Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Local Body’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Nilakkottai Local Body President & Muthalamman Temple Hundi Collections

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

வாண வேடிக்கைக்குப் பதில் துப்பாக்கிச்சூடு!, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி! இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா.

சுத்துப்பட்டியில் உள்ள

  • சித்தர்கள் நத்தம்,
  • நல்லி செட்டிபட்டி,
  • மட்டப்பாறை,
  • ராமராஜபுரம்,
  • எத்திலோடு,
  • பிள்ளையார் நத்தம்,
  • அணைப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு முக்கியக் கோயிலாக விளங்குவது விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கோயில் திருவிழா தொடங்கும் முன்பே அறங்காவலர்கள் நியமன பிரச்னை அங்கே ஆரம்பித்து விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி

  • ஆவுடையம்மாள்,
  • திரிபுரசுந்தரி

என்ற இரண்டு அறங்காவலர்களை அதிரடியாக அறிவிக்க, மாணிக்கம் என்பவரது தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ‘திருவிழா முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்கலாம். இப்ப பிரச்னை பண்ண வேண்டாம்’ என பெரியவர்கள் சொல்ல, பிரச்னை தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
ஊர்கூடி ஒன்றாக நோன்பு காப்பு கழற்றப்பட்டதும் முத்தாலம்மன் கோயில் இருதரப்பினர் முன்னிலையில் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. ‘‘இனி பேச்சுவார்த்தை முடிந்த பின்னால்தான் கோயில் திறப்பு’’ என முடிவு செய்து விளாம்பட்டி காவல்நிலையத்தில் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

மே 16_ம் தேதி!

முருகன் _ மணிமாலா தம்பதியரின் பத்து வயது மகள் அபிநிஷாவுக்கு திடீரென அம்மன் அருள் வந்து விட்டதாக விளாம்பட்டியே பரபரப்பானது. அம்மன்போல் அலங்கரித்துக் கொண்டு வெறும் மஞ்சள் நீரை மட்டும் ‘மடக் மடக்’ என்று குடித்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடியபடி குறிசொன்னாள் அபிநிஷா. ‘‘வைகாசி பொறந்தாச்சு. கோயிலைத் திறந்து எனக்கு பூசை பண்ணுங்கடா!’’ என்று அம்மன் வாய்ஸில் அபிநிஷா பேச, ஆத்தா உத்தரவால் அரண்டு போனது விளாம்பட்டி.

சிறுமி அபிநிஷாவை யாரும் போட்டோ கூட எடுத்துவிடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்தனர் ஊர்க்காரர்கள். அதோடு, பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பித்து கோயிலைத் திறக்க வேண்டும் என்று பரபரத்தார்கள். ஆனால், விளாம்பட்டிக்காரர்களின் கூக்குரல் எதுவும் தி.மு.க. வினர் மற்றும் போலீஸார் காதில் விழவேயில்லை.

இந்த நிலையில் 29.05.07 அன்று அம்பாசிடர் கார்களில் ஆவுடையம்மாள், திரிபுர சுந்தரி ஆகியோருடன் சோழவந்தானைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளாம்பட்டிக்கு வந்தனர். ‘‘கோயில் உண்டியல் இரண்டு வருடமாகவே எண்ணப்படாமல் இருக்கிறது. பணத்தை எண்ணி பேங்க்கில் போட வேண்டும்’’ என்று கூறி, கோயில் சாவியை போலீஸாரிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் கோயிலைத் திறக்க முயன்றபோது கொதித்துப் போனார்கள் விளாம்பட்டி மக்கள். ‘‘பிரச்னை இன்னும் இருக்கும்போது ஏன் கோயிலைத் திறக்கிறீங்க? சாவி யார் தந்தது?’’ என்று சண்டைக்கு வந்த அவர்கள், இதன் பின்னணியில் நிலக்கோட்டை யூனியன் சேர்மன் (தி.மு.க.) கோட்டைசாமி இருப்பதாக ஊகித்துக் கொண்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல, அறங்காவலர்களையும், அதிகாரிகளையும் அள்ளிப்போய் விளாம்பட்டி காவல் நிலையத்தில் போட்டு போலீஸாரிடம் விளக்கம் அளித்தனர்.

போலீஸார் விளாம்பட்டி மக்களின் விளக்கம் எதையும் காதில் வாங்கவில்லை. அறங்காவலர்கள், அதிகாரிகள் மீண்டும் கோயிலைத் திறக்க வழியேற்படுத்தித் தந்தனர். கோயில் திறக்கப்பட்டது மட்டுமல்ல, ஊர் மக்கள் யாருமில்லாமல் உண்டியலும் திறக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர் விளாம்பட்டியினர். அறங்காவலர்கள் வந்த அம்பாசிடர் கார்களை அப்பளம் போல் அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள் பறந்தன. காவல் நிலையம் மீதும் கல்வீச்சு நடந்தது.

திண்டுக்கல் எஸ்.பி. பாரிக்கு இந்தத் தகவல் தெரியவர அவர் ஆர்.டி.ஓ. பேச்சியம்மாள், நிலக்கோட்டை தாசில்தார் கந்தசாமி ஆகியோருடன் வந்து பேச்சு நடத்தினார். அப்போதும் மக்கள் அடங்கவில்லை. எட்டு போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் போலீஸ் திணற ஆரம்பித்தது. இந்த சந்தடியில் கோயில் உண்டியல் கொள்ளை போனது. தி.மு.க.வினர் மீதும் தாக்குதல் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆரம்பத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு நடத்திவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள். அதில் காயமடைந்த குணசுந்தரி, சிவபிரகாஷ் போன்றவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு விடியட்டும் என்று காத்திருந்த போலீஸார் விடியும் தறுவாயில் விறுவிறுவென செயலில் இறங்கினார்கள். விளாம்பட்டியில் அங்கங்கே மின்சாரத்தை அணைத்து விட்டு வீடு புகுந்து ஆண்கள், பெண்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த டி.வி. பீரோ, ஃபிரிட்ஜ்களை உடைத்துப் பந்தாடினார்கள். விளாம்பட்டி கிராமம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகியது.

இந்தத் தாக்குதலின் போது போலீஸாருக்கு ‘எதிர்சேவை’யும் நடந்தது. அதில் டி.எஸ்.பி.க்கள் ருத்ரசேகர், போஸ் மற்றும் மூன்று பெண் போலீஸார் காயமடைந்தனர். அதனால் ஆவேசமடைந்த போலீஸார் 30_ம் தேதி முடிவதற்குள் விளாம்பட்டி கிராமத்தை போட்டுப் புரட்டி ஆண்கள் அத்தனை பேரையும் அமுக்கிப் பிடித்தனர், அவர்களை நிலக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்றனர். இப்படிப் பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலானோர் பிளஸ் டூ, பத்தாவது முடித்த மாணவர்கள் என்பதுதான் பரிதாபம். பிடிபட்டவர்களில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் அடங்குவார்கள். வேறு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர்.

போலீஸாரின் ‘நள்ளிரவு வேட்டை முடிந்த பின்னர் புலம்பலுடன் விளாம்பட்டி கிராமத்தில் பொழுது விடிந்தது. தாசில்தார் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கணக்குக் காட்டி அதில் எழுபது பேரை போÊலீஸார் 30_ம் தேதி ரிமாண்ட் செய்தனர்.

ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ஏற்கெனவே வெறிச்சோடிக் கிடந்த விளாம்பட்டியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. நாம் விளாம்பட்டிக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘எப்பவுமே முத்தாலம்மன் கோயில் உண்டியலை தண்டோரா போட்ட பிறகுதான் திறந்து எண்ணுவாக. ஆனால் இப்ப நிலக்கோட்டை யூனியன் சேர்மன் கோட்டைசாமி சொன்னார்னு ஆட்கள் வந்து திறந்ததால் பிரச்னை வந்திருச்சு. போலீஸில் புகார் சொன்னோம். அவுக காதிலேயே வாங்கலை. அப்புறம்தான் கலவரம் முத்திப் போச்சு. காரை அடிச்சாங்க. போலீஸ் ஸ்டேஷன் மீது கல் வீசினாங்க.

எங்க வீட்டிலேயிருந்த நாலு ஆம்பிளைகளை போலீஸ் அள்ளிட்டுப் போயிட்டாக. இங்கே இப்ப ஆம்பிளையே இல்லைன்னு சொன்னால், அப்புறம் உனக்கு எதுக்கு சேலைதுணின்னு அசிங்கம் பண்ணினாங்கனு வீட்டு சாமான், டி.வி. பொட்டி எல்லாத்தையும் போலீஸ் போட்டு உடைச்சுது. இவங்க பண்ணின தப்பை மறைக்க இப்படி வெறியாட்டம் போடுறாக’’ என்றார்.

முத்தாலம்மன் கோயில் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கருதப்படும் நிலக்கோட்டை சேர்மன் கோட்டை சாமியிடம் பேசினோம்.

‘‘என் மேல் எந்தத் தப்பும் இல்லை. இருந்தும் என்னை கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டாங்க. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊர்க்காரர்கள்தான். அவர்கள் எப்படியாவது அறங்காவலர் ஆகணும் என்கிற வெறியில் ஊரைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைத்துவிட்டாங்க.

கோயில் உண்டியலை, இப்போ திறக்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். மீறித் திறந்ததால் இந்த விபரீதம் நடந்து போச்சு. இப்போது இந்த கலவரத்துக்கே நான்தான் காரணம் என்று கதை கட்டி விடுறாங்க!’’ என்றார் அவர்.

விளாம்பட்டியில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி. பாரியிடம் நாம் கேட்டோம்.

‘‘இப்போது விளாம்பட்டியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். எழுபது பேரை கைது செய்திருக்கிறோம். விரைவில் மாமூல் நிலை திரும்பி விடும்’’ என்றார்.

30_ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் வாசுகியும் விளாம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் போலீஸார் செய்த அட்டூழியங்களை பொதுமுக்கள் புகாராகக் கூறியிருக்கிறார்கள்.

கோட்டையில் ராஜாங்கம் செய்தால் மட்டும் போதாது. கோயில்களிலும் ராஜாங்கம் செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதால் விளாம்பட்டி போன்ற விபரீதங்கள் மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். விளாம்பட்டி இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மயான அமைதி.

– மருது


Author – Unknown

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள விளாம்பட்டி கிராமம் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோர் அதிகம் உள்ள ஒரு கிராமம். கிராமத்தின் முக்கிய தெய்வமான முத்தாலம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் அமர்க்களமாய் நடக்கும் ஒன்று.

இந்த வருடம் நிலக்கோட்டை கவுன்ஸிலராக (?) இருக்கும் கோட்டைச்சாமி என்பவர் கோயில் உண்டியலை உடைத்து அனைத்து வசூலையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதை தடுத்தவர்களையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளார். போராட்டம் நடத்திய மக்கள்மேல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை தடுக்க விளாம்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பிடித்து சிறையில் அடைத்துவருகிறார்கள். விளாம்பட்டியிலுள்ள ஆண்கள் தப்பிப்பதற்கு வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள்.

கிராமத்திற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்களும் வேறு வழியின்றி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

அதாவது ஒரு ஊரே, ஒரு கொள்ளையை தடுக்க இயலாமல் எதிர்த்ததால் ஊரைவிட்டு விரட்டப்படுகின்றனர்.

இந்த விஷயத்தைப் பற்றி ஜெயா டிவி மட்டுமே செய்திகள் வெளியிட்டு
வருகின்றது.

ஹிந்து சமுதாயத்திற்கும், ஆன்மீக விடுதலைக்கும் போராடுவதாகச்
சொல்லிக்கொள்ளும் எந்த ஹிந்து அமைப்பும் இந்த பிரச்சினையில்
தலையிட்டதாகத் தெரியவில்லை.

கோட்டைச்சாமி அவர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Avadi Amman, AvadiAmman, Charitable, Charity, Corruption, Council, Councillor, DMK, Hindu, HR&CE, Hundi, Jaya TV, Jeya TV, Law, Local Body, Muthalamman, Nilakkottai, Nilakottai, Order, Police, President, Religion, Religious, Temple, Velasundur, Vilaampatti, Vilampatti, Vilampatty, Village, Violence | Leave a Comment »

Center-State Relations: Federal democracy’s principles – Analysis

Posted by Snapjudge மேல் மே 18, 2007

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய – மாநில உறவுகளை அறிய தன்னிச்சையாக

  1. இந்திய முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமையில்
  2. முன்னாள் உள்துறை செயலாளர்கள் திரேந்திர சிங்,
  3. வி.கே. துகல்,
  4. தேசிய நீதித்துறை அகாதெமியின் இயக்குநர் என்.ஆர். மாதவன் மேனன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை நியமித்து இரண்டே ஆண்டுகளில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் படைகளை நேரடியாக மாநிலங்களுக்கு அனுப்பலாமா

என்று அறியவே பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளே கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தகாலத்தில் இம்மாதிரி பிரச்சினைகள் வந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், ஜோதிபாசு போன்றவர்கள் கண்டித்துள்ளனர். மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் இம்மாதிரி ஒரு குழுவை அமைத்ததே கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய – மாநில உறவுகளில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சிந்திக்காமல் மத்திய படைகளைப் பிரிவு 355ன்படி மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து ஏன் இந்த அக்கறை? மத்திய அரசு அவசரக் கோலத்தில் பூஞ்சி குழுவை உருவாக்கியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகின்றது. இதில் பிரச்சினைகள் எழாதவாறு மத்திய அரசு மேலும் சில விஷயங்கள் குறித்து இந்தக் குழு ஆராயும் என்று ஒப்புக்குச் சிலவற்றை வைத்து உள்ளது.

அவை

  • மத்திய – மாநில உறவு குறித்துப் புதிய பரிமாணத்தைக் காணுதல்,
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி, மத்திய அரசின் உதவியை மாநிலம் மூலம் இல்லாமல் நேரடியாக உள்ளாட்சிக்கு மேலும் வழங்க வழிவகைகள் காணுதல்,
  • மாநிலங்களிடையே உள்ள வணிகத்திற்கு வரி விதிப்பு முறைகள் காணுதல் போன்றவை; மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்க இப்படியொரு கமிஷன் தேவையா என்பது இன்றைய கேள்வி!

மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறுகின்றது. காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி பற்றி கடந்த 50 ஆண்டுகளில் தெளிவான நிலையில் இல்லாதது மட்டுமல்லாமல், மாநிலங்களினுடைய அதிகாரங்களைப் பறிக்கும் எண்ணத்திலே செயல்பட்டு வந்தது.

11.12.1947 காங்கிரஸ், அரசு அமைப்பு குறித்து இறுதி செய்தபோது, தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்கள் அமையும் எனக் கூறியது. அக்காலத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலங்களின் பெயரைச் சொல்லியே அழைத்தது இந்நிலையில்தான்.

