Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 18th, 2007

Kizhakkey Pogum Rayil style ‘Ladies only’ worship in Yercaut

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை

சேலம், ஜன. 19: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை வெள்ளிக்கிழமை நடக்கிறது.

வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 67 மலைக் கிராமங்கள் உள்ளன. ஏற்காட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது வெள்ளக்கடை கிராமம்.

அங்கு பொங்கல் பண்டிகைக்குப் பிறகு காளியம்மன்- மாரியம்மன் பூஜை நடைபெறும். அப்போது ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி விடுவர். பெண்கள் மட்டுமே இந்த பூஜையை நடத்துவர்.

இவ்விழாவின்போது நடன நிகழ்ச்சி நடக்கும். இதைப் பார்க்கவோ, பங்கேற்கவோ கிராமத்து ஆண்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் ஊருக்குள் யாரும் நுழையாத வகையில் காவல் போடப்படும். இப்பூஜையில் பெண்கள் நிர்வாணமாகப் நடனமாடுவார்கள் என்று கூறப்படுவதுண்டு.

இவ்வழக்கம் கூடாது என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்துவது வழக்கமானது.

ஆனால் “இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்கிறது என்பது பொய்யான தகவல். காலம்காலமாக அம்மன் பூஜை மட்டுமே நடைபெறும். இத்தகைய பூஜையால் கிராம மக்கள் நலமுடன் வாழ்கின்றனர். பூஜையில் ஆண்கள் பங்கேற்கக் கூடாது என்பது ஐதீகம். பல ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. இத்தகைய பூஜையால் எங்கள் கிராமத்துக்கு கெட்ட பெயர்’ என மக்கள் கூறுகின்றனர். மகளிர் போலீஸôர் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Posted in Blind Faith, Ercode, Females, Hindu, Hinduism, Hindus, Kizhakkey Pogum Rayil, Lady, Myth, Nude, Women, Worship, Yercaud, Yercaut | Leave a Comment »

AIMPLB – Majlis Ittehadul Muslimeen seeks extradition of Taslima Nasrin

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்

புது தில்லி, ஜன. 19: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.

“லஜ்ஜா’ என்னும் சர்ச்சைக்குரிய நாவலை முஸ்லிம் எழுத்தாளரான தஸ்லிமா எழுதினார். அதையடுத்து, வங்கதேசத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் அங்கிருந்து 1994-ல் அவர் வெளியேறினார். தற்போது அவர் கோல்கத்தாவில் வசித்துவருகிறார்.

அவர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதியிருக்கும் கட்டுரையில், “”முஸ்லிம் பெண்களே புர்க்காவைத் தூக்கி எறியுங்கள்; பெண்களுக்குப் பாரபட்சம் காட்டும் அந்த உடையை உதறுங்கள்; அதைக் கொளுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“”அந்தக் கட்டுரை முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருக்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அக் கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அது கண்டனத்துக்கு உரியது; எனவே, தஸ்லிமாவை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும்” என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரான கமால் பாரூக்கி வியாழக்கிழமை கூறினார்.

அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி வற்புறுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Posted in AIMPLB, All-India Muslim Personal Law Board, Bangladesh, Burqa, Dress, External Affairs, extradition, Islam, Kamal Farooqi, Lajja, Let's burn the Burqa, Majlis Ittehadul Muslimeen, Ministry, Muslim, Novel, Outlook, Tasleema Nasreen, Tasleema Nasrin, Taslima Nasreen, Taslima Nasrin, Writer | 1 Comment »

Male kids in Danger due to Simma Lagnam ascendant for Thai Pongal

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால் ஆண் வாரிசுக்கு ஆபத்து என்று வீதிகளில் விளக்கேற்றி பரிகாரம்

சிம்ம லக்னத்தில் தை மாதம் பிறந்ததால், ஆண்களுக்கு ஆகாது என்கிற கருத்து பரவியதை அடுத்து சென்னை தாம்பரத்தில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றும் பெண்கள்.

சேலம், ஜன. 19: தை மாதம் சிம்ம லக்னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என வதந்தி பரவியது. இதற்கு பரிகாரமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வியாழக்கிழமை வீதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

வீட்டின் முன்பு வாழை இலையில் அரிசியைப் பரப்பி விளக்கேற்றி வழிபட வேண்டும் என ஜோதிடர்களும் பரிகாரம் செய்வதில் அனுபவம் படைத்தவர்களும் கூறினர்.

இந்த செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவியது. இதை கேட்டு அவரவர் செல் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சில மணி நேரங்களில் எல்லா மாவட்டங்களுக்கும் இத் தகவல் பரவியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சை, வேலூர், கோவை உள்பட மாநிலம் முழுவதும் பெண்கள் வீதிகளிலும் வீட்டு நுழைவு வாயிலுக்கு வெளியேயும் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்தனர்.

ஆண்களுக்கு ஆபத்து என்று பரபரப்பு: தமிழகத்தை உலுக்கிய தை மாத தோஷம்

சென்னை, ஜன. 19-

தை மாதம் சிம்ம லக்க னத்தில் பிறந்ததால் ஆண் வாரிசுகளுக்கு ஆபத்து என்று ஜோதிட தகவல் வெளி யானது.

இதற்கு பரிகாரமாக பெண்கள் வீட்டின் முன் வாழை இலையில் அகல்விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றும் ஜோதிடர் கள் தெரிவித்தனர்.குடும்பத் தில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அவர்கள் ஒவ் வொருவருக்கும் ஒரு விளக்கு வீதம் ஏற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

செய்யாறு, திருவண்ணா மலை, ஆற்காடு பகுதியில் முதன் முதலில் கிளம்பிய இந்த தகவல் காட்டுத்தீ போல் தமிழ்நாடு முழுவதும் பரவியது. உறவினர்கள் ஒரு வருக்கொருவர் போனில் தகவல் தெரிவித்து வீடுகளில் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தனர்.

நேற்று முன்தினம் இரவே வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

சென்னை

சென்னைக்கு இந்த தகவல் பரவியதும் பெண்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. மாலையில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் அகல் விளக்கு ஏற்றி பரிகாரம் செய் தனர்.

பெரம்பூர், வியாசர்பாடி, ஓட்டேரி, சூளை, டவுட்டன், வடபழனி, திருவொற்றிïர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் வீடுகள் தோறும் விளக்கு ஏற்றி இருந்ததை காண முடிந்தது.

எதிர் எதிர் வீட்டுக்காரர்கள் ஒருவரைப்பார்த்து ஒருவர் விளக்கு ஏற்றினார்கள். உறவினர்கள் போனில் தக வல் தெரிவித்து விளக்கு ஏற்றுமாறு சொன்னார்கள். இதனால் சென்னையின் பெரும்பாலான தெருக்களில் விளக்குகள் எரிந்தன. கார்த்திகை தீபம் போல் வீடுகளில் விளக்குகள் எரிந்தன. வீடுகள் தோறும் இதே பேச்சாக இருந்தது.

2வது நாளாக

தமிழ்நாடு முழுவதும் இன்று 2வதுநாளாக வீடுகளில் விளக்குகள் ஏற்றபப்பட்டன. பகலிலும் சில வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டு இருந் தது.

தொடர்ந்து 3நாட்கள் வரை விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளதால் நாளையும் பெண்கள் விளக்கு ஏற்றி பரிகாரம் செய்கிறார்கள்.

Posted in Advice, ascendant, Astrologers, Astrology, Children, Danger, Districts, Gossip, Lamps, Lighting Lamps, Male kids, Plantain Leaf, Pongal, rice, Rumor, Simha Lagnam, Simma Lagnam, Tamil Nadu, Thai | 1 Comment »

E Periyasami gets acquitted from Disproportionate Assets case

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் இ.பெரியசாமி விடுவிப்பு

திண்டுக்கல், ஜன. 19: மாநில வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்து உத்தரவிட்டது.

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக ஊரக வளர்ச்சி, சத்துணவு, பத்திரப் பதிவு ஆகிய துறைகளின் அமைச்சராக பெரியசாமி பணியாற்றினார்.

2001-ல் அதிமுக ஆட்சி அமைத்தது. இந் நிலையில், 2002, ஜூன் மாதம் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸôர் இ.பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகளில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

13-05-1996 முதல் 14-05-2001 வரையிலான காலகட்டத்தில், பெரியசாமிக்கு வருமானமாக ரூ.14 லட்சம் மட்டுமே இருந்திருக்க வேண்டும். ஆனால், ரூ.72 லட்சம் வருமானம் இருந்ததால், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 லட்சம் சொத்துக்களை தனது மகன் பெயரிலும், உறவினர் நாகராஜ், நண்பர் ஜெகன்னாதன் ஆகியோரது பெயர்களிலும் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை, திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இ.பெரியசாமிக்கு குற்றப்பத்திரிகையும் வழங்கப்பட்டது.

இந் நிலையில், குற்றச்சாட்டு மீதான விசாரணை நடைபெற்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசுத் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அமைச்சர் இ.பெரியசாமி உள்பட மூன்று பேரையும் வழக்கிலிருந்து விடுவித்ததுடன், வழக்கையும் தள்ளுபடி செய்து நீதிபதி கற்பூரசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.

Posted in abuse, Assets, case, Corruption, Dindugul, Dindukkal, Disproportionate assets, DMK, E Periyasaami, E Periyasami, E Periyasamy, I Periyasami, I Periyasamy, Judge, Law Minister, Order, Periasami, Periasamy, Power | Leave a Comment »

99 Chennai Corpn councillors to resign – DMK, allies ready to face re-election in 99 wards

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

300 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 2-வது முறையாக மேயர் இல்லாத நிலை

பா. ஜெகதீசன்

99 கவுன்சிலர்கள் ராஜிநாமாவால் மாநகராட்சி மன்றம் செயல் இழந்தது

சென்னை, ஜன. 18: சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக உருவாகிள்ளது.

தற்போது 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்வதால், மாநகராட்சி மன்றம் அடியோடு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதன் எதிரொலியாக மேயர் உள்பட 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.

300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் இப்படி ஒட்டுமொத்தமாக-ஒரே நேரத்தில் 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்வது என்பது இதுவே முதல்முறை.

வரலாறு: தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி, ஆளும் கட்சி ஆகியது.

24.4.1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.பொ. அரசு வென்றார். சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் அவர்.

பிறகு, 30.11.1971-ல் நடைபெற்ற மேயர் தேர்தலில் காமாட்சி ஜெயராமன் (தி.மு.க.) வென்றார்.

ஒட்டுமொத்த கலைப்பு: மாநகராட்சியில் எழுந்த ஊழல் புகாரை அடுத்து, மாநகராட்சி மன்றத்தைக் கலைப்பதாக 20.11.1973-ல் சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதன் பிறகு பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் பல ஆண்டுகள் இயங்கின.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் 23.2.1986-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தல் வந்தது: 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலையும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் 1996 அக்டோபரில் தி.மு.க. அரசு நடத்தியது.

அதில் தி.மு.க.-த.மா.கா. அணி வென்றது. சென்னையின் 44-வது மேயராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின் 2-வது முறையாக வென்றார். ஆனால், மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அணி அதிக இடங்களை வென்று, ஆளும் கட்சியாகியது. அதனால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் எழுந்தன.

ஒருகட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் மேயர் இல்லாத நிலை மாநகராட்சியில் முதல்முறையாக ஏற்பட்டது.

தற்போதைய நிலை: மன்றத்தில் ஏற்கெனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 99 பேர் ராஜிநாமா செய்வதை அடுத்து, காலியிடங்களின் எண்ணிக்கை 101-ஆகிறது. மேயர் இல்லாத நிலையில் -எஞ்சிய 54 கவுன்சிலர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்த முடியாது. எனவே, காலியாக உள்ள 101 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மன்றம் செயல்பட முடியாது என மாநகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சி ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் திமுக-58; காங்-25; பா.ம.க-13 பேர்

சென்னை, ஜன. 18: உயர் நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா அளித்த தீர்ப்பின் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் இருந்து ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் 58 பேர் திமுகவினர்.

திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியைச் சாராத பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ராஜிநாமா செய்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவரான கலிஃபுல்லா சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

மாநகராட்சியின் 155 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியினர் 149 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் விவரம்:

  • திமுக- 90,
  • காங்கிரஸ் -38,
  • பாமக -17,
  • அதிமுக -4,
  • இந்திய கம்யூனிஸ்ட் -2,
  • விடுதலைச் சிறுத்தைகள் -2,
  • மதிமுக -1,
  • பகுஜன் சமாஜ் -1.

தற்போது மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

ராஜிநாமா செய்தவர்களைத் தவிர மன்றத்தில் தற்போது இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:

  • திமுக-36,
  • காங்கிரஸ்-13,
  • பாமக- 4,
  • சுயேச்சை -1,
  • காலியிடங்கள் -2

முக்கியமானவர்கள்: 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகரில் 130-வது வார்டில் வெற்றி பெற்ற கே. தனசேகரனும் ராஜிநாமா செய்கின்றனர்.

மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்கின்றனர்.

Posted in 99, ADMK, AIADMK, Assembly Election, Backgrounder, Bahujan Samaj Party, BSP, bypoll, Chennai, Civic Polls, Court, CPI, CPI (M), Dalit Panthers, DMK, Elections, History, Judge, Justice, Karunanidhi, local body elections, M Subramanian, Madras, Mayor, MDMK, MLC, Order, Pattali Makkal Katchi, PMK, Re-election, Tamil Nadu, TN, Viduthalai Chiruthaigal, Viduthalai Siruthaigal | Leave a Comment »

Request to collectors of Kothamangalam Subbu’s works

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

கொத்தமங்கலம் சுப்பு படைப்புகளை வெளியிட குடும்பத்தினர் கோரிக்கை

சென்னை, ஜன. 18: “தில்லானா மோகனாம்பாள்’ உள்ளிட்ட நாவல்களைப் படைத்த கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கவிதைகள், கதைகளைப் புத்தகங்களாகக் கொண்டு வர அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

“”அவரது படைப்புகள் பல கிடைக்கப் பெறாமையால், அப்படைப்புகளைக் கைவசம் வைத்திருப்போர் அனுப்பி உதவ வேண்டும்” என்று கொத்தமங்கலம் சுப்புவின் மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

படைப்புகளைத் திரும்பப் பெற விரும்பினால், நகல் எடுத்து திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புகொள்ள:

கொத்தமங்கலம் விசுவநாதன், ஏ2, இரண்டாவது மாடி, கொத்தமங்கலம் சுப்பு இல்லம், புதிய எண் 185 (பழைய எண்: 107), அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 004.

தொலைபேசி: 044- 2811 5817, 2811 6938, செல்பேசி: 98846 61758.

Posted in Ilakkiyam, Kothamangalam Subbu, Kothamankalam Subbu, Request, Tamil Literature, Tamil Story, Tamil Writer, Thillaana Mohanambaal, Thillaana Mohanmbal, Thillana Mohanambal | Leave a Comment »

Conch, shell Collections from the seashore – Hobbyist

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

காலத்தால் மறைந்து வரும் கடல்சார் அறிவு களஞ்சியங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்திய கடலோரப் பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் தாவரஉண்ணி வகை சங்குகளில் சில.

சென்னை, டிச. 18: கடல்சார் உயிரினங்கள் குறித்த அறிவுக் களஞ்சியமாக கருதப்படும் சங்குகளைச் சேகரிக்கும் பழக்கம் தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை பல்வேறு தரப்பினரிடமும் பரவி இருந்த இப்பழக்கம் தற்போது மறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இதில் ஈடுபட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் குருசாமி.

சென்னையைச் சேர்ந்த இவர் தனது 14-வது வயதில் தொடங்கி இன்றுவரை சுமார் 200-க்கும் அதிகமான வகை வகையான சங்குகளைச் சேகரித்து வைத்துள்ளார்.

மலேசியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களும் தங்களுக்கு கிடைக்கும் அரிய வகை சங்குகளை தமக்கு அனுப்பி வைத்து உதவினார்கள் என்றும் அவர் கூறினார்.

கடல் சார்ந்த பகுதிகளில் உயிரினங்கள் குறித்த ஆய்வு தொடங்கியது முதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சங்கு மற்றும் கிளிஞ்சல்களை சேகரிக்கும் பழக்கம் உருவானது.

தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்களிடம் மட்டும் இருந்த இப் பழக்கம் பின்னர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடமும் பரவியது.

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன.

ஆயிரம் ஆயிரம் வகைகள்: கடற்கரை மணலில் காலாற நடக்கும் போது நமது கால்களின் இடுக்குகளில் சிக்கும் சிறிய கிளிஞ்சல்களை சாதாரணமாக நினைத்துவிட முடியாது.

இவைகளில் தாவர உண்ணி மற்றும் மாமிச உண்ணி என உண்பதில் தொடங்கி அதன் அமைப்பு, செயல்பாடுகள் அடிப்படையில் சங்குகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

  • லாம்பிஸ்,
  • ஒலிமா,
  • டர்புனில்லா,
  • டிபியா குர்டா,
  • சைபேர் டிக்ரிஸ்,
  • சைபேர் மாரிடியஸ்,
  • பாலியும்,
  • டோனா,
  • கானூஸ்,
  • பிபிலெக்ஸ்,
  • புர்ஷா,
  • புசிகான்,
  • ஃபாஸியோலாரியா,
  • அக்கர் உள்பட பல ஆயிரம் வகை சங்குகள் மற்றும் கிளிஞல்கள் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கிடைக்கின்றன.

இவற்றில் சில வகைகள் மட்டும் ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மற்ற அனைத்து வகைகளும் ஆழம் குறைவான கடலோரப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன.

இவற்றைப் பிடித்து இதில் உள்ள பூச்சியைப் கொன்று பின்னர் அமிலத்தால் சுத்தம் செய்வது மிக கடினமானப் பணியாக இருப்பதால் ஆர்வத்துடன் வரும் பலரும் பாதியிலேயே திரும்பி விடுகின்றனர்.

அழிவின் விளிம்பில் சங்குகள்: சங்குகள் மற்றும் கிளிஞ்சல்களைப் போலவே சங்குகளின் அடிப்படையான நத்தை உள்ளிட்ட கடல்சார் உயிரிகளும் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன.

அனல் மின் நிலையங்களில் இருந்து அதிக வெப்பத்துடன் வெளியேற்றப்படும் நீர், கடலை ஆழப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களாலும் இவ்வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நேச்சர் டிரஸ்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரியவகை சங்குகள் தொடர்பான தகவல்களை மக்களிடம் பரப்புவதற்காக அருங்காட்சியகம் அமைப்பது உள்ளிட்ட உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலம்புரி சங்கு வாங்கும்போது…

ஆயிரக்கணக்கான வகைகளில் சங்குகள் கிடைத்தாலும் இவற்றைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளவர்களில் பலருக்கும் வலம்புரிச் சங்கு கிடைக்குமா என்ற ஆவல் நிச்சயம் இருக்கும்.

அந்த அளவுக்கு மிக அரிய வகையான வலம்புரிச் சங்கு லட்சத்தில் ஒன்றாகத்தான் எப்போதாவதுதான் உருவாகும்.

கடிகாரச் சுற்றுக்கு எதிர் திசையில் உடற்சுற்று அமைப்புடன் இருக்கும் டர்பிநெல்லா ஃபைரம் வகை சங்குகளே புனிதம் நிறைந்த வலம்புரிச் சங்குகளாகக் கருதப்படுகின்றன.

ஆனால், இது குறித்த விழிப்புணர்வு இல்லாமையைப் பயன்படுத்தி காசுபார்க்க நினைக்கும் வணிகர்கள் கடிகாரச்சுற்றுக்கு இணையாக இருக்கும் உடல் அமைப்பை பெற்றிருக்கும் சாதாரண வகை சங்குகளைக் தலைகீழாக வைத்து வலம்புரிச் சங்குகள் என விற்று வருவதாக பரவலாக புகார் கூறப்படுகின்றன.

இதற்கான தேடுதல் வேட்டையால் பல அரிய வகை சங்குகள் அழிக்கப்படுவதாக “நேச்சர் டிரஸ்ட்‘ அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

Posted in Collector, conch-shell, cornet, Hobby, Hobbyist, Nature Trust, Sangu, Sanku, Sea, Shells, Valamburi Sangu, Valamburi Sanku, Valampuri Sangu | 2 Comments »

Thiruvarur district’s Kothavasal village switches back to Organic farming to reap the same harvest

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

முழுமையாக இயற்கை விவசாயத்துக்குத் திரும்பும் கிராமம்

ிருவாரூர், ஜன. 18: திருவாரூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இக் கிராமத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 40 ஏக்கரில் கடைபிடிக்கப்பட்ட இயற்கை விவசாய முறையின் வெற்றி காரணமாக கிராமத்தில் உள்ள 300 ஏக்கரில் முழுமையாக இச் சாகுபடிக்கு முறைக்கு மாற உள்ளனர்.

ரசாயன தொழில்நுட்ப முறையில் மேற்கொள்ளப்படும் சாகுபடிக்கு இணையான மகசூல் இயற்கை விவசாய முறை சாகுபடியிலும் கிடைத்ததே இவர்களது மனமாற்றத்துக்குக் காரணம்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான மா. மணிமாறன் மேற்கொண்ட முயற்சி காரணமாக இக் கிராம விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாய முறையில் சாகுபடி மேற்கொள்ள முன்வந்தனர்.

இயற்கை விவசாய முறையை ஏற்க முன்வந்த விவசாயிகளை வரவேற்று, இம் முறையை விளக்கும் வகையிலான கருத்தரங்கம் பூந்தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இயற்கை விவசாயி கோ. சித்தர் பேசியது:

“சமூகம் அழிவிலிருந்து மீள விவசாயிகள் இயற்கை விவசாய முறையைக் கடைபிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு நோய், கடன் இல்லை. தற்போது அதிகளவிலான மகசூல் கிடைத்தாலும் விவசாயிகள் கடன் மற்றும் நோய்த் தொல்லையால் தவித்து வருகின்றனர்.

ரசாயன வேளாண் தொழில்நுட்பங்களே இதற்குக் காரணம்.

Posted in Agriculture, Farming, harvest, KothaVaasal, Kothavasal, Ma Manimaaran, Maa Manimaran, Nannilam, organic, Pongal, Samba, Thiruvaaroor, Thiruvaarur | Leave a Comment »

Arms haul related to Marad violence in Kerala – Palacot

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

பாலக்காட்டில் ரகசிய ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

பாலக்காடு, ஜன. 18: பாலக்காடு அருகே சட்ட விரோதமாக நடந்த ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

பாலக்காடு அருகே புதுப்பரியாசத்தைச் சேர்ந்தவர் தாஸ்குமார் (52). இவர் தனது வீடு அருகே உரிமம் பெறாமல் தொழிற்சாலை வைத்து, ஆயுதங்களை தயாரித்து வந்தார்.

கோட்டயம் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன் ஆயுத சோதனை நடந்தது. அப்போது, பாலக்காட்டில் இருந்து சட்ட விரோதமாக ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சிஐபி வாஹித் தலைமையில் போலீஸôர் சோதனையில் ஈடுபட்டனர். தாஸ்குமார் வீட்டில் நடந்த சோதனையின்போது, வீடு அருகே சட்டவிரோதமாக ஆயுதத் தொழிற்சாலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிற்சாலையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை போலீஸôர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாஸ்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில்

  • கோட்டயம் ரஹீம்,
  • சங்கனாசேரி ஷாஜி,
  • எருமேலி, ஷாஜகான் ஆகியோருக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்தது தெரியவந்தது.
  • தாஸ்குமாரின் சகோதரர் மோகன்குமார் மாராடு கலவரத்தின்போது ஆயுத சப்ளை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in ammunition, anti-terrorism, Arms, Government, Karachi, Kerala, Kottayam, Pakistan, Palacode, Police, Rockets, Smuggling, Terrorism | Leave a Comment »

Sambaji Ramachandra Salunge – True Hero: Saves many lives during Mumbai Floods

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

வெள்ளத்தில் சிக்கிய 20 பேரைக் காப்பாற்றிய அதிகாரிக்கு விருது

மும்பை, ஜன. 18: வீரதீரச் செயல்புரிந்து 20 பேரை காப்பாற்றிய மகாராஷ்டிர மாநில உளவுத் துறை அதிகாரிக்கு பிரதமரின் விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் வியாழக்கிழமை நடக்கும் அகில இந்திய போலீஸ் மாநாட்டில், முதல்வர் கருணாநிதி அவருக்கு இந்த விருதை வழங்குகிறார்.

மகாராஷ்டிரத்தில் துணை புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் சாம்பாஜி ராம்சந்திர சலுங்கே. 2005 ஜூலை 26-ல் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மும்பை நகரமே தத்தளித்தது. அப்போது மும்பை புறநகர் பகுதியான பாந்திராவில் வெள்ளத்தில் சிக்கி வாழ்வா, சாவா என்று 20 பேர் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தமது உயிரை துச்சமாக மதித்து அவர்களைக் காப்பாற்றினார் சலுங்கே.

Posted in Flood, Hero, Karunanidhi, Mahrashtra, Newsmakers, people, Ramachandra Salunge, Salunge, Sambaji Ramachandra Chalunge | Leave a Comment »