Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007
இலங்கையின் வடக்கே இடம்பெற்ற மோதலில் பலர் பலி
 |
 |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் இராணுவ முன்னரங்க பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 23 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தின் குறிசுட்டகுளம், தம்பனை, விளாத்திக்குளம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நாவற்குளம் போன்ற இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற நேரடிச் சண்டை மற்றும் எறிகணை வீச்சு மோதல்களிலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த மோதல்கள், சேதங்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இதேவேளை, இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 43 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 51 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஐ நா மன்றத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
Posted in Attacks, BBC, dead, Districts, Government, Govt, LTTE, Mannar, Peace, Rebels, Soldiers, Sri lanka, Srilanka, Thamilselvan, Tigers, Vavuniya, Vidudhalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007
பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்
 |
 |
நார்மன் மெய்லர் |
கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான ‘தி நேகட் அண்டு தி டெட்’ மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார்.
நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.
அவருக்கு, ‘தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்’ மற்றும் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’ ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.
இதில் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது.
அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.
Posted in America, Author, Bush, dead, Fiction, GWB, Literature, Mailer, Norman, Novels, Prizes, Pulitzer, Story, US, USA, Vietnam, Wars, Writer | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007
பத்து மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருது
சென்னை: நல்லி, “திசை எட்டும்’ எனும் காலாண்டு இதழ் இணைந்து நுõல் மொழி பெயர்ப்பாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. சென்னையில் நேற்று நடந்த இவ்விழாவில் துõர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார்.
“திசை எட்டும்’ இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் விருது பெறுபவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என் பது பற்றி பேசினார். விருதுகளை வழங்கி நல்லி குப்புசாமி பேசுகையில், “”பொது மக்கள் நுõல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளனர். மொழி பெயர்ப்பு நுõல்களை வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை நாம் செய்ய வேண்டும்,” என்றார்.
வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் சிவசங்கரி பேசுகையில், “” ரவீந்திர நாத் தாகூருக்குப் பிறகு நிறைய ஜாம்பவான்கள் வாழ்கின்றனர். அவர்களது இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். மொழி சிறந்த தொடர்பு சாதனம். நேரடி மொழி மாற்றம், இணையான மொழி மாற்றம், இருந்ததை புதிதாக சொல்லும் மொழி மாற்றம் என மூன்று வகைகளில் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மொழி பெயர்ப் பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நுõல் என்ற எண்ணம் படிக்கும் வாசகருக்கு வரக்கூடாது,” என்றார்.
சிறப்பு விருந்தினரான டி.ஜி.பி., ராஜேந் திரன் பேசுகையில், “”மொழி பெயர்ப்பாளருக்கு நல்லதொரு சிறப்பை செய்துள் ளீர்கள். இது மாதிரியான சேவைகளால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.
தமிழிலில் இருந்து பிறமொழி மற்றும் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்த தலா ஐந்து பேர் என பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.
- ஆங்கில மொழி பெயர்ப்பாளர் பி.ராஜ்ஜா,
- மலையாள மொழி பெயர்ப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும்
- சரவணன்,
- நிர்மால்யா,
- இறையடியான்,
- சாந்தா தத்,
- புவனா நடராஜன்,
- மந்திரி பிரகடசேஷாபாய்,
- நவநீத் மத்ராசி,
- பத்மாவதி
ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
விழா முடிவில் நல்லி குப்புசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். முன்னதாக சுதா ரகுநாதன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.
Posted in Authors, Awards, Birthday, Cake, Events, Function, Journals, Kuppusami, Kuppusamy, Kurinjivelan, Kurinjvelan, Literature, Mag, Magazines, Mags, Magz, Nalli, Prizes, Sivasankari, Thisai Ettum, ThisaiEttum, Translation, Translators, Works, Writers | 2 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007
விதிமுறை மீறல்கள்!
ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.
இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?
உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?
உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?
இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?
- கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
- உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
- ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
- ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்
ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.
இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!
தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.
Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »