Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for பிப்ரவரி 7th, 2007

J Jayalalitha’s power abuse over judiciary during her executive rule

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

தனது அரசை கண்டித்ததால் நீதிபதி வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா: கருணாநிதி அறிக்கை

சென்னை, பிப்.7-

தன்னுடைய அரசை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளயிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீதித் துறையை கேவலப்படுத்தி விட்டதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இவர் ஆட்சி நடத்திய காலத்தில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் ஒற்றுமையாக நடந்து கொண்டதைப் போலவும், நீதிபதிகளையும், நீதித்துறையையும் இவர் போற்றிப் பாராட்டி வந்ததை போலவும் தற்போது அறிக்கை விடும் ஜெயலலிதா, அப்போது நீதிமன்றங்களை எந்த அளவுக்கு இழிவாக மதித்து நடந்தார் என்பதற்கு பல உதாரணங்களை நாம் கூறிட முடியும்.

நீதிபதி ஒருவர் தனது ஆட்சியைப் பற்றி தீர்ப்பிலே கண்டனம் தெரிவித்தார் என்ற காரணத்துக்காக நீதிபதியின் இல்லத்துக்கு செல்லும் தண்ணீர் விநியோகத்தையே தடை செய்யச்சொன்னவர் தான் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்றத்திலே தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நீதிபதி அப்போது சென்னை உயர்நீதி மன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் மீதுள்ள வெறுப்பினைக் காட்டுவதற்காக, அந்த நீதிபதியின் மருமகன் வீட்டிலே காவல் துறையின் மூலமாக “கஞ்சா” வைத்துப் பிடித்து வழக்கு போடச் செய்தவர் தான் இந்த ஜெயலலிதா.

இதையெல்லாம் விட இதோ மற்றொரு உச்ச கட்ட எடுத்துக்காட்டு. இதே ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருந்து தமிழக சட்டப் பேரவையில் 4.2.2005 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-

“உயர் நீதிமன்றமானாலும், எந்த நீதி மன்றமானாலும், நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்களுக்கும், விருப்பு வெறுப்புகள் உள்ளன. சில சமயங்களில் பேசக் கூடாதவற்றையெல்லாம் நீதிமன்றங்களில் பேசுகிறார்கள். இதையே நாங்கள் பேசினால் எங்கள் மீது “கன்டம்ப்ட் ஆப் கோர்ட்” (நீதிமன்ற அவமதிப்பு) வழக்கு போடுவார்கள். ஆனால், நீதிபதிகள் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லது அதற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.

ஆனால் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆகவே, குறிப்பிட்ட இந்த நீதிபதி இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்பதையெல்லாம் இந்த அவையில் தெரிவித்து, அதனால் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, நிலைமை சீரழிந்து விட்டது என்று கூறுவது அபத்தமான கூற்று” என்று அவர் பேசியிருந்தார்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, நீதிபதிகளை தாக்கி இழித்துரைத்தால், அது மட்டும் அவர் வாயிலிருந்து சிந்திய முத்துக்களா?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in abuse, ADMK, AIADMK, Court, ex-CM, executive, J Jayalalitha, J Jeyalalitha, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Judge, Judiciary, Jury, Justice, Karunanidhi, Law, Order, Power | 3 Comments »

The Tamilnad Mercantile Bank Story: Pa Ramachandra Athithan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

மெர்க்கண்டைல் வங்கி பங்கு மோசடி: பா.ராமச்சந்திர ஆதித்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா?- ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, பிப்.5-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் கே.பி.கணேசன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நாடார் சமுதாய மக்களுக்கு சொந்தமான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி எஸ்ஸார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்திடம் இருந்து வங்கியை மீட்பதற்காக பங்குகளை வாங்க வேண்டும் என்று கூறிய நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர் மன்ற தலைவரான ராமச்சந்திர ஆதித்தன் எனது புகாரில் முதல் குற்றவாளியாக உள்ளார்.

இந்த சமுதாயத்தை சேர்ந்த நான் பங்குகளை வாங்குவதற்காக ராமச்சந்திர ஆதித்தன் விடுத்த விளம்பரத்தை பார்த்து சில பங்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராமச்சந்திர ஆதித்தனை அணுகினேன். அவர் ஒரு பங்கின் விலை ரூ.5,500 என்றும் இது தொடர்பாக மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தலைவர் மற்றும் செயலாளரை அணுகலாம். மற்றும் பிராந்திய மேலாளர், மேலாளர் ஆகியோரையும் அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நான் அந்த அதிகாரிகளையும் அணுகினேன். அவர்களும் இதே கருத்தை தெரிவித்து விளக்கம் அளித்தனர்.

