Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 24th, 2007

Income Tax revenue growth & collection details in Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 10 ஆயிரம் கோடி வருமானவரி வசூல்: தலைமை கமிஷனர் தகவல்

சென்னை, ஜன. 24-

வருமான வரித்துறை தலைமை கமிஷனர் ரவிச்சந் திரன் நிருபர்களிடம் கூறியதா வது:-

வருமான வரித்துறை ரிட்டன் படிவங்கள் கடந்த நவம்பர் மாதம் வரை 13 லட் சத்து 39 ஆயிரம் வந்துள்ளன. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது 4.10 சதவீதம் அதிகமாகும்.

ரிட்டன் படிவங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 3 லட்சத்து 4 ஆயிரம் படி வங்களை ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிறப்பு திட்டம் மூலம் அதிக ஆட்களை வைத்து அவற்றையும் ஆய்வு செய்தோம்.

இன்னும் 1 லட்சத்து 47 ஆயிரம் படிவங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியது இருக் கிறது. பிப்ரவரி மாதத்துக் குள் இந்த பணிகளை முடித்து திருப்பி கொடுக்க வேண்டிய பணங்களை அனுப்பி விடு வோம். இந்த பணம் `எலக்ட் ரானிக் கிளியர்’ மூலம் பாங்கி களுக்கு அனுப்பப் படும்.

ரூ. 10 ஆயிரம் கோடி

இந்த ஆண்டு இதுவரை ரூ. 10 ஆயிரத்து 47 கோடி ரூபாய் வருமான வரி வசூலிக் கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே நாளை ஒப்பிடும் போது 35.27 சதவீதம் அதிகமாகும்.

இந்த நிதி ஆண்டில் மொத் தம் ரூ. 13 ஆயிரத்து 872 கோடி வருமான வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தோம். இப்போது இலக்கை ரூ. 15 ஆயிரத்து 491 கோடியாக உயர்த்தி உள்ளோம். இது கடந்த ஆண்டை விட 43 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மொத்தமே ரூ. 10 ஆயிரத்து 841 கோடி தான் வசூலாகி இருந்தது.

இவ்வாறு அவர் கூறி னார்.

Posted in Collection, Economy, Finance, Income Tax, IT, IT returns, Raids, revenue, Tamil Nadu | Leave a Comment »

Karnataka cities to change their names to be in Kannada

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

கர்நாடகாவில் மேலும் 11 நகரங்களின் பெயர்கள் மாறுகிறது

பெங்களூர், ஜன. 24-

பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் சென்னை என்றும், பம்பாய் மும்பை என்றும், கல்கத்தா கொல்கத்தா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதே போல கர்நாடக தலைநகர் பெங்களூர் என் பதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பெயர் மாற்றத்திற்காக கடிதம் எழுதி இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல அமைச்சகம், அமைப்புகளிடம் பெயர் மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதே போல ரெயில்வே துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது.

பெங்களூர் பெயர் மாற்றுவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்துதான் பெயர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இதே போல மேலும் 11 நகரங்களின் பெயர்களை மாற்றவும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.

  • மைசூர் என்பதை மைசூரு என்றும்,
  • மங்களூரை மங்களூரு என்றும்,
  • பெல்காம் என்பதை பெல்காவி என்றும்,
  • பெல்லாரி என்பதை பல்லாÖì என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

Posted in Bangalore, Belgaum, Bellary, Bengaluru, Changes, City, Kannada, Karnataka, Mangalore, Mysore, names | Leave a Comment »

Income Tax Raids on Vijayganth, Jeppiyaar, AIADMK functionaries

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வீடுகளில் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத சொத்துகள் விவரம்: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 25:நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனைகள் முடியவில்லை எனவும் 4 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

இச் சோதனையின்போது நடிகருக்குச் சொந்தமாக ரூ. 2.50 கோடி சொத்தும் அவரது மனைவியின் பேரில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான சொத்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 நிதி ஆண்டுகளாக அவர்கள் சொத்து வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 45 கோடி முதலீடு: இச்சோதனையின்போது நடிகரின் உறவினருக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளை மூலம் அவரது உறவினர் ரூ. 45 கோடி வரை முதலீடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ரூ. 9 கோடி தொகை செலவிடப்பட்டதற்கான கணக்கும் இல்லாதது தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு நிதி உதவி அளித்துள்ள வங்கிகள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர, அறக்கட்டளை மூலம் ரூ. 1.72 கோடி வரை தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் விவரத்தையும் வருமான வரித் துறையினர் திரட்டி வருகின்றனர்.

கல்வி அறக்கட்டளையிலிருந்து காசோலை மூலம் ரூ. 11 கோடி: அறக்கட்டளையிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 23 வரையிலான காலத்தில் கல்வியாளர் தனது பெயரில் காசோலை அளித்து ரூ. 11 கோடி வரை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பணம் எடுக்கப்பட்டதற்கான காரணத்தை கல்வியாளரால் விளக்க முடியவில்லை. இது தவிர, இந்த அறக்கட்டளையானது வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை.

