Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 21st, 2007

‘Guru’ Mani Rathnam – Kumudam Interview

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

 17.01.07  சினிமா

தனது படத்தின் கதா பாத்திரங்களைப் போலவே அளந்துதான் பேசுகிறார் மணிரத்னம். இந்தியாவின் முன்னணி இயக்குநர் என்று அவரைப் பார்த்து முடிவு செய்ய முடியவில்லை. அவ்வளவு சிம்பிள். ‘குரு’ படத்தின் ரிலீஸ் பிஸியிலிருந்தவரை, அவரது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ அலுவலகத்தில் சந்தித்தோம்.

‘கி விணீஸீவீக்ஷீணீtஸீணீனீ திவீறீனீ’ _இந்த ஒரு விஷயத்துக்காகவே மக்கள் படம் பார்க்க வந்துடுவாங்க. அப்படி இருக்கும்போது, உங்க படத்துக்கு அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நடிகர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?

‘‘ஒரு படத்துல 50% வேலை. சரியான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் முடிஞ்சிடும். அதனால ஸ்டார் கேஸ்ட் ரொம்ப முக்கியம்.. எங்கே நிக்கணும், கையை எவ்வளவு தூரம் உயர்த்தணும் போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட, ஒரு நடிகருக்குச் சொல்லிட்டிருக்க முடியாது. அதற்காகத்தான் அனுபவமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்கறேன். அவ்வளவுதான்.’’

குரு_அம்பானி காண்ட்ரவர்ஸியை எப்படி சால்வ் செய்தீங்க? முகேஷ் அம்பானி படம் போட்டு காண்பிக்கும்படி கேட்டாரா, நீங்கள் ஸ்பெஷலாக அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தீர்களா?

‘‘அது ஒரு காண்ட்ரவர்ஸியே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய எம்பையர். அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ‘குரு’ படத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க நேரம் இருக்குமாங்கிறதுகூட சந்தேகம் தான். அவங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் கருவைப் பற்றி நினைத்து, சர்ச்சையைக் கிளப்ப சான்ஸே இல்லை. அம்பானி குடும்பத்திலிருந்து நேரடியாக யாரும் என்னுடன் பேசலை, படத்தைப் போட்டுக் காண்பிக்கச் சொல்லலை. நானும் போட்டுக் காட்டவில்லை. திருபாய் அம்பானி என்ற தனிமனிதனின் வாழ்க்கை, வரலாறு கிடையாது! கனவைத் துரத்துகின்ற ஒவ்வொரு மனிதனுடைய கதை. ஒவ்வொருத்தரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை, இந்தப் படத்தில் பார்க்கலாம்.

அப்புறம், ‘குரு’ தமிழ் டப்பிங்குக்காக ரொம்பமெனக்கிட்டிருக்கோம். அபிஷேக்குக்கு சூர்யாதான் டப்பிங் பேசியிருக்கார். அபிஷேக் நடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை விட, சூர்யா டப்பிங்கில் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ரொம்ப பிரமாதமா பேசியிருக்கார். படம் தொடங்கிய சில நிமிடங்கள் அபிஷேக் மறைந்து சூர்யா நடிச்சிருக்கார்ங்கிற ஃபீலிங் வந்துடும். நிச்சயமா மற்ற டப்பிங் படங்கள் போல இருக்காது.’’

உங்க மனைவி சுஹாசினி திறமையான நடிகை. திருமணத்துக்குப் பிறகு நடிச்சிட்டிருக்காங்க. அவரை ஏன் உங்க ஒரு படத்தில்கூட நடிக்க வைக்கலைன்னு தெரிஞ்சுக்கலாமா?

‘‘என்னுடைய முதல் படமான கன்னட படத்துல அவங்களைத்தான் ஹீரோயினாக நடிக்கக் கேட்டேன். நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அவ்வளவுதான். அதிலிருந்து என் படத்தில் நடிக்கிறீங்களான்னு கேட்கமாட்டேன், அவங்களும் கேட்டதில்லை. ஆனால், என் ஒவ்வொரு படத்திலும் ஸ்கிரிப்ட் டைட்டில் குறிப்பாக வசனங்களில் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க. எல்லாப் படங்களிலும் ஒரு சீனுக்காவது அவங்க வசனம் எழுதியிருப்பாங்க, இலவசமா எனக்குக் கிடைக்கிற ஹெல்ப் இது!’’

மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி பிரமாண்டமான ஹிட் சாங் கொடுத்திருக்கு. அதே மாதிரி, இதற்கு முன்பு இளையராஜாவும் நீங்களும் இணைந்த படங்களும் மியூசிக்கல் ஹிட்தான், மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் எதிர்பார்க்கலாமா?

‘‘நிச்சயமாக. இளையராஜா ஒரு ஜீனியஸ். அவருடைய பாடல்கள் தற்செயலாக கேட்டால்கூட சில சுவாரஸ்யமான நினைவுகளை எனக்கு நினைவூட்டும். அவர் வித்தியாசமாக இசையமைக்கும்படியான_ஒரு வித்தியாசமான கதையைத் தயார் செய்து அவருடன் அதில் வேலை செய்ய விருப்பம். அவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் அவருடன் இணைந்து வொர்க் பண்ணுவேன்.’’

பத்தொன்பது படங்கள், பெரும்பாலானவை மெகா ஹிட், சாதிச்சிருக்கோம்கிற ஃபீலிங் கிடைச்சிருக்கா?

‘‘எனக்கு இதுவரை எந்தப் படமும் திருப்திகரமாக அமைந்ததில்லை, அமையவும் அமையாது. ஏன்னா எல்லோரும் படத்தைப் பார்த்துட்டு இது நல்லா இருக்கு, அந்த சீன் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா எனக்கு படம் பார்க்கும்போது, இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்னு தான் தோணும். எப்போது நான் திருப்தியா ஃபீல் பண்றேனோ அப்போதான் சாதிச்சிட்டோம்ங்கிற உணர்வும் கிடைக்கும்.’’

அடுத்தும் லஜ்ஜோ என்ற ஹிந்திப் படம்தான் பண்ணப் போறீங்க, இனி ஹிந்திப் படம் மட்டும்தானா? தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லப் போறீங்களா?

‘‘எப்படி முடியும்? இந்தப் படத்தை முடிச்சிட்டு அடுத்து கண்டிப்பா தமிழ் படம்தான்!’’

ரஜினியுடன் இணைந்து, படம் பண்ணப் போவதாக வரும் செய்திகள்?

‘‘உண்மை இல்லை!’’

ஹிந்தியில் தமிழ்க் கலைஞர்களை வளரவிடாமல் தடுக்கும் வழக்கம் இருந்திருக்கு. இந்த பாலிடிக்ஸை எப்படி சமாளிச்சிருக்கீங்க?

‘‘வளரவிடாமல் தடுத்தால், நாம விட்டுடுவோமா? திறமை இருக்கணும், நம்ம வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா? தகுதியும், திறமையும் இருந்தால் யாரையும் யாராலும் தடுக்க முடியாது…’’ _ அதிரடியாகக் கூறுகிறார் இயக்குநர் மணிரத்னம்!

_ஜனனி

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Guru, Interview, Kumudam, Kumudham, mani Rathnam, Mani Ratnam | 1 Comment »

Pattukottai Prabhakar – Arasu Bathilgal

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.

வந்த புத்தாண்டு வாழ்த்து அட்டைகளில் கவர்ந்தது?

‘உலகம் இப்படி இருக்கிறதே’ என்று வருந்துபவர்களைக் காட்டிலும் ‘உலகம் இப்படித்தான் இருக்க வேன்டும்’ என்று போராடுபவர்களே உலகத்துக்குத் தேவை’ என்கிற மேற்கோளுடன், புத்தகப் பக்க அடையாளமாகவும் பயன்படக் கூடிய அளவில் வந்த வாழ்த்து அட்டை. அனுப்பியவர்: பட்டுக்கோட்டை பிரபாகர்.

Posted in Arasu Bathilgal, Arasu Bathilkal, Arasu Pathilgal, Arasu Pathilkal, Greeting Card, Kumudam, Kumudham, New Year, Pattukottai Prabhakar, Wishes | 4 Comments »

Tamil Actress Salary details – Kumudam

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

24.01.07 சினிமா

ஒருமுறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள்.

ம்ம்… இப்போது படியுங்கள்.

சிம்ரன், ஜோதிகா, லைலா, ஷாலினி, ரோஜா, ரம்பா, தேவயாணி, மும்தாஜ், கிரண், மீனா, அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், ஸ்நேகா, சதா, பூஜா, பூமிகா, நமீதா, பாவனா, நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், சோனியா அகர்வால், நிலா, ஜெனிலியா, கோபிகா, சந்தியா, மாளவிகா, மம்தா மோகன்தாஸ், ஜோதிர்மயி, பத்மப்ரியா, தமனா, இலியானா, சங்கீதா, அனுஷ்கா, லக்ஷ்மிராய், தியா, அபர்ணா, ப்ரியாமணி, அமோகா, சிந்துதுலானி, ‘குத்து’ ரம்யா, ‘தம்’ ரக்ஷிதா, வசுந்தராதாஸ், கௌசல்யா, கஜாலா, ராதிகா சௌத்ரி, சொர்ணமால்யா, குட்டிராதிகா, திவ்யா உன்னி, கனிகா, விந்தியா, சாயாசிங், மதுமிதா, உமா, ப்ரியங்கா த்ரிவேதி, காயத்ரி ஜெயராம், காயத்ரி ரகுராம், அபிதா, ஸ்ரீதேவிகா, அக்ஷயா, பூனம், ரேணுகாமேனன், நந்தனா, மோனிகா, சுனிதா வர்மா, சரண்யா பாக்யராஜ், நிகிதா, நந்திதா, ஸ்ரீதேவி, ஆஷிமா, காவேரி, சாக்ஷி, ஸ்ரியாரெட்டி, ஷெரீன், அங்கீதா, சூஸன், சமீக்ஷா, மல்லிகா கபூர், ஷீலா, வேதிகா, மீரா வாசுதேவன், விமலாராமன், காம்னா, ஸ்ருதி, ஸ்ருதிகா, ஸம்விருதா, கீரத், காமினி, அதிசயா, மேக்னா நாயுடு, பூர்ணிதா, நித்யாதாஸ், கீர்த்தி சாவ்லா, கார்த்திகா, பானு, கமாலினி முகர்ஜி, தீபா, ரெஜினா, ஆன்ட்ரியா, நர்கீஸ், உதயதாரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென், பிபாஷாபாசு, மல்லிகா ஷெராவாத்.’

என இன்றைய தலைமுறை தமிழ் சினிமா இந்த நூற்றியெட்டு கிளுகிளு ஹீரோயின்களின் பெயர்களைத்தான் கலர்ஃபுல் மந்திரமாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது. (சிம்ரன் நடிக்க வந்த பிறகு கோலிவுட்டுக்கு குறி வைத்த நடிகைகள் பட்டியல்தான் மேற்படி பட்டியல். நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்)

இந்த நடிகைகளுக்கு மெனக்கெட்டு உடலை வருத்தி நடிக்கும் வாய்ப்புகள் இல்லை. பக்கம் பக்கமாக பேசுகிற வசனங்கள் இல்லை. அதிகப்படியான காட்சிகளும் இல்லை. வெளிநாடுகளில் கடும் பனியில், ‘பட்ஜெட்’ உடையில் டூயட் பாட இரண்டு மூன்று பாடல்கள் உண்டு. இவையெல்லாவற்றையும்விட, ஹீரோக்களுக்கு இணையாக மார்க்கெட் வேல்யுவோ பிஸினஸோ எதுவும் இல்லாத போதிலும் சம்பளம் மட்டும் அதிகம் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். இதுமட்டும் எப்படி சாத்தியம்?

வாய்ப்புகள் பிடிப்பது எப்படி?

ஒரு நடிகை எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அழகாக இருந்தாலும் ஓடுகிற படத்தில் அவர் ஹீரோயினா இருக்கவேண்டும் அல்லது முன்னணி நடிகருக்கு ஜோடியாக இருக்க வேண்டும். இப்படி ஜோடி சேர்வதற்கு சில காரியங்கள் செய்யவேண்டும். ஹோட்டலில் தங்கியிருக்கும் நடிகை சினிமா ஜாம்பவான்களுக்கு ஃப்ரெண்ட்லியாக விருந்து கொடுப்பது, புதிய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு ஜிலுஜிலு உடைகளில் வந்து எல்லோரையும் அசர வைப்பது. இதையும் தாண்டி ஹீரோக்களின் வீட்டுக்கே சென்று அவருடைய வீட்டுச் சமையலை பாராட்டுவது, அவர்களது குடும்பத்தின் சென்டிமெண்ட்டான ஆதரவைப் பெறுவது என இப்படி நடிகருக்கும் நடிகைக்கும் இடையே நல்லுறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதன் பலன், நட்பு ரீதியாக வாய்ப்புகள் நிச்சயம்.

ஹீரோ ரெக்கமண்டேஷன்

ஒரு தயாரிப்பாளர் மார்க்கெட்டில் உள்ள முன்னணி ஹீரோவை வைத்து படமெடுக்க மும்முரமாக இருப்பார். முன்னணி ஹீரோவை வைத்து படமெடுப்பதால், சுலபமாக ஃபைனான்ஸியர்களிடமிருந்து பண உதவி பெறமுடியும், லாபம் பார்க்க முடியும், பெரிய தயாரிப்பாளர் என்ற இமேஜ் கிடைக்கும். இதனால் பெரிய ஹீரோவை எப்படியாவது கமிட் செய்து விடுவார் அந்தத் தயாரிப்பாளர். உடனே அந்த ஹீரோவும், தயாரிப்பாளரும் இயக்குநரை முடிவு செய்வார்கள், அடுத்தது ஹீரோயின் உடனே ஹீரோ தனக்கு நட்பு ரீதியில் இருக்கும் ஹீரோயினை ஒப்பந்தம் செய்யலாம் என்பார். இதனால் அந்தத் தயாரிப்பாளர் அந்த ஹீரோயினையே கமிட் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார். அந்த ஹீரோயினை கமிட் செய்ய அதிக சம்பளம் கொடுக்கவும் தயாராக இருப்பார். காரணம் ஹீரோவின் ரெக்கமண்டேஷன். இதனால் நாயகியின் சம்பளம் ஏறுவதை தடுக்க முடியாது.

யார் முன்னணி?

தற்போதைய சூழ்நிலையில் நம்பர் விளையாட்டில் முன்னணியைப் பிடிப்பதற்கு அஸின், த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயாவுக்கு இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது.

சம்பளத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது தற்போது த்ரிஷா ஒரு லாங் ஜம்ப்பில் முந்திப் போய் கொண்டிருக்கிறார்.

திறமையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அஸின் முன்னணியில் வேகமெடுத்து இருக்கிறார்.

திறமை, சம்பளம் இரண்டையும் தவிர்த்து, மக்களிடையே ஏற்படும் திடீர் மவுசு ஒரு நடிகையை எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி விடும். அந்த வகையில் ‘சிவாஜி’யில் ரஜினியின் ஜோடியான ஸ்ரேயா கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

‘‘முன்னணி நடிகர்களுடன் க்ளாமரான ஹீரோயின்கள் டூயட் ஆடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். இத்தோடு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி பெறவும் படத்தோட வியாபாரத்திற்கும் இந்த ஹீரோயின்களும் காரணமாக இருப்பதால் அதிக சம்பளம் தவிர்க்க முடியாததாகிறது’’ என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி.

