India-England Cricket Match is worth 80 Lakhs in Gambling
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006
இந்தியா-இங்கிலாந்து போட்டி: ரூ.80 லட்சத்துக்கு கிரிக்கெட் சூதாட்டம்
குவாலியர், அக். 16-
கிரிக்கெட் போட்டி தொடங்கி விட்டாலே இந்தியா வில் சூதாட்டமும் தொடங்கி விடுகிறது. இதனால் இந்தியாவில் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதையும் மீறி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் சூதாட்டம் நடந் ததை போலீசார் கண்டு பிடித் தனர்.
ரூ.80 லட்சம் அளவுக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தேவேந்திர குப்தா, அசோக் பல்வானி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.
செல்போன் மூலம் அவர் கள் சூதாட்டத்தில் ஈடு பட் டனர். அவர்களிடம் இருந்து 9 செல்போன் 2 டெலி விஷன், டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் இருவரும் டெல்லி சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கான பணம் `ஹவாலா‘ மூலம் பட்டுவாடா செய்யப் பட்டதும் கண்டு பிடிக்கப் பட்டது.
மறுமொழியொன்றை இடுங்கள்