கணக்கில் காட்டாத பணம் ரூ. 8 கோடி: மற்றொரு கல்வி அறக்கட்டளையில் சோதனை நடத்தியபோது, மாணவர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.8 கோடி பெற்றதையும் அது கணக்கில் காட்டப்படாததையும் அதன் அறக்கட்டளை தலைவர் ஒப்புக் கொண்டார்.

4 இடங்களில் சோதனை தொடர்கிறது: வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை முடிவடையவில்லை என்றும் மேலும் 4 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஓ. பன்னீர் செல்வம், முரளி வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் முரளி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து வெளியான தகவல் தவறு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வங்கிக் கணக்குகள் முடக்கம்: 4 இடங்களில் சோதனை தொடர்கிறது

சென்னை, ஜன. 25: நடிகர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களின் தலைவர்களான ஜேப்பியார் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். அவர்களது வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 14 இடங்களிலும் கோவை, புதுச்சேரி, கடலூர், மதுரை ஆகிய ஊர்களில் 17 இடங்களிலும் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகள், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மற்றும் ஜெயா பொறியியல் கல்லூரிகளின் தலைவர் கனகராஜ் ஆகியோர் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இச் சோதனையை 400 வருமான வரித்துறையினரும் 50 அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களை நடத்தும் ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரது பெயரைக் குறிப்பிடாமல், இச் சோதனை குறித்து வருமான வரித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்வியாளர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 54.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல நடிகரின் (விஜயகாந்த்) சகோதரியின் வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜயகாந்த் வங்கி கணக்குகள் முடக்கப்படும்: வருமான வரித்துறை அதிகாரி தகவல்

சென்னை, ஜன. 24-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு ரூ. 60 கோடிக்கு சொத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.

இந்த சொத்துக்களுக்கு அவர் வரவு-செலவு கணக்கு சரிவர பராமரிக்காதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என்ற விவரமும் இல்லை. வருமானத்தை வைத்து தானே வரி போட முடியும்.

விஜயகாந்தின் வீட்டில் உள்ள நகைகள் மதிப்பு எவ்வளவு என்று கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அவரது கட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் வரவு-செலவு கணக்கே பராமரிக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது போல அவரது என்ஜினீயரிங் கல்லூரியிலும் வரவு-செலவு சரிவர பராமரிக்கப்படவில்லை. ரூ. 10 கோடிக்கு மேல் வரவு-செலவு விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை.

மதுரையில் உள்ள விஜயகாந்தின் அக்காள் விஜயலட்சுமி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 காரட் வைரம் உள்பட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கைப் பற்றப்பட்டுள்ளன.

விஜயகாந்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து 2 கிலோ 300 கிராம் மதிப்புள்ள நகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ளவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் அறக்கட்டளை சொத்து மட்டும் ரூ. 45 கோடி ஆகும். அவரின் பாங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் எங்கெங்கு உள்ளன என்று விசாரித்து வருகிறோம். அவைகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்று நடந்த சோதனைக்கு விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடியை வெளியே இருந்த சிலர் உடைத்து விட்டனர். அதுபற்றி போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

விஜயகாந்தின் முழு சொத்து விவரம், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முழு பட்டியல் நாளை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு என்னை இழுக்கவே இந்த சோதனை: விஜயகாந்த் சொல்கிறார்

சென்னை, ஜன. 24-

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் வீடு, திருமணமண்டபம், மதுரையில் உள்ள அவருக்குச் சொந்தமான ரைஸ்மில் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் அவருடைய உறவினர்களின் வீடுகள், அலு வலகங்கள், கட்சி நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடந்தது.

வருமானவரிச் சோதனை குறித்து நடிகர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வருமான வரிச் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது. என் வீட்டில் இருந்து எந்த ஆவணங் களும் கைப்பற்றப்படவில்லை.

அரசியல் காரணங்களுக் காக இந்த சோதனை நடை பெறவில்லை என்று கூறியதற் காக ஆளும் கட்சியினரின் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர். எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாகள்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.

எங்கள் கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பதற்கே இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை: 12 இடங்களில் அதிரடி வேட்டை

சென்னை, ஜன. 23-

நடிகரும், தே.மு.தி.க. தலை வருமான விஜயகாந்த் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. இங்கு அவரது
அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.

இதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும்
அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.

100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்’ என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

ஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்கினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.

அதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.

விஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான
வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.

திருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது.

இவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதாப என்பது தெரிய வரும்.

Posted in ADMK, AIADMK, Allegations, Andal Azhagar College, Andal Azhagar Kalyana Mandapam, anti-tax, assembly polls, Chennai, Cinema, Coimbatore, DMDK, fraud, Ganesh, Ganesh Kumar, Income Tax, IT, Jaya Engineering College, Jeppiar Group of Educational Institutions, Jeppiyaar, Kanakraj, Leaders, Madras, Madurai, Medical University, Murali, O Paneerselvam, panruti ramachandran, political vendetta, Politics, self-financing college, Tamil Actors, Tamil Nadu, tax evasion, Udumalpet, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Population Explosion – Birth Rates, Demography: Study & Analysis

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

மக்கள்தொகைப் பெருக்கம் — ஒரு சவால்!

இராதாகிருஷ்ணன்

எவ்வளவு வலிமை வாய்ந்த அரசாக இருப்பினும், எந்த அளவிற்கு மக்கள் நலம் பேணுவதாக அது அமையினும், அதன் திட்டங்களை, முயற்சிகளைச் சிதைக்கின்ற தனிப்பெரும் காரணியாக இன்று அமைந்திருப்பது, கட்டுப்படுத்த இயலாத “மக்கள்தொகைப் பெருக்கமே’ ஆகும்.

நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்த மக்கள்தொகை, அன்றிலிருந்து இன்று வரை பெருகியுள்ள அளவு, அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்ற கணிப்பு என இவை மூன்றையும் கருத்தில்கொண்டால், நமக்கு முன்னர் உள்ள பிரச்சினையின் முழு வடிவம் நன்கு புலப்படும்.

1950-க்கும் பிறகு உலகில் அனேக நாடுகள் சுதந்திரம் பெற்ற காரணத்தால் அவற்றில் தோன்றிய “மக்கள் நல அரசுகள்’ இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கின. அறிவியலில் ஏற்பட்ட உன்னத வளர்ச்சியும் அதற்கு உதவியது.

ஆனால் இவற்றின் மாறுபட்ட விளைவால் மக்கள்தொகைப் பெருக்கம் என்றுமில்லாத உச்சத்தை எட்டியது. 1950-ஆம் ஆண்டில் சுமார் 250 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 2000-ம் ஆண்டில் சுமார் 610 கோடியாக உயர்ந்தது.

அதேசமயம், இந்தப் பெருக்கம் அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் பரவலாக மாறுபட்டு, ஒரு சில நாடுகளின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. (நமது மாநிலங்களுக்கிடையேயும் இதே நிலைதான் நிலவியது). குறிப்பாக 33-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷியா மற்றும் ஜப்பான் போன்றவற்றில் “நாமிருவர் நமக்கொருவர்’ என்ற கட்டுப்பாடு காக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு சராசரியாக 0.4 சதவீதத்தோடு நிலைபெற்ற மக்கள்தொகை நாடுகளாக வெற்றி பெற்று தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வளத்தையும், அடிப்படைக் கட்டமைப்பையும் அவை உயர்த்திக் கொண்டன.

ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா, தென்அமெரிக்க நாடுகள் ஆகியவை ஆண்டுக்கு 4 சதவீதத்திற்கும் மேலான மக்கள்தொகைப் பெருக்கத்தால் அவதியுற்று வாழ்க்கை ஆதாரங்களுக்கு வழியில்லாமல் இன்னலுறுகின்றன. உலக மக்கள்தொகை வல்லுநர்களின் கூற்றுப்படி, அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை சுமார் 940 கோடியாக உயரக்கூடும். இந்தியாவைப் போன்று 150 வளரும் நாடுகளிடையே இவ்வுயர்வு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதையும் எந்த வகையிலாவது அதைக் கட்டுப்படுத்தியே தீரவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை வளரும்போது மறுபக்கம் வசதியற்றவர்களின் எண்ணிக்கையும் அதைவிட பன்மடங்கு வளர்ந்து வருகிறது. இதனால் மக்களிடையே முன்னரே உள்ள ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகி, நல்லிணக்கம் குறைகிறது. தீவிரவாதம் தலைதூக்கி வன்முறைகள் உருவாகின்றன.

இன்றுள்ள இந்தியாவின் மக்கள்தொகை 112 கோடி என்பது அடுத்த 50 ஆண்டுகளில் சுமார் 160 கோடியையும் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படப்போகும் நிலைமையை சமாளிக்க இப்போதே திட்டமிடும் அமெரிக்காவை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

நமது திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்குக்கு கூட திறன் பெற்றவை அல்ல. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இன்றைக்கு நாம் பெற்று வருகிற பிரமாண்ட வளர்ச்சியின் காரணமாக எத்தனை சதவீத இந்தியர்கள் அதன் பலனை நேரடியாக நுகர்கின்றனர் என்பதைக் கணக்கிட்டால், நமது பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள சமச்சீரற்ற நிலை மேலும் மோசமடைந்து வருவது எளிதில் உணரப்படும்.