தமிழ் நடிகைகளில் தனக்கென ஒரு நிலையான இடம் பிடித்த நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய போது அவர் வாங்கிய சம்பளம் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்தான். ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்னணி நடிகைகளின்

சம்பளப் பட்டியல் (தோராயமாக)

த்ரிஷா _ 65_80 லட்சம்
அஸின் _ 40_60 லட்சம்
நயன்தாரா _ 40_60 லட்சம்
ஸ்ரேயா _ 50 லட்சம்
ஜெனிலியா _ 40 லட்சம்
நிலா _ 25 லட்சம்
சதா _ 25 லட்சம்
ரீமாசென் _ 20_30 லட்சம்
பாவனா _ 20_25 லட்சம்
ஸ்நேகா _ 20 லட்சம்
நமீதா _ 18 லட்சம்
பூஷா _ 10_15 லட்சம்
கோபிகா _ 12 லட்சம்
சந்தியா _ 7_10 லட்சம்

_ ஆதித்யா இராமநாதன்

—————————————————————————————————

நடிகர் சங்கத்தில் ஸ்ரேயா, ஜெனிலியா உறுப்பினரானார்கள்: சம்பளத்தில் புதிய கட்டுப்பாடு

நடிகர் சங்கத்தில் 20 சதவீதம் நடிகர்-நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். குறிப்பாக மும்பை நடிகைகள் சங்கத்தில் சேரவில்லை. நடிகர் சங்க கூட்டங்களுக்கும் வருவது இல்லை. ஆனால் அவர்களின் சம்பள பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட்டு தீர்த்து வைத்தது.

இனிமேல் உறுப்பி னர் அல்லாத நடிகர்-நடிகை களுக்கு உதவுவதில்லை என்று நடிகர் சங்கம் முடிவு எடுத்துள்ளது. அவர்களை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்றும் தயா ரிப்பாளர் சங்கத்தை கேட்டுக் கொண்டு உள்ளது.

நடிகர் சங்கத்தின் கிடுக்கிப்பிடியால் ஒருவாரமாக பலர் உறுப்பினர் படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர். நடிகை ஸ்ரேயா உறுப்பின ராக சேர்ந்துள்ளார். ஜெனிலியா வும் உறுப்பினராகியுள்ளார். இதுவரை உறுப்பினராகாமல் இருந்த இளம் கதாநாயகர்களும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.

இதற்கிடையில் நடிகர்கள் சம்பள பிரச்சினையிலும் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சிங்கப்பூரில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த நட்சத்திர கலைவிழாவுக்கு பலர் வர மறுத்தனர். விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் – நடிகைகளுக்கு பக்க பலமாக இருந்த நடிகர் சங்க விழாவை முன்னணி நட்சத்திரங்கள் புறக்கணித்தது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கமும் அழைப்பு விடுத்தது. அதையும் உதாசீனம் செய்தனர்.

இந்த நிலையில் 50 லட்சம் வரை வாங்கும் நடிகைகள் சம்பளத்தில் புதிய கட்டுப்பாடுகள் வருகிறது. சம்பளத்தில் 70 சதவீதத்தை முன்கூட்டி வாங்க வேண்டும் என்றும் 30 சதவீதம் படம் ரிலீசுக்கு முன்பு தரப்படும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் யோசனை தெரிவித்தது. அது இதுவரை ஏற்கப்படாமல் இருந்தது. அந்த தீர்மானம் ஓரிரு வாரத்தில் அமுலுக்கு வர உள்ளது. நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவு, விமான பயண செலவு போன்றவற்றிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

Posted in Actors, Actresses, Boys, Boyz, Compensation, Genelia, Harini, Jenelia, Kumudam, Lists, Movies, Price, Salary, Shankar, Shreya, Sriya, Tamil Actress, Tamil Cinema, Tamil Films | 2 Comments »

TV Serial Actress stories – Rumor mill gossips from Kumudam Reporter

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

21.01.07  கவர் ஸ்டோரி

‘‘கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில் எங்கள் டீம் ரெய்டு நடத்தியது. அப்போது அங்குள்ள காட்டேஜ்களில் அரைகுறை ஆடைகளுடன் மதுக் கோப்பையும் கையுமாக இருந்த பல இளம் பெண்கள் சிக்கினார்கள். அதில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள், சின்னத்திரை நடிகைகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றிய எங்கள் டீம், கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த வேன் கமிஷனர் அலுவலகம் வருவதற்குள், மத்திய அமைச்சரின் பி.ஏ. முதல் லோக்கல் மாவட்டச் செயலாளர் வரை பல தரப்பினரும் இந்தச் சின்னத்திரை நடிகைகள் மீது புகார் எதுவும் பதியாமல் விட்டுவிடும்படி போனில் வற்புறுத்தினார்கள். பிடிபட்ட ஒவ்வொரு நடிகைக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் பிரபலம் வக்காலத்து வாங்கிப் பேசியதில், எங்கள் மேலதிகாரிகளே மிரண்டு போய், அந்த நடிகைகளை அனுப்பிவிடச் சொல்லிவிட்டார்கள்! அத்தனை ஏன்? ஒரு நடிகையின் சார்பாக சென்னை நகர இணை கமிஷனர் ஒருவரே பேசினார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நம்மிடம் பேசிய விபசாரத் தடுப்புப் பிரிவு அதிகாரியருவர்.

ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக் கொண்ட நாம், அதிகாரி சொன்ன தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சின்னத்திரை வட்டாரத்திற்குள் புகுந்து ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்குள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்ன தகவல்களைக் கேட்டு, நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

சின்னத்திரையில் பல காலமாக ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர், ‘‘டி.வி.யில் நடிப்பதற்கென்று வரும் பெண்கள் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அதே சமயம், இவர்கள் அடிப்படையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பணத்தைக் காட்டி அவர்களை ஏமாற்ற முடியாது. என்றாலும், எங்களைப் போன்ற சீஃப் டெக்னீஷியன்களில் சிலர் செய்யும் சில்மிஷங்களை, அவர்களால் தடுக்கவும் முடியாது!’’ என்று பேச ஆரம்பித்தார்.

‘‘புதுமுகப் பெண்களை நாங்கள் மடக்கும் பாணியே அலாதியானது. அந்தப் பெண்ணை எந்தக் கோணத்தில் எடுத்தால் அழகாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் எடுக்காமல் ஒட்டுமொத்த யூனிட்டையே அப்செட்டில் ஆழ்த்திவிடுவோம். இந்தப் பெண் தேறாது என்ற பேச்சை உருவாக்கி விட்டு பிரேக் விடுவோம். அந்த நேரத்தில் மேக்கப் ரூம் போயிருக்கும் அந்தப் பெண்ணிடம் எங்களின் உதவியாளர் போய், ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டால் அழகாகப் படம் பிடிப்போம்’ என்பார். அந்தப் பெண் அதைப் புரிந்துகொண்டு சம்மதித்து விடுவார். இது பொதுவான யுக்திதான்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நம்மை அதிரவைத்தார் அவர்.

பிரபலமான சின்னத்திரை இயக்குநர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் தொழில் ரீதியாக மட்டுமே பேசிவிட்டு, ரிலாக்ஸாக இருக்கும்போது, ‘இன்று ஒரு பார்ட்டி இருக்கிறது. வருகிறாயா?’ என்று கேட்போம். பெரும்பாலான பெண்கள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கம்பெனி கொடுப்பது வழக்கம். புரியாமல் முரண்டு பிடிக்கும் பெண்களின் கேரக்டரை தொடரில் மட்டுமின்றி, நிஜத்திலும் டேமேஜ் பண்ணி டம்மி ஆக்கிவிடுவோம்!’’ என்று அலட்டாமல் சொன்னார்.

ராஜ உபசாரம், கை நிறையச் சம்பளம், அபரிமிதமான விளம்பரம் என்று சகல விதத்திலும் போதையூட்டும் ஒரு மீடியா சின்னத்திரை. அதில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் கொஞ்சம் தடம் மாறித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

‘‘ஒரு தொடரில் கண்ணியமான கணவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஒரு நடிகர். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதெல்லாம், ஒரு பெண் அவர் மொபைலில் தொடர்ந்து பேசுவார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் அவரை நேரில் சந்திக்க விரும்பி, தன் வீட்டிற்கு வரச் சொன்னார். அவரும் கொஞ்சம் தயக்கத்துடன் அங்கு போனார். போன இடத்தில் அந்தப் பெண்ணின் பின்னணியைத் தெரிந்து பரிதாபப்பட ஆரம்பித்தார். கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு, கணவரால் சுகம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அவரைக் கட்டிப் பிடித்து அழுத அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். பிறகு, அவரே அந்தப் பெண்ணுக்குக் கள்ளப் புருஷன் ஆகிவிட்டார்!’’ என்றவர், ‘‘அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், மேலும் சிலருக்கும் அவர்தான் இப்போது சுந்தர புருஷன்’’ என்று தனது இயக்கத்தில் நடித்து வரும் ஒரு நடிகரைப் பற்றிய பின்னணியை விளக்கினார் ஓர் இயக்குநர்.

சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘இப்போதெல்லாம் டி.வி.க்கு வந்திருப்பவர்கள் நடிக்கத் தெரிந்தவர்களாக மட்டுமல்ல, வாழவும் தெரிந்தவர்களாக _ வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.

‘‘ஒரு டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஜோடி’களின் ஆட்டத் தொடரைப் பார்த்தீர்களா? அதில் ஜோடிகள் இஷ்டத்துக்கு மாறி மாறி ஆடிவிட்டு இஷ்டத்துக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்தீர்களா? அந்த ஜோடிகள் ரிகர்சல் என்ற பெயரில் நடத்திய கூத்துக்களையும், சில்மிஷங்களையும் கூட படம் பிடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால் அந்த ஜோடிகளே அவமானத்தில் கூனிக் குறுகிப் போவார்கள். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டானதால், இதன் தொடர்ச்சியாக வேறொரு பெயரில் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, அதில் பல காட்சிகள் இடம் பெறப் போவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிகர்சலில் இன்னும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றக் காத்திருக்கிறார்களோ? தாங்கள் செய்வது இன்னதென்றே தெரியாமல் செய்யும் அவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை!’’ என்றார் வேதனையுடன்.

ஆளாளுக்கு இப்படிச் சொன்னாலும் ‘வாய்ப்பு பறிபோனாலும் பரவாயில்லை. உங்கள் இஷ்டத்திற்கு நான் உட்பட மாட்டேன்’ என்று அடம் பிடிக்கும் நடிகைகளும் சின்னத் திரையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பல வெற்றித்தொடர்களை இயக்கிய ஒருவர், தனது தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகையும் தனது இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண்களுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுப்பாராம். ஃபீல்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இவரின் கேரக்டர் தெரியும். இந்த நிலையில், இவருடைய புதிய தொடரில், பெரிய திரையில் அறிமுகமாகிப் பிரபலமான, வாசமுள்ள பெயர் கொண்ட நடிகை அறிமுகமானார். அந்த நடிகையையும் இந்த இயக்குநர் வழக்கம்போல மடக்கிப்போட முயல… நடிகை மறுப்புச் சொன்னதோடு, ‘முடிந்தால் தொடரில் இருந்து என்னைத் தூக்கி விடுங்கள்’ என்றும் கூலாகச் சொல்லிவிட்டார். இதில் இயக்குநருக்கு ஷாக்தான்.

இவரை மாதிரியே இந்தத் துறையில் பலரும் இருப்பதாகத் தெரிவித்த ஒரு நடிகை, ‘‘டி.வி.யில் நடிப்பவளை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்ல, அரசியல் பிரபலங்கள் அழைப்பதும் சகஜம். தமிழக அரசியல் வி.ஐ.பி. ஒருவர் கடந்த சில வருடங்களாக வாரந்தோறும் சின்னத்திரை நடிகைகளுக்கெனவே ஒரு காக்டெயில் பார்ட்டி வைப்பது வாடிக்கை. அவருடைய பொருளாதார உதவியுடன் பல தொடர்கள் இங்கு தயாராகி வருவதால், கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் அவர் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம். பார்ட்டிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

அதுபோல், இன்னொரு அரசியல் வி.ஐ.பி., மாதமொரு முறை டிஸ்கொதே நடத்துவது வழக்கம். அதில் கலந்து கொள்ள பல தொழிலதிபர்கள் வருவதால் நாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். அந்த பார்ட்டி முடிந்து திரும்பும்போது ஒவ்வொரு நடிகைக்கும் இரண்டு, மூன்று பவுன் தங்கச்சங்கிலி பரிசாகக் கிடைக்கும்’’ என்று பல விஷயங்களைச் சொல்லிவிட்டு, ‘‘இது போன்ற பெரிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏன் இழக்கவேண்டும்? அது மட்டுமின்றி இப்படி ஃப்ரீயாகப் போய் வருவதன் மூலம் தான் எக்கச்சக்கமான வாய்ப்பும் கிடைக்கிறது. அதை ஏன் இழக்க வேண்டும்’’ என்று யதார்த்த நிலையை விளக்கினார் அந்த நடிகை.

‘‘மாடலிங் பெண்களைப் போல எங்களுக்கும் சில நட்சத்திர ஓட்டல்களில் பீர் மற்றும் சிற்றுண்டிகள் இலவசம்தான். அங்கு இதுபோன்ற சில விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது வாழ்க்கையை அனுபவிப்பதுடன் அதிகபட்சம் சம்பாதிப்பதும் முக்கியம் இல்லையா?’’ என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறார் இன்னொரு சின்னத்திரை நடிகை.

ஒரு சீனியர் நடிகைதான் நடிகைகளின் மீடியேட்டராகச் செயல்பட்டு வருகிறார். அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் யாராவது பணக்காரரின் தயவில் ஒரு காக்டெயில் பார்ட்டி ஏற்பாடு செய்து விடுவார். அதில் கலந்து கொண்டாலே கூச்சமெல்லாம் குறைந்து விடும். அந்தளவுக்கு பார்ட்டியில் ஆபாசம் தலைவிரித்தாடுமாம்!

அதுமட்டுமின்றி, ‘இந்த மீடியாவில் பிரபலமான இரண்டு நடிகைகளின் லெஸ்பியன் விளையாட்டும் ஒவ்வொரு பார்ட்டியின்போதும் பகிரங்கமாக நடக்கும்!’ என்றும் சொல்லி நம்மைத் திடுக்கிட வைத்தார், நீண்ட காலம் சின்னத் திரையில் வலம் வரும் நடிகை ஒருவர்.

இதுபோன்று நடக்கும் பல பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பழகுகிறார்கள். நான்கெழுத்து மூத்த நடிகையருவர், தான் சந்திக்கும் பிரபலங்களிடம் கேஷ§வலாக, ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கடனாகக் கொடுங்கள் என்று கேட்பார். ஒரே பார்ட்டியில் நாலைந்து ஆட்களிடம் எதையாவது சொல்லி ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கி விடுவார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ‘என்கிட்டே கேட்கறதுக்கு எவ்வளவோ இருக்கும்போது பணத்தைக் கேட்கலாமா?’ என்று சொல்லி அடுத்த கட்டமாக நேரடியாகவே ‘காட்டேஜ் ஏதாவது போய் வரலாமா?’ என்றும் கேட்டு விடுவார்.

உயரமான இரண்டெழுத்து நடிகையருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நம்மிடம் கேஷ§வலாக, ‘உங்களுக்கு வலது தொடையில் மச்சமிருக்கிறதா? எனக்கு அங்கே இருக்கிறது’ என்பார். அதிர்ந்து போய் நாம் பார்க்கும்போது, ‘வாருங்களேன். அதை செக் பண்ணிப் பார்ப்போம்!’ என்பார்.

பெரிய கண்ணழகி நடிகையருவர், நம்மிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கிவிட்டு தாங்க்ஸ் சொல்லி விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குள், பலான வாசகங்களுடன் கூடிய எஸ்.எம்.எஸ். செய்திகளை அடுத்தடுத்து அனுப்புவார்.

ஒட்டுமொத்த ஃபீல்டிலேயே உயரம் குறைந்த அந்த நடிகை, பார்ட்டிக்கு வந்திருப்பவர்கள் போட்டிருக்கும் மைனர் செயினின் கனத்தைப் பொறுத்து ஒவ்வொருவர் அருகிலும் உட்கார்ந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவரது மானரிஸமாம் அது!’’ என்று விலாவாரியாகச் சொன்னதைக் கேட்டு நம்மால் முகத்தைச் சுளிக்கத்தான் முடிந்தது.

