Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 12th, 2007

Interview with Deepa Venkat – Tamil Television Serials: Sun TV Kolangal

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

நறுக்கென்ற உச்சரிப்பு. அளவான பாவனை. இயல்பான நடிப்பு. வசீக ரிக்கும் புன்னகை. துணிச்சலான பெண் பாத்திரத்துக்கு தீபா வெங்கட் அத்தனை பொருத்தம் என்று பெயர் எடுத்திருக்கிறார். அடுத்து காமெடியில் கலக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பு இடைவேளையில் அவ ரைச் சந்தித்தோம்.

உங்களைப் பற்றி…?

நான் பிறந்தது சென்னையில்… 12 வயது வரை மும்பையில் இருந்தோம்.

பிறகு மீண்டும் சென்னை வந்துவிட் டோம். பாண்டிச்சேரி யுனிவர்சிட்டியில் மாஸ்டர் ஆஃப் ஃபைனான்ஸ் மேனேஜ் மெண்ட் படித்திருக்கிறேன். அம்மா பத்மா, அப்பா வெங்கட், தங்கை மீனா, பாட்டி என அன்பான குடும்பம்.

நடிப்புத்துறைக்கு வந்தது எப் படி?

நான் என்னுடைய 13 வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டேன். எங்களு டைய குடும்ப நண்பர் மூலம் கிடைத்த அறிமுகத்தால் கே.பாலசந்தரின் “கைய ளவு மனசு’, “சின்னஞ்சிறு உலகம்’ சீரியல் களில் சிறுமியாக நடித்தேன். அப்படியே மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகப் பல சீரியல்களில் நடித்தேன். அதன்பிறகு லெவன்த், ப்ளஸ் டூ படிப்பு பாதித்துவி டக்கூடாது என்பதற்காக இரண்டு வரு டங்கள் நடிப்பதை நிறுத்திவைத்திருந் தேன்.

உங்களை பிரபலமாக்கிய தொடர்?

கே.பாலசந்தரின் “ரகுவம்சம்’ மெகா தொடருக்குப் பிறகுதான் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போதைப் பழக்கத்துக்கு அடி மையான ஒரு பெண் கேரக் டர். அந்த சீரியலில் நடித்த பிறகுதான் பல பெரிய வாய்ப்புகள் வரத்தொடங்கின. அதன்பி றகு “சித்தி’, “பயணம்’, “கோபுரம்’, “விழுது கள்’, “வாரிசு’, “கீதாஞ்சலி’, “சாரதா’, “19-எ லவ் ஸ்டோரி’, “சூர்யா’, “அல்லி ராஜ்ஜி யம்’ உள்பட பல தொடர்களிலும் எனக்கு முக்கியமான கேரக்டர்கள் அமைந்தன. எல்லாவற்றிலும் நல்ல பெயர் கிடைத்தது. “கோலங்கள்’ சீரியல் வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கி றது.

இந்தத் தொடர்களுக்கு மத்தி யில் சினிமா பிரவேசம் எப்படி?

டி.வி.யில் கிடைத்த நல்ல பெயரால் சினிமாவுலகத்திலும் அழைப்பு வந்தது.

“உல்லாசம்’ படம்தான் என்னுடைய முதல் படம். அதில் விக்ரமின் ஃப்ரண் டாக நடித்திருந்தேன். அதன்பிறகு “தினந் தோறும்’ படத்தில் முரளியின் தங்கை யாக நடித்தேன். பிறகு சிறுசிறு வேடங்க ளில் நடித்தேன். “தில்’ படத்தில் என்னு டைய கேரக்டர் நன்கு பேசப்பட்டது.
இப்போது “மலைக்கோட்டை’ படத்தில் நடித்துள்ளேன்.

சினிமாவில் இப்போது அதிக மாக நடிப்பதுபோல தெரியவில் லையே? வாய்ப்புகள் வரவில் லையா?

வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. ஆனால் எல்லாரும் தங்கை, நாயகியின் தோழி, நான்கு பேரில் ஒருத்தி போன்ற ஒரே மாதிரியான கேரக்டர்க ளில் நடிக்கத்தான் அழைத்தார்கள். அத னால் நடிக்கவில்லை.