நாட்டின் விடுதலைக்குப் பின் பிரதமர் நேரு, காங்கிரஸின் முந்தைய மாநில சுயாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகி பலமான மத்திய அரசு எனப் படிப்படியாக நிர்வாகத்தில் கொண்டு வந்தார். அதை படேல், ஆசாத் போன்றோர் விரும்பவில்லை. நாடெங்கும் ஒரே கட்சி ஆட்சி, நேருவின் ஆளுமை போன்றவை அன்றைய சூழலில் மாநில சுயாட்சிக் கோரிக்கையின் வேகத்தைக் குறைத்துவிட்டன.

கேரளத்தில் முதல் காங்கிரஸ் அல்லாத இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அரசை ஜனநாயகத்திற்கு விரோதமாக மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு கலைத்தது. அன்றைக்குத் தொடங்கிய வேட்டைத் தொழில் ஏறத்தாழ 105 முறை 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கவிழ்ப்பது, தங்களுக்கு விருப்பமானவர்களை முதல்வர்களாக ஆக்குவது எனத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்குப் பின்புதான் இந்த விபரீதத்திற்கு ஒரு பரிகாரம் கிடைத்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்தை நூறு முறைக்கு மேல் திருத்தங்கள் செய்தபின்பும் கூட மாநிலங்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை.

பொதுப்பட்டியலில் உள்ள 47 ஐயும் சேர்த்து மத்திய அரசிடம் 144 அதிகாரங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு உள்ளது வெறும் 66 அதிகாரங்கள் மட்டுமே, அதிலும் மத்திய அரசு தலையீடு இருக்கும்.

1968ல் கர்நாடகத்தைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஹனுமந்தையா தலைமையில் மத்திய அரசு அமைத்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் துணைக்குழுவான செட்டல்வாட் குழு அறிக்கை, எஞ்சிய அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசின் ஒப்புதலோடுதான் முக்கிய திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்த வேண்டும் என்றும், தேசிய முக்கியத்துவமுள்ள பிரச்சினைகளில், மாநிலங்களை ஆலோசித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அண்ணா மறைவுக்குப் பின்பு, மத்திய – மாநில உறவுகளைப் பற்றி அறிய அமைக்கப்பட்ட நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையிலான குழு,

  • மத்திய – மாநில பொது அதிகாரப் பட்டியலில் மாற்றங்கள் வேண்டும்,
  • மாநிலங்களுக்கிடையே கவுன்சில் அமைக்க வேண்டும்,
  • நிதிப் பகிர்வு,
  • திட்டக்கமிஷன் சுயமான அமைப்பாக இருக்க வேண்டும்,
  • ஆளுநர் பதவி ஒழிப்பு,
  • பிரிவு 356 நீக்கம் உள்ளிட்ட பல பரிந்துரைகளைச் செய்தது.

1973 அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதியில் அகாலிதளத்தினர் கூடி பஞ்சாபுக்கு பிராந்திய சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

காமராஜரின் நெருங்கிய சகா நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், இராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் பங்கேற்ற மைசூர் ஸ்தாபன காங்கிரஸ் 1972ல் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் விஜயவாடாவில் காங்கிரஸ் அல்லாத மாநில – தேசியக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். அதைப்போன்று கோல்கத்தாவில் ஜோதிபாசுவும் நடத்தினார்.

ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள், தலைவர்களை அழைத்து 1983 அக்டோபரில் 59 தலைவர்கள் – 17 அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட மாநாட்டை நடத்தி “ஸ்ரீநகர் பிரகடனம்’ வெளியிட்டார்.

மாநிலங்களின் உரிமை குறித்து நாளுக்கு நாள் விவாதங்களும் கோரிக்கைகளும் அதிகரிக்க இந்திரா காந்தி, மத்திய – மாநில பிரச்சினைகளைத் தீர்க்க சர்க்காரியா குழுவை 24-3-1983ல் அமைத்தார். 1987 அக்டோபரில் தன்னுடைய இரண்டு தொகுப்பு அறிக்கையை வழங்கியது இந்தக் கமிஷன்.

1990இல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு வி.பி. சிங் தலைமையில் மாநிலக் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. வட்டாரத் தலைவர்களின் செல்வாக்கு தில்லியில் தொடங்கியது.

1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து மாநிலங்களின் பங்களிப்பால் தில்லியில் மத்திய ஆட்சி தொடர்கிறது. இனிமேல் ஒரு கட்சி ஆட்சி என்பது மத்தியில் சாத்தியமில்லை. இது இப்படி இருக்க, மாநில சுயாட்சிக் கொள்கையைக் கொண்டவர்கள் மத்தியில் அதிகார வர்க்கத்தில் இருக்கும்பொழுது அதைப் பற்றிப் பேசக்கூடத் தயங்குகின்றனர். அதுதான் ஏனென்று புரியவில்லை.

திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷனிடம் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில “மாண்புமிகு’ முதலமைச்சர்கள் கருணை வேண்டி கையேந்த வேண்டிய நிலை. திட்டக்கமிஷன் அரசியல் அமைப்பு அங்கீகாரம் இல்லாமல் மத்திய கேபினட் முடிவின்படி அமைக்கப்பட்டது. அது இன்றைக்கு சூப்பர் கேபினட்டாக இருக்கின்றது. நிதிக்குழு மட்டும்தான் அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்றதாகும். நிதிக்குழுவும் திட்டக்குழுவும் மத்திய அரசின் கடைக்கண் பார்வையில்தான் இயங்குகின்றன. ராஜா செல்லையா குழு, காட்கில் கொள்கை ஆகியவற்றின் பரிந்துரைகளும் மத்திய அரசுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டன.

மாநிலங்களில் எடுக்கப்படும் கனிம வளங்கள், தாதுக்கள், பெட்ரோலியம் போன்ற பொருள்களுக்கு மாநிலங்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதும் இல்லை.

ஜோதிபாசு, என்.டி. ராமராவ், பாரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோர் போர்க்குணத்தோடு இப்பணியில் ஓரளவு அதிகாரங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றனர்.

பூஞ்சி குழுவினால் தேவையற்ற முறையில் அரசின் கஜானாவைக் காலியாக்க ஓய்வுபெற்றவர்களுக்குப் பணியைக் கொடுக்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவது இல்லை.

ஏற்கெனவே இதுவரை மத்திய அரசு இதுகுறித்து இரண்டு குழுக்களும்,

  • தமிழ்நாடு அரசு அமைத்த இராஜமன்னார் குழுவும்,
  • மேற்குவங்கத்து ஜோதிபாசு வழங்கிய வெள்ளை அறிக்கை,
  • ஸ்ரீநகர் மற்றும் விஜயவாடா பிரகடனங்கள்,
  • பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுத்த தீர்மானங்களைக் கொண்டே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சுயாட்சித் தன்மையையும், அதிகாரங்களையும் வழங்க இயலும். அப்படி வழங்குவதை விட்டுவிட்டு
  •  மாநில அரசின் கவனத்திற்கு வராமலே மத்திய அரசின் படைகளை அனுப்புவதும்,
  • மாநில அரசிடம் வரிகளை வாங்கவும் இந்தக் குழு அமைத்தது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில் என்பார்கள். மத்திய அரசின் வலிமை, பலமான மாநிலங்கள்தான். இதை ஓரிரு மத்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதற்கும், மத்திய அரசிடம் அதிகாரங்களைக் குவிப்பதற்கும் செய்யப்படும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் பூஞ்சி குழுவின் தற்போதைய முயற்சி. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதை மறந்துவிட்ட மத்திய அரசு, பூஞ்சி குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் துடிப்பதன் ரகசியம் புரியாமல் இல்லை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், சென்னை.)