நமது அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வராத மக்கள்தொகைப் பெருக்கத்தால் எதையெல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். வேலைவாய்ப்பு, குறைந்தபட்ச ஊதியம், கல்வி வசதி, வீட்டு வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி, போதுமான உணவுப் பொருள்கள் உற்பத்தி, நிலத்தடி எரிபொருள் ஆதாரம், நிலத்தடி நீர், வேளாண் விளைநிலம், சமுதாய நலத்திட்டங்கள், மாசுபடாத சுற்றுச்சூழல்… போன்ற அனைத்திலும் பற்றாக்குறையையும் இல்லாமையையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

வளர்ந்துவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த முயலும்போது, இருக்கும் இயற்கை வளங்களை மிச்சமில்லாத வகையில் சுரண்டி எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வைத் தகர்த்து வருகிறோம் என்பதையும் உணர வேண்டும்.

நாம் வாழும் பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களையும் கணிக்க முடிந்த நமக்கு, நமது நாட்டில் உள்ள இயற்கை வள ஆதாரங்களைக் கொண்டு நமது மக்கள்தொகை அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கணிக்க முடியாமல் போவது ஏன்? அல்லது அக் கணிப்பில் நாட்டம் செல்லாதது ஏன்?

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டு ஏமாந்து போய்விடக் கூடாது; தனிநபர் சராசரி வருமானத்தின் உயர்வாலும் திசைமாறிவிடக் கூடாது; நம்மிடையே நிலவும் பொருளாதார சமச்சீரின்மையைப் போக்க வேண்டுமெனில், நமது மக்கள்தொகை நிலை பெற வேண்டும்.

அறிவியல் வளர்ச்சியால் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடிந்த நம்மால் பிறப்பு விகிதத்தையும் குறைக்க வலுவான “எண்ணம்’ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் 0.4 சதவீதம் என்ற நிலையை அடைந்தால்தான் மக்கள்தொகை நிலைபெறும். இதற்கு “நாமிருவர் நமக்கொருவர்’ என்ற சிறு குடும்பத்துக்குத் தயாராக வேண்டும்.

இம் முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுச் செயல்பட்ட சீனா, 2050-ல் மக்கள்தொகையில் தனக்குள்ள முதலிடத்தை நம்மிடம் இழந்து, அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தனையோ இடர்பாடுகளில் வெற்றி பெற்ற நாம், மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

(கட்டுரையாளர்: அரசு கல்லூரியில் புள்ளியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்).

Posted in Analysis, Birth Rates, Demography, Economy, Editorial, Finance, Op-Ed, Opinion, Population, Study | 1 Comment »

India’s GDP to be 2nd largest by 2050: Goldman Sachs

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

‘இந்தியப் பொருளாதாரம் பத்து ஆண்டுகளில் உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கலாம்’- முன்னணி வங்கி கருத்து

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை உதவியுள்ளது
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை உதவியுள்ளது

பிரிட்டனை முந்திக் கொண்டு, ஒரு தாசாப்த காலத்துக்குள் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக வந்துவிடும் என்று ஒரு முன்னணி முதலீட்டு வங்கி கூறுகிறது.

தற்போதைய வளர்ச்சி தொடருமானால், 2050 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்காவையும் முந்திக்கொண்டு சீனாவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் உலகில் இரண்டாவது இடத்தையும் பிடித்துவிடும் என்று கோல்ட்மான் சாக்ஸின் அறிக்கை கூறுகிறது.

ஒரு தசாப்த கால மறுசீரமைப்பு இந்தியாவை பெரும் போட்டியில் இறக்கிவிட்டுள்ளதுடன், இந்தியாவின் தொழில்துறை மிகவும் செயற்திறன் உள்ளதாக மாறியுள்ளதாகவும் அந்த வங்கி கூறியுள்ளது.

ஆனால் இந்தியாவின் மிகவும் மோசமான உட்கட்டமைப்பு ஏற்கனவே இந்தப் பொருளாதார வளர்ச்சியுடன் ஒத்துழைக்க முடியாமல் தடுமாறுவதால், இந்தியா பொருளாதாரத்தில் பிந்தங்கக் கூடிய சாத்தியமும் இருப்பதாக டில்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

Posted in 2050, Analysis, Business, Economy, Estimate, Finance, GDP, Goldman, Goldman Sachs, India, Projection, Research, Study | Leave a Comment »

Vat Q&A – Dinamani Solutions on Sales Tax Questions

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி?
டி. அய்யாபிள்ளை, நாகர்கோவில்.

நான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.

சிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.

உங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 சதவீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.

நீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.

இந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.

நுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்?

பாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.

“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in

இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp  என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.

Posted in Accountancy, Accountant, Answers, Biz, Business, Cement, Economy, Farmer, Farming, Finance, Government, India, Input Tax, Output Tax, Personal, professional, Q&A, Questions, Sales Tax, Small Business, State, Tamil Nadu, Tax, TNGST, VAT | 5 Comments »

Plus Two – Sample Question Papers: Tamil First & Second paper

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா

பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா

மேல்நிலை – இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்

பகுதி-1 – தமிழ் – முதல் தாள் தொடர்ச்சி

(செய்யுளும், இலக்கணமும்)

காலம்: 3 மணிமதிப்பெண்: 100

குறிப்பு: (1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையில் அமைதல் வேண்டும்.

(2) வினா யஐ-க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்.

9. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

16*1 = 16

33. “ஒன்றே யென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம்

(அ) அயோத்தியா காண்டம் (ஆ) சுந்தர காண்டம் (இ) யுத்த காண்டம்

34. புறநானூற்றின் திணைகள்

(அ) ஐந்து (ஆ) பதினொன்று (இ) பத்து

35. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று

(அ) குறிஞ்சிப்பாட்டு (ஆ) முல்லைப்பாட்டு (இ) பரிபாடல்

36. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது

(அ) பழமொழி (ஆ) திருவள்ளுவமாலை (இ) நாலடியார்

37. வரி என்பது

(அ) சந்தப் பாடல் (ஆ) இசைப் பாடல் (இ) கலிப் பாடல்

38. தனயை யென்ற சொல்லின் பொருள்

(அ) அம்மா (ஆ) உடன் பிறந்தாள் (இ) மகள்

39. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி

(அ) சதுரகராதி (ஆ) பேரகராதி (இ) அரும்பத அகராதி

40. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்

(அ) மதுரைக் கலம்பகம் (ஆ) நந்திக் கலம்பகம் (இ) காசிக் கலம்பகம்

41. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்

(அ) தேன்மழை (ஆ) குயில் (இ) தென்றல்

42. வடமொழியில் பாரதம் பாடியவர்

(அ) வான்மீகி (ஆ) வியாசர் (இ) காளிதாசர்

43. “”நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர்

(அ) பாரதிதாசன் (ஆ) வாணிதாசன் (இ) பாரதியார்

44. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்

(அ) பாரதியார் (ஆ) பாரதிதாசன் (இ) கம்பதாசன்

45. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற கவிஞர்

(அ) அப்துல் ரகுமான் (ஆ) சுரதா (இ) தாராபாரதி

46. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர்

(அ) சுப்பிரமணியபாரதி (ஆ) சுரதா (இ) கண்ணதாசன்

47. கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்

(அ) கம்பர் (ஆ) வீரமா முனிவர் (இ) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை

48. சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர்

(அ) உமறுப்புலவர் (ஆ) குணங்குடி மஸ்தான் (இ) பனுஅகுமது மரைக்காயர்

ல. கோடிட்ட இடங்களை நிரப்புக

2+2 = 4

49. எண்ணிய எண்ணியாங் ………….. எண்ணியர்

திண்ணியர் ……… பெரின்

50. நன்றி மறப்பது …………. நன்றல்ல

தன்றே மறப்பது ………..

விடைகள் -கேள்வி எண் 29-48

29) உ 30) அ 31) ஆ 32) இ 33) இ 34) ஆ 35) இ 36) ஆ 37) ஆ 38) இ 39) அ 40) ஆ 41) ஆ 42) ஆ 43) இ 44) ஆ 45) அ 46) ஆ 47) இ 48) இ

தமிழ் இரண்டாம் தாள்

(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்)

காலம்: 3 மணி மதிப்பெண்: 80

குறிப்பு: விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினவாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

1. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு (ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளில் மிகாது) விடை எழுதுக.

3*4 = 12

1. இசைத்தமிழ் என்பது யாது? முற்காலத்தும் இக்காலத்தும் விளங்கும் இசைத்தமிழ் நூல்கள் யாவை?

2. நாடு என்னும் பற்றால் சமரசத்தை இழப்பது பற்றித் திரு.வி.க. உரைப்பன யாவை?

3. கவிதைக்குரிய நல்லியல்புகளைக் கம்பன் உரைக்குமாறு யாங்ஙனம்?

4. பழந்தமிழ் மக்கள் பெரிய முயற்சியையே மதித்து ஒழுகினர் என்பதனை விளக்குக.

5. செம்மொழியின் இலக்கணம் யாது? அவ்விலக்கணம் தமிழ்மொழியின்பால் பொருந்தியிருப்பதனை விளக்குக.

2. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு (ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளில் மிகாது) விடை எழுதுக.

3*4 = 12

6. ஆவின் சிறப்புகளாகப் பாவாணர் விதந்துரைப்பன யாவை?

7. “”செல்வம் நிலைபேறு உடையதன்று” என்பதனை

நாலடியார் எங்ஙனம் நயம்பட நவில்கின்றது?

8. ஒருபடி முன்னேற்றம் என்று மு.வ. உரைப்பது யாது?

9. இலக்கியங்களில் காணப்படும் கட்டடக் கலைச் செய்திகளைக் கூறுக.

10. “ஆயன்’ என்ற அரசனைக் குறிக்கும் “கோ’ எனப்பட்டது என்பதை விளக்குக.

3. பின்வரும் வினாக்களுடன் ஏதேனும் ஒன்றனுக்கு (இருபது வரிகளில் மிகாது) விடை எழுதுக.

1*6 = 6

11. நாடு, சமயம், சாதி இவற்றை அடிப்படையாகக் கொண்டு சமரச உணர்வினின்று மாறுபடுதல் தவறாம் என்று திரு.வி.க. வாதிடுவதனை விளக்குக.