அப்படியானால் கதாநாயகியா கத்தான் நடிப்பீர்களா?

நான் அப்படிச்சொல்லவில்லை.

இரண்டு காட்சிகளில் வந்தால்கூட போதும்; ஆனால் அந்தக் கேரக்டர் பேசப்பட வேண்டும். அதுபோன்ற கேரக்டர்களில் மட்டும்தான் நடிக்க முடி வெடுத்திருக்கிறேன். அப்படி அமையும் படங்கள் சிறிய பட்ஜெட் படமாகவோ, பெரிய பட்ஜெட் படமாகவோ, ஓடும் படமோ, ஓடாத படமாகவோ எதுவாக இருந்தாலும் சரிதான்.

நீங்கள் டி.வி. சீரியல்களில் நடிப்பதையும் குறைத்து வருகிறீர் கள் என்று கூறப்படுவது பற்றி…?

குறைத்துக்கொள்கிறேன் என்பதை விட தேர்ந்தெடுத்த சிலவற்றில் மட்டும் நடிக்கிறேன் என்பதுதான் உண்மை; அங் கும் ஒரே மாதிரியாக நடிக்க வேண்டியி ருக்கிறது. என்னுடைய அடுத்த கட்ட டி.வி., சினிமா கேரியரை வித்தியாசமாக அமைக்க விரும்புகிறேன்.

வித்தியாசமாக என்றால்…?

மக்கள் நாளெல்லாம் உழைத்து விட்டு வீட்டுக்கு வந்து ரிலாக் ஸôக இருக்கவேண்டும் என நினைப்பார்கள். அந்த நேரம் பார்த்து நான் டி.வி.யில் கண் ணைக் கசக்கிக் கொண்டிருந் தால் நன்றாகவா இருக்கும்.

நானும் அழுதுபுரண்டு நடித் திருக்கிறேன். இனி மாற்றம் தேவை என இப்போது நினைக்கிறேன். குறிப்பாக “அல்லி ராஜ்ஜியம்’ தொட ரில் நடித்தபோது நானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைத்தேன். அந்தத் தொடருக்குக் கிடைத்த வர வேற்பு என்னை மிகவும் ஆச்சரி யப்படுத்தியது. அதனால் இனி மேல் என் வழியை காமெடி வழி யாக்கலாம் என நினைத்திருக்கி றேன். இல்லாவிட்டால் பெண்க ளுக்கு தன்னம்பிக்கையூட்டும்படியான சேலஞ்சிங்கான ரோல்களில் நடிக்க வேண்டும்.

உங்களுடைய பொழுது போக்கு?

புத்தகங்கள் படிப்பது… அதிலும் ஒவ் வொரு நாடுகளைப் பற்றிய வரலாற்றுப் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். அதே போல நேரம் காலம் பார்க்காமல் இண் டர்நெட்டில் ப்ரவுஸிங்; எனக்கு உலகத் தில் நடக்கும் விஷயங்களை உடனுக்கு டன் தெரிந்துகொள்வதில் அதிக ஆர் வம். நெட்டிலேயே எல்லா நியூûஸயும் படித்துவிடுவேன்.

மிகவும் பிடித்த விஷயம்?

கர்நாடக இசை. பாடகி மஹதியின் தந்தை திருவையாறு சேகர்தான் என்னு டைய குரு. அவரிடம் 11 வருடங்கள் முறையாக கர்நாடக இசை கற்றிருக்கி றேன். பிரபலமான கர்நாடக மேதைக ளின் இசை ஆல்பங்களின் கலெக்ஷன் என்னிடம் இருக்கிறது. நேரம் கிடைக் கும்போதெல்லாம் அவற்றைக் கேட் பேன். சினிமாவில் மெலடி பாட்டுகளை விரும்பிக் கேட்பேன்.

உங்களுடைய ரோல் மாடல்?

சுஹாசினி, ரேவதி.

பிடித்த நடிகர்?

விக்ரம்.

உங்களுக்குப் பிடித்த ஆடை?

சேலைதான்; எப்போதாவது சுடிதார்.

அழகின் ரகசியம்?