Posted in 355, 356, abuse, Analysis, Andhra, AP, Army, Azad, Background, Bommai, Center, Centre, CM, Communists, Congress, Courts, CPI, CPI(M), Democracy, Dhirendra Singh, Dismiss, EMS, Federal, Governor, Govt, Help, History, Independence, Jothibasu, Justice, Kerala, Law, Left, Local Body, Madhavan Menon, Marxists, Military, Minister, Municipality, NDA, Nehru, NTR, Order, Panchayat, Party, Patel, PM, Poonchi, Power, President, Rajamannaar, Rajamannar, Republic, Rule, SC, SR Bommai, SRB, State, UDA, VK Dugal, WB | Leave a Comment »

Waiver of dues a fillip to civic works: Mayor

Posted by Snapjudge மேல் மே 8, 2007

நகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:

நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.

மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Posted in Bonds, Budget, Civic, CMDA, Corporation, Councillor, CRR, Development, DMK, Economy, Finance, Funds, Government, Govt, Home, Interest, Internal Affairs, Loans, Local Body, Mayor, Metropolitan, MLC, Municipality, Public, Rajesh Lakhoni, Rates, Services, Stalin, Subramaniam, Subramanian, Tiruchi, Trichy, Waiver | Leave a Comment »

BJP seals triumph in MCD polls, shuts out Congress : Op-Ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

தில்லி மாநகராட்சித் தேர்தல்

தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.

புதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.

தில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.

தில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.

புதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.

புதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.

==============================================================
மீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா!

நீரஜா செüத்ரி

மீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.

கேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.

தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்?

இந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.

இப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.

தேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.

தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.

முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.

வெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.

தமிழில்: சாரி.
==============================================================

Posted in Advani, Anti-incumbent, Bajpai, Bajrang Dal, BJP, BSP, Campaign, Cassette, Civic, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corporation, Delhi, Elections, Hindu, Hinduism, Incumbency, Islam, Local Body, MCD, Mid-term, minority, Municipal, Municipality, Muslim, New Delhi, Polls, Punjab, Rajnath, Rajnath Singh, RSS, Slander, Terrorism, UP, Utharanchal, Uttar Pradesh, Uttaranchal, Vajpayee, VHS, video | Leave a Comment »

DMK party official attacks Government Officers for omitting his name

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2007

அமைச்சர் முன்னிலையில் அதிகாரிகளை தாக்க முயன்ற திமுக நிர்வாகி

புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், மத்திய இணை அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் அலுவலர்களைத் தாக்க முயன்றதாக திமுக மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு திட்டப் பணிகள் தொடக்க விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இவ்விழாவுக்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும் திமுக மாவட்ட பொருளாளருமான த. சந்திரசேகரன் பெயர் இடம்பெறவில்லையாம்.

இதனால் விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே விழா மேடையிலிருந்த ஒன்றிய ஆணையர் மாரியப்பனிடம் சந்திரசேகரன், “ஏன் எனது பெயர் இடம்பெறவில்லை’ எனத் திட்டியதோடு தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்: இந்நிலையில், விராலிமலை ஒன்றிய ஆணையர் மாரியப்பன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபில்சாரட்கரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Posted in abuse, Ceremony, Chandrasekaran, Collector, District, District Secretary, DMK, Fame, Function, Government, Local Body, Mariappan, Mariyappan, Minister, Petty, Police, Politics, Power, Raghupathi, Raghupathy, Ragupathi, Ragupathy, Secretary, Viraalimalai, Viralimalai | Leave a Comment »

Krishna Canal project farmland acquisition – Poonamallee Taluk office furniture as compensation

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.

ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

Posted in Aalandhoor, Aalandhur, acquisition, Agriculture, Alandoor, Alandur, Asset, Canal, Collector, Compensation, Court, Dam, encroachment, Farmer, Farming, Farmlands, Finance, Government, Govt, Irrigation, Judge, Justice, Krishna, Lake, Land, Law, Local Body, Municpality, Mylapore, Officer, Order, Poonamallee, Poondi, Poonthamallee, Poonthamalli, Poovirunthavalli, Property, Ransack, revenue, River, Scheme, SEZ, Taluk, Thiruvalloor, Thiruvallur, Water, Weird | Leave a Comment »

Municipality power consumption – Self sufficiency, Water Distribution, Alternate Energy

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கட்டிக் கொடுத்த சோறு

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.

ஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.

உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.

தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.

இரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.

குடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

சூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

====================================================================
தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்

சென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.

இத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.

ஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
====================================================================
காவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.

நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.

========================================================================
இணைந்தால் வளர்ச்சி

ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.

முதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.

இது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
=====================================================================

————————————————————————————————-
தாகம் தணியும் நாள் எந்நாளோ?

உ.ரா. வரதராசன்

வெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.

“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்!” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏற்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.

உயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~

  1. சுத்தமான குடிநீர் வழங்குவது,
  2. கழிவு நீரை அகற்றுவது,
  3. உடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.

மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன?
வளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.

வீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:

வாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.

வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.

இளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.

இந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா?

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.

ஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.

தாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது? நிதிப்பற்றாக்குறையா?

குடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)

“ஓ, இவ்வளவு பெரிய தொகையா? என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான்! பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே! எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே!

உலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ?..

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

Posted in Alternate, Analysis, Aquafina, Arms, Backgrounder, Backgrounders, Bathroom, Bills, Bio, Bottled, Budget, Cauvery, Charges, Coke, Crap, Dasani, defecate, Developed, Developing, Diarrhea, Distribution, Drinking, Electricity, energy, Environment, Excrement, Expensive, Exploit, Fights, Finance, Fine, Gold, Govt, Ground, HR, Hunger, Income, Interlink, Interlinking, Kaviri, Local Body, Loss, Municipality, Nations, oil, Op-Ed, Options, Pee, Pepsi, Plans, Pollution, Poop, Power, Private, Privatization, PWD, Restroom, Revenues, River, Sand, Schemes, Shit, Soda, Solar, solutions, Tax, Toilets, Urine, Water, Weapons, World | 4 Comments »

Chickenpox & Measles epidemic in Chennai – Medical Treatment options

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னையில் பரவுகிறது சின்னம்மை

சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’), தட்டம்மை (“மீஸில்ஸ்’) பரவத் தொடங்கியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை – தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னம்மை – தட்டம்மை பரவுவதற்கான காரணம், பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை, உணவு முறை, தடுத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

அறிகுறிகள் என்ன? “”பருவ மாற்றம் (கோடை) காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸôல் சின்னம்மை பரவுகிறது. லேசான காய்ச்சல், உடலில் பொதுவாக மார்பகத்தில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். முன்புபோல் இல்லாமல் அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.

“ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.

சுய மருத்துவம் கூடாது: அம்மை குறித்துச் சந்தேகம் எழும் நிலையில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அம்மை காரணமாக நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அம்மையுடன் மூச்சுத் திணறலோ அல்லது நினைவிழத்தலோ ஏற்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

உணவு முறை: அம்மையால் பாதிக்கப்படும் நிலையில் காரம் – மசாலா இல்லாத உணவைச் சாப்பிட வேண்டும். தயிர் சாதம் நல்லது. கீரை, கேரட் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. அரிப்பு ஏற்படும் நிலையில் கொப்புளங்களை கிள்ளுவது கூடாது. இருமினால், தும்மினால்கூட காற்றின் மூலம் அம்மை வைரஸ் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமையில் வைத்துப் பராமரிப்பது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் நோயாளி ஓய்வு எடுக்க வேண்டும்.

தடுப்பூசி உண்டு: ஒருவருக்கு சின்னம்மை வந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அம்மை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள மிக அவசியம் ஏற்படும் நிலையில் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் இதன் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

========================================================
அம்மையை விரட்டும் சிறுங்கி பற்பம்

சென்னை, மார்ச் 12: சின்னம்மை உள்பட எல்லாவித அம்மையையும் போக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.

“”அம்மையால் பாதிக்கப்பட்டு உறுதியாகிவிட்ட நிலையில், நோயாளியை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமலேயே சித்த மருந்துக் கடைகளில் உறவினர்கள் சிறுங்கி பற்பத்தை (வெண்மையான பவுடர்) வாங்கி நோயாளிக்குக் கொடுக்கலாம். இந்த பற்பத்தை இரண்டு சிட்டிகை அளவு, காலை-மாலை இரு வேளை பாலில் கலந்து நோயாளிக்கு ஒரு வாரம் கொடுத்தால் அம்மை மறையும். நோய் வராமல் தடுத்துக் கொள்ள மற்றவர்களும் இந்த பற்பத்தைச் சாப்பிடலாம்.

அலோபதி மருந்துகள் சாப்பிட்டாலும்கூட இந்த பற்பத்தைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் அம்மை காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள உள் சூட்டை இந்த பற்பம் குணப்படுத்தும். வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் வேப்ப இலையைப் பரப்பி நோயாளி படுப்பது நல்லது.

அம்மை பரவாமல் தடுக்கும் ஆற்றலும் வேம்புக்கு உண்டு’ என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
=============================================

சின்னம்மை நோய் தாக்கிய மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதலாம்

சென்னை, மார்ச் 12: சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“”பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் யாராவது திடீரென்று சின்னம்மையால் பாதிக்கப்பட்டு, தேர்வு எழுதும் நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காகத் தனி அறை, மேசை, நாற்காலி அளிக்கப்படும். தனியாக அவருக்கென்று ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்” என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

“”நன்றாகப் படிக்கும் மாணவர் இந்நோய் காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படா விட்டால், அவருக்கு ஓராண்டு வீணாகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர் தேர்வு எழுதலாம். மருத்துவர்கள் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோயுற்றவரை நேரில் கண்டறிந்து தேர்வுக்கூட மேற்பார்வையாளரே தெரிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என்றும், எனினும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலாத நிலையில் உள்ளவர் யாரும் தேர்வு எழுத முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

===================================================

சின்னம்மை: சென்னையில் 410 பேர் பாதிப்பு

சென்னை, மார்ச் 16: சென்னையில் சின்னம்மை நோயினால் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 133 பேர் பாதிக்கப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது குறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

“”சின்னம்மை நோய் 15 வயதுக்குள்பட்டவர்களை அதிகமாகத் தாக்கும் தன்மை உடையதால் குழந்தைகள் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

சின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு “ஏசைக்ளோவீர்’ எனப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மருத்துவர் மேற்பார்வையில் 5 நாள்களுக்கு இம் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் 1.36 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்நோய் தாக்கியவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியினால் அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரவே வராது. பள்ளிகளில் சிறுவர்களை தினசரி பரிசோதித்து, தோலில் சிவந்த தடிப்புகளோ, கொப்புளங்களோ காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு அளித்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

=====================================================

யாருக்கு சின்னம்மை வராது?

சென்னை, மார்ச் 26: குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.

இதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.

சின்னம்மை தடுப்பூசி நல்லது: சின்னம்மை வராமல் தடுத்துக் கொள்ள தடுப்பூசி உள்ளது; ஆனால் சின்னம்மை வந்த பிறகு இந்தத் தடுப்பூசி பலன் தராது. சின்னம்மை தடுப்பூசி மருந்தின் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

கர்ப்பிணிகளே உஷார்…: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.

வீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
====================================================================================
15 மாவட்டங்களில் சின்னம்மை நோய்: அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை

சென்னை, மார்ச் 26: சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’) பரவியுள்ளது.

கோடை காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸ் மூலம் 10 தினங்களுக்கு முன்பு சின்னம்மை சென்னையில் பரவத் தொடங்கியது. சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 535 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும்…: ஆரம்ப சுகாதார மைய பதிவேடுகளின் அடிப்படையில் வேலூர், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மேற்சொன்ன மாவட்டங்களில் தலா 25 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.

மாத்திரை இலவசம்: “ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் 5 நாள்களில் சின்னம்மை குணமாகும். அனைத்து 1,417 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இந்த மாத்திரையை இலவசமாக விநியோகிக்க அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

ஒரு நோயாளிக்கு ரூ.1000 செலவு: மருந்துக் கடைகளில் ஒரு “ஏசைக்ளோவீர்’ மாத்திரையின் விலை ரூ.8.56. சின்னம்மை வந்துவிட்டால் 5 நாள்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளை மாத்திரை சாப்பிட வேண்டும்; இதனால் ரூ.1,000 அளவுக்கு மருத்துவச் செலவு ஆகும். ஆக, ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒரு நோயாளிக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.

விழிப்புணர்வு பிரசுரங்கள்: சின்னம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க நோயின் அறிகுறிகள், நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச மாத்திரை, கேரட் உள்பட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.

மூச்சுத் திணறல், நினைவிழத்தல் ஏற்படும் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பி. பத்மநாபன்.

Posted in Acyclovir, Allopathy, Ammai, Ayurveda, Ayurvedha, Chennai, Chicken pox, Chickenpox, Child, Costs, cure, Doctor, Environment, epidemic, Health, Healthcare, Herbal, Infection, Injection, Kid, Local Body, Madras, Measles, medical, Natural, Outbreak, Prevention, Tablet, Treatment, unaani, Unani, Yunaani, Yunani | 2 Comments »

Chennai Municipality Corporation Budget – No new Taxes

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னை மாநகராட்சி: வரி உயர்வு இல்லாத உபரி பட்ஜெட்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வரி விதிப்பு, நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்பந்தம்.

சென்னை, மார்ச் 13: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரி உயர்வும் இல்லாத 2007-08ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை வரி விதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தம் தாக்கல் செய்தார். இதன்படி புதிய வரிகள் இல்லை. பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பட்ஜெட்டில் ரூ. 2.67 கோடி உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும், மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது: வரும் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, தற்போது நடைமுறையில் உள்ள சொத்து வரி உள்பட எந்த வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை.

2007-08ம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் 702.03 கோடியாக இருக்கும். செலவு 699.36 கோடியாக இருக்கும்.

புதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் உள்ள 296 கிலோ மீட்டர் சாலைகள் ரூ. 90 கோடியில் சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தப்படும். மக்கள் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 350 நிறுத்தங்களில் இத்தகைய நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள்: சென்னையில் பெருகிவரும் பாதசாரிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 15 இடங்களில் இத்தகைய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதிநவீன நிழற்குடை, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் (பி.ஓ.டி.) தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்.

சாலைகள் மேம்பாடு: மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து சாலைகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி பழுதடைவதைத் தவிர்க்க ரூ. 4 கோடியில் மாஸ்டிக் ஆஸ்பால்ட் கான்கிரீட் அமைக்கப்படும்.

அனைத்து உட்புறச் சாலைகளும் ரூ. 73 கோடியில் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.