12. நீதி கூறும் போதும் நயம்படக் கூறியவர் திருவள்ளுவர் என்பதனைச் சான்றுகளுடன் விளக்குக.

Posted in Answers, Exam, Plus Two, Question Papers, Questions, Sample, Second paper | Leave a Comment »

Cauvery Delta Climate changes & Environmental Analysis – Study, History & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

காவிரி டெல்டாவின் பரிணாமமும் பல்லுயிர்ப் பெருக்கமும்

பாலசுப்ரமணியன்

நாகரிகத்தின் உச்சியில் நின்று கொண்டுள்ள மனிதன், நவீனமயமாதல், நகரமயமாதல் போன்ற செயல்களால் இயற்கைத் தாவரங்களையும், விலங்குகளையும் சிறிது சிறிதாக அழித்து வருகிறான்.

உலக அளவில் இச்செயல் தொடர்ந்து நடைபெறுவதால், பல தாவர மற்றும் விலங்குச் சிற்றினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. உலகிலுள்ள 12 மிக முக்கிய உயிரின வாழிடங்களில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் இயற்கையையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

மற்ற டெல்டாக்களுடன் ஒப்பிடும்போது காவிரி டெல்டாவின் புவியியல் கூறு, சூழ்நிலை அமைப்பு, பரிணாம வளர்ச்சி ஆகியவை முற்றிலும் மாறுபட்டது.

தற்போது காணப்படும் காவிரி டெல்டா இயற்கையாலும், மனிதனாலும் உருவாக்கப்பட்டு புதியதாகத் தோன்றி, வளர்ச்சியடைந்த ஒரு பகுதியாகும்.

கால அட்டவணையின்படி சுமார் 315 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி டெல்டா பகுதி கடல் நீரால் சூழப்பட்டிருந்தது எனத் தெரிகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை மாற்றங்களால் கடல் நீர் குறைந்து, உவர் மண் நிரம்பிய சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. மேலும் காவிரி ஆறு, சில இயற்கை மாற்றங்களால் தனது போக்கை கிழக்கு மற்றும் தென்கிழக்காக மாற்றிக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வண்டல் மண்படிவுகள் சிறிது சிறிதாக ஏற்பட்டு, தற்போதைய டெல்டா உருவானது. ஆயினும் காவிரி டெல்டாவின் தென்கிழக்குப் பகுதிகளான முத்துப்பேட்டை, வேதாரண்யம், கோடியக்காடு போன்றவற்றில் தற்போது சதுப்பு நிலங்கள் உள்ளன. விவசாய முன்னேற்றத்துக்காக தற்காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனக் கால்வாய்களும், சங்ககால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கல்லணை மற்றும் கல்லணைக் கால்வாயும் ஆங்கிலேயர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட நரசிங்க காவிரி, வடவாறு, உய்யக்கொண்டான் கால்வாய், முல்லையாறு விரிவு, மேல் மற்றும் கீழ் அணைக்கட்டுகள் போன்றவை இன்றைய புதிய காவிரி டெல்டா உருவானதற்கு முக்கியக் காரணமாகும்.

பல்லுயிர் வகை: இந்த டெல்டாவில் கடற்கரையை ஒட்டிய ஒரு சில சதுப்பு நிலக் காடுகளும், கோடியக்காட்டில் உள்ள வறண்ட பசுமை மாறாக் காடும் சில முட்புதர் காடுகளையும் தவிர வேறு குறிப்பிடத்தக்க காடுகள் ஏதும் இல்லை.

தற்போது ஆற்றுப்படுகைகளில் அரசின் தீவிர முயற்சியால் தோன்றியுள்ள தேக்கு, டால்பர்ஜியா சிசு போன்ற மரங்களின் சமூகக் காடுகள் ஓரளவு பசுமைத் தாவரங்களை அதிகரித்துள்ளன.

எங்கும் பரந்து விரிந்து, பச்சைக் கம்பளம் போல் நெல்வயல்கள் நிறைந்து காணப்படும் மருத நிலமான காவிரி டெல்டாவில் பல்வேறு வகையான பறவையினங்கள், பூச்சியினங்கள், விலங்குகள் மற்றும் மருத்துவக் குணமுள்ள பல தாவரங்கள் காணப்படுகின்றன.

ஆனால் தற்காலத்தில் தொடர்ச்சியாக விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும், இங்குள்ள நீர் மற்றும் மண் மாசுபாட்டைத் தோற்றுவிக்கின்றன.

மேலும் அனைத்து ஆறுகளிலிருந்தும் இன்று மணல் முற்றிலுமாக எடுக்கப்பட்டு, அது டெல்டாவின் பல பகுதிகளில் வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறிவிட்டன. மணல் எடுக்கப்பட்டதால் அவ்விடங்கள் அனைத்திலும் அடர்த்தியாக பரவியுள்ள காட்டாமணக்கு தாவரமானது, ஆற்றில் வரும் சிறிதளவு நீருக்கும் வழிவிடாமல் அடைத்துக் கொண்டு பாசனத்திற்குத் தடை ஏற்படுத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி, நிலத்தடி நீர் பற்றாக்குறை, மழையின்மை காரணமாக பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. நன்செய் நிலங்கள் இவ்வாறு மாறிவிட்ட நிலையில், புன்செய் நிலங்களிலோ பூத்துக் குலுங்குவது காட்டுக்கருவை எனப்படும் வேலிக்காத்தான் தாவரம். இது காவிரி டெல்டாவின் பல பகுதிகளில், தரிசு நிலங்களில், தன்னிச்சையாகப் பரவியுள்ளது.

வேலிக்காத்தான் தாவரம் வளரும் இடங்களில், மற்ற தாவரங்கள் வளர்வதைத் தடை செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனால் இந்தப் பகுதிகளில் இயற்கையாக வளரும் பல மருத்துவக் குணமுள்ள தாவரங்கள் வளர முடியாமல் அழிந்து வரும் அபாயம் உள்ளது. உதாரணமாக கொடி வகையைச் சார்ந்த ஆடுதின்னாப்பாலை, வேலிப்பருத்தி எனப்படும் உத்தாமணி, பிரண்டை, செங்கலை, கரு ஊமத்தை, பேய் சுரை, ஓரிதழ் தாமரை… போன்றவை இன்று தன்னிச்சையாக வளர்வது குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் வேலிகளில் நடப்பட்டு வந்த நாட்டுத் தேக்கு எனப்படும் பூவரசு மரங்களும் குறைந்துவிட்டன.

ஒருகாலத்தில் இந்த டெல்டாவில் தோப்புகளாகக் காணப்பட்ட இலுப்பை மற்றும் புளிய மரங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் பல புளிய மரங்கள் இன்று சாலைகளை அகலப்படுத்தும் பொருட்டு வெட்டப்பட்டு விட்டன. மருத்துவக் குணமுள்ள மருத மரங்களோ, எங்காவது ஒரு சில இடங்களில் இருந்தால் உண்டு.

இன்று இப்பகுதிகளில் நவீன விவசாயக் கருவிகளாலும், குளிரூட்டப்பட்ட பால் விற்பனையாலும், எருதுகள் மற்றும் கறவை மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் இயற்கையான தொழு உரம் வயல்களுக்குப் போதுமான அளவு கிடைக்காமல், செயற்கை உரங்கள் இடப்படுகின்றன.

மழைக் காலங்களில் காணப்படும் “செண்பகம்’ எனப்படும் காக்கை இனத்தைச் சார்ந்த பறவைகளை தற்போது அதிகமாகக் காண முடிவதில்லை. நகரமயமாக்கலால் பல பாசனக் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டு, மழைநீர் செல்லும் பாதைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சமுதாய நிலங்களும், குளங்களும், சிற்றோடைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றை அரசு கையகப்படுத்தி, தகுந்த இயற்கைச் சூழ்நிலையை உருவாக்க வழிகோல வேண்டும்.

நீர் நிலைகளில் பல்கிப் பெருகிவிட்ட வெங்காயத் தாமரை, காட்டாமணக்கு போன்ற இடர்தரும் தாவரங்களைக் களைந்து சீரான நீர் ஆதாரங்களைப் பல்லுயிர் பெருக உதவும் வகையில் மாற்ற வேண்டும்.

இனியாவது, ஒவ்வொரு பகுதியிலும் இயற்கையாக இருந்து வரும் தாவரங்களையும் விலங்குகளையும் அழியாமல் காப்போம்.

காவிரி டெல்டாவின் பசுமையைக் காக்க பயன் தரும் மரங்களை அனைத்துப் பகுதிகளிலும் உயிர் பெறச் செய்வோம். மாசுபாடற்ற விவசாய முறைகளைக் கையாண்டு, பல்லுயிர்கள் இந்நிலத்தில் பெருக வழி செய்வோம்!

Posted in Analysis, Cauvery, Changes, Chozhas, Climate, Delta, Environment, Geography, Global Warming, Kavery, Kaviri, Kodiyakaadu, Kodiyakkaadu, Kodiyakkadu, Mullai River, Muthupettai, Muthuppettai, Narasinga Cauvery, Opinion, Pollution, River, Sea, Study, Urbanization, Uyyakkondaan, Uyyakondaan, Vadavaaru, Vedharanyam, Water | Leave a Comment »

‘I have no difference of opinion with writer Jeyaganthan’ – Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

ஜெயகாந்தனுடன் எனக்கு முரண்பாடு கிடையாது: முதல்வர்

சென்னையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை, ஜன. 24:எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கு ஒருபோதும் முரண்பாடு ஏற்பட்டதே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கிய “கலைஞர் விருது’ எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவற்றை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியது:

எனக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த பகை தற்போது ஓடி ஒளிந்துவிட்டது போல பலரும் பேசினர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே அன்றி முரண்பாடு ஏற்பட்டது கிடையாது. அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பாலும் தண்ணீரும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் அதைப் பிரிப்பது கடினம். இதுதான் வேறுபாடு. ஆனால் எங்களுக்குள் தண்ணீரும் எண்ணெயும் போல முரண்பாடு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

1980-ம் ஆண்டு எனது பிறந்த நாளன்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். 1980-ம் ஆண்டிலேயே நண்பர்களாக இருந்தவர்கள், இப்போதா மாறியிருக்கப் போகிறோம். ஜெயகாந்தனின் எழுத்துகளை எந்த நிலையிலும் நேசிப்பவன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் காதலிப்பவன்.

தற்போது நடைபெறும் சட்டப் பேரவை தொடரிலே, ஆளுநர் உரையில் கூட காலத்துக்கேற்ற வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் முழுமையாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

இதேகருத்தை ஜெயகாந்தன் தனது நூலான “வாக்குமூலத்தில்’ பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார்.

“”மத்திய அரசு யாருடைய பிரதிநிதி. மாநிலங்களுக்கு சுய நிர்ணய சாசனம் இல்லாத நிலையில் அது வெறும் அடிமைச் சாசனமே” என்று குறிப்பிட்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாக ஒன்றுபடக்கூடிய எழுத்து மற்றும் கருத்துகளை எப்போதும் ஆணித்தரமாக வெளிப்படுத்தக் கூடியவர் ஜெயகாந்தன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது, அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கியவர் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவர் இந்த விருதை ஏற்றுக் கொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே உள்ள நட்பு புரியும் என்றார் கருணாநிதி.

நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம. வீரப்பன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.

Posted in Jeyagandhan, Jeyaganthan, Jeyakanthan, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, RM Veerappan, Silamboli Chellappan, Silamboli Sellappan | Leave a Comment »

Police officer’s integrity – Refuses to corrupt practice by not accepting five lakhs

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்க மறுத்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு

மும்பை, ஜன. 24: ஆவணங்களை அழித்தால் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்ற நிலையிலும் நேர்மையாக நடந்துகொண்ட மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டரை மகாராஷ்டிர துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் பாராட்டி அவருக்கு ரூ.10,000 பணமுடிப்பும் வழங்கினார்.

ஆஸôத் மைதான் போலீஸ் நிலையத்தில் துணை இன்ஸ்பெக்டராக இருப்பவர் மகேந்திர ஜன்ராவ். இவர் குட்கா நிறுவனம் ஒன்றின் மீதான வழக்கை விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் ரயில்வேயில் போலீஸôக பணிபுரியும் சைரஸ் தாவியர்வாலா என்பவர் குட்கா தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து கிஷோர் வத்வானி, அனில் சர்மா ஆகிய இருவரை ஜன்ராவிடம் அழைத்து வந்தார்.

அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்தால் ரூ.5 லட்சம் லஞ்சமாகத் தருவதாக ஆசை காட்டினர்.

ஆனால், ஜன்ராவ் அதை ஏற்க மறுத்தார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

“குட்கா நிறுவனம் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரயிலில் இந்தூருக்கு சென்று கொண்டு இருக்கும்போது, போரிவிலி ரயில் நிலையம் அருகே அவை தொலைந்து விட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கும்படியும், அந்த ஆவணங்களை அழித்துவிடும்படியும் ஜன்ராவுக்கு ஆலோசனை வழங்கினோம்’ என்று கைது செய்யப்பட்ட ரயில்வே போலீஸ் தாவியர்வாலா கூறினார்.

Posted in 5 Lacs, Azad Maidan, Azad Maidhan, Corruption, five lakhs, Good, Gutkha, Honesty, Incident, India, maharashtra, Mahendra Janrao, Money, Mumbai, Pan, Police, RR patil | Leave a Comment »

‘Lalitha’s Paattukku Paattu – Kushbu TV Advertisement should be banned’

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

குஷ்பு நடிக்கும் விளம்பரத்தை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் புகார்

சென்னை, ஜன.24: நீதித்துறையை அவமதிக்கும் நோக்கில் டிவியில் வெளியாகும் தங்க நகை விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் டி. ரவிகுமார் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் லலிதா ஜுவல்லரியின் விளம்பரம் இடம் பெற்றது. அதில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டு லலிதா ஜுவல்லரியின் சலுகைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். அதைக் கேட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீரென காணாமல் போவது போல (நீதிமன்றமே காலியாக இருப்பது போல) விளம்பரக் காட்சி இடம் பெறுகிறது.

இந்த விளம்பரம் நீதித்துறையையும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்த விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வழக்கறிஞர் ரவிகுமார் கூறியுள்ளார்.

Posted in Ads, Advertisement, Advt, case, Court, Gangai Amaran, Gangai Amaren, Judge, Justice, Kushboo, Kushbu, Lalitha, Lalitha's Paattukku Paattu, Law, Lawsuit, Paattukku Paattu, Sun TV, TV | Leave a Comment »