Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 17th, 2007

LTTE’s cocine farming video shown to the reporters by Sri Lanka Defence Ministry

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

விடுதலைப்புலிகள் மீது இராணுவம் குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகள் மீது இராணுவம் குற்றச்சாட்டு(ஆவணப்படம்)

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் இன்று செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் இந்த முகாமை இலங்கைப் படையினர் கைப்பற்றிய போது அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததாகவும், அத்தோடு அங்கு அரச சார்பற்ற சில நிறுவனங்களின் பொருட்கள் காணப்பட்டதாகவும் கூறிய இலங்கை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லை அவர்கள், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இப்படியான அமைப்புகளின் இலட்சினை பொறித்த சில பொருட்கள், அந்த முகாமில் காணப்படும் வீடியோ படங்களும் இன்று செய்தியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

Posted in Ambaarai, Ambarai, Cocaine, defence, drug trafficking, Drugs, Eezham, Ganja, Kanja, Kehelia Rambukwella, LTTE, Smuggling, Sri lanka, Viduthalai Puligal, Viduthalai Pulikal | 2 Comments »

British Asians campaign for Shilpa – Racism row: UK police to probe emails

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

‘ஷில்பா ஷெட்டி மீது இனவாத ஏளனம்’- இந்தியா கண்டனம்

திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி
திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி

பிரிட்டனில் செலிபிரிட்டி பிக் பிரதர் எனப்படும் யதார்த்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்குபெறும் மும்பையைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டி இனப்பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய அரசு விசாரித்து வருவதாகக் கூறிய இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒருவர்- ஷில்பா ஷெட்டியின் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டதால், அவரை இந்தியர் என அழைத்தார்.

இந்த நிகழ்ச்சி குறித்து பிரிட்டனிலுள்ள ஆயிரக் கணக்காணவர்கள் புகார் கூறியுள்ளார்கள்.

அதேவேளை இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

இது குறித்து பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேரின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கேட்ட போது, தாம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்றும், ஆனால் நிறவெறிக் கொள்கை என்பது எந்த வகையில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு குவிகிறது- உரிய நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்

புதுதில்லி, ஜன.18: “பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்ட இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெருமளவில் ஆதரவு குவிகிறது. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தில் ஒளிபரப்பாகி வரும் “சேனல் 4′ டி.வி.யின் பிரபல நிகழ்ச்சி “பிக் பிரதர்’. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் ஓர் தனியறையில் சில நாள்கள் தங்கவைக்கப்படுவர்.

அங்கு அவர்களுடைய தினசரி வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதையும், சக போட்டியாளர்களுடன் எவ்வாறு பழகுகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக ஒளிபரப்புகிறார்கள்.

ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கும் நேயர்கள் ஓட்டளிப்பார்கள்; அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு இறுதி வரை தாக்குப்பிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பாக பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். இதற்காக அவர் சுமார் சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

அதில் ஷில்பா ஷெட்டியை அவருடைய சக போட்டியாளர்களில் ஒருவர் “நாய்’ என்றும், மற்றொருவர் “அருவருப்பானவர்’ என்றும் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ஷில்பா கண்ணீருடன் வெளியேறினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான டி.வி. நேயர்கள் டி.வி. நிர்வாகத்துக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் அமைப்புக்கும் புகார் தெரிவித்தனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இன பாகுபாடு காரணமாகவே ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

இங்கிலாந்து அரசு நடவடிக்கை: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.கீத் வாஸ் இப்பிரச்சினையை லண்டன் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனமும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்திய அரசு நடவடிக்கை: இந்தியா இனம், மொழி என்ற பாகுபாடின்றி செயல்பட்டு வருவது உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2-ம் இடத்தில் ஷில்பா: இந்நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர்களுடைய ஓட்டின் அடிப்படையில், இந்தப் போட்டி நிகழ்ச்சியில் தற்போது ஷில்பா ஷெட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். காமெடி நடிகை கிளேயோ ரோக்காஸ் முதலிடத்தில் இருக்கிறார். ஷில்பா ஷெட்டி முதலிடத்தைப் பெறுவார் என்று பல இங்கிலாந்து பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்த எதிர்ப்பு வலுக்கிறது

