராவ், பி.பி.எஸ்.ஜனார்த்தனராஜா ஆகியோர் முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Posted in Budget, cable, Campaign, Colour TV, Courts, Dharmarao Elipe, Economy, Finance, Free TV, High Court, Janarthana Raja, Justice, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, M Saravanan, Madurai Bench, Manifesto, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Order, PIL, Promise, public interest litigation, Tamil Nadu, TN | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் தேவைதானா?
கோ. கிருஷ்ணகுமார்
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) சமர்ப்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
பொருளாதார நிபுணர்களாக இல்லாத நிதியமைச்சர்கள் தயாரிக்கும் பட்ஜெட்டுகளால் கணிசமான பயன்களோ, கடுமையான பாதிப்புகளோ ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் துணிச்சலான முடிவுகள் எதையும் எடுப்பதில்லை.
ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிப்பது என்பது சராசரிக்கும் குறைவான திறமையுள்ள நிதியமைச்சர்களுக்கு பெரும் பிரச்சினையாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் குறித்த தெளிவான பார்வை இல்லாத இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கடந்த ஆண்டு, தான் தயாரித்த பட்ஜெட்டில் ஏதேனும் சில மாற்றங்கள் செய்தாக வேண்டியுள்ளது.
ஒரு பட்ஜெட்டில் சில அம்சங்களுக்கு வரிச்சலுகை தரப்படுகிறது. வேறு பல அம்சங்களுக்கு வரிவிதிப்பு கடுமையாக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையின் பயனை அனுபவிக்கவும், புதிய வரிச்சுமையிலிருந்து மீளவும் ஓராண்டுக் காலம் போதுமானதாக இருப்பதில்லை.
நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்கள் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வீடு கட்டுகிறார்கள். அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது, அசலுக்கும், வட்டிக்கும் கணிசமான வரிச்சலுகை பெறுகிறார்கள். இந்த வரிச்சலுகைகள் நிரந்தரமானவையல்ல, இவை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்ற உண்மை பலருக்குத் தெரியாது.
எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு நிதியமைச்சர் இந்தச் சலுகையைத் திரும்பப் பெற முடிவு செய்தால், அது மத்திய தர மக்களுக்குப் பேரிடியாக அமையும். ஆண்டுதோறும் பட்ஜெட் வெளியிடுவதில், இதைப்போன்ற பல இன்னல்கள் உள்ளன.
பட்ஜெட் வருவதற்கு 45 நாள்களுக்கு முன்பிருந்தே தொழிலதிபர்கள், மாத ஊதியக்காரர்கள், ஓய்வூதியதாரர்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்பார்ப்புகளை வெளியிடுவார்கள். பெரும் எதிர்பார்ப்பிற்குப் பிறகு பட்ஜெட் வெளிவரும்.
இதன்பின்னர் ஒவ்வொரு துறையினரும் பட்ஜெட்டின் தன்மைக்கேற்ப தங்கள் தொழில் உபாயங்களை மாற்றியமைத்துக் கொண்டு செயல்படத் தொடங்குவார்கள். எல்லாம் ஓர் ஒழுங்குக்கு வருவதற்குள் அந்த ஆண்டு முடிந்து விடும். அடுத்த பட்ஜெட்டுக்கான நேரமும் வந்துவிடும்!
இந்தக் குழப்பங்களால் தொழில் துறையினர் சரியான திட்டமிடுதலில் ஈடுபட முடிவதில்லை.
இப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு?
ஆண்டுதோறும் பட்ஜெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டால், ஒரு பட்ஜெட்டிற்கும், அடுத்த பட்ஜெட்டிற்கும் இடையில் உள்ள கால இடைவெளி அதிகமாக இருக்கும்.
தொழில் புரிவோர் தங்கள் செயல்பாடுகளை நிதானத்துடன் வகுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இடையில் தேவைப்பட்டால் சிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
ஆனால் மூன்றாண்டுக் கால பட்ஜெட்டை சரியான தொலைநோக்குப் பார்வை இல்லாத நிதியமைச்சரால் தயாரிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நீண்ட நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நடைமுறையை மாற்றும்படி சொன்னால், சமுதாயம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முன்வராது. ஆனால் விருப்பு – வெறுப்பு இல்லாமல் சீர்தூக்கிப் பார்ப்பவர்களுக்கு இந்த யோசனை (இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்) சரியானதே என்று எண்ணத்தோன்றும்.