இப்படி பலதரப்பினரும் பல்வேறு தகவல்களைக் கூறிய நிலையில், இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள சின்னத்திரையின் பிரபல நடிகையான பிருந்தா தாஸைச் சந்தித்துப் பேசினோம்.

அவர், ‘‘இப்போதைய சூழ்நிலையில் இந்தச் சின்னத்திரை ஆரோக்கியமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. படித்தவர்கள் பலரும் இப்போது பங்கெடுத்து வருவதால் போட்டியும், பொறாமையும் அதிகமாக இருக்கிறது.

அதே சமயம், சின்னத்திரைக்கு வரும் பெண்கள் நடிக்க மட்டும்தான் வந்திருக்கிறோம் என்பதையும், இஷ்டப்படி வாழ்வதற்கு அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். இதில் நடித்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் மிகவும் குறைவு. அதனால், பணத்திற்காக தவறான பாதையில் போகும் பெண்களும் குறைவு.

மற்ற தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குரிய ஆசாபாசங்கள் எங்களுக்கும் உண்டு. சின்னத்திரை நடிகைகளான நாங்களும் எங்களுக்குள் பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளென்று பார்ட்டி வைத்துக் கொண்டாடுவோம். எங்கள் ‘ஆனந்தம்’ சீரியல் யூனிட்டிற்கு நான்தான் கோ_ஆர்டினேட்டராகச் செயல்படுகிறேன். இதில் ஒன்றும் தப்பில்லையே!

அதே சமயம், எனக்கும் எங்கள் யூனிட்ச் பெண்களுக்கும் மற்ற ஆண்களுடன் பேசிப் பழகுவதில் நாகரிகத்தையும் ஓர் எல்லையையும் கடைப்பிடிப்போம். அப்படியிருந்தும் எங்களைப் பற்றி தப்புத்தப்பாகச் செய்திகள் வருவது வருத்தத்தையே தருகிறது. எங்கள் சின்னத்திரை வாழ்க்கையும் ஸ்போர்ட்ஸ் மற்றும் மாடலிங் துறையினரின் வாழ்க்கையும் திறந்தவெளி அரங்கில் நடப்பதால், சில சிக்கல்களும் அசௌகரியங்களும் இருக்கின்றன.

இந்தத் துறையிலுள்ளவர்கள் தப்புச் செய்தாலும் தவறிப் போனாலும் ஒட்டுமொத்த மீடியாவுக்கும் தெரிந்து விடும். அப்படியிருக்கும்போது யாரும் பாதை மாறிப் போக மாட்டார்கள் என்பதை நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள் இங்கு சகஜமான விஷயம். அது இங்கே மட்டும் நடக்கிற ஒரு விஷயமில்லையே?’’ என்றார்.

‘‘எங்கள் துறையின் இளைய தலைமுறை இஷ்டத்துக்கு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள் தான். அதைத் தப்பு என்று அவர்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது.

சின்னத்திரையின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாதை மாறி பணத்திற்காக எதையும் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பெண்கள் சின்னத்திரையில் மட்டும்தானா இருக்கிறார்கள்?

ஆனாலும் இவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தி சின்னத்திரையை ஆரோக்கியமாக்கிக் காட்டுவதே எங்கள் லட்சியம்!’’ என்றார் சின்னத்திரை கலைஞர்கள் சங்கத் தலைவரான வசந்த்.

அவர் சொன்னபடி சின்னத்திரை கலாசாரம் நேர்வழியில் பயணப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும், ஆதங்கமும்!

படங்கள் : நாதன்
 வி. குமார்

Posted in Actress, Gossip, Kumudam Reporter, Life, Magazines, Party, Rumor, Serials, Sex, TV | 1 Comment »

Japan’s Sex Mela – Kumudam Reporter

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

21.01.07  ஹாட் டாபிக்

தொழில்நுட்பத்தில் அசுர முன்னேற்றம் பெற்ற நாடான ஜப்பான், இப்போது செக்ஸ் தொடர்பான விஷயங்களிலும் தனக்கு ஈடு இல்லை என்று சொல்லுமளவுக்கு அதிவேகமாக முன்னேறி விட்டது. உலகைத் தன்பக்கம் திரும்ப வைக்கக்கூடிய அளவிலான, ஒருங்கிணைந்த உடலுறவுக் காட்சி நிகழ்ச்சி ஒன்று அண்மையில் ஜப்பானில் நடந்துள்ளது. கணவன், மனைவிக்குள்_நான்கு சுவருக்குள் மட்டும் நிகழ வேண்டிய புனிதமான தாம்பத்ய உறவினை, நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்று, அப்பட்டமாக நாடே பார்க்குமளவுக்கு, மிகப்பெரிய அளவில் அண்மையில் திருவிழாவாக நடத்திக் காட்டி ஜப்பானியர்கள் பெரும் ‘சாதனை’ புரிந்திருக்கிறார்கள்.

அரங்கத்திற்குள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி, வீடியோ படமாக்கப்பட்டு இணையதளத்திலும் வெளியிடப்பட்டு விட்டதால், அது உலகெங்கிலும் உள்ளவர்களின் கவனத்தை ஒரு சேர இழுத்திருக்கிறது. சாதிப்பதற்கு வேறு சங்கதியே இல்லையா என பலரையும் முகம் சுளிக்க வைத்த இந்த நிகழ்ச்சி, உலக அளவிலான சர்ச்சைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள பிரசித்தி பெற்ற மிகப்பெரிய உள்விளையாட்டரங்கமான மிட்சுயி என்ற இடத்தில்தான் சில வாரங்களுக்கு முன்பாக இந்தக் காமக்கூத்து நடைபெற்றிருக்கிறது. ஜப்பானின் மிகப்பெரிய இணையதளமான ஜெசெக்ஸ் நெட்வொர்க் என்னும் நிறுவனத்தின் ஐடியாவில் தயாரான நிகழ்ச்சி இது. தன்னுடைய இணையதளத்தில் ஆசியாவின் புகழ்பெற்ற பெண் மாடல்களின் நிர்வாணப் படங்களையும், வீடியோ ஆல்பங்களையும் வெளியிட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டிய நிறுவனம்தான் ஜெசெக்ஸ் நெட்வொர்க். வழக்கமான செக்ஸ் ஆல்பங்களைப் போல இல்லாமல், தன்னுடைய நேயர்களுக்குப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதன் நிர்வாகிகள் யோசித்த போதுதான், இப்படியரு ஐடியா அவர்களுக்கு உதித்திருக்கிறது.

இந்த மெகா செக்ஸ் மேளாவில் கலந்து கொள்வதற்கான ஆட்களைத் திரட்டுவதில் முதலில் தடுமாறிப் போயிருக்கிறது ஜெசெக்ஸ் நெட்வொர்க். அமெச்சூர் முகங்களாக இதில் பங்கேற்க வைக்கவேண்டும் என்ற அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. அதனால் தங்களின் இணையதளத்தில் நிர்வாண மாடல்களாகப் பங்கேற்றவர்களையே அழைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அந்த மாடல்களுடன் இணைந்து நடிக்க (!) முன் வந்த இளைஞர்களுக்குக் கூலியும் தரப்பட்டிருக்கிறது.

நிகழ்ச்சி நடக்குமிடத்துக்கு நான்கு தனித்தனி பஸ்களில் அழைத்து வரப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு, அதில் பங்கேற்பது குறித்தான ஒத்திகைகள் தொடர்ந்து ஒரு வாரம் நடத்தப்பட்டிருக்கிறது! அந்த உள்விளையாட்டரங்கத்தின் தளம் முழுவதிலும் திண்டுகளுடன் படுக்கை விரிக்கப்பட்டு இருந்தது. அரங்கத்தின் நீள அகலத்தைப் பொறுத்து, நீள்வரிசையில் ஜோடிகளுக்கு நான்கடி இடைவெளி விட்டு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

முதலில் உள்விளையாட்டரங்கத்தின் உள்ளே 250 பெண்களும் வரிசையாக நிறுத்தப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களின் உடைகளைக் களைந்து நிர்வாணக்கோலத்துக்கு மாறுகின்றனர். சற்று நேரத்தில் அந்த அரங்கத்தினுள் அழைத்து வரப்படும் ஆண்கள், அவர்களுடைய இணைகளுக்கு அருகே ஜோடியாக நிறுத்தப்படுகின்றனர். முதலில் முத்தப் பரிமாற்றத்துடன் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்டங்களைக் கடந்த பின்னர் உடலுறவில் நிறைவடைவதாக அமைக்கப்பட்டிருந்தது. சாரி, அந்தப் படங்களைப் பிரசுரிக்க இயலாது!)

