Aravind Adiga: Novel About India Wins the 2008 Man Booker Prize: The White Tiger
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008
சென்னையில் பிறந்த இந்திய எழுத்தாளருக்கு புக்கர் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது
![]() |
![]() |
புக்கர் பரிசு பெறும் அரவிந்த் அடிகா |
உலகளவில் இலக்கிய வட்டாரத்தில் மதிப்பு வாய்ந்த ஒரு விருதாகக் கருதப்படும் மான் புக்கர் பரிசு இந்த ஆண்டு இந்திய எழுத்தாளரான அரவிந்த் அடிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
33 வயதான அடிகா சென்னையில் பிறந்து தற்போது மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டின் பரிசுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்த ஆறு பேரில். மிகவும் வயது குறைந்தவர் அடிகாததான்.
கிராமத்து ஏழ்மையிலிருந்து மீண்டு நகரத்தில் வளமான வாழ்க்கைக்கு உயர்ந்த ஒரு மனிதனின் கதைதான் வெள்ளைப் புலி புதினத்தில் கூறப்பட்டுள்ளது.
எமாற்றுதல், ஊழல் மற்றும் இறுதியாக கொலையின் மூலமே ஒருவன் எவ்வாறு இப்படி உயர்ந்தான் என்பதை அந்தப் புதினம் வெளிக் கொண்டு வருகிறது.
யாருக்கு பரிசு என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமான விடயமாக இருந்தது என்றும் எனினும் வெள்ளிப் புலி புதினம் ஆழமான உண்மைகளை கொண்ட ஒரு புத்தகம் என்று தேர்வுக் குழுவின் தலைவரான மைக்கேல் போர்ட்டிலோ கூறினார்.
R A J A said
Congratulations Adika