நான் 23.4.97 அன்று ராமச்சந்திர ஆதித்தன் தலைவராக உள்ள நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர் மன்றத்தின் பெயரில் 27 ஆயிரத்து 500 ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்டு எடுத்து எனக்கு 5 பங்குகள் அனுப்பும்படி கோரியிருந்தேன். என்றாலும் 2000 ஆண்டு வரை எனக்கு பங்கு பத்திரம் தரவும் இல்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

இதன் பிறகு நான் உசிலம்பட்டியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையின் மேலாளரிடம், எனக்கு வீட்டுக்கடனாக ஒரு லட்ச ரூபாய் வழங்கும்படி கூறினேன்.

29.12.2000 அன்று இந்த கடன் தொகை ஒரு லட்ச ரூபாயை எனது வங்கி கணக்கில் சேர்த்து, அதே நாளில் எனது ஒப்புதல் இல்லாமல் 82 ஆயிரத்து 500 ரூபாயை பங்குகள் வாங்குவதற்காக நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் கணக்குக்கு மாற்றிவிட்டார்.

நான் ஏற்கனவே நாடார் மகாஜன சங்க பங்கு முதலீட்டாளர்கள் மன்றத்துக்கு 23.4.1997 அன்று கொடுத்த பணத்துக்காக இதுவரையில் எந்தவித பங்கு பத்திரங்களும் வழங்கப்படவில்லை. இப்போது மேலும் எனது கணக்கிலிருந்து 82 ஆயிரத்து 500 ரூபாயை அந்த மன்ற கணக்குக்கு மாற்றிவிட்டார். இதன் பின்னர் நான் எத்தனையோ முறை வங்கி அதிகாரிகளை சந்தித்து எனது பணத்துக்கு பங்கு பத்திரங்களை வழங்க வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன்.

நான் 2000-ம் ஆண்டிலேயே பணத்தை கொடுத்திருந்தும் 2003-ம் ஆண்டுதான் வாங்கியது போல 18.9.2003 அன்று, 10 பங்குகளை கொடுத்தனர். இதனால் நான், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை அணுகி என்னை அவர்கள் வேண்டுமென்றே ஏமாற்றி மோசடி செய்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தேன்.

ஆனால் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் என்பதால் இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.

இதனால் வேறு வழியில்லாமல் நான் மதுரையில் உள்ள 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். நான் கொடுத்த புகாரை குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து புலனாய்வு செய்து அந்த அறிக்கையை 16.1.2005-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மதுரை 1-வது மாஜிஸ்திரேட்டு தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் இந்த நாள் வரை குற்றப்பிரிவு போலீசாரால் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. முறையான நடவடிக்கைகள் எதுவும் குற்றப்பிரிவு போலீசாரால் எடுக்கப்படவும் இல்லை.

எனவே மதுரை 1-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவின்படி எனது புகாரின் அடிப்படையில் மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர ஐகோர்ட்டு உத்தரவிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கணேசன் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

கீழ்கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருப்பதால் கண்டிப்பாக போலீசார் மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும். அரசு வக்கீலும் இதை ஏற்றுக் கொள்கிறார். இது சம்பந்தமாக விவரங்களை பெற அரசு வக்கீல் கால அவகாசம் கேட்டுள்ளார். எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற விவரத்தை ஒரு வாரத்துக்குள் அரசு வக்கீல் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

======================================================

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 33 சதவீத பங்குகளை வெளிநாட்டினருக்கு விற்க திட்டம்; சிவசங்கரன், பா.ராமச்சந்திர ஆதித்தனின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும்: கருணாநிதியை நேரில் சந்தித்து நாடார் சங்கத்தினர் மனு

சென்னை, மார்ச்.18-

முதல்-அமைச்சர்கருணா நிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாடார் சங்ககளின் பிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்தார்கள். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாடார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை ஸ்டெர்லிங் நிறுவன அதிபர் சி.சிவசங்கரனிடமிருந்து மீட்பதற்காக வங்கி மீட்புக் குழு 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பா.ராமச்சந்திர ஆதித்தன் தலைமை தாங்கினார். வங்கிக்கான பங்குகளை மீட்க உலகமெங்கும் உள்ள நாடார் சமுதாய மக்களிடம் பணம் திரட்டப்பட்டது.