(கட்டுரையாளர்: விரிவுரையாளர், கோ.வெ.நா. கல்லூரி, கோவில்பட்டி).
Posted in Analysis, Budget, Economics, Economy, Expenses, Finance, Financial Statement, Income, Income Tax, Industry, IT, Laws, Necessity, Op-Ed, P Chidambaram, P Chidhambaram, Policy, Private, Public, revenue, rules, Tax | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
பதவி உள்ளவரை தாவல்
கட்சித்தாவல் தடை சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
கட்சித் தாவல் தொடர்பான வழக்குகள் தாமதமாவதால், தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரே முடிவு செய்து, கட்சி தாவியவர்களைப் பதவி நீக்கலாம் என்பது பரிந்துரைகளில் ஒன்று.
அதேபோன்று, ஒரு கூட்டணி அரசில் உள்ள ஒரு கட்சி அல்லது கட்சிகள், அக்கூட்டணியிலிருந்து விலக நேருமென்றால், அவர்கள் திரும்பவும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நியாயமானதே.
தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியிலும் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர் வாக்குகள் உள்ளன. ஒரு சாதாரண சிறிய கட்சி, ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர், அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகக் காட்டுவது சரியானதாக இருக்க முடியாது.
கட்சித் தாவலுக்கும் கூட்டணியிலிருந்து கழன்று கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் அமைச்சர் பதவி. கட்சி தாவுவோருக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தடை விதித்தால் தாவலும் தானே தடைபடும். தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்திலும்கூட, கட்சியின் எம்பி, எம்எல்ஏ-க்கள் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்து, தனி அமைப்பாக மாறுவது அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பதவிக்காக பிளந்துபோவோரின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டு, அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் வைக்க முடியும். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியாது.
விகிதாசார தேர்வு முறை இல்லாத நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட ஒரு தொகுதியில் ஒரு கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க முடியும் என்பதால், கட்சித் தாவல் தடை சட்டங்கள் மிகவும் நுட்பமாக, விரிவாக அமைய வேண்டும்.
இதேபோன்று, கொடுங்குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டு உள்ளவரை தகுதிநீக்கம் செய்வதிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவில் திருத்தம் தேவை.
கிரிக்கெட் வீரர் சித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் ஆகியோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கொலைக் குற்றத்துக்காக தண்டனை பெற்று, வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொருவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தும் எம்.பி.யாக நீடிக்கிறார். இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் என்பதற்கான வரையறையை விரிவு செய்ய வேண்டும் என்றும் இக்கமிஷன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஒரு எம்பி, எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு ஒரு காரியத்தைச் செய்துதரப் பணம் பெற்றால் அது ஊழல். அதே பணத்தை கட்சிநிதியில் வரவு வைத்து காரியம் செய்து கொடுத்தால் அது ஊழலாகக் கருதப்படுவதில்லை.
ஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது ஒரு கட்சியின் தலைவர், அரசு இயந்திரத்தின் அனைத்து வசதிகளையும் தனியாருக்குச் செய்து கொடுத்து, பிரதிபலனாக அந்நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலைக்கு தானோ அல்லது தனது உறவினர்களையோ வாங்கிக்கொள்ளச் செய்வதும் ஊழல்தான். ஆனால் இதை தற்போதுள்ள நடைமுறைப்படி ஊழல் என்று சொல்ல முடியாது.
சில மாநிலங்களில், தன் கட்சி ஆட்சிக்கு வந்து, தான் அமைச்சர் பொறுப்பேற்றதும், தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவையும் தடுக்கப்பட வேண்டும்.
Posted in Administrative Reforms Commission, Affiliation, Assembly, Ban, Bribery, Coalition, coalition defectors, coalition governments, Corruption, Dinamani, EC, Election Commissioner, Elections, Government, Governor, India, kickbacks, Lok Sabha, Manmohan Singh, Minister, MLA, MP, Op-Ed, Opinion, Opposition, Party, Politics, Polls, Report, Rule, Shibu Soren, Sibu Soren, Sidhu, solutions, Split, stability, State, Suggestions, UPA, Veerappa Moily, Victim, Vote | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
இணையத்தில் போதை மருந்து விற்றதாக ஐ.டி. நிறுவன தலைமை அதிகாரி கைது
கோல்கத்தா, பிப். 14: இணைய தளத்தின் மூலம் போதை மருந்து விற்றதாக, தகவல்தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தின் தலைமை அதிகாரி போதைப்பொருள் ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எக்ஸ்பான்ஸ் டெக்னாலஜிஸ், எக்ஸ்பான்ஸ் ஐடி சர்வீசஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரி சஞ்சய் கெடியா. இவர் ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு சிறப்பு நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
பிப்ரவரி 1-ம் தேதி, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுங்கத்துறை மற்றும் அரசுத்துறை வங்கி அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கோல்கத்தா மற்றும் தில்லியில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 வங்கிக் கணக்குகளின் மூலம் சஞ்சய் கெடியாவும் அவரது நிறுவனமும் நிதிமோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
எக்ஸ்பான்ஸ் நிறுவனத்தில் 49 சதவீதப் பங்குகளைப் பெற்றுள்ள ஸ்டீவன் மகானா என்பவருடன் இணைந்து, இணையத்தின் மூலம் பென்டர்மைன் என்ற போதைப்பொருளை விற்றதாக சஞ்சய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சம் வரை அபாரதமும் விதிக்கப்படும் என போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கிழக்கு மண்டல இயக்குநர் சுனில் மிட்டல் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள ஸ்டீவன் மகானாவை விசாரிக்க ஒரு குழு செல்ல உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
போதைப்பொருள் மூலம் கிடைத்த பணத்தை ஹாங்காங், லக்சம்பர்க், அமெரிக்கா மற்றும் ஸ்வீடனில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பதுக்குவதற்கு சஞ்சய் கருவியாகச் செயல்பட்டுள்ளார் என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
Posted in Alumni, Calcutta, Cocaine, Customs, DEA, Drug Enforcement Administration, drug trafficking, fraud, IIT Delhi, Kolkata, Narcotics, Narcotics Control Bureau, Pentermine, phentermine, Sanjay Kedia, WB, West Bengal, Xponse, Xponse IT Services, Xponse Technologies | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
ரயிலில் ஏசி வகுப்பில் லாலுவின் மாமனார், மாமியார் “ஓசி’ பயணம்
பாட்னா, பிப். 14: பிகாரில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.
டிக்கெட் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததாக லாலுவின் மாமனார் சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டனர்.
இந்தச் சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: மத்தியில் ரயில்வேத்துறை அமைச்சராக இருப்பவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ். இவரது மனைவி ராப்ரி தேவி. பிகார் மாநில முதல்வராக இருந்தவர்.
பிகார் மாநிலம் முஸôபர்பூரிலிருந்து புதுதில்லிக்கு சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. சிவான் என்ற இடத்துக்குச் செல்வதற்காக ராப்ரி தேவியின் பெற்றோரும், லாலுவின் மாமனாருமான சிவபிரசாத் சௌதுரியும் அவரது மனைவியும் ஹாஜிபூர் ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஏசி முதல்வகுப்புப் பெட்டியில் அமர்ந்தனர்.
சாப்ரா ரயில்நிலையம் வந்தபோது கிழக்கு மத்திய ரயில்வேயைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது லாலுவின் மாமனார், மாமியார் இருவரும் டிக்கெட் இல்லாமல் அந்த ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
எனினும் இருவரிடமும் டிக்கெட் இல்லா பயணத்துக்காக ரயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கவும் அவர்களிடம் பணம் பெற்று உரிய டிக்கெட் வழங்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
டிக்கெட் இன்றி ரயில் ஏ.சி. வகுப்பில் பயணம்: தனது மாமனார், மாமியாரையே பிடித்த டிக்கெட் பரிசோதகருக்கு லாலு பாராட்டு
புதுதில்லி, பிப். 16: ரயிலில் டிக்கெட் வாங்காமல் தனது மாமனாரும், மாமியாரும் பயணம் செய்தபோது கடமை தவறாமல் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
லாலுவின் மனைவி ராப்ரிதேவியின் பெற்றோர் கடந்த திங்கள்கிழமை தர்பங்கா-புதுதில்லி சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் டிக்கெட் வாங்கியதால் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த லாலு, “எனது மாமனார், மாமியார் என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுத்த டிக்கெட் பரிசோதகர் பெருமைக்குரியவர். இது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
எனது மாமனாரும் மாமியாரும்தான் தவறு செய்துள்ளனர். ஆனால் பயணத்துக்கான டிக்கெட்டை உடனடியாக எடுத்துள்ளனர். இருப்பினும் சில பத்திரிகைகள் அதை மோசமாக விவரித்துள்ளன’ என்று கூறினார்.
முன்னதாக இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வசதியை நாடு முழுவதும் உள்ள 125 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதற்கான விழாவில் லாலு கலந்துகொண்டார்.
Posted in abuse, AC, air-conditioned, Bihar, Cabinet, Champak Kranthi, Champak Kranti, Chapra, Cheat, Chhapra, Chivaan, Chivan, Chiwaan, Chiwan, CM, Corruption, East Central Railways, First Class, Free, Hajipur, in-laws, Indian Railways, kickbacks, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Minister, Mussafarpur, Mussafurpur, New Delhi, parliament, Power, Rabri Devi, Railways, Shivprasad Chowdhry, station master, Ticket Checker, Ticketless, Train, Travel | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் நடிகர்-நடிகைகள் ஊர்வலம்: ஆளுநரிடம் மனு
பெங்களூர், பிப். 14: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் பெங்களூரில் நடந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள் திரளாக கலந்து கொண்டனர்.
காவிரியில் தமிழகத்தக்கு 192 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பிப்ரவரி 5-ம் தேதி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு நடந்தது. இந்நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடனக்கலைஞர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் பேரணி குமாரபார்க்கில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலிருந்து தொடங்கி ஆளுநர் மாளிகையை அடைந்தது.
இப்பேரணியில் பிரபல கன்னட
- நடிகர் விஷ்ணுவர்தன்,
- மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார்,
- ராகவேந்திர ராஜ்குமார்,
- புனித் ராஜ்குமார்,
- நடிகை தாரா,
- மாலாஸ்ரீ,
- ஜெயந்தி,
- ஜெயமாலா,
- அனுபிரபாகர்,
- சுதாராணி மற்றும் புதுமுக நடிகர்-நடிகைகளும் கலந்துகொண்டனர்.
திரைப்படக் கலைஞர்களின் பேரணியை முன்னிட்டு விரைவு அதிரடிப்படை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பேரணி காரணமாக பெங்களூரில் எப்போதும் வாகன நெரிசல் இருக்கும் ரேஸ் கோர்ஸ் சாலை, குமார குருப்பா சாலை மற்றும் ராஜ்பவன் சாலை போன்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இப்பேரணியில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், “காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்’ போன்ற கோஷங்களை திரைப்படக் கலைஞர்கள் எழுப்பினர். பேரணியில் கலந்துகொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தல்லம் நஞ்சுண்டஷெட்டி கூறியதாவது:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் இப்பேரணி இத்துடன் நிறைவடைந்து விடாது. இது போராட்டத்தின் தொடக்கமே. கர்நாடகத்துக்கு நீதி கிடைக்கும் வரை கர்நாடக திரைப்படத்துறை போராடும் என்றார்.
பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்தவுடன்
- நடிகர் விஷ்ணுவர்தன்,
- திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் தல்லம் நஞ்சுண்டா ஷெட்டி,
- துணைத் தலைவர் சாரா கோவிந்து,
- திரைப்படத் தயாரிப்பாளரும்,
- மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவியுமான பர்வதம்மா ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஆளுநர் மாளிகைக்குச் சென்றது.
கர்நாடக மாநில ஆளுநர் டி.என். சதுர்வேதியைச் சந்தித்து காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு நீதி கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Posted in Actors, Actresses, Anu Prabhakar, Bandh, Cauvery, Cauvery Waters Dispute Tribunal, Cinema, delegation, Film Association, Film Chamber, Jayamala, Jayanthi, Jayanthy, Jeyamala, Jeyanthi, Jeyanthy, Judgment, Kannada, Kannada Movies, Karnataka, Karnataka Film Chambers of Commerce, Kaviri, Malashree, Malasri, Nanjunda Shetty, Parvathamma, Procession, Protest, Rajkumar, Sa Ra Govindu, Stars, Sudharani, Thara, TN Chathurvethi, Vajreshwari Combines, Vishnuvardhan | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007
5 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: துரைமுருகன், பொன்முடி, வேலுவுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை, பிப். 14: தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மூன்று மூத்த அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களின் இலாகா பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
திமுக அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோ.சி. மணியிடம் இருந்து வந்த கூட்டுறவுத் துறை மாற்றப்பட்டு உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் கூடுதலாக இருந்த ராணுவத்தினர் நலத்துறை கோ.சி. மணியிடம் வழங்கப்பட்டுள்ளது. கோ.சி. மணியிடம் இருந்த புள்ளியியல்துறை அவரிடமே இருக்கும். இனி, கோ.சி. மணி, புள்ளியியல் மற்றும் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
சட்டத்துறையைக் கவனித்து வந்த ஐ. பெரியசாமியிடமிருந்து அத்துறை பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இனி ஐ. பெரியசாமி வருவாய் மற்றும் சிறைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
துரைமுருகன் இனி பொதுப்பணி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
முதலமைச்சரிடம் இருந்துவந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை பொறுப்புகள் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. உயர்கல்வி, தொழில் கல்வி, மின்னணு, அறிவியல், தொழில்நுட்பத்துறை ஆகியவற்றுடன் கூடுதலாக கனிமம் மற்றும் சுரங்கத் துறை பொறுப்புகளையும் பொன்முடி கவனிப்பார்.
கூடுதல் பொறுப்பு: புதிய மாற்றங்கள் மூலம் துரைமுருகன், பொன்முடி, வேலு ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவை 3-வது முறையாக மாற்றம்
சென்னை, பிப். 14: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவை அடுத்து, அவரது பொறுப்பு பெரியகருப்பனிடம் வழங்கப்பட்டது. குடிசை மாற்று வாரிய அமைச்சராக இருந்த பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். அவரிடம் இருந்த குடிசை மாற்று வாரியம் கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம் வழங்கப்பட்டது.
இரண்டாவது முறையாக பொங்கலூர் பழனிச்சாமி, அமைச்சரவையில் சேர்க்கப்பட்டபோது மாற்றம் செய்யப்பட்டது. மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியிடம் கூடுதலாக இருந்த ஊரக தொழில்துறை பொங்கலூர் பழனிச்சாமியிடம் அளிக்கப்பட்டது. அத்துடன் முதல்வர் கவனித்துவந்த பணியாளர் நிர்வாகத்துறை ஆர்க்காடு வீராசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் சொன்னபடி மாற்றம்: சில தினங்களுக்கு முன்புதான், அதாவது பிப். 8-ம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் “உசிதப்படி, உரிய நேரத்தில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்’ என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாற்றத்துக்கு காரணம் என்ன?: கடந்த சில வாரங்களாக உடல் நலக் குறைவால் அமைச்சர் கோ.சி. மணி அவதிப்பட்டு வந்தார். மூன்று தினங்களுக்கு முன்னர்தான் அவரை மருத்துவமனையில் முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார். தற்போது அவர் வசமிருந்த கூட்டுறவுத் துறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டுக்குப் பிறகு மாற்றம்?: அமைச்சரவையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட இலாகா மாற்றம் தாற்காலிகமானது என்று கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை முதல்வர் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
Posted in A V Velu, Cabinet, Chief Minister, Co-operation, Duraimurugan, Duraimurukan, Ex-servicemen welfare, Food Minister, Government, I Periyasamy, K Ponmudi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Ko Si Mani, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mines and Minerals, Minister, Ministry, MLA, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Periyasami, Politics, Ponmudi, PWD, reshuffle, revenue, Tamil Nadu, TN, Velu | Leave a Comment »