மகிழ்ச்சி. மேக்-அப் இன்னொரு காரணம்.

திருமணம் எப்போது? காதல் திருமணமா?

எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஃப்ரண்டஸ் போலத்தான் பழகுவோம்.

யாரும் யாரிடமும் எதையும் மறைப்ப தில்லை. நான் காதல் வயப்பட்டால் வீட் டில் தைரியமாகச் சொல்வேன். அதை ஏற்றுக்கொள்ளும் அன்பும் பக்குவமும் என் குடும்பத்தினருக்கு உண்டு. ஆனால் நான் யாரையும் காதலிப்பதாக வீட்டில் சொல்லவில்லை. வீட்டில் வரன் பார்த் துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வரு டம் “டும் டும் டும்’ சத்தம் கேட்கலாம்.

-மனோஜ்கிருஷ்ணா

Posted in Deepa, Faces, Interview, Kolangal, people, Sun, Television, TV, Venkat | 1 Comment »

Margazhi Music Festival – December Season Kutchery: Charukesi

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

வருகிறது சங்கீத சீசன்!

“”இன்னும் சீசன் டிக்கட்டுகள் கூட அச்சாகி வர வில்லை. அதற்குள் பணத்தைக் கொடுத்து விட்டு தங்கள் சீட்டுகளை உறுதி செய்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்!” என் றார் பிரபல சபாவின் செயலர்.

“”போன வருடம் கொடுத்த அதே சீட்டுதான் வேணும். எப்படியாவது பார்த்துக் கொடுங்க!” என்று சில ரசிகமணிகள் கெஞ்சாத குறையாகக் கேட்பதை யும் பார்க்க முடிந்தது.

இந்த நிலைமை- அக்டோபர் முதல் தேதி கூட விடி யாத, செப்டம்பர் இரண்டாம், மூன்றாம் வார நிலவரம்.

“”யார் பாடப் போகிறார்கள், என்னென்ன நாடகங் கள், யாருடைய நடனங்கள் என்று எதுவுமே அவர்க ளுக்குத் தெரியாது. ஆனாலும் டிக்கெட் மட்டும் அவ சியம் அவர்களுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண் டும். டிசம்பர் சங்கீத-நடன-நாடக விழா என்றாலே தனி. மற்ற மாதங்களில் ” ஆல் ஆர் வெல்கம்’ போட் டால்தான் ஹாலுக்குள் கூட்டம் இருக்கும். டிசம்பர் மட்டும் விதிவிலக்கு” என்றார் அந்த சபாக்காரர்.

  • சஞ்சய் சுப்பிரமணியம்,
  • டி.எம். கிருஷ்ணா,
  • சுதா ரகுநாதன்,
  • அருணா சாய்ராம்,
  • நெய்வேலி சந்தான கோபாலன்,
  • டிவிஎஸ்,
  • மதுரை டி.என். சேஷகோபா லன்,
  • விஜய் சிவா, சௌம்யா,
  • அருண்,
  • ரவிகிரண்,
  • ஜெயஸ்ரீ,
  • மாண்டலின் சீனிவாஸ்,
  • கதிரி கோபால்நாத்,
  • குன்னக்குடி,
  • ரமணி

என்று ஒரு சின்ன வட்டத்துக்குள் ளேயேதான் எல்லா பிரபல சபாக்களும் சுற்றிச் சுற்றி வரவேண்டியிருக்கிறது.

  • சாகேதராமன்,
  • சிக்கில் குருசரண்,
  • மாஸ்டர் பாலமு ரளி கிருஷ்ணா(இப்போ இவர் குன்னக்குடி பாலமு ரளி கிருஷ்ணாவாமே?),
  • லஷ்மி ரங்கராஜன்,
  • நிஷா ராஜகோபால்,
  • வசுந்தரா ராஜகோபால்,
  • மாம்பலம் சகோதரிகள்

என்று அடுத்த வட்டத்துக்குள் இன் னொரு சுற்று!

