Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 26th, 2007

Madhya Pradesh Begins Surya Namaskar Amid Muslim Opposition: Is Rule on Yoga Constitutional?

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

ம.பி. மாநில பள்ளிகளில் பலத்த எதிர்ப்பையும் மீறி சூரிய நமஸ்காரம் அமல்

போபால், ஜன.26-

மத்தியப் பிரதேச மாநில பா.ஜனதா அரசு, பலத்த எதிர்ப்பையும் மீறி பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம் செய்யும் திட்டத்தை நேற்று அமல்படுத்தியது. இருப்பினும் சூரிய நமஸ்காரம் கட்டாயமில்லை என்று அறிவித்து உள்ளது.

போபாலில் டி.டி.நகர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது யோகாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர். மாவட்ட அளவில் மந்திரிகள் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். ஷாடால் என்ற இடத்தில் சூரிய நமஸ்காரம் செய்த 6-ம் வகுப்பு மாணவன் உத்தம் புஜ்ஜியா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை அமல்படுத்தியது சட்டவிரோதமானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய மாநில பிரிவு கூறி உள்ளது. இது கல்வியை காவிமயமாக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. போபாலில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சூரிய நமஸ்காரம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.

Posted in bhopal, BJP, Congress, Constitution, Constitutional, Education, Fanatics, Hinduism, Hindutva, Islam, Jamait-e-Hind, Law, Madhya Pradesh, MP, Muslim, Politics, Politics & Religion, Pranayam, Propaganda, Religion, RSS, Schools, Shivraj Singh Chouhan, Sun, Surya Namaskar, Tamil, Worship, Yoga | Leave a Comment »

Alternate fuel Bike Manufacturer ‘Yo Bykes’ gets Best Autombile Company award

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

மோட்டார் பைக் நிறுவனத்துக்கு விருது

சென்னை, ஜன. 26-

பெட்ரோல் இல்லாமல் எலெக்டரிக்கில் ஓடும் இரண்டு சக்கர வாகனம் யோபைக்ஸ் ஆகும். இந்த ஆண்டில் சிறந்த ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கான விருது யோபைக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனம் 6 வகை மாடல்களில் இந்த பைக்கை தயாரித்துள்ளது. இதன் விலை ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வகை பைக்குகள் தற்போது பிரபலமடைந்து உள்ளன.

Posted in Alternate fuel, Auto, Award, battery, Best Autombile Company, Bike, Electric two-wheelers, Electrotherm, Gujarat, Indus, Manufacturer, Smart, Spin, Tamil, two wheelers, Yo Bykes | Leave a Comment »

Hindu & Buddhist style worship practices for Jesus Christ in Kerala

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

கொல்லம், ஜன.26-

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரிமனம் கிரா மத்தில் கத்தோலிக்க கிறிஸ் தவர்களின் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஜெபக்கூடத்தில் போதி மரத்தடியில் புத்தர் தியானம் செய்வது போல ஏசு கிறிஸ் துவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் வலது கையால் யோகா முத்திரையைக் காட்டுவது போலவும், இடது கையை தொடையில் வைத்த படியும் சிலை வடிவமைக் கப்பட்டுள்ளது.

அந்த ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

“ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க இந்திய கலாசாரப்படி இந்த ஜெபக்கூடம் அமைக் கப்பட்டுள்ளதாக கொல் லத்தை சேர்ந்த பாதிரியார் ரோமன்ஸ் ஆன்டனி தெரி வித்தார்.

புத்தர் போல ஏசு சிலை வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு கேரளாவில் உள்ள சில கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த ஜெபக்கூட்டத்தை இன்று பிஷப் ஸ்டான்லி ரோமன் திறந்து வைத்தார்.

Posted in Buddha, Buddhism, Christ, Christian, Christianism, Christianity, Church, Hindu, India, Jegath Jothi Mandhir, Jegath Jothy Mandhir, Jesus, Kerala, Kollam, Quilon, Reigion, Tamil, Worship | Leave a Comment »

Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது

சென்னை, ஜன. 26-

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2007-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படவில்லை.

