Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Nilakkottai Local Body President & Muthalamman Temple Hundi Collections

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

வாண வேடிக்கைக்குப் பதில் துப்பாக்கிச்சூடு!, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி! இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா.

சுத்துப்பட்டியில் உள்ள

  • சித்தர்கள் நத்தம்,
  • நல்லி செட்டிபட்டி,
  • மட்டப்பாறை,
  • ராமராஜபுரம்,
  • எத்திலோடு,
  • பிள்ளையார் நத்தம்,
  • அணைப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு முக்கியக் கோயிலாக விளங்குவது விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கோயில் திருவிழா தொடங்கும் முன்பே அறங்காவலர்கள் நியமன பிரச்னை அங்கே ஆரம்பித்து விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி

  • ஆவுடையம்மாள்,
  • திரிபுரசுந்தரி

என்ற இரண்டு அறங்காவலர்களை அதிரடியாக அறிவிக்க, மாணிக்கம் என்பவரது தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ‘திருவிழா முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்கலாம். இப்ப பிரச்னை பண்ண வேண்டாம்’ என பெரியவர்கள் சொல்ல, பிரச்னை தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
ஊர்கூடி ஒன்றாக நோன்பு காப்பு கழற்றப்பட்டதும் முத்தாலம்மன் கோயில் இருதரப்பினர் முன்னிலையில் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. ‘‘இனி பேச்சுவார்த்தை முடிந்த பின்னால்தான் கோயில் திறப்பு’’ என முடிவு செய்து விளாம்பட்டி காவல்நிலையத்தில் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

மே 16_ம் தேதி!

முருகன் _ மணிமாலா தம்பதியரின் பத்து வயது மகள் அபிநிஷாவுக்கு திடீரென அம்மன் அருள் வந்து விட்டதாக விளாம்பட்டியே பரபரப்பானது. அம்மன்போல் அலங்கரித்துக் கொண்டு வெறும் மஞ்சள் நீரை மட்டும் ‘மடக் மடக்’ என்று குடித்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடியபடி குறிசொன்னாள் அபிநிஷா. ‘‘வைகாசி பொறந்தாச்சு. கோயிலைத் திறந்து எனக்கு பூசை பண்ணுங்கடா!’’ என்று அம்மன் வாய்ஸில் அபிநிஷா பேச, ஆத்தா உத்தரவால் அரண்டு போனது விளாம்பட்டி.

சிறுமி அபிநிஷாவை யாரும் போட்டோ கூட எடுத்துவிடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்தனர் ஊர்க்காரர்கள். அதோடு, பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பித்து கோயிலைத் திறக்க வேண்டும் என்று பரபரத்தார்கள். ஆனால், விளாம்பட்டிக்காரர்களின் கூக்குரல் எதுவும் தி.மு.க. வினர் மற்றும் போலீஸார் காதில் விழவேயில்லை.

இந்த நிலையில் 29.05.07 அன்று அம்பாசிடர் கார்களில் ஆவுடையம்மாள், திரிபுர சுந்தரி ஆகியோருடன் சோழவந்தானைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளாம்பட்டிக்கு வந்தனர். ‘‘கோயில் உண்டியல் இரண்டு வருடமாகவே எண்ணப்படாமல் இருக்கிறது. பணத்தை எண்ணி பேங்க்கில் போட வேண்டும்’’ என்று கூறி, கோயில் சாவியை போலீஸாரிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் கோயிலைத் திறக்க முயன்றபோது கொதித்துப் போனார்கள் விளாம்பட்டி மக்கள். ‘‘பிரச்னை இன்னும் இருக்கும்போது ஏன் கோயிலைத் திறக்கிறீங்க? சாவி யார் தந்தது?’’ என்று சண்டைக்கு வந்த அவர்கள், இதன் பின்னணியில் நிலக்கோட்டை யூனியன் சேர்மன் (தி.மு.க.) கோட்டைசாமி இருப்பதாக ஊகித்துக் கொண்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல, அறங்காவலர்களையும், அதிகாரிகளையும் அள்ளிப்போய் விளாம்பட்டி காவல் நிலையத்தில் போட்டு போலீஸாரிடம் விளக்கம் அளித்தனர்.

போலீஸார் விளாம்பட்டி மக்களின் விளக்கம் எதையும் காதில் வாங்கவில்லை. அறங்காவலர்கள், அதிகாரிகள் மீண்டும் கோயிலைத் திறக்க வழியேற்படுத்தித் தந்தனர். கோயில் திறக்கப்பட்டது மட்டுமல்ல, ஊர் மக்கள் யாருமில்லாமல் உண்டியலும் திறக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர் விளாம்பட்டியினர். அறங்காவலர்கள் வந்த அம்பாசிடர் கார்களை அப்பளம் போல் அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள் பறந்தன. காவல் நிலையம் மீதும் கல்வீச்சு நடந்தது.

