Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Book Fair’ Category

30th Madras Book Fair: Chennai Book Exhibition – Kalainjar Visit & Hotsellers

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

புத்தகக் காட்சியில் முதல்வர்: பழைய நினைவுகளில் மூழ்கினார்

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள “”கலைஞர் கருவூலத்தின்” புகைப்படக் கண்காட்சியினை சனிக்கிழமை பார்வையிடுகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் (இடமிருந்து) தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை.முருகன்.

சென்னை, ஜன. 21: 30-வது சென்னை புத்தகக் காட்சிக்கு, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வந்தார். காட்சி அரங்குகளை 1 மணி நேரத்துக்கும் மேலாக பார்வையிட்டார்.

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் கருணாநிதி கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரால் புத்தக் காட்சி அரங்குகளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், புத்தக் காட்சியை சனிக்கிழமை பார்வையிட்டார். காலை 11.15 மணிக்கு மேல் வந்த முதல்வர் பேட்டரி கார் மூலம் புத்தக காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

முன்னதாக, “கலைஞர் அறிவுக் கூடத்தில்’ வைக்கப்பட்டு இருந்த பழைமையான புகைப்படங்களைப் பார்த்து ரசித்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த, முதல்வர் அதுகுறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

அவசரநிலைக் காலத்தின் போது, அண்ணாசாலையில் தான் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததை நினைவு கூரும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் பார்த்தார்.

“சூரியனைப் பற்றி சொல்வதென்றால்’ என்கிற தன்னைப் பற்றிய குறும்படத்தையும் அவர் பார்த்தார்.

புத்தகத் தோட்டத்தில் குறையும் நாவல் சுவை: கண்காட்சி இன்று நிறைவு

சென்னை, ஜன. 21: ஒளவையார் முருகப் பெருமானிடம் நாவல் பழத்தை விரும்பிக் கேட்டதாக கதை உண்டு.

புத்தகக் கடை என்றால் வாசகர்கள் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளைத் தேடிச் செல்வது வரலாறாகி வருகிறது.

புத்தகக் காட்சி மீது படையெடுக்கும் வாசகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது நிஜம்தான். ஆனால், புத்தகம் என்றாலே நாவல்தான் என்ற காலம்தான் மலையேறிவிட்டது.

“”இப்போதெல்லாம் பாட நூல்களைத் தவிர்த்து, வாசகர்களிடம் அதிக வாக்குகள் பெறுவது சுயமுன்னேற்ற நூல்கள்தான்” என்கிறார் ஒரு பதிப்பாளர்.

இந்த ஆண்டு அநேகமாக எல்லா கடைகளிலுமே சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

“”புனைகதைகளை எழுதி வந்த எழுத்தாளர்களில் பலர் இப்போது சுய முன்னேற்றம் குறித்த நூல்களை எழுதுகிறார்கள்” என்றார் அவர்.

புத்தகங்களை அடுத்து, நல்ல விற்பனை ஆவது, மேற்படிப்புக்காக மாணவர்களைத் தயார் செய்யும் வகையில் வெளியிடப்படும் வழிகாட்டி புத்தகங்கள்தான். பாடப் புத்தகங்களுக்கு மாற்றாக “நோட்ஸ்’ எனப்படும் வழிகாட்டி நூல்களைப் படித்தே ஒரு காலத்தில் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று வந்தனர்.

நோட்ஸ் மட்டும் படித்தால் பெருமை அல்ல என்று அக்காலத்தில் கருதப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.

அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு உதவும் கையேடுகள், வழிகாட்டி நூல்கள் அதிகம் விற்பனை ஆகின்றன என்கிறார்கள்.

“”9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பது இத்தகைய நூல்களைத்தான். இது தவிர, டோஃபில், கேட், மாட், ஜி.ஆர்.இ. போன்ற உலக அளவிலான மேற்படிப்புக்குத் தேவையான தேர்வுகளுக்கு வழிகாட்டும் நூல்களையும் மாணவர்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள்” என்கிறார் கல்வியாளரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜகோபாலன்.

பொதுவான நூல்களைப் பொருத்தவரையில் சுயமுன்னேற்றத்தை அடுத்து, பிரமுகர்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆன்மிக நூல்கள் அதிகம் விற்பனை ஆகும் என்று பல பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறை புத்தகக் காட்சியில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது வியப்புக்குரிய விஷயம்.