பத்ம விபூஷன் விருது 10 பேருக்கு வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருதுக்கு 32 பேரும் பத்மஸ்ரீ விருதுக்கு 79 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்மவிபூஷன்

பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வான 10 பேர் விபரம் வருமாறு:-

  1. பாலுசங்கரன் (மருத்துவம்),
  2. நாரிமன் (பொது விவகாரம்),
  3. குஷ்வந்த்சிங் (இலக்கியம்)
  4. என்.என்.வோரா (சிவில் சர்வீஸ்),
  5. நரேஷ்சந்திரா (சிவில் சர்வீஸ்),
  6. நீதிபதி பி.என்.பகவதி,
  7. ராஜாராவ் (மறைவு),
  8. ராஜா ஜேசுதாஸ் செல்லையா (பொது விவகாரம்),
  9. சுதர்சன் சண்டி ஜார்ஜ் (அறிவியல்),
  10. வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி (சிவில் சர்வீஸ்)

பத்மபூஷன்

பத்மபூஷன் விருதுக்கு தேர்வான 32 பேரில் தமிழ்நாட்டின் பிரபல தொழில் அதிபர்கள்

  • பொள்ளாச்சி என்.மகாலிங்கம்,
  • ஏ.சிவசைலம் இருவரும் முக்கியமானவர்கள்.
  • சூசுகி நிறுவன அதிபர் ஓ.சூசுகி,
  • தொழில் அதிபர் சுனில் பாரதி மிட்டல்,
  • சமூக சேவகி மோகினி கிரி,
  • அறிவியில் துறையின் பிரபலம் வில்லியனூர் ராமச்சந்திரன் ஆகியோரும் பத்மபூஷன் விருது பெறுகின்றனர்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான 79 பேரில் 8 பேர் தமிழர்களாவார்கள். அவர்கள் விபரம் வருமாறு:-

1. பல்தேவ்ராஜ்- அறிவியல் (கல்பாக்கம் அனல் மின்நிலையம்)

2. கே.ஆர்.பழனிச்சாமி (மருத்துவம்)

3. டாக்டர் மயில்வாகணன் நடராஜன்

4. பி.ஆர்.திலகம் (கலை)

5. நம்பெருமாள்சாமி (மருத்துவம்)

6. எஸ்.தட்சிணாமூர்த்தி பிள்ளை (கலை)

7. டி.எஸ்.ரங்கராஜன் (கவிஞர் வாலி) (கலை)

8. விளையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் (கலை)

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்களில் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தமிழகத்தின் சிறந்த மருத்துவர் விருதை இவர் பெற்றார். இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் “எலும்பு வங்கி”யை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

எலும்பு புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டி, பாதிக்கப்பட்ட கையையோ, காலையோ வெட்டி எடுத்து விடுவது வழக்கம். ஆனால் டாக்டர் மயில்வாகனன் குறைந்த செலவில் விஞ்ஞான அடிப்படையில் கண்டுபிடித்துத் தயாரிக்கப்பட்ட உலோக எலும்புப் பொருத்திகளைக் கொண்டு சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் ஊனமுற்ற நிலையை போக்கி சகஜ வாழ்க்கை வாழ வழி அமைத்துக் கொடுத்து மருத்துவ துறைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இந்த புரட்சிகரமான சிகிச்சையை இந்தியாவில் 1988 முதல் தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வாறு இதுவரை 1200 பேருக்கு இவ்வித அறுவை சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் தங்களது கை அல்லது கால்களை இழந்து விடாமல் காப்பாற்றியிருக்கிறார்.

சமீபத்தில் பேரிடர் மேலாண்மையில் மருத்துவத்துறையின் பங்கு என்ற தலைப்பில் இயற்கை பேரிடர் சம்பவங்களின் போது மருத்துவ துறையின் செயல்பாடுகள் குறித்து வரைவு முன் வடிவை அனைத்து மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய முடநீக்கு இயல் துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 2000-ம் ஆண்டு தமிழ்நாடு முடநீக்கு இயல் சங்கத்தின் தலைவராகவும் ஆசிய பசிபிக் நாடுகளின் எலும்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

எலும்பு புற்று நோய் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. பட்டமும் மருத்துவ படிப்பில் மிக உயர்ந்த டி.எஸ்சி பட்டமும் பெற்றுள்ளார்.

2003-ம் ஆண்டில் இவரது மருத்துவ சேவையினை பாராட்டி மருத்துவ துறையின் உயர்ந்த விருதான டாக்டர் பி.சி.ராய் விருதினை குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் வழங்கினார்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ள டாக்டர் நம்பெருமாள்சாமி மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார்.

டாக்டர் அர்ஜ×ன் ராஜசேகரன் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி சேவை செய்தவர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி `மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ள தகவலை கூறி வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகுதான் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது தெரிந்தது.

என்னை முதன் முதலில் வாழ்த்தியது கலைஞர்தான். நிறைய பேர் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வாலி கூறினார்.

கவிஞர் வாலி கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். 3 தலைமுறைக்கு ஏற்ப பாடல் எழுதி வரும் ஒரே பாடலாசிரியர் வாலி ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜா செல்லையாவுக்கு பத்மவிபூஷண், நம்பெருமாள்சாமிக்கு பத்மஸ்ரீ விருது

புதுதில்லி, ஜன. 27: இந்த ஆண்டு பத்ம விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 பேருக்கு பத்ம விபூஷண், 32 பேருக்கு பத்ம பூஷண், 79 பேருக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட 121 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு யார் பெயரும் அறிவிக்கப்படவில்லை.

விருது பெறுவோர் விவரம்:

பத்ம விபூஷண்

சட்ட நிபுணர் ஃபாலி சாம் நாரிமன், எழுத்தாளர் குஷ்வந்த் சிங், முன்னாள் அமைச்சரவை செயலாளர் நரேஷ் சந்திரா, முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் என்.என்.வோரா, டாக்டர் பாலு சங்கரன், மறைந்த எழுத்தாளர் ராஜா ராவ், பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா, முன்னாள் அதிகாரி வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமெரிக்கா வாழ் சுதர்சன் எரினாக்கல் சாண்டி ஜார்ஜ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்மபூஷண்

அரசியல் அறிஞர் விக்கு பரேக், சமூக சேவகர் எலா காந்தி, கவிஞர் கோபால்தாஸ் நீரஜ், பெப்ஸிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜாம்ஷெட் ஜே.இரானி, இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர், அமெரிக்க வாழ் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி சாக்ஸ் மற்றும் ஜப்பான் தொழிலதிபர் ஓ சுசூகி. சமூக சேவகர் மோகினி கிரி, பாரதி டெலிகாம் தலைவர் சுநீல் பாரதி மித்தல், கேரள நாடக ஆசிரியர் நாராயண் பணிக்கர், பாடகர்கள் ராஜன் மிஸ்ரா, சஜன் மிஸ்ரா, ஓவியர்கள் சையத் ஹைதர் ராசா, தயப் மேத்தா மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.

பத்மஸ்ரீ

எழுத்தாளர்கள் அமிதவ கோஷ், விக்ரம் சேத், நடன இயக்குநர் அஸ்தாத் தேவூ, ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநர் வகுள் டோலக்கியா, மலையாள நடிகர் பாலச்சந்திர மேனன், தில்லி நடனக் கலைஞர் கீதா சந்திரன், கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங், நாஸ்காம் நிறுவன தலைவர் கிரண் கார்னிக், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, பாடகர் ரெமோ ஃபெர்னாண்டஸ், கல்வியாளர் முஷீருல் ஹசன், கேரள நெசவு நிபுணர் பி.கோபிநாதன், தமிழக கண் சிகிச்சை நிபுணர் பி.நம்பெருமாள்சாமி, பாடகர் சாந்தி ஹிரானந்த், சமையல் நிபுணர் தர்லா தலால், சமூக சேவகி டீஸ்டா சீதல்வாட், மலையாளர் எழுத்தாளர் சுகுமார் அழிக்கோட் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Award, Balu Sankaran, Fali Nariman, India, Indra Nooyi, J, Jeev Milkha, K Humpy, Khushwant Singh, Mohini Giri, Mushirul Hassan, N N Vohra, Naresh Chandra, O Suzuki, P N Bhagawati, Padhma Awards, Padma, Padma Bhushan, Padma Bushan, Padma Vibhushan, Padma Vibushan, Padmabhushan, Padmashree, Raja Jesudoss Chelliah, Raja Rao, S E Chandy George, Sunil Bharti Mittal, Tamil, Teesta Setalvad, V Krishnamurthy | Leave a Comment »

Arms smuggling, trafficking, trading – LTTE, Karuna group, Sri Lanka, Eezham

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

ஆயுதக் கடத்தல்

இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப் பிரச்சினை காரணமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், போராளிகளுக்காகக் கடத்தப்படவிருந்த 5,000 கிலோ இரும்பு குண்டுகள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றைக் கொண்டு கையெறிகுண்டு, கண்ணி வெடிகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்க முடியும். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 மாதங்களுக்கு முன் மானாமதுரையில் ஒரு காரிலிருந்து 1500 கிலோ வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது, மேற்கண்ட கடத்தல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. முன்னர் ராமேசுவரம் வழியாக இதுபோல் ஆயுதங்களும், உணவுப் பொருள்களும் கடத்தப்பட்டன. ஆனால் அப் பகுதியில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதை அடுத்து இப்போது கடத்தலுக்கு தூத்துக்குடியைத் தேர்வு செய்துள்ளனர்.

இப்போது கைப்பற்றப்பட்டுள்ள இரும்பு குண்டுகள் மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் 4 ஆண்டுகளுக்கு முன் அகதிகளோடு அகதிகளாக ராமேசுவரம் வந்துள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இதேபோல், போராளிகளுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு பொருள்களை சப்ளை செய்து வந்த இலங்கை பிரஜை உள்ளிட்ட 4 பேரை, கடந்த ஜூலையில், ராமேசுவரம் போலீசார் கைது செய்தனர். 2 சக்கர வாகனங்களைத் திருடி, அவற்றில் இருந்த எஞ்சினை மட்டும் தனியே எடுத்து, போராளிகளுக்கு சப்ளை செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர இலங்கைக்குக் கடத்தவிருந்த பலகோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளும் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அனைத்து அகதிகள் முகாம்களையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், இது போன்ற கடத்தல் சம்பவங்கள் நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளிலும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் நுழையும் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளை வலுப்படுத்த வேண்டும்.

இதற்கிடையே, இலங்கையில் ஸ்திரத்தன்மை குலைய கிழக்குப் பகுதியில் செயல்படும் கருணா கோஷ்டிக்கு முக்கியப் பங்கு உள்ளதாக இலங்கைக்கு உதவும் நாடுகளின் குழு கூறியுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர். எதிர்த்தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த முறையைக் கையாளுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா கோஷ்டியினர் கிழக்குப் பகுதியில் சிறுவர் மற்றும் இளைஞர்களை பல்வேறு இடங்களிலிருந்து கடத்திச் சென்று, போர்ப் பயிற்சி அளித்து, சண்டையில் ஈடுபடுத்துவதாக நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இதுபோல் 200 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. புலிகள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறி வந்த அரசு, கருணா கோஷ்டி புலிகளுக்கு எதிரானது என்பதால் இப்போது கண்டும் காணததும்போல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கருணா கோஷ்டியும், அரசும் மறுத்துள்ளபோதிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மை நிலையை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

Posted in Arms, Colombo, Karuna, Karuna Faction, Karuna Group, LTTE, Op-Ed, Opinion, Sri lanka, Srilanka, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Na Gunasekaran – Importance of Local Civic Body in the functioning of a Republic India

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

உள்ளாட்சி ஜனநாயகத்துக்கு தேவை, மக்கள் இயக்கமே!

ந. குணசேகரன்

உள்ளாட்சி மன்றங்களின் ஜனநாயக செயல்பாடுக்கு உயிர்நாடியாகத் திகழ்வது கிராமசபை கூட்டங்கள்.

குடியரசு தின நன்னாளன்று, ஊராட்சிகளை வழி நடத்த கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஓராண்டுக்கு குறைந்தது, நான்கு கூட்டங்கள் நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி.

மத்திய அரசு வெளியிட்டுள்ள, “உள்ளாட்சி அமைப்புகள் பற்றிய இடைக்கால ஆய்வறிக்கை’ கீழ்வருமாறு கூறுகிறது. “”மக்கள் ஒன்றுகூடி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று, கற்பனை வடிவில் உள்ள கருத்து, நடைமுறை சாத்தியமா என்ற ஐயப்பாடு நீடிக்கிறது”.

அதாவது, இன்னமும் உள்ளாட்சி மன்றங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. தங்களது தேவைகள், உரிமைகளைப் பெற, உள்ளாட்சி மன்றங்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஜனநாயக உணர்வு இன்னமும் வளர்க்கப்படவில்லை. இது தமிழகத்துக்கும் பொருந்தும்.

இதில் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. மக்களுக்கு வாக்குரிமையை உறுதி செய்தால் போதும்; உள்ளாட்சி மன்றச் செயல்பாடு மேம்படும் எனக் கருதப்படுகிறது. வெறும் வாக்குரிமை மட்டும் உண்மையான ஜனநாயகத்துக்கு இட்டுச் செல்லாது.

ஏனெனில், இந்த வாக்குரிமை தேர்தல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

தேர்தலே நடைபெறாமல், எதிர்வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்பட்டு “ஏகமனதாக’த் தேர்ந்தெடுக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்தியபோதிலும், பல இடங்களில் பதவிகள் ஏலம் விடப்பட்டன.

எனினும் தேர்தலின்போது பின்பற்றப்பட்ட தகாத வழிமுறைகள், பணபலம் செய்த சாகசங்கள், சாதி, சமயங்களின் வழக்கமான பங்கு என பட்டியல் நீள்கிறது.

ஜனநாயகத்துக்கு ஒவ்வாத இந்த நடைமுறைகள் எதைக் காட்டுகின்றன? வாக்குரிமையை உறுதி செய்தால் மட்டும் போதாது; ஜனநாயக உணர்வுகளை மக்களிடையே வேரூன்றச் செய்ய வேண்டும். தன்னாட்சி என்னும் உள்ளாட்சி மன்றக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், உள்ளாட்சி மன்றச் செயல்பாடுகளில் உள்ள ஊனங்களைக் களைய மக்கள் திரண்டெழ வேண்டும். ஏராளமான மக்கள் நலத் திட்டங்களும், அவற்றுக்கான நிதியும் உள்ளாட்சி நிர்வாகத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு செலவினங்களில் பாதியளவு சமூக நலத்துறைக்குச் செலவிடப்படுகிறது.

இதில் கணிசமான நிதி உள்ளாட்சி மன்றங்களின் மூலம் செலவிடப்படுகிறது. ஆனால், பல்வகைத் திட்டங்களும் செயல்பாடுகளும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான தேவைகளை நிறைவு செய்யவில்லை.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும். ஆனால் நிதி ஒதுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைய, மக்களின் கண்காணிப்பும் விழிப்புணர்வும் முழுமையான பங்கேற்பும் அவசியம். திட்ட நடைமுறையில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், ஊழல், ஜனநாயக விரோத நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளூர் மக்கள் சுட்டிக் காட்ட வேண்டும். மக்களின் கண்காணிப்பு, கருத்துகூறல், தலையிடல் ஆகியவை உள்ளூர் மட்டத்தில் ஒரு பண்பாடாகவே வளர்க்கப்படல் வேண்டும்.

கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், தனது கிராம வளர்ச்சித் திட்டங்கள், வாழ்க்கை மேம்பாடு குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் உள்ளாட்சி மன்றங்களை ஈடுபடுத்தி தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்றால் மட்டும் போதாது. உள்ளூர் சார்ந்த அமைப்புகள், உள்ளூர் மட்டத்தில் ஏராளமான வளர்ச்சிக் கருத்தரங்குகளை நடத்துவதும், அதில் மக்கள் பங்கேற்பதும் வழக்கமான நிகழ்வாக மாற்றப்படல் வேண்டும்.

மக்கள் ஒவ்வொருவரும் தங்களை ஏதாவது ஓர் அமைப்பு சார்ந்தவராக மாற்றிக்கொண்டு செயல்படுவது நன்று. தொழில்சார்ந்த விவசாயிகள் அமைப்புகளிலோ, குடியிருப்பு சார்ந்த சமூக, பண்பாட்டு அமைப்புகளிலோ செயல்பட்டு தங்களது ஜனநாயகக் குரலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வலுவான மக்கள் இயக்கம், தவறான வழிகளில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நல்வழிப்படுத்தவும், மேலும் தவறுகள் நிகழாதிருக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை.

உள்ளாட்சி மன்ற ஜனநாயகத்தில் மக்கள் பயிற்சி பெற அரசு நிர்வாகம் உதவ வேண்டும். சமூக ஆர்வலர்களும், தன்னார்வ சேவை அமைப்புகளும், உள்ளூர் சார்ந்த மக்கள் இயக்கம் உருவாக முயற்சிக்க வேண்டும்.

ஜனநாயக நெறிகளைக் கொண்ட ஒரு புதிய சமூகப் பண்பாடு கிராமத்திலிருந்து தொடங்கி, ஒவ்வொரு மக்கள் குடியிருப்பிலும் தழைக்க வேண்டும்.

அதிகாரப்பரவல் என்பது நிர்வாக ரீதியான சீர்திருத்தம் மட்டுமல்ல; கோடானுகோடி உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியல் மாற்றத்துக்கான திறவுகோலாக அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்).

Posted in Communist, Constituion, CPI (M), Democracy, Local Civic Body, Marxist Communist, Municipality, Na Gunasekaran, Republic, Rural, Suburban, Tamil | Leave a Comment »