மொத்தம் ஐந்து கேமிராக்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, எடிட் செய்யப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஓடும் வீடியோவாக ஜெசெக்ஸ் நெட்வொர்க்கின் ஆன் டிமாண்ட் என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆண், பெண் இருபாலரின் பிறப்புறுப்புகளை மட்டும் மாஃபிங் செய்து மறைத்திருப்பது மட்டுமே இதில் ஆறுதலான ஒரே விஷயம்.

‘500 றிமீக்ஷீsஷீஸீ ஷிமீஜ் ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவைப் பணம் செலுத்தி மட்டுமே டவுன்லோடு செய்து பார்க்க முடியும். இருந்த போதிலும் இதை டவுன்லோடு செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். இதன்மூலம் கோடிக்கணக்கில் பணத்தைப் பார்த்துவிட்டது ஜெசெக்ஸ் நெட்வொர்க். மனிதகுலத்தையே அச்சுறுத்தும் பேராபத்தான எய்ட்ஸ் பரவும் முக்கியமான காரணிகளில் ஃப்ரீ செக்ஸ், க்ரூப் செக்ஸ் போன்றவை பிரதான பங்கை வகிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். தற்போது வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இதைப்போன்ற வக்கிரமான நிகழ்வுகள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்திவிடும். இந்த மாதிரியான நிகழ்வுகள் உடனடியாகத் தடை செய்யப்படவேண்டிய ஒன்று என்று, உலகில் உள்ள பெரும்பான்மையான சமூக நல இயக்கங்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கின்றன என்பதும் இன்னொரு ஆறுதலான செய்தி! ஸீ

 வை. கதிரவன்

Posted in Japan, Kumudam Reporter, Sex | Leave a Comment »

30th Madras Book Fair: Chennai Book Exhibition – Kalainjar Visit & Hotsellers

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

புத்தகக் காட்சியில் முதல்வர்: பழைய நினைவுகளில் மூழ்கினார்

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள “”கலைஞர் கருவூலத்தின்” புகைப்படக் கண்காட்சியினை சனிக்கிழமை பார்வையிடுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை.முருகன்.

சென்னை, ஜன. 21: 30-வது சென்னை புத்தகக் காட்சிக்கு, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வந்தார். காட்சி அரங்குகளை 1 மணி நேரத்துக்கும் மேலாக பார்வையிட்டார்.

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் கருணாநிதி கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரால் புத்தக் காட்சி அரங்குகளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், புத்தக் காட்சியை சனிக்கிழமை பார்வையிட்டார். காலை 11.15 மணிக்கு மேல் வந்த முதல்வர் பேட்டரி கார் மூலம் புத்தக காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முன்னதாக, “கலைஞர் அறிவுக் கூடத்தில்’ வைக்கப்பட்டு இருந்த பழைமையான புகைப்படங்களைப் பார்த்து ரசித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த, முதல்வர் அதுகுறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

அவசரநிலைக் காலத்தின் போது, அண்ணாசாலையில் தான் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததை நினைவு கூரும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் பார்த்தார்.

“சூரியனைப் பற்றி சொல்வதென்றால்’ என்கிற தன்னைப் பற்றிய குறும்படத்தையும் அவர் பார்த்தார்.

புத்தகத் தோட்டத்தில் குறையும் நாவல் சுவை: கண்காட்சி இன்று நிறைவு

சென்னை, ஜன. 21: ஒளவையார் முருகப் பெருமானிடம் நாவல் பழத்தை விரும்பிக் கேட்டதாக கதை உண்டு.

புத்தகக் கடை என்றால் வாசகர்கள் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளைத் தேடிச் செல்வது வரலாறாகி வருகிறது.

புத்தகக் காட்சி மீது படையெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது நிஜம்தான். ஆனால், புத்தகம் என்றாலே நாவல்தான் என்ற காலம்தான் மலையேறிவிட்டது.

“”இப்போதெல்லாம் பாட நூல்களைத் தவிர்த்து, வாசகர்களிடம் அதிக வாக்குகள் பெறுவது சுயமுன்னேற்ற நூல்கள்தான்” என்கிறார் ஒரு பதிப்பாளர்.

இந்த ஆண்டு அநேகமாக எல்லா கடைகளிலுமே சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

“”புனைகதைகளை எழுதி வந்த எழுத்தாளர்களில் பலர் இப்போது சுய முன்னேற்றம் குறித்த நூல்களை எழுதுகிறார்கள்” என்றார் அவர்.

புத்தகங்களை அடுத்து, நல்ல விற்பனை ஆவது, மேற்படிப்புக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் வெளியிடப்படும் வழிகாட்டி புத்தகங்கள்தான். பாடப் புத்தகங்களுக்கு மாற்றாக “நோட்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நூல்களைப் படித்தே ஒரு காலத்தில் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று வந்தனர்.

நோட்ஸ் மட்டும் படித்தால் பெருமை அல்ல என்று அக்காலத்தில் கருதப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு உதவும் கையேடுகள், வழிகாட்டி நூல்கள் அதிகம் விற்பனை ஆகின்றன என்கிறார்கள்.

“”9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது இத்தகைய நூல்களைத்தான். இது தவிர, டோஃபில், கேட், மாட், ஜி.ஆர்.இ. போன்ற உலக அளவிலான மேற்படிப்புக்குத் தேவையான தேர்வுகளுக்கு வழிகாட்டும் நூல்களையும் மாணவர்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள்” என்கிறார் கல்வியாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜகோபாலன்.

பொதுவான நூல்களைப் பொருத்தவரையில் சுயமுன்னேற்றத்தை அடுத்து, பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆன்மிக நூல்கள் அதிகம் விற்பனை ஆகும் என்று பல பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறை புத்தகக் காட்சியில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது வியப்புக்குரிய விஷயம்.

வாஸ்து சாஸ்திரம், சமையல் கலை, மீன்வளர்ப்பது, மாடி வீட்டுத் தோட்டம் வளர்ப்பது, நாய் வளர்ப்பது போன்ற நூல்களையும் பலர் தேடி வருகிறார்கள் என்று புத்தகக் கடைகளை நடத்தும் சிலர் தெரிவித்தனர்.

சென்னை சேத்துப்பட்டு செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு அடைகிறது.

8 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்: புத்தக கண்காட்சியில் ரூ.8 கோடிக்கு விற்பனை

சென்னை, ஜன. 22- ென்னை பூந்தமல்லி ரோட்டில் புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் புத்தக கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

11 நாட்கள் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று முடிந்தது. தினமும் கண்காட்சியை பார்க்கவும், புத்தகங்கள் வாங்கவும் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தென்னிந்திய புத்தக விற் பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்க செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

வழக்கமாக அண்ணா சாலை யில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். ஆண்டு தோறும் புத்தக பதிப்பகத்தார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தக கண்காட்சியில் இடம் பெற பலர் விருப்பம் தெரிவித்தனர். எனவே இந்த ஆண்டு கண் காட்சி நடத்தும் இடத்தை மாற்றினோம். இந்த இடம் வசதியாக இருந்ததால் கூடுதல் ஸ்டால்கள் அமைக்கப்பட் டது. பொதுமக்களும் அதிக அளவில் வந்தனர்.

இந்த அண்டு 8 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு களித் துள்ளனர். ரூ. 8 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த அண்டு 4 லட்சம் பேர் மட்டுமே வந்த னர். இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. டி.வி. சானல்கள் மோகத்திற் கிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் மக்களிடையே அதி கரித்துள்ளதே இதற்கு கார ணம்.

