Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 29th, 2007

Hum Panch – Art Gallery: Around Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

கலை: ஐவரோவியம்!

ரவிக்குமார்

ஐந்தெழுத்து மந்திரம் (நமசிவாய), ஐந்து வகை நிலங்கள், ஐம்பெரும் பூதங்கள் என நம்முடைய இந்திய மரபில் ஐந்திற்கு இருக்கும் முக்கியத்துவங்கள் அதிகம். பாரம்பரியமான இந்தச் சாரம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது, ஐந்து பெண்கள் சமீபத்தில் சென்னை, ஸ்ரீ பார்வதி ஆர்ட் காலரியில் இணைந்து நடத்திய ஓவியம் மற்றும் சிற்பங்களின் கண்காட்சி. நாம் ஐவர் (hum panch) என்னும் தலைப்பில் அஸ்மா மேனன், பெனித்தா, பிரேமலதா சேஷாத்ரி, நுபுர், தமாரா ஆகிய ஓவியர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்த இந்தக் குழுக் கண்காட்சியில், ஒவ்வொருவரின் தனித்தன்மையும் பளிச்சென்று தெரிந்தது. அந்த ஓவியங்களிடையேயான ஒரு தூரிகைப் பயணம் இது!

பழமையும், புதுமையும் கலந்த கற்பனையில் உருவான இவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அஸ்மா மேனனின் ஓவியங்களில் பெண்கள், பழங்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், உலகின் சிறந்த மனிதர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உதாரணமாக, பல நிறங்களின் கலவையில் இவர் வரைந்திருந்த “வாழ்க்கை என்னும் மரம்’, “டாரா’ போன்ற ஓவியங்கள் புத்தரின் வாழ்க்கையைச் சித்திரித்தன.

“இளவரசி உத்தமா’ என்ற தலைப்பிலான ஓவியத்தில் இடம்பெறும் “உத்தமா’ என்னும் பெண் கதாபாத்திரம், இலங்கையின் புராதனக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் பாத்திரம். இப்படி புராணங்களிலிருந்து பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, அதில் தனது புதுமைக் கற்பனையை நெய்திருக்கிறார் அஸ்மா.

“கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்று சொல்லும் தமராவின் ஓவியங்களில், கருமை நிறம்தான் பிரதானமாக இருக்கிறது. “நட்சத்திர நடை’ என்னும் தலைப்பில் இவர் வரைந்திருக்கும் ஓவியம், நம்மை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு பால்வெளியில் பயணிக்கவைக்கிறது! பொதுவாக அவுட்-லைனுக்குள் ஓவியம் அடங்கிவிடுவதுதான் மரபு. ஆனால்”கீழ்ப்படியாத’ (Insubordinate) என்னும் தலைப்பில் அமைந்த ஓர் ஓவியத்தில், நிஜங்களின் மிச்சங்கள் அவுட்-லைனுக்கும் வெளியே பரவியிருப்பது, தலைப்புக்கேற்ற மரபை மீறிய புதுக்கவிதை!

தான் கண்டு ரசித்த நிலங்களை அப்படியே நம் கண் முன் ஓவியமாக்கியிருக்கிறார் பிரேமலதா. “காவிரிப் பறவை’களையும், இயற்கை எழில் சொட்டும் நிலங்களையும் நம் கண்களுக்கு பசுமைக்காட்சியாய் படைத்துள்ளார்.

பெனித்தாவின் படைப்புகளில் பெண்களின் தனித்தன்மை வெளிப்படுகிறது. நீர் வண்ணம், சார்கோல், பேப்பர், கான்வாஸ் என பல மீடியம்களின் கலவையில் பெனித்தா வரைந்திருக்கும் ஓவியங்களில், பெண் ஆக்கத்தின் வடிவமாக, உருவாக வெளிப்படுகிறார்.

காட்டின் பிரம்மாண்ட அடர்த்தியும், வாழ்க்கையின் ஒரு துளியும் நுபுரின் கைவண்ணத்தில் பித்தளைச் சிற்பங்களாகியிருந்தன.

“நான் அசைந்தால்; அசையும் அகிலம் எல்லாமே…அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?’ டீக்கடை ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது, பழைய “திருவிளையாடல்’ படத்தின் பாடல். எவ்வளவு சத்தியமான வரிகள்!

படங்கள்: “மீனம்’ மனோ

Posted in Art Gallery, Asma Menon, Benita, Chennai, Events, Happenings, Hum Panch, Kathir, Noopur, Painters, Paintist, Premalatha Seshadri, Tamara | 1 Comment »

London Diary – Era Murugan: Fire, Curfew, Floods

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

லண்டன் டைரி: வெள்ளத்திலும் “ஃபயர்’!

இரா. முருகன்

“”ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி அடுப்பை அணைச்சுட்டுப் படுத்துக்கணும்.” இது வீட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்து, வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியபடி அந்தக்கால மாமியார் தன்னுடைய மருமகளுக்கு அவ்வப்போது தவணைமுறையில் நல்கிய உபதேசம் இல்லை. ஓர் அரசாங்கமே சட்டம் போட்டு அறிவித்த விஷயம். இங்கிலாந்தை ஆக்கிரமித்து ஆண்ட வில்லியம் மன்னன் நாட்டு மக்களுக்கு விடுத்த அரச கட்டளை -“கவர் ஃபயர்’. அதாவது ராத்திரியில் முதலில் வீட்டு அடுப்பில் நெருப்பை அணைத்துவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்தவும்.

ஊர் முழுக்கக் கடைப்பிடிக்கவேண்டி ஆயிரம் வருடத்துக்கு முந்திப் போடப்பட்டது அந்த “கவர் ஃபயர்’ சட்டம். கவர் ஃபயர் நாளடைவில் திரிந்து கர்ஃப்யூ என்ற ஊரடங்கு உத்தரவு ரூபத்தில் இன்னும்கூட எல்லா அரசாங்கங்களாலும் அவ்வப்போது அமுலாக்கப்படுகிறது என்பது உண்மை. மேற்படி சட்டப்படி அடுப்பை அணைக்க ஒரு குடிமகன் மறந்துபோனதால் லண்டன் மாநகரமே முன்னூறு வருடம் முன்னால் மாபெரும் தீவிபத்தில் அழிந்து போனது என்பதும் உண்மைதான்.

லண்டன் பாலத்திலிருந்து திரும்பி நகருக்குள் நடந்து, இதையெல்லாம் யோசித்தபடி நான் நிற்கிற இடம் புட்டுச் சந்து. அதாவது புட்டிங் லேன். டூரிஸ்டுகளை ஏற்றி வருகிற சிவப்பு பஸ் ஒன்று அரை நிமிடம் சந்து முனையில் தயங்கி நிற்க, பஸ் மேல்தளத்தில் வழிகாட்டிப் பெண் 1666 என்று சொல்கிற சத்தம் காற்றில் மிதந்து வருகிறது. ஆயிரத்து அறுநூற்று அறுபத்தாறு. லண்டன் நகரமே பற்றி எரிந்த வருடம் அது. அந்த நெருப்பு தொடங்கிய இடம் இந்தப் புட்டுச் சந்துதான்.

லண்டனுக்குச் சோதனையான காலம் இதற்கு ஒரு வருடம் முன்பே தொடங்கிவிட்டது. 1665-ம் வருடம் தொடர்ந்து ராப்பகலாகப் பெருமழை பெய்தது. நசநசவென்று நனைந்து ஊறி அசுத்தமாகக் கிடந்த ஊரில் எலித் தொல்லை பெருகியது. அது கொள்ளை நோயில் கொண்டுபோய் விட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரைக் காவு கொண்டு அந்த நோய் போய்ச் சேர்ந்த அடுத்த வருடமே ஊரை அழிக்கிற மாதிரி ஒரு மாபெரும் தீவிபத்து. இரண்டுமே ஜனத்தொகைப் பெருக்கத்தின் விளைவு.

தேம்ஸ் நதிக்கரையை ஒட்டி ஆரம்பித்து, ரோமானியப் பேரரசு காலத்து நகர எல்லைச் சுவர் வரை நீண்ட லண்டன் நகரத் தெருக்களில் கீழ்த்தட்டு, நடுத்தர மக்கள் நெருக்கியடித்து இருந்து, தொழில் செய்து, வியாபாரம் நடத்திக் குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிரபுக்கள் இந்த ஜன நெரிசலிலிருந்து விலகி, இன்னும் தூரத்தில் வெஸ்ட்மின்ஸ்டரிலோ அல்லது தேம்ஸ் நதிக்கு அக்கரையில் புறநகர்ப் பகுதிகளிலோ சுகபோகமாக வசித்துக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸýக்கும் லண்டன் நகருக்கும் சுமூகமான உறவு இல்லாத நேரம் அது. மன்னராட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த குடியரசுத் தலைவர்களின் நிர்வாகத்தில் லண்டன் மாநகராட்சி இருந்தது.

பெருகிவரும் ஜனத்தொகையை இருக்கப்பட்ட இடத்திலேயே குடியிருத்த வேண்டிய நிர்ப்பந்தம். வீடுகள் தரைமட்டத்தில் சிறுத்தும், மேலே அகன்று விரிந்தும் கூடுதல் இடவசதிக்காக மாற்றியமைக்கப்பட, தெருவின் இரண்டு பக்கத்திலும் ஒன்றை ஒன்று தொடுகிற மாடிகள் காற்றையும் வெளிச்சத்தையும் தடைசெய்தன. அசம்பாவிதமாக ஏதாவது தீ விபத்து ஏற்பட்டால் இந்தத் தெருக்களில் உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் அதிகமாக இருக்கும் என்பதால் நகரம் முழுக்க அந்தந்தப் பேட்டை தேவாலயங்கள் தீயணைப்புக் கேந்திரமாகச் செயல்படத் திட்டம் அமுலாகியது.

