Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு
மும்பை, பிப். 4 குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நடத்தை அவரது பதவிக்கு ஏற்றதாக இல்லை என சிவசேனைக் கட்சித் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாட்டினார்.
மும்பை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையகத்தில் பத்திரிகையாளர்களிடம் தாக்கரே சனிக்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முகமது அப்சல் குருவுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், அதை நிறைவேற்றுவது தொடர்பான கோப்பு இன்னும் கலாம் மேஜையில்தான் கிடக்கிறது.
கடந்த வாரம் தாணேயில் நடைபெற்ற பேரணியில் கலாமைப் பற்றி நான் தவறாக என்ன சொல்லி விட்டேன்? நான் ஒரு கார்ட்டூனிஸ்ட் என்பதால் ஒருவர் நீண்ட முடி வைத்துக் கொள்வது பற்றி நான் விமர்சனம் செய்ததில் தவறு ஏதும் இல்லை.
மும்பை மாநகராட்சி தேர்தல் வெற்றி: மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனைக்கு கிடைத்த வெற்றி என்னைத் திகைப்படையச் செய்துவிட்டது. இந்த வெற்றிக்கான பெருமை கட்சி நிர்வாகத் தலைவர் உத்தவ் தாக்கரேவையும் அவரது குழுவினரையுமே சாரும் என்றார் பால் தாக்கரே.
Posted in Afzal Guru, Bal Thackeray, BJP, BMC, Congress, Elections, Hair, Hairstyle, India, Mumbai, Polls, Power, President, Quote, Role, Shiv Sena, Spineless, Victory | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?
ஆமதாபாத், பிப். 4: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தில் தில்லுமுல்லு செய்து, அதை சூரத் நகரின் முன்னணி நாளிதழுக்கு யாரோ அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்துப் போலீஸôரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பெரிய அரசியல் விவகாரமாக உருவெடுத்து வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள மாலைப் பத்திரிகை ஒன்று அச்சாகும் அச்சகத்தில் இருந்து அப் படம் அனுப்பப்பட்டிருக்கிறது. உண்மையில் அப்படத்தில் சோனியா காந்தியே இல்லை. அவரைப் போல இருப்பவரைக் கொண்டு, அந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை அனுப்பிய அச்சகத்துடன் பாபுபாய் ரைகியா என்ற சூரத் காங்கிரஸ் தலைவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே போலீஸôர் அவரையும் விசாரித்தனர். இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என் பெயரைக் கெடுக்க நினைக்கும் அரசியல் போட்டியாளர்களின் விஷமச் செயலே இது’ என்று அவர் போலீஸôரிடம் தெரிவித்துள்ளார்.
இது “”சைஃபர் கிரைம்” எனப்படும் கணினி-இணையதளம் சார்ந்த குற்றமாகும்; தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டோம் என்று குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா எச்சரித்திருக்கிறார்.
Posted in Ahmedabad, Allegation, Congress, Congress (I), Cyber Crime, Indira Congress, Investigations, Photoshop, Sonia Gandhi, Sonia Gandi, Surat | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு
புதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
எய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’
புதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
துணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.
விதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.
பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Posted in Agitation, AIIMS, Allegation, Anbumani, Anbumani Ramadas, B K Dash, Chief Public Relations Officer, Clashes, Dean, Education, Educational, Ego, Employ, Employment, Experience, Fights, Government, Health Minister, Health Ministry, Institutes, Instructors, OBCs, P Venugopal, Petty, PMK, Procedures, Prof, Professor, Professors, Promotion, Public Relations, Ramadoss, rules, Teachers, tussle, Venugopal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்
சென்னை, பிப். 4: இணையதளத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வகையில் புதிய இணையதளத்தை ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்த விவரம்:
ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் www.filmsntv.com என்ற புதிய இணையதளத்தை திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் சுமார் 6,000 திரைப்படங்களைக் காணமுடியும்.
இதுவரை திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் கண்டுவந்த திரைப்படங்களை இனி இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டரில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய படங்களைக் காணலாம்.
இந்த இணையதள வசதியைப் பெற பணம் கட்டி உறுப்பினராக வேண்டும். ஒரு படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45. இதில் பழைய மற்றும் புதிய படங்கள், புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள், இந்த இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் காணலாம்.
இந்த இணையதள தொடக்க விழாவில் நடிகைகள் கஸ்தூரி, சங்கவி, பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா, நடிகர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Posted in Bollywood, channel, Download, Filmsntv.com, GV Films, Hollywood, Kollywood, Online, Streaming, Tamil Films, Tamil Movie, Tollywood, TV Channel, Watch, Web Previews, Webcast | Leave a Comment »