வாஸ்து சாஸ்திரம், சமையல் கலை, மீன்வளர்ப்பது, மாடி வீட்டுத் தோட்டம் வளர்ப்பது, நாய் வளர்ப்பது போன்ற நூல்களையும் பலர் தேடி வருகிறார்கள் என்று புத்தகக் கடைகளை நடத்தும் சிலர் தெரிவித்தனர்.

சென்னை சேத்துப்பட்டு செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு அடைகிறது.

8 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்: புத்தக கண்காட்சியில் ரூ.8 கோடிக்கு விற்பனை

சென்னை, ஜன. 22- ென்னை பூந்தமல்லி ரோட்டில் புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் புத்தக கண்காட்சி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

11 நாட்கள் நடத்தப்பட்ட கண்காட்சி நேற்று முடிந்தது. தினமும் கண்காட்சியை பார்க்கவும், புத்தகங்கள் வாங்கவும் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் அலை மோதியது.

தென்னிந்திய புத்தக விற் பனையாளர்கள் மற்றும் பதிப் பாளர்கள் சங்க செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

வழக்கமாக அண்ணா சாலை யில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்படும். ஆண்டு தோறும் புத்தக பதிப்பகத்தார் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தக கண்காட்சியில் இடம் பெற பலர் விருப்பம் தெரிவித்தனர். எனவே இந்த ஆண்டு கண் காட்சி நடத்தும் இடத்தை மாற்றினோம். இந்த இடம் வசதியாக இருந்ததால் கூடுதல் ஸ்டால்கள் அமைக்கப்பட் டது. பொதுமக்களும் அதிக அளவில் வந்தனர்.

இந்த அண்டு 8 லட்சம் பேர் கண்காட்சியை கண்டு களித் துள்ளனர். ரூ. 8 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த அண்டு 4 லட்சம் பேர் மட்டுமே வந்த னர். இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. டி.வி. சானல்கள் மோகத்திற் கிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் மக்களிடையே அதி கரித்துள்ளதே இதற்கு கார ணம்.

மாவட்ட வாரியாகவும் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். நெல்லை யில் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

  • ஆன்மீகம்,
  • இலக்கியம்,
  • கம்ப் ïட்டர்,
  • நாவல்கள்,
  • சித்தர் பாடல்கள்,
  • சோதிடம்,
  • தொழில் வளர்ச்சி உள்பட பல வகையான புத்தகங்களை மக்கள் விரும்பி வாங்கி உள் ளார்கள்.

கல்கி எழுதிய பொன்னி யின் செல்வன் வரலாற்று நாவல் 2 ஆயிரத்து 500 பிரதி கள் விற்று தீர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறி னார்.

வாழ்க்கையின் அங்கம் வாசிப்பு

ருத்ரன்

“ஆடை இல்லாதவர் அரை மனிதர்’ என்பது பழமொழி. புதுமொழியாக, நூல் இல்லாதவர் “கால் மனிதர்’ எனலாம்.

எனவே, ஒரு மனிதர், முழுமையடைவதற்கு ஆடை அரை விழுக்காடு உதவுகிறது எனில், நூல் முக்கால் விழுக்காட்டை நிறைவு செய்கிறது.

மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில், புத்தகங்களின் வாசிப்பும், புதிய அனுபவங்களின் சந்திப்பும் அவசியமாகும். நடைமுறை வாழ்க்கையின் சொந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதைப்போலவே, புத்தகங்களின் மூலம், பிறரது அனுபவங்களிலிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற முடியும்.

தன்னை அறிவதற்கும், தன்னைச் சுற்றி இருப்பவர்களை உணர்வதற்கும், உலகைப் புரிந்துகொள்வதற்கும் மனிதனுக்கு வாய்த்த எளிமையான மற்றும் எங்கும் கிடைக்கக்கூடிய சாதனம், புத்தகம்! மேலும், விலையை வைத்து தரத்தை மதிப்பிட முடியாத ஒரே பொருள், புத்தகமேயாகும்.

இரண்டு ரூபாய்க்கான குறுநூல், இருபது ரூபாய்க்கான சிறு நூலைவிடவும், இருநூறு ரூபாய் விலையுள்ள பெருநூலை விடவும் பயன் மிகுந்ததாக இருக்கக்கூடும்.

ஆகவே, விலையிலோ பக்கங்களின் எண்ணிக்கையிலோ மற்றும் அட்டையின் ரகத்திலோ புத்தகங்களின் முக்கியத்துவம் அடங்கியிருப்பதில்லை. மாறாக, புத்தகங்களின் கருத்துகளையும் அவைகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் மாற்றங்களையும் பொருத்து, புத்தகங்களின் தரம் மதிப்பிடப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன; பரவலாக்கப்படுகின்றன; பாதுகாக்கப்படுகின்றன.

ஒரு புத்தகத்தில் உள்ள பல மடங்கு அறிவுச் செல்வத்தைப் பெறக்கூடிய வாசகரே அந்நூலின் உண்மையான மற்றும் தகுதியான வாசகராவார். அவ்வாறன்றி, போகிற போக்கிலும், பொழுதுபோக்கிற்காகவும் வாசிக்கப்படும்போது, நல்ல நூல், அதன் நோக்கத்தை இழந்து விடுகிறது. அத்தகைய வாசகர், காலத்தையும் கருத்தையும் மட்டும் இழப்பதில்லை; நல்ல வாசகர் என்னும் கௌரவத்தையும் இழக்கிறார்.

இந்நிலையில், வெளியாகும் அனைத்து நூல்களையும் படித்துவிட வேண்டுமா? என்னும் கேள்வி எழுகிறது. இயலுமெனில், “படிப்பது நன்று’ என்பதே பதிலாகும். ஆனால், அனைத்தையும் படிக்க இயலாது என்பதே உண்மையாகும். அதனால், நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். தேர்ந்தெடுத்தல் என்பது குறிப்பிட்ட காலத்தின் குறிப்பிட்ட சூழலின் தேவையைப் பொறுத்து அமைவது கூடுதல் பயன் அளிப்பதாகும். அப்போதுதான், நிகழ்கால நிலைமைகள் குறித்த பிறரது பேச்சு, எழுத்து ஆகியவைகளின் நம்பகத்தன்மையையும் போலித்தன்மையையும் புரிந்துகொள்ள முடியும்.

காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் நூல்கள், அவைகளின் உள்ளடக்க வீரியத்தைப் பொறுத்து, எதிர்காலத்திலும் ஏற்கப்படுபவைகளாக விளங்குவதுண்டு. அந்தவகையில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு குறித்த நூல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, அத்தகைய நூல்கள், சாகாவரம் பெற்ற ஆவணங்களாக வர்ணிக்கப்படுகின்றன.

ஆகவே வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும், வாழ்வதற்குக் கற்றுக் கொள்வதற்கும் மட்டுமன்றி, பயனுள்ளதாக்குவதற்கும் வழிகாட்டும் நூல்களை, மனிதனின் அத்தியாவசியப் பொருள்களுள் முதன்மையானதாக்கும் பண்பாட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதன்பொருட்டு, சமூக அக்கறையாளர்களும் சமூக இயக்கங்களும் வாசிப்பு இயக்கத்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்; ஊர்கள்தோறும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி, புதிய வாசகர்களை உருவாக்க வேண்டும்.

மேலும் நாட்டின் வளத்தையும் மக்கள் நலனையும் முன்மொழியும் படைப்புகளை வெளியிடுவதற்கு, மக்கள் பங்களிப்பைப் பெறுவதன் மூலம், வாசிப்புக் கலாசாரத்தை வளர்க்க வேண்டும். சமூகச் சீரழிவு நூல்கள் மற்றும் இதழ்களின் மாய வலையிலிருந்து மக்கள், குறிப்பாக இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

மேற்சொன்ன கூட்டு செயலைப் போன்று, தனிமனிதக் கடமை ஒன்றும் உண்டு. அது நல்ல வாசகராக இருப்பவர், தனது பிள்ளைகளுக்காக நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும், வாசிக்க வைத்தும், நல்ல தாய் அல்லது நல்ல தந்தை என்னும் போற்றுதலுக்கு உரியவராவார்.
7.5 லட்சம் பார்வையாளர்கள் – 1 கோடி புத்தகங்கள் விற்பனை 30-வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: கடைசி நாளில் மக்கள் வெள்ளம்

சென்னை, ஜன. 22: சென்னையில் 30-வது புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 12 நாள்கள் நடைபெற்ற இப் புத்தகத் திருவிழாவுக்கு 7.5 லட்சம் பேர் வரை வந்தனர்.

ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கோடி புத்தகங்கள் விற்பனை ஆனதாக புத்தகக் காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, அண்ணாசாலை காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்றது.

புத்தகக் காட்சியை கடந்த 10-ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். சுயமுன்னேற்றம், நாவல்கள், ஆன்மிகம், குழந்தைகளுக்கானவை என 435 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

எந்தப் புத்தகங்களுக்கு மவுசு:

  • சாப்ட்வேர்,
  • ஜோதிடம்,
  • வாஸ்து உள்ளிட்ட புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தங்களுக்கு உரிய புத்தகங்களை வாங்குவதற்கு பெற்றோருடன் குழந்தைகள் வந்திருந்தனர்.

புதிய இடத்தில் குவிந்த பார்வையாளர்கள்:””விசாலமான இடம் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். அதன்படி, 7.5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர்” என்றார் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கச் செயலர் ஆர்.எஸ்.சண்முகம்.

விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகையால் புத்தகப் பூங்காவில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வார நாள்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மடங்காக அதிகரித்தது. புத்தகக் காட்சிக்கு சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வாசகர்கள் வந்தனர்.

இந்த ஆண்டு அதிகரிப்பு:கடந்த ஆண்டு காயிதேமில்லத் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் காட்சிக்கு 5 லட்சம் வரை பார்வையாளர்கள் வந்தனர். ரூ.3 முதல் 4 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகின. ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். மேலும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார் சண்முகம்.

இளம் படைப்பாளிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு:இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் களமாகவும் புத்தகக் காட்சி விளங்கியது. இளம் படைப்பாளிகள் உருவாக்கிய நாவல் மற்றும் சிறு கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக பதிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

கன்னி முயற்சியாக, தான் படைத்துள்ள “எனது அப்பாவின் நண்பர் உயரமானவர்‘ என்ற சிறுகதை தொகுப்புக்கு புத்தகக் காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் பா.சரவணக்குமரன்.

கடைசி நாளில் மக்கள் வெள்ளம்:கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்பே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். கூட்ட நெரிசலால், ஒவ்வொரு அரங்கத்துக்கு உள்ளேயும் சென்று வர நேரம் பிடித்தது. “”சென்னை புத்தகக் காட்சி வாசகர்கள் இடையே ஒரு இயக்கமாக உருவாகி இருக்கிறது. இதற்கு சரியான இடத்தில் விதை போட ஆலோசித்து வருகிறோம் என்றார் சண்முகம்.

திடீரென முளைத்த நடைபாதைக் கடைகள்

சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் இடத்துக்கு வெளியே பழைய புத்தகங்களின் சங்கமமான நடைபாதை புத்தகக் கடைகள் இடம்பெறுவது வழக்கம். புத்தகக் காட்சிக்கு ஈடாக ஆண்டுதோறும் இந்தக் கடைகளும் களை கட்டி இருக்கும்.

ஆனால், புத்தகக் காட்சி இடமாற்றம் காரணமாக இந்த ஆண்டு நடைபாதை புத்தகக் கடைகள் முளைக்காமல் இருந்தன. ஆனால், திடீரென புத்தகக் காட்சியின் கடைசி நாளில் நடைபாதை புத்தகக் கடைகள் தோன்றின. புத்தகக் காட்சி நடைபெற்ற இடத்துக்கு எதிர்புறம் இருந்த நடைபாதையில் பழைய புத்தகங்கள் கடைவிரிக்கப்பட்டு இருந்தன.

Posted in 3 Rs, 30, Bestsellers, Book Exhibition, Book Fair, Book Sales, Books, Chennai, Hotsellers, Kalainjar, Karunanidhi, Literature, Madras, Pa Saravanakkumaran, Pa Saravanakumaran, Publish, Read, RS Shanumgam, RS Shanumgham, Students, Thamizh, XXX | Leave a Comment »

Bharathi Puthakalayam to publish Children Books in Chennai Book Exhibition

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

புத்தக திருவிழாவில் புதிய முயற்சி

சென்னை, ஜன. 11:சென்னையில் துவங்கியுள்ள புத்தக திருவிழாவில் வியாழக்கிழமை முதல் நிறைவு நாள்வரை தினம் ஒரு தலைப்பில் புத்தகம் பேசுது இதழை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.