  • ஜெயந்தி குமரேஷ்,
  • காயத்ரி,
  • ரேவதி கிருஷ்ணா

என்று வீணைக் கலைஞர்கள் பட் டியலோ மிகச் சுருங்கிப்போய் விட்டது.வயலின் சோலோ அல்லது டூயட்-

  • டி.என்.கிருஷ்ணன்,
  • எம்.எஸ்.ஜி,
  • கணேஷ்-கும ரேஷ்,
  • ஜிஜேஆர் கிருஷ்ணன்- விஜயலஷ்மி

என்று இந்தப் பட்டியலும் குறுகிப்போய்விட் டது.நடனம் என்று பார்த்தால் அதிலும் வறட்சி.

  • அலர்மேல்வள்ளி மூன்றே சபாக்களில் மட் டுமே ஆடுகிறார்.
  • பத்மா சுப்ரமணியம்,
  • லீலா சாம்சன் கூட அதிகம் இருக்காது.

இளைய தலைமுறை நடனக் கலைஞர்களில்,

  • ஊர் மிளா சத்யநாராயணன்,
  • ரோஜா கண்ணன்,
  • நர்த்தகி நடராஜ்,
  • லாவண்யா அனந்த் (கார்த் திக் ஃபைன் ஆர்ட்ஸின் இந்த வருட “நடன மாமணி’ விருது பெறுபவர்),

பிற்பகல் நிகழ்ச்சியும் மாலை நிகழ்ச்சியும் வழங்க இருப்பதாக ஒரு தகவல்.இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்க, காலை ஏழு மணிக்கு நடைபெறும் “திருப்பாவை சொற்பொழிவுகளில், கல்யாணபுரம் ஆராவமுதாச்சா ரியார், வேளுக்குடி கிருஷ்ணன் இரண்டு பேரே ஸ்டார் அந்தஸ்து பெற்று, ஹால் நிரம்ப வைக்கிறார் கள்.
பாரம்பரியமான இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் எல்லாச் சபாக்களிலும் வெவ்வேறு பக்க வாத்தியக் கலைஞர்களுடன் நடக்கிறபோது, அனிதா ரத்னம் குழுவினர் மட்டும் தனியே “அதர் ஃபெஸ்டிவல்’ என்று நட்சத்திர ஓட்டலில் நடத்தி வருகிறார்கள்.

நிகழ்ச்சிகளின் தலைப்புகளே புருவத்தை உயர்த்தும் வகை என்றால், ஆடியன்சும் “ஹை ப்ரோ’தான்! போன வருடம் மியூசிக் அகடமி, ஜனவரியில் தனியே ஒருவாரத்துக்குக் காலை முதல் மாலை வரை நடன நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி கண்டதால், இந்த வருடமும் ஒரு வாரத்துக்கு பிரபல நடனக் கலைஞர்க ளின் லெக்-டெம் உள்பட, பல நடன நிகழ்ச்சிகள் உண்டு என்கிறது தகவல் அறிந்த வட்டாரம். காலை நிகழ்ச்சிகளுக்கு “ஆல் ஆர் வெல்கம்’. மாலை டிக்கட் டுகள் உண்டு. பக்க பலமாக அமெரிக்க நிறுவன ஸ்பான்சர் வேறு!

சென்னை நகரம் முழுக்க மூலைக்கு மூலை இந்த இசை-நடன நிகழ்ச்சிகள் நடந்தாலும், திருவல்லிக்கே ணியின் பரபரப்பான தெரு ஒன்றில் மகாகவி பாரதி யாரின் இல்லத்திலேயே அவர் நினைவைப் போற்றும் வகையில் “வானவில் பண்பாட்டு மையம்’ நாலு நாள் களுக்கு, கச்சேரிகளும், நடனமும், சொற்பொழிவுக ளும், ஜதி பல்லக்குமாக நடத்தும் பாரதி விழாவுக்கும் கூட்டம் குறைச்சலில்லை.

திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சி என்று எல்லா மண்டபங்களிலும் இசைக் கச்சேரி நடப்பது வழக்கம்.

