Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Birthday’ Category

Fr Jegath Gasper Raj & Tamil Mayyam’s December Music Celebrations: Festival of Love

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

அன்பின் திருவிழா!

கிருஸ்து பிறந்த தினத்தையொட்டி டிச.20 முதல் 28 வரையான எட்டு தினங்களை “அன்பின் காலம்’ என்று கொண்டாடுகிறது தமிழ் மையம் அமைப்பு. இந்தத் திருநாளின் மைய அம்சம் கிருஸ்து பிறந்த நாளாக இருந்தாலும் இதை ஒரு தமிழ்த் திருவிழாவாக- எல்லோருக்குமான விழாவாகக் கொண்டாடுவதுதான் இதில் சிறப்பம்சம்.

அட என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு இதோ மேலும் ஆச்சர்யங்கள்…

“”சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த அன்பின் திருவிழாவில் முதல் நாள் விழாவில் இறைவாழ்த்தாக அங்கு இசைக்க இருப்பது திருவள்ளுவரின் “அகரமுதல எழுத்தெல்லாம்’.

இரண்டாவது, மண் வாழ்த்து. உலகுக்கே முதலில் ஒற்றுமையை வலியுறுத்திய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அடுத்தது உழைப்பவர் வாழ்த்து… கம்பர் எழுதிய ஏரெழுபது பாடல்.. மார்கழி மாதம் என்பதால் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் அரங்கேறுகிறது” என்கிறார் விழா ஒருங்கிணைப்பாளர் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் பாடிய பிரத்யேக ஆடியோ சி.டி. ஒன்றும் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “ப்ரே ஃபார் மீ, பிரதர்’, 100 கிருஸ்துமஸ் தாத்தாக்கள் தமிழகம் முழக்கச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள். பதிலாக நாம் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டோம் காஸ்பர் ராஜிடம்.

“”அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறோம். இதைத் தவிர கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான திட்டம் ஒன்றும் இந்த விழாவுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதைவிட அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆசிரியரை அனுப்பிப் பாடம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அந்தந்த கட்ட உரிமையாளர்கள், பில்டர்களின் தயவு தேவை. அவர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே சற்று இடம் ஒதுக்கித் தந்தால் நாங்களே ஆசிரியர் அனுப்பி பாடம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஓரளவுக்குக் கல்வி கிடைக்க வசதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.”

“”இது தவிர வேறு திட்டங்கள் உண்டா?” என்றோம்.

“”சென்னை நகரத்தில் வீடடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புரத்தில் இருந்து வாழ்வாதாரம் இழந்து நாள்தோறும் சென்னைக்கு வந்த வண்ணமிருக்கிறார்கள். சாலையோரங்களில், நகரத்துச் சேரிகளில் வாழும் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறும் காஸ்பர், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இது சம்பந்தமாக என்ன செய்ய முடியும் என்று அரசாங்க ரீதியாக கோரிக்கை வைப்பது சமூக ரீதியாக ஆதரவு திரட்டுவது என செயல்படுவோம் என்கிறார்.

திருவிழா நடைபெறும் இந்த எட்டு தினங்களும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாட்டுப்புற கலைகள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கம்புச் சண்டை, சிலம்பு ஆகியவை அங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்பதுதான் இதன் சுவாரஸ்ய அம்சம்.

இது தவிர 70 அடி உயர கிருஸ்துமஸ் மரம், 100 மீட்டர் நீளமுள்ள கேக், 100 கிருஸ்மஸ் தாத்தாக்கள் என்று விழாவைக் கலகலக்க வைக்கும் அம்சங்கள் ஏராளமிருக்கிறது இந்த நிகழ்ச்சியில்.

தமிழ்மகன்

Posted in Andaal, ARR, Arts, Birthday, Bombay Jayashree, Carnatic, Casper, Casperraj, Celebrations, Christ, Christian, Christianity, Christmas, Classical, Culture, December, Faith, Folk, Fr Jegath Gasper Raj, Gasper, Gasper Raj, Gasperraj, Heritage, Homeless, Jayashree, Jayashri, Jayasri, Jegath, Jegath Gasper Raj, Jesus, Jeyashree, Jeyashri, Kanimoli, Kanimozhi, Kanimozi, Labor, Labour, Labourers, music, Orphans, Performance, Rahman, Rehman, Religion, Sangam, Sangamam, Santa, Shows, Stage, Thiruppaavai, Thiruppavai, Thiruvembavai, Thiruvempavai, Trees, workers, Xmas | Leave a Comment »

‘Thisai Ettum’ awards Translators & Nalli Kuppusamy Birthday

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பத்து மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருது

சென்னை: நல்லி, “திசை எட்டும்’ எனும் காலாண்டு இதழ் இணைந்து நுõல் மொழி பெயர்ப்பாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. சென்னையில் நேற்று நடந்த இவ்விழாவில் துõர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார்.

“திசை எட்டும்’ இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் விருது பெறுபவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என் பது பற்றி பேசினார். விருதுகளை வழங்கி நல்லி குப்புசாமி பேசுகையில், “”பொது மக்கள் நுõல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளனர். மொழி பெயர்ப்பு நுõல்களை வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை நாம் செய்ய வேண்டும்,” என்றார்.

வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “” ரவீந்திர நாத் தாகூருக்குப் பிறகு நிறைய ஜாம்பவான்கள் வாழ்கின்றனர். அவர்களது இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். மொழி சிறந்த தொடர்பு சாதனம். நேரடி மொழி மாற்றம், இணையான மொழி மாற்றம், இருந்ததை புதிதாக சொல்லும் மொழி மாற்றம் என மூன்று வகைகளில் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மொழி பெயர்ப் பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நுõல் என்ற எண்ணம் படிக்கும் வாசகருக்கு வரக்கூடாது,” என்றார்.

சிறப்பு விருந்தினரான டி.ஜி.பி., ராஜேந் திரன் பேசுகையில், “”மொழி பெயர்ப்பாளருக்கு நல்லதொரு சிறப்பை செய்துள் ளீர்கள். இது மாதிரியான சேவைகளால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.

தமிழிலில் இருந்து பிறமொழி மற்றும் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்த தலா ஐந்து பேர் என பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.

  • ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பி.ராஜ்ஜா,
  • மலையாள மொழி பெயர்ப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும்
  • சரவணன்,
  • நிர்மால்யா,
  • இறையடியான்,
  • சாந்தா தத்,
  • புவனா நடராஜன்,
  • மந்திரி பிரகடசேஷாபாய்,
  • நவநீத் மத்ராசி,
  • பத்மாவதி

ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

விழா முடிவில் நல்லி குப்புசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். முன்னதாக சுதா ரகுநாதன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

Posted in Authors, Awards, Birthday, Cake, Events, Function, Journals, Kuppusami, Kuppusamy, Kurinjivelan, Kurinjvelan, Literature, Mag, Magazines, Mags, Magz, Nalli, Prizes, Sivasankari, Thisai Ettum, ThisaiEttum, Translation, Translators, Works, Writers | 2 Comments »

Celebrated Hindustani classical singer Prabha Attre’s 75th birthday celebrations

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

வாழும்போதே வாழ்த்துங்கள்!

