Musharaff Accepts Al-Quaeda Operates from Pakistan
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006
ஆப்கானிஸ்தானுக்கு முஷாரப் அறிவுரை
![]() |
![]() |
பாகிஸ்தான் அதிபர் முஷாரப் |
ஆப்கானிஸ்தான் தான் சந்தித்துவரும் தீவிரவாதப் பிரச்சனைக்கு தனது நாட்டின் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கோரியுள்ளார்.
தனது ஆப்கான் பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, காபூலில் பேசிய அவர், அல்கொய்தாவினரும், தலிபான் போராளிகளும் பாகிஸ்தானுக்குள் இருந்து இயங்குவதை ஒப்புக் கொண்டார்.
ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் அரசிடமிருந்தோ, பாதுகாப்பு அமைப்புக்களிடமிருந்தோ உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் முஷாரப் தெரிவித்தார்.
புதன்கிழமை தங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க உறுதி மேற்கொண்டனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்