இதுகுறித்து பாரதி புத்தகாலயத்தின் பொது மேலாளர் நாகராஜன் கூறியது:

குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை என்ற குறை இருந்தது. இதைப் போக்கும் வகையில் 2006 ம் ஆண்டு குழந்தைகளுக்கான 60 நூல்களை பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிட்டோம்.

புதன்கிழமை துவங்கும் சென்னை புத்தக திருவிழாவில் முதல் நாளில் இருந்து நிறைவுநாள் வரை தினம் ஒரு புத்தகம் பேசுது இதழ் வெளியிடுகிறோம். இந்திய இலக்கிய வரலாறு, கலை பண்பாடு, கவிதைகள் என பத்து தலைப்புகளில் பத்து ஆசிரியர்கள் இந்த இதழ்களை தயாரித்துள்ளனர். புத்தக ஆர்வலர்களுக்கு இந்த இதழ்கள் உதவியாக இருக்கும் என்றார்.

Posted in Bharathi Puthakaalayam, Bharathi Puthakalayam, Bharathy Puthakalayam, Book Exhibition, Book Fair, Chennai Book Exhibition, Chennai Book Fair, Children Books, Madras Book Exhibition, Madras Book Fair, Nagarajan, Publishers, Puthagam, Puthagam Pesuthu, Tamil Nool, Thamizh Nool, Thamiznool | 1 Comment »

Chennai Book Fair – M Karunanidhi to open the Madras Festival in St. George Anglo Indian HSS

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

5 கோடி புத்தகங்கள் இடம்பெறும் கண்காட்சி: சென்னையில் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்

30th Book Exhibition – Chennai Book Fair : Idly Vadai
IdlyVadai – இட்லிவடை: 30வது புத்தக கண்காட்சி

30th Chennai Book Fair – Badri : First Day Announcements & Karunanidhi Visit
பத்ரியின் வலைப்பதிவுகள்

Official Website

வலைத்தள: http://www.bapasi.org/

வலைப்பதிவுகள்
சென்னை புத்தகக் கண்காட்சி – முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 – பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் – தமிழில்

செய்திகள்:
More space, more books, some films: fair from today – The Hindu
Chennai Book Fair has new venue – The Hindu
Chief Minister’s largesse to book publishing industry – The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி

சென்னை,ஜன.9-

தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 30-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோஇந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் துரை முருகன், நல்லி குப்புசாமி உள்படபலர் கலந்து கொள்கிறார்கள்.

கண்காட்சியில் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில் சர்வ தேச அளவிளான அனைத்து தரப்பு புத்தகங்களும் கிடைக்கும். தினமும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தினமும் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கண்காட்சியில் நடைபெற உள்ளது. புத்தகங்கள் வாங்கும்போது 10 சதவீத தள்ளுபடி உண்டு.

சிறந்த எழுத்தாளருக்கான மணிவாசகம் பதிப்பகம் ச.மெய்யப்பன் விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும்,

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகசெம்மல் க.கணபதி விருது பிரேமா பிரசுரத்திற்கும் வழங்கப்படுகிறது.

குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது ஹரிஹரன் என்ற ரேவதிக்கும்,

சிறந்த புத்தக விற்பனையாளர் விருது திருச்சி அகத்தியர் புத்தக சாலைக்கும் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சி நுழைவுக்கட்டணம் 5 ரூபாய். 12-வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.

கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு. அதற்கு கட்டணமும் உண்டு. மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சி 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தகவலை தென்இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேட்டியின் போது தெரிவித்தார். அருகில் செயலாளர் சண்முகம் இருந்தார்.

சொந்தப் பணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன. 11: தனது சொந்தப் பணத்தில் ரூ. 1 கோடி நிதியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு (பபாசி) வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை மாலை அவர் தொடங்கி வைத்தார்.