புதிய மேம்பாலங்கள்: சென்னை எழும்பூர் ஆன்டர்சன் பாலம் அருகில் எத்திராஜ் சாலை- கிரீம்ஸ் சாலையையும் இணைக்கும் வகையில் கூவத்தின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு அருகில் எல்.சி. 1 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்.

வேளச்சேரி, அரும்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: 1,146 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையம்: சென்னையில் தற்போது 115 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்த ஒவ்வொரு மண்டலத்திலும் தனியான கட்டடம் கட்டித்தரப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களில் முதல் 25 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அவர்களின் படிப்பு முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

முதியோர், ஊனமுற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி தாய்சேய் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள் அமைக்கப்படும் என்றார் மேயர்.

Posted in Anganvadi, Anganwadi, Bonds, Budget, Chennai, Child, Children, Civic, Coporation, DMK, Economy, Education, Expenses, Finance, Flyovers, Healthcare, Income, IT, Kids, Loans, Local Body, Loss, Ma Subramanian, Maintenance, Mayor, MK Stalin, Municipality, Planning, Profit, Radha Sambandham, Revenues, Rippon, Rippon Building, Roads, Schemes, Schools, Stalin, Streets, Surplus, Tax, Taxes, TN, Welfare, Women | 1 Comment »

Madurai Collector T Udayachandran transfer & impact on Paappapatti, Keeripatti

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

மதுரை ஆட்சியர் மாற்றம் எதிரொலி: கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?

மதுரை, பிப். 21: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரனின் பணியிட மாற்றம், மாவட்ட அளவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, பத்து ஆண்டுகளாக ஜனநாயகப் பாதைக்கு வராமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தி அவர் சாதனை படைத்தார்.

தற்போது அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, அந்த மூன்று ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியராக த. உதயச்சந்திரன் பதவி ஏற்றபின் கிராமப்புற மேம்பாட்டிலும், சுகாதார மேம்பாட்டிலும் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினார்.

இந் நிலையில் அவரது பணி மாற்றம் அந்த கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

மதுரை ஆட்சியர் மாற்றம்; தொடரும் சிக்கல்: விடுப்பில் சென்றார் புதிய ஆட்சியர்

மதுரை, மார்ச் 1: மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் மாற்றத்தை அடுத்து புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற டி. கார்த்திகேயன் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாமணி, மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த த.உதயச்சந்திரன் கடந்த 20-ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி இடமாறுதல் செய்யப்பட்டார்.

அவரது மாறுதலைக் கண்டித்து பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர். உசிலம்பட்டி பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.மோகன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், மாறுதல் வெளியான மறுதினமே புதிய ஆட்சியராக டி.கார்த்திகேயன் பதவியேற்றார். பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து அவர்களது போராட்டத்தைக் கைவிடுமாறு சமரசம் செய்யப்பட்டது.

இக் கிராமங்களுக்கு புதிய ஆட்சியர் நேரில் சென்று கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, 5 நாள் விடுப்பில் சென்ற அவர், தற்போது தமது விடுப்புக் காலத்தை மேலும் 15 நாள் நீட்டிப்பு செய்துள்ளார். இதை அரசு ஏற்றுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன் நீடிப்பாரா என்ற சந்தேகம் மாவட்ட நிர்வாகத்தில் எழுந்துள்ளது.

Posted in B Mohan, BJP, Civic, Collector, Communist, CPI(M), D Karithikeyan, D Karthigeyan, D Karthikeyan, Dalit, District Collector, DMK, Erode, Government, Karithigeyan, Keeripatti, Leaders, Local Body, Madurai, Madurai Collector, Marxist, MDMK, Municipality, Naattarmanagalam, Nattarmanagalam, Officials, Paappapatti, Pappapatti, Politics, Rajamani, T Karithikeyan, T Karthikeyan, T Udayachandran, VaiKo | Leave a Comment »

Electronic Voting Machines – Chennai civic elections lawsuit adjourned

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கோரும் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

சென்னை, பிப். 7: சென்னை மாநகராட்சி மன்றத்தில் 100 வார்டுகளுக்கு நடக்கவிருக்கும் மறுதேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துமாறு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் இவ்வழக்கைத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்தனர். அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் சார்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி. பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபிறகு இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதால், இம்மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தேர்தல் நடத்த 4,830 வாக்கு இயந்திரங்கள் தேவை. அதற்காக 11,050 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும். வரும் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நடைமுறைகளை மேற்கொள்ள போதுமான அவகாசம் இல்லை. எனவேதான் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தேர்தலை விடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கப்பட்ட கடந்த தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதை யாரும் குறை சொல்லவில்லை. அது மட்டுமின்றி மின்னணு வாக்கு இயந்திரத்திலும் நம்பிக்கை இல்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன என்றும் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி வாதாடினார்.

மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் எல்.என். ராஜா வாதாடினார். வாக்கு இயந்திரங்களை உடனே பயன்படுத்த நம்மிடம் திறமை உள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என்றார் அவர்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Posted in AB Shah, abuse, AK Venkatasubramanian, Ballot Paper, BEL, Bharath Electronics, Booth, booth capturing, civic elections, Corruption, DMK, EC, election commission, Electronic Voting Machines, EVM, G Masilamani, Government, K Chandru, Law, LN Raja, Local Body, Municipality, Order, Polls, Power, voter | Leave a Comment »

Shiv Sena-BJP on top in Maharashtra, Congress-NCP humbled

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி

மும்பை, பிப். 3: மகாராஷ்டிர மாநிலத்தில் 10 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், மும்பை மாநகராட்சியையும் பெரும்பாலான நகராட்சிகளையும் சிவசேனை -பாஜக கூட்டணி மீண்டும் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

சிவசேனைக் கட்சியில் இருந்து முன்னாள் துணை முதல்வர் நாராயண் ராணே கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்ததாலும், பால் தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ் தாக்கரே விலகியதாலும், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வந்த சிவசேனை -பாஜக கூட்டணிக்கு இது வியப்பூட்டும் வெற்றியாகும்.

மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், முன்னணியில் உள்ள வார்டுகள் உள்பட மொத்தம் 112 வார்டுகள் சிவசேனை -பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 65 இடங்களிலும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.

மும்பையின் புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் அமைந்துள்ள சிவசேனைக் கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் இல்லத்துக்கு வெளியே கூடிய ஏராளமான கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

நாசிக்: நாசிக் நகராட்சியில், மொத்தமுள்ள 108 இடங்களில், சிவசேனை -பாஜக கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைத்துள்ள போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

நாக்பூர்: நாக்பூர் நகராட்சியில், மொத்தமுள்ள 136 இடங்களில், 57 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கு காங்கிரஸýக்கு 32 இடங்கள் கிடைத்துள்ளன.

புணே: புணே நகராட்சியில், மொத்தமுள்ள 144 இடங்களில், 42 இடங்களை வென்று தேசியவாத காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி ஆகியுள்ளது. காங்கிரஸýக்கு 35 இடங்கள் கிடைத்துள்ளன.

பிம்ப்ரி -சிஞ்ச்வாடு: பிம்ப்ரி -சிஞ்ச்வாடு நகராட்சியில் மொத்தமுள்ள 105 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் 60 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் 20 இடங்களில் வென்றுள்ளது.

சோலாபூர்: சோலாபூர் நகராட்சியில் மொத்தமுள்ள 98 இடங்களில், 40 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தனிப் பெரும் கட்சி என்ற நிலையை அடைந்துள்ளது. அங்கு தேசியவாத காங்கிரஸýக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.

தாணே, உல்லாஸ்நகர், அகோலா, அமராவதி ஆகியவை தேர்தல் நடைபெற்ற மற்ற நகராட்சிகள் ஆகும்.

சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைக்காதது தவறு -காங்கிரஸ்: சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்காதது காங்கிரஸ் கட்சி செய்த தவறு என முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.

கூட்டணிக்கு முயற்சி எடுத்தோம். ஆனால் அது கைகூடவில்லை என்றார் அவர்.

நகர்ப் பகுதிகளில் கட்சியின் தளத்தை விரிவாக்க தமது கட்சியினர் முயற்சி எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

மும்பை தேர்தல்

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்பதை மும்பை பெருநகர மாநகராட்சிக்கும் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கும் நடந்துள்ள தேர்தல்கள் காட்டியுள்ளன.

சிவசேனைக் கட்சி பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கருதியது. அது தவறு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் பலம் பெற்று வருவதாகவும் ஆகவே மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இனி ஒதுக்கி வைக்கலாம் என்றும் காங்கிரஸ் நினைத்தது. அதுவும் தவறாகிவிட்டது.

சிவசேனை பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கணக்குப் போட்டதற்குக் காரணங்கள் உண்டு. சிவசேனைக் கட்சியானது 40 ஆண்டுகளாக பால்தாக்கரே தலைமையில் இயங்கி வருவதாகும். 2005-ல் அக் கட்சியின் முக்கியப் பிரமுகர் என்று கருதப்பட்ட நாராயண் ரானே அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அது போதாது என சிவசேனைக் கட்சியில் பிளவு ஏற்பட்டு பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே தனிக் கட்சி அமைத்தார். நாராயண் ரானேயுடன் சேர்ந்து காங்கிரஸýக்குத் தாவிய எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றனர்.

இத் துணைத் தேர்தல்களில் சிவசேனைக் கட்சி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ரானேயின் வருகையால் காங்கிரஸ் கட்சியின் பலம் 77-ஆக அதிகரித்தது. இதன் பலனாக பவாரின் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாகியது. இப் பின்னணியில்தான் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பவார் கட்சியுடன் கூட்டுசேராமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முற்பட்டது.

தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறின. இதைப் பொய்ப்பித்து சிவசேனை-பாஜக கூட்டணி இந்த மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.

பால்தாக்கரேயின் வெற்றிக்குக் காரணங்கள் உண்டு. முதலாவதாக, எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நின்றன. தவிர முந்தைய மாநகராட்சியில் உறுப்பினர்களாக இருந்த 58 பேரை சிவசேனைக் கட்சி மீண்டும் நிறுத்தாமல் துணிந்து உரிய வேட்பாளர்களை நிறுத்தியது. அத்துடன் பால்தாக்கரே தமது ஆவேசப் பேச்சு மூலம் மக்களைக் கவர்பவர். தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சுமார் 46 சதவீத வாக்காளர்களே வாக்களித்து உள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 2002-ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் சிவசேனை – பாஜக கூட்டணியின் பலம் இத்தடவை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், அக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிட்ட வேண்டுமானால், அது சுயேச்சைகளின் உதவியை நாடியாக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

ஆனால் சிவசேனை – பாஜக கூட்டணியின் வெற்றி பெரிதாகத் தெரிவதற்கு முக்கியக் காரணம் அண்மையில் சிவசேனைக் கட்சிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளே.

மகாராஷ்டிரத்தில் பிற மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் காங்கிரஸýக்கு ஆறுதல் அளிப்பவையாக இல்லை. பவார் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்பட்ட அகோலா நகரில்தான் அக் கூட்டணி பதவியைப் பிடித்துள்ளது. நாகபுரியில் காங்கிரஸ் பதவி இழந்தது. இதற்கு உள்கட்சி சண்டையே காரணம். புணேயில் காங்கிரஸýக்கு பலத்த சரிவு. அமராவதியிலும் சோலாப்பூரிலும் பவார் கட்சியின் தயவில் காங்கிரஸ் பதவியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சியானது தனது கூட்டணிக் கட்சிகளை அவ்வப்போது உதாசீனம் செய்வது தவறு என்பதையே இத் தேர்தல்கள் காட்டியுள்ளதாகச் சொல்லலாம்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் புகட்டும் பாடம்

நீரஜா செüத்ரி – தமிழில்: சாரி.

மகாராஷ்டிரத்தில் நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தல் முடிவால் அங்கு ஆட்சி கவிழப் போவதும் இல்லை, தலைமையில் மாற்றம் வரப்போவதும் இல்லை; ஆனால் அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அது புகட்டும் பாடம் ஒன்று உண்டு.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது அவசியம் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்கள் பலர் ஆரம்பம் முதலே வற்புறுத்தினர்.

கட்சியின் மாநிலத் தலைவர் பிரபா ராவ், மும்பை தலைவர் குருதாஸ் காமத், மகாராஷ்டிர காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய பொதுச்செயலர் மார்கரெட் ஆல்வா ஆகியோர்தான் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு தனது வலிமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இனி கட்சிக் கூட்டத்தில் தோல்வியை ஆராயும்போது இவர்களின் தலைகள் உருளக்கூடும்.

மும்பை மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் குருதாஸ் காமத்தும் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலும் பகிரங்கமாக தேர்தல் சமயத்தில், குழாயடிச்சண்டைபோல சவால்விட்டுப் பேசிக்கொண்டதன் மூலம் கூட்டணிக்குள் பூசல் இருப்பது உறுதியானது.

இந்தத் தேர்தல் முடிவு பல உண்மைகளை உணர்த்துகிறது. கூட்டணிதான் நல்ல வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது என்பது முதலாவது உண்மை. இதை காங்கிரஸ் மறக்காமல் இருக்கும்போதெல்லாம் அதற்கு வெற்றி கிட்டுகிறது. அந்த கால செல்வாக்கு இன்னமும் தொடருவதாக பிரமையில் ஆழ்ந்து, தனித்துப் போட்டியிடும்போதெல்லாம் தோல்வியே கிட்டுகிறது.

கூட்டணியால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பதை அனுபவத்தில் முதலில் உணர்ந்தவர் ஜெயலலிதாதான். 1998 தேர்தலில் மதிமுக, பாமக போன்ற சிறிய கட்சிகளைக்கூட ஒன்றுவிடாமல் தனது அணியில் சேர்த்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். கடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது கூட மதிமுகவை தன் பக்கம் ஈர்த்து, தனக்கு படுதோல்வி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் விட்டதுடன், சமூகங்களுடனான சுமுக உறவையும் இழந்து நின்றது. முதல் முறையாக, எந்த ஒரு தலித் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டது. கைர்லாஞ்சி சம்பவத்தால் கொதித்துப் போய் இருக்கும் தலித்துகள், காங்கிரஸ் கட்சி அதைக் கையாண்ட விதத்தால் மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை, மாலேகாம் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் ஏராளமான முஸ்லிம்களை மாநிலப் போலீஸôர் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் முஸ்லிம்களின் ஆதரவு காங்கிரஸýக்குக் குறைந்துவிட்டது. குருதாஸ் காமத்தின் தொகுதியிலேயே ஆறு வார்டுகளில் 4 வார்டுகளில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு மாநிலத்துக்கு இணையான பட்ஜெட் போடும் அளவுக்கு மும்பை மாநகரம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு சரியான கூட்டணியை ஏற்படுத்த காங்கிரஸýம் தேசியவாத காங்கிரஸýம் தவறவிட்டதுதான் விந்தையானது.

மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 225 வார்டுகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. 2 வார்டுகள் தொடர்பாகத்தான் இழுபறி ஏற்பட்டது. அந்த இரண்டில்கூட தோழமை உணர்வோடு தனித்தனியாக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை முதலில் எடுத்தது.

இதற்கு உள்நோக்கமும் இருக்கலாம். மகாராஷ்டிர அரசியலில் பழம்தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான சரத் பவார், காங்கிரஸ் கட்சி பலம் பெறுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. பிம்ப்ரி-சின்ச்வாட் நகரை தேசியவாத காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுவிட்டது. புணேயில் காங்கிரûஸவிட பவார் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி.

2009-ல் மூன்றாவது அணி அமைக்க பவார் முயற்சி செய்கிறார். அப்படி அது வலுவாக அமைந்தால் காங்கிரúஸô, பாரதீய ஜனதாவோ அதை ஆதரித்துத்தான் தீர வேண்டும். சரத்பவார் அளவுக்கு அரசியல் சாதுர்யம் உள்ள தலைவர் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதே அதன் மிகப்பெரிய பலவீனமாகும். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே பாரதீய ஜனதாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். மராத்திய இனத்தின் சுயமரியாதை குறித்துப்பேசி மக்களின் இன உணர்வைத் தூண்டினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடி, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னமும் மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதற்காக குடியரசுத் தலைவர் கலாமையே தாக்கிப் பேசினார்.

பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் வெளியாகியிருக்கும் இத் தேர்தல் முடிவுகள் சிவசேனை, பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

தமிழில்: சாரி.

Posted in Bal Thackeray, BJP, BMC, Bombay, Brihanmumbai Municipal Corporation, Chaari, Civic Polls, Coalition, Cong (I), Congress, Congress (I), Elections, Indira Congress, Local Body, maharashtra, Maharashtra Navnirman Sena, MNS, Mumbai, Municipality, Narayan Rane, Nationalist Congress Party, NCP, Neeraja Chowdhry, Op-Ed, Opinion, Party, Politics, Polls, Raj Thackeray, Sharad Pawar, Shiv Sena, Tamil, Vilasrao Deshmukh, Winner | Leave a Comment »

Electronic Voting Machines to be used at 25% of Voting booths in Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

பழனி, பிப். 3: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது 25 சதவீத இடங்களில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வாசுகி, எஸ்.பி. பாரி, டி.ஆர்.ஓ. பெர்னாண்டஸ், ஆர்.டி.ஓ. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறியது: தமிழகத்தில் காலியாகவுள்ள 533 பதவிகளுக்கு வரும் 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத் தேர்தலின் போது முதன் முறையாக சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்குச் சீட்டுகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும். தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ள வாக்குகளை காட்டிக்கொடுக்கும் ஏற்பாட்டுடன் உ.பி.யில் வாக்குப்பதிவு!: தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்

லக்னெü, மார்ச் 2: கள்ள வாக்குகளைப் போடவிடாமல் தடுக்கும் ஏற்பாட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசாமி.

மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய லக்னெüவுக்கு வியாழக்கிழமை வந்த கோபாலசாமி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

“மாநிலத்தில் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி சராசரியாக 70% முதல் 71% வரைதான் நிறைவேறியிருக்கிறது. இது 90% முதல் 95% வரை நடைபெறாமல் தேர்தல் நடைபெறாது. எனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் என்ன செய்வது என்பது, அப்படி வழங்க முடியாத நிலை ஏற்பட்டால் -அதன் பிறகு தெரிவிக்கப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிய அம்சங்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் இம் மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் முதல்முறையாக பயன்படுத்தப் போகிறோம். அவற்றில் 2 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 1. கண்பார்வை அற்றவர்களும் தொட்டு உணரும் வகையிலான எண்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். 2. ஒவ்வொரு வாக்கு பதிவானதும் அந்த வாக்கு அளிக்கப்பட்ட நேரமும் சேர்ந்தே பதிவாகும். இதனால் வாக்குப்பதிவு எப்போது தொடங்கியது, எப்போது முடிந்தது என்பது தெரிந்துவிடும். வாக்குப் பதிவு முடிந்து சீல் வைத்த பிறகு அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை யாரும் முறைகேடாகப் பயன்படுத்த முடியாது. இப்படி சில ரகசிய ஏற்பாடுகள் அதில் உள்ளன. எனவே முறைகேடுகள் தவிர்க்கப்படும். அப்படி நடந்தால் இயந்திரமே சொல்லிவிடும் (மெஷின் போலேகா!).

வாக்குச் சாவடியில் மத்திய போலீஸ்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படைதான் காவல் பணியில் ஈடுபடுத்தப்படும். எனவே தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறும்’ என்றார் கோபாலசாமி.

Posted in ADMK, Amar Singh, Amitabh, Anomaly, Assembly, BJP, booth capturing, Boothcapturing, BSP, candidate, Chennai, Chief Election Commissioner, civic elections, Commissioner, Congress, DMK, EC, Elections, Electorate, Electronic Voting, EVMs, Gopalasami, Gopalasamy, Gopalsami, Gopalsamy, Jayaprada, Local Body, Madras, MDMK, Mulayam, Municipal, Party, Politics, Polling Booth, Polls, SJP, UP, Voting Machines | Leave a Comment »

DMK & Congress(I) negotiations continue for Mayor candidate Election

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

மாநகராட்சி மேயர் பதவி: திமுக – காங். போட்டி

சென்னை, அக். 23: தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

இதில் 4 மேயர் பதவிகள் திமுகவுக்கும் 2 மேயர் பதவிகள் காங்கிரஸýக்கும் என தேர்தலுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது. இருப்பினும் எந்த மாநகராட்சி யாருக்கு என்பதை தேர்தலுக்குப் பிறகு தீர்மானிக்கலாம் என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

ஆனால் தற்போது எந்த இரு இடங்களை காங்கிரஸýக்கு ஒதுக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் தலைவர் பதவிகளிலும் யாருக்கு எந்த ஊர் என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மேயர் பதவியில் மட்டும் யாருக்கு எந்த இடம் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

சென்னையில் திமுக 90 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, சென்னையில் திமுகவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இதுபோல் மதுரை மாநகராட்சியிலும் திமுவைச் சேர்ந்தவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எஞ்சியுள்ள 4 இடங்களில் 2 காங்கிரஸýக்கு ஒதுக்கவேண்டும். திருச்சி, கோவை மேயர் பதவிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த இரு இடங்களையும் உள்ளூர் திமுகவினர் கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக 4 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை: எல்லா மாநகராட்சிகளிலும் திமுக வலுவான வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக திருச்சி, கோவை மாநகராட்சிகளிலும் திமுக கவுன்சிலர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கோவையில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே உள்ளூர் திமுகவினர் கோவை மேயர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

சேலம், திருநெல்வேலியை காங்கிரஸýக்கு ஒதுக்கலாம் என்றும் திமுகவினர் யோசனை தெரிவிக்கின்றனர். ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க மறுக்கிறது.

இந்நிலையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கூட்டணித் தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே மேயர், நகராட்சித் தலைவர் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தனிப்பட்ட முறையில் எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்பதை கணக்கில் கொள்ளாமல் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் அனைவரும் பாடுபடவேண்டும் என்று திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Posted in Alliance, candidate, Chennai, Civic, Coimbatore, Congress(I), DMK, Elections, Local Body, Madurai, Mayor, negotiations, Polls, Salem, Thirunelveli, Trichy | Leave a Comment »