பிரிட்டனில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் கலந்துகொள்ளும், இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடன் கூட கலந்துகொள்பவர்களால், இனரீதியாக ஏளனம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் முறைப்பாடுகள் குவியும் அதே வேளையில், அந்தத் தொடருக்கான விளம்பர அனுசரணை வழங்கிய நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

ஒரு மாளிகையில் வைக்கப்பட்டு, ஒளித்து வைத்த கமெராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும், ‘பிக் பிரதர்’ என்னும் இந்த யதார்த்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சக நடிக, நடிகைகளின் நடாத்தை, மீண்டும், மீண்டும் தமக்கு கவலையைத் தந்துள்ளதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய கார் போன் வேர்ஹவுஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்
பிக் பிரதர் நிகழ்ச்சியில் சக நடிகர் ஒருவருடன்

இந்த நடிக, நடிகர்களின் நடாத்தை விரும்பத்தக்கதாக இல்லை என்று கூறும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆனால் நடிகை ஷில்பா கூட இந்த நடிகைகளின் நடத்தை இனவாதம் என்பதைவிட, கலாச்சார மற்றும் குடும்பப் படிநிலை வேறுபாடே அதற்குக் காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுண் கூட அங்கு இந்தியத் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி

லண்டன், ஜன. 19-

லண்டனில் உள்ள `சேனல் -4′ என்று நிறுவனம் `பிக்பிரதர்’ என்ற டெலிவிஷன் நிகழ்ச் சியை ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு பிரபல கலைஞர்களுடன் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் கலந்து கொண்டார். அப்போது ஷில்பா ஷெட்டியை மற்ற கலைஞர்கள் அவமதித்ததும், இனவெறியை தூண்டும் வகையில் அவரை திட்டியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவமதிக்கப்பட்ட ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் இது சர்ச்சையை எழுப்பியது. ரசிகர்களிடம் இருந்து இணைய தளம் மூலம் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி அடித்துள்ளார்.

`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.

இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4′ டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் “நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை” என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.

ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய டி.வி.நடிகை நீக்கம்: கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டார்

லண்டன், ஜன. 20-

இங்கிலாந்தில் சானல் 4 எனும் தொலைக்காட்சி `பிக் பிரதர்’ என்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இதில் உலகின் 5 பிரபலங்கள் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த அறைக்குள் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? சக போட்டியாளர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். நேயர்களும் ஓட்டுப்போடுவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக நீக்கப்பட்டு கடைசி வரை தாக்குப் பிடிப்பவருக்கு கோடிக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பிரபல இந்தி நடிகை ஷில்பாஷெட்டி பங்கேற்றுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளரான டி.வி. நடிகை ஜேக் கூடி தரக் குறைவாக பேசி திட்டினார். அதோடு ஷில்பாவை `நாய்’ என்றும் கூறினார். இதைக் கேட்டு ஷில்பா ஷெட்டி கதறி அழுதார்.

ஷில்பாஷெட்டியை நடிகை கூடி திட்டியபோது இங்கிலாந்து முன்னாள் அழகி டேனியல் லாயிட் சிரித்தார். அதோடு ஷில்பாவை பார்த்து `அருவருப்பானவர்’ என்றார். இது நேயர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷில்பா ஷெட்டியிடம், ஜேக் கூடியும், டேனியல் லாயிட்டும் இனவெறியுடன் நடந்து கொண்டதாக தெரிய வந்தது.

இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் கண்டனம் தெரிவித்து இ-மெயில் அனுப்பினார்கள். ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் இருந்து குரல் எழுந்ததால் பிக்பிரதர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அரண்டு போனார்கள்.

இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்ததால் இது அரசியல் ரீதியான பிரச்சினையாக மாறியது. இன வெறியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

`இனவெறி’ முத்திரை குத்தப்பட்டதால் ஜேக்கூடி, டேனியல் லாயிட்டுக்கு விளம்பரத்துக்கு உதவிய நிறுவனங்கள் விலகிக் கொண்டன. அவர்கள் `மாடலிங்’ செய்திருந்த பொருட்களின் விற்பனைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

நிலமை மோசமாவாதை உணர்ந்த ஜேக்கூடி, டேனியல் லாயிட் இருவரும் நேற்று பணிந்தனர். ஷில்பா ஷெட்டியிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அதோடு இருவரும் ஷில்பாவை கட்டித் தழுவி கண்ணீர் மல்க அன்பை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கிடையே போட்டி விதிகளின்படி ஷில்பா, ஜேக் கூடி இருவரில் ஒருவரை நீக்க தொலைக்காட்சி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 82 சதவீத நேயர்கள் டி.வி. நடிகை ஜேக்கூடிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர் `பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து இன்று நீக்கப்பட்டார்.

ஷில்பாஷெட்டி நேயர்கள் ஓட்டெடுப்பில் அதிக ஆதரவுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நேற்றிரவு இந்த முடிவு விபரம் அறிவிக்கப்பட்டது.

தனக்கு `கல்தா’ கொடுக்கப்பட்டதை அறிந்ததும் டி.வி. நடிகை ஜேக்கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதார். `பிக் பிரதர்’ அறையில் இருந்து வெளியில் வந்த அவரிடம் பழைய காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதில் அவர் ஷில்பாவை முறைத்தப்படி திட்டும் காட்சிகளும் இருந்தன.

அதை கண்டதும் ஜேக்கூடி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தால் உலகமே தன்னை இனவெறி பிடித்தவர் என்று முத்திரை குத்தி இருப்பதை தெரிந்து மனம் உடைந்து போனார்.

கண்ணீர் மல்க நின்ற அவரை பிக்பிரதர் அமைப்பாளர்கள் டைரி அறைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் ஷில்பாவை பட்டப்பெயர் சொல்லித்தான் பேசினேன். இதை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதால் என்னை உலகமே இனவெறி பிடித்தவள் என்று சொல்லி விட்டது.

எல்லாரும் நினைப்பது போல நான் இனவெறி கொண்டவள் அல்ல. நான் அப்படி வளர்க்கப்படவும் இல்லை. இனவெறியுடன் நான் பேசவே இல்லை. இது ஷில்பாவுக்கு நன்றாக தெரியும்.

நான் இனவெறி பிடித்தவள் அல்ல என்று ஷில்பாவே கூறி உள்ளார். இது எனக்கு ஆறுதலாக உள்ளது. ஆனால் பத்திரிகைகள் என்னை ஒரு இன வெறியாளன் போல காட்டி விட்டனர்.

நேயர்கள் என்னை பிடிக்காமல் வாக்களித்திருந்தால் அதை ஏற்று இருப்பேன். ஆனால் தவறாக காரணம் காட்டி என்னை `பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டனர். இப்படி வெளியேற்றப்படுவது எனக்கு கவலை தருகிறது.

ஷில்பாவை நாங்கள் `அப்பளம்‘ என்றும் `ஆங்கிலம் பேச தெரியவில்லை’ என்றும் சாதாரணமாகத்தான் சொன்னோம். ஆனால் அதுவே எனக்கு வினை ஆகி விட்டது.

நான் பேசிய காட்சிகளை பார்த்தபோது என் வார்த்தைகளால் கவுரவம் இல்லாமல் நடந்து கொண்டதாக நினைக்கிறேன். ஆனால் தவறு செய்யவில்லை என்று ஒரு கட்டத்தில் நியாயப்படுத்தினேன். ஆனால் இதை இனவெறி என நினைத்து விட்டனர். எனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பிக்பிரதர் மூலம்தான் என் வாழ்க்கை 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாசமானது. இப்போது அதே பிக்பிரதர் மூலம் என் வாழ்க்கை முடிந்து விட்டது.

இவ்வாறு டி.வி.நடிகை ஜேக்கூடி கூறினார்.

Pap

Posted in abuse, Acting, Anand Sharma, Appalam, Big Brother, British Police, Channel 4, England, Gameshow, Indian, London, Minister of State for External Affairs, Paki, Pakistani, Papad, racism, Racist, Rating, Reality Show, Shilpa Shetty, South Asia, Stage, TV, UK | Leave a Comment »

Court orders probe into Mallika Sherwath’s ‘dirty dancing’

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்: நடிகை மல்லிகா ஷெராவத் மீது போலீஸ் விசாரணை

வதோதரா, ஜன.17-

கடந்த டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு, புத்தாண்டை வரவேற்பதற்காக மும்பையில் உள்ள மாரியட் ஓட்டலில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

இந்த நடனம் ஆபாசமாக இருந்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பரோடா பார் அசோசியேஷன் தலைவர் நரேந்திர திவாரி, வதோதராவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகை மல்லிகா ஷெராவத் ஆடிய ஆபாச நடனம் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை நானும், என் குடும்பத்தினரும் பார்த்தோம். அதில் மல்லிகா ஷெராவத்தின் உடலில் சில பாகங்கள் மட்டுமே ஆடையால் மறைக்கப்பட்டு இருந்தன. அதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து டி.வி.யை அணைத்து விட்டோம். மல்லிகா ஷெராவத் நடனம், இந்திய கலாசாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.

இந்த ஆபாச நடனத்தை பார்க்க வந்தவர்களிடம் ஓட்டல் உரிமையாளர் பெரும் பணம் வசூல் செய்துள்ளார். மல்லிகா ஷெராவத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆபாச நடன நிகழ்ச்சி, விபசார தடுப்பு சட்டத்தின் கீழும், இ.பி.கோ. 366, 244 ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் ஆகும். ஆகவே, மல்லிகா ஷெராவத், ஓட்டல் அதிபர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு டி.வி.வைத்யா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு வதோதரா நகர போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 30 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Posted in 244, 366, Adult entertainment, Baroda Bar Association, Bollywood actress, case, class action, Court, Culture, Fan Club, Fanatics, Glamour, Hind Rakshak Samiti, Hindu, Hinduism, Immoral Trafficking (Prevention) Act 1956, Indian Penal Code, IPC, J W Marriot Hotel, Law, Lawsuit, Litigation, Mallika Sheravat, Mallika Sherwat, Mallika Sherwath, Narendra Tiwari, new year's eve, non bailable warrants, Party, Performance, Sanskruti, Sardar Patel Group, Sayagigunj, Semi-nude, Sexy, Striptease, XXX | Leave a Comment »

Movie Producer ALS Kannappan passes away

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

படஅதிபர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் மரணம்

சென்னை, ஜன.17-

பிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

கனவுகள், கற்பனைகள், துணிச்சல், இயக்கம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

  • சாரதா,
  • திருடாதே,
  • கந்தன் கருணை,
  • கருப்பு பணம் உள்ளிட்ட பல படங்களை ஏ.எல்.எஸ்.நிறுவனம் தயாரித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்த ஏ.எல்.எஸ்.கண்ணப்பனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், லாவண்யா, டாக்டர் யாமினி, ஐஸ்வர்யா என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராயப் பேட்டையில் உள்ள வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் தகனம் நாளை நடக்கிறது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Posted in ALS Kannappan, Kandhan Karunai, Karuppu Panam, Movie Producer, Saradha, Tamil Cinema, Tamil Film, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres | Leave a Comment »

Saddam Hussein’s sand sculpture in Orissa Puri beach

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

சதாம்உசேனின் மணல் சிற்பம்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம்உசேன் தூக்கிலிடப்பட்டார். இதை நினைவு கூறும் வகையில் ஒரிசா பூரி கடற்கரையில் அவரது மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

Posted in Beach, Capital punishment, Death, Fate of Saddam, Hanging, Memorial, Orissa, Puri, Saddam Hussein, sand sculpture | Leave a Comment »

Abhishek Bachan – Aiswarya Rai Marriage Details: When, where, who?

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

அபிஷேக்-ஐஸ்வர்யா ஜெய்ப்பூரில் திருமணம்: 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம்

ஜெய்ப்பூர், ஜன. 17-

பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஏற்கனவே பச்சைக் கொடி காட்டப்பட்டது. அனைவ ராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் கடந்த 14-ந் தேதி இரவு நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது திருண தேதி முடிவு செய்யப்படவில்லை.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந்தேதி திருமணம் நடை பெறலாம் என்று ïகங்கள் வெளியாகி உள்ளது.

அபிஷேக்-ஐஸ்வர்யாராய் திருமணமோ அல்லது திருமண பார்ட்டியோ ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறலாம் என்று ïகங்கள் எழுந்துள்ளன. பாரம் பரியமிக்க ஜெய்ப்பூர் அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் ராஜஸ்தான் சென்று திருமணம் நடைபெறும் இடம் குறித்து பேசி வருகிறார்கள். சமூக அந்தஸ்தில் அமிதாப்பச்சன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதனால் அவரது மகன் திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள, முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், இந்தி நடிகர், நடிகைகள் என 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஜெயா பச்சன் மகன் அபிஷேக்குடன் ராஜஸ்தான் சென்றார். அவர் ஜெய்ப்பூர் அரண்மனையின் முன்னாள் ராணி பத்மா தேவியை சந்தித்து பேசினார். இதனால் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடை பெறலாம் என்று கருதப்படுகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை நடத்த அமிதாப்பச்சன் விரும்புகிறார். முக்கிய வி.ஐ.பி.க்கள் வருவதால் பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும் என்ற கவலையும் அவருக்கு உள்ளது என்று ஜெய்ப்பூர் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் உதய்பூரிலும் திருமண பார்ட்டி நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஜகா மந்திர் கார்டன் புகழ் பெற்றது. இங்கு 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில்தான் இட வசதி உள்ளது. உதய்பூரில் நடிகை ரவீணாதண்டன் – தொழில் அதிபர் அனில் தாண்டனி திருமணம் 2004-ம் ஆண்டும், இந்தி நடிகர் விக்ரம் சாவல் திருமண பார்ட்டி 2006-ம் ஆண்டிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Attendance, Dates, Engagement, Gossip, Invites, Jaipur, Kisu Kisu, Marriage, Reception, Rumor, Venue | Leave a Comment »

Two-tier service tax structure in Budget ’07

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

சேவை வரி சுமை

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய அரசு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் சேவை வரியை மேலும் பல சேவைகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இப்போது 12 சதவீதமாக உள்ள சேவை வரியை 14 சதவீதமாக உயர்த்தவும் அவர் உத்தேசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொருள்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மீது மத்திய கலால் தீர்வை விதிப்பது நமது நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். சேவைகள் மீது வரி விதிக்கப்படாமல் இருந்தது. 1994-ம் ஆண்டில் இப்போதைய பிரதமர் மன் மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்தபோது சேவை வரி முதல் முறையாக தொலைபேசி உள்பட மூன்று சேவைகள் மீது விதிக்கப்பட்டது. பின்னர் இந்த வரியானது படிப்படியாக பல்வேறு சேவைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

அதே சமயத்தில் ஆரம்பத்தில் 5 சதவீதமாக இருந்த இந்த வரி, படிப்படியாக உயர்த்தப்பட்டு, இப்போது 12 சதவீத அளவில் உள்ளது. கல்வி வரியையும் சேர்த்தால் இது 12.24 சதவீத அளவில் இருக்கிறது.

தொலைபேசிக் கட்டணம் மீது விதிக்கப்படுகிற சேவை வரி மூலம் மட்டும் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. நாட்டில் செல்போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆகவே இதன் மூலம் இயல்பாக மத்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் பல சேவைகள் மூலமும் மத்திய அரசுக்கு வரி விகிதத்தை உயர்த்தாமலேயே கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது. உதாரணமாக சேவை வரி மூலம் 1994-95-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.410 கோடி. இந்த வருமானம் 2004-05-ம் நிதியாண்டில் ரூ.14 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2006-07-ம் ஆண்டில் ரூ.34 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எந்த வரியானாலும் இறுதியில் அதைச் செலுத்துபவர்கள் சாதாரண மக்களே. சேவை வரி வருமானத்தை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த மத்திய நிதி அமைச்சர் விரும்புவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இன்று கிராமப்புறங்களிலும் எளிய மக்கள் செல்போன் வைத்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் சேவை வரியாக மத்திய அரசுக்கு செலுத்தும் தொகை ஏராளம். அவர்கள் மீது மேலும் வரிச்சுமையை ஏற்றுவது சரியல்ல. எனவே, சேவை வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பதே பொருத்தமாக இருக்கும்.

அடுத்த மாத பட்ஜெட்டில் வழக்கறிஞர்கள், டாக்டர்கள் ஆகியோர் மீதும் சேவை வரி விதிக்கப்படலாம் என்று குறிப்புகள் காட்டுகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு, அந்த யோசனை கைவிடப்பட்டாலும் வியப்பில்லை. கடந்த காலத்தில் இப்படிப்பட்ட எதிர்ப்பு காரணமாக சேவை வரி திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது உண்டு. ஒன்றுபட்டு நின்று எதிர்ப்புத் தெரிவிக்க, அமைப்புகளை பெற்றிராதவர்கள் எளிய மக்கள்தான். ஆகையால்தான் அவர்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமை ஏற்றப்படுகிறது.

மத்திய அரசுக்கு சேவை வரி ஒரு காமதேனுபோல விளங்குவதைக் கண்ட மாநில அரசுகள், அந்த வரியை விதிக்க தங்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் சேவை வரி உயர்த்தப்படும் அதே நேரத்தில் மறுபுறம் தொழில்துறையினருக்கு மேலும் வரிச்சலுகைகள் வழங்கப்படுகிற நிலையைத்தான் நாம் கண்டு வருகிறோம்.

Posted in 2007, Asim Das Gupta, Attorneys, Budget, Business, Cabinet Minister, doctors, Economy, Empowered Group of Finance Ministers, exemption, Expenses, Finance, Financial services, Goods and Services Tax, GST, Increase, India, Lawyers, Ministry, P Chidambaram, P Chidhambaram, P Chithambaram, Palaniappan Chidambaram, Revenues, service tax, Taxes, Telecom | Leave a Comment »

Modi should release a white paper on central government aid: Munshi

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் குஜராத்தின் மோடி அரசு மெத்தனம்: மத்திய அரசு குற்றச்சாட்டு

வடோதரா, ஜன. 17: குஜராத்தை ஆளும் பாஜக தலைமையிலான நரேந்திரமோடி அரசு, மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கிறது என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம்,
  • சர்வசிக்ஷ அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டம்,
  • ராஜீவ் காந்தி கிராமப்புறங்களில் மின்சார வசதி ஏற்படுத்தும் திட்டம் போன்ற மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசு மெத்தனம் காட்டுகிறது.

அரசியல் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை கூறவில்லை. குஜராத் என்றில்லாமல் பல்வேறு மாநில அரசுகளும் இதில் மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கின்றன.

குஜராத் அரசுக்கு பாரபட்சம் காட்டுவதாக பாஜக எம்பிகள் கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், சர்தார் சரோவர் அணையை உயர்த்தும் பிரச்சினை, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் உதவி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கியது என எப்போதும் மத்திய அரசு குஜராத்துக்கு உதவி புரிந்து வருகிறது என்றார்.

வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, குஜராத்தின் பஞ்சமகால் மாவட்டத்தில் தவறாகப் பயன்படுத்தியாகவும் புகார் வந்துள்ளதாக தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.

Posted in Gujarat, Modi, Narendhira Modi, Narendra Modi, NDA, Priya Ranjan Dasmunsi, Priyaranjan Dasmunshi, Sarkaria Commission, Union Information and Broadcasting Minister, UPA | Leave a Comment »

Divya prem sewa mission gets Madhya Pradesh’s Mahatma Gandhi Award

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

2006-07-க்கான மகாத்மா காந்தி விருது: ம. பிரதேசம் அறிவிப்பு

போபால், ஜன. 17: உத்தரப் பிரதேசம் ஹரித்துவாரை மையமாகக் கொண்டு இயங்கும் திவ்யா பிரேம் சேவா மையத்துக்கு மத்தியப் பிரதேச அரசின் 2006-07-க்கான மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கல்வி மற்றும் தொழுநோயாளிகளுக்காக இந்த அமைப்பு செய்துவரும் செயற்கரிய மனிதநேய சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.

இத்தகவலை மத்தியப் பிரதேச கலாசார அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா போபாலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Posted in Ashish gautam, Award, Child Education, Child Welfare, Culture Minister, Divya prem seva, Divya prem sewa mission, Donate, Education, Healthcare, India, Lakshmikanth Sharma, Leper, Madhya Pradesh, MP, NGO, Non-profit, Prize, service, Utharanchal, Uttaranchal, Volunteer | Leave a Comment »

Tamil nadu Agricultural Workers Board reconstituted

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

விவசாய தொழிலாளர் நல வாரியம் மீண்டும் அமைக்க அரசு ஆணை: உழவர் திருநாளில் முதல்வர் உத்தரவு

சென்னை, ஜன. 17: விவசாயத் தொழிலாளர் வாரியம் மீண்டும் அமைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இவ்வாரியம் கலைக்கப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி இந்த வாரியம் மீண்டும் அமைக்கப்படுகிறது.

வாரியத் தலைவராக வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் விவரம்:

அலுவல் சாரா உறுப்பினர்கள்:

  • நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பி. ராமலிங்கம்,
  • பூதலூர் கலியமூர்த்தி,
  • கீழானூர் ராஜேந்திரன்,
  • இல.க. சடகோபன்,
  • கே. பாலகிருஷ்ணன்,
  • வே. துரைமாணிக்கம்,
  • எஸ். செல்லமுத்து,
  • பொன்குமார்.

அலுவலர் சார்ந்த உறுப்பினர்கள்:

  • வருவாய்த்துறைச் செயலர்,
  • நிதித்துறைச் செயலர்,
  • வேளாண்துறைச் செயலர்,
  • வருவாய் நிர்வாக ஆணையர்,
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர்,
  • சர்க்கரைத் துறை ஆணையர்,
  • வேளாண் விற்பனை மற்றும் சந்தைக்குழு ஆணையர்,
  • நிலச்சீர்திருத்த ஆணையர்.

Posted in ADMK, agricultural workers, Agriculture, AIADMK, Board memebers, DMK, Farmers, I Periyasami, I Periyasamy, Law Minister, Officials, peasants, Periasami, Periasamy, Periyasamy | Leave a Comment »

Ku Ma Ramathal nominated as head of Tamil Nadu State Women’s Commission

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

மகளிர் ஆணையத் தலைவராக ராமாத்தாள் நியமனம்

சென்னை, ஜன. 17: தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக கு.ம. ராமாத்தாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பதிவாளரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினருமான கு.ம. ராமாத்தாளை, மகளிர் ஆணையத் தலைவராக நியமிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமிக்கப்பட்டிருந்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு நீதித் துறை அல்லது கல்வித் துறையில் பொறுப்பு வகித்தவர்களே தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக பலர் நினைவூட்டி சுட்டிக் காட்டினர். இதை ஏற்று மகளிர் ஆணையக் குழு மாற்றியமைக்கப்படும் அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

தற்போது புதிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள்

  • பி. கமலாம்பாள் (பாமக),
  • கே. காயத்ரிதேவி (காங்),
  • ஐஏஎஸ் அதிகாரி குத்சியா காந்தி,
  • ஐபிஎஸ் அதிகாரி வி. வனிதா,
  • ராணிமேரிக் கல்லூரி முதல்வர் இகுயின் பின்டோ,
  • வழக்கறிஞர் சி. சங்கமித்ரா,
  • ஆர். ஆலிஸ் மனோகரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலுவலர் சார்ந்த உறுப்பினராக சமூக நலத்துறைச் செயலரும், உறுப்பினர் செயலராக சமூக நலத்துறை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு முன்னர் வெளியிட்ட பட்டியலில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்திரகுமாரி மட்டும் மாற்றப்பட்டுள்ளார். அலுவலர் சாரா மற்றும் அலுவலர் சார்ந்த உறுப்பினர்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

Posted in A. Manohari, Biography, Biosketch, CM, Government, Indrakumari, K. Ghayathri Devi, Ku Ma Ramathal, M Karunanidhi, Newsmakers, P. Kamalambal, people, Politics, Profiles, QMC, Qudsia Gandhi, Queen Mary's College, Queen Pinto, Sangamitra, Superintendent of Police, Tamil Nadu, Tamil Nadu State Women's Commission, TN, V. Vanitha | Leave a Comment »