“பபாசி’ தேர்வு செய்த சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன், குழந்தை எழுத்தாளர் ஹரிஹரன் என்கிற ரேவதி, சிறந்த பதிப்பகத்தாரான பிரேமா பிரசுரம், சிறந்த புத்தக விற்பனையாளர் திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையம் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியது:

சிறந்த எழுத்தாளர் உள்ளிட்டோருக்கு கேடயம் மற்றும் சால்வை உள்ளிட்டவற்றை வழங்குமாறு சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறினார்.

இதைத் தொடர்ந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொற்கிழி வழங்கச் சொல்வார் என எதிர்பார்த்தேன். அந்த வகையில் காந்தி கண்ணதாசன் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.

இனிவரும் காலங்களில் இந்நிலை தொடரக் கூடாது என்று கருதி, இச்சங்கத்துக்கு ரூ. 1 கோடி தொகையை எனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குகிறேன்.

ரொக்கத் தொகையை வங்கியில் நிரந்தரக் கணக்கில் போடுவதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் என ஆண்டுதோறும் 5 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதற்கு இத்தொகை பயன்படட்டும்.

ஏற்கெனவே சன் டி.வி. நிறுவனம் மூலம் எனது மனைவியின் பங்குத் தொகையாக கிடைத்த பணம் வங்கியில் போடப்பட்டுள்ளது. இத்தொகை மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து ஏழை எளியவர்களின் படிப்புக்கு உதவி, மருத்துவ சிகிச்சைக்கு உதவி போன்றவற்றுக்கு அத்தொகை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து,

  • திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையத்தை சார்ந்த எஸ். கோபாலகிருஷ்ணன் (சிறந்த புத்தக விற்பனையாளர்),
  • பிரேமா பிரசுரத்தை சார்ந்த ஆர்.எம்.ரவி (சிறந்த பதிப்பகத்தார்),
  • ஹரிஹரன் என்கிற ரேவதி (சிறந்த குழந்தை எழுத்தாளர்),
  • எழுத்தாளர் பிரபஞ்சன் (சிறந்த எழுத்தாளர்) ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்
  • முதலமைச்சர் கருணாநிதி. உடன் (இடமிருந்து)
  • தொழிலதிபர் நல்லி குப்புசாமி,
  • சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன்.

சென்னை, ஜன. 11: புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கூறினால் அதை அளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 30-வது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

இதுபோன்ற கண்காட்சியை நடத்துவதற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்று நல்லி குப்புசாமி செட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் வகையில் சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகிலும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலும் இடம் இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் பணியைத்தான் எனக்கு விட்டு வைத்திருக்கிறார்.

சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விரண்டு இடங்களையும் சென்று பார்வையிட்டு இதில் எது வசதியான இடம் என்று முடிவு செய்து கூறினால், அதை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

இதற்கான கட்டடத்தை அரசு கட்டுவதா அல்லது பதிப்பகத்தாரே கட்டிக் கொள்வதா என்று அடுத்த கட்டமாக பேசப்பட்டது. இருவரும் சேர்ந்து கூட்டாக கட்டுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

மாலை, சால்வைக்குப் பதில் புத்தகம்: அரசு விழாக்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் பதில் புத்தகங்களை பரிசாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டது. அரசு விழாக்களில் இது நிச்சயம் பின்பற்றப்படும் என்றார் கருணாநிதி.

முன்னதாக, சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், திரளான புத்தக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.

Posted in 30th Book Fair, Agathiyar Book Depot, Authors, Azha Valliappa Prize, BAPASI, Best Publisher, Book Fair, Book Updates, Books, Booksellers, Chetput, Durai Murugan, Ethiraj College, Function Pictures, Gandhi Kannadasan, Hariharan, Ka Ganapathy Award, Kizhakku Pathippagam, M Karunanidhi, Madras, Manivaasagam Pathippagam, Nalli Kuppusamy, Official News, Pachaiappa College, Pachaiappaa College, Pachaiyappa College, Permanent Exhibition, Permanent Place, Photos, Prabanjan, Prema Prasuram, Prizes, Public Works Department, Publishers, PWD, Revathy, RM Ravi, S Gopalakrishnan, Sa Meyyappan Award, Saidapet, School Grounds, Shares, St. George Anglo Indian HSS, St. George Anglo-Indian Higher Secondary, Sun Network, Sun TV, Tamil, Thadandar Nagar, Thamizh, Virudhugal, Viruthu, Writers, XXX Book Exhibition | Leave a Comment »