மாவட்ட வாரியாகவும் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். நெல்லை யில் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

  • ஆன்மீகம்,
  • இலக்கியம்,
  • கம்ப் ïட்டர்,
  • நாவல்கள்,
  • சித்தர் பாடல்கள்,
  • சோதிடம்,
  • தொழில் வளர்ச்சி உள்பட பல வகையான புத்தகங்களை மக்கள் விரும்பி வாங்கி உள் ளார்கள்.

கல்கி எழுதிய பொன்னி யின் செல்வன் வரலாற்று நாவல் 2 ஆயிரத்து 500 பிரதி கள் விற்று தீர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறி னார்.

வாழ்க்கையின் அங்கம் வாசிப்பு

ருத்ரன்

“ஆடை இல்லாதவர் அரை மனிதர்’ என்பது பழமொழி. புதுமொழியாக, நூல் இல்லாதவர் “கால் மனிதர்’ எனலாம்.

எனவே, ஒரு மனிதர், முழுமையடைவதற்கு ஆடை அரை விழுக்காடு உதவுகிறது எனில், நூல் முக்கால் விழுக்காட்டை நிறைவு செய்கிறது.

மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில், புத்தகங்களின் வாசிப்பும், புதிய அனுபவங்களின் சந்திப்பும் அவசியமாகும். நடைமுறை வாழ்க்கையின் சொந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதைப்போலவே, புத்தகங்களின் மூலம், பிறரது அனுபவங்களிலிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற முடியும்.

தன்னை அறிவதற்கும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை உணர்வதற்கும், உலகைப் புரிந்துகொள்வதற்கும் மனிதனுக்கு வாய்த்த எளிமையான மற்றும் எங்கும் கிடைக்கக்கூடிய சாதனம், புத்தகம்! மேலும், விலையை வைத்து தரத்தை மதிப்பிட முடியாத ஒரே பொருள், புத்தகமேயாகும்.

இரண்டு ரூபாய்க்கான குறுநூல், இருபது ரூபாய்க்கான சிறு நூலைவிடவும், இருநூறு ரூபாய் விலையுள்ள பெருநூலை விடவும் பயன் மிகுந்ததாக இருக்கக்கூடும்.

ஆகவே, விலையிலோ பக்கங்களின் எண்ணிக்கையிலோ மற்றும் அட்டையின் ரகத்திலோ புத்தகங்களின் முக்கியத்துவம் அடங்கியிருப்பதில்லை. மாறாக, புத்தகங்களின் கருத்துகளையும் அவைகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் மாற்றங்களையும் பொருத்து, புத்தகங்களின் தரம் மதிப்பிடப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன; பரவலாக்கப்படுகின்றன; பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு புத்தகத்தில் உள்ள பல மடங்கு அறிவுச் செல்வத்தைப் பெறக்கூடிய வாசகரே அந்நூலின் உண்மையான மற்றும் தகுதியான வாசகராவார். அவ்வாறன்றி, போகிற போக்கிலும், பொழுதுபோக்கிற்காகவும் வாசிக்கப்படும்போது, நல்ல நூல், அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. அத்தகைய வாசகர், காலத்தையும் கருத்தையும் மட்டும் இழப்பதில்லை; நல்ல வாசகர் என்னும் கௌரவத்தையும் இழக்கிறார்.

இந்நிலையில், வெளியாகும் அனைத்து நூல்களையும் படித்துவிட வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது. இயலுமெனில், “படிப்பது நன்று’ என்பதே பதிலாகும். ஆனால், அனைத்தையும் படிக்க இயலாது என்பதே உண்மையாகும். அதனால், நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தேர்ந்தெடுத்தல் என்பது குறிப்பிட்ட காலத்தின் குறிப்பிட்ட சூழலின் தேவையைப் பொறுத்து அமைவது கூடுதல் பயன் அளிப்பதாகும். அப்போதுதான், நிகழ்கால நிலைமைகள் குறித்த பிறரது பேச்சு, எழுத்து ஆகியவைகளின் நம்பகத்தன்மையையும் போலித்தன்மையையும் புரிந்துகொள்ள முடியும்.

காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் நூல்கள், அவைகளின் உள்ளடக்க வீரியத்தைப் பொறுத்து, எதிர்காலத்திலும் ஏற்கப்படுபவைகளாக விளங்குவதுண்டு. அந்தவகையில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு குறித்த நூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, அத்தகைய நூல்கள், சாகாவரம் பெற்ற ஆவணங்களாக வர்ணிக்கப்படுகின்றன.

ஆகவே வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும், வாழ்வதற்குக் கற்றுக் கொள்வதற்கும் மட்டுமன்றி, பயனுள்ளதாக்குவதற்கும் வழிகாட்டும் நூல்களை, மனிதனின் அத்தியாவசியப் பொருள்களுள் முதன்மையானதாக்கும் பண்பாட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன்பொருட்டு, சமூக அக்கறையாளர்களும் சமூக இயக்கங்களும் வாசிப்பு இயக்கத்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்; ஊர்கள்தோறும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி, புதிய வாசகர்களை உருவாக்க வேண்டும்.

மேலும் நாட்டின் வளத்தையும் மக்கள் நலனையும் முன்மொழியும் படைப்புகளை வெளியிடுவதற்கு, மக்கள் பங்களிப்பைப் பெறுவதன் மூலம், வாசிப்புக் கலாசாரத்தை வளர்க்க வேண்டும். சமூகச் சீரழிவு நூல்கள் மற்றும் இதழ்களின் மாய வலையிலிருந்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன கூட்டு செயலைப் போன்று, தனிமனிதக் கடமை ஒன்றும் உண்டு. அது நல்ல வாசகராக இருப்பவர், தனது பிள்ளைகளுக்காக நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும், வாசிக்க வைத்தும், நல்ல தாய் அல்லது நல்ல தந்தை என்னும் போற்றுதலுக்கு உரியவராவார்.
7.5 லட்சம் பார்வையாளர்கள் – 1 கோடி புத்தகங்கள் விற்பனை 30-வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: கடைசி நாளில் மக்கள் வெள்ளம்

சென்னை, ஜன. 22: சென்னையில் 30-வது புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 12 நாள்கள் நடைபெற்ற இப் புத்தகத் திருவிழாவுக்கு 7.5 லட்சம் பேர் வரை வந்தனர்.

ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கோடி புத்தகங்கள் விற்பனை ஆனதாக புத்தகக் காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, அண்ணாசாலை காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்றது.

புத்தகக் காட்சியை கடந்த 10-ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். சுயமுன்னேற்றம், நாவல்கள், ஆன்மிகம், குழந்தைகளுக்கானவை என 435 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

எந்தப் புத்தகங்களுக்கு மவுசு:

  • சாப்ட்வேர்,
  • ஜோதிடம்,
  • வாஸ்து உள்ளிட்ட புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தங்களுக்கு உரிய புத்தகங்களை வாங்குவதற்கு பெற்றோருடன் குழந்தைகள் வந்திருந்தனர்.

புதிய இடத்தில் குவிந்த பார்வையாளர்கள்:””விசாலமான இடம் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். அதன்படி, 7.5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர்” என்றார் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கச் செயலர் ஆர்.எஸ்.சண்முகம்.

விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் புத்தகப் பூங்காவில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வார நாள்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மடங்காக அதிகரித்தது. புத்தகக் காட்சிக்கு சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வாசகர்கள் வந்தனர்.

இந்த ஆண்டு அதிகரிப்பு:கடந்த ஆண்டு காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு 5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர். ரூ.3 முதல் 4 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகின. ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். மேலும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார் சண்முகம்.

இளம் படைப்பாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு:இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் களமாகவும் புத்தகக் காட்சி விளங்கியது. இளம் படைப்பாளிகள் உருவாக்கிய நாவல் மற்றும் சிறு கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக பதிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கன்னி முயற்சியாக, தான் படைத்துள்ள “எனது அப்பாவின் நண்பர் உயரமானவர்‘ என்ற சிறுகதை தொகுப்புக்கு புத்தகக் காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் பா.சரவணக்குமரன்.

கடைசி நாளில் மக்கள் வெள்ளம்:கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலால், ஒவ்வொரு அரங்கத்துக்கு உள்ளேயும் சென்று வர நேரம் பிடித்தது. “”சென்னை புத்தகக் காட்சி வாசகர்கள் இடையே ஒரு இயக்கமாக உருவாகி இருக்கிறது. இதற்கு சரியான இடத்தில் விதை போட ஆலோசித்து வருகிறோம் என்றார் சண்முகம்.

திடீரென முளைத்த நடைபாதைக் கடைகள்

சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே பழைய புத்தகங்களின் சங்கமமான நடைபாதை புத்தகக் கடைகள் இடம்பெறுவது வழக்கம். புத்தகக் காட்சிக்கு ஈடாக ஆண்டுதோறும் இந்தக் கடைகளும் களை கட்டி இருக்கும்.

ஆனால், புத்தகக் காட்சி இடமாற்றம் காரணமாக இந்த ஆண்டு நடைபாதை புத்தகக் கடைகள் முளைக்காமல் இருந்தன. ஆனால், திடீரென புத்தகக் காட்சியின் கடைசி நாளில் நடைபாதை புத்தகக் கடைகள் தோன்றின. புத்தகக் காட்சி நடைபெற்ற இடத்துக்கு எதிர்புறம் இருந்த நடைபாதையில் பழைய புத்தகங்கள் கடைவிரிக்கப்பட்டு இருந்தன.

Posted in 3 Rs, 30, Bestsellers, Book Exhibition, Book Fair, Book Sales, Books, Chennai, Hotsellers, Kalainjar, Karunanidhi, Literature, Madras, Pa Saravanakkumaran, Pa Saravanakumaran, Publish, Read, RS Shanumgam, RS Shanumgham, Students, Thamizh, XXX | Leave a Comment »

Human waste disposal workers upliftment scheme – Rs. 58 Crore allotted

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

மனிதக் கழிவு பணியாளர் : ரூ.58 கோடியில் மாற்றுத் தொழில்

சென்னை, ஜன. 21: மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ரூ.58.45 கோடியில் மாற்றுத் தொழில் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெற்ற அறிவிப்பு விவரம்:-

“”மனிதக் கழிவை மனிதனே எடுத்துச் சுமக்கும் கொடுமையை அறவே அகற்றி, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளவர்கள் வருவாய் ஈட்டக்கூடிய மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள ரூ.58.45 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Budget, Clean, Dalit, Governor, Karunanidhi, Plan, Restroom, Schemes, Speech, Tamil Nadu, TN, Toilets, Waste | Leave a Comment »

‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜன.21-

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி
இயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு
தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.

தனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.

இதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.

அதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.

ஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.

18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.

தசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.

என் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Posted in Apdiyaa, Appadiyaa, Arthanari, Bala, Balasubramanian, case, Cheat, Clones, Court, Dasavatharam, Dhanush, Dhasavatharam, dialogues, Direction, Gurumani, Intellectual Property, Judge, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, KS Ravikkumar, KS Ravikumar, Law, Murali, Order, Oscar Ravichandran, Pictures, Producer, Rajkamal, Screenplay, Stolen, Story, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thasavatharam, Theerthamalai, Theft, TTK Road | 5 Comments »

BJP ropes in TV and Film stars for campaining in Punjab elections

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: நடிகர்-நடிகைகளுடன் களம் இறங்கும் பா.ஜனதா

சண்டிகார், ஜன.21-

பஞ்சாப் மாநில சட்ட சபைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. வருகிற 25-ந் தேதி மனுதாக்கல் முடிகிறது. 27-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ்பெற கடைசி நாள்.

அங்கு மனு தாக்கல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-பாரதீய ஜனதா அணிகளிடையே கடும் மோதல் நிலவுகிறது. பாரதீய ஜனதாவுடன் சிரோன் மணி அகாலிதளம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

சிரோன் மணி அகாலிதளம் கட்சி தான் போட்டியிடும் 94 தொகுதிகளுக்கு வேட் பாளர்களை அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாவிடம் 15 வேட் பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சி பலத்த திட்டங்களுடன் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 3 கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்கி யுள்ளார்.

சென்ற முறை காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட்ட இந்திய கம்ïனிஸ்டு கட்சி இப்போது தனித்து போட்டியிடுகிறது.

காங்கிரஸ் ஆட்சி மீது கூறப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்ய பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது.

மேலும் பிரசாரத்திற்காக நட்சத்திர பட்டாளத்தையும் களம் இறக்குகிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்திப்பட உலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாருமான தர்மேந்திரா, அவரது மனைவி நடிகை ஹேமமாலினி, பிரபல நடிகர்கள் வினோத்கன்னா, சத்ருகன் சின்கா ஆகியோர் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதேபோல் காங்கிரஸ் கட்சி ராஜேஷ்கன்னா, கோவிந்தா, ஒம்புரி உள்ளிட்ட நடிகர்-நடிகைகளை களம் குதிக்க திட்டமிட்டு உள்ளது.

Posted in Actors, Actresses, Bollywood, Cinema, Dharmendhra, Dharmendra, Elections, Films, Govinda, Hemamalini, Hindi, Movies, Ompuri, Punjab, Rajesh Khanna, Shatrugan Sinha, Shatruhan Sinha, TV, Vinod Khanna, Vinodh Khanna | Leave a Comment »

Lord Hanuman is shedding tears in Mathura & Uttar Pradesh

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு

மதுரா,ஜன.21-

சில வருடங்களுக்கு முன் வட மாநிலங்களில் விநாயகர் பால் குடிப்பதாக தகவல் பரவியது. நாடு முழுவதும் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.

இதே போல் தற்போது அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடிவதாக பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் புனித நகரமாக கருதப்படும் மதுராவில் ஆக்ரா ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.

இந்த தகவல் காட்டுத்தீ போல மதுரா நகரம் முழுவதும் பரவியது. இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்தனர்.அவர்கள் அனுமனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தி வழிபட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் திரண்டது. கோவில் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

இதுபற்றி கோவில் பூசாரி கூறுகையில் அனுமன் கண் களில் இருந்து கண்ணீர் வடிவ தாக பக்தர் ஒருவர் கூறினார். நான் சென்று பார்த்த போது நீர்த்துளி வழிவதை பார்த்தேன் என்றார். பக்தர் ஒருவர் கூறுகையில் அனுமன் கண்களில் கண்ணீர் வடிவது நல்லது அல்ல. இதற்கு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து அனுமனுக்கு விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் வளாகத் தில் அமர்ந்து அனுமனை போற்றி பஜனை பாடல்கள் பாடி தீபாராதனை காட்டி வழிப்பட்டனர்.

இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள்ë உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இதே போல் உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அனுமன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அவர்கள் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மாலை வரை அனுமன் கோவில்கள் பரபரப்பாக காணப்பட்டது.

Posted in Agra Road, Anuman, Bajrang Dal, Bhairav Ghat Hanuman Mandir, Cry, Ganga Temple, God, Hanuman, Hanuman Chaalisa, Hindu, Hinduism, India, Jai Bjarang Bali, Kaala Bhairav, Kala Bairav, Kanpur, Lord, Magic, Mathura, Tears, Uttar Pradesh, Water | Leave a Comment »

Mohanlal gets Ujala-Asianet Film ‘best actor’ award

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

ஏசியாநெட் விருது: சிறந்த நடிகை-பத்மபிரியா; சிறந்த நடிகர்-மோகன்லால்

திருவனந்தபுரம், ஜன.21-

ஏசியா நெட் நிறுவனம் ஆண்டுதோறும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகராக மோகன்லாலும், சிறந்த நடிகையாக பத்மபிரியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த படமாக `கிளாஸ் மெட்’ மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவை நடிகராக இன்னசென்ட், சிறந்த வில்லன் நடிகராக சித்திக், சிறந்த இசையமைப்பாளராக ரவீந்திரன், சிறந்த டைரக்டராக ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா வருகிற 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

Posted in Actress, Aran, Army, Asianet, Award, Cinema, Classmate, Films, Jeeva, Keerthicharka, Kerala, Major Ravi, Malayalam, Mohanlal, Movies, Padmapriya, Sobhana Parameshwaran Nair, Ujala | Leave a Comment »