ஞாயிறு மாலை. மழைச் சாரல் வேறு.

பாராட்டுப் பெறுபவருக்கோ 75 வயது. அதுவும் கர்நாடக இசைப் பாடகி கூட அல்ல. ஹிந்துஸ்தானி இசைப் பாடகி! -இத்தனை இருந்தும் பாரதிய வித்யா பவன் மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்து இருந் தது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஸ்ரீமதி பிரபா ஆத்ரே.
ரேடியோவிலும், மும்பை மகளிர் கல்லூரியி லும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குடியரசுத் தலைவரின் பத்ம பூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிரபா ஆத்ரே.

வழக்கறிஞர் கே.சுமதி, இலக்கியத்தில் ஆர் வமுள்ளவர், நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியுமே தவிர, ஹிந்துஸ்தானி இசையில் இவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்று இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிந்தது. “”இந்த வயதி லும் கூட இவர் பாடுகிறதைக் கேட்டால் மெய் மறந்து போய் விடுவோம். இவரை நீங்கள் ஒரு விழா ஏற்பாடு செய்து பாராட்ட வேண் டும்” என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முர ளியைக் கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சௌ ராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசைமேதை களை விழா எடுத்துப் பாராட்டியிருப்பவர் முரளி; உடனே இசைந்தார்.

கௌரி ராம்நாராயணன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் சுமதி விரிவான வரவேற்புரை நிகழ்த்த, பாடகி அருணா சாய்ராம் பிரபா ஆத்ரேயை வாழ்த் திப் பேசினார். அதற்குப் பிறகு வேத பண்டிதர் கள் சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு தெய்வத்தை யும் வேண்டும் சுலோகங்களைச் சொல்லி அருள் வேண்ட, ஓதுவார்கள் தமிழில் அதே பணியைச் செய்தார்கள்.

(ஓதுவாரின் குரலில்தான் என்ன கம்பீ ரம், என்ன இனிமை! அவர் பாடி முடிக் கும் போதெல்லாம் கைத்தட்டல் எழுந்த தில் வியப்பே இல்லை.) ஒவ்வொரு கடவுளையும் வேண்டி, வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கும் போது, வெள்ளியில் வேல், திரிசூலம், சடாரி என்று பரிசாகவும் வழங்கினார் கள். பொன்னாடைகள் போர்த்தி, சரசு வதி தேவியின் படத்தையும் அன்பளிப் பாகக் கொடுத்தார் முரளி.

இத்தனை நடக்கும் போதும் ரசிகர்க ளிடமிருந்து எந்தச் சிறு சலசலப்பும் இல்லை. பிரபா ஆத்ரேக்குச் செய்யப்படும் விதவிதமான மரியாதைகளையும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.

“”இவர் சரஸ்வதியின் அவதாரம் போன்ற வர். அதனால் வெண்ணிறப் புடவையை அன் பளிப்பாகக் கொடுக்கிறோம்” என்றார் அருணா சாய்ராம்.

அப்புறம் தொடங்கியது பிரபா ஆத்ரேயின் இசை நிகழ்ச்சி.

இந்த எழுபத்தைந்து வயதில் பலருக்குக் குரல் இனிமை போய், கரகரப்பாக மாறி இருக் கும். இனிமை எங்கே என்று தேட வேண்டியி ருக்கும். பலருக்கு இந்த வயதில் குரலில் நடுக் கம் தெரியும். நிலையாக இராது.

பிரபா ஆத்ரேக்கு இந்தப் பிரச்னைகள் எது வுமே இருக்கவில்லை. குரலில் இனிமைக்குக் குறைவு இருக்கவில்லை. குரல் நடுங்கவே இல்லை. குரலில் ஒரு பிசிறு கூடத் தட்ட வில்லை.

ஏழரை மணி ஆகியும் கூட எழுந்து போகாத ரசிகர்கள், அவர் பாட்டைக் கேட்கக் காத்திருந்தது வீண் போகவில்லை.

பெஹாக் ராகத்தில் மெதுவாகவும், பிறகு வேக கதியிலும் அவர் பாடியதைக் கேட்ட போது, 75 வயதுக்காரர் பாடும் பாட்டா இது என்று வியக்க வைத்தது.

அடுத்ததாக, அவர் கலாவதி ராகத்தையும் இதே முறையில் கையாண்ட போது, அத்தனை ரசிகர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள். வந்து அமர்ந்து கேட்டவர்கள் “கொடுத்து வைத்தவர் கள்’ என்பது மிகையில்லாத வார்த்தை.

நாம் அரியக்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பது போல, வடக்கே “கரானா’ என்று பாணியைக் குறிப்பிடுவார்கள். இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். குரு-சிஷ்ய பரம் பரை முறையில் காலம் சென்ற சுரேஷ்பாபு மோனே என்பவரிடமும், பிறகு, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகியும் தன் சகோதரியு மான, பத்மபூஷன் விருது பெற்ற ஹிராபாய் பரோடேக்கரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார் பிரபா ஆத்ரே.

இவர் இசைக் குறித்து எழுதிய நூல்கள் நிறைய. முதல் நூலான “ஸ்வரமயி’ மகாராஷ்டிர அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நூல் “சுஸ்வராளி’ மத்திய பிரதேச அரசால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பாராட்டுகளைக் குவித்தது.
ஒலி நாடாக்களும், குறுந்தகடுக ளும் இவர் இசையை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே எடுத்துச் சென்றிருக்கின்றன.

ஸ்வரமயி அமைப்பாளர் பாரதி, வழக்கறிஞர் சுமதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் முயற்சி யால் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந் திராவிட்டால், ஒரு மகத்தான ஹிந்துஸ்தானி இசை மேதையான பிரபா ஆத்ரேயின் திறமைப் பற்றி இங்கே பலரும் அறியாமலே போயி ருப்போம்.

சாருகேசி 

Posted in 75, aathre, aatre, Artist, Birthday, Carnatic, Celebrations, Faces, Guru, Hindustani, music, Musician, Padmabhushan, Padmabushan, Pathmabhushan, Pathmabushan, people, praba aathre, praba aatre, prabha aathre, prabha aatre, Professor, Singer, Songs, Students, svaramyi, swaramyi, Swarangini, Swaranjini, Teachers | Leave a Comment »

Jesus Christ – Christmas, Good Friday & Easter Wishes

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007

சிலுவைப்பாதையும் புனிதவெள்ளியும்!

வி. ரூஃபஸ்

இறை மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு (ஈஸ்டர் நாள்) முன் உள்ள நாற்பது நாள்கள் தவக்காலமாக, நோன்புக் காலமாக உலக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது.

தவக்காலத்தின் கடைசி அங்கமாக உலகெங்குமுள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியன்று சிலுவைப்பாதை நிகழ்ச்சி மிக முக்கியமானதொன்றாக நடைபெறுகிறது. அக் காலத்தில் நடந்த வரலாற்றின் நினைவாக இன்றும் இயேசு கிறிஸ்துவைத் தியானித்து வழிபாடு செய்கிறார்கள்.

சிலுவைப்பாதை என்பது பதினான்கு தலங்களாகப் பிரிக்கப்படும். இறைமகனை சிலுவையில் அறையும்படி பிலாத்து என்கின்ற அரசன் தீர்ப்பளிக்கிற நிகழ்வு முதலாம் தலமாகவும், இறுதியில் அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவது பதினான்காம் தலமாகவும் கொள்ளப்படுகிறது. அதன்படி…

தலம் 1 : பிலாத்து இயேசுவுக்கு மரண தண்டனை அளித்தது.

தலம் 2 : இயேசு தன் தோளில் சிலுவை சுமந்தது.

தலம் 3 : இயேசு முதன்முறையாக கீழே விழுந்தது.

தலம் 4 : அன்னை மரியாளும், இயேசுவும் சந்தித்தது.

தலம் 5 : சிமியோன் இயேசுவிற்கு உதவிக்கரம் நீட்டியது.

தலம் 6 : வெரோனிக்காள் இறை மகனின் ரத்தம் தோய்ந்த முகத்தைத் துடைத்தது.

தலம் 7 : இயேசு இரண்டாம் முறையாகக் குப்புற விழுந்தது.

தலம் 8 : கல்வாரிப் பயணத்தில் பங்கேற்கும் பெண்கள்.

தலம் 9 : மூன்றாம் முறையாக இயேசு குப்புற விழுவது.

தலம் 10 : இயேசுவின் ஆடைகள் களையப்படுதல்.

தலம் 11 : இயேசுவை சிலுவையில் அறைதல்.

தலம் 12 : இறைமகன் உயிர் பிரிந்தது.

தலம் 13 : இறந்த மகனை தாய் மரியாள் மடியில் கிடத்தியது.

தலம் 14 : கல்லறையில் இயேசு அடக்கம் செய்யப்படுதல்.

மேற்கண்ட தலங்களில் நம் வாழ்க்கைக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிற தலம் எண் ஐந்து. அதை நம் வாழ்க்கையில் பின்பற்றினால் நம் வாழ்வு ஒளிரும்.

அத்தலத்தைப் பற்றி புனித விவிலியத்தில் காணுகின்றபோது நம் பாவங்களுக்காக இறைமகன் இயேசு தாமே சிலுவையைச் சுமந்துகொண்டு, கரடு முரடான பாதையில் கல்லும் முள்ளும் கால்களில் தைக்க “மண்டையோடு’ (எபிரேய மொழியில் கொல்கொதா) என்னுமிடத்திற்குச் சிலுவையைச் சுமந்து செல்கிறார்.

“அப்போது அவரின் சிலுவையைச் சுமக்க ஒரு புண்ணியவான் வருகிறார். சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர், வயல்வெளிகளில் வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் அவரைப் பிடித்து, அவர் மேல் இயேசுவின் சிலுவையைச் சுமந்து கொண்டு போகச் செய்தார்கள்.’ (லூக்கா-23:26)

அவ்வாறு இயேசுவின் பாடுகளில் பங்கேற்கும் பேறு, முதன்முதலில் சீமோனுக்குத்தான் கிடைத்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியின் வாயிலாகக் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில் பிறர் துன்ப, துயரங்களில் நாமும் பங்கேற்க வேண்டும் என்பதைத்தான்.

இதே கருத்தை புனித விவிலியத்தில் எசாயா எனும் பகுதியில், “கொடுமைத்தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், பசித்தோருக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர் உடுக்க உடை கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்போது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி பின்சென்று காக்கும்’ (எசாயா 58: 6-8) எனக் காணலாம்.

அதாவது நம்மிடமுள்ள ஆணவம், தீண்டாமை, வீண் பெருமை, கொத்தடிமைத்தனம், ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு, ஆண்-பெண் என்ற பேதம் போன்ற கட்டுகளை அறுத்து எறிந்துவிட வேண்டும்.

ஆம்! நம் பெற்றோர், சகோதர-சகோதரிகள், உறவினர்கள் மற்றும் அண்டை அயலார்களின் துன்ப-துயரங்களில், அவர்கள் படும் வேதனைகளில் நாமும் பங்கேற்று அன்பின் ஆழத்தைப் பதிய வைக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து நம்மில் மாறாத அன்பு வைத்ததால்தான் நம் பாவங்களுக்காக பாவச்சிலுவையைச் சுமந்தார்; கல்வாரி மலையில் நடந்தார்; நமக்காக இறந்தார்; நமக்காக உயிர்த்தார் என்பதை நம் உள்ளத்தில் நிறுத்தி அவரின் வார்த்தைகளின்படி நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள சித்தமானால் புனித வெள்ளியும், உயிர்ப்புப் பெருவிழாவும் உண்மையுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.

—————————————————————————————————————–
மகிழ்வைத் தேடி…!

சகோதரி ரோசரி

நான்கு நற்செய்தியாளர்களில் மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை நமக்கு அளிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இயேசுவின் பிறப்பு பற்றிய மத்தேயுவின் செய்தி இனிப்பும் கசப்பும் கொண்டது. இதற்கு மாறாக லூக்காவின் செய்தி இனிப்பு மட்டுமே.

மத்தேயுவில் காணப்படும் இயேசுவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு செய்தி பல அம்சங்களைக் கொண்டுள்ளது. வானதூதர் கனவின் மூலமாக அறிவிக்கும் எழுத்து முறையையும், பிறப்பு பற்றி வானதூதர் தோன்றி அறிவிக்கும் எழுத்து முறையையும் தன்னகத்தே கொண்டுள்ளதைக் காணலாம்.

இவை இரண்டும் பழைய ஏற்பாட்டு நூல்களில் காணப்படும் எழுத்து முறைகள். எடுத்துக்காட்டாக அபிமெலக் (ஆதி.20.1), லாபான் (ஆதி.31.24), யாக்கோபு (ஆதி.31.24) போன்றோர் கனவுகள் மூலம் இறைவனின் செய்தியை அறிகின்றனர். சாம்சன் (நீதி. 13) போன்றோரின் பிறப்பும் வானதூதர்களால் அறிவிக்கப்படுகின்றனர்.

சூசைக்கும் மரியாளுக்கும் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. ஆனால் மரியாளர் கருவுற்றிருப்பது சூசைக்குத் தெரிய வருகிறது. அவருக்கு ஒரே குழப்பம். யூத மரபுப்படி மண ஒப்பந்த முறிவு சீட்டு தந்துவிடலாம். அல்லது தவறு நடந்து விட்டது என ஊர் அறியச் செய்து தண்டனையை வாங்கித் தரலாம். இதில் சூசை, மரியாளை இகழ்ச்சிக்கு உட்படுத்தாமல் ரகசியமாக முறிவுசீட்டு அளிக்கத் திட்டமிட்டார்.

இச்சமயத்தில்தான் வானதூதர் அவருடைய கனவில் தோன்றி “”மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்” என கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்துகிறார். “”மரியாள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு நீர் இயேசு என பெயரிடுவீர்” என்றும் கூறுகிறார்.

இயேசு என்ற பெயர் விண்ணகத்தில் இருந்து வந்தாலும் அதைச் சூட்டுவது என்னவோ சூசையே! தந்தை என்ற பிணைப்பை இது ஏற்படுத்துகிறது. இயேசுவின் தந்தையாக இருந்து அவர் ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்த்துகின்றது எனலாம்.

மேலும் பழைய ஆகமம் கூறும் முன்னறிவிப்பு இயேசுவின் பிறப்பில் நிறைவேறுகிறது என சுட்டிக்காட்டப்படுவதையும் பார்க்கிறோம். மொத்தத்தில் சூசையின் கனவு ஓர் இறையியல் பொக்கிஷம். இயேசு யார்? எங்கிருந்து வந்தவர்? என்ன செய்யப் போகிறார்? போன்ற கேள்விகளுக்கு விடையாக இருப்பதுதான் சூசை கண்ட கனவு. மேலும் இயேசு ஏதோ ஒரு வரலாற்று நபர் மட்டும் அல்ல; என்றும் நம்மோடு வாழும் கடவுள் (இம்மானுவேல்). இந்த அறிவிப்பு நூலின் இறுதியிலும் (28.16-20) தொடர்வது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை உணர்கின்றவர்களுக்கு சூசையின் கனவு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லும்.

கிறிஸ்துவின் பிறப்பு அகில உலகிற்கும் பெருமகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகவே அறிவிக்கப்படுகிறது. (லூக்கா 2.10)

கிறிஸ்மஸ் பெருவிழா, உலக மீட்பராக இயேசு பிறந்ததை மையப்படுத்தும் விழா.

அன்பின் உன்னத அடையாளமாய் உருவெடுத்த இறைமகன் இயேசு உலகில் பிறந்த நிகழ்வை மகிழ்வுடன் நினைவுகூறும் விழா.

வாழ்வின் சுமைகளை மறந்து, அச்சுறுத்தும் கவலைகளைக் களைந்து, சலித்துப்போன வாழ்க்கைச் சூழலைத் தவிர்த்து, ஆண்டவனின் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக வாழ அழைக்கும் அன்பின் பெருவிழா.

எந்த திருவிழாவானாலும் அதற்கொரு கொண்டாட்டம் இருக்கும். அக்கொண்டாட்டத்தில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

கிறிஸ்து பிறப்புவிழா மகிழ்வின் திருவிழா. இந்த மீட்பரின் வருகையால் “மகிழ்ச்சி’ எல்லோருக்கும் பொதுவாக்கப்படுகிறது. இயற்கை மகிழ்கிறது. பாலை நிலமும், பாழ்வெளியும் அகமகிழ்கிறது. மக்கள் மகிழ்கின்றனர். தள்ளாடும் கால்களும் தளர்ந்த கரங்களும் திடப்படுத்தப்படுகின்றன.

கிறிஸ்துவின் வருகை “”மீட்பை” நம் அனைவருக்கும் உரிமைச் சொத்தாக நிலைநிறுத்தியது. மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் கொணர்ந்தது. மகிழ்ச்சி, கிறிஸ்தவர்களின் அடையாளம். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவில் மீட்பைக் கண்டு உணர்ந்தவர்கள்.

கிறிஸ்து பிறப்பின் திருப்பிரசன்னம் மகிழ்ச்சியை விதைத்தது. கிறிஸ்துவின் மாட்சிமைக்குரிய செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.

இத்தகைய மகிழ்ச்சியை, மாபெரும் நற்செய்தியை, அதாவது இம்மானுவேல் – “”கடவுள் நம்மோடு”, நம் மத்தியில், நம்மில் ஒருவராக மனிதனாக வந்து பிறந்துள்ளதைக் கொண்டாடுவதில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று திருவழிபாட்டில் பங்கேற்று, இறைவனின் ஆசி பெற்று, இனிப்புகள் வழங்கி, நட்புறவை வளர்த்து, உறவுகளைப் பலப்படுத்தி, இறை – மனித உறவுக்குச் சான்று பகர்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி! இது மனிதநேயத்தை வளப்படுத்தும் அன்பின் விழா.

பாலன் இயேசுவுக்கு வண்ணக்குடில் அமைப்பது, வீடுகளில் விதவிதமான நட்சத்திர விளக்குகள், வீதிகளில் அழகான தோரணங்கள்… இவையாவும் வெளி அடையாளங்கள் மட்டுமே.

அநேக நேரங்களில் மகிழ்ச்சியின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டு மகிழ்ச்சியைத் தேடுவதாக எண்ணிக் கொண்டு, இன்பத்தை, மாயையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்.

“”நான் மகிழ்ச்சியை அடைய வேண்டுமென நெடுங்காலம் பாடுபட்டேன்.

இந்த மகிழ்ச்சியை எங்கோ தொலைவில் தேடினேன்.

மகிழ்ச்சி என்பது ஒரு நதியின் நடுவில் இருக்கும் தீவு என்றிருந்தேன்.

அதுவே நதியாக இருந்திருக்கலாம்.

மகிழ்ச்சி என்பது பாதையின் முடிவில் இருக்கும் ஒரு சத்திரத்தின் பெயர் என்றிருந்தேன்.

ஆனால் அதுவே பாதையாக இருந்திருக்கலாம்.

மகிழ்ச்சி என்பது நாளை என்று நினைத்திருந்தேன்.

அதுவோ, இப்போதே, இங்கேயே இருக்கிறது.

நானோ அதை எங்கெங்கோ தேடினேன்” என்கிறார் மைக்கில் ஆடம்.

இறைவன் தன்னையே மனித குலத்தோடு பகிர்ந்து கொண்டதுபோல், நம்மையும், நம்மிடமுள்ளவைகளையும், இல்லாதவர்களோடு, ஏழை, எளியவரோடு பகிர்ந்து கொள்வதில்தான் நம் கொண்டாட்டங்களின் உண்மை அர்த்தத்தை, பலனை அனுபவிக்க முடியும்.

கிறிஸ்து பிறந்த அன்று வானகத் தூதர்கள் பாடிய “”விண்ணகத்தில் இறைவனுக்கு மகிமை, மண்ணகத்தில் மாந்தருக்கு அமைதி” என்ற பாடலின் வாழ்த்தொலி நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எதிரொலிக்கட்டும்.

இறைவன் தரும் மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதில் நிறைவைக் காண்போம். நிலை வாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

—————————————————————————————————————–

Posted in Bible, Birthday, Christ, Christian, Christianity, Christmas, Church, Cross, Easter, Fasting, God, Good Friday, History, Jeez, Jesus, Jesus Christ, Pope, Pray, Prayer, Preach, Religion, Testament, Xmas | Leave a Comment »

Mu Ka Stalin to celebrate 55th Birthday on March 1st

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

1-ந்தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று தி.மு.க. தொண்டர்களை சந்திக்கிறார்

சென்னை, பிப். 27-

தி.மு.க. துணைபொதுச் செயலாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 55-வது பிறந்தநாளை மார்ச் 1-ந்தேதி கொண்டாடுகிறார்.

அன்று காலை 7.30 மணி முதல் அவரது இல்லத்தில் கட்சி தொண்டர்களை சந்திக் கிறார். தொண்டர்களின் வாழ்த்துக் களை ஏற்றுக்கொள்கிறார்.

அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், இளைஞர்அணி நிர்வாகிகள், கட்சியின் அனைத்து சார்பு மன்ற நிர்வாகிகளும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறுகிறார்கள். மேலும் பிறந்தநாள் அன்று அனைத்து வட்டங்களிலும், கட்சி நிர்வாகிகளை கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.

இந்த தகவலை ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாதன் தெரிவித் துள்ளார்.

Posted in 1000 Lights, 55, 59, Birthday, DMK, Karunanidhi, MK Stalin, Mu Ka Stalin, Stalin, Thousand Lights | Leave a Comment »

‘I’m the owner of Bentley car but did not gift Bentley to Abhishek’: Amar Singh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்

புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.

இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.

பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்

புதுடெல்லி, பிப். 12-

பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.

விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-

லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.

கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »

50,000 guests – Son’s eighth birthday : Jharkand Minister’s Party

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2006

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகன் பிறந்தநாள் விழாவுக்கு ரூ.50 லட்சம் செலவழித்த மந்திரி
ராஞ்சி, அக். 31-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் இனோஸ்இக்கா. இவரது மகன் சந்தேஷ். இவன் கோரகானில் உள்ள ஜிடி கோயங்கா பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள். இதையொட்டி மந்திரி இனோஸ் ஜார்க்கண்ட் மாநிலம் கண்டிராத வகையில் கோலாகல பிறந்த நாள் விழா நடத்தினார்.

மந்திரி இனோசின் சொந்த மாவட்டமான சிம்தேகாவில் இந்த விழா நடந்தது. இதற்காக அந்த மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 50 ஆடுகள் வெட்டப்பட்டு விசேஷ விருந்து கொடுக்கப்பட்டது.

அசைவத்தை விரும்பாத வர்களுக்கு என தனியே சைவ உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இனிப்புகள், ஐஸ்கிரீம்கள் விதம்விதமாக வழங்கப்பட்டன. இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவை பார்த்து சிம் தேகா மாவட்ட ஏழை மக்கள் ஆச்சரியத்தில் பிரமதித்துப்போனார்கள்.

மகன் பிறந்த நாளுக்காக மந்திரி இனோஸ் ரூ.50 லட்சத்துக்கு மேல் செல வழித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை எதிர்க் கட்சிக்காரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சிம்தேகா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நியால் கூறுகையில், “இந்த விழாவால் பெருமைப்பட என்ன இருக்கிறது. இப்படி பணத்தை வீணடித்ததற்காக மந்திரி வெட்கப்பட வேண்டும். மகன் பிறந்தநாளுக்கு செலவழித்த பணத்தை வைத்து சிம்தேகா மாவட்ட மக்களுக்கு ஒரு ஆயில் மில் தொடங்கி கொடுத்து இருக்கலாம்” என்றார்.

ஆனால் மந்திரி இனோஸ் இதை கண்டு கொள்ளவில்லை. “என் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுபவர்கள் இப்படி சொல்கிறார்கள்” என்றார். மந்திரி இனோசின் தந்தை இன்னமும் வறுமையில்தான் வாழ்ந்து வருகிறார். அரசு கட்டி கொடுத்த சாதாரண வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.

Posted in Anosh Ekka, Birthday, Chhattisgarh, Children, Extravaganza, Guest Control Act, Jaipal Singh, Jharkhand, Jharkhand Party, Kamdara, Kartik Oraon, Kolebira, Lalu Prasad, Orissa, Party, Ram Dayal Munda, RJD, Simdega, Son, tribal leaders | Leave a Comment »

Fan Clubs will facilitate Free Food on all Religion’s Festivals – Thrisha

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

ரசிகர் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினத்திலும் அன்னதானம்: த்ரிஷா

சென்னை, செப்.21: என்னுடைய ரசிகர்கள் மன்றங்கள் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பண்டிகை தினங்களிலும் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் செய்யப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த “ஸ்டாலின்‘ என்ற தெலுங்கு படம் இந்தியா முழுவதும் புதன்கிழமை வெளியானது.

இந்த படத்துக்காக துவரை இல்லாத அளவு அதிக பிரிண்ட்டுகள் தயாரிக்கப்பட்டு படம் திரையிடப்பட்டுள்ளது.

சென்னையில் சத்யம், மாயாஜால், கேசினோ உள்ளிட்ட சில திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி த்ரிஷா ரசிகர் மன்றத்தினர் கேசினோ திரையரங்கில் கொடிகள், தோரணங்கள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.

அதோடு அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறார்களுக்கு அன்னதானம் வழங்கினர். த்ரிஷா நடித்த எந்த மொழிப் படம் வந்தாலும் அன்னதானம், ரத்ததானம் வழங்கும் காரியங்கள் தொடரும் என்று ரசிகர் மன்றத்தினர் கூறினர்.

தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

இதுதொடர்பாக த்ரிஷாவைத் தொடர்புகொண்ட போது அவர், மகேஷ்பாபுவுடன் நடிக்கும் “சைனி குடு‘ என்ற தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தார். ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து கேட்ட போது த்ரிஷா கூறியது:

ரசிகர் மன்றங்கள் மூலம் நற்பணிகள் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. “கட்-அவுட்’ வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்றவற்றை நான் அனுமதிப்பதில்லை.

ஆதரவற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது.

இனி வரும் நாள்களில் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அனைத்து பண்டிகை தினங்களிலும், முக்கிய தினங்களிலும் ரசிகர் மன்றங்கள் மூலம் அன்னதானம், ரத்த தானம், நற்பணிகள் போன்றவற்றை செய்யவுள்ளோம் என்றார் த்ரிஷா.

Posted in Abhishekam, Actress, Annadanam, Birthday, Cut-out, Fan Clubs, Free Food, Kollywood, Secular, Tamil, Tamil Cinema, Telugu Movies, Tollywood, Trisha | Leave a Comment »

Happy Birthday TK Chidambaranathan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2006

“ரசனைத் தெய்வம்’

குரு. மனோகரவேல்

“”ரஸத்திலே தேர்ச்சிகொள்” என்று பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில் அறிவுறுத்துவதுபோல், ரசனை உணர்வுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.

உண்பதற்கும் உடுப்பதற்கும் நடப்பதற்கும் பேசுவதற்கும் குழந்தைகளுக்குப் பயிற்சி தேவைப்படுவதுபோல், மனிதர்களுக்கு ரசிப்பதற்கும் பயிற்சி அளிப்பதில் தவறில்லை.

தமிழில் உள்ள இலக்கிய வளங்களையும் கலை நுட்பங்களையும் உணர்ந்து அறிந்து ரசித்துப் பெருமிதம் கொண்டவர் டி.கே. சிதம்பரநாதன். “”மாந்தருள் ஒரு அன்னப்பறவை” என்றும் “”ரசிகமணி” என்றும் ரசனை நாயகனாக இருந்த டி.கே.சி குற்றாலத்தில் “”வட்டத்தொட்டி” என்று அமைப்பு ஏற்படுத்தி, ரசனையையும் ஒரு கலையாக வளர்த்தார். அற்புதமானவைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, வியந்து வியந்து ரசித்தார்.

தமிழின் செம்மையில் ஆழ்ந்து, இலக்கியத்தின் இனிமையில் இசைந்து, கலைகளின் நுட்பத்தில் கனிந்து ரசனை உணர்வை ஒரு வேள்வியாக நடத்தியவர் டி.கே.சி. அவரது வட்டத்தொட்டி அமைப்பில் ராஜாஜி, கல்கி, ஜஸ்டீஸ் மகராஜன், பாஸ்கர தொண்டைமான் போன்ற பேரறிஞர்களுடன் இலக்கியச் சுவையையும் பலவித கலைகளின் ரசனையையும் உரையாடல்களாகவும் கடிதங்களாகவும் வெளிப்படுத்தித் தமிழ்மொழியின் உன்னதத்தை உலகம் உணர்ந்திடச் செய்தவர்.

எந்த ஒரு கலைஞனுக்கும் தனது படைப்பு பிறரால் ரசிக்கப்படுகிறது என்ற நிலையில்தான், தான் படைத்ததன் ஆனந்தப் பயன் பெற முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தாயின் நிலை அது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளில் மிகவும் தோய்ந்து உள்ளத்தைப் பறி கொடுத்தார் ரசிகமணி. குழந்தையுள்ளத்துடன் அவர் குறிப்பிடுகின்றார்: “”கண்ணாரக் காண்பதற்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார் என்று”. இதை ஊர்ஊராகப் பிரசாரமும் செய்தார். ஓர் இலக்கிய அரங்கில் பேசும்போது, கவிமணியின் பாடல்களைப் பாடிய ரசிகமணி, கவிஞருடைய இதயத்தோடு ஒட்டிப் பாடலோடு கரைந்து விட்டார். பாராட்டுரையைக் கேட்டுக் கொண்டிருந்த கவிமணி அப்படியே உருகிவிட்டார்.

“”என்னைப் போன்ற கவிஞனுக்கு உயிர்மூச்சைக் கொடுப்பது பாராட்டுத்தான். எத்தனையோ கவிக் குழந்தைகளைப் பெற்றுப் போட்டுவிட்டு அவைகளின் அருமை தெரியாமல் இருந்தது. ஆனால் டி.கே.சி. அந்தக் குழந்தைகளை எடுத்துக் குளிப்பாட்டி, உச்சிமோந்து, தலைசீவிப் பொட்டிட்டு, முத்தமிட்டுக் கொஞ்சிக் குலாவும்போதுதான் “நான் பெற்ற குழந்தை இவ்வளவு அழகாயிருக்கிறதா’ எனப் புரிகிறது” என்று சொல்லி, வியப்பும் களிப்பும் அடைந்தார்.

தாவரம் முதல் விலங்கு வரையான பலவித உயிரினங்களை விட மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்பட நகைச்சுவை உணர்வு போன்று எத்தனையோ அம்சங்கள் காரணம். ஆனாலும் அவை எவற்றுக்கும் அடிப்படைத் தேவை ரசனை உணர்வே.

ரசிக்கின்ற ரசனையின் மூலமாகத்தான் கலைகளும் இலக்கியங்களும் அதற்குத் தகவே மொழியும் பொலிவுறுகின்றது.

ஒவ்வொரு தனிமனிதனும் தன் பெயருக்கு முன் தந்தை பெயரின் முதலெழுத்தைச் சேர்த்துத்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ரசிகமணி டி.கே. சிதம்பரநாதன் தமிழ் மற்றும் கலை என்பவற்றின் முதலெழுத்துகளையே தன் பெயருடன் சேர்த்து டி.கே.சி. என்றே வைத்துக்கொண்டாரோ எனக் கருதும் வகையில் தமிழைப் பெரிதும் நேசித்தவர். கலைகளை மிகவும் ருசித்தவர்.

அதுமட்டுமல்ல; திருவள்ளுவர் மற்றும் கம்பர் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளையே, தனது பெயருக்கு முன்எழுத்துகளாகச் சேர்த்திருப்பாரோ என்றும் கருதிடும் வகையில், திருவள்ளுவர் மீதும் கம்பர் மீதும் அவருக்கு ஆழ்ந்த பிடிப்பும் பிணைப்பும் இருந்தது.

திருவள்ளுவரின் அறிவுத்திறத்தை ரசிப்பதற்கு ஒரு கம்பன் வரவேண்டி எழுநூறு ஆண்டுகள் காத்திருந்தோம். கம்பனின் அறிவுத் திறத்தை ரசிப்பதற்கு ஒரு சிதம்பரநாதன் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் கம்பன் காத்திருந்தார் என்று நீதிபதி மகராஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ரசிகமணி சிதம்பரநாதனின் கலை நுட்ப, இலக்கிய நுட்ப ரசனையை ரசிப்பதற்கு நாமெல்லோரும் உடனே தொடங்குவோம்.

கிரேக்க – ரோமானிய சமயங்களில் காதல் கலைக்குத் தெய்வங்கள் குறிப்பிடப்படுவதுபோல், இந்திய சமயங்களிலும் மன்மதனைப் போற்றுகின்றோம். அதுபோல் ரசனைக் கலைக்கும் தெய்வமாக டி.கே.சி.யைப் போற்றி மகிழலாம். ரசனைத் தெய்வம் டி.கே.சி. எனலாம்!

(இன்று ரசிகமணியின் 125-வது பிறந்த நாள்)

——————————————————————————————————————————————————–

தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி.: வைகோ புகழாரம்

திருநெல்வேலியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற டி.கே.சி. விழாவில் கி.ராஜநாராயணன் எழுதிய “அன்னப்பறவை’ நூலை மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் நீதிபதி டி.என். வள்ளிநாயகம். உடன் (இடமிருந்து) மதிமுக புறநகர் மாவட்டச் செயலர் ப.ஆ.சரவணன், கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத், எழுத்தாளர் மதுரா, இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், டி.கே.சி.யின் குடும்பத்தைச் சேர்ந்த தீப. நடராஜன், குட்டி என்ற சண்முக சிதம்பரம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ. நிஜாம்.

திருநெல்வேலி, நவ.3: தமிழுக்கு பெருந்தொண்டாற்றியவர் டி.கே.சி. என மதிமுக பொதுச் செயலர் வைகோ புகழாரம் சூட்டினார்.

பாளையங்கோட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள மறுமலர்ச்சி மையம் சார்பில் நெல்லை சந்திப்பில் சனிக்கிழமை இரவு சி.ஏ.ஆர். குட்டி என்ற சண்முக சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி. விழாவில், டி.கே.சி. குறித்து கி. ராஜநாராயணன் எழுதிய “”அன்னப்பறவை” என்ற நூலை வெளியிட்டு வைகோ மேலும் பேசியதாவது:

டி.கே.சி. இலக்கியம் மட்டுமின்றி எல்லா தளங்களிலும் தீர்க்கமான பார்வை கொண்டவர். அவரது இலக்கிய ஆர்வத்தை போன்றே அவரது வீட்டு விருந்தும் பிரசித்தி பெற்றது. டி.கே.சி. அவரது நண்பரான நீதிபதி மகராஜபிள்ளைக்கு எழுதிய கடிதங்கள் சுவையானவை.

திருநெல்வேலியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்து வைத்தவர் டி.கே.சி. அந்த வகையில் பெரியாரின் பேரன்களில் ஒருவரான நான் அவரை குறித்து பேச தகுதி உள்ளது.

அனைவரிடமும் அன்பு பாராட்டியவர் டி.கே.சி. இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அவர்.

கம்பரின் ராமாயணத்தில் மொத்தமுள்ள சுமார் 10 ஆயிரத்து 500 பாடல்களில் 1515 பாடல்களை மட்டுமே டி.கே.சி. ஏற்றுக் கொண்டார். அதில் 597 பாடல்களில் திருத்தங்களை செய்தார். அந்த திருத்தங்கள் குறித்த சர்ச்சைகளும் உண்டு.ஆனால், அவர் செய்த திருத்தங்கள் பொருத்தமானவை. அவ்வாறு தமிழுக்கு பெருந் தொண்டாற்றியவர் டி.கே.சி.

இந்த மண்ணில் பிறந்த ரா.பி. சேதுப்பிள்ளை, புதுமைப்பித்தன், அண்ணாமலை செட்டியார் போன்றோருக்கு தொடர்ந்து விழா எடுக்க வேண்டும்.

டி.கே.சி. கல்கியில் எழுதிய கம்பராமாயணம் குறித்த தொடரில் தனக்கு பிடித்த பாடல்களை தேர்ந்தெடுத்து எழுதினார். மகன் மீது தேரை செலுத்தி நீதி செய்தது மனுநீதிச் சோழன் காலம். அதுகுறித்தெல்லாம் டி.கே.சி. கூறியுள்ளார். ஆனால், மகனுக்காக எல்லாவற்றையும் இழப்பது இந்த காலம்.

இலங்கைப் பிரச்னை:போரில் கொல்லப்பட்டவர்களை அவரவர் நம்பிக்கையின்படி அடக்கம் செய்ய அனுமதிக்கும் நடைமுறை புராண காலத்திலேயே இருந்துள்ளது. ஜெனிவா உடன்படிக்கையின்படி, தம்மிடம் பிடிபிட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகுந்த மரியாதையுடன் (விடுதலைப் புலிகள்) நடத்துகின்றனர். ஆனால், அனுராதபுரத்தில் நடந்த தாக்குதலில் இறந்த 21 பேரின் சடலங்களை நிர்வாணமாக வைத்து சிங்கள ராணுவத்தினர் கூத்தாடி உள்ளனர். தமிழ்ச் செல்வனுக்கு தமிழும், தமிழர்களும் இருக்கும் இடத்தில் எல்லாம் புகழ் பாடப்படும் என்றார் வைகோ.

வைகோ வெளியிட்ட நூலின் முதல் பிரதியை நீதிபதி டி.என். வள்ளிநாயகம் பெற்றுக் கொண்டு நூலை குறித்து பேசினார்.

விழாவில், டி.கே.சி.யின் குடும்பத்தினரான தீப. நடராஜன், தீப. குற்றாலிங்கம், ராமசாமி, செல்லையா ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார் வைகோ.

விழாவில், இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன், எழுத்தாளர் மதுரா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர்.

————————————————————————————————————————
நகர்வலம்: ரரசிர்களின் மனதில் ரசிகமணி

ரவிக்குமார்

தங்களின் படைப்புகளால் அடைந்த பெருமையை விடவும், டி.கே.சியால் பாராட்டப்பட்டதன் மூலம் மகிழ்ந்த படைப்பாளர்கள் நிறையப் பேர். இசை, நடனம் என கலையின் எந்த வடிவமாக இருந்தாலும் சரி, அந்தக் கலை, பண்டிதர்களிடம் இருந்தாலும் சரி, பாமரர்களிடம் இருந்தாலும் சரி அதை தன்னுடைய உயர்ந்த ரசனையின் மூலம் உலகுக்கு உரைத்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரின் நினைவு விழாவை சமீபத்தில், சென்னை, தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் நடத்தியது, மல்லிகை காந்தி கல்வி நிலையத்தின் கலை-இலக்கியப் பிரிவு. விழாவிலிருந்து சில துளிகளைத் தருகிறோம்:

இலக்கியத்தின் பல்வேறுவிதமான கூறுகளையும் அலசி ஆராய்ந்து, படைப்பாளிகளையும் தன்னுடைய ரசிப்புத் திறனால் மகிழ்வூட்டிய டி.கே.சி.யின் நினைவுகளை, தனித் தனியாக சிலரைக் கொண்டு பேசவைத்தது, நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தத் தலைமுறையினரிடமும் டி.கே.சி.யின் ரசிப்புத் திறன் குறித்த ஆவலைத் தூண்டியது.

“”நீட்டலும், குறைத்தலும் மூலம் ஒரு படைப்பைப் பற்றி சொல்வதுதான் ரசிகமணியின் கலைப் பண்பு. அவர் மேல்தட்டு மக்களின் கலை வடிவங்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கூறிய அதேநேரத்தில், நாட்டுப்புறப் பாடல்களின் மேன்மையைப் பண்டிதர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் உரைத்தவர். பொதுவாகவே நாட்டுப்புறப் பாடல்களில் என்ன இருக்கு? என்று கேட்பவர்கள் அதிகம். பொருளாதாரம், காதல், வரலாறு, ஈகை… எல்லாமே நாட்டுப்புறப் பாடல்களில் இருக்கின்றது என்பதை தகுந்த ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, அந்தப் பாடல்களுக்கு பண்டிதர்களிடத்திலும் மரியாதை வருவதற்குக் காரணமாக இருந்தார். மொத்தத்தில் பாராட்டை ஒரு கலையாகவே செய்தவர் டி.கே.சி.” -என்றார் டி.கே.சியின் கலைப்பார்வை குறித்துப் பேசிய பி. சீனிவாசன்.

“”கற்பனை, மொழித்திறன் எல்லாவற்றிலும் கம்பனை மிஞ்சிய கவிஞன் இல்லை என்பார் டி.கே.சி. கம்ப ரசத்தின் அருமை, பெருமைகளை பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமையாக உரைத்தவர். கம்பனுக்குப் பிறகு, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் படைப்புகளை உயர்வாகப் பாராட்டியவர் ரசிகமணி.

வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியாரின் 80-வது பிறந்த நாளுக்காக நடந்த விழாவில், அவரை வாழ்த்தி ஒரு வாழ்த்துப்பா வந்தது. எழுதியவர் பற்றிய குறிப்பும் அதில் இல்லை. ஆனாலும் அந்த வாழ்த்துப்பாவின் அமைப்பையும், அதில் இருந்த உவமைகளையும், இலக்கியத் தரத்தையும் பார்த்து, அந்த வாழ்த்துப் பாவை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான் என்று மிகச் சரியாக அறிவித்தாராம் ரசிகமணி.

ரசிகமணியின் மகனும், கவிஞருமான தீபன் மறைவையொட்டி கவிமணி ஓர் இரங்கற்பாவை எழுதியிருக்கிறார். அந்த இரங்கற்பாவைப் படித்த ரசிகமணி, அந்த துக்கமான தருணத்திலும், “உங்களின் கவிதை எனக்கு உயிர் கொடுத்திருக்கிறது’ என்று கவிமணிக்கு பாராட்டுக் கடிதத்தை எழுதியிருக்கிறார். டி.கே.சியின் பாராட்டும் பண்பை பளிச்சென்று நமக்குக் காட்டும் நெகிழ்ச்சியான நினைவு இது”- என்றார் டி.கே.சியின் கவிதானுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ராஜாராமன்.

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது டி.கே.சியின் பேரனான தீப. நடராஜனின் பேச்சு.

“”காந்தி மகாத்மா என்றால், டி.கே.சி. மகான். நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் காந்தி; தமிழுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் டி.கே.சி.

1922-ம் ஆண்டு ராஜாஜி சிறையில் இருக்கிறார். சிறைக்குள் எங்கிருந்தோ கசிந்த நாகஸ்வர ஓசை அவரின் காதில் ஒலிக்கிறது. இப்படியொரு இசையை அனுபவித்து நாம் கேட்டு விட்டோமே என்று நினைத்துக் கொண்டார். இந்த விஷயங்களை ராஜாஜி அவர் எழுதிய “ஜெயில் டைரி’யில் பதிவுசெய்திருக்கிறார். அப்போது டி.கே.சியின் தொடர்பு அவருக்கு ஏற்படவில்லை. டி.கே.சியுடன் ராஜாஜிக்கு ஏற்பட்ட நட்பு, அவரின் ரசனையை வேறு தளத்துக்கு மாற்றியது. “மொழி என்பது இலக்கியத்தில் இல்லை. மக்களின் நாவில் இருப்பது…’ என்னும் டி.கே.சியின் கருத்தை ஏற்றுக் கொண்டதாலேயே தன் பெயரிலிருந்து “இ’யை எடுத்துவிட்டு, “ராஜாஜி’ என்றே தன் பெயரை எழுதினார். மக்களின் பேச்சு வழக்கில் “ராமன்’ என்றே தான் எழுதிய ராமாயணத்தில் குறிப்பிட்டார் ராஜாஜி.

கல்வியில், இசையில், இலக்கியத்தில் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் அதிலிருந்த பண்டிதத்தனத்தை தன்னுடைய இயல்பான பாராட்டும் போக்கால் அடியோடு மாற்றியவர் டி.கே.சி.

நாட்டிய மேதை பாலசரஸ்வதியிடம் குற்றாலக் குறவஞ்சிக்கு நாட்டியம் அமைக்கக் கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சிதான்.” என்றார் நெகிழ்ச்சியுடன் தீப. நடராஜன்.

நிகழ்ச்சியின் இறுதியாக, புகழ்பெற்ற நடனக் கலைஞரான பார்வதி ரவி கண்டசாலாவிடம் நாட்டியம் பயிலும் மாணவிகள் குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தை கண்களுக்கு விருந்தாக நிகழ்த்தினர்.

தீபாவளிக்கு வந்திருக்கும் புதிய திரைப்படங்கள், சளசளவென விடாமல் மழை பொழிந்துக் கொண்டிருக்கும் ஞாயிற்றுக் கிழமை, விதவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்… இவ்வளவையும் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களிடம் ரசிகமணி டி.கே.சி. மானசீகமாக உறைந்திருந்தார்!

Posted in 125, Bhaskara Thondaimaan, Birthday, Desiga Vinayagam, Justice Maharajan, Kalki, Kavimani, Rajaji, Rasigamani, T K Si, Tamil, TK Chidambaranathan, TKC | குறிச்சொல்லிடப்பட்டது: | 2 Comments »

Life sentence convicts released on Anna Birthday – Attorneys Welcome

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

10 ஆண்டுகள் முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை: வழக்கறிஞர் சங்கம் நன்றி

சென்னை, செப்.1: 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் கைதிகள் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்பு கைதிகள் மறுவாழ்வு பெறுவதற்கும் அவர்கள் குடும்பத்தினர் நன்மை அடையவும் உதவும் என்று சங்கச் செயலாளர் மோகனகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Posted in Anna, Association, Attorneys, Birthday, Chennai, CM, Convicts, Free, Highcourt, Karunanidhi, Lawyers, Life sentence, MK, Prisoners, Tamil | 2 Comments »