ஆனால் “இலக்கிய வீதி’ இனியவன் அவர்க ளின் நண்பர்கள் வட்டாரத்தில், அவர் தன் அமைப்பின் சார்பாக அறிமுகப்படுத்தியிருப்பது- நடன நிகழ்ச்சி! அவர் நண்பர் ஒருவரின் மகளின் திருமண வரவேற்புக்கு காயத்ரி பாலகுருநாதனின் “ஆண்டாள் திருமணத்து’க்குக் கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து, அவர் தம் நண்பர் கள் வட்டாரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச் சிகளாக சைவ-வைணவ நடன நிகழ்ச்சிகளை, நாரத கான சபாவின் “நாட்டியரங்கம்’ அமைப் பின் உதவியோடு நடத்தப் போகிறார்! இது திருமண வரவேற்பு நிகழ்வுகளில், வர வேற்கத்தக்க மாற்றம்!

சாருகேசி


சென்ற வருடத்து தினமணிக் கதிர் கட்டுரைகள்:1. SRG Sambhandham & SRG Rajanna – December Carnatic Music Season Special by Dinamani Kadhir

2. Lalkudi Jayaraman – Dinamani Kathir Music Season Special

3. D Sankaran – Malaikottai Govindhasaamy Pillai : Dinamani Kathir Music Season Special

4. Sembai Vaithyanatha Bagavathar, Mani – Dinamani Kathir Music Season Special

5. Thiyagaraja Bhagavathar, Maangudi Chidhambara Bhagawathar, Brindha, TK Jayaraman, Sundha – Dinamani Kathir Music Season Special

6. Dhandapani Desikar, Ariyakkudi, TS Rajarathnam Pillai, AKC Natarajan – Dinamani Kathir Music Season Special

7. KV Ramakrishnan’s encounters with Carnatic Vidwans – Dinamani Kathir Music Season Special

8. Sabha Awards, Recongnitions & Prizes to Carnatic Sangeetha Performers : Dinamani Kathir Music Season Special

9. ‘Cauvery’ Ramaiya – Ramanujam : Dinamani Kathir Music Season Special

10. Sujatha Vijayaraghavan – Amma : Ananthalakshmi : Dinamani Kathir Music Season Special

Posted in Charukesi, Cutchery, December, Drama, Isai, Kutchery, Margali, Margazhi, Margazi, music, Performance, Season, Stage, Theater, Theatre | Leave a Comment »

Nov 12. : Fighting intensiifies in northern Sri Lanka

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி

 

இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன.

யாழ் குருநகரைச் சேர்ந்த வர்த்தகராகிய 40 வயதுடைய பிரான்ஸிஸ் பிலிப் என்பவர் இன்று காலை யாழ் இராசவின் தோட்டம் பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை இன்று காலை 9.30 மணிக்கு மற்றுமொருவர் அடையாளம் தெரியாதோரால் கச்சேரி- நல்லூர் வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த இரண்டாவது சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இதற்கிடையே, முகமாலை இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாழ் நகர்
யாழ் நகர்

இதன்போது ஏற்பட்ட சண்டையில் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மன்னார் இராணுவ முன்னரங்க பிதேசமாகிய பெரியபண்டிவிரிச்சான், நரிக்குளம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.

எனினும் இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, மன்னார் பெரியதம்பனை பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட 6 விடுதலைப் புலிகளின் சடலங்களும் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது,

இந்த மோதல் சம்பவத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், இலங்கை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

செமினிக்குளம் என்னும் இடத்தில் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.


Posted in Ambaarai, Ambarai, defence, Defense, Jaffna, LTTE, Mannaar, Mannar, Military, Narikkulam, Narikulam, Palaali, Palali, Sri lanka, Srilanka | Leave a Comment »

Nov. 11 – Sri Lankan Military Says 34 Rebels Killed in Fighting in North

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

இலங்கையின் வடக்கே தொடரும் வன்முறை

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டுப் போர்முனைகளில் இன்று அமைதி நிலவியதாகத் இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். அதே நேரம், வவுனியா, மன்னார் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையில் பெரிய தம்பனை பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 6 சடலஙகள் இன்று மாலை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த மோதல்கள் மற்றும் சேத விபரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Posted in Attacks, Daily, Eelam, Eezham, LTTE, Sri lanka, Srilanka | Leave a Comment »