திண்டுக்கல் எஸ்.பி. பாரிக்கு இந்தத் தகவல் தெரியவர அவர் ஆர்.டி.ஓ. பேச்சியம்மாள், நிலக்கோட்டை தாசில்தார் கந்தசாமி ஆகியோருடன் வந்து பேச்சு நடத்தினார். அப்போதும் மக்கள் அடங்கவில்லை. எட்டு போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் போலீஸ் திணற ஆரம்பித்தது. இந்த சந்தடியில் கோயில் உண்டியல் கொள்ளை போனது. தி.மு.க.வினர் மீதும் தாக்குதல் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆரம்பத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு நடத்திவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள். அதில் காயமடைந்த குணசுந்தரி, சிவபிரகாஷ் போன்றவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு விடியட்டும் என்று காத்திருந்த போலீஸார் விடியும் தறுவாயில் விறுவிறுவென செயலில் இறங்கினார்கள். விளாம்பட்டியில் அங்கங்கே மின்சாரத்தை அணைத்து விட்டு வீடு புகுந்து ஆண்கள், பெண்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த டி.வி. பீரோ, ஃபிரிட்ஜ்களை உடைத்துப் பந்தாடினார்கள். விளாம்பட்டி கிராமம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகியது.

இந்தத் தாக்குதலின் போது போலீஸாருக்கு ‘எதிர்சேவை’யும் நடந்தது. அதில் டி.எஸ்.பி.க்கள் ருத்ரசேகர், போஸ் மற்றும் மூன்று பெண் போலீஸார் காயமடைந்தனர். அதனால் ஆவேசமடைந்த போலீஸார் 30_ம் தேதி முடிவதற்குள் விளாம்பட்டி கிராமத்தை போட்டுப் புரட்டி ஆண்கள் அத்தனை பேரையும் அமுக்கிப் பிடித்தனர், அவர்களை நிலக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்றனர். இப்படிப் பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலானோர் பிளஸ் டூ, பத்தாவது முடித்த மாணவர்கள் என்பதுதான் பரிதாபம். பிடிபட்டவர்களில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் அடங்குவார்கள். வேறு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர்.

போலீஸாரின் ‘நள்ளிரவு வேட்டை முடிந்த பின்னர் புலம்பலுடன் விளாம்பட்டி கிராமத்தில் பொழுது விடிந்தது. தாசில்தார் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கணக்குக் காட்டி அதில் எழுபது பேரை போÊலீஸார் 30_ம் தேதி ரிமாண்ட் செய்தனர்.

ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ஏற்கெனவே வெறிச்சோடிக் கிடந்த விளாம்பட்டியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. நாம் விளாம்பட்டிக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘எப்பவுமே முத்தாலம்மன் கோயில் உண்டியலை தண்டோரா போட்ட பிறகுதான் திறந்து எண்ணுவாக. ஆனால் இப்ப நிலக்கோட்டை யூனியன் சேர்மன் கோட்டைசாமி சொன்னார்னு ஆட்கள் வந்து திறந்ததால் பிரச்னை வந்திருச்சு. போலீஸில் புகார் சொன்னோம். அவுக காதிலேயே வாங்கலை. அப்புறம்தான் கலவரம் முத்திப் போச்சு. காரை அடிச்சாங்க. போலீஸ் ஸ்டேஷன் மீது கல் வீசினாங்க.

எங்க வீட்டிலேயிருந்த நாலு ஆம்பிளைகளை போலீஸ் அள்ளிட்டுப் போயிட்டாக. இங்கே இப்ப ஆம்பிளையே இல்லைன்னு சொன்னால், அப்புறம் உனக்கு எதுக்கு சேலைதுணின்னு அசிங்கம் பண்ணினாங்கனு வீட்டு சாமான், டி.வி. பொட்டி எல்லாத்தையும் போலீஸ் போட்டு உடைச்சுது. இவங்க பண்ணின தப்பை மறைக்க இப்படி வெறியாட்டம் போடுறாக’’ என்றார்.

முத்தாலம்மன் கோயில் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கருதப்படும் நிலக்கோட்டை சேர்மன் கோட்டை சாமியிடம் பேசினோம்.