கிட்டத்தட்ட இருநூறு தேவாலயங்களில் நெருப்பை அணைக்கத் தயாராகத் தண்ணீர் வாளி, எரிகிற கூரையைப் பிடுங்கி எரிய துரட்டி மாதிரியான உபகரணங்கள், ஏணிகள் என்று சேமித்து வைத்தார்கள். எங்கேயாவது தீப்பிடித்தால், அர்த்தராத்திரி என்றாலும் தேவாலய மணி முழக்கப்படும். கேட்டு ஓடிவந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அந்தந்தப் பேட்டை மக்களின் கடமை.

இப்படி விலாவாரியாக முன்னேற்பாடு எல்லாம் இருந்தாலும், புட்டுச் சந்தில் ரொட்டிக்கடை வைத்திருந்த தாமஸ் பரினர் மூலம் விதி விளையாடியது. 1666-ம் வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி சனிக்கிழமை ராத்திரி அவர் ரொட்டி சுடும் அடுப்பை அணைக்க மறந்து தூங்கப் போய்விட்டார். நடுராத்திரியில் அடுப்பிலிருந்து நெருப்பு வீடு முழுக்கப் பற்றிப் பிடித்து, அடுத்த வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

பொதுமக்கள், லண்டன் மேயரை அவர் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னார்கள். “”அட போங்கப்பா, நாலு பேர் வரிசையா நின்னு ஒன் பாத்ரூம் போனா தீ அணைஞ்சு போயிடும். உப்புப் பெறாத இந்த விஷயத்துக்காக ராத்திரி என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க” என்று கொட்டாவி விட்டபடி அவர் இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடி தூங்க ஆரம்பித்தார். மாண்புமிகு மேயர் காலையில் சாவகாசமாக விபத்து நடந்த ஸ்தலமான புட்டுச் சந்துக்கு வந்தபோது, நெருப்பு அடுத்த தெரு, மூன்றாம், நான்காம் தெரு என்று கிடுகிடுவென்று பரவிக்கொண்டிருந்தது.

“”தெருவை அடைச்சு நிக்கற கட்டிடத்தை எல்லாம் இடிச்சுட்டா, நெருப்பு பரவாது” யாராரோ ஆலோசனை சொன்னார்கள். “”இடிக்கறதா? அப்புறம் கார்ப்பரேஷன் தான் திரும்பக் கட்டித் தரணும்னு கேட்பீங்க. யார் செலவு பண்றது? அதெல்லாம் வேலைக்காகாது”

மேயர் மறுத்துக்கொண்டிருந்தபோது, மற்ற எல்லோரும் எரிகிற வீடுகளுக்குள் இருந்து கூடிய மட்டும் முக்கியமான பொருட்களை எடுத்துச் சுமந்துகொண்டு தீயிலிருந்து தப்பித்து ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள். அதில் கொஞ்சம் பேராவது பக்கத்து தேம்ஸ் நதியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து எரிகிற வீடுகளில் கொட்டியிருந்தால் தீ அணைந்திருக்கும். தேம்ஸ் நதியிலிருந்து குழாய் மூலமாகத் தண்ணீர், நகரம் முழுவதும் விநியோகிக்கப்படுவது அப்போதே இருந்தது. அந்தத் தண்ணீர்க் குழாயை அங்கங்கே திறந்து தண்ணீரை விசிறியடித்திருக்கலாம். அதற்கும் ஆள் இல்லை.

நெருப்பு கிடுகிடுவென்று பரவி, தேம்ஸ் நதிக்கரையில் நகருக்குத் தண்ணீர் விநியோகம் செய்ய ஆற்று நீரை இறைத்துத் தொட்டிகளில் தேக்கி வைக்கும் யந்திரங்களை எரித்து நாசமாக்கியது. ஆக, ஆறு முழுக்க வெள்ளம் போனாலும், ஊரென்னவோ பற்றி எரிந்தபடிதான் இருந்தது.

அந்தக்காலத்திலேயே தீயணைக்கும் இயந்திரம் வழக்கத்தில் வந்திருந்தது. ஆனால் ஒரே ஒரு சிக்கல். நடுவிலே பெரிய பீப்பாயில் தண்ணீரும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நாலைந்து குழாயுமாக இருந்த இந்த இயந்திரங்களை ஓட்டிப் போகமுடியாது. நாலைந்து பேர் பின்னால் இருந்து தள்ள, இன்னும் சிலர் முன்னால் இருந்து இழுத்துக்கொண்டு போய்த்தான் தீப்பிடித்த இடத்தில் நிறுத்தவேண்டும். இழுத்துப் போனார்கள். அப்புறம்தான் இயந்திரங்களில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. தேம்ஸ் நதிக்கரைக்குத் தண்ணீர் நிரப்ப அவற்றைத் திரும்பவும் உருட்டிப் போனார்கள். நதிக்கரை மணலில் நிற்கவைத்துத் தண்ணீர் நிரப்பும்போது அந்த யந்திர வண்டிகள் குடைசாய்ந்து ஆற்றுக்குள் விழுந்துவிட்டன. நெருப்பு எந்தத் தடையும் இல்லாமல் இன்னும் தீவிரமாக எரிந்து கொண்டிருந்தது.

Posted in 1666, Cover Fire, Curfew, England, Era Murugan, Era Murukan, History, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Plague, Thames, Tour, Tourist, UK | Leave a Comment »

Right to Information modalities – State Information Commissioner

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சரியான விளக்கம் அளிக்காத 200 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: மாநில தகவல் ஆணையர் பேட்டி

வேலூர், ஜன.28-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊரியர் சங்கத்தின் சார்பில் வேலூர் ஆபீசர் லைனில் உள்ள பெல்லியப்பா கட்டிடத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார இயக்க கூட்டம் நடந்தது. பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனிசாமி வரவேற்று பேசினார். மாநில தகவல் ஆணையர் ரத்தினசாமி பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தகவல் அறிவதற்காக பொதுமக்களிடம் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 8550 மனுக்களும், இந்த ஆண்டு ஜனவரி 24-ந் தேதி வரை ஆயிரத்து 179 மனுக்களும் வந்துள்ளது. இதில் 664 மனுக்கள் மட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மீதியுள்ள மனுக்கள் அனைத்தும் மாவட்டம் வாரியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பியுள்ளோம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் தகவல் பெற வேண்டுமானால் 10 ரூபாய்க்கு டி.டி. எடுத்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் தகவல் கேட்க வேண்டும். 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்க வில்லையென்றால், மேல் அதிகாரியிடம் முறையீடு செய்ய வேண்டும். அப்படியும் 30 நாட்களுக்குள் சரியான தகவல் தராவிட்டால் எங்களிடம் புகார் செய்யலாம்.

நாங்கள் மனுதாரரையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியையும் அழைத்து நேரிடையாக விசாரணை நடத்துவோம். விசாரணையில் அரசு அதிகாரிகள் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டால் 1 நாளுக்கு ரூ.250 வீதம் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதுவரை சரியான தகவல் அளிக்காத 4 அரசு அதிகாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆவார். சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப துறைக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. இதில் ஒரு பெண் கலந்து கொண்டார். சரியான தகுதிகள் இருந்தும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அவர் விளக்கம் கேட்டார். இதற்கு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சரியான தகவல் அளிக்கவில்லை. நாங்கள் நடத்திய விசாரணையில் பதிவாளர் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.

மனுதாரர் ஒருவருக்கு சரியான தகவல் அளிக்காததால் அவினாசி தாசில்தாருக்கு ரூ.2500 அபராதம் விதித்துள்ளோம். மேலும் சரியான தகவல் அளிக்காத 200 அரசு அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளோம். இந்த சட்டம் பற்றி பொதுமக்களுக்கு தெரியும் அளவில் கூட அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. பிப்ரவரி மாதம் 2-ந் தேதி வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மனுக்கள் மீது விசாரணை நடத்துகிறோம். அப்போது 10 மனுதாரர்கள் மீது விசாரணை நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நாங்கள் விசாரணைக்கு வரும் போது பொதுமக்கள் எங்களிடம் நேரிடையாக மனு வழங்கலாம். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாநில தகவல் ஆணைய தலைமை அலுவலகம் விரைவில் தேனாம்பேட்டையில் அறிவாலயம் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திற்கு மாற்றப்படுகிறது.

இவ்வாறு மாநில தகவல் ஆணையர் ரத்தினசாமி கூறினார்.

பேட்டியின் போது தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் கங்காதரன் உடனிருந்தார்.

===========================================
தகவலைக் கேட்டுப் பெறுவது அடிப்படை உரிமை

அரவிந்த் கேஜ்ரிவால் – தமிழில்: பாகி.

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன.

நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது.

மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது.

அத்தீர்ப்பின் சாராம்சம்:

“”அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார்.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது.

தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

(கட்டுரையாளர்: மகசேசே விருது பெற்றவர். தில்லியில் “சாஃப்மா’ பத்திரிகையாளர் மாநாட்டில் படித்த கட்டுரையின் சாராம்சம்.)

Posted in How, Krishnamoorthi, Krishnamoorthy, Krishnamurthi, Krishnamurthy, Magasasay, Municipal department, Process, Rathnasami, Rathnasamy, Right To Information, RTI, Steps | Leave a Comment »

Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு

ஐதராபாத், ஜன. 29-

LIGHTS, CAMERA, ACTION: Chief Minister Y.S. Rajasekhara Reddy sounds the clapper board to launch the celebrations of the platinum jubilee of the Telugu film industry. Also seen are (L-R) film actor Krishna, his wife Vijayanirmala, Union Minister Dasa ri Narayana Rao, Finance Minister K. Rosaiah, Information Minister Mohd Ali Shabbir, film actor Mohan Babu, producer Seshagiri Rao.— Photo: Mohd. Yousuf

தெலுங்கு பட உலகின் 75-ம் ஆண்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி ராஜ சேகர ரெட்டி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார்.

விழாவில்

  • தாசரி நாராயணராவ்,
  • அஞ்சலிதேவி,
  • சிரஞ்சீவி ஆகியோருக்கு சாதனை யாளர் விருதுகள் வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தாசரி நாராயணராவ் மேடைக்கு சென்று விருதை பெற்றார். சிரஞ்சீவிக்கு விருது கொடுக்கும் முன் நடிகர் மோகன்பாபுவை பேச அழைத்தனர். அவருக்கு பிரபலமானவர் என்ற விருதை அளித்தனர். அவ்விருதை பெற மோகன்பாபு மறுத்து விட்டார்.

விழாவில் மோகன்பாபு ஆவேசமாக பேசியதாவது:-

எனக்கு சாதளையாளர் விருது தராதது துரதிர்ஷ்டவசமானது. நான் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளேன். மேல்- சபை எம்.பி. பதவி வகித்துள்ளேன். சாதி மதத்துக்கு அப்பாற் பட்டு பள்ளிக்கூடம் நடத்துகி றேன். அந்த பள்ளியில் ஏழைகளுக்கு 25 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கிறேன். 510 படங்களில் நடித்து இருக்கி றேன். 49 படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் “சாதனையாளன்” கிடையாதா? எனக்கு ஏன் அந்த விருதை தரவில்லை.

விஜயநிர்மலா பெண் இயக்குனர். அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. கிரிபாபு நடிகராக, இயக்குனராக தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை இவ்விழாவுக்கு அழைக்க வில்லை. தெலுங்கு பட உலகம் இரண்டு, மூன்று பேருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நினைக்கிறார்கள்.

இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் இறங்கிவிட்டார்.

இதையடுத்து சிரஞ்சீவி பேசியதாவது:-

நாமெல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறோம். நம் ஆரம்ப காலத்தையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் மறக்க கூடாது. ஏழைகளாக இருந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கர்வம், அகந்தை இருக்ககூடாது.

சினிமா ஒரு குடும்பம். நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அதை திரைக்கு பின்னால்தான் பேச வேண்டும். எல்லோருக்கும் தெரியுற மாதிரி பேசி அவமானப்படுத்தக்கூடாது. நாம் சண்டை போடுவது வெளியே தெரியக்கூடாது.

கோவா பட விழாவில் என்.டி.ஆர். படம் வைக்கவில்லை. மும்பை, டெல்லி, கோவா வரை நம்மால் போக முடியவில்லை. சாதிக்க முடியவில்லை. அதற்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததுதான்.

ஒரு திருமணத்துக்கு போய் இருந்தேன். தாலி கட்டுவதை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டேன். மற்றவர்கள் சந்தோஷம்தான் முக்கியம்.

நான் வயதில் சிறியவன், வெங்கடேஷ், நாகார்ஜுனா என் வயதில் உள்ளவர்கள். அவர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. சாதனையாளர் விருதுக்கு நான் தகுதி இல்லை. 100-வது நாள் பட விழா நடக்கும்போது நான் திரையுலகில் இருப்பேன். அப்போது விருதை வாங்கி கொள்கிறேன்.

இவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் சென்று விட்டார்.

Posted in 75, Andhra Pradesh, Andhra Pradesh State Film, Anjali Devi, APSFTTDC, Awards, Celebrations, Chandrababu Naidu, Chiranjeevi, Cong (I), Congress, Dasari Narayana Rao, Dhasari Narayanarao, Fights, Giribabu, Indira Congress, K. Rosaiah, Krishna, Lifetime Achievement, Mallemala, Mogan Babu, Mohan Babu, Mohd Ali Shabbir, Nagarjuna, NT Ramarao, NTR, Padhmashree, Padma Sri, Platinum Jubilee, Raja shekara Reddy, Rajasekara Reddy, Seshagiri Rao, Siranjeevi, Teleugu Film, Television and Theatre Development Corporation, Telugu Cinema, Telugu Desam, Tollywood, Venkatesh, Vijaya Nirmala, Vijayanirmala, YS Rajasekhara Reddy | 1 Comment »

Shilpa Shetty – Biosketch: Born in Tamil nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நடிகை ஷில்பாஷெட்டி தமிழ்நாட்டில் பிறந்தவர்

`பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் வென்று பல கோடி பணத்தை பரிசாக பெற்றதன் மூலம் நடிகை ஷில்பாஷெட்டி தன் புகழ் ஏணியின் உச்சத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

கோதுமை நிறம், சுண்டி இழுக்கும் கண்கள், 5 அடி 10 இஞ்ச் உயரம். அந்த உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு போன்ற அம்சங்கள் ஷில்பாவை கவர்ச்சி கன்னியாக வலம் வர செய்கின்றன. தற்போது மும்பை செம்பூரில் உள்ள அந்தோணி சாலையில் வசித்து வரும் இந்த அழகு தேவதை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவராவார்.

1975-ம் ஆண்டு ஜுன் மாதம் இவர் தமிழ்நாட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்-சுரேந்திரா ஷெட்டி, சுனந்தா ஷெட்டி. இவர்கள் இருவரும் சென்னையில் மாடலிங் செய்து வந்தனர். சிறு வயதில் ஷில்பா ஷெட்டியின் அழகை கண்டு அவரது தோழிகள் நீயும் மாடலிங் செய்யலாம் என்றனர். இதனால் 15-வது வயதில் படித்துக் கொண்டே அவர் மாடலிங்கில் ஈடுபட்டார்.

ஆனால் அப்போது 5.7 அடி உயரமே இருந்ததால் முதலில் ஷில்பாவுக்கு சரியான மாடலிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மாடலிங் தொழிலில் மேலும் ஈடுபட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஷில்பாஷெட்டி குடும்பம் சென்னையில் இருந்து மும்பைக்கு இடம் மாறியது. அங்கு 18-வது வயதில் `பாஜிகர்’ எனும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதன் முதலில் இந்தி திரை உலகில் அறிமுகமானார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. “மெயின் கிலாடி தூ அனாரி” என்ற படம் ஷில்பாவின் புகழை நாடெங்கும் உயர்த்தியது. இந்தியாவில் உள்ள பிறமொழி நடிகர்களும் ஷில்பாவுடன் நடிக்க போட்டி போட்டனர்.

தமிழ்நாட்டிலும் இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இவர் “மிஸ்டர் ரோமியோ” படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ளார். “குஷி” படத்தில் இவர் நடிகர் விஜய்யுடன், “மேக்கோபீனா, மேக்கோ பீனா” என்ற ஒரு பாடலுக்கு ஆடினார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

கைவசம் நிறைய படங்களை வைத்திருந்த போது இவருக்கும் நடிகர் அக்ஷய்குமாருக்கும் இடையே காதல் அரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியானது. சிறந்த நடிகைக்கான விருதுகளை 16 தடவை பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு 2002ம் ஆண்டு முதல் தோல்வி துரத்தத் தொடங்கியது. அந்த ஆண்டு அவர் நடித்த 5 படங்களும் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் அவரை இந்தி பட உலகம் ஒதுக்கியது.

தன்னையும் அக்ஷய்குமாரையும் இணைத்து எழுதிய மாத இதழுக்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றார். அந்த மாத இதழால்தன் பட உலக வாழ்க்கை சற்று சரிந்து போனதாக ஷில்பா ஷெட்டி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்தி பட உலகில் நிறைய வாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் ஷில்பாவுக்கு இன்னும் ஆதரவு உள்ளது. 2005ல் கன்னடத்தில் ஆட்டோ சங்கர் படத்தில் இவர் மாயா எனும் கேரக்டரில் நடித்தார். இந்த படம் சூப்பர்-ஹிட் வெற்றியைப் பெற்றது.

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் ஷில்பா ஷெட்டி சமீபகாலமாக மற்ற சமூக சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறார். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மிருகங்கள் வதைக்கப்படுவதை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார்.

2004ம் ஆண்டு இவர் ஒரு படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்தார். நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும், மற்ற முன்னணி நடிகைகளுக்கு இருப்பது போல இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன் பெயரில் இ-மெயில் முகவரியை உருவாக்கி அறிவித்த போது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு மெயில் அனுப்பி திணற வைத்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக திரை உலகில் இருக்கும் ஷில்பாவுக்கு தற்போது 31 வயதாகிறது. இதுவரை 37 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் 27 படங்கள் தோல்வியை தழுவின. இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய 6 மொழிகளில் பேசும் இவருக்கு அமிதாப்பச்சன், கோவிந்தா, ஜாக்கிஜான், டாம் குரூசி பிடித்த நடிகர்களாகும். தத்கன், கத்யார், ரிஸ்தே ஆகிய படங்கள் ஷில்பாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. அடுத்து அவர் நடிப்பில் 3 படங்கள் வெளிவர உள்ளன.

ஷில்பாஷெட்டியின் சகோதரி சமீதா ஷெட்டி. இவரும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டி முகவரி:- 12, தேவ்தர்ஷன், 262, அந்தோணிரோடு, செம்பூர், மும்பை-400071. போன்: 022-5517667, 55644738.

ஷில்பா ஷெட்டியின் இளமைக்காலம் சோகம் நிறைந்தது. தமிழ்நாட்டில் பிறந்த அவர் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைக்க வழி தேடி மும்பை சென்றனர். ஷில்பா ஷெட்டி வயதுக்கு வந்ததும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தார்கள். திருமண தேதியும் குறிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரம் வரதட்சணை பிரச்சினையால் திருமணம் நின்றது. பெற்றோரால் பேசியபடி வரதட்சணை கொடுக்க முடியவில்லை. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட் டார்கள். ஷில்பா ஷெட்டி அழுதார். அதன் பிறகு ஷில்பாவை அவரது தாய் மாடலிங்கில் தீவிரமாக இறக்கி விட்டார். கொஞ்சம் வருமானம் வந்தது. பிறகு பட உலகுக்கு தாவினார். பணம் கொட்டியது.

Posted in Big Brother, Biography, Biosketch, Bollywood, Details, Film Star, Glamor Doll, Life, Newsmaker, people, Shilpa Shetty, Story, Tamil Actress, Tamil Nadu | 1 Comment »

‘Pirappu’ – Nanthitha, Prabha & Mayuka

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

“பிறப்பு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபா, கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். இவர் இயக்குநர் லிங்குசாமியின் உறவினர். மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமாகும் மயூகா, நடிகர் பிருத்விராஜின் உறவினர். பாலாவின் உதவியாளர் எல்.வி.இளங்கோவன் இயக்கும் இந்தப் படத்துக்கு பாலுமகேந்திராவின் மகன் ஷங்கி மகேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். வித்தியாசமான கதைக் களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு “ஆட்டோகிராஃப்’ பாணியில் இசையமைத்துள்ளார் பரத்வாஜ். “”இந்தப் படம் வரும்வரைதான் இவர்… அவருக்கு உறவினர், அவர்… இவருக்கு உறவினர் என்பதெல்லாம். படம் வெளிவந்த பிறகு நான் உள்பட அனைவருக்கும் “பிறப்பு’… என்ற அடைமொழிதான்” என்கிறார் இயக்குநர்.

Posted in Bhardhvaj, Bhardhwaj, Bharthwaj, Director Bala, Films, Koothupattarai, Lingusami, Lingusamy, Linkusami, LV Ilangovan, LV Ilankovan, Mayooha, Mayuga, Mayuha, News, Pirappu, Prabha, Prithviraj, Shanki Mahendra, Tamil Cinema, Tamil Movies | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Nellikaai for Blood Pressure

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

மூலிகை மூலை: இரத்தக்கொதிப்புக்கு நெல்லி

விஜயராஜன்

மிகச்சிறிய இலைகளையும் இளம் மஞ்சள் நிறக் காய்களையும் உடைய மர வகையைச் சேர்ந்ததாகும் நெல்லி. காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளைக் கொண்டது. இலை, காய், வற்றல் மருத்துவக் குணமுடையது. இஃது ஒரு கற்ப மருத்துவக் குணம் உடையது. காய் வெப்பத்தை அகற்றும், சிறுநீரை பெருக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடல்வாயுவை அகற்றும். வேர், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். நெல்லி வற்றல் குளிர்ச்சியை உண்டாக்கி உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். தமிழகம் எங்கும் காடுகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

இதன் வேறுபெயர்கள்: அத்தகோரம், அந்தகோளம், அமுதம், ஆமலகம், அந்தோர்.

வகை: அரிநெல்லிக்காய்.

ஆங்கிலப் பெயர்: phyllamthus emblica, Linn, Euphorbiaceae

மருத்துவக் குணங்கள்:

நெல்லிக்காய்ச் சாறு, தேன், எலுமிச்சப்பழச் சாறு வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து காலையில் மட்டும் குடித்து வர மதுமேகம் குணமாகும்.

நெல்லிக்காய்ச் சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரை லிட்டர், செவ்விளநீர் 2 லிட்டர், நல்லெண்ணெய் ஒன்றரை லிட்டர் கலந்து அதில் அதிமதுரம் ஏலம், கோசுட்டம், பூலாய்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதி பத்திரி, திரிகடுகு, தான்றிக்காய், கடுக்காய்த் தோல் வகைக்கு 15 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து கலந்து சிறுதீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 2 முறை தலைமுழுகி வர கண் காசம், காமாலை, மாலைக்கண், பொடுகு, முடி உதிர்தல் குணமாகும்.

நெல்லி வற்றல் 2 கிலோ எடுத்து 4 லிட்டர் நீரில் அரை கிலோ சர்க்கரை சேர்த்துப் பாகாக்கி அதில் திரிகடுகு வகைக்கு 30 கிராம், கிராம்பு, ஏலம், வெற்றிலை, குங்குலியம், கற்பூரம், வாய் விளங்கம், அதிமதுரம், கூகை நீறு, கொத்தமல்லி, சீரகம், ஓமம் வகைக்கு 10 கிராம் எடுத்து பொடி செய்து போட்டுக் கிளறி, நெய் அரைலிட்டர் சேர்த்து இறக்கவும். கழற்சிக்காய் அளவு 2 வேளை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்து வர மேகச்சூடு, எலும்பைப் பற்றிய காய்ச்சல், என்புருக்கி, இருமல், ஈழை, காசம், வாயு, கபம், பீனிசம், பொருமல் குணம் ஆகும்.

நெல்லி இலையை நீரில் கைப்பிடியளவு போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.

நெல்லி வேர்ப்பட்டையைத் தேனில் தோய்த்து தடவ நாக்குப் புண் குணமாகும்.

நெல்லி வற்றலும், பச்சை பயறும் வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியாக 2 வேளை குடித்து வர தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு குணமாகும்.

நெல்லிக்காயை 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி தேன் 20 மில்லி கலந்து 40 மில்லியாக 3 வேளை 4 நாள்கள் குடித்து வர மிகுந்த பித்தம் தணியும்.

நெல்லி வற்றல் கியாழம் வைத்து 100 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை கலந்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பித்தசூடு, ஆண் குறியில் சிறு கொப்பளம், வாந்தி, அரோசகம் குணமாகும்.

Posted in Ayurveda, Ayurvedha, Blood Pressure, BP, Euphorbiaceae, Herbs, Linn, Mooligai Corner, Nature, Nelli, Nellikaai, Nellikkaai, organic, phyllamthus emblica | Leave a Comment »

Sleep disorder – Nighttime bed routines, Snoring, pills: Healthcare

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நலம்: குறட்டையா? ஆபத்தாச்சே!

ந. ஜீவா

என். ராமகிருஷ்ணன்

சிலர் அடித்துப் போட்டது போலத் தூங்குவார்கள். சிலரோ கும்பகர்ணன் போல இரவு பகல் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் கோழித் தூக்கம் போடுவார்கள். சிலரோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து மறுநாள் ஆபிஸில் தூங்கிவழிவார்கள். தூக்கம் என்பது சகல ஜீவராசிகளுக்கும் பொதுவானது. மனிதர்களுக்குத்தான் அது பிரச்சினையாகிவிடுகிறது. தூக்கமின்மைப் பிரச்சினைக்கு மருத்துவமும் ஆலோசனையும் தருகிறார் சென்னையில் “நித்ரா‘ என்கிற ஆலோசனை அமைப்பை நடத்திவரும் டாக்டர் என்.ராமகிருஷ்ணன். அவரிடம் தூக்கமின்மைப் பிரச்சினையைப் பற்றிப் பேசிய போது…,

“”ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் தூங்க வேண்டும் என்ற வரையறையெல்லாம் கிடையாது. சிலருக்கு ஒரு நாளைக்கு 3 – 4 மணி நேரத் தூக்கமே போதுமானது. சிலருக்கோ 10 மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டும். சராசரியாக ஒருவர் 6 – 8 மணி நேரம் வரை தூங்கினால் போதுமானது.

சிலர் சுவிட்ச் போடும் சப்தம் கேட்டாலே விழித்துவிடுவார்கள். சிலரோ இடியே விழுந்தாலும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக நல்ல தூக்கம் என்பது தூங்கி எழுந்தவுடன் ஃபிரஷ்ஷா இருப்பதுதான்.

இரவில் நல்ல தூக்கம் இல்லாமற் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. உடல்ரீதியான காரணங்களைவிட மனரீதியான காரணங்களே தூக்கத்தை அதிகம் பாதிக்கின்றன. மனதில் தோன்றும் எண்ணங்களே தூக்கம் வராததற்குக் காரணம். ஏதேனும் குறிப்பிட்ட நிகழ்ச்சி காரணமாக ஓரிரு நாட்கள் தூக்கம் வராமல் இருப்பது சகஜம். இதுவே தொடர்ந்து இருந்தால் அது தூக்கமின்மை வியாதியாகிறது.

வயதானவர்களுக்கு அவர்களுடைய வயது காரணமாகத் தூக்கம் வராமல் போகலாம். அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.

பல வயதானவர்கள் தங்களுடைய தனிமையின் காரணமாக தூக்கமில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் தொழில் காரணமாக வேறு ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள். எவ்வளவு வசதியிருந்தாலும் இந்தத் தனிமையுணர்வு அவர்களுக்கு தூக்கம் வராமல் தடுத்துவிடும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வராது. அடிக்கடி எழுந்து பாத்ரூம் போவார்கள். சில மாத்திரைகள் சாப்பிட்டால் தூக்கம் வராது. சில உடல்ரீதியான பிரச்சினைகளின் காரணமாக சிலருக்குத் தூக்கம் வராது. அவர்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்து நடந்தால் பெட்டர்ன்னு தோன்றும். இதை ஆங்கிலத்தில் தங்ள்ற்ப்ங்ள்ள் ப்ங்ஞ் என்பார்கள். அவர்களுக்குத் தூக்கம் வராது. எழுந்து நடந்து கொண்டிருப்பார்கள்.

சிலருடைய ஹேபிட்டே அவர்களுடைய தூக்கத்தைக் கெடுத்துவிடும். அவர்கள் தூக்கத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்கமாட்டார்கள். கண்ட நேரத்தில் தூங்குவார்கள். கண்ட நேரத்தில் விழிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்சினை வரக்கூடும். கரெக்டா தூங்கி ஃபிட்டா எழ முயற்சிக்கமாட்டார்கள்.

உடலில் வலி பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி காரணமாக ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போய் விடுகிறது.

நல்ல தூக்கத்திற்கு சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவசியம். ரூம் டெம்பரேச்சர் அதிகமாக இருக்கக் கூடாது. நல்ல காற்றோட்டமும், உறுத்தாத, வசதியான படுக்கையும் அவசியம். வெளிச்சம், சப்தம் இருக்கக் கூடாது.

இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்கும் போதுதான் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரக்கின்றன.

சிலர் குறட்டைவிட்டுத் தூங்கினால் அது நல்ல தூக்கம் என்று நினைப்பார்கள். உண்மையில் குறட்டை விடுபவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை. அவர்களுக்கு மூச்சுக் குழலில் உள்ள அடைப்பின் காரணமாகவே குறட்டை வருகிறது. மூச்சுவிடுவது ஸ்லோ ஆகிவிடுகிறது. அவர்களுடைய மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் காலையில் எழுந்ததும் சோர்வாக உணர்வார்கள். குறட்டைப் பிரச்சினை உள்ளவர்கள் டாக்டரை உடனே அணுகவேண்டும். ஏன் என்றால் அவர்களுக்கு தூங்கும் போது மூச்சுவிடமுடியாமல் போய் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தொழில், வேலை காரணமாகப் பலருக்கு உரிய நேரத்தில் தூங்க முடிவதில்லை. உதாரணமாக பிபிஓ வில் வேலை செய்பவர்கள் ராத்திரி விழித்துப் பகலில் தூங்க வேண்டும். என்னதான் பகலில் தூங்கினாலும் ராத்திரி தூங்குவது போல இல்லை. பிபிஓ, கால்சென்டரில் இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்காக அடிக்கடி டீ, காபி சாப்பிடுவார்கள். கொழுப்புச் சத்து நிறைந்த சிப்ஸ், பீட்ஸô போன்றவற்றைச் சாப்பிடுவார்கள்.

பிபிஓ நடத்துபவர்கள் அவர்களுடைய அலுவலகங்களில் நல்ல பிரகாசமான விளக்குகளைப் போட வேண்டும். அப்போதுதான் அங்கு வேலை செய்பவர்களின் கண்களுக்கு பாதிப்பு இருக்காது.

இப்படி இரவில் வேலை செய்துவிட்டு வந்து பகலில் தூங்குபவர்கள் தலைமாட்டில் செல்போனை வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதனால் பகலில் தூங்கும் அந்தத் தூக்கமும் கெட்டுவிடும்.

இப்படித் தூக்கமின்மைப் பிரச்சினை வந்தால் அதற்குரிய ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் போகவேண்டும். பலருக்கு தூக்கத்திற்கென்றே ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் இருக்கின்றனர் என்று தெரியாது.

தூக்கமின்மைப் பிரச்சினைக்கு எல்லாருக்கும் பொருந்தும்படியான பொதுவான தீர்வுகளைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பிரச்சினைக்கேற்பத்தான் தீர்வு சொல்ல முடியும். சிலருடைய பழக்க வழக்கங்களே அவர்களுடைய தூக்கமின்மைப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். ஒருவர் பல ஆண்டுகளாக இரவுப் பணி செய்யாதவர். அவருக்கு இரவுப் பணி போட்டுவிட்டார்கள். அவருக்குக் காலையில் வீட்டுக்கு வந்து படுத்தால் தூக்கம் வராமல் போனது. என்னிடம் ஆலோசனை பெற வந்தார். மூன்று மாதங்களுக்கு மேல் மருந்து மாத்திரைகள் கொடுத்துப் பார்த்தும் அவருடைய பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. கடைசியில்தான் தெரிந்தது, அவர் பகல்நேரப் பணி செய்த காலத்தில் இரவு படுக்கப் போகும் முன் என்டிடிவி செய்தியைப் பார்த்துவிட்டுத்தான் படுக்கப் போவார் என்பது. இப்போது அந்தப் பழக்கம் இல்லாததால் தூக்கம் வரவில்லை. இப்போது அவருடைய மனைவி முதல் நாள் இரவில் என்டிடிவி செய்தியை ரிக்கார்ட் செய்து விடுவார். மறுநாள் காலையில் வேலை முடிந்து வந்த அவருடைய கணவர் அந்த செய்தியைப் பார்த்துவிட்டு அருமையாகத் தூங்கிவிடுவார். எனவே தூக்கமின்மைப் பிரச்சினைக்குத் தனிப்பட்ட முறையில்தான் ஆலோசனை, தீர்வு சொல்லமுடியும்.

“தூக்கத்திற்கு என டாக்டரிடம் போனால் என்ன, தூக்கமாத்திரை கொடுப்பார்கள். இதை நாமே நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளலாமே?’ எனப் பலர் நினைக்கிறார்கள். இது தவறு. டாக்டர்கள் மாத்திரை மட்டும் கொடுப்பதில்லை.

தூக்க வராமல் இருப்பதற்கு முக்கியக் காரணமான மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அதுவும் கூட தனிநபர்களைப் பொறுத்த விஷயம்தான். சிலருக்கு மெல்லிதான பாட்டைக் கேட்டால் தூக்கம் வந்துவிடும். சிலருக்கோ பாட்டைக் கேட்டவுடன் தூக்கம் போய்விடும். எனவே ஒவ்வொருவருக்கும் அவருடைய மனநிலை, பழக்க வழக்கம், உடல் நிலை ஆகியவற்றிற்கேற்பத் தனித்தனியான ஆலோசனைகளைக் கொடுக்கிறோம். கடையில் தூக்க மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதால் ஆரம்பத்தில் தூக்கம் வரும். பின் அதே பழக்கமாகி தூக்க மாத்திரை சாப்பிடாவிட்டால் தூக்கம் வராத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வழக்கமாகச் சாப்பிடும் தூக்க மாத்திரையின் அளவு போதாமல் போய்விடும். இது பல உடல்நலக் கேடுகளை உருவாக்கிவிடும்.

உடம்பின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் வலி காரணமாகத் தூக்கம் இல்லையென்றால், வலி எதனால் ஏற்படுகிறது என்று பார்த்து அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

படுக்கும் போது எப்படிப் படுக்க வேண்டும்? என்பது பலருக்குச் சந்தேகம். மல்லாந்து படுப்பதே போதுமானது. கர்ப்பிணிப் பெண்கள் இடதுபுறம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். குறட்டை விடுபவர்கள் மல்லாக்கப் படுக்கக் கூடாது.

மதிய உணவுக்குப் பின் பலருக்குத் தூக்கம் வருவது இயற்கை. மதிய உணவுக்குப் பின் ஒரு மணிநேரம் தூங்கினால் உடல் ஃபிரஷ்ஷாக இருக்கும். ஆனால் பிராக்டிகலாக இது சாத்தியப்படாது. மேலும் மதியத்தில் ஒரு மணி நேரம் தூங்கினால் ராத்திரி தூக்கத்தை இது பாதிக்கும்.

சில லாரி டிரைவர்கள் தொடர்ந்து இரண்டுநாள் மூன்றுநாள் கண்விழித்து ஓட்டுவார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட தொலைதூரப் பயணங்களில் இரண்டு டிரைவர்கள் இருப்பது நல்லது.

மனதில் அமைதியில்லாமல் தூக்கத்தை இழந்தவர்கள் அதிகம். இதில் இன்னொரு உண்மையென்னவென்றால் நன்றாகத் தூங்கினால் மனதில் அமைதி பிறக்கும். உடலில் புத்துணர்வு ஏற்படும்.

மனம் இறுக்கமில்லாமல், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருப்பவர்களுக்கும், தூக்கத்தை ஒரு பொருட்டாக மதித்து குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் தூக்கமின்மைப் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை.”

Posted in Alcohol, Disorder, Dr. N Ramakrishnan, Healthcare, Medicine, N Ramakrishnan, nausea, Nithra, Sleep, Sleep walking, Sleeping pills, Snore, Snoring, Tiredness | 1 Comment »

Shilpa Shetty – Racism – Celebrity Big Brother victory – Buzz creation & Reality Drama

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நெட்டில் சுட்டதடா…: ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவு கெட்டி!

ராமன் ராஜா

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் மகாத்மா காந்திக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது; இரண்டு பேருமே வெள்ளைக்காரர்களால் கடுமையாக ராகிங் செய்யப்பட்டவர்கள். ஆனால் காந்தியை அன்று அவர்கள் ரயிலிலிருந்து பிடித்துத் தள்ளி விட்டபோது அதைத் தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இன்றைக்கு ஷில்பா ஷெட்டியை ஆதரித்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழும்பியிருக்கின்றன. விவகாரம் பிரிட்டிஷ் பார்லிமென்ட் வரை எதிரொலித்திருக்கிறது. அதுதான் வித்தியாசம். ஆனால் ஆங்கிலேயர்களின் பார்வையில் மட்டும் எந்த மாறுதலும் இன்றி, இன்னும் நாம் பாம்பாட்டிகளாகத்தான் தெரிகிறோம் என்று தோன்றுகிறது.

பிரிட்டனில் சானல்-4 என்ற பிரபல டி.வியில் ஒரு பிரபல கேம் ஷோ. ஆணும் பெண்ணுமாக ஒரு பத்திருபது பேர் சேர்ந்து ஒரு பங்களாவில் பல வாரங்கள் வசிக்க வேண்டும். அங்கேயே சமையல், சாப்பாடு எல்லாம். வெளியே போகக் கூடாது; ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான். அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை வீடு முழுவதும் டஜன் கணக்கான காமிராக்கள் இருபத்து நாலு மணி நேரமும் கண்காணிக்கும். இதை வேலை வெட்டியில்லாத ஆயிரக்கணக்கான நேயர்கள் டி.வியில் பார்த்து ரசிப்பார்கள். (இப்போது இந்த அசட்டுப் பொழுது போக்கெல்லாம் இந்தியத் தொலைக்காட்சி வரை வந்து சேர்ந்துவிட்டது.) பெரியண்ணன் (க்ஷண்ஞ் க்ஷழ்ர்ற்ட்ங்ழ்) என்ற இந்த ஷோவில் கலந்து கொள்வதற்காக பாம்பே பார்ட்டி ஷில்பா ஷெட்டியும் லண்டன் போனார். அவரை வரவேற்றுப் பன்னீர் தெளித்தார்கள்; காமிரா வீட்டிற்குள் அனுப்பிக் கதவைப் பூட்டினார்கள். அப்போது ஆரம்பித்தது வேதனை.

வீட்டுக்குள் வசித்த வெள்ளை நிறத்தினர் எல்லாம் ஷில்பாவை விரோதமாகவே எதிர்கொண்டார்கள். விரைவிலேயே சின்னச் சின்ன வன்கொடுமைகள் ஆரம்பித்தன. ஷில்பா ஓர் இந்தியர் என்பதற்காகப் பரிகாசம் செய்திருக்கிறார்கள். “இந்தியன் இந்தியன்’ என்பதையே இளக்காரமான குரலில் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் “நாயே பேயே’ என்பது வரை போய் விட்டார்களாம். அதுவும் மூன்று லங்கிணிப் பெண்கள் கேங்க் ஆகச் சேர்ந்து கொண்டு ஷில்பாவைப் படாத பாடு படுத்தி எடுத்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில உச்சிரிப்பைக் கிண்டலடித்திருக்கிறார்கள். “”உங்கள் ஊரில் உருப்படியாக வீடு, கீடு ஏதாவது கட்டிக்கொண்டு வசிக்கிறாயா அல்லது எல்லா இந்தியர்களையும் போலத் தகரக் கொட்டகை, சாக்குப்படுதாவா?” என்ற ரீதியில் ஓர் ஊசி. கிச்சனில் போய் சிக்கன் செய்து எடுத்து வந்தால் அது சரியாக வேகவில்லை என்று ஒரு மாபெரும் கலாட்டா. ஒரு நடிகையைப் போய் நிஜமாகவே சமைக்கச் சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம்… டைரக்டர் கட் சொல்லும் வரைதானே கரண்டியால் கிளறிப் பழக்கம்?

ஷில்பாவுக்கு நடப்பதெல்லாம் அவ்வப்போது டெலிவிஷனில் ஒளிபரப்பாக, இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள் கொதித்து எழுந்தார்கள். தாங்கள் தினமும் தெருவில் அனுபவிக்கும் வேதனைகளைத் தங்கள் அபிமான நடிகையும் சந்திப்பதைக் கண்டவுடன் அவர்களுக்கு எங்கோ மிச்சமிருக்கும் தேசபக்தி ஊற்றெடுத்து விட்டது. சானல்-4க்கு ஆயிரக்கணக்கில் கண்டனக் கடிதங்கள் வந்து குவிந்தன. டாக் ஷோ ரேடியோ நிகழ்ச்சிகள், இன்டர்நெட் அரட்டை அறைகள் எங்கும் பிலுபிலுவென்று இதேதான் பேச்சாகிவிட்டது. ஷில்பா பிராணிவதைத் தடுப்பு சங்கத்தில் உறுப்பினர். எனவே, சங்கத்தின் அங்கத்தினர்களெல்லாம் லண்டன் குளிரில் சட்டையைத் துறந்து உடம்பெங்கும் சிறுத்தைப் புலி பெயின்ட் அடித்துக்கொண்டு “”வெள்ளையனே, ஓர் அப்பாவி இந்தியப் பிராணியை வதைக்காதே!” என்று காந்திகிரி செய்தார்கள். கடைசியாக வந்த தகவலின்படி ஷில்பா ஷெட்டி விவகாரம் ஒருவழியாக சமாதானம் பேசி முடிவாயிருக்கிறது. எது எப்படியோ, பெரியண்ணாவுக்கு இதனால் நல்ல வியாபாரம். சானல்-4 டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங் எங்கோ எகிறிவிட்டது.

ஷில்பாவுக்கு நடந்த சில்மிஷங்களெல்லாம் பொதுவாக, ஆசிய, ஆப்பிரிக்கர்கள் எல்லாருக்கும் அங்கே நடப்பதுதான். உதாரணமாக ஷில்பாவை அவர்கள் “”பாக்கி பாக்கி” என்று ரேக்கி எடுத்தார்கள். (பாக்கிஸ்தான்காரி என்பதன் சுருக்கம்). இந்தியத் துணைக் கண்டத்தினரை இகழ்வதற்காகவே அவர்கள் கண்டுபிடித்துள்ள வட்டார வசவுச் சொல் இது. அவர்களைப் பொறுத்தவரை சற்று மாநிறமாக யாராவது தெருவில் போனாலே பாகிஸ்தானி என்று சொல்லிவிடுவார்கள். இந்த மாதிரி பற்பல இனவெறிச் சொற்ரொடர்கள், சாராயக் கடைகளிலும் ஹைஸ்கூல் மாணவர்களிடையிலும் தினமும் ஏராளமாகப் புழங்குகின்றன.

இங்கிலாந்தில் இனவெறி எந்த அளவுக்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை அறிய, பிபிசி நிருபர் ஒருவர் ஒரு சின்ன பரிசோதனை செய்தார். பேப்பரில் வந்திருந்த அத்தனை வாண்ட்டட் விளம்பரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு சரமாரியாக வேலைக்கு விண்ணப்பம் போட்டார். ஆனால் இரண்டு செட் அப்ளிகேஷன் அனுப்பினார். ஒன்று ஜான், பீட்டர் என்பதுபோல் வெள்ளைக்காரத்தனமான பெயரில். மற்றொன்று -ஜாங்கியா சிங், சலீம் அலி என்பது போன்று வெள்ளையடிக்கப்படாத பெயரில். மற்றபடி கல்வித் தகுதி, அனுபவம் எல்லாம் இரண்டு அப்ளிகேஷன்களிலும் ஒரே மாதிரிதான். ஆங்கிலேயப் பெயரில் போட்டவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. மற்ற விண்ணப்பங்கள் போன இடம் தெரியவில்லை. நேரடியாக டாய்லெட் பேப்பர் செய்வதற்கு மூலப் பொருளாக அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது.

அங்கே பல காலமாக கறுப்பு இனத்தவர்கள் வேலையில்லாதிருப்பது -பிழைப்புக்காகக் குற்றங்களில் ஈடுபடுவது -அதனால் வேலை வாய்ப்புக் கதவுகள் மேலும் இறுக மூடிக் கொள்வது என்பது விஷ வட்டம் போலத் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறது. மைனாரிட்டி வகுப்பு மக்கள் வேலை வாய்ப்பில் மிகவும் பின் தங்கியிருப்பதற்குக் காரணமே, வேலை கொடுப்போரின் இனவெறி மனநிலைதான். இனப் பாகுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் கமிஷன்கள் எல்லாம் அமைத்து வரைப்படங்கள் வரைந்து அறிக்கைகள் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன்படி கல்வி, வேலை, சம்பாத்தியம், குழந்தை இறப்பு விகிதம் இப்படி எந்தப் புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், முஸ்லிம்கள் எல்லாருமே, ஜாதி வெள்ளயர்களை விட இரண்டு படி கீழேதான் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் நீங்கள் கார் ஓட்டும்போது சற்றே ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டாலும் ஓவர் ஸ்பீட் போனதற்காகப் போலீஸ்காரர் பிடித்து அபராதம் தீட்டிவிடுவார். அதே வேகத்தில் பக்கத்தில் ஒரு “வெள்ளைக்காரர்’ போனால் வெறும் அதட்டலுடன் தப்பித்து விட அவருக்கு சான்ஸ் அதிகம். அதுவும் சந்தேகத்துக்கிடமான நபர் ஆப்பிரிக்கர் என்றால் ஆன் தி ஸ்பாட்டிலேயே அடி உதை கூடக் கிடைக்கலாம். வெள்ளை போலீசார் கறுப்பர்களைத் தெருவில் போட்டு மிதிக்கும் காட்சிகளை எவ்வளவோ தற்செயல் காமிராக்கள் படம் பிடித்திருக்கின்றன.

இனவெறிப் பிரச்சினைகளில் இந்த அரசியல்வாதிகளாவது தங்கள் திருவாயைத் திறக்காமல் இருந்து தொலைக்கலாம். இருப்பார்களா என்ன? முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் வழக்கம் பற்றி அங்கே ரொம்ப நாளாகவே ஒரு விவாதம் இருக்கிறது. ஒரு நாள் பாராளுமன்றத் தலைவர் ஜாக் ஸ்ட்ரா ஒரு வாய் முத்து உதிர்த்தார். “”முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமானால் பர்தா போன்ற தங்கள் தனிப்பட்ட அடையாளங்களைத் துறந்துவிட வேண்டும்” (ஜாக் ஸ்ட்ரா என்ற வார்த்தைக்குக் கொடும்பாவி என்று அர்த்தம்!) இதற்குக் கை மேல் பலன் கிடைத்தது. நாடு முழுவதும் பர்தாப் பெண்கள் தெருவில் நடக்கவே முடியாமல் ஏளனம், சீண்டல், வம்பர்கள் அவர்கள் மீது பேப்பர் ராக்கெட் வீசினார்கள்; முக்காட்டைப் பிடித்து இழுத்தார்கள்.

இந்த அக்கிரமக்காரர்களெல்லாம் பக்கா ஜென்டில்மேன்கள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது, மற்ற சிலருடைய நடவடிக்கைகள். பாலத்தடியில் குந்தி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கும் முரட்டு இளைஞர் கூட்டங்கள், அவ்வப்போது ஆசியர்களை அடித்துத் தாக்கி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்கின்றன. இதற்குச் சிகரம் வைத்ததுபோன்ற நிகழ்ச்சி நடந்த வருடம் 1993. ஸ்டீபன் லாரன்ஸ் என்ற பதினெட்டே வயதான இளைஞர். கண் நிறைந்த கனவுடகளுடன் இருந்த ஆப்பிரிக்க மாணவர். நன்றாகப் படித்துக் கொண்டிருந்தார். அவர் செய்த ஒரே குற்றம், கறுப்புத் தோல் போர்த்தியிருந்தது. லண்டனில் பஸ் ஸ்டாண்ட் ஒன்றில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த போது அந்த ஏரியாவில் அலப்பறை பண்ணிக்கொண்டு திரிந்த வெள்ளைக் கும்பல் ஒன்றின் கண்ணில் பட்டுவிட்டார். திடீரென்று அவர்கள் காரணமின்றி ஸ்டீபன் மீது பாய்ந்து நீண்ட கத்தியால் சரமாரியாகக் கிழிக்க ஆரம்பித்தார்கள். தப்பித்து ஓட முயன்ற ஸ்டீபன் நூறு அடி ஓடுவதற்குள்ளாகவே தன் கறுப்பு ரத்தம் அனைத்தையும் வெள்ளையர் பூமியில் காலி செய்துவிட்டு உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த உடனே டெலிபோனில் ஆள் அடையாளத்துடன் தகவல் கிடைத்தும் பிரிட்டிஷ் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டாமல் காலம் கடத்தியதும், அடுத்து பத்து வருடத்திற்கு ஸ்டீபனுடைய பெற்றோர்கள் நம்பிக்கையிழக்காமல் கதவு கதவாகத் தட்டியதும், பெரும் போராட்டத்துக்குப் பிறகு கடைசியில் ஒரு வழியாகப் பாதி நீதி வென்றதும் -பிரிட்டனில் வசிக்கும் கறுப்பு இனத்தவருக்குக் கட்டபொம்மன் கதை மாதிரி ஒரு வீர வரலாறு.

அதன்பிறகு தொடர்ச்சியாக வருடத்துக்கு ஐந்து இனவெறிப் படுகொலைகளாவது பிரிட்டனில் நடக்கின்றன. அதிலும் 2005 ஜூலையில் லண்டனில் குண்டு வெடித்த நிகழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவது அதிகரித்துவிட்டது. எனவே நீங்கள் தாடி கீடி வைத்திருந்தால், இருட்டின பிறகு தயவு செய்து இங்கிலாந்துத் தெருக்களில் நடக்காதீர்கள்.

லண்டன் டி.வி. நிகழ்ச்சியில் ஷில்பா வெற்றி: கோடிக்கணக்கில் பணம் குவிகிறது

லண்டன், ஜன. 30: லண்டன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த “பிக் பிரதர்’ என்ற கேம் ஷோவில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசுப் பொருள்களும், ஹாலிவுட் பட வாயப்புகளும் குவிகின்றன.

இதுகுறித்த விவரம்:

இங்கிலாந்தின் “சேனல் 4′ தொலைக்காட்சி நிறுவனம் “செலிபிரிட்டி பிக் பிரதர்ஸ்’ என்ற நிகழ்ச்சியை சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளின் பிரபலங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு வீட்டில் தங்க வைப்பார்கள்.

அங்கு அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளைப் படமாக்கி ஒளிபரப்பு செய்வார்கள். அதைப் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவரார்கள். இறுதி வரை யார் அங்கு இருக்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சர்ச்சை: கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் பங்கேற்றனர். முதன்முறையாக இந்தியா சார்பில் நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்றார். முதல் வாரம் அமைதியாகச் சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி, சக போட்டியாளர்கள் ஷில்பாவிடம் நடந்துகொண்ட முறையால் பலரின் கவனத்தையும், கண்டனத்தையும் பெற்றது.

ஷில்பாவை வெளியேற்றும் நோக்கத்தில் சக போட்டியாளரான ஜேட் கூடி ஷில்பாவை “நாய்’ என்றும், மற்ற இருவர் “அருவறுக்கத்தக்கவர்’, “ஆங்கிலம் பேசத் தெரியாதவர்’ என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுதார்.

புகார்: சக போட்டியாளர்கள் சிலரின் மரியாதைக் குறைவான செயல்களைத் தொலைக்காட்சியில் பார்த்த நேயர்கள் அதிர்ச்சியடைந்தனர். இன பாகுபாடு காரணமாகவே ஜேட் கூடி அவமரியாதையாக நடந்துகொண்டார்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ மெயில் மூலமாகப் புகார் தெரிவித்தனர்.

ஆதரவு: இதன் காரணமாக ஜேட் கூடி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஷில்பாவுக்கு ஆதரவு அதிகரித்தது. 14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு ஷில்பா, மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெற்றி: இறுதிச் சுற்றில் ஒவ்வொருவரும் பெற்ற வாக்குகள் விவரம் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63 சதவிகித வாக்குகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றார். மற்றவர்கள் மிகக் குறைந்த சதவிகித வாக்குகளையே பெற்றனர்.

ஆனந்தக் கண்ணீர்: வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டதும் ஷில்பா ஷெட்டி ஆனந்தக் கண்ணீரோடு அறையை விட்டு வெளியே வந்தார். அங்கு திரண்டு நின்ற ஆயிரக்கணக்கானோர் அவரை கரகோஷத்துடன் வரவேற்றனர்.

`பிக்பிரதர்’ வெற்றியால் ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்தது 

மும்பை, ஜன.30- இங்கிலாந்தில் சானல்4 டிவி நடத்திய பிக்பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி அபார வெற்றி பெற்றார். இன வெறியால் அவமானப்படுத்தப்பட்ட அவருக்கு 67 சதவீத ஆதரவு கிடைத்தது. இந்த வெற்றியால் நடிகை ஷில்பா ஷெட்டியின் புகழ்-அந்தஸ்து ஒரே நாளில் உலக அளவில் உயர்ந்து விட்டது.

31வயதாகும் ஷில்பா ஷெட்டி இது வரை 37 படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியதால் இந்தி பட உலகம் அவ்வளவாக அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது. எனவே எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஆர்வம் காட்டி வந்தார்.

மும்பை செம்பூரில் வசித்து வரும் ஷில்பா ஷெட்டி பெரும் பணக்காரர் என்று சொல்லும் அளவுக்கு மிக, மிக உயர்ந்த பொருளாதார நிலையில் இல்லாமல் இருந்தார். ஆனால் இன்று பிக்பிரதர் வெற்றிக்கு பிறகு அவர் கோடீஸ்வரர் விஐபிக்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதோடு இது வரை இந்திய நடிகைகள் யாருக்கும் கிடைக் காத பப்ளிசிட்டியும், புகழும் அவருக்கு கிடைத் துள்ளது.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் அவருக்கு ரூ.5கோடி கிடைத்தது. இது தவிர பரிசுப் பொருட் களும் குவிந்தன. உலகின் பல நிறுவனங்கள் ஷில்பாவை தங்கள் விளம் பரகாரர்ஆக்கு வதற்காக பரிசுகளை அள்ளி, அள்ளிக் கொடுத்தப்படி உள்ளன.

பிரபல நிறுவனங்கள் மூலம் மட்டும் ஷில்பாவுக்கு ரூ.10 கோடி வரை கிடைத்துள்ளது. பிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன் புதிய ஆலிவுட் படத்தில் ஷில்பாவை ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளது. பிபிசியில் காமெடி தொடர் ஒன்றில் முக்கிய வேடம் ஒன்றுக்கு ஷில்பாவை கேட்டுள்ளனர்.

வசனசர்த்தா சஞ்சீவ் பாஸ்கர் இது தொடர்பாக ஷில்பாவின் தாய் சுனந் தாவுடன் பேசி வருகிறார். இந்த காமெடி தொடர் மூலமாகவும் ஷில்பாவுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கும். இவை தவிர புத்தகங்கள் எழுதுவது, கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சியில் பங்கேற்பது, டி.வி டாகுமெண்டரியில் நடிப்பது போன்றவற்றுக்கு ஷில்பா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

லண்டனில் புகழ் பெற்ற ஆடை, அலங்கார, நகை டிசைன் நிறுவனங்கள் ஷில்பா விடம் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றன. இத்தகைய முதல் ரவுண்டி லேயே ஷில்பா ஷெட்டிக்கு ரூ.45 கோடி குவிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஷில்பாவை இன்று வரை வெளிநாட்டு நிறுவனங் கள்தான் முற்றுகை யிட்டு மொய்த்தப்படி உள்ளன. அவர் இந்தியா திரும்பியதும், அவருக்கு கிடைக்கப் போகும் பப்ளி சிட்டியைப் பொறுத்து ஷில்பாவுக்கு புதிய ஒப்பந் தங்கள் கிடைக்கலாம்.

எனவே இந்தியாவிலும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்துள்ளது. சினிமாவில் தான் ஒரே பாடல் காட்சியில் கதாநாயகனின் அந்தஸ்து உயர்ந்து, அவன் பணக்காரனாகி விடுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் உண்மையிலேயே `பிக்பிரதர்’ வெற்றி மூலம் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரே நாளில் ரூ.45 கோடி குவித்து சாதனை படைத்து விட்டார்.

Posted in Actress, Big Brother, Docu Drama, London, Movies, racism, Reality Drama, Shilpa Shetty, Tamil Actress, UK | Leave a Comment »

Tamil VU – Internet University & Digital Library via Ponvizhi OCR

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

டிஜிட்டல் வடிவம் பெறும் பழந்தமிழ் ஓலைச் சுவடிகள்

பா.கிருஷ்ணன்

சென்னை, ஜன. 29: பண்டைக்கால தமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் டிஜிட்டல் வடிவில் இணையத்தில் பதிவு செய்கிறது.

இப்பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குநர் ப.அர. நக்கீரன் தெரிவித்தார்.

“தினமணி’க்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உ.வே. சாமிநாதய்யர் போன்றோர் தேடிக் கண்டுபிடித்த சுவடிகள் திருவான்மியூர், உ.வே. சுவாமிநாத ஐயரின் நூல் நிலையத்தில் உள்ளன.

அச்சுவடிகள் படம் பிடிக்கப்பட்டு குறுந்தகடு (சி.டி.) வடிவில் தயாரிக்கப்படும். பின்னர், அவை இணையதளத்தில் இடம்பெறும். அத்துடன் முக்கிய இலக்கிய, கலாசார ஆவணங்கள், பிரமுகர்களின் கையெழுத்துப் பிரதிகளும் மின்னணு வடிவில் மாற்றப்படும்.

திருக்கோயில்கள்: தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியன ஒலி -ஒளி வடிவில் படமாக்கப்பட்டு, இணையதளத்தில் ஏற்றவும் இணையப் பல்கலை. உத்தேசித்துள்ளது.

இதுவரை 350 கோயில்கள் ஆவணப் படங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, புதிதாகவும் கோயில்கள் குறித்த தகவல்கள் கொண்ட ஆவணப் படங்களும் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்கள் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் மின் நூலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

உ.வே.சா. வாழ்க்கை வரலாற்று நூல் “என் சரிதம்’ நூலும் இந்த மின் நூலகத்தில் இடம்பெறும்.

இந்த மின் நூலகத்தில் எந்தெந்த புத்தகங்கள் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரை செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு புதிதாக 450 நூல்களை இடம்பெறச் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதுவரை 370 நூல்கள் இடம்பெற்றுவிட்டன. மீதமுள்ள நூல்களில் பல அச்சில் கிடைக்கவில்லை. வேறு சில இதுவரை கிடைக்கப் பெறாததால், தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொன்விழி சாஃப்ட்வேர்: பொன்விழி எனப்படும் இந்த சாஃப்ட்வேர் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கணினியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், ஓ.சி.ஆர். என்ற முறையில் வாசகங்களைப் படிக்கலாம். அவற்றில் தேவையான மாற்றங்களையும் மேற்கொள்ளலாம் என்றார் நக்கீரன்.

Posted in Ba Ara Nakkeeran, CD, digital library, Enn Saritham, Internet, Literature, OCR, Optical Character Recognition, Pa Ara Nakkiran, Ponvizhi, Tamil VU, U Ve Saa, U Ve Saminathan, University, UV Saaminathaiyar, UV Saminathaiyar | 2 Comments »

Disproportionate assets and corruption – ADMK’s former MLA Theni Panirselvam indicted

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தேனி பன்னீர்செல்வத்துக்கு 3 ஆண்டு ஜெயில்

சென்னை, ஜன.29-

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தேனி பன்னீர் செல்வம். இவர் 1992 முதல் 1996 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.21 லட்சத்து 36 ஆயிரத்து 435 சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இவரது மனைவிகள் ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோரும் இந்த வழக் கில் குற்றவாளிகளாக சேர்க் கப்பட்டனர். 7.3.97-ல் இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். போடப் பட்டது. 4.11.2003-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சென்னை தனிக் கோர்ட்டில் இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. 80-க்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

`இன்று தீர்ப்பு வழங்கப்படும்’ என்று நீதிபதி தட்சணா மூர்த்தி அறிவித்து இருந்தார். இதை யடுத்து தேனி பன்னீர் செல்வம், ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோர் இன்று சென்னை தனிக்கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். தீர்ப்பு வழங்குவதற்கு முன் னால் நீதிபதி 3 பேரிடமும் “உங்களை குற்றவாளிகள் என்று தீர்மானித்துள்ளேன். என்ன சொல்கிறீர்கள்ப” என்று கேட்டார். அதற்கு அவர்கள் `தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அதில் தேனி பன்னீர்செல்வத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை `அப்பீல்’ செய்வ தற்கு வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், 60 நாட்களுக்குள் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தேனி பன்னீர் செல்வம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். பின்னர் ரூ.20 ஆயிரத்துக்கான பத்திரம் மற்றும் 2 தனி நபர் ஜாமீன் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுபோல ஜானகி அம்மாள், தனபாக்கியம் ஆகியோரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Posted in abuse, ADMK, AIADMK, Assets, Corruption, Disproportionate, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Politics, Power, Tamil Nadu, Theni | Leave a Comment »

Shilpa Shetty Wins Celebrity Big Brother With 67 Percent of Votes

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

பிக்பிரதர் நிகழ்ச்சி: ஷில்பா ஷெட்டி அபார வெற்றி

லண்டன், ஜன. 29-

இங்கிலாந்தில் “சானல் 4” தொலைக்காட்சி “பிக்பிரதர்” என்ற வித்தியாசமான டி.வி. நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தனி அறையில் 26 நாட்களுக்கு 14 பிரபலங்களை தங்க வைத்து, அவர்களது தினசரி நடவடிக்கைகளை ஒளிபரப்பு செய்தனர். இதில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார்.

கடந்த 3-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடு களின் நேயர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. திடீரென இந்த நிகழ்ச்சி டி.வி. நடிகை ஜேக்கூடியால் சர்ச் சைக்குள்ளானது.

நடிகை ஷில்பா ஷெட்டியை ஜேக்கூடி “நாய்” என இன வெறியுடன் திட்டினார். பப்படம், ஆங்கிலம் பேச தெரியாது என்றும் ஷில்பாவை அவர் கிண்டல் செய்தார். இந்த இனவெறி பேச்சுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜேக்கூடியை கண்டித்து சுமார் 45 ஆயிரம் பேர் புகார் செய்தனர். இந்த நிலை யில் போட்டி விதிகளின் படி நேயர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

குறைந்த ஓட்டு பெறுபவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டனர்.

ஷில்பா ஷெட்டியை திட்டிய காரணத்தால் நேயர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்த ஜேக்கூடிக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இதனால் நடிகை ஜேக்கூடி “பிக்பிரதர்” நிகழ்ச்சியில் இருந்து வெளி யேற்றப்பட்டார்.

ஜேக் கூடியுடன் சேர்ந்து ஷில்பா ஷெட்டியை கிண்டல் செய்த ஜோ ஓமிரா, டேனிலி லாயிட் ஆகியோரும் அடுத்தடுத்து நேயர்களிடம் ஆதரவு பெற இயலாமல் வெளியேற்றினர். இதனால் நடிகை ஷில்பா ஷெட்டி மிக, மிக எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

14 போட்டியாளர்களில் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றனர். நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மையன் ஜாக்சன், டிர்க்பெனடிக், இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயிட், ஜேக்டுவிட் ஆகியோர் அந்த 6 பேராகும். இவர்களில் இயன் எச்.வாட்கின்ஸ், டேனிலி லாயட், ஜேக்டுவிட் ஆகிய மூவரும் சனிக்கிழமை நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி, ஜெர்மைன் ஜாக்சன், டிர்க் பெனடிக் ஆகிய மூவரிடமும் பலத்த போட்டி நிலவியது. இவர்களில் இங்கிலாந்து நேயர்களிடம் அதிக ஓட்டு பெறப்போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவியது.

பெரும்பாலானவர்கள் டிர்க் பெனடிக் இறுதிச் சுற்றில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதினார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாட்டுக்காரர்களும், இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டு அவரை வெற்றி பெறச் செய்தனர்.

`பிக்பிரதர்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் ஒவ்வொரு வருக்கும் கிடைத்த ஓட்டுகள் விவரம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஷில்பா ஷெட்டி 63சதவீத ஓட்டுக் கள் பெற்று பிக்பிரதர் நிகழ்ச் சியில் முதல் இடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றார்.

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் இந்த கவுரவத்தை பெறுவது இதுவே முதல் தடவையாகும். 2-வது இடத்தை ஜெர்மைன் ஜாக்சன் பிடித்தார். இவர் பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஆவார்.

3-வது இடத்தை டிர்க் பெனடிக் பெற்றார். போட்டி யில் வெல்வார் என்று எதிர் பார்க்கப்பட்ட இவரை மக் கள் 3-வது இடத்துக்கு தள்ளி விட்டனர். ஷில்பா ஷெட் டியுடன் ஒப்பிடுகையில் 2-வது, 3-வது இடத்தை பிடித்தவர்களுக்கு மிக, மிக குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.

தோல்வி அடைந்த இயன் வாட்கின்ஸ் 5.3 சதவீதம், டேனிலி லாயிட் 3.3 சதவீதம், ஜேக் டூவிட் 3.2 சதவீதம் ஓட் டுக்களையே பெற முடிந்தது.

63 சதவீத ஓட்டுக்களுடன் ஷில்பா முதல் இடத்தைப் பிடித்து இருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் ஷில்பா `ஓ’ என்று ஆச்சரியத்தில் குரல் எழுப்பியபடி கைக்கூப்பி வணங்கினார்.

“சிக்கன் கறி வென்று விட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று உணர்ச்சிப் பொங்க கூறினார்.

அவர் கண் களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ஜெர்மைன் ஜாக்சனும், டிர்க் பெனடிக்கும் ஷில்பாவை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதையடுத்து ஷில்பா ஷெட்டி 26 நாட்களுக்குப் பிறகு தன் வீட்டு அறைக்குள் இருந்து வெளியில் வந்தார். ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு நின்று ஷில்பாவை வரவேற்றனர். இவை அனைத்தும் சானல்-4ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

`பிக்பிரதர்’ டி.வி. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு பரிசுத் தொகையாக ரூ.3 கோடி (300,000 pounds (600,000 dollars)) வழங்கப்படுகிறது. இது தவிர அவருக்கு ஏராளமான நிறுவனங்கள் பரிசுகளை வாரி வழங்குகின்றன. புதிய ஒப்பந்தங்களும் ஷில்பாவுக்கு கிடைக்கும். குறைந்த பட்சம் ரூ.40 கோடி அளவுக்கு அவருக்கு பரிசுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஷில்பாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும் குவிந்தபடி உள்ளன. இது அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

பிக்பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது குறித்து ஷில்பா ஷெட்டி டயரி ரூமில் அமர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் நாடு (இந்தியா) பெரு மைப்படும் வகையில் வெற்றிக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி.

இந்த போட்டி உண்மையில் ராட்டினத்தில் பயணம் செய்வது போல இருந்தது. உயர்வும், தாழ்வும் எனக்கு பல விஷயங்களை உணர்த்தின. நான் ஏதோ பிரச்சினையை ஏற்படுத்தி விட்டதாக இங்குள்ளவர்கள் கருதக்கூடாது.

என்னை ஜேக்கூடி இன வெறியுடன் திட்டியதாக கூறியது தவறு. அவர் இன வெறி பிடித்தவர் அல்ல. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜேக்கூடி சற்று ஆவேசமாக பேசக்கூடியவர். எளிதில் கோபப்படுபவர். அதுதான் அவருக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதை இனி அனைவரும் மறந்து விட விரும்புகிறேன்.

எவ்வளவு தான் பிரபல மானவராக இருந்தாலும் தவறு செய்வது சகஜம்தான். எல்லோரும் மனிதர்கள் தானே. நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எனவே ஜேக்கூடியை குறை சொல்லக்கூடாது.

இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு நபருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு நான் என் நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டி கூறினார்.

Posted in Actress, Big Brother, Britain, Celebrity, Drama, London, racism, Reality Show, Shilpa Shetty, UK | Leave a Comment »