இவ்வாறு ஒரு கோடியே 6 ஆயிரம் பங்குகளை மீட்க சுமார் ரூ.90 கோடி வசூல் செய்யப்பட்டு அதில் ரூ.80 கோடியே 75 லட்சம் மட்டும் ஸ்டெர்லிங் குழுமத் தலைவர் சி.சிவசங்கரன் வசம் கொடுக்கப்பட்டு சுமார் 96 ஆயிரம் பங்குகள் நாடார் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது. வசூல் செய்த பணத்தில் சுமார் ரூ.9 கோடியே 25 லட்சம் தொகைக்கு உண்டான சுமார் 10 ஆயிரம் பங்குகளை நாடார் சமுதாய மக்களுக்கு கொடுக்காமல் பா.ராமச்சந்திர ஆதித்தன் மோசடி செய்து விட்டார்.

இதுகுறித்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவிற்கிணங்க மதுரை குற்றப்பிரிவில் (இந்திய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

மீட்புக்குழு தொடங்கி இதுநாள் வரை பா.ராமச்சந்திர ஆதித்தன் எந்தவித மான கணக்குகளும் முதலீட்டாளர்களுக்கோ, மன்ற உறுப்பினர்களுக்கோ கொடுக்கவில்லை. ஆகவே, தற்போது கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு மீட்புக்குழு அலு வலகத்திலுள்ள கணக்குகள் அடங்கிய நான்கு கணினிகளின் இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

தங்களது குடும்பத்தினரே தொடர்ந்து வங்கியின் இயக் குனர் பதவியை வகிப்பதற்கு சிவசங்கரன் வசமுள்ள 33 சதவீத பங்குகளின் ஓட்டுரிமை தேவைப்படுவதால் சிவசங்கரனின் கைப்பாவை யாக மாறி நாடார் சமுதாயத்தை அடகு வைத்து, நாடார் மஹாஜன வங்கி முதலீட்டாளர் மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக ஸ்டெர்லிங் நிறுவனத்துடன் புதிய புதிய ஒப்பந்தங்களை பெருந்தொகைக்கு ஏற்படுத்தி கொண்டார். அந்த ஒப்பந்தத் தின்படி அவர் பணம் செலுத்தவில்லை. ஆனால் சிவசங்கரன் வசமுள்ள 95 ஆயிரத்து 418 (33 சதவீதம்) பங்குகளின் மதிப்பு ரூ.74 கோடியே 25 லட்சம் ஆகும். ஆனால் பா.ராமச்சந்திர ஆதித்தன் மற்றும் எம்.ஜி.எம். மாறனும், ஸ்டெர்லிங் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர் மன்றத்திற்கு தெரியாமல் ரகசியமாக 10.3.2006 அன்று 95 ஆயிரத்து 418 (33 சதவீதம்) பங்குகளை சுமார் 166 கோடியே 5 லட்சம் ரூபாய் என்று ஒரு போலியான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் சிவசங்கரனிடம் கூட்டுச் சேர்ந்து 33 சதவீத வங்கியின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்ட திட்டமிட்டுள்ளனர். ஆகவே, தாங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஸ்டெர்லிங் நிறுவனத்திடம் மீதமுள்ள 33 சதவீத பங்கு களை நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர்கள் மன்றம் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தின்படி நாடார் சமுதாய மக்களுக்கே கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பா.ராமச்சந்திர ஆதித்தனும், அவருடைய குடும்பத்தினர் மட்டுமே இயக்குனர்களாக உள்ளனர். இந்த பதவியை தவறாக பயன்படுத்தி கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கடன் வழங்குகிறார்கள். அதுமட்டுமின்றி கடன் வாங்கியவர்களிடமிருந்து ஒன் டைம் செட்டில்மெண்ட் மூலம் தீர்வு செய்வதிலும் கமிஷன் பெறுகிறார்கள்.

சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரை இந்த விசாரணையில் வேகம் காட்ட உத்தரவிட வேண்டுகிறோம். முதல்-அமைச்சர் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகள் மாற்றம் செய்யும் விஷயத்தில் தலை யிட்டு வங்கியின் பங்குகளை நாடார் இன மக்களுக்கே கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். பா.ராமச்சந்திர ஆதித்தனிடமிருந்து சுமார் ரூ.9 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 ஆயிரம் வங்கியின் பங்கு பத்திரங்களையும், பணம் செலுத்தியும் பங்குகள் கிடைக்காத நாடார் சமுதாய மக்களுக்கு கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

இதன்பின்பு அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:-

சிவசங் கரனின் ஸ்டெர்லிங் குழுமத் திடம் இருக்கின்ற 33 சதவீத வங்கிப் பங்குகளை வெளிநாட்டினருக்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ விற்பதற்கு, எங்களது நண்பராக இருந்த பா.ராமச்சந்திர ஆதித்தன் முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார். அதைத் தடுக்க வேண்டும் என்பது எங்களின் முதல் கோரிக்கை.

மேலும் ஸ்டெர்லிங் குழுமத்திடம் உள்ள 33 சதவீத பங்குகளும் நாடார் களுக்குத்தான் வர வேண்டும். நாடார்களும் அனைவரும் நாடார் சங்கங்களும் அதை வாங்கத் தயாராக இருக்கிறோம்.

பா.ராமச்சந்திர ஆதித்தன் பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார். ஒரு மாத காலத் துக்குள் யாரிடமாவது இருந்து வாங்கித் தந்து விடுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் சிவசங்கரனிடம் இருந்துதான் 10 ஆயிரம் பங்குகளை வாங்குவதற்கு நாடார் சங்கங்கள் பணம் கொடுத்தன.

பணம் போய் சேர்ந்து விட்டது. ஆனால் அதற்கான பங்கு பத்திரங்கள் யாருக்குப் போனது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இது பெரிய மோசடி. பாதிக்கப்பட்ட நாடார்களுக்கு பங்கு பத்திரங்களை வாங்கித் தர வேண்டும் என்பதை 2-வது கோரிக்கையாக முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வைத்தோம்.

முழுமையான ஈவுத் தொகை (டிவிடன்ட்), உரிமைப் பங்கு ஆகியவற்றை தருவதாகக் கூறிதான் நாடார்களிடம் பணம் வசூல் செய்தோம். அதைத் தருவதற்கும் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதையும் 3-வது கோரிக்கையாக முதல்-அமைச்சரின் கவனத் துக்கு கொண்டு சென்றோம்.

மெர்க்கண்டைல் வங்கி லாபத்தில் ரிசர்வ் வங்கி ஆணைஇல்லாமலேயே ரூ.1000 டிவிடெண்ட் தரமுடியும். அதை கூட தரவில்லை. ஏனென்றால் சிவசங்கரனின் ஆணைப்படி நடக்கிறார்.

பங்குகளை நாங்களே வாங்க தயாராக இருந்த நேரத்தில் மீட்பு குழுவினரை கலந்து பேசாமல் தன்னிச்சையாக ரூ.74 கோடி மதிப்புள்ள பங்குகளை ரூ.130 கோடி என்றும் அதன் பின்னால் அதை ரூ.166 கோடி என்றும், ஒவ்வொரு பொதுக்குழுவின்போதும் 33 சதவீத பங்குகளுக்கான ஓட்டு உரிமையை வாங்குவதற்காக இவ்வாறு உயர்த்தி சமு தாயத்தை கடனாளியாக ஆக்கிவிட்டனர்.

நாடார்களின் உரிமையான இந்தப் பங்குகள், வெளி நாட்டவருக்கோ அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கோ போகக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். அதற்காக இன்னும் எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முதல் அமைச்சர் கருணாநிதியிடம் மனு கொடுத்தவர்கள் விவரம்:

மதுரை நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ், திருநெல் வேலி தட்சணமாற நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.ஆர்.சபாபதி நாடார், தூத்துக்குடி நாடார் மகமை தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜ், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வெ.த. பத்மநாபன், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க செயலாளர் ஆர்.சந்திரன் ஜெயபால், எம்.மாரித்தங்கம், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார் நாடார், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார், மதுரை நாடார் மஹாஜன வங்கி பங்கு முதலீட்டாளர் மன்ற அறங்காவலர்கள் வி.எம்.ஜி.ராஜசேகரன், எஸ்.ஜி.சேகர், டி.பி.எஸ்.பொன்குமார், பல்லாவரம் வட்டார நாடார் கள் சங்க செயலாளர் சிற்றம்பல பாண்டியன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், சென்னை வாழ்நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்கு னர்கள் பி.எஸ்.சத்தியசீலன், ஆர்.தமிழரசன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கீழ்கடலோர நாடார் சங்க நிர்வாகிகள் டி.ராமச்சந்திரன், கே.சிவராமன்.

Posted in Aadhithan, Aathithan, Biz, Business, Controversy, Courts, Economy, Essar, Essar Group, Finance, inter-community rivalry, Judge, Justice, KP Ganesan, Law, Mercantile Bank, Naadar, Nadar, Nadar community, Order, Pa Ramachandra Athithan, Politics, regulatory lapses, Sterling Computers, Tamil Nadu, Tamilnad Mercantile Bank, TNMB | 2 Comments »

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை

சென்னை, பிப். 6-

நடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.

காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.

அஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.

Posted in Accident, Ajeethkumar, Ajith, Ajitkumar, Fight, Greedam, Hurt, Kreedam, Location, Movie Spot, Shooting, Shoulder, Sick, Tamil Actor, Tamil Actress | 4 Comments »

Chennai Local Civic Elections – Ma Subramanian gets elected unopposed

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு- சுயேச்சை வாபஸ் ஆகிறார்

சென்னை, பிப்.7-

சென்னை மாநகராட்சிக்கு 100 வார்டுகளில் வருகிற 18-ந்தேதி மறு தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் முடிந்து விட்டன. பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதால் அந்த கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பாரதீய ஜனதா, தே.மு.தி.க. மற்றும் சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று மனுக்கள் பரிசீலனையின் போது தே.மு.தி.க. வேட்பாளர்கள் 14 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டது. இதனால் சில வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லை.

ஒரு சில சுயேட்சைகள் மட்டுமே போட்டியிடுகிறார்கள். அவர்களும் தி.மு.க. வினருக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சில வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

140-வது வார்டில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் தி.மு.க. வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் ஏழுமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்யாததால் முத்து என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரும் மனு தாக்கல் செய்யவில்லை.

கடைசி நேரத்தில் சுப்பிரமணியன் என்பவர் தே.மு.தி.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது மனுவும் தள்ளுபடி ஆவிட்டது. இப்போது தியாகராஜன் என்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டும் மா. சுப்பிரமணியனை எதிர்த்து மனு செய்துள்ளார்.

அவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக போட்டியில் இருந்து விலக போவதாக கூறியுள்ளதால் மா.சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

அதே போல் 135-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக காஞ்சனா களத்தில் இருக்கிறார். அவரை எதிர்த்த தே.மு.தி.க. சார்பில் மேரி ஜுலியட் அறிவிக்கப்பட்டார். அவர் மனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நேரத்தில் உமா என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி ஆகிவிட்டது.

2 சுயேச்சைகள் மட்டும் எதிர்த்து நிற்கிறார்கள். அவர்களும் போட்டியில் இருந்து விலக இருப்பதால் காஞ்சனா போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதே போல் 138-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மேரி லூர்துசாமி, 139-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மகேஷ்குமார், 141-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கென்னடி 86-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சேப்பாக்கம் சுரேஷ்குமார், 91-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் தீபா, 127-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கருணாநிதி ஆகியோரை எதிர்த்து மனு தாக்கல் செய்த தே.மு.தி.க. வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிட்டன.

20-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூப்சாந்தரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் இன்பசேகரன், பாரதீய ஜனதா சார்பில் பாலாஜி மனு தாக்கல் செய்த னர். இருவரும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இதேபோல் 11-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருபாகரனை எதிர்த்து மனு தாக்கல் செய்த தே.மு.தி.க. வேட்பாளர் ஸ்ரீதர் போட்டியில் இருந்து விலகி கொண்டார்.

இதனால் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை பிற்பகலில் மனுக்கள் வாபஸ் முடிந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Posted in ADMK, AIADMK, Chennai, civic elections, DMDK, DMK, Election, Ma Subramanian, Madras, Mayor, MDMK, Polls, Vijaiganth, Vijaikanth | 3 Comments »

Thatstamil.com – Sun TV Kolangal serial actress gets her sex act in Video

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

குடோனில் டிவி நடிகையின் ‘அஜால் குஜால்’!
பிப்ரவரி 07, 2007

சென்னை: ஜவுளிக் கடை குடோனில், குடிபோதையில், பிரபல டிவி நடிகை வாலிபர் ஒருவருடன் படு ஆபாசமான கோலத்தில் இன்பம் அனுபவிப்பதைப் போன்ற செல்போன் வீடியோ காட்சி காவல்துறை அதிகாரியின் செல்போனுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தென் மண்டல குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டரின் செல்போனுக்கு ஒரு எம்எம்எஸ் வீடியோ கிளிப்பிங் வந்துள்ளது. டிவி ஸ்டார் ஃபார் யூ என்ற தலைப்பில் வந்த அந்த வீடியோ கிளிப்பிங்கைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஆடிப் போய் விட்டார்.

பிரபலமான டிவி நடிகை ஒருவர், வாலிபர் ஒருவருடன் ஜவுளிக் கடை குடோனில், யாருக்கும் தெரியாத இடத்தில் படு ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கும் காட்சியும், நடிகையின் ‘ஸ்டிரிப்டீஸ்’ காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

அந்த வீடியோ கிளிப்பில் இடம் பெற்றுள்ள காட்சிகளின் விவரம்:

அந்த நடிகை சன் டிவியில் ஒளிபரப்பாகும் கோலங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வாலிபருடன் அந்த நடிகை வருகிறார்.

அவர்கள் இருக்கும் இடத்தில் நிறைய உடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே ஏதாவது ஒரு ஜவுளிக் கடையின் குடோனாகத்தான் அது இருக்கும் எனத் தெரிகிறது.

சேலையில் உள்ள அந்த நடிகை, குடிபோதையில் இருக்கிறார். தன்னை மறந்து சிரித்தபடி அந்த வாலிபருடன் வரும் நடிகையை, கேமராவுக்கு முன்பு அந்த வாலிபர் நிறுத்துகிறார். பின்னர் கீழே உட்கார்ந்து கொள்கிறார்.

பிறகு டிவி நடிகை தனது சேலையை கழற்றுகிறார், பிறகு ஒவ்வொரு உடையாக கழற்றி எறிகிறார். பின்னர் படு ஜாலியாக அந்த வாலிபருடன் உல்லாசத்தில் மூழ்குகிறார்.

அவ்வப்போது நடிகை கேமராவை விட்டு விலகும்போது, அந்த நபர் நடிகையை சரியாக கொண்டு வந்து கேமரா முன் நிறுத்தி ஜாலியைத் தொடருகிறார். நடிகைக்குத் தெரியாமல் ரகசிய இடத்தில் கேமரா வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது.

அந்த வாலிபர் இந்தியில் பேசுகிறார், ஆனால் நடிகையோ மலையாளத்தில் பதில் தருகிறார். பேச்சை விட உல்லாச உணர்வுகளைத்தான் நடிகை அதிகம் பிரதிபலித்திருக்கிறார். கிட்டத்தட்ட மூன்றரை நிமிடம் வரை இந்த ஆபாச காட்சி ஓடுகிறது.

இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போன சப் இன்ஸ்பெக்டர் படத்தை அனுப்பிய செல்போன் எண்ணைப் பார்த்து அதற்கு போன் செய்துள்ளார். மறு முனையில் பேசிய நபர், தான் ஒரு கல்லூரி மாணவர் என்றும், தனது நண்பருக்கு அனுப்பிய காட்சி தவறுதலாக உங்களுக்கு வந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

நடிகையின் ஆபாச காட்சியை படமாக்கியது யார், எந்த ஜவுளிக் கடை, யார் இதை செல்போன்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

வீடியோ கிளிப்பிங்கில் இருப்பது நடிகையின் டூப் அல்ல ஒரிஜினல் என்பதால், வேண்டும் என்றே அவர் ஆபாசமாக நடித்திருப்பதாக தெரிய வந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சொர்ணமால்யாவின் ஆபாசக் காட்சி செல்போன்களில் வலம் வந்தது. இது ஒரிஜினல் படம்தான் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விஷயம் கமுக்கமாக மறைந்து போனது. இந்த நிலையில் பிரபல தொடரில் நடித்துள்ள நடிகையின் கசமுசா படம் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Actress, Allegation, Camera, Cell phone, Censor, Deepa Venkat, Entertainment, Exploitation, Glamour, Godown, Kolangal, Law, MMS, Order, Police, R, Relation, Sex, Striptease, Sun TV, Tamil Actress, Textile, Textile Shop, Thatstamil.com, TV Actress, TV Serial, video, XXX | 88 Comments »