‘‘என் மேல் எந்தத் தப்பும் இல்லை. இருந்தும் என்னை கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டாங்க. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊர்க்காரர்கள்தான். அவர்கள் எப்படியாவது அறங்காவலர் ஆகணும் என்கிற வெறியில் ஊரைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைத்துவிட்டாங்க.

கோயில் உண்டியலை, இப்போ திறக்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். மீறித் திறந்ததால் இந்த விபரீதம் நடந்து போச்சு. இப்போது இந்த கலவரத்துக்கே நான்தான் காரணம் என்று கதை கட்டி விடுறாங்க!’’ என்றார் அவர்.

விளாம்பட்டியில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி. பாரியிடம் நாம் கேட்டோம்.

‘‘இப்போது விளாம்பட்டியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். எழுபது பேரை கைது செய்திருக்கிறோம். விரைவில் மாமூல் நிலை திரும்பி விடும்’’ என்றார்.

30_ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் வாசுகியும் விளாம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் போலீஸார் செய்த அட்டூழியங்களை பொதுமுக்கள் புகாராகக் கூறியிருக்கிறார்கள்.

கோட்டையில் ராஜாங்கம் செய்தால் மட்டும் போதாது. கோயில்களிலும் ராஜாங்கம் செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதால் விளாம்பட்டி போன்ற விபரீதங்கள் மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். விளாம்பட்டி இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மயான அமைதி.

– மருது


Author – Unknown

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள விளாம்பட்டி கிராமம் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோர் அதிகம் உள்ள ஒரு கிராமம். கிராமத்தின் முக்கிய தெய்வமான முத்தாலம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் அமர்க்களமாய் நடக்கும் ஒன்று.

இந்த வருடம் நிலக்கோட்டை கவுன்ஸிலராக (?) இருக்கும் கோட்டைச்சாமி என்பவர் கோயில் உண்டியலை உடைத்து அனைத்து வசூலையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதை தடுத்தவர்களையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளார். போராட்டம் நடத்திய மக்கள்மேல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை தடுக்க விளாம்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பிடித்து சிறையில் அடைத்துவருகிறார்கள். விளாம்பட்டியிலுள்ள ஆண்கள் தப்பிப்பதற்கு வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள்.

கிராமத்திற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்களும் வேறு வழியின்றி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

அதாவது ஒரு ஊரே, ஒரு கொள்ளையை தடுக்க இயலாமல் எதிர்த்ததால் ஊரைவிட்டு விரட்டப்படுகின்றனர்.

இந்த விஷயத்தைப் பற்றி ஜெயா டிவி மட்டுமே செய்திகள் வெளியிட்டு
வருகின்றது.

ஹிந்து சமுதாயத்திற்கும், ஆன்மீக விடுதலைக்கும் போராடுவதாகச்
சொல்லிக்கொள்ளும் எந்த ஹிந்து அமைப்பும் இந்த பிரச்சினையில்
தலையிட்டதாகத் தெரியவில்லை.

கோட்டைச்சாமி அவர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.


30 hurt in violence near Nilakkottai

DINDIGUL: Around 30 persons, including Velasundur Deputy Superintendent of Police K Rudrasenan and 15 other police personnel, were injured in a violence, which erupted at Vilampatti near Nilakkottai on Wednesday night.

The police had opened fire to bring the situation under control.

The incident occurred when the villagers turned violent protesting against the opening of the Avadi Amman temple at the village, which remained locked for the past two years due to a dispute among the trustees.

Despite lathi charge and bursting of tear gas shells, the crowd pelted stones, damaging scores of police vehicles and public transport buses at Vilampatti. The police fired three rounds in air, said a senior police officer.

Around 50 villagers, who involved in the violence were arrested on Tuesday and around 200 police were deployed in the village.

According to sources, trouble arose when there was an attempt to open the offering box in front of the Hindu Religious and Charitable Endowments (HR- &CE) executive officer Saravana Kumar, temple trustee Thirupana Sundarai, temple priest Rajendaran and two police persons.

As the news spread, the people of Vilampatti and the nearby villages gathered at the temple site and demanded to stop the counting.

They claimed that it was their custom to open the offering box only by the trustee and the villagers and the collection should be used for the development of the village.

The HR&CE officer pacified them and said that having a huge amount in the offering box was dangerous and assured them that the fund would be deposited in a nationalised bank, sources said.

However, the villagers blocked the traffic in front of the police station and pelted stones at the vehicles.

District Collector S Vasuki said, ‘‘The police have arrested around 50 people, who have indulged in